I am posting some pictures from 1908 year od book about Sri Lanka
Title of the book- The Book of Ceylon
Author – Henry W Cave
Year 1908
Hundreds of black and white pictures are in the book; but most of them are about gardens and plants. I am producing pictures of men and buildings only.
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் – Part 28
57.வல்லிபுர ஆழ்வார் கோவில்
இலங்கையின் வடபகுதியில் பருத்தித்துறையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் வல்லிபுரம் கிராமம் இருக்கிறது . இங்கு புகழ்மிகு வல்லிபுர ஆழ்வார் கோவில், எழில்மிகு கோபுரத்துடன் காட்சி தருகிறது .
முதலில் புல்லட் பாயிண்ட்ஸ் BULLET POINTS
இலங்கை இந்துக்களிடையே உள்ள வினோத விஷயம் மூர்த்திக்குப் பதிலாக அவரது ஆயுதத்தை வைத்து வழிபடுவதாகும் . யாழ்ப்பாண நல்லூர் கந்த சாமி கோவிலில் முருகனுக்குப் பாதிலாக அவரது ஆயுதமான வேல், மூலஸ்தானத்தில் வழிபடப்படுகிறது . அதே போல வல்லிபுரத்தில் திருமாலின் சுதர்சன சக்கரமே மூலஸ்தானத்தில் வழிபட ப்படுகிறது.
இரண்டாவது விநோதம், பிள்ளையாருக்குப் பூஜை செய்த பின்னரே வல்லிபுர ஆழ்வாருக்கு பூஜை நடைபெறும். விநாயகர் வழிபாட்டை பெளத்த மதத்திலும் கூடக் காணலாம். ஆயினும் தமிழ்நாட்டில் தற்கால வைணவக் கோவில்களில் பிள்ளையார் வழிபாடு அரிது. வல்லிபுரத்திலோ, குருக்கட்டு சித்தி விநாயகருக்குப் பூசை செய்த பின்னர் தான் பெருமாளுக்குப் பூஜை.
இன்னும் ஒரு அரிதான விஷயம், தீபாவளி தினத்தன்று நரகாசுர வதம் விழாவாக அனுஷ்டிக்கப்படுவது ஆகும். தீபாவளிக்கு சமண மதம் வரை பல காரணங்கள் சொல்லப்பட்டு கொண்டாடுகின்றனர். ஆயினும் கிருஷ்ணன் செய்த நரகாசுர வதத்தை தீபாவளியுடன் தொடர்பு படுத்துவது தமிழ்நாட்டில்தான் பரவலாக இருக்கிறது .
வல்லிபுரம் புகழ் அடைய மற்றோர் காரணம் அங்கே கிடைத்த சிறிய தங்கத் தகட்டில் உள்ள கல்வெட்டு ஆகும். இதில் பிராமி லிபியில் சில வரலாற்றுச் செய்திகள் கிடைக்கின்றன . 1936–ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத் தகடு .
பல கோவில்களைப்ப போல இதுவும் இந்தியாவுடன் தொடர்புடைய கோவில்.
ஐந்தாவது அதிசயம் இங்கு விபூதியும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. தமிழ் நாட்டின் வைவணக் கோவில்களில் இதைக் காண முடியாது
Xxxx
கொஞ்சம் கிசு, கிசு ; சொந்த புராணம்
(லண்டனுக்கு வந்த ஒரு வைணவ உபன்யாசகரை லண்டன் முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். காரணம் அங்குள்ள ஹாலில் நடந்த நிகழ்ச்சி. அவருக்குப் பொன்னாடை போர்த்தி ஒரு கவரில் பணமும் அன்பளிப்பாகக் கொடுக்க ஏற்பாடாகியிருந்தது. உபன்யாசம்/ சொற்பொழிவு முடிந்த பின்னர் முருகன் சந்நிதிக்கு அழைத்துச் சென்றேன்.; அவரும் மறுக்காமல் என்னுடன் வந்தார்.
முருகன் சந்நிதியில் தக்க மரியாதைகளைத் செய்த குருக்கள் , அவர் கையிலும் விபூதியைக் கொடுத்தார். அதை அவர் தமிழ் நாட்டின் திராவிட முரடர்கள், முட்டாள்கள் செய்வதைப்போல கீழே உதறிவிட்டார். குருக்கள்மார்களின் முகங்கள் சிவந்தன . ஆயினும் வைதாரையும் வாழவைப்பவன் முருகன். அவனைத் தமிழிலில் திட்டினால் கூட அவன் மகிழ்வான் என்று அருணகிரி பாடியதை நெஞ்சில் குடிகொண்ட குருக்கள்கள் ஒன்றும் சபிக்கவில்லை. ஆயினும் அவருக்காக எல்லா குருக்கள்களும் ஒரு கவரில் போட்டுவைத்த பணத்தைக் கொடுக்கவில்லை. அவர்கள் மனம் ஒப்பவில்லை. நானும் வந்த உபன்யாசகரை காரில் ஏற்றிவிட்டுத் திரும்பினேன்; கார் சிட்டாகப் பறந்தது.
திரும்பிப் பார்த்தேன்; தலைமைக் குருக்கள் கையில் (ENVELOPE ) பண உறையுடன் ஓடிவந்தார்; அவரிடம் சொன்னேன் — கவலைப் படாதீர்கள்; நீங்கள் ஏன் பண முடி ப்பைக் கொடுக்கத் தயங்கினீர்கள் என்பதை நானும் கவனித்தேன். நீங்கள் செய்த காரியம் முற்றிலும் சரியானதே; எனக்கும் உங்களைப் போலவே வருத்தம் ஏற்பட்டது என்றேன்..
உலகம் முழுதும் ஹரே கிருஷ்ண (ISKCON) இயக்கத்தைப் பரப்பி, வெள்ளைக்காரர்களையும் குடுமி வைத்துக்கொள்ள வைத்து, உலக நகரங்களில் வெள்ளைக்கார பெண்களை டான்ஸ் ஆட வைத்த பெரியவர் பக்தி வேதாந்த பிரபுபாத ( FOUNDER OF ISKCON) ஆவார் . அவரும் பகவத் கீதை பேருரையில் ஸ்லோகத்துக்கு ஸ்லோகம் சிவபெருமானை வம்புக்கு இழுத்து அவரை டெமி காட் DEMI GOD – குட்டி தேவதை – என்று திட்டுகிறார். ஆக உலகில் இப்படிப் பல அசடுகள் உண்டு.
