QUIZ  தீபாவளி பத்து  QUIZ (Post No.12,705)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,705

Date uploaded in London – –  –  12 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Quiz Serial No.80

1.தீபாவளிக்கும் எந்த அசுரனுக்கும் தொடர்பு படுத்தும் கதை உள்ளதுஅவன் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன்  அவனைக் கொன்றது யார்?

XXX

2.தீபாவளியை சமண மதத் த்தினர்  ஏன் கொண்டாடுகிறார்கள்?

XXX

3.தீபாவளி அன்று கங்கா ஸ்னானம் ஆச்சா என்று கேட்பது ஏன் ?

XXX

4. தீபாவளியை சீக்கியர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் ?

xxxx

5.தீபாவளி என்பதைப் பேச்சு வழக்கில் DIWALI திவாளி என்பர். இந்தச் சொல்லின் பொருள் என்ன ?

xxx

6.தீபாவளி அன்று காசியில் என்ன விசேஷம்?

xxx

7.தீபாவளி மருந்து என்றால் என்ன ?

xxxx

8.அன்ன கூட விழா என்றால் என்ன ?

XXX

9.அயோத்திக்கும் தீபாவளிக்கும் என்ன தொடர்பு?

XXXX

10.குஜராத்தில் எத்தனை நாட்களுக்கு தீபாவளி கொண்டாடப்படுகிறது?

XXX

ANSWERS

1.தீபாவளிக்கும் நரகாசுரன் என்ற அசுரனுக்கும் தொடர்புள்ள கதை தென்னாட்டில் வழங்கி வருகிறது. அவனை ,கிருஷ்ண பரமாத்மா கொன்றார். காம ரூபத்திலுள்ள  ப்ரகஜோதிஷ நகரிலிருந்து அவன் ஆண்டான். இப்போது அதை அருணாசல பிரதேசம் அஸ்ஸாம் என்று பிரித்துள்ளோம்.

XXX

2.சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரர் மகாவீரர்; அவர் முக்தி அடைந்தது தீபாவளி தினத்தில்தான். மேலும் சமணர்களின் ஆண்டு நிறைவடைவதும் அன்றுதான்.

xxxx

3.நரகாசுரனின் தாயின் வேண்டுகோளின்படி அன்று எந்த நீரில் குளித்தாலும் அதில் கங்கை பிரவேசிக்கிறாள்; ஆகையால் கங்கை யில்  குளித்து விட்டீ ர்களா என்று கேட்பது சம்பிரதாயம்

XXXX

4.சீக்கிய மதத்தின் ஆறாவது குரு ஹரி கோவிந்த சிங்; அவரை ஜஹாங்கீர் சிறை வைத்தியிருந்தான்.தீ பாவளி தினத்தன்று அவரையும் 52 சீக்கியர்களையும் அவன் விடுதலை செய்தான். அவர் திரும்பி வந்ததைக் கொண்டாட அன்றைய தினம் சீக்கியர்களும் விளக்கு ஏற்றி பட்டாசு வெடித்தனர். இன்றும் அவ்வாறே கொண்டாடுகின்றனர்.

.xxx

5.தீப +ஆவலி / ஆவளி என்றால் விளக்கு வரிசை என்று பொருள்; அன்றைய தினம் வட இந்தியாவில் , கார்த்திகை அன்று தமிழர்கள் விளக்கு ஏற்றுவது போல விளக்கு ஏற்றுவார்கள் .

xxxx

6.அன்று அன்னபூரணியின் தங்க விக்ரகம் தரிசனத்துக்கு வைக்கப்படும். மற்ற நாட்களில் அது, ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. .xxx

7.தீபாவளி அன்று பலவகை பலகாரங்களையும் இனிப்புகளையும் சாப்பிடுவதால் வயிற்றுக்கு கோளாறு, அஜீரணம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஜீரண சக்தியை அதிகரிக்க, தீபாவளி மருந்து என்னும் ஸ்பெஷல் லேகியத்தை அன்று உண்ணுவது வழக்கம்; அது அரிசித் திப்பிலி, கண்ட ந் திப்பிலி , சுக்கு, ஜீரகம்,  வெல்லம், மிளகு, கிராம்பு, ஓமம், தேன் , வெண்ணெய்  ஆகியவற்றால் ஆகிய லேகியம் ஆகும்;. அதை ஒரு  நெல்லிக்காய் அளவு சாப்பிடுவார்கள் . அது சாப்பிட ருசியாக இருக்கும்.

XXXX

8.தீபாவளியின் நாலாவது நாளன்று கிருஷ்ணனுக்கு நன்றி தெரிவிக்க ஏராளமான இனிப்புகளையும் பல காரங்களையும் கோவிலில் வந்து மலைபோலக் குவிப்பார்கள்.அன்றுதான்  பெரிய மழையிலிருந்து இடைச் சிறுவர்களை கிருஷ்ணன்,காப்பாற்றினான். கோவர்த்தன மலையைக் குட்டையாகப் பிடித்து தோழர்களைக் காப்பாற்றியதால் அந்த நாளுக்கு கோவர்த்தன பூஜை என்று பெயர்.

XXXX

9.ராம பிரான், இலங்கையில் ராவணனனைக் கொன்றுவிட்டு அன்று அயோத்திக்குத் திரும்பியதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஆகையால் அன்று அயோத்தியில் உலகம் வியக்கும் எண்ணிக்கையில் தீபங்களை ஏற்றி வழி படுவர்.

XXXX

10. குஜராத்தில் ஐந்து நாட்களுக்குத்  தீபாவளியைக்  கொண்டாடுகிறார்கள் .தீபாவளிக்கு முன்னரே இந்தப் பண்டிகை  துவங்கிவிடுகிறது.  உணவு வகைக்களை தயாரிப்பார்கள்.  பசுக்களை வழிபடுவார்கள்;பழைய கணக்குகளை முடித்து புதுக்கணக்கு துவங்குவர். லெட்சுமி பூஜை செய்வார்கள் . காளி பூஜை, அனுமான் வழிபாடு நடக்கும் ; அன்ன  கூட விழா ஆகியனவும் நடைபெறும். கேரளத்தில் ஓணம்  பண்டிகையின்போது மகாபலியை வரவேற்பது போல வரவேற்பார்கள் ; மலையாளிகள் போலவே கிராமப்புறங்களில் புலி வேஷம் போட்டு ஆடுவார்கள் பட்டாசு வெடித்தல், விளக்கு ஏற்றுதல், அந்தக் கரியில் கண்ணுக்கு மை தயாரித்தல், இனிப்புகளைப் பரிமாறிக்கொள்ளல் , புத்தாடை அணிதல் எல்லாம் நடக்கும்; புத்தாண்டு வாழ்த்தும் தெரிவிப்பார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஓணம் , பொங்கல், புத்தாண்டு தினம், அன்னாபிஷேகம், தீபாவளி ஆகிய அனைத்தையும்  5 அல்லது 6 நாட்களில் கொண்டாடிவிடுவார்கள்.

—SUBHAM—-

TAGS-  தீபாவளி, QUIZ,  கேள்வி பதில், பத்து

Leave a comment

Leave a comment