Mercury turned into Gold!  Delhi Temple Wonder! (Post No.12,784)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,784

Date uploaded in London – –  –  30 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxxx

For thousands of years there has been a craze about the transmutation of lead and iron into gold. Hindu saints and researchers sang about it. Even the famous western scientists believed in the transmutation of metals and were frantically trying to find the secret.

This branch of science or pseudo-science is called Alchemy.

xxxx

What does science say about alchemy or transmutation of base metals into gold?

Scientists believe it is not possible to change iron into gold. But the radio active elements such as Uranium and Plutonium

What does uranium finally become?

Uranium eventually decays to radium. Radium decays to release a radioactive gas called radon. Radon in underground uranium mines is a greater radiation hazard to miners than uranium.

Three stable lead nuclides are the end products of radioactive decay in the three natural decay series: uranium (decays to lead-206), thorium (decays to lead-208), and actinium (decays to lead-207)

xxxx

Wikipedia gives the list of Hindu alchemists:

Kanada, sage and philosopher (6th century BC)

Nagarjuna (born 931)- Buddhist philosopher

Yogi Vemana

Siddhar Tamil sage and philosophers

Nayanmars Tamil sage and philosophers

Alvars Tamil sage and philosophers

Vallalar, Tamil 18th Century sage and philosopher

Arunagirinathar Tamil 15th Century sage and philosopher

Agastiyar Tamil Sage

Korakkar Tamil Sage

Thirumoolar Tamil Sage

Bogar Tamil Sage

Kagapujandar Tamil Sage

Vaalmiki Tamil Sage

Pattinathar Tamil Sage

Kalangi Nathar Tamil Sage

Pathanjali Tamil Sage

Avvaiyar Tamil Sage

Naradhar

We also read about Tamil saints Sambandar and Sundarar getting gold mysteriously.

But one person turned mercury into gold in the famous Hindu Temple in Delhi in the recent times.

On one of the walls of the Birla temple in New Delhi is engraved an unusual inscription . Delhi Birla Mandir is Lakshmi Narayan Temple and it is called Birla Mandir due to the big donationsto the temple.

Here’s a translation of how the inscription, in Hindi, described the incident.

The matter was published in Times of India newspaper in 2008 and in the Encyclopaedia of Indian Sciences in 2007 (for more on the subject Bhagwan Dash article in the book).

Mercury converted to gold in 1942 in India- proof

Inscription on Birla Mandir-Delhi

On 27/5/1942 in Birla House in presence of Shri A B Thakkar (PM, All India Hindu Sevak Sangh), Sri Duttji, secretary-Birla Mills, Delhi, Sri Khemka-Chief Engineer Sri Wilson etc, Pandit Krishnalala Sharma converted one tola mercury into 1 tola gold. It was done in Birla house, New Delhi

One Tola is approximately 12 grams.

Reetha fruit is Sapindus trifoliatus Linn (Soapnut)

He put mercury inside a shell of reetha fruit (soapnut) with some white and yellow powder (Jadi-booti) and it was closed with clay and this was put in hollow of earthen lamp and burnt for 45 minutes. On cooling and opening it, Gold was found! Similar inscription on Birla mandir-Varanasi:

In 1943, pandit Krishnapal Rasavaidya did it in Rishikesh in presence of Mahatma Gandhi’s P.A. Mahadev Desai, G.K Birla and others.

Mercury provided by Desai was converted into 18 KG of Gold!. This was donated to a trust which fetched Rs 72000! This experiment was repeated in presence of Pratap Singh of BHU.

Was this an example of alchemy or cold fusion and if yes, our ancestors knew more science than all world put together!

BARC former associate Mahadeva Srinivasan believes in this possibility and stated there was good work done at BARC on this till 1994 and then senior scientists killed this research! Cold fusion research is not getting funds in India but China, Russia and Japan are doing it. This process can mean one can create electricity in their homes and clean fuel will be produced without hazardous wastes.

According to Modern Science Mercury is the closest metal of Gold . Mercury’s atomic number is 80 and Gold’s atomic number is 79 .if we can remove only one atom from Mercury , scientifically Mercury will turn into Gold. Though it is not that simple I still wonder how did Hindus find out mercury and gold are so close thousands of year before Mendeleev’s Periodic Table.

Pandit Krishnalala Sharma learnt it from a saint in Haridwar named Narayana swami.

Even Kautilya’s Arthasastra which is 2400 year old says about gold produced by transmutation.

My mother told me an incident where a lightning strike made the cow dung into gold.at that time I was laughing as a science student. But the latest science talks about metals are created by transmutation in extreme hot supernova in the universe. So my mother may be right in her belief!

Picture of Soapnut tree (Reetha)

This is what Wikipedia says,

Most stars carry out transmutation through fusion reactions involving hydrogen and helium, while much larger stars are also capable of fusing heavier elements up to iron late in their evolution.

Elements heavier than iron, such as gold or lead, are created through elemental transmutations that can naturally occur in supernovae. One goal of alchemy, the transmutation of base substances into gold, is now known to be impossible by chemical means but possible by physical means. As stars begin to fuse heavier elements, substantially less energy is released from each fusion reaction. This continues until it reaches iron which is produced by an endothermic reaction consuming energy. No heavier element can be produced in such conditions.

—subham—

Tags- Mercury, gold, alchemy, transmutation, Delhi Birla Mandir, Krishnalala Sarma.

வைக்கம் போராட்டமும் திராவிட பித்தலாட்டமும் (Post No.12,783)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,783

Date uploaded in London – –  –  30 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

வைக்கம் என்ற ஊரின் பெயரைச் சொன்னவுடன் அங்கேயுள்ள மஹாதேவர் கோவில் எல்லோருக்கும் நினைவில் வந்து வைக்கதாப்பா காப்பாத்தப்பா என்பார்கள்; தேச பக்தர்களும் மலையாளிகளும் மஹாத்தமா  காந்தியையும் திருவாங்கூர் மஹாராஜாவையும் கேள ப்பனையும்மாதவன் பிள்ளையையும்  கிருஷ்ண சுவாமி ஐயரையும் வாழ்த்துவார்கள்; விஷயம் தெரியாத அரை வேக்காடுகள் நம்ம ஊரு நாயக்கர் போய் புரட்சி செய்துவிட்டார் என்று நினைப்பார்கள்; திராவிட பித்தலாட்டக்காரர் பிரசாரம் மூலம் நானும் நம்ம ஊரு  கன்னட தாய் மொழி ராமசாமி நாயக்கருக்கும் வைக்கத்துக்கும் சம்மபந்தம் உண்டுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். காந்திஜியின் சொற்பொழிவுகளைப்  படித்த பின்னர், அவ்ருடன் வந்த மஹாதேவ் தேசாய் 1937ல் எழுதிய அருமையான புஸ்தகத்தைப் பிடித்த பின்னர்,  அயோக்கியர்களின் மூகத்திரை கிழிந்தது  என்று சந்தோஷப்பட்டேன்

BOOK DETAILS

THE EPIC OF TRAVANCORE, MAHADEV DESAI, NAVAJIVAN KARYALAYA, AHMEDABAD, 1937

251 பக்கங்ககளை உடைய திருவாங்கூர் இதிகாசம் என்ற ஆங்கிலப் புத்தக த்தைப் படித்தபின்னர் நாயக்கர் பெயரை எங்குமே காணாதது கண்டு வியந்தேன். அந்தப் புத்தகத்தை மறு பதிப்பு செய்ய வேண்டும். புத்தகத்துக்குப் பெயர் வைத்தவர் புகழ் பெற்ற கவிஞர் சரோஜினி நாயுடு. எழுதியவரோ தேசம் முழுதும் அறிந்த சுதந்திரப் போராட்டத் தியாகி மஹாதேவ தேசாய்.

திராவிட விஷமிகளும் அவர்களோடு கூட்டுச் சேரும்போது மட்டும் கம்யூனிஸ்டுகளும் விஷம பிரசாரத்தைக் கட்டவிழ்த்துள்ளனர். அங்கு நாயக்கருக்கு சிலை வைத்ததும் நம்ம ஊரு திராவிட விஷம்தான் ; ஆனால் மலையாளி களைக் கண்டு அந்தக் கோழைகளுக்கு பயம்; ஆகையால் கடவுள் காட்டுமிராண்டி அவனைக் கும்பிடறவன் அயோக்கியன் என்ற வாசகங்களை திராவிட வா(ந்)திகள் எழுத முடியவில்லை ;அப்படி எழுதினால்  மலையாளி இந்துக்கள் சிலையை நீடிக்க விடமாட்டார்கள் என்பது நம்ம திராவிட மோசடிகளுக்குத் தெரியும்

நம்ம கன்னட நாயக்கர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இருந்ததால் போயிருப்பாரு; ஆனால் நூத்தோட ஒன்னு நூத்தி ஒன்னு கணக்குதான். . ராஜாஜி பெயர் கூட புஸ்தகத்தில் இருக்கு !

xxxxxx

வைக்கம் சத்தியாகிரகம் என்றால் என்ன?

வைக்கத்தில் புகழ்பெற்ற மஹாதேவர் கோவிலிச் சுற்றியுள்ள தெருக்களில் கீழ் ஜாதி மக்கள் நடமாடவோ கோவிலுக்குள் வரவோ திருவாங்கூர் மகாராஜா தடை வித்தித்திருந்தார்; தீண்டாமை நீடித்தால் கிறிஸ்தவ முதலைகள்  இந்துக்களை விழுங்கிவிடும் என்று அஞ்சிய காந்திஜியும் ஈழவா ஜாதி தலைவர் நாராயண குருவும் இந்து ஹரிஜனங்களை கோவிலுக்குள் அனுமதிக்கக்கோரி சத்தியாகிரகம் செய்தனர்; நாட்டின் வடபகுதியில் இதே ஹரிஜனங்களுக்கு உரிமை கோரிய காந்திஜி வந்தவுடன் மகாராஜா மனம் மாறியது .