மதுரையில் ஒரு ஜீயர் உபன்யாசம் செய்தார்; மதுரையிலுள்ள பிரபல தொழில் நிறுவனம் வைணவர்களால் நடத்தப்படுவதால் அவருக்கு ராஜ உபசாரம் செய்தனர். அவர் ஒருநாள் உபன்யாசத்தில் சிவபெருமானை வம்புக்கு இழுத்து. சிவன் ஜடை நாற்றம் பிடித்தது. அதிலிருந்து புனித கங்கை எப்படிவரும் ? என்று அங்கலாய்த்தார். நுணலும் தன வாயால் கெ டுமென்பது பழமொழி; அவர் உபன்யாசத்தைக் கேட்கப்போன சைவர்கள் அன்றோடு அவர் இருக்கும் பக்கத்துக்கே செல்லவில்லை . இப்போதும் தமிழ் நாட்டு வைணவக கோவில்களில் அந்தந்த வகை நாமம் போட்டோருக்கு அந்தந்த கோவில்கள் (வடகலையா, தென் கலையா , U யூ நாமமா, ஒய் Y நாமமா) சிறப்பு மரியாதை செய்வதையும் என்னைப்போல விபூதி பூசியோருக்கு வேறுவித, மாற்றாந்தாய் மனப்பான்மையைக் காட்டுவதையும் பார்க்கலாம் ).
xxxxx
நிற்க; ஊர் வம்பு, கிசு கிசுக்களை ஒதுக்கிவிட்டு வல்லிபுரம் ஆழ்வாரை தரிசிப்போம். இங்கும் ஒரு அதிசயக் கதை சொல்லப்படுகிறது . நேற்று பொன்னாலை வரதப்பெருமாள் கோவிலில் விஷ்ணு, கூர்ம அவதாரம் எடுத்த கதையைக் கண்டோம். வல்லிபுரத்தில் மச்சாவதாரம் எடுத்த கதையைக் காண்போம்.
வல்லி நாச்சியார் என்ற மீனவப் பெண்ணுக்கு நீண்ட காலத்துக்குக் குழந்தையே பிறக்கவில்லை.அவர் வல்லிபுரம் அருகில் கடலில் பயணித்தபோது ஒரு அதிசய மீன் ,பெரிய மீன், துள்ளிக் குதித்தது ; அது அவருடைய மடியில் வந்து விழுந்தது. அதை அவர் அன்போடு அர வணைக்கவே அது குழந்தையாகிப் பின்னர் திருமாலின் ஸுதர்சனமாக மாறியது. அந்த சுதர்சன சக்கரத்தை மேளதாள முழக்கத்துடன் ஏற்றிவந்தனர். பல்லக்குத் தூக்கிகள் ஓய்வெடுப்பதற்காக சற்று நேரம் பல்லக்கினை இறக்கிவைத்தனர் ; மீண்டும் வந்து தூக்க முயன்றபோது அதைத் தூக்க முடியவில்லை. அந்த ஊரின் மகிமையை உணர்ந்த அவர்கள் அங்கேயே சுதர்சன சக்கரத்தைப் பிரதிஷ்டை செய்தனர் . இன்றுவரை உயர்ந்த கோபுரம் கட்டி , முறையான பூஜைகள் விழாக்களுடன் அவரை ஆராதித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் பல விழாக்கள் நடைபெறுகின்றன .
புரட்டாஸி மாதம் பெளர்ணமியில் தீர்த்த உற்சவத்துடன் 15 நாள் திரு விழா பூர்த்தியாகும் 16 ஆம் நாள் கடலாடு தீர்த்த உற்சவம் இடம் பெறும் அடுத்த நாள் பட்டுத் தீர்த்தம் நிகழ்த்தப்படும். இக்கோவில் ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும். நாராயணனின் நரகாசுர சம்காரம் தீபாவளி தினத்தன்றும், மார்கழி மாதம் முழுவதும் காலையில் விசேட பூசைகளும் நடைபெறும். ஞாயிற்றுக் கிழமையே வல்லிபுர ஆழ்வாருக்கு விசேஷ நாளாகும். இவ்வாறு பலவிதமான சிறப்புகள் உடைத்து .
இந்த வல்லிபுரம், யாழ்ப்பாணத்தின் வடமராட்சி பகுதியில் இருக்கிறது; இங்கு தொண்டை நாட்டின் மறவர்கள் குடியேறியதால் இந்தப் பெயர் என்று சரித்திர ஆசிரியர்கள் கருதுகின்றனர் .
இயற்கை எழிலும், நல்ல கடல் மணலும் நிரம்பிய இந்த ஊர், ஒருகாலத்தில் சிங்கை நகர் என்னும் தலை நகராக விளங்கியது மேற்கண்ட பல விஷயங்களுக்கு ஆதாரம் வல்லிபுர வைபவம் என்ற தலைப்பில் தட்சிண கைலாச மான்மியம் , தட்சிண கைலாச புராணம் என்ற இரண்டு நூல்களில் இருக்கிறது.
ஆழ்வான் என்பது வைணவத் தொண்டரையும், நம்மை எல்லாம் ஆளும் பெருமாளையும் குறிக்கும்
இந்தக் கோவிலில் விஷ்ணு, விநாயகர், நாகர், நாச்சியார், ஹனுமார், நவக்கிரகங்கள் ஆகியோருக்கும் தனித்தனி சந்நிதிகள் இருக்கின்றன . 71 அடி உயர ராஜ கோபுரம் கிருஷ்ண லீலைகளை சித்தரிக்கிறது .
கோவில் பற்றி தற்காலத்தில் எழுதப்பட்ட படைப்புகள் ,
வல்லிபுரம் பதிகம், புலவர் பீதாம்பரம், 1819
வல்லிபுரம் பதிகம், சிவசம்பூ புலவர், 1852-1910
கும்பாபிஷேக மலர், 1977
Xxx
58. மட்டக்களப்பு விஷ்ணு கோவில்கள்
மட்டக்களப்பு வட்டாரத்தில் விஷ்ணு, கிருஷ்ணன் கோவில்கள் அதிகம் இருக்கின்றன . முல்லை நிலம் மலிந்துள்ளதாலும் பாலுக்கும் நெய்யுக்கும் பஞ்சமில்லாத மேய்ச்சல் நிலங்களில் கறவைப் பசுக்கள் நிறைந்திருப்பதாலும் கிருஷ்ணனுக்குக் குறைவின்றி பாலும் வெண்ணெயும் கிடைக்கின்ற்ன கலிங்க மகா மன்னன்/ மாகோன் 1215-1255 இந்தியாவிலிருந்து வ து ஆண்டதாலும் அவன் ராமர், கிருஷ்ணர் மீது பக்தி கொண்டவன் என்பதாலும் இங்கே பெருமாள் கோவில்கள் பெருகின.. சில கோவில்கள் ஆண்டுதோறும் கல்யாண உற்ச வத்துக்கு மட்டுமே திறக்கின்றன அப்போது 9 நாட்களுக்கு கண்ணனின் வீரதீரச் செயல்களை வருணிக்கும் கஞ்சன் அம்மானை பாராயணம் நடைபெறும். . ருக்மிணி– கிருஷ்ணர் கல்யாண வைபவத்துடன் விழாக்கள் நிறைவுபெறும்.
திமிலை தீவு , வந்தாறு மூலை , தம்பிளை வில்லு விஷ்ணு கோவில்கள் , மட்டக்களப்பு திருப்பழுகாமம் – அருள்மிகு ஸ்ரீ மகா விஷ்ணு திருக்கோயில், குருக்கள் மடம் , குருகல்மாதம் ,களுதாவளை கோவில்கள் குறிப்பிடத்தக்கன. திமிலை தீவு , வந்தாறு மூலை கோவில்களில் நாடகங்கள் வாயிலாக புராண, இதிஹாஸக் கதைகளை நடிப்பது குறிப்பிடத்தக்கது .
