QUIZ அதிசய முதலைப் பத்து QUIZ (Post No.17,712)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,712

Date uploaded in London – –  –  13 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Quiz Serial No.81

1.முதலை  விழுங்கிய சிறுவனைக் காப்பாற்றிய தேவார பாடகர் யார்?

xxxx

2.இந்தியா முழுதும் பத்திரிகைகளில் அடிபட்ட சைவ முதலையின் பெயர் என்ன?

xxxx

3.சைவ முதலை வசித்த குளத்தில் மீண்டும் மீண்டும் நிகழும் அதிசயம் என்ன ?

xxxx

4. எந்த கடவுளுக்கு முதலை வாகனம் ?

xxxx

5. பஞ்ச தந்திரக் கதைகளில் முதலை எங்கே வருகிறது ?

xxxx

6.அர்ஜுனன்- முதலை கதை என்ன ?

xxxx

7.கங்கை நதியில் வசிக்கும் முதலைகள் எத்தகையவை?

xxxx

8.முதலையால்  சன்யாசம் பெற்று உலகை வியக்க வைத்த தத்துவ அறிஞர் யார்?

xxxx

9. முதலைக்கு சங்க இலக்கியத்தில் என்ன சொல் பயிலப்படுகிறது?

xxxx

10.இந்து மதத்தில் வரும் யானை – முதலை கதை குப்த காலம் முதல் சிலைகளில் காணப்படுகிறது அது என்ன கதை ?

 xxxxx

விடைகள்

1.தேவாரம் பாடிய  சுந்தர மூர்த்தி நாயனார் ஒரு தெரு வழியாக நடந்து போனார். ஒரு வீட்டில் மேளதாள முழக்கம். எதிர் வீட்டில் ஒரே அழுகை. என்னப்பா இது அநியாயம்? என்று அவர் கேட்க ஒரு வீட்டில் ஒரு பிராமணப் பையனுக்கு பூணுல் கல்யாணம் என்றும் அவனுடைய நண்பன் இதே வயது என்றும் ஆனால் இதே பையனுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நதியில் குளி க்கச் சென்ற போது அவனை முதலை விழுங்கி விட்டதாகவும் அதை நினைத்து அவன் தாயார் அழு வதாகவும் மக்கள் சொன்னார்கள். உடனே சுந்தர மூர்த்தி சுவாமிகள் , நதிக்கரைக்குச் சென்று பதிகம் பாடவும் முதலை அந்தப் பையனை கொண்டு வந்து கொடுத்தது என்றும் அவன் வளர்ச்ச்சி இரண்டு ஆண்டுக்கான  வளர்ச்சி அடைந்திருந்தது என்றும்  புராணம் சொல்கிறது.

xxxx

2.கேரளத்தில் காசர்கோடு அருகில் கும்பலா என்ற ஊருக்கு அருகிலுள்ள  அனந்த பத்மநாப சுவாமி  கோவில் குளத்தில்  பபியா Babia என்ற பெயருள்ள முதலை 70 ஆண்டுகள் வசித்தது . அது 2022ம் ஆண்டு அக்டோபரில் இறந்தது ; அது வாழ்ந்த காலம் முழுதும் கோவில் பிரசாதத்தை மட்டுமே உண்டு, வெஜிட்டேரியனாகவே இருந்தது.

Xxxx

3.அந்தக் குளத்தில் மீண்டும் ஒரு முதலை தோன்றி பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது . பபியா Babia முதலை இறந்து சரியாக ஓராண்டுக்குப் பின்னர் இது வந்துள்ளது  .இந்தக்கோவில் குளத்தில் ஒரு முதலை இறந்தவுடன் அடுத்த முதலை  வருவது அதிசயமாக இருக்கிறது. இப்படி வரும் நாலாவது முதலை இது; இவ்வளவுக்கும் பக்கத்தில் முதலை வசிக்கும் ஆறோ , குளமோ இல்லை.

xxxx 

4.கங்காதேவியின் வாகனம் —மகரம்/முதலை Ganga Devi= Crocodile

xxxxx

5.செய்நன்றி கொன்ற முதலை பற்றி வரும் குரங்கு – நவாப்பழம் —முதலை கதை எல்லாச் சிறுவர்களுக்கும் கற்பிக்கப்படுகிறது, தினமும் நாவல் பழத்தைக் கொடுத்து உதவிய குரங்கின் குடலைத் தின்ன விரும்பிய முதலை, குரங்கை, ஆற்றின் மறு கரைக்கு அழைத்துச் சென்றவுடன் தனது திட்டத்தை வெளிப்படுத்தியது. உடனே குரங்கும் தந்திரமாக என் குடலினை காயப் போட்டிருக்கிறேன்.  ; திரும்பிச் சென்றால் குடலினைத் தருகிறேன் என்றது . முட்டாள் முதலையும் திரும்பிச் சென்றது. குரங்கு, மரத்தின் மீது ஏறிய பின்னர் நன்றிகெட்ட முதலையை அடித்து விரட்டியது. 