இதற்கெல்லாம் மூல காரணம்  மஹாகவி பாரதியார் ; வைக்கம் கிராம போராட்டம் துவங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே அவர் பறையர் தீயர் (ஈழவா) புலையர் ஆகியோருக்கு விடுதலை ஈன்று பாடினார்  ( எனது தந்தைக்குப் பிடித்த பாட்டும் அதுதான் ; காமராஜுடன் சிறையில் இருந்த என் தந்தை, சென்னை மவுண்ட் ரோடில் விடுதலை, விடுதலை என்ற பாரதி பாட்டினைப்  பாடிக்கொண்டு ஊர்வலம் போவார்களாம்; இதை அவர் என்றும் சொன்னதில்லை; என் அம்மா, என் தந்தை கைதான விஷயங்களை அடுக்கடுக்காகச் சொல்லுவார் )

விடுதலை! விடுதலை! விடுதலை!

பறையருக்கும் இங்கு தீயர்

புலைய ருக்கும் விடுதலை

பரவ ரோடு குறவருக்கும்

மறவ ருக்கும் விடுதலை!

திறமை கொண்டதீமை யற்ற

தொழில் புரிந்து யாவரும்

தேர்ந்த கல்வி ஞானம் எய்தி

வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)

ஏழை யென்றும் அடிமையென்றும்

எவனும் இல்லை ஜாதியில்,

இழிவு கொண்ட மனித ரென்பது

இந்தி யாவில் இல்லையே  — பாரதியார்

நம்முடைய தீர்க்கதரிசி புலவர் சுப்பிரமணிய பாரதி 1921ல் இறந்துவிட்டார். ஆக காந்திஜி, வைக்கம் வீரர்களுக்கு எல்லாம் பாடம் சொல்லிக்கொடுத்தவர் பாரதி.

ஆங்கில நாளேடுகளில் வைக்கம்பற்றிய கட்டுரைகளைப் படித்தேன் ; விக்கிப்பீடியாவிலும் படித்தேன் எல்லாம் அரை வேக்காடுகள் எழுதிய அரைகுறைக் கட்டுரைகள் ; போராட்டத்தைப் பற்றிய முழுச் சித்திரம் இல்லாதபடி எல்லோரும் திரும்பத் திரும்பச் சொன்ன பொய்களை எழுதியுள்ளனர். இதனால் மஹாதேவ தேசாய் எழுதிய புஸ்தகம் தமிழில் வந்தே ஆக வேண்டும்.

எரியும் வீட்டில் பிடுங்கியது லாபம் என்று சில விஷமிகள் காத்திருந்தனர். காந்திஜிக்கு அவர்களின் விஷமம் புரிந்தது ; டேய் பசங்களா; இது இந்துக்களின் சொந்தப பிரச்சினை; நீங்கள் போராட்டத்தில் பங்கேற்கத் தேவை இல்லை என்று சொல்லி சீக்கியர்களையும்  கிறிஸ்தவர்களையும் விரட்டி விட்டார்; அமிர்தசரஸிலிருந்து இலவச உணவு கொடுக்க வந்த சீக்கியர்கள்  மூட்டி முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு ஓ ட்டம் பிடித்தனர் இது நான் சொல்லும் புஸ்தகத்திலும் உளது; விக்கிப்பீடியாவிலும்  உளது

The local Christian leadership was alienated by a statement by Gandhi asking them to keep clear from ‘a Hindu affair’ (April, 1924).[4][17] Sikh Akali activists from Amritsar had also arrived at Vaikom to establish free food kitchens to the satyagrahis (April, 1924).[17] Gandhi called for the closure of the Sikh kitchens (from Wikipedia).

எல்லோரும் கோவிலுக்குள் சம உரிமையுடன் சென்று வழிபடலாம் என்ற பிரகடனத்தை திருவாங்கூர் மகா ராஜா 1936ம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி வெளியிட்டார்காந்திஜிக்கும் நாயர் சங்கத்துக்கும்நாராயண குரு  சங்கத்துக்கும் நம்பூதிரிகளின் யோகஷேம டிரஸ்டுக்கும் ஏக மகிழ்ச்சி

காந்திஜிக்கும் மஹாராஜாவுக்கும் பாராட்டுக்கள் குவிந்தன. நாயர் சங்கத்தலைவர் மற்றும் கிருஷ்ணசாமி ஐயர் போன்றோர் தங்கள் பெயர்களின் பின்னால் ஜாதிப் பெயரை சேர்க்கவே இல்லை ( எனது தந்தை வெ .சந்தானமும் தன்  பெயரின் பின்னால் ஜாதிப் பெயரை சேர்த்ததே இல்லை.)

XXXXX

வைக்கத்தில் காந்திஜி சொற்பொழிவு

இப்போது உண்மையான  வைக்கம் வீரர்கள் யார் என்பதை காந்திஜி வாய்மொழி மூலமாகவே கேட்போம்:-

வைக்கத்தில் சத்தியாகி கிரக மைதானத்தில் 18-1-1937ல் சொற்பொழிவு ஆற்றினார்; 25000 பேர் அவரது உரையை க்கேட்டனர்

” உங்கள் நடுவில் நான் இரண்டாவது முறையாக நிற்கிறேன் .என்னுடைய அளவற்ற மகிழ்ச்சியை நான் சொல்லுவதை வீட நீங்களே உணர  முடியும் என்ன அருமையான சுப வேளை !

சில ஆண்டுகளுக்கு முன்னர்கோவிலை நோக்கிச் செல்லும் சாலைகளை அவர்ண ஹிந்துக்களுக்கும் (ஜாதியில் தாழ்ந்த) திறந்துவிட வேண்டும் என்பதற்காக போராடுவதே கஷ்டமாக இருந்தது  நல்ல மனிதன் மாதவன் (பிள்ளை)கிருஷ்ணசாமி (அய்யர்) உதவியுடன் போராடினார்கள் கேளப்பன் (நாயர்) இந்தப் போராட்ட த்துக்கான வித்துக்களை ஊன்றினார் ;மிகவும் சோகமான விஷயம் மாதவனோ கிருஸ்ணசாமியோ இன்று நம்மிடையே இல்லை நம்முடைய சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் பாக்கியம் அவர்களுக்கு இல்லை.

பந்தளம்,எட்டுமானூர், முதலிய ஊர்களில் அவர் என்னே சொன்னார் என்பதையும் காண்போம் .

old spelling VAIKAM; new spelling VAIKOM (just above Kottayam)

தொடரும்………………………………………..

Tags- வைக்கம் சத்தியாக்கிரகம்ஈ வே ரா ராமசாமி நாயக்கர்திராவிடபித்தலாட்டம்வீரர்கள்

ஹரிபாட் சுப்ரமண்ய சுவாமி கோவில் –மதுரை மீனாட்சி மூக்குத்தி கதை Part 19 (Post.12782)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,782

Date uploaded in London – –  –  30 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 19

கோவில் எண் 16 –  ஹரிபாட் சுப்ரமண்ய சுவாமி கோவில்

கேரளத்தில் ஆலப்புழை மாவட்டத்தில் ஹரிபாடு இருக்கிறது. கொ ல்லத்திலிருந்து 54 கிலோமீட்டர் வடக்கு நோக்கி பயணம் செய்தால் ஹரிபாட் சுப்ரமணிய சுவாமியை தரிசிக்கலாம்.

சிறப்பு அம்சங்கள்

கேரளத்திலுள்ள மிகப்பழமையான முருகன் கோவில்

சுமார் எட்டு அடி உயரமுள்ள நான்கு கைகளுள்ள சுப்பிரமணியசுவாமி சிலை.

மாநிலத்தின் மிகப்பழைய  முருகன் கோவில் ; பரசுராமர் வழிபட்டது

ஆண்டு முழுதும் நிறைய திருவிழாக்கள்;

பழனி போலவே காவடி ஆட்டம் உண்டு ;

விராலி மலை போல கோவிலில் மயில்களையும் காணலாம் ;

கோவிலின் தோற்றம்

பரசுராமர் இங்குள்ள முருகனை வழிபட்டார். பின்னர் சிலை மாயமாக மறைந்தது; பக்தர் ஒருவர் கனவில் சிலை இருக்கும் இடம் தெரியவே பக்தர்கள் பயிப்பாடு நதியில் தேடி சிலையைக் கொண்டு வந்தனர். அந்த நாளை ஆண்டுதோறும் வல்லம் களி  என்று கொண்டாடி வருகின்றனர்

1921ம் ஆண்டில் பெரிய தீ விபத்து ஏற்பட்டு கோவிலின் பெரும்பகுதி சேதம் அடைந்தது. கேரளத்தின் கோவில்கள் மரங்களினால் கட்டப்படுவதால் தீ விபத்துகள் நேரிடுவது எளிதாகி விடுகிறது . தீ விபத்துக்குப் பின்னர் கோவில் விரிவாகக் கட்டப்பட்டது. இப்போது 4 கோபுரங்கள், பெரிய கூத்தம்பலம் , தங்கத் தகடு போர்த்திய கொடிமரம் ஆகியன உள்ளன

முருகனின் தோற்றம்

சுப்பிரமணிய சுவாமி நான்கு கைகளுடன் நிற்கிறார். ஒரு கையில் வேல்; இன்னும் ஒரு கையில் வஜ்ராயுதம் ; மீதி இரண்டு கைகளில் ஒன்று அபய முத்திரையுடனும் இன்னும் ஒன்று பாதத்தை நோக்கியும் இருக்கிறது

திருவிழாக்கள்

அதிகமான உற்சவங்களை  உடைய கோவில் இது.