EVERYONE MUST WATCH THE BEAUTIFUL SCENES , DRAMAS IN FACEBOOK
இதோ திமிலைத் தீவுக் காட்சிகள் (பேஸ்புக், Facebook, You Tube யூ ட்யூபில் பொம்மலாட்ட நாடகக் காட்சிகளைக் காணலாம்)
FOLLOWING IS FROM FACEBOOK
“ஈழமணித் திருநாட்டின் கீழ்க்கரையின் பாடும் மீன் பண்ணிசைக்கும் கதிர் நாடாம் மட்டுமாநகரின் செந்தமிழும் சைவமும் சேர்ந்து மணம் பரப்பும் #திமிலைதீவு# எனும் பதிதனிலே விஷ்ணு ஆலயம் எனப் பெயர்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய வருடாந்த உற்சவம் தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் .திருவிழா நிகழ்வுகள் யாவும் நாடகபாணியில் இடம்பெற்று 10ம் நாள் ( ருக்மிணி )கல்யாண அமுதுடன் உற்சவம் இனிதே நிறைவுபெறும்
திருவிழா காலங்களின் எம் பெருமாள் வெளி ஊர்வலம் வரும் வேளையில் இவ் பொம்மை ஆட்டங்கள் மிகவும் அழகான முறையில் ஆடப்படும். இப் பொம்மைகளை எமது ஆலயத்தினை சார்ந்த இளைஞர்கள் சிறுவர்கள் தாமாகவே வடிவமைத்து திறன்பட நிகழ்த்துவார்கள் இக் கலையானது பல வருடங்களாக திருவிழாக் காலங்களில் எமது ஆலயத்தில் செய்யப்பட்டு வருகின்றது .
முதலாம் நாள் திருவிழா: மாங்கனி பறித்தல் வேட்டைக்கு செல்லும் கம்சன் தனது சகோதரிக்காக மாங்கனி பறித்து சாபம் பெறுதல்.
இரண்டாம் நாள் திருவிழா : பூதகி வதம்- நச்சுப்பால் கொடுத்து கண்ணனைக் கொல்வதற்காக கம்சனால் அனுப்பப்பட்ட பூதகியை வதம் செய்தல்..
மூன்றாம் நாள் திருவிழா: மருதுகால் சாய்தல் — கம்சனின் ஏவலால் கண்ணைக் கொல்ல வந்து மருத மரங்களாய் நின்ற அசுரர்களை ஊர்ந்து அழித்தல். ஶ்ரீ கிருஷ்னரின் லீலைகள் யாவும் திருவிழாக் காலங்களில் நாடக பாணியில் நடைபெறுவது எமது ஆலயத்தின் சிறப்பு அம்சமாகும்.
·
நான்காம் நாள் திருவிழா: கன்று கொன்று கனிக்கெறிதல் – கண்ணணைக் கொல்ல வந்து கன்றுகளாவும் விளாமரமாகவும் நின்ற அசுரர்களை வதம் செய்தல் . ·
5ம் நாள் திருவிழா: கூத்தரைக் கொல்லுதல். கண்ணனை அழிக்கக் கூத்தாடிகளாய் வந்த அசுரர்களை கூத்தாடியே வதம் செய்தல்
·ஆறாம் நாள் திருவிழா: வாணன் யுத்தம் – கண்ணன் தன் எதிரியான வாணனைக் யுத்தம் செய்து மாய்த்தல்
·
ஏழாம் நாள் திருவிழா- நரகாசூரன் வதை – அனைத்து உலக உயிர்களையும் தன் கொடுமையால் துன்புறுத்திய நரகாசூரனைப் திருமால் வதம் செய்து அருள்பாலித்தல் –
எட்டாம் நாள் திருவிழா- கம்சன் சம்ஹாரம் – தன்னைக் கொல்வதற்காக சதா சூழ்ச்சிகள் புரிந்த தன் தாய்மாமன் கம்சனைக் கிருஷ்ணர் சம்ஹாரம் செய்தல்
RUKMINI KALYANAM
ஒன்பதாம் நாள் திருவிழா – திருக்கல்யாணச் சடங்கு – ஶ்ரீ கிருஷ்ணர் தன்னைக் காதலித்த மங்கை உருப்பினி (RuminiIயைச் சிறையெடுத்துச் சென்று திருமாங்கல்யதாரணம் செய்தல்.
To be continued……………………………..
Tags- திமிலைத் தீவு, பொம்மலாட்டம், கஞ்சன்(Kamsan) அம்மானை , வந்தாறு மூலை , தம்பிளை வில்லு, விஷ்ணு கோவில்கள், Rukmini Kalyanam, மட்டக்களப்பு
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் – Part 27
யாழ்ப்பாணத்தில் இரண்டு புகழ்பெற்ற விஷ்ணு ஆலயங்கள் இருக்கின்றன. அவைகளை இன்று தரிசிப்போம் ; அதற்கு முன்பாக, நேற்று — அழிந்து போன சிவாலயங்கள்– பற்றிக் கண்டோம் ; மேலும் சில செய்திகளைக் காண்போம் .
இலங்கையில் சோழர் ஆட்சி 1017 முதல் 1070 வரை நடந்தது. அதாவது இற்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் பொலன்னறுவை , திருகோணமலை, யாழ்ப்பாண பகுதிகளை தீவிர சைவர்களான பிற்காலச் சோழர்கள் ஆண்டார்கள்.அப்போது அவர்களுக்கு மாதோட்டம் (மாந்தை) என்னும் துறைமுகம் மிகவும் பயன்பட்டது. இது பற்றிய தகவல்களை திருக்கேதீஸ்வரக் கல்வெட்டுகள் நமக்கு அளிக்கின்றன. தென்னிந்திய சாசனங்கள் தொகுதியில் 1412, 1414 கஅந்தக் கல்வெட்டுகள் ராரராஜேஸ்வரம், திருவீரமீஸ்வரம் ஆகிய இரண்டு கோவில்களைக் குறிப்பிடுகின்றன. மாதோட்டத்தில் இருந்த இந்தக் கோவில்கள் திருக்கேதீஸ்வரம் என்று இன்று அழைக்கப்படும் கோவில்களாக இருக்கலாம். சோழநாட்டிலிருந்து வந்த தளிக்குமரன் என்பான் கோவில்களுக்கு செய்த தானம் பற்றி இந்தக் கல்வெட்டு கூறுகிறது . இரண்டாவது கல்வெட்டு திரு வீ ராமீஸ்வரம் கோவிலுக்கு 4 தங்கக் காசுகள் தானம் செய்யப்பட்டதை அறிவிக்கிறது. கோவிலில் விளக்கு எரி ப்பதற்கான செலவுக்கு இரண்டு தனித்தனி ஆட்களிடமிந்த 4 நாணயங்களும் ஒப்படைக்கப்பட்டன. ராமீஸ்வரம் என்ற பெயர் இந்தியாவின் கரையிலுள்ள ராமேஸ்வரம் கோவிலுடன் தொடர்புடையதாக இருக்கலாம். எவ்வாறாயினும் யாழ்ப்பாணம் முழுதும் காணப்படும் ராம பிரான் பெயர் இதில் இருக்கிறது.