Xxxx 

6.மஹா பாரதக் கதை ஆதி பர்வத்தில் வருகிறது. அப்சரஸ் என்னும் தேவ லோக அழகிகள் வர்கா, லதா, சமீச்சி , சவுரபேயி , புத்புதா  ஆகிய ஐந்து பேரும் குபேரன் வீட்டுக்குப் போய்க்கொண்டு இருந்தனர். வழியில் ஒரு பிராமணன் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்தார்கள் . சேட்டை மிகுந்த இந்த அழகிகள் அவருடைய தியானத்தைக் கலைப்பதற்காக பாடினர், ஆடினர் ; அட்டஹாசச் சிரிப்பு சிரித்தனர். பிராமணர் விழித்தார்.  பிடி சாபம் ; நீங்கள் ஐந்து பேரும் ஐந்து ஆண் முதலைகளாக 100 ஆண்டுகளுக்கு வசிக்கக்கடவது என்று சாபமிட்டார் . அப்போதுதான் அந்தப் பெண்கள் விளையாட்டு வினையானது என்பதை உணர்ந்தனர். உடனே கெஞ்சிக் கூத்தாடி சாப விமோசனம் கேட்டனர்.

ஒரு பெரிய  வீரன் வருகையில் நீங்கள் அவனைத் தாக்குங்கள்; அவன் உங்களுக்குச் சாப விமோசனம் கிடைக்கச் செய்வான் என்றார் அந்தப் பார்ப்பனர்.

அவர் செப்பியது போலவே அர்ஜுனனும் ஒரு காலத்தில் அங்கு வந்தான் அவன் மீது முதலைகள் பாய்ந்தன. அர்ஜுனன் அவைகளை விரட்டி வெற்றி பெற்றான்.  . சாப விமோசனம் பெற்ற ஐந்து அழகிகளும் தேவலோகம் ஏகினர் .

xxxx  

7.முதலைகளில் 23 வகை உண்டு. இதில் இரண்டு  வகைகள் இந்தியாவில் இருக்கின்றன. நீண்ட மூக்குள்ள காரியால் Gharial  எனப்படும் முதலைகள் கங்கை நதியில் வசிக்கின்றன.

xxxx 

8.ஆதி சங்கரர்; அவர் காலடி என்னும் இடத்தில் பிறந்தார் ; ஆற்றில் குளிக்கச் சென்றபோது, ஒரு முதலை காலைப் பிடித்துக் கொண்டது; காப்பாற்ற முடியாமல் தவித்த தாயார் கதறினாள். அம்மா இந்த ஜன்ம ஆயுள் எனக்கு முடிந்துவிட்டது. ஆகையால் நான் சந்நியாசி ஆகிறேன்.அது அடுத்த ஜன்மத்துக்குச்  சமம். அப்போது முதலையும் என்னைக் கொல்லாது என்றார். அம்மாவும் நீ உயிரோடு இருந்தாலே போதும் என்றாள் . ஆதி சங்கரர் சந்நியாசி ஆனவுடன் முதலையும் அவரை விட்டுச் சென்றது. அந்த முதலையால் நமக்கு  உலகம் புகழும் அத்வைத குரு  கிடைத்தார் .

xxxx

9. கராம்  = முதலை

xxxx

10.கஜேந்திர மோட்சம் கதை நாடு முழுதும் சிற்பமாக உள்ளது. குப்தர்காலம் முதல் சிற்பங்கள் கிடைக்கின்றன. யானைகளின் தலைவன் ஆன கஜங்களின் இந்திரனை முதலை பிடித்த போது ஆதிமூலமே என்று அது கதறியது . உடனே விஷ்ணு வந்து, முதலையைக் கொன்று கஜேந்திரனைக் காப்பாற்றினார் .

–SUBHAM—

Tags– கராம் முதலை, Quiz

Leave a comment

Leave a comment