ஆவணி உற்சவம் சிங்கம் மாதத்தில் (ஆகஸ்ட் -செப்டம்பர் ) நடக்கிறது ;மார்கழி உற்சவம் தனுர் மாதத்திலும் (டிசமபர்), சித்திரை உற்சவம் மேடம் /மேஷம்(ஏப்ரல்) மாதத்திலும், கார்த்திகை உற்சவம் நவம்பர் மாதத்திலும் தைப்பூசம்  ஜனவரி மாதத்திலும் நடக்கின்றன .காவடி ஆட்டம் இந்த உற்சவங்களின் சிறப்பு அம்சம் . சிலையை மீட்டதை நினைவு கூறும் வகையில்  பயிப்பாடு வல்லம் களி அல்லது ஜலோத்சவம் என்னும் மூன்றுநாள் திருவிழா திருவோணத்துக்குப் பிறகு பையாப்பட்டு ஆற்றில் நடத்தப்படுகிறது.

மகர மாத புஷ்ய நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால், அந்த நாளையும் ஆண்டுதோறும் கொண்டாடுகின்றனர்

சந்நிதிகள்

கேரளத்தில் பெரும்பாலான கோவில்களில் உள்ள கிருஷ்ணன், சாஸ்தா/ ஐயப்பன் , தட்சிணா மூர்த்தி விக்கிரகங்கள் இந்தக் கோவிலிலும் உள்ளன .

xxxxx

மதுரை மீனாட்சி மூக்குத்தியைக் காணோம் !

கோவில் எண்கள்- 17 & 18

குமாரநல்லூர் பகவதி கோவில்,  உதயணபுரம் கோவில்

முருகனும் பகவதியும் இடம் மாறிய கோவில்கள்

மூன்று கோவில்கள் தொடர்புடைய ஒரு சுவையான கதை !

குமார நல்லூர் , கோட்டயம் நகரிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ; குமரன் என்றால் முருகன். ஆனால் முருகன் அல்லாமல் பகவதியை பிரதிஷ்டை செய்த கோவில் இது. பின்னர் ஏன் குமரன் அல்லாத ஊர் என்று சொல்லி முருகனைக் கேலி செய்கிறார்கள் என்ற வினா எழும். அங்குதான் சுவையான கதை கிடைக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது . ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு நாள் மீனாட்சி அம்மனின் மூக்குத்தியைக் காணவில்லை.; பூமாலைகளைக் கழற்றும்போது அது எங்கோ தொலைந்துவிட்டது. மறுநாள் , இந்தச் செய்தி பாண்டிய மன்னனின் காதுகளை எட்டியது. இதுபோன்ற விஷயங்களில் முதல் பலி அர் ச்சகர்தான் . நாளை காலைக்குள், பட்டர் அம்மனின் மூக்குத்தியைக் கொண்டுவராவிடில் அவருக்கு சிரச்சேத தண்டனை (தலையைக் கொய்தல்) என்று பாண்டிய மன்னன் அறிவித்தான் .

ஒன்றும் அறியாத அப்பாவி பட்டர் தவியாய்த் தவித்தார் .

மறு நாள் காலையில்  மரண தண் டனை என்று கேட்டபின்னர் உறக்கமா வரும்? அன்னை மீனாட்சியை மனம் உருகப் பிரார்த்தித்தார் ; அவர் முன்னால் ஒரு ஒளி தோன்றியது ; அதைப் பின்பற்றிச் சென்றார்; அது அவரை கேரளம் வரை அழைத்து வந்து குமார நல்லூரில் விட்டது; அவர் உயிர்  பிழைத்தார்; இன்றும் மதுரை நம்பூதிரி வழிவந்தோர் அதே பெயரில் அழைக்கப்படுகின்றனர் .

இதே நேரத்தில் சேர மன்னன் குலசேகரப் பெருமாள் கனவில் ஒரு அதிர் ர்ச்சி தரும் செய்தி காதில் விழுந்தது. அவர் பகவதி சிலையை வைக்கம் என்னும் தலத்தில் இருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ள உதயண புரத்தில் வைக்க திட்டமிட்டிருந்தார் ; அதே போல குமார நல்லூரில் சுப்பிரமணிய சுவாமியை பிரதிஷ்டை செய்ய எண்ணியிருந்தார் கனவில் மன்னனுக்கு வந்த செய்தியோ குமாரநல்லூரில் முருகனை வைக்காதே என்று சொன்னது உடனே அதை உதயண புரத்துக்கு அனுப்பிவிட்டு அங்கு நிறுவ இருந்த பகவதியைக் குமார நல்லூருக்குக் கொண்டுவந்தார் ; அலகிலா விளையாட்டுடையான் அல்லவா அம்பலத்தில் ஆடுகிறான்! ஆண்டவனின் லீலா விபூதிகளுக்கு விளக்கமே கிடையாது

குமரன் பெயரில் இருந்த ஊர் – குமரன் அல்ல ஊர் என்று மாறியது. உத யநாயகிபு ரம் , உதயண பு ரம் என்று மாற்றப்பட்டது. ஆயினும் இரண்டு கோவில்களிலும் இதை நினைவு படுத்தும் வகையில், அங்கு இல்லாத சாமிகளுக்கு சில வழிபாடுகளும்  நடைபெறுவதால் இந்தக் கதைகள் உண் மையானவை தான் என்றும் புலனாகின்றது.

புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன், மலையாள தேசத்திலுள்ள முருகன் கோவில்களைப் பற்றி விலளக்கமாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார் அதில் மலையாளிகள் முருகனை பையன் என்றே அழைப்பர் என்கிறார். பையன்  பெயரில் பல ஊர்களும் உள்ளன. குமாரன் என்பதன் தமிழ் பொழிபெயர்ப்பு பையன். தமிழ் நாட்டிலோ விநாயகருக்கு பிள்ளை என்று பெயர் சூட்டியுள்ளோம் !! இருவரும் சிவனின் பிள்ளைகள்தானே !

To be continued……………………………..

–subham–

Tags- கேரள , புகழ்பெற்ற ,108 கோவில்கள், PART 19,ஹரிபாட், சுப்ரமண்ய சுவாமி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் ,மூக்குத்தி

கொங்குமண்டல சதகம் – முதல் ஐந்து பாடல்கள் (Post No.12,781)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,781

Date uploaded in London –  –  30 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கொங்குமண்டல சதகம் – முதல் ஐந்து பாடல்கள்

ச.நாகராஜன்

விஜயமங்கலம் கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகத்தில் நூறு பாடல்கள் உள்ளன. இவற்றில் உள்ள பாடல்களையும் அவை கூறும் அற்புதமான வரலாறுகளையும் இது வரை பார்த்து வந்தோம்.

ஆரம்பத்தில் உள்ள சில பாடல்கள் இது வரை தரப்படவில்லை.

அவற்றை இங்கு காணலாம்.

பாடல்

பாயிரம்

காப்பு

அறுசீரடியாசிரிய விருத்தம்

பூமலி செம்ம னத்தார் புரிவினைக் கிடர கற்றி

நாமலி தீம னத்தார் நசைவினைக் கிடரி யற்றிக்

கோமலி யுருவ மூன்று கூறிரு திணைபொ ருந்தித்

தேமலி மருப்பொன் றேந்து தேவனைப் பணிகு வேமால்

பாடலின் பொருள் : நல்ல மனமுடையவர் தொடங்கிய செயல்களுக்கு நேரும் இடையூறுகளை நீக்கியும், அச்சமான கொடிய உள்ளத்தினர் ஆசை கொள்ளும் தொழில்களுக்குத் தடையை உண்டாக்கியும், மேன்மையுள்ள (பூதக்கால் – தெய்வ உடல் – யானைத் தலை) மூவகை வடிவில் (அஃறிணை – உயிர்திணை) இரு திணை பொருந்தி ஒற்றைக் கொம்பராக விளங்கும் மூத்த பிள்ளையாரை வணங்குவாம்.

அவையடக்கம்

கடல்சூழ் புவியிற் கண்டமற்றுங் காணுஞ் சுவரிற் கீறிமகிழ்

மடமார் சிறுவர் போற்கொங்கு வளமுஞ் சீரு மோராதேன்

திடமாய் வினவி நோக்கியிசை தெளிவோர் முன்னிம் மண்டலத்தின்

அடைவாங் கதைகள் பொதிசதக மாக்கி லறிஞ ரிகழாரே

பாடலின் பொருள் : கடல் சூழ்ந்த விரிந்த பூமியில் உள்ள, கண்டங்கள் மற்றும் தீவுகள் முதலிய பிரிவுகளை, நிற்கும் சுவரில் கோடிட்டு எழுதிக் களிக்கின்ற அறியாச் சிறுவர்களைப் போல, கொங்கு மண்டலத்தின் வளமும் சிறப்பும் அறியாதவனாகிய எளியேன் (அவற்றை) நன்றாகக் கேட்டுப் பார்த்துச் சொல்ல வல்லார் முன் அக்கொங்கு மண்டலத்தின் முறையான கதைகளடங்கிய சதகம் என்னும் பிரபந்தத்தை இயற்றுவேனேல் அதைத் தவறு என்று அறிஞர்கள் இகழ மாட்டார்கள்.

இதை கம்பரது கீழ்க்கண்ட பாடலுடன் ஒப்பு நோக்கலாம்:

“அறையும் ஆடரங்கும் மடப் பிள்ளைகள்

தறையிற் கீறிடிள் தச்சரும் காய்வரோ!”