நுவரெலியா சீதை கோவிலிலிருந்து , திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று வரைக்கும், மாதோட்டம் / மாந்தை ராமீஸ்வரத்திலிருந்து யாழ்ப்பாண வில்லூன்றித் தீர்த்தம் வரைக்கும் (இந்தியாவில் ராமேஸ்வரம் அருகிலும் இதே பேரில் தீர்த்தம் இருக்கிறது) , அதற்கப்பால் சிலாவம் (முன்னேஸ்வரம்) சிவலிங்கம் வரைக்கும் எங்கும் ராம நாமமே கேட்கிறது
கல்வெட்டுகளில் கூறப்படும் இரண்டு கோவில்களில் ஒன்று இன்றைய திருக்கேதீஸ்வரம் என்று கொண்டாலும் ராமீ ஸ்வரம் கோவில் எது என்ற கேள்வி எழுகிறது . இது மறைந்து போன, அழிந்த போன கோவில் என்றே ஊகிக்கப்படுகிறது . இதற்கு ஆதாரம் அரசாங்க ஏஜண்ட் வில்லியம் ட்வீனம் William Twynam 1887 மே 22ம் தேதி எழுதிய டைரி குறிப்பில் உள்ளது . அவர் பழைய மாந்தை ரெஸ்ட் ஹவுஸ் பகுதியில் கோவில் இருந்திருக்கக்கூடும் என்று குறிப்பிடுகிறார் .
இது தவிர முல்லைத்த தீவிலிருந்து 15 மைல் தொலைவில் பழங்கால சிவன் கோவில் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன கற்சிலை மடுவில் தேசீய வீரன் பண்டார வன்னியன் நினைவுச் சின்னம் அருகில், இந்த இடிபாடுகள் இருக்கின்றன வெளிநாட்டிலுந்து வந்த பறங்கியர் எல்லோரையும் பண்டார வன்னியன் எதிர்த்ததால் இலங்கை அரசும் அவனை தேசீய வீரனாக அங்கீகரித்தது. கோவில் பற்றிய மேல்விவரங்கள் கிடைக்கவில்லை
xxx
55. வரதராஜ வேங்கடேச பெருமாள் கோவில் , யாழ்ப்பாணம்
யாழ்ப்பாண நகரில் ஏழு நிலை ராஜ கோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி தருவது வண்ணை ஸ்ரீ வரதராஜ வெங்கடேச பெருமாள் கோவில் ஆகும்.
13ம் நூற்றாண்டிலிருந்து 16 ம் நூற்றாண்டு வரை 300 ஆண்டுகளுக்கு யாழ்ப்பாணத்தை தீவிர இந்துக்களான ஆரிய சக்கரவர்த்திகள் ஆண்டார்கள். . இவர்களில் குண பூஷண சிங்கை ஆரியன் , ஜகராஜ சேகரம் என்ற பெயரில் ஆண்டான்.
தமிழ் நாட்டை ஆண்ட பாண்டியர்கள் மாறன், சடையன் என்ற பெயரில் அடுத்தடுத்து ஆள்வார்கள் மாறன் மகன் சடையன், சடையன் மகன் மாறன் என்று மாறி மாறி வரும். அது போலவே ஆரிய சக்ரவர்த்திகளும் செக / ஜக ராஜ சேகரம், பரராஜ சேகரம் என்ற பெயரில் அடுத்தடுத்து ஆட்சிபுரிந்து வந்தனர். குண பூஷணன் என்னும் மன்னன் தீவிர பக்தன்; வெற்றி வாகை சூடியவன்; அது மட்டுமல்ல ; நாட்டின் வளர்ச்சியில் அக்கறை காட்டியவன்.; அவன் தமிழ்நாட்டின் காஞ்சீபுரத்திலிருந்து பட்டு நூல் நெசவாளர்களை குடியமர்த்தி இலங்கையில் நெசவுத் தொழிலை வளர்த்தான். அவ்வாறு குடியேறியவர்களில் ஒருவன் பரம பாகவதன் ; அதாவது விஷ்ணு பக்தன். அவன் விஷ்ணு பக்தியைப் பரப்பி ஒரு மரத்துக்கு அடியில் வழிபாட்டினை நடத்திவந்தான் ; நிறைய பக்தர்களும் குழுமினர். வெறும் மரத்தடி வழிபாடு என்பதால் போர்ச்சுக்கீசிய , டச்சுக்கார மத வெறியர்களும் அதை அழி.க்க முடியவில்லை.காலப்போக்கிகல் அது கோவிலாக மாறி கட்டிடங்கள் படிப்படியாக வளர்ந்தன . கோவிலுக்குள் ஸ்ரீ ராமர், லெட்சுமி, ஆண்டாள் கோபாலன் என்று சந்நிதிகள் தோன்றின.
கோபுரம் உயரவே அதில் புராண இதிஹாஸக் காட்சிகள் பொம்மைகளாக இடம்பெற்றன தற்காலத்தில் முறையான பூஜைகளும் செப்டம்பர்- அக்டோ பரில் திருவிழாவும் நடக்கின்றன .
XXXX
56.பொன்னாலை வரதராஜ பெருமாள் கோவில், தொல்புரம் , யாழ்ப்பாணம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண நகரிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் பொன்னாலைக் கிராமத்தில் கோவில் இருக்கிறது. .இந்தக் கோவில் பற்றிய விவரங்கள் தட்சிண கைலாச மான்மியத்தில் கிடைக்கிறது முன்னொரு காலத்தில் அருகிலுள்ள கடலில் மீன் பிடிக்கச் சென்றபொழுது , வலையில் பெரிய ஆமை ஒன்று சிக்கியது. அது மிகவும் கனத்ததால் பல மீனவர் உதவியுடன் அதைக் கரைக்கு கொண்டுவந்தார். ஆனால் அது கல்லாகி மாறிவிட்டது ; அப்போது வானில் அதிசய ஒளி தோன்றியது. அது மஹாலெட்சுமியின் அருள் என்று எண்ணி பெருமாளுக்கு ஒரு கோவிலை எழுப்பினர். இன்றும் கல் ஆமை கோவிலுக்குள் இருக்கிறது
விஷ்ணுவின் கூர்ம / ஆமை அவதாரத்தில் இது போல ஒரு கதை உண்டு. துர்வாச முனிவரின் சாபத்தால் இந்திரன், மீனவனாகப் பிறந்தான். எப்போது தனக்கு சாப விமோசனம் என்று முனிவரிடம் கெஞ்சியபோது, இறைவனே ஆமை உருவத்தில் வருவான். அவனை நீ பிடிக்கும்போது உனக்கு சாப விமோசனம் கிட்டும் என்றார் துர்வாச முனிவர் . சாப விமோசனத்தின் போது விஷ்ணு காலடி வைத்த இடம் திரு அடி நிலையம் ஆயிற்று. இந்திரனின் தங்கத் தேர் வந்து இறங்கிய இடம் பொன் / ஸ்வர்ணம்/ தங்கம் ஆகியது. அதை நினைவு கூறும் வகையில் இங்கு எழுந்த ஆலயமும் பொன் +ஆலயம் = பொன்னாலை ஆயிற்று .