ஆக்கியோன்

திருத்தகு சரித மாய்ந்து தேர்பவர் தமக்குச் சற்றும்

வருத்தமி லாது கொங்கு மண்டல சதகஞ் சொன்னான்

வரிக்குயில் கூவும் பிண்டி மரத்துமுக் குடைக்கீழ் நின்ற

கருத்தனைக் கருத்து ளுன்னுங் கார்மேகக் கவிஞன் றானே

பாடலின் பொருள் : வரியை உடைய குயில்கள் கூவுகின்ற அசோக மரத்தினடியில் மூன்று குடைகள் நிழலைச் செய்ய வீற்றிருந்தருளும் அருகதேவனைச் சிந்தித்து இருக்கும் கார்மேகக் கவிஞன், கொங்கு மண்டலத்தின் சிறந்த சரிதங்களைத் தெரிந்து கொள்வாருக்கு வருத்தம் நேராதபடி எளிதாகக் கொங்கு மண்டல சதகம் என்னும் நூலைச் சொன்னான்.

சிந்தாமணியில் வரும் கீழ்க்கண்ட பாடலை இங்கு ஒப்பு நோக்கலாம்:

முழாத்தி ரண் மொய்ம்மலர்த் தாமந் தாழ்ந்துமேல்

வழாத்திரு மலரெலா மலர்ந்து வண்டினங்

குழாத்தொடு மிரைகொளக் குளிர்ந்து கூங்குயில்

விழாக்கொள விரிந்தது வீரன் பிண்டியே

பாயிரம் முற்றும்

நூல்

நாடு

கட்டளைக் கலித்துறை

பொற்பு மிகுகொங்கு நாடு செழித்திடப் பூமியெங்கும்

நற்பய னுற்றுச் சுகித்திடுமென்ன நவிற்றுபழஞ்

சொற்பெற வெல்லா வளமும் பொருந்திச் சுரபியொடு

வற்சக மோங்கி வளர்வதன் றோகொங்கு மண்டலமே

–    பாடல் 1

பாடலின் பொருள் : பொலிவு மிகுந்த ‘கொங்கு நாடு செழித்தால் இந்த பூமியிலுள்ள எந்த நாடும் நல்ல பலனைப் பெற்றுச் சுகம் அடையும்’ என்று சொல்கின்ற பழமொழிக்கு இணங்க மாடு கன்றுகள் விருத்தி கொண்டது கொங்கு மண்டலம் ஆகும்.

‘கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்’ என்பது காலம் காலமாக வழங்கி வரும் ஒரு பழமொழி.

எல்லை

மதிற்கரை கீட்டிசை தெற்குப் பழநி மதிகுடக்குக்

கதித்துள வெள்ளி மலைபெரும் பாலை கவின்வடக்கு

விதித்துள நான்கெல்லை சூழ வளமுற்று மேவிவிண்ணோர்

மதித்திட வாழ்வு தழைத்திடு நீள்கொங்கு. மண்டலமே

 – பாடல் 2          

பாடலின் பொருள் : கிழக்கில் மதிற் கோட்டைக் கரையும், தெற்கில் பழநியும், மேற்கில் வெள்ளியங்கிரியும், வடக்கில் பெரும்பாலையும் நான்கு திக்கின் எல்லையாகக் கொண்டு வளப்பம் பொருந்தித் தேவர்களும் தங்கியுள்ளது கொங்கு மண்டலம் ஆகும்.

இதை விளக்கும் வெண்பா ஒன்றும் உண்டு:

வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்குக்

குடக்குப் பொறுப்புவெள்ளிக் குன்று – கிடக்கும்

களித்தண் டலைமேவு காவிரிசூழ் நாட்டுக்

குளிர்த்தண் டலையளவு கொங்கு

நாடு – இணைநாடு

நாலா கலையலை வாரிதி மாந்தி ஞயம் பொருந்தத்

தோலா மொழிக டிகழ்நா வலரென்றுச் சுகம் பொருந்த

நாலாறு நாடு மிணைநாட்டுங் குஞ்சரி நாதனுடன்

மாலால கண்ட ரமர்பதி சேர்கொங்கு மண்டலமே

                                – பாடல் 3

பாடலின் பொருள் : பல கலைகளாகிய கடலை உண்டு சுவை உடையதாய் தோல்வி பெறாது பேசவல்ல நாவலர்கள் எந்த நாளும் இன்பம் நிறைந்து வாழும் இருபத்து நான்கு நாடுகளிலும், அவற்றைச் சூழ்ந்த இணைநாடுகளிலும் முருகவேள் கோயிலும், திருமால் கோயிலும், சிவாலயங்களும் நிறைந்துள்ளது கொங்கு மண்டலம்.

24 நாடுகள் பின்வருமாறு :

பூந்துறை நாடு             தலையனாடு         வாழவந்தி நாடு     

தென்கரை நாடு            தட்டயனாடு          அண்ட நாடு

காங்கேய நாடு            பூவாணிய நாடு      வெங்கால நாடு

பொன்கலூர் நாடு         அரையனாடு         காவடிகனாடு

ஆறை நாடு               ஒருவங்க நாடு      ஆனைமலை நாடு

வாரக்கனாடு               வடகரை நாடு       இராசிபுர நாடு

திருவாவினன்குடி நாடு    கிழங்கு நாடு        காஞ்சிக்கோயினாடு

மணனாடு                 நல்லுருக்கனாடு.     குறுப்பு நாடு

6 இணைநாடுகள் :

பருத்திப்பள்ளி நாடு        விமலை நாடு         சேல நாடு

ஏழூர் நாடு                தூசூர் நாடு.           இடைப்பிச்சனாடு

தலம்

செஞ்சொற் கரைசை திருவானி கூடல் திருமுருகர்

தஞ்சத்தென் புக்கொளி பேரூர் குரக்குத் தளியுடனே

வெஞ்சனற் கூடல்செங் குன்றூ ரறப்பளி வெண்ணெய்மலை

மஞ்சு திகழ்கரு வூர்சேர் வதுகொங்கு மண்டலமே

                           – பாடல் 4

பாடலின் பொருள் : திருப்பாண்டிக் கொடுமுடி, பவானி, திருமுருகன் பூண்டி, அவிநாசி, குரக்குத்தளி, வெஞ்சமாக்கூடல், திருச்செங்கோடு, அறப்பள்ளி, வெண்ணெய்மலை, கரூர் முதலிய திருப்பதிகள் சேர்வது கொங்கு மண்டலம்.

மலை

கொல்லியும் வைகை யலைவாய் பழநிபொற் கொங்கணவர்

வில்லியு மோதி வராகந் தலைமலை வெண்ணெய்மலை

அல்லியை சென்னி கிரிகஞ்ச வெள்ளி யாவகிரி

வல்லியு ளானை மலைசூழ் வதுகொங்கு மண்டலமே

– பாடல் 5

பாடலின் பொருள் : கொல்லி மலை, வைகைப் பொன்மலை, அலைவாய் மலை, பழநி மலை, பொன்னூதி மலை, கொங்கணவர் மலை, சேர்வராயன் மலை, ஓதியூர் மலை, வராக மலை, தலை மலை, வெண்ணெய் மலை, சென்னி மலை, கஞ்ச மலை, வெள்ளி மலை, நாக கிரி, ஆனை மலை ஆகிய மலைகள் சூழ்வது கொங்கு மண்டலம். 

–     அடுத்த கட்டுரையுடன் இந்த நெடுந்தொடர் முடிகிறது

***

தாகூர் பொன்மொழிகள் : டிசம்பர் 2023 காலண்டர் (Post No.12,780)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,780

Date uploaded in London – –  –  29 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

பண்டிகை நாட்கள் – பாரதியார் பிறந்த நாள் 11;  ;மார்கழி மாதம் துவக்கம்-17 ; வைகுண்ட ஏகாதசி -23; கிறிஸ்துமஸ்- 25;  ஆருத்ரா தரிசனம் -27

அமாவாசை -12; பெளர்ணமி- டிசம்பர் 26;  ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் – 8, 23; சுபமுகூர்த்த நாட்கள் – 1, 7, 14

XXXXX

தாகூர் பொன்மொழிகள் : டிசம்பர் 2023 காலண்டர்

டிசம்பர் 1 வெள்ளிக் கிழமை

விடியல் இன்னும் இருட்டாக இருக்கும் போது, ஒளியை உணர்ந்து பாடும், பறவையின் உள்ளம் போன்றது. நம்பிக்கை.

xxxx

டிசம்பர் 2 சனிக் கிழமை

ஏற்கும்  திறனை  உண்டாக்கினால் அந்த அளவுக்கு  நமக்கு சொந்தமான எல்லாம் நம்மை வந்தடையும்;

XXXXX

டிசம்பர் 3 ஞாயிற்றுக் கிழமை

நட்சத்திரங்கள் உங்களுக்குள்  மறைந்திருப்பதால், உயர, உயர  போங்கள், ஆழமாக கனவு காணுங்கள், ஏனென்றால், குறிக்கோள்களுக்கு முன்னதாக அதைப் பற்றிய  கனவு இருக்கவேண்டும்

XXXX

டிசம்பர் 4 திங்கட் கிழமை

அன்பு என்பது கொடுக்கப்படும் பரிசு அல்ல ; அதை ஏற்போர் எங்கே என்று அது தேடுகிறது.

xxxx

டிசம்பர் 5 செவ்வாய்க் கிழமை

கற்பிப்பதன் முக்கிய பொருள், விளக்கங்களைக் கொடுப்பது அல்ல. அவன் மனதின் கதவுகளை தட்டுவது..

xxxx 

டிசம்பர் 6 புதன் கிழமை

கற்பிப்பதன் முக்கிய பொருள், விளக்கங்களைக் கொடுப்பது அல்ல. அவன் மனதின் கதவுகளை தட்டுவது..

xxxx

டிசம்பர் 7 வியாழக் கிழமை

கொஞ்சம்  விவேகம் இருப்பது ஒரு கண்ணாடி டம்பளரில் தண்ணீர் இருப்பது போன்றது- தெளிவானது, தூய்மையானது, ஊடுருவிப்  பார்க்கமுடியும்; அதிக   விவேகம் இருப்பது கடல் போல கருமையானது; ஆழத்தை அறிய முடியாது ; மர்மமானது

XXXX

டிசம்பர் 8 வெள்ளிக் கிழமை

மலரின் இதழ்களை மட்டும் பறித்தால்  மலரின் முழு அழகினைப் பெற முடியாது.

XXXX

டிசம்பர் 9 சனிக் கிழமை

வாழ்க்கை என்பது ஆனந்தம் என்று கனவு வந்தது; விழித்தேன் பார்த்தேன்; சே வைதான்  வாழக்கை என்று கண்டேன் அப்படியே செய் தேன் ; உண்மைதான் சேவை செய்வதே ஆனந்தம்.

XXXXX

டிசம்பர் 10 ஞாயிற்றுக் கிழமை

உண்மையான நட்பு, மின்விளக்கு போன்றது, எல்லாம் இருட்டாக இருக்கும்போது, அது நன்றாக பிரகாசிக்கிறது.

xxxx

டிசம்பர் 11 திங்கட் கிழமை

ஒரு குழந்தையை, உங்கள் சொந்தக் கற்றலுடன் மட்டுப் படுத்தாதீர்கள், ஏனென்றால் அவன் வேறொரு காலத்தில் பிறந்தவன்..

xxxx

டிசம்பர் 12 செவ்வாய்க் கிழமை

மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது. ஆனால் எளிமையாக இருப்பது, மிகவும் கடினம்.

xxxx

டிசம்பர் 13 புதன் கிழமை

நீரை நின்று, வெறித்துப் பார்ப்பதன் மூலம், நீங்கள் கடலைக் கடக்க முடியாது.

xxxx

டிசம்பர் 14 வியாழக் கிழமை

உங்கள் வாழ்க்கை விளிம்புகளில், லேசாக நடனமாடட்டும். ஒரு இலையின் நுனியில் பனி  போன்ற நேரம்.

xxxx

டிசம்பர் 15 வெள்ளிக் கிழமை

மனிதன் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய, மிக முக்கியமான பாடம், இந்த உலகில் வலி இருக்கிறது என்பதல்ல, அதை அவர் மகிழ்ச்சியாக மாற்றுவது சாத்தியமாகும் என்பதை..

xxxx

டிசம்பர் 16 சனிக் கிழமை

உங்கள் வாழ்க்கையில் இருந்து, சூரியன் வெளியேறியதால், நீங்கள் அழுதால் , உங்கள் கண்ணீர் நட்சத்திரங்களை பார்ப்பதை தடுக்கும்..

Xxxxx

டிசம்பர் 17 ஞாயிற்றுக் கிழமை

உலகை தவறாக படித்துவிட்டு, அது நம்மை ஏமாற்றுகிறது என்று கூறுகிறோம்.

Xxxx

டிசம்பர் 18 திங்கட் கிழமை

நாம் எந்த அளவுக்கு பணிவாகஇருக்கிறோமோ அந்த அளவுக்குப் பெரியயோரை நெருங்கி விட்டோம் என்று பொருள்.

XXXX

டிசம்பர் 19 செவ்வாய்க் கிழமை

என் வாழ்க்கையில் மேகங்கள் மிதந்து வருகின்றன;மழையைக்  கொட்டவோ, புயல் வீசவோ அல்ல;அஸ் தமன வானத்திற்கு அழகு சேர்ப்பதற்காக !

XXXX 

டிசம்பர் 20 புதன் கிழமை

என் கடவுளை நான் நேசிக்க முடிகிறது, ஏனென்றால், அவரை மறுக்க அவர் எனக்கு சுதந்திரம் தருகிறார்.

xxxx

டிசம்பர் 21 வியாழக் கிழமை

நாம் எந்த அளவுக்கு பணிவாகஇருக்கிறோமோ அந்த அளவுக்குப் பெரியயோரை நெருங்கி விட்டோம் என்று பொருள்.

XXXX

டிசம்பர் 22 வெள்ளிக் கிழமை

பயத்தைக் கொடுக்காதே என்று அபயம் வேண்டமாட்டேன்;பயத்தை சந்திக்கும்போது எனக்கு பயமே இருக்கக்கூடாது என்றே வேண்டுவேன்.

XXXX

டிசம்பர் 23 சனிக் கிழமை

வலியை நீக்கிவிடு என்று கெஞ்ச்ச மாட்டேன்; எதையும் தாங்கும் இதயத்ததைக்  கொடு ; வெற்றியைக் கொடு என்றே வேண்டுவேன்.

XXXX

டிசம்பர் 24 ஞாயிற்றுக் கிழமை

பட்டுப்பூச்சி மாதக் கணக்கில் கணக்கு போடாது ; அந்த நொடியை மட்டுமே கருத்தில் கொண்டு, போதுமான நேரத்தை அனுபவிக்கிறது.

XXXX

டிசம்பர் 25 திங்கட் கிழமை 

இது காலைப்பொழுது என்று சொல்லிவிட்டு நேற்று  என்பது போலத் தள்ளிவிடாதீர்கள்; ஒவ்வொரு நாளையும் பெயர் வைக்க வேண்டிய புதிய குழந்தை போலக் காணுங்கள் .

XXXX

டிசம்பர் 26 செவ்வாய்க் கிழமை

வானம் கேட்பதற்கு  தயாராக இருக்கிறது . அதனுடன் பேசுவதற்கு பூமாதேவி மரங்களை உண்டாக்கி முடிவில்லாதா முயற்சியை செய்துகொண்டே இருக்கிறாள்

XXXX

டிசம்பர் 27 புதன் கிழமை

தகவல்கள் பல; ஆனால் உண்மை ஒன்றே

XXXXX

டிசம்பர் 28 வியாழக் கிழமை

தவறுகள் பற்றிய  எல்லாக் கதவுகளையும் அடைத்து விடாதீர்கள் ; அப்படிச் செய்தால் உண்மையின் கதவும் அடைபட்டுப் போகும்.

XXXX

டிசம்பர் 29 வெள்ளிக் கிழமை

அன்பு என்பது உணர்ச்சிக் கொந்தளிப்பு அல்ல அதுதான் இறுதி உண்மை. படைப்பின் இதய ஸ்தானத்தில் அது இருக்கிறது

XXXX

டிசம்பர் 30 சனிக் கிழமை

உண்மைக் கல்வி என்பது  தகவல்களை அள்ளித் தருவது அல்ல;.அத்தோடு படைப்பில் காணப்படும் எல்லாவற்றுடனும்  இணக்கமாக வாழக் கற்றுக் கொடுப்பதே உண்மைக் கல்வி .

XXXX

டிசம்பர் 31 ஞாயிற்றுக் கிழமை

ஒவ்வொரு குழந்தையும் என்ன செய்தி சொல்கிறது தெரியுமா? கடவுள் இன்னும் மனிதர்கள் மீது நம்பிக்கை இழக்கவில்லை என்பதே செய்தி.

xxxxx

BONUS QUOTE

நட்பின் ஆழம், அறிமுகத்தின் நீளத்தைப் பொறுத்தது அல்ல.

xxxx

—SUBHAM— 

TAGS – தாகூர் பொன்மொழிகள் , டிசம்பர் 2023 காலண்டர்

Rabindranath Tagore Quotes- December 2023 Calendar (Post No.12,779)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,779

Date uploaded in London – –  –  29 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Festival Days- Bharatiyar Birthday-11; Tamil month Markazi begins-17; Vaikunda Ekadasi-23; Christmas- 25; Arudra Darshan-27

New moon day/Amavasai-12;Full moon day- 26; Ekadasi Fasting Days- 8 & 23; Auspicious Days- 1,7,14

December 1 Friday

You cannot cross the sea merely by standing and staring at the water.

XXXX

December 2 Saturday

Everything comes to us that belongs to us if we create the capacity to receive it.

XXXX

December 3 Sunday

The small wisdom is like water in a glass: clear, transparent, pure. The great wisdom is like the water in the sea: dark, mysterious, impenetrable.

XXXX

December 4 Monday 

If you cry because the sun has gone out of your life, your tears will prevent you from seeing the stars.

XXXX

December 5 Tuesday

It is very simple to be happy, but it is very difficult to be simple.

XXXX

December 6 Wednesday

Reach high, for stars lie hidden in you. Dream deep, for every dream precedes the goal.

XXXX

December 7 Thursday

Death is not extinguishing the light; it is only putting out the lamp because the dawn has come.

XXXX

December 8 Friday

I slept and dreamt that life was joy. I awoke and saw that life was service. I acted and behold, service was joy.

XXXX

December 9 Saturday

Faith is the bird that feels the light when the dawn is still dark.

XXXX

December 10 Sunday

We come nearest to the great when we are great in humility.

XXXX

December 11 Monday 

Let me not pray to be sheltered from dangers,

but to be fearless in facing them.

XXXX

December 12 Tuesday

Let me not beg for the stilling of my pain, but

for the heart to conquer it.

XXXX

December 13 Wednesday

“The small wisdom is like water in a glass:

clear, transparent, pure.

The great wisdom is like the water in the sea:

dark, mysterious, impenetrable.”

XXXX

December 14 Thursday

Clouds come floating into my life, no longer to carry rain or usher storm, but to add colour to my sunset sky.

XXXX

December 15 Friday

“A mind all logic is like a knife all blade. It makes the hand bleed that uses it.”

XXXX

December 16 Saturday

“The butterfly counts not months but moments, and has time enough.”

XXXX

December 17 Sunday

“Don’t limit a child to your own learning, for she was born in another time.”

XXXX

December 18 Monday 

“By plucking her petals you do not gather the beauty of the flower.”

XXXX

December 19 Tuesday

“Let your life lightly dance on the edges of

Time like dew on the tip of a leaf.”

XXXX

December 20 Wednesday

“A dewdrop is a perfect integrity that has no filial memory of its parentage.”