இதில் அதிசயம் என்னவென்றால் இங்கும் சிவன் ஒளி பாத மலையிலும் பாதங்கள் (Foot prints) இருந்ததை இலங்கைக்கு யாத்திரை வந்த வட ஆப்பிரிக்க அராபிய யாத்ரீகர் இபின் படூடாவும் (Ibn Batuta Abu Abdullah Muhammad ibn Battutah commonly known as Ibn Battuta, 1304-1369) எழுதிவைத்துள்ளான்.
ஆனால் இப்போது விஷ்ணு பாதம் தொல்புரத்தில் இல்லை; கடலுக்குள் சென்றுவிட்டது ; ஊரின் பெயரே இந்த இடத்தின் பழமையை விளக்கும்
போர்ச்சு கீசிய மதவெறியர்கள் இந்தக் கோவிலை தரை மட்டம் ஆக்குவதற்கு முன்னர், இந்த ஆலயத்தின் பெயர்க்கு ஏற்றவாறு, பல பிரகார கல் கட்டிட கோபுரத்துடப்பின் தங்க விமானமமும் இருந்ததை சிங்கள மொழி கவிதை சந்தேசய குறிப்பிடுகிறது . போர்ச்சிகீசிய அரக்கர்கள், கோவில் கற்களை மானிப்பாய்க்கும் , காரைத் தீவுக்கும் எடுத்துச் சென்று கட்டிடங்களை எழுப்பினார்கள்..
பிற்காலத்தில் இந்துமத பேரழுச்சி ஏற்பட்ட காலத்தில் கோவில் கட்டப்பட்டது 1971ம் ஆண்டில் அ னந்த சயனப் பெருமாள் பிரதிஷ்டை நடந்தது ; அத்தகு முன்னரும் கோவில் இருந்தது. தற்போது நித்திய பூஜைகளுடன் உற்சவமும் நடத்தப்படுகின்றன.
Xxx
நூலகம் இணையதளம் கூறும் தகவல் இதோ
ஆலய கருவறையில் வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் காட்சியளிக்கிறார். தனியான மண்டபத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பள்ளிகொண்ட பெருமாளையும் தரிசிக்கலாம். இவ் ஆலயத்தில் அமையப்பெற்ற 108 அடி உயரமான இராஜகோபுரமே யாழ்ப்பாணத்தில் அதி உயர் கோபுரமாக விளங்குகின்றது. வருடம் தோறும் ஆவணியில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 21 நாட்களும், மார்கழியில் பரமபதவாயில் ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்களும் இரண்டு மஹோற்சவங்கள் இடம்பெறுகின்றது.
To be continued………………………
இலங்கை, 108 புகழ் பெற்ற, இந்து ஆலயங்கள் , Part 27, வரதராஜ , பெருமாள், கோவில், பொன்னாலை , வண்ணை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
இந்தியாவில் ஹிந்துக்களுக்கு சம உரிமை தேவை!
ச.நாகராஜன்
என்ன, தலைப்பே வேடிக்கையாக இருக்கிறதே என்று யோசிக்க வேண்டாம்.
இந்தியாவில் இந்துக்களே பெரும்பான்மையினர். ஆனால் அவர்களுக்கு உரிமைகளோ சிறுபான்மையினர் அனுபவிப்பதை விட குறைவு.
ஆகவே அவர்கள், ‘இந்தியாவில் இந்துக்களான எங்களுக்கு சம உரிமைகள் தேவை’ என்று போர்க்கொடி உயர்த்த வேண்டிய அவசியத்திற்கு – கட்டாயத்திற்கு -உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அப்படி என்ன சம உரிமை இல்லை என்று கேட்டால்… இதோ பார்க்கலாம்.
இந்திய அரசியல் சட்டத்தின் 25வது பிரிவை எடுத்துப் பார்ப்போம்.
அதில் மத சுதந்திரம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தங்கள் மதத்தை பரப்பும் உரிமை அதில் உள்ளது.
Right to propagate one’s religion – இது கிறிஸ்தவ, இஸ்லாமிய மத மாற்றத்திற்கு வழி வகுக்கிறது.
ஹிந்துக்களுக்கோ மதம் மாற்றுவது என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று.
இதனால் ஹிந்து கோவில்களிந்ன் உள்ளேயும் அருகிலேயும் இஸ்லாமியர்கள் பூஜைப் பொருள்களை விற்பதைப் பார்க்கலாம்.
மைனாரிடியினர் என்ற அடிப்படையில் இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் தங்கள் தங்கள் நிலங்களை நிதிகளைத் தாமே நிர்வகிக்கலாம். அரசு அதில் தலையிட முடியாது.
ஆனால் ஹிந்துக் கோவில்களோ அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்.
இதனால் பல லட்சம் ஏக்கர் கோவில் நிலங்களை சட்டத்திற்கு புறம்பாக நாத்திகர்களும் ஹிந்து விரோதிகளும் ஆக்கிரமித்து அதில் தங்கள் தங்கள் கட்டிடங்களைக் கட்டிக் கொள்கின்றனர்.
இதில் சர்ச், மசூதியும் அடங்கும்.
சற்று யோசித்துப் பார்ப்போம். வாடிகனில் சிவலிங்க பிரதிஷ்டை செய்ய முடியுமா? போப் ஆண்டவர் முன்னிலை வகிப்பாரா?
மெக்காவில் விஷ்ணு கோவிலை உருவாக்க முடியுமா?
ஆனால் இங்கேயோ கோவில் நிலங்களில் கிறிஸ்தவ மிஷனரிகள் சர்ச்சுகளைக் கட்ட முடியும். குத்தகைக்கு எடுக்கப்பட்ட கோவில் நிலத்தை லயோலா கல்லூரி திருப்பித் தராமல் தகிடுதத்த வேலையில் ஈடுபட்டு கல்வி நிலையத்தை மூடப் பார்க்கிறார்கள் என்று பசப்பு ஓலம் இட முடியும். நமது நீதிமன்றங்களில் காலத்திற்கும் அப்பாற்பட்ட ‘வாய்தாக்களை’ வாங்கி காலத்தையே ஏமாற்ற முடியும்!!
இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ கல்வி நிலையங்களை அரசு எடுக்க முடியாது. ஆனால் ஹிந்து கல்வி நிலையங்களை அரசு எடுத்துக் கொண்டு நடத்த முடியும். எடுத்து நடத்துகிறது.
அடுத்து அரசியல் பிரிவு ARTICLE 30ஐ எடுத்துக் கொள்வோம்.
இது ஹிந்துக்களிடையே பிரிவை உருவாக்க வகை செய்யும் ஒன்று.
இதன் படி ராமகிருஷ்ண மடத்தை வங்காளத்தில் அரசு செய்த கம்யூனிஸ்ட் அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முனைந்தது.
அலறிப் போன ராமகிருஷ்ண மடம் தாங்கள் ஹிந்து பிரிவு அல்ல தனிப் பிரிவு என்று கூறியது.