XXXX

December 21 Thursday

“In our desire for eternal life we pray for an eternity of our habit and comfort, forgetting that immortality is in repeatedly transcending the definite forms of life in order to pursue the infinite truth of life.”

XXX

December 22 Friday

Emancipation from the bondage of the soil is no freedom for the tree.

XXXX .’

December 23 Saturday

The flower which is single need not envy the thorns that are numerous.

‘XXXX

December 24 Sunday

Life is given to us, we earn it by giving it.

XXX

 December 25 Monday 

We gain freedom when we have paid the full price.

XXXX

December 26 Tuesday

Age considers; youth ventures.

XXXXX

December 27 Wednesday

“Most people believe the mind to be a mirror, more or less accurately reflecting the world outside them, not realizing on the contrary that the mind is itself the principal element of creation.”

XXXX

December 28 Thursday

“Love is an endless mystery, because there is no reasonable cause that could explain it.”

XXXXX

December 29 Friday

“Patriotism cannot be our final spiritual shelter; my refuge is humanity. I will not buy glass for the price of diamonds, and I will never allow patriotism to triumph over humanity as long as I live. ”

XXXX

December 30 Saturday

“Those who are near me do not know that you are nearer to me than they are

Those who speak to me do not know that my heart is full with your unspoken words

Those who crowd in my path do not know that I am walking alone with you

Those who love me do not know that their love brings you to my heart”

XXXX

December 31 Sunday

“Where the mind is without fear and the head is held high;

Where knowledge is free;

Where the world has not been broken up into fragments by narrow domestic walls;

Where words come out from the depth of truth;

Where tireless striving stretches its arms toward perfection;

Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit;

Where the mind is led forward by thee into ever-widening thought and action –

Into that heaven of freedom, my Father, let my country awake.”

BONUS QUOTES

“Music fills the infinite between two souls”

XXXX

“If I can’t make it through one door, I’ll go through another door- or i’ll make a door. Something terrific will come no matter how dark the present.”

XXXX

“The biggest changes in a women’s nature are brought by love; in man, by ambition”

XXXX

“I have spent many days stringing and unstringing my instrument

while the song I came to sing remains unsung.”

XXXX

“Let my thoughts come to you, when I am gone, like the afterglow of sunset at the margin of starry silence.

—SUBHAM—

Tags- Tagore Quotes, December 2023, Calendar

திருவண் வண்டூர் வைணவ கோவில் (Post No.12,778)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,778

Date uploaded in London – –  –  29 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 18

கோவில் எண் 15 –  திருவண் வண்டூர்  கோவில்

வைணவ ஆழ்வார்கள் பாடி, மங்களாசாசனம் செய்த 13 மலைநாட்டுத் திருப்பதிகள் கேரளத்தில் இருக்கின்றன. இவைகளில் சில இப்பொழுது கேரளத்தில் இல்லை; தமிழ் நாட்டு எல்லைக்குள் வந்துவிட்டன

கேரளத்தில் உள்ள மேலும் ஒரு வைணவ ஸ்தலத்தைத் தரிசிப்போம். இதன் பெயர் வண்டூர்.

நம்மாழ்வார் பாடியதால் குறைந்தது 1200 ஆண்டு பழமையானது

செங்கன்னூரைச் சுற்றியுள்ள 5 வைணவ தலங்களில் இதுவும் ஒன்றாகும். அங்கிருந்து ஆறு கிலோமீட்டர்தான்

மூலவர் பெயர் — பாம்பணையப்பன் ; அருமையான தமிழ்ப் பெயர். இன்னும் ஒரு பெயர் – கமலநாதன் ; மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில், பெருமாள் அருள் மழை பொழிகிறார் .

தாயார் பெயர் – கமலா வல்லி நாச்சியார்

தீர்த்தம்- பம்பா நதி, பாபநாச தீர்த்தம்

விமானம் – வேதாலய விமானம்

ப்ரத்யக்ஷம் – மார்க்கண்டேயருக்கும் நாரத மகரிஷிக்கும்

சிறப்பு அம்சங்கள்

கேரளத்தில் உள்ள கோவில்கள்  பெரும்பாலும் பரசுராமர், தசரத புத்திரர்கள் நால்வர் அல்லது பஞ்ச பாண்டவர் ஐவருடன் தொடர்பு கொண்டிருக்கும். இந்த திருவண் வண்டூர் கோவில் விக்கிரகத்தை பாண்டவ சகோதரர் நகுலன் பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம் .

பெருமாளுக்கு நைவேத்தியம் – பால் பாயசம் (தமிழ் நாட்டில் பெரும்பாலும் புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் )

தசாவதாரக் காட்சிகளை கோவில் சித்திரங்களில் காணலாம்

காளிங்கன் என்னும் பாம்பின் தலையில் கண்ணன் ஆடுவதைப் பார்த்தவுடன் நம்மை அறியாமலே பாரதியாரின் ஓம் சக்தி ஓம்சக்தி ஓம் பாடல்வரிகள் நினைவுக்கு வரும் :

.பாம்புத் தலைமேலே-நடஞ்செயும் 

பாதத்தினைப் புகழ்வோம்

மாம்பழ வாயினிலே -குழலிசை

வண்ணம் புகழ்ந்திடுவோம்(  ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)

ஸ்தல புராணம் சொல்லும் அதிசய விஷயம் : நாரதர் இங்கே நாரதீய புராணத்தை இயற்றினார். அதில் 25, 000 ஸ்லோகங்கள் இருக்கின்றன

கோவிலின் தோற்றம்

பாண்டவ சகோதரர்கள் ஐவரும் வனவாசம் செய்த 13 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் சென்று திருத்தலங்களை தரிசித்தனர். அந்தக் காலங்களில் ஒவ்வொரு சகோதரரும் ஏதேனும் ஒரு கோயிலை தத்து எடுத்து திருப்பணி செய்வது வழக்கம். இதனால் பாரத நாடு முழுவதும் அவர்க சம்பந்தப்பட்ட கோவில் இருக்கும். ராமர் இலங்கை வரை சென்ற பொழுது, அடல் பிஹாரி வாஜ்பாய்  போல யாரும் நேஷனல் ஹைவே போடவில்லை; பாலங்களும் கிடையாது ; ராமர் போன்றோர் பெரும்பாலும் கடற்கையை ஒட்டி பயணம் செய்தனர். பின்னர் ஒவ்வொரு நகர் வரும்போதும் உள்நாட்டில் நுழைவார்கள்; பின்னர் 18 ஜாதி மக்களுடன் அகஸ்தியர் என்னும் சிவில் என்ஜினீயர் தென்னாட்டுக்கு வந்தார்; அவரை சிவ பெருமானே அனுப்பியதால் விந்திய மலையை கர்வ பங்கம் செய்து– அதாவது உயரத்தை மட்டம் தட்டி –ரோடு போட்டார்; இதனால் மகாபாரத கால பலராமனும்  தம்பி கிருஷ்ணுட்ன் சண்டை போட்டு விட்டு தென்னகம் வரை வந்தார் அதே பாதையில் பாண்டவர்களும் வந்தனர் . நகுலன் இந்த இடத்திலுள்ள கோவில் சேதம் அடைந்திருப்பதைப்  பார்த்து திருப்பணிகளை செய்தார் .

ஆனால் காலத்தின் கோலம், 5000 ஆண்டுகளுக்கு முன்னர் நகுலன் செய்த விக்கிரகங்கள் அங்கு இல்லை. பூமியைத் தோண்டுகையில் புதிய பெருமாள் விக்கிரகங்களைக் கண்டுபிடித்தனர். அவைகளைக் கோவிலில் பிரதிஷ்டை செய்தனர்.; பின்னர் புதிய மண் டபங்கள் கட்டப்பட்டன.

ஒரு முறை பிரம்மாவுக்கும் நாரதருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது ; நாரதர் பிரம்மாவை சாபித்த்தார் ; இதனால் அவருக்கு படைப்புத் தொழில்  சிலபஸ் Syllabus மறந்து போனது. வண்டூருக்கு வந்து இறைவனை வேண்டவே மறந்து போன பாட திட்டம்/Syllabus நினைவுக்கு வரவே மீண்டும் தனது பணிகளை செவ்வனே செய்தார்.

வடக்கில் கங்கை நதி ஒடும் இடமெல்லாம் தலங்கள் இருப்பது போல கேரளத்தில் பம்பை நதி ஓடும் இடம் எல்லாம் தலங்கள் இருக்கும். இந்த ஊர்ப் பெருமாள் பம்பை நதியின் வட கரையில் இருக்கிறார். 1200 ஆண்டுகளுக்கு முன், இங்குவந்த நம்மாழ்வார், பெருமாளைப் பார்த்து ஆனந்தித்து ,

தேறு நீர் பம்பை வடபாலைத் திரு வண் வண்டூர் என்று துதித்தார்.

ஏனைய கோவில்களைப் போலவே இங்கும் கணபதி சாஸ்தா , தட்சிணாமூர்த்தி, நாகர் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர் .

ஊர்ப்பெயர் விளக்கம்

திருவண் வண்டூர் பாசுரம் நாயகி- நாயகன் பாவத்தில் பாடிய பாசுரம். அதில் அன்னம், குயில் போன்ற பறவைகளைத் தூது விடுவதாக நாயகி பாடினாலும் வண்டு விடு தூதுதான் இந்த ஊரில் ஓடும் பம்பை நதி வருகிறது . ஆகையால் நம்மாழ்வார் காலத்திலேயே வண்டுகள் ரீங்காரம் மிக்க இடமாகத் திகழ்ந்தது போலும். இதோ நம்மாழ்வார் வரிகள் :–

வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன்*  வெறி வண்டினங்காள்*

தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்*

மாறு இல் போர் அரக்கன்*  மதிள் நீறு எழச் செற்று உகந்த*

ஏறு சேவகனார்க்கு*  என்னையும் உளள் என்மின்களே* 

திருவிழா

மாசி மாதம் பத்து நாட்களுக்கு விழா நடக்கும் .