ஹிந்துக்களே ஒன்றிணைந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று அது சொல்லவில்லை. ஹிந்துக்கள் ஓரணியில் திரளுவது என்பது கஷ்டம் என்பதனால் தான் இப்படி அது நடந்ததா?
கடைசியில் கோர்ட் விவேகானந்தர் ஒரு ஹிந்து; அவர் தனி மதம் எதையும் ஸ்தாபிக்கவில்லை என்று தனது முடிவை அறிவித்தது.
ஆனால் கர்நாடகத்திலோ லிங்காயத் தாங்கள் தனி பிரிவு என்று அறிவிக்க முடிந்தது.
இப்படி ஆங்காங்கே பலரும் ஹிந்து மதம் அல்ல; தனிப் பிரிவு என்று சொல்லிக் கொள்ள வகை செய்வது இந்த 30ஆம் பிரிவு.
ஆனால் இஸ்லாத்திலோ அல்லது கிறிஸ்தவத்திலோ இப்படி எதையும் அரசியல் சட்டம் செய்ய முடியாது.
ஹிந்துக்களுக்கு ஒரு நீதி, இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவருக்கும் ஒரு நீதி.
வாழ்வில் முக்கியமான இரு அம்சங்கள் கல்வியும், ஆன்மீகமும்.
கல்விக் கூடங்களிலும் கைவைப்பு, கோவிலிலும் ஆக்கிரமிப்பு – இது தான் ஹிந்துக்களின் இன்றைய பரிதாபகரமான நிலை.
சொந்த நாட்டில், ஹிந்து நாட்டில் ஹிந்துக்களுக்கு உரிமை குறைவு; பாதுகாப்பில்லை.
ஆனால் மதம் மாற்றப்பட்டவர்களுக்கு அதிக உரிமைகள்; அதிக பாதுகாப்பு.
ஒருவரின் வீடு பல நூறு தலைமுறைகளாக அவருக்குச் சொந்தம்; சிலர் அங்கு தங்க வருகின்றனர். திடீரென்று அரசு வந்து தங்கியவருக்கு அந்த வீட்டைச் சொந்தம் என்று சொல்லலாம் என்றால் அது நியாயமா?
யோசனை செய்ய வேண்டும். ஆகவே தான் சொந்த நாட்டில் எங்களுக்கு அதிக உரிமை இல்லாவிட்டாலும் சம உரிமையாவது வேண்டும் என்று ஹிந்துக்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
வரவேற்க வேண்டிய பேச்சு இது.
இந்த வகையில் 2020இல் செப்டம்பர் 21ஆம் தேதி டெல்லியில் ஹிந்துக்களில் பலர் ஒன்று கூடி இதைப் பற்றிப் பேசினர்.
இது இயக்கமாக மாறி வலுத்து வருகிறது.
ஹிந்துக்கள் அனைவரும் ஓரிழையில் இணைந்து சம உரிமை கோரி சட்டத்தைத் திருத்த வேண்டும்.
கோவில்கள் ஹிந்துக்களால் நிர்வகிக்கப்பட வேண்டும். கல்வி நிலையங்கள் ஹிந்துக்களால் நிர்வகிக்கப்பட வேண்டும். அரசுக்கு அங்கு என்ன வேலை?
சனாதனத்தை ஒழிப்போம் என்று கூறும் விஷமிகளையும் நாத்திகர்களையும் இனம் கண்டு ஒதுக்கி என்றுமுள்ள சனாதனமான ஹிந்து மதத்தை வாழ வைக்க கச்சை கட்டிக் கொண்டு ஹிந்துக்கள் முன்வர வேண்டும்.
புல்லட் வேண்டாம்; பாலட் பாக்ஸ் இருக்கிறது. அது போதும் நல்ல பாதையில் தேசத்தைத் திருப்ப!
Can you oppose these statements with proofs and evidences.
1.there is no Hindu architecture in India before Sanchi stupa built by Ashoka.
2.there is a temple in India in Kanchi ,Badri etc before (they were) Jain temples and Buddhist temples.
3.in Siva Kanchi, boundary wall of temple has Buddhist idols .
xxx
Reply to the Question by London Swaminathan
First, the person who asks a question must have some basic knowledge in the subject. I explained it in detail yesterday. So, I am not going to repeat it.
Sanchi Stupi is not Hindu, but Buddhist. It is NOT a place of worship. All Buddhist Stupis have some body parts of Buddha. So it is not like Hindu Garbhagrihas where we have idols or statues for worship.
Sanchi Stupi which is 2300 year old is dome shaped and not temple (Pyramidal/ Cone shape) shaped.
xxx
Is there any religious structure like that before Sanchi Stupi? Perhaps the answer is ‘No’. We don’t see anything elaborate or big like that before 2300 years. But we read about Temples in Mahabharata and Ramayana. Krishna kidnapped Rukmini from a temple. So, temples were there, may be built out of rocks or bricks in smaller size.; In Indian climate, nothing would survive for a long period.
It is amazing to see Sanchi Stupi (India) and Anuradhapura Stupi (Sri Lanka) survived until this day. Perhaps their massiveness, special dome like structure saved them for 2300 years.
xxx
Indus-Saraswati River Civilization
In the Indus civilization we see Mother Goddess, Swastika emblem, so called Pasupati seal and unknown Tigress goddesses All scholars agree that Hinduism originated there at least 3000 years ago.
All temples including the Toda Tribe temple are in Triangular/pyramidal shape. But all ancient Buddhist structures are dome shaped. Even the Ziggurat of the Middle East was similar to current Hindu temples in shape. Even the word Ziggurat came from the Sanskrit word Sikhara (mountain top, temple top).
This shows such structures existed but vanished in course of time. India is a country which witnessed more wars than any other country. Most of the structures were razed to ground by foreign invaders. Just 400 years ago Portuguese Christian invaders destroyed all the 500 temples in Jaffna, Sri Lanka.
So, the simple answer is some sort of architecture existed but extinct today.
One other comparison is writing. We see it in Indus- Saraswati area around 2000 BCE. Then we see Brahmi writing in Asoka time. There is a gap of at least 1700 years. Writing was there but Hindus wrote on decayable materials and only Asoka started using rocks for writing.
Xxx
The second part of the question is Buddhist symbols or statues in Hindu temples like Kanchipuram. We need someone at the stature of Dr Nagaswami to answer such questions. Unfortunately ,the great historian is no more.
Like I said earlier, Buddhists did not have place of worship. Buddha never spoke about God or ritual worship. Bhikshus went against what Buddha said and started new rituals of worshipping ash and bone. Their dome shape structure is also their own innovation. In course of time they might have placed their symbols in our temples to get status and respect. The biggest proof for such an assumption come from their theft of Hindu materials.
They stole all our Panchatantra , Ramayana and Mahabhaata stories and created new Jataka stories. It shows them as the thieves; literary pirates. Like they stole our stories , they might have stolen our temples as well. Jataka Storis in Pali came about 2300 years ago.
Regarding the Kanchi temple and Buddhist statues , only archaeologists can say which came first.
Generally speaking, Buddha took everything from Hinduism. The word Nirvana , Biksha etc are in Upanishads. In the later days, our people might have re installed the original Hindu statues. It happened in Ayodhya, Varanasi and several Indian places s well. Moghuls took our Hindu temples and we are slowly reconverting them.