குழந்தை வரம் வேண்டி இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள்,  கோசாலை கிருஷ்ணர் சன்னிதிக்கு வெளியே மரத் தொட்டில்கள் வாங்கி வைத்து  பிராத்தனை செய்கிறார்கள்.

–SUBHAM-

TAGS – பம்பா நதி, திருவண் வண்டூர், நம்மாழ்வார், நகுலன்

அஹிம்சையே உயர்ந்த தர்மம்! (Post No.12,777)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,777

Date uploaded in London –  –  29 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரு வரி சுபாஷிதங்கள்

அஹிம்சையே உயர்ந்த தர்மம்!

ச.நாகராஜன்

அழகிய சில சொற்களிலேயே மிக உயர்ந்த கருத்துக்கள் சம்ஸ்கிருத சுபாஷிதங்களில் வழங்கப்படுகின்றன. ஒரே ஒரு வரி தான், அதில் அடங்கியுள்ள கருத்துக்களை கீழே பார்க்கலாம். இதை நினைவு வைத்துக் கொள்வதும் சுலபம் தான்

1. அக்ரோதேன ஜயேத் க்ரோதம் |

அமைதியாக இருப்பதன் மூலம் பகையை வெல். 

2. அக்ஷீணோ வித்தத: க்ஷீணோ வ்ருத்தஸ்து ஹதோ ஹத: |

செல்வத்தை இழந்ததனால் வறுமையோடிருக்கும் ஒருவன் நிஜத்தில் ஏழை இல்லை; ஆனால் எவன் ஒருவன் தன் நல்ல குணத்தை இழக்கிறானோ அவனே நிஜத்தில் ஏழை.

3. அஞ்ஞாத குலசீலஸ்ய வாஸோ தேயோ ந கஸ்யசித் |

எவன் ஒருவனுடைய குலம் மற்றும் வசிப்பிடம் ஆகியவை தெரியாமல் இருக்கிறதோ அவனுக்கு வசிக்க இடம் கொடுக்கக் கூடாது.

4. அதி சர்வத்ர வர்ஜயேத் |

எதிலும் அளவுக்கு அதிகமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

5. அர்த்தோ கடோ கோஷமுபைதி நூனம் |

பாதி நிரம்பியிருக்கின்ற குடம் அதிக சத்தம் போடும்!

நிறைகுடம் தளும்பாது என்ற தமிழ்ப் பழமொழியையும்,

Empty vessel creates more noise என்ற ஆங்கில பழமொழியை இங்கு ஒப்பு நோக்கலாம்.

6. அவஸ்யமேவ போக்தவ்யம் க்ருதம் கர்ம சுபாசுபம் |

ஒருவன் தான் செய்த செயல்களின் நல்லது, கெட்டவற்றை அனுபவித்தே ஆக வேண்டும்.

7. அஹிம்ஸா பரமோ தர்ம: |

அஹிம்சையே உயர்ந்த தர்மம்.

8. ஆர்ஜவம் ஹி குடிலேஷு ந நீதி: |

கெட்டவரிடம் நேர்மை என்பது சிறந்த வழி ஆகாது.

9. ஆலஸ்யம் ஹி மனுஷ்யானாம் சரீரஸ்தோ மஹான் ரிபு: |

சோம்பலே ஒருவனின் உடலுக்கான மகத்தான எதிரி.

10. ஆஹு: சாப்தபதி மைத்ரி |

ஒருவருடன் ஏழு அடிகள் நடந்தாலே நட்பு உறுதி ஆகி விடுகிறது.

11. ஈஸ்வரேச்சா பலீயஸி |

ஈஸ்வரனுடைய் இச்சை (விதி) மிகவும் வலிமையுடையது.

12. உதாரசரிதாநாந்து வசுதைவ குடும்பகம் |

உதாரபுருஷர்களுக்கு உலகமே குடும்பம்.

13. ருண சத்ரு வ்யாதிஸ்வஷேஷ: கர்தவ்ய: |

கடன், எதிரி, வியாதி ஆகிய மூன்றையும் முற்றிலுமாக ஒருவன் ஒழிக்க வேண்டும்.

14. ஏகசித்தே த்வயோரேவ கிமசாத்யம் பவேதிதி |

இருவர் ஒரே மாதிரி நினைத்து விட்டால் எந்தக் காரியம் தான் அசாத்யம் (செய்யமுடியாததாக) ஆகும்!

15. ஏகமேவ வ்ரதம் ச்லாக்யம் ப்ரஹ்ம்சரியம் ஜகத்ரயே |

மூன்று உலகங்களிலும் சிலாகிக்கப்படுவது பிரம்மசரியமே!

16. க: பர: ப்ரியவாதினாம் |

பிரியமான சொற்களைச் சொல்பவரை விட வேறு யார் உயர்ந்தவர்கள்!

17. கதாபி கலு பாபநாமலமஸ்ரேயஸே யத: |

பாவிகளின் கதைகள் கூட கெடுதி விளைவிப்பவையே.

18. கஷ்டாத்கஷ்டதரம் க்ஷுதா |

கஷ்டத்திலும் கஷ்டம் பசியே!

19. காமதுராணாம் ந பயம் ந லஜ்ஜா |

காமவெறியுடையவர்களுக்கு பயமும் கிடையாது; வெட்கமும் கிடையாது!

20. குரூபதா சீலதயா விராஜதே |

அழகற்ற உருவம் நல்ல குணத்தால் சரி செய்யப்படலாம்.

21. க்ஷமாதுல்யம் தபோ நாஸ்தி |

பொறுமைக்குச் சமமான தவமே கிடையாது.

22. கலேன மைத்ரி ந சிரேண திஷ்டதி |

கெட்டவருடனான நட்பு நீடித்து நிலைக்காது.

23. கதஸ்ய சோசனம் நாஸ்தி-கதம் ந சோசாமி |

கடந்ததை நினைத்து அழுவதால் பயன் ஒன்றும் இல்லை.

24. குணீ குணம் வேத்தி ந குணம் வேத்தி நிர்குண: |

நல்ல குணங்களைக் கொண்டவர்களை நல்ல குணம் கொண்டவர்களே அறிவர்; கெட்ட குணங்களைக் கொண்டவர்கள் அறிய மாட்டார்கள்.

25. க்ருஹே சேன்மது விந்தேத் கிமர்த்தம் பர்வதம் வ்ரஜேத்?

வீட்டிலேயே தேன் கிடைக்கும் போது ஒருவன் மலையை நோக்கிச் செல்வது ஏன்?

***

Gandhiji explodes Vaikom Dravidian Myth! -Part 2(Post No.12,776)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,776

Date uploaded in London – –  –  28 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Vaikom – new spelling; Vaikam -old spelling

TEMPLE  ENTRY PROCLAMATION WAS ISSUED ON THE EVENING OF THE 12TH NOVEMBER 1936 BY THE MAHARAJA OF TRAVANCORE.

Over 25,000 people listened to Gandhiji on the Old Satyagraham Ashram ground in perfect silence.

Vaikam 18-1-1937 (Gandhiji’s speech)

“ I suppose you can better imagine than I can describe my joy for being second time in your midst and under such happy  auspices as you all know. Only a few years ago one had to struggle hard to get the roads leading to the great temple thrown open to Avarna Hindus (Dalits). Good Madhavan assisted by  Krishnswami of revered memory and by Kelappan laid the foundation of that struggle; it is a matter of deep sorrow to me – as it must be to you – that neither Madhavan nor Krishnswami  is here to share your rejoicings.”

The above Viakam speech mentioned the three great heroes of Vaikam struggle. Dravidian fraud Ramaswami Nayakkar was not even in volunteers list. In the 251 page book I could not even find his name. Now we know these gangs made a mountain out of a mole.

xxxx

Praise to Travancore Maharaja

Etamanoor 19-1-1937

Gandhiji speaks,

“ I am deeply grateful to you for your beautifully worded Sanskrit address and the gift of the bark tree cloth . I cannot say I am going to wear this cloth. For one thing it is too dear for me to wear, but it will adorn the museum that we have set up in Maganwadi containing specimens of village craft.

(varkala in Sanskrit, Varkalai in Kambaramayanam; now a town’s name in Kerala; V changes to B in all ancient languages following Sanskrit; Varka of Sanskrit  changed to Bark(a) in English)

“As I was being taken round the temple and as I approached the centre part of the temple, I had a Pulaya boy shown to me, and he boldly mounted the steps with me. A few months ago I should not have considered  such a thing possible in my life time, but what impossible for man is easily possible for God to fulfil. (it is a severe blow to anti Hindu Nayakkar)  And as I said last night and have repeated in several meetings, I see in this Proclamation the spirit of God working though the hand of the Maharajah.

( in the above passage we see the heroes were Maharajah and the God)

xxxx

in Pandalam meeting (20-1-1937), Gandhi said

“I have regarded this Proclamation as an act of Divinity, though outwardly it is the act of a great prince

(see the difference. The king made the Proclamation that every Hindu can enter the temple. And Gandhi praised God and the King. But Dravidian gang attributed the success to an anti God , anti Brahmin fellow!!)

xxxx

Praise to Maharani

Gandhiji said to an American lady who interviewed him, “the proclamation is due to the influence one woman Her Highness  Maharani of  Travancore. When I was in Travancore some years ago, I met the present Maharani. She was determined to do what was the purest act of justice and it is she who is at the back of the  Maharaja’s decision. It was a most courageous act to issue that Proclamation and still more courageous to carry it out to the letter. The Maharaja could not have done it without the support of his mother. So I see the hand of woman in this modern miracle.

xxxx

Vaikam Heroes:–

T K Madhavan

T R Krishnaswami Iyer

Kelappan Nair

C K Parameswaram Pillai

M Govindan

Ramachandran 

Aiyyan Kali

Raman Pillai

Padmanabha Pillai

Y ogakshema Sabha of  Malayali  Brahmins – Nambudiris

Kshatriya Mahasabha

Nair Service Society

Nambudiri Yogakshema Sabha

Kesava Menon

C Rajagopalachari

C P Ramaswami aiyyar

S N D P Yogam with Shri Narayan Guru

Dr M E Naidu , Nagerkoil

The above list is from the book.

Please tell all Tamils to read The Epic of Travancore by Mahadev Desai so that Dravidian fake heroes will be exposed.

I will give the gist of it in Tamil as well.

—-subham—-

Tags- Vaikam Satyagraha, Temple entry, Proclamaion, Trvancore Maharaja, Vaikom heroes, Dravidian frauds

சரகரும் சுஸ்ருதரும் என்ன எழுதினார்கள் ? (Post No.12,775)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,775

Date uploaded in London – –  –  28 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 சரகர் , சுஸ்ருதர்  (Charaka and Susruta) என்ற இரண்டு பெயர்களில் உள்ள ஆயுர்வேத நூல்கள் உலகம் முழுதும் பிரசித்தமானவை; இப்போது இவர்களுடைய சிலைகளை வெளிநாடுகளிலும் காணலாம் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் மருத்துவக் கல்லூரியில் சுஸ்ருதர் சிலை இருக்கிறது. இந்தியாவில் ஹரித்வார் நகருக்கு அருகில் கங்கை நதிக்கரையில் சரகர் சிலை இருக்கிறது

நிறைய பேருக்கு தெரியாத விஷயம் என்னவென்றால் சரக சம்ஹிதை என்ற பெயரில் உள்ள ஆயுர்வேத நூலை அவர் இயற்றவில்லை ; அதன் ஆசிரியர் அக்னிவேஷ் என்பவர் ஆவார்.சரகர் அதை முறையாக தொகுத்தும் வகுத்தும் கொடுத்தார் (Edited).

2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் வடமேற்குப் பகுதியை ஆண்ட குஷான வம்சத்தது கனிஷ்கர் காலத்திலேயே இவர் பெயர் பிரபலம் ஆகிவிட்டது இவரை கி.மு 600 ல் வாழ்ந்தவர் என்று அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர் இது ஒரு மிகப்பழைய மருத்துவ நூல் என்பது அவர்களுடைய கருத்து .

இதற்கு அறிஞர்கள் 3 காரணங்களை முன்வைக்கின்றார்கள் :

1.புத்தரைப் பற்றியோ அவரது மதத்தினர் பற்றியோ எந்தக் குறிப்பும் இல்லை.

2. நூலின் உரைநடை புத்தருக்கு முந்திய பிராமண நூல்கள், உபநிஷத நூல்கள் நடையில் உள்ளன .

3. வேத கால கடவுளரை மட்டும் குறிப்பிடும் இந்த நூலில் புராணக் கதைகளைக் காண முடியாது.

சரக சம்ஹிதையின் மூல நூலில் 120 அத்தியாயங்கள் இருந்தன; அவற்றை எட்டு பிரிவுகளாகப் பிரித்துவைத்தார். துரதிருஷ்டவசமாக அவற்றின் பெரும்பகுதியை நாம் இழந்துவிட்டோம். ஆறாவது பிரிவின் 17 அத் தியாயங்களும் ஏழாவது, எட்டாவது அத்தியாயங்களும் கிடைக்கின்றன . த்ருதபலா என்பவர் பல விஷயங்களை பிற்சேர்க்கையாக சேர்த்துள்ளார்.

ஆயுர்வேத நூல்களில் காணப்படும் எட்டு பிரிவுகளில் 6 பிரிவுகளை இவருடைய நூல்களில் காண முடிகிறது ; அவை உள்ளுக்கு சாப்பிடும் மருந்துகள், விஷ முறிவு மருத்துவம், மனநோய்கள், குழந்தை மருத்துவம், புத்திளமை பெறுதல் (Rejuvenation) , பாலியல் (Sexology) ஆகியன உள்ளன. அறுவைச் சிகிச்சையும் , கண்- காது மூக்கு  நோய்ப்பிரிவும்  கிடைக்கவில்லை.

நமக்குக் கிடைத்த பகுதிகளில் உடற்கூறு (Anatomy), நோய்கள் தோன்றும் முறை , அவைகளுக்கான சிகிச்சை , மருந்துகள், உபகரணங்கள் , மருத்துவர்கள் நடந்து கொள்ளவேண்டிய முறைகள் முதலியன விவாதிக்கப்படுகின்றன. சாப்பிட வேண்டிய உணவுகள்  பத்தியத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் (Diets) ஆகியன விவரிக்கப்பட்டுள்ளன. கரு, குழந்தை (Embryology) உருவாதல், மருத்துவர்களுக்குப் பயிற்சி ,முதிலியவற்றையும் நூல் விவரிக்கிறது

இந்த நூலிலிருந்து இந்துக்களின் பழங்கால நம்பிக்கைகளையும் அறிகிறோம்.

xxxxxx

சுஸ்ருத சம்ஹிதை

சுஸ்ருதர் என்ற மருத்துவர் சுஸ்ருத சம்ஹிதை என்னும் நூலின் ஆசிரியர். இவருடைய தந்தை விசுவாமித்திரர்; அவர் திவோதாச தன் வந்திரி என்பவரின் மாணவர் ; திவோதாஸர் காசி ராஜ்யத்தின்  அரசர்..இவருடைய காலம் கி.மு 1000 என்பது அறிஞர்களின் கருத்து. இவர்களுடன்  சம்பந்தப்பட்ட பெயர்கள் எல்லாம் வேத காலப் பெயர்கள் .

முன் காலத்தில் யுத்தம் செய்யும் அரசர்கள், படைகளுடன் டாக்டர்களையும் அழைத்துச் செல்லுவார்கள். காயமடைந்தவர்களை குணப்படுத்துவதும் மருந்து கொடுப்பதும் அவர்களுடைய பணி . சுஸ்ருதர் மிகப்பெரிய சர்ஜன் (Surgeon) ; அதாவது அறுவைச் சிகிச்சை நிபுணர். அவர் கூறும் ஆபரேஷன் அறை உபகரணங்கள் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும். லண்டன் முதலிய நகரங்களில் அதன் அச்சுக்களை (Replicas)  காட்சியில் வைத்துள்ளனர். செயற்கை மூக்கு பொருத்தும் ஆபரேஷனில் அவர் வல்லவர்; அவர்தான் இதை முதலில் உலகிற்குக் கற்பித்தவர் ஆவார்.

நூலின் அமைப்பு

சுஸ்ருத சம்ஹிதை நூலில் 186 அத்தியாயங்கள் உள்ளன. அவைகளை கீழ்கண்ட ஆறு பிரிவிவுகளாக  பிரித்துள்ளனர்.

1.சூத்ர என்னும் முதல் 46 அத்தியாயங்களில் சர்ஜரி Surgery என்னும் அறுவைச் சிகிச்சை , உணவு, பான வகைகள் ஆகியவற்றை அறியலாம்.

2.நிதான என்னும் தலைப்பின் கீழ் 16 அத்தியாயங்கள் எந்தெந்த நோய்களுக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படும்  என்பதை விவரிக்கின்றன

3. சாரீர என்னும் பிரிவில் 10 அத்தியாயங்களில் பிரபஞ்ச உற்பத்தி, , கர்ப்பத்தில் கரு வளருதல், பெண் கர்ப்ப வளர்ச்சி, உடற்கூறு இயல் முதலியன உள்ளன.

4.சிகிச்சை என்னும் பிரிவில் 40 அத்தியாயங்கள் அறுவைச் சிகிச்சை பற்றிப் பேசுகின்றன.

5.கல்ப பிரிவில் எட்டு அத்தியாயங்கள் விஷத்தின் Toxicology தாக்கத்தை விவரிக்கின்றன.

6. உத்தர என்னும் கடைசி பிரிவில் 66 அத்தியாயங்களில்  கண், காத்து, மூக்கு, தொண்டை நோய்களை கண்டறிதல், குழந்தை நோய் சிகிச்சை, கெட்ட ஆவிகளால் ஏற்படும் பிரச்சினைகள், பொதுவாக உடலுக்குள் ஏற்படும் நோய்கள் முதலியன பற்றி விளக்குகின்றன.

யார் ஒருவர் சர்ஜன் ஆக விரும்புகிறாரோ அவர் மனித உடலின் உட்பகுதியை அறிந்திருக்க வேண்டும் இதற்காக இறந்தவரின் உடலை அறுத்துப் பார்க்க வேண்டும் என்கிறார்.ஏராளமான ஆபரேஷன் கருவிகளை வருணிக்கிறார் . ஆபரேஷன் செய்யும்போதும், பின்னரும் செய்யவேண்டிய அறுபது வகையான உத்திகளையும் சொல்கிறார்.. சிறுநீரக கற்களை அகற்றும் முறையையும் விளக்குகிறார்.  ஒரு மனிதனின்  உடல் நோவினைப் போக்குவதைவிட உலகில் வேறு எதுவும் புண்ணியம் ஆகாது என்றும் வலியுறுத்துகிறார்.

உலகிலுள்ள ஏனைய  மருத்துவ நூல்களில் இவ்வளவு முற்போக்கான சிந்தனை  இல்லை என்பதை பார்க்கையில் பாரத நாட்டின் மருத்துவத்துறை 3000  ஆண்டுகளுக்கு முன்னரே மிக முன்னேறிய நிலையில் இருந்தது தெரிகிறது.

–சுபம்—

Tags- சரகர், சுஸ்ருதர், சம்ஹிதை, சிலைகள், சர்ஜரி,