Like Gnanvapi – Kasi temple, Mathura Temple with mosque , Ayodhya Ram Temple, Saraswati temple inside mosque in Dhar (M.P), we have to take each case separately and probe them to see who installed the statue first.
Look at Tibetan Buddhist sculptures; They took all the Hindu Gods and Goddesses and put 10 heads and 20 hands and named them differently. It shows they stole our Gods and Words (literature) . So, I would like to conclude that they stole our temples too.
In Sri Lanka Buddhists are replacing Shiva and Ganesh with Buddha; Following Hindu complaints many projects are stopped, and enquiry ordered. I had been to Kanniya Hot Springs in Trincomalee last month and the driver told me Shiva and Ganesh disappeared there suddenly. That area is cordoned off.
(Hope I understood your question and gave appropriate reply).
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் – Part 26
54.மறைந்து போன சிவன் கோவில்கள்
இலங்கைத் தீவில் மறைந்துபோன, அழிந்துபோன, காணாமற் போன சிவன் கோவில்கள் பற்றிய விவரங்கள் பிள்ளையாய் கல்வெட்டுகளிலிருந்தும் நூல்களிலிருந்தும் கிடைக்கின்றன. மேலும் பல இடங்களில் சிவன் தொடர்பான சின்னங்கள் கிடைக்கின்றன. சிதைந்து போன ஆவுடையார், கோவில் தூண்கள் ஆகியன பற்றி பல இடங்களிலிருந்த்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
புத்த மதம், ஒரு மதம் மாற்றும் மதம்.( proselytizing religion); அதாவது இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் முன்னரே தங்கள் மதத்திற்க்கு வாருங்கள் என்று இந்துக்களை அழைத்த மதம்.. அது மட்டுமல்ல ராமாயண மஹாபாரத , பஞ்ச தந்திரக் கதைகளை 2300 ஆண்டுகளுக்கு முன்னரே ஜாதகக்கதைகளில் இணைத்து ஒவ்வொன்றிலும் போதிசத்துவர் என்னும் கதா பாத்திரத்தை நுழைத்த மதம் ; அதாவது புத்தர், முன் ஜென்மத்தில், போதிசத்துவராக இருந்தார் என்று சொல்லி இந்து மதத்தைக் கபளீகரம் செய்ய புத்த சந்யாசிகள்/ பிட்சுக்கள் முயற்சி செய்தனர். புத்தருக்கும் இந்த வேலைகளுக்கும் சம்பந்த மில்லை. அவர் இறந்து 300 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இதெல்லாம் நடந்தது.
அசோகரும் இந்த வேலையில் இறங்கி தன்னுடைய மகள் சங்க மித்திரையையும், மகன் மஹேந்திரனையும் இலங்கைக்கு அனுப்பி வைத்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரிஸ்ஸா (கலிங்கம்) மாநிலத்தில் வசித்த ஜெயதேவர் , புத்த பிட்சுக்கள் செய்ததையே செய்து பவுத்த மதத்தை சுவாஹா செய்தார். அதாவது புத்தரும் விஷ் ணுவின் அவதாரம் என்று சொல்லி கீத கோவிந்தம் என்னும் நூலில் பாடிவைத்தார். இன்றும் கூட தமிழ் நாட்டில் எல்லா பஜனைகளிலும் பாடும் அஷ்டபதியில் இதைக் கேட்கிறோம். அத்தோடு தென் இந்தியாவில் புத்த மதத்துக்கு முடிவு கட்டப்பட்டது .
இப்போது கிறிஸ்த மதத்தினரும் கர்நாடக சங்கீதப் பாடகிக ளுக்கு காசு கொடுத்து மும்மூர்த்திகள் எழுதிய கிருதிகளில் ஏசுவின் பெயரை நுழைத்ததையும் அதை இந்துக்கள் கடுமையாக எதிர்த்ததையும் பத்திரிகைகளில் படிக்கிறோம். அந்த பாடகிகளுக்கும் தமிழர்கள் முடிவு கட்டிவிடனர். இந்த வேலையை முதலில் துவக்கியது, 2300 ஆண்டுகளுக்கு முன்னர் ஜாதகக்கதைகளை எழுகிய புத்த பிட்சுக்கள்தான்.560 ஜாதகக்கதைகள் நமக்கு பாலி மொழியில் கிடைத்துள்ளன.. இப்படிக் கதை எழுதியவர்கள், ஒரு பகுதியில் மதம் மாறியவர்கள் அதிகமானவுடன் பழைய இந்துக்கோவில்களில் புத்தர் சிலையை வைத்தனர். பெரும்பாலும் பக்தர்கள் இல்லாததால் தாமாகவே பாழடைந்து போயின. இதற்குப் பின்னர் போர்ச்சுகல் , ஹாலந்து நாட்டிலிருந்து வந்த மத வெறியர்கள் கோவில்களைத் தரைமட்டமாக்கி சர்ச் CHURCH கட்டியதை அவர்களே எழுதி வைத்த நூல்களிலிருந்து அறிகிறோம்.
இது தவிர தமிழர்களே கோவில்களை அழித்த வரலாறும் உண்டு . உலக சரித்திரத்தைப் படிப்போருக்கு ஒரு அதிசய உண்மை கிடைக்கும். தமிழினம்தான் உலகில் நீண்ட காலத்துக்கு ஒருவனை ஒருவன் அடித்துக்கொண்டு செத்த இனம். அதாவது 1500 ஆண்டுகளுக்கு சேர சோழ பாண்டியர்கள் ஒருவனை ஒருவன் அடித்து, அழித்த செய்திகளை சங்க இலக்கியத்திலும் கல்வெட்டுகளிலும் காண்கிறோம். அந்தக் காலத்தில் கோவில்கள் என்பது இன்று காணப்படும் பிரம்மாண்ட கோபுரங்கள் உடையவை அல்ல. அப்பர் தேவாரத்தில் 7 வகைகைக் கோவில்களைக் குறிப்பிடுகிறார்.. ஒரு தலை நகரை வென்று, அந்த ஊரை தீக்கிரையாக்கி கழுதையைக் கொண்டு உழுதனர் என்பதை புறநானூற்றுப் பாடலிலும் ஒரிஸ்ஸாவிலுள்ள ஹத்திக்கும்பா குகைக் கல்வெட்டுகளிலும் படிக்கிறோம். அது கி.மு 130ல் ஆண்ட காரவேலனின் கல்வெட்டு. அவன் பாண்டிய நாடு வரை படையெடுத்து வந்து பாண்டியனிடம் முத்துக்களைக் கப்பமாகப் பெற்றான் . இவை எல்லாம் போக, பெரிய மழை , வெள்ளத்திலும் பல கோவில்கள் அழிந்தன.
இதற்கும் மேலாக வறட்சி ஏற்பட்டால் ஊரே காலியாகி மக்கள் இடம்பெயர்ந்து போனார்கள். தமிழ் , சம்ஸ்க்ருத இலக்கியம் முழுவதிலும் அடிக்கடி வரும் வாசகம் 12 ஆண்டுக்கு ஒரு முறை வரும் வறட்சி ஆகும். இதை 12 ஆண்டு நீண்ட வறட்சி என்றும் சொல்லலாம். அப்படி ஏற்படும்போது மக்கள் வெளியேறியதால் கோவில்கள் பாழடைந்து போயின.
இன்ன பல காரண ங்களால் இலங்கைத் தீவில் அழிந்த கோவில்களின் பட்டியல் நமக்கு கிடைக்கிறது .
மறைந்துபோன சிவன் கோவில்களில் மிக முக்கிய மானது பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான தொண்டீஸ்வரம் சிவன் கோவில் ஆகும்
தொண்டீஸ்வரம்
இலங்கைத் தீவில் வந்து குடியேறிய விஜயன் தீவிர சைவன். அவனுக்கு 300 ஆண்டுகளுக்குப் பின்னரே புத்த மதம் இலங்கையில் காலெடுத்துவைத்தது. விஜயன் இலங்கைத் தீவின் நால் திசைகளையும் காக்க 4 சிவ கோவில்களை கட்டினான் ஆயினும் தொண்டீஸ்வரம் என்ற ஐந்தாவது இடத்தை யாழ்ப்பாண வைபவ மாலை மற்றும் இலங்கை வரலாற்றறை எழுதிய பால் பியரிஸ் குறிப்பிடுகின்றனர் . இன்று வரை தொண்டீஸ்வரம் பற்றி ஊகங்களே உள்ளன . புகழ்பெற்ற அந்த சிவாலயத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்துக்களில் ஒரு இன்டியானா ஜோன்ஸ் INDIANA JONES தோன்றினாதான் அதைக் கண்டு பிடிக்க முடியும்!
ஜம்புகோளம், சம்புத்துறை,சம்பேஸ்வரம்
தமிழில் கோவளம் , கோவலம் என்று ஒரு சொல் உண்டு .இதற்கு 1935-ம் ஆண்டு ஆனந்த விகடன் தமிழ் அகராதி தரும் பொருள் கடலுக்குள் நீண்ட தரைப் பகுதி; கடலில் முனையில் இருக்கும் பட்டினம் என்பதாகும். தமிழ் நாட்டில் சென்னைக்கு அருகிலும், கேரளத்தில் திருவந்தபுரத்துக்கு அருகிலும் யாழ்ப்பாணத்தில் குறைந்தது மூன்று இடங்களிலும் கடற்கரைப் பகுதிகளில் கோவளம் இருப்பதை நாம் அறிவோம். பருத்தித்துறை அருகில் கல் கோவளம், கீரிமலைக்கு மேற்கே சம்பு கோவளம் , காரை நகரில் ஒரு கோவளம் என்று பட்டியல் நீளும்.
இலங்கையில் இப்போது ஜம்புகோளம் என்ற் இடம் உள்ளது; இதுவும் கோவளம் என்பதன் திரிபே. இந்தியாவுக்கு நாவலந்தீவு / ஜம்புத் வீபம் என்றும் பெயர். இதன் அருகில் இருந்ததால் ஜம்புகோளம் என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம் அல்லது நாவல் மரம் நிறைந்த கடலில் நீண்டிருக்கும் முனை என்றும் பொருள் இருந்திருக்கலாம். 2300 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இடத்தில்தான் அசோக மாமன்னனின் மகள் சங்க மித்ரா, பெரிய, புனித அரச மரத்தின் கிளையுடன் வந்து இறங்கினாள்.
இந்த இடத்துக்கு சிலர், வேறு விளக்கமும் தருவார்கள். சம்பு என்பது சிவனின் பெயர். சிவன் சிலை வந்து இறங்கிய பட்டினம் இது என்பது அந்த விளக்கம் .
இங்கு சம்புவுக்கு / சிவ பெருமானுக்கு ஒரு கோவில் இருந்தது . இந்த சம்பந் துறையைத்தான் சிங்கள . பாலி நூல்கள் ஜம்புகோளம், என்று குறிப்பிடுவதாக சி. எஸ். நவரத்தினம் 1964ல் எழுதிய நூலில் குறிப்பிட்டிடுகிறார் ஆயினும் இவை ஒரே இடமா அல்லது வேறு இடங்களா என்பது விவாதத்துக்குரிய விஷயமே .
டச்சுக்காரர் காலத்தில் சின்னத்தம்பிப் புலவர் எழுதிய பறாளை விநாயகர் பள்ளு நூலில் சம்பேஸ்வரத்தில் இருந்த சிவன் கோவில் பற்றி பாடியுள்ளார் ஷம்பு என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு வரங்களை அருளுவோன், வரம்தருவார் என்று பொருள்.
Ref . A SHORT HISTORY OF HINDUISM IN CEYLON , C.S.NAVARATNAM, 1964
XXX
சிவன் கோவில் இடிபாடுகள், துணுக்காய்
இலங்கையின் வடபகுதியில் முல்லைத்தீவில் வவுனிக்குளத்துக்கு அருகில் உடைந்த சிவலிங்கத்தையும் கோவில் இடிபாடுகளையும் கண்டதாக முல்லைத்தீவு துணை ஏஜென்ட் ஹுஜ் நெவில் HUGH NEVILLE 1889ம் ஆண்டு டைரி குறிப்பில் எழுதி வைத்துள்ளார் .
அங்குள்ள பாளி ஆற்றின் குறுக்கேயுள்ள அணை, துத்த காமினி காலத்துக்கும் முந்தியது என்று மஹாவம்சக குறிப்பை மேற்கோள் காட்டி ஹென்றி பார்க்கர் HENRY PARKER எழுதிவைத்துள்ளார் இவை எல்லாம் தமிழ் மன்னன் எல்லாளன் ஆட்சிக்குட்பட்ட இடம் என்பதால், சிவன் கோவில் இருந்ததை ஊகிக்க முடிகிறது .
கோவில் காடு என்னும் இடத்தில் உடைந்த ஆவுடையாரும் கண்டு பிடிக்கப்பட்டது.
செட்டிகுளம் சந்திர சேகரன் கோவில்
மதவாச்சி – மன்னார் சாலையில் மதவாச்சியிலிருந்து 15 மைல் தூரத்தில் விநாயகர் சிலை வழிபாட்டில் உள்ளது . சாலைக்கு அப்பால் குளமும், வவ்வாலை என்னும் இடமும் உள்ளன
மதுரை நகரைச் சேர்ந்த ஒரு செட்டியார் கப்பல் உடைந்துபோய், முத்துக்குளிக்கும் மீனவர்களுடன் இவ்வூரில் கரை சேர்ந்தனர். இது நடந்தது. கி .பி. 247ம் ஆண்டில்.வீர நாராயண செட்டியார் என்ற பெயர் உடைய அவர் வவ்வாலையில் சந்திரசேகரனுக்கு கோவில் கட்டினார். என்று VANNI MANUAL, J P LEWIS வன்னி மானுவல் எழுதிய ஜெ.பி. லூயிஸ் குறிப்பிடுகிறார்
தொடரும்…………………………………………….
Tags சம்புத்துறை, சம்பேஸ்வரம் அழிந்த , மறைந்த , சிவன் கோவில்கள், கோவளம் , கோவலம்