சோட்டானிக்கரை: கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 3 (Post No.12,715)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,715

Date uploaded in London – –  –  14 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 3

கோவில் எண் 2 சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில்

சோட்டானிக்கரை அம்மே  என்ற பாடலைக் கேட்ட மாத்திரத்தில் எல்லோருக்கும் பகவதி அம்மனின், ஜதாம்பிகையின்  உருவம் மனக்கண் முன் தோன்றி விடும். மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கோவில் எங்கே இருக்கிறது ?

கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் கொச்சி நகரின் தென் பகுதியில் சோட்டானிக்கரை அம்மன் கோவில் இருக்கிறது. இங்குள்ள வினோதம் என்னெவென்றால் இந்த தேவி சரஸ்வதியாகவும், மஹா லக்ஷ்மியாகவும் , பத்ர காளியாகவும் பகவாதியாகவும் வணங்கப்படுவதாகும்வைஷ்ணவர்கள் 108 அபிமான க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று; இங்கு மஹாவிஷ்ணு சன்னதியும்  உண்டு.

ஆதி சங்கரர்

இங்கு வந்தால் இந்துமதத்தில் வரும் அத்தனை தேவியாரையும் வழிபட்ட புண்ணியம் கிடைத்துவிடும். கோவிலைப் பற்றி நிறைய கதைகள் உண்டு. முக்கியமான கதை ஆதிசங்கரர் கதையாகும்; காஷ்மீரிலிருந்து  ஸரஸ்வதியை கேரளத்துக்கு அழைத்து வர ஆசைப்பட்டார் ஆதி சங்கரர். அம்மா, ஒரு கண்டிஷன் CONDITION போட்டாள் ; நான் உன் பின்னால் நடந்து வருவேன்; ஆனால் திரும்பிப் பார்க்கக்கூடாது; உடனே சங்கரர் ஒரு கண்டிஷன் போட்டார்; தாயே! உன் கருணைக்கும் அளவு உண்டோ? நான் திரும்பிப் பார்க்கவில்லை; ஆனால் உன் சலங்கை, கொலுசு ஓசை எனக் கு    கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று.

அம்மாவும் யெஸ் YES; GRANTED என்று சொன்னாள் .

இறைவியின் திருவிளையாடலுக்குத்தான் அளவும் உண்டா?

பாதி வழி சென்ற பொழுது அம்மாவின் கொலுசு ஓசை ஆதி சங்கரருக்கு கேட்கவில்லை; திகைத்தார்; திரும்பிப் பார்த்தார்  அவ்வளவுதான்  அம்மாவும்  சிரித்துக் கொண்டே நின்றுவிட்டாள் . அந்த இடம் கர்நாடகத்தின் மலைப்பகுதியில் மூகாம்பிகை என்னும் மிகவும் பிரசித்தி பெற்ற தலம் ஆகியது. எம் ஜி ராமச்சந் திரன் வைர வாள் கொடுக்க, ஜெயலலிதா தங்கத்தை அள்ளித்தர, தமிழ் நாட்டிலிருந்து விசேஷ பஸ் சர்வீஸைத் துவங்க மூகாம்பிகை புகழ் திக்கெட்டும் பரவியது..

எடுத்த காரியம் யாவினும் வெற்றி என்பது சங்கரரின் கொள்கை; தாயே எல்லையற்ற கருணை உடைய சரஸ்வதி தேவியே!! மலையாள மக்களுக்கு உன் அருள் கிடைத்தே ஆக வேண்டும்!! என்று மன்றாடினார்.

மன்றாடியாரை விட்டுத் தருவாளா சரஸ்வதி; நான் வருகிறேன். ஆனால் இந்தக் கோவிலில்  கதவு திறக்கும் போது இருக்க வேண்டுமே என்ன செய்ய??, சொல், என்றாள் . அன்னையே சோட்டானிக்கரைக்கு வா; அங்கு அதிகாலை 4 மணிக்கு, பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீ காட்சி கொடு; பின்னர் மூகாம்பிகை கோவில் திறக்கட்டும் என்றார் . சரஸ்வதியும் சொன்னாள் ; நல்ல ஐடியா! GOOD IDEA சங்கரா; அதிகாலையில் கோவில் திறக்கட்டும் என்றாள் ; இன்றுவரை சோட்டா னிக்கரை கோவில் திறந்த பின்னரே மூகாம்பிகை கோவில் திறக்கும்.

ஆதி சங்கரர் என்றாலே தேச ஒற்றுமை என்று பொருள்; இந்திய முட்டாள்கள் , வெள்ளைக்காரன் இந்த நாட்டை ஒற்றுமைப் படுத்தினான் என்று உளறிக்கொட்டி நான் ஒரு முட்டாளுங்கநல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க என்று பாடுவார்கள். ஆதி சங்கரரோ வெள்ளைக்காரன் கோமணம் இல்லாமல் ஐரோப்பாவில் உலவிக்கொண்டிருந்த காலத்தில் மொபய்ல் போன் MOBILE PHONE  இல்லாமல், கூகுள் மேப் GOOGLE MAP இல்லாமல், நதிகளைக் கடக்க பாலங்கள் இல்லாமல்,  காஷ்மீருக்குச் சென்று ஸ்ரீ நகர்= தேவி பட்டணம் என்ற நகரை உண்டாக்கி சாரதாம்பிகையை ஸ்தாபித்தார். நாட்டின் நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை ஸ்தாபித்தார்; கர்நாடக மூகாம்பிகையையும் கேரளா சோட்டானிக்கரையையும் இணைத்தார் நாட்டின் நான்கு திசைகளுக்கும் பல  லட்சம் பேரை யாத்திரை செய்ய வைத்தார்.

இவ்வாறு இந்தக் கோவில் ராஜ ராஜேஸ்வரி,  மஹாலக்ஷ்மி, துர்கா, பகவதி,  மஹா ஸரஸ்வதி , ஆதி பராசக்தி, என்று பல பெயர்களை பெற்று காலையில் சரஸ்வதியாகவும் மதியத்தில் மஹா லட்சுமியாகவும், மாலையில் பத்ர காளியாகவும் தோன்றி அருள் மழை பொழிந்து கொண்டே இருக்கிறாள்

கோவிலில் சிவன், பிள்ளையார், தர்ம சாஸ்தா, நாகர் சந்நிதிகளும் இருக்கின்றன .

மன நோய் தீர்க்கும் மஹா தேவி

கோவிலில் பல பைத்தியங்களையும் பார்க்கலாம். ஏனெனில் மன நோயாளிகள் இங்கு வந்து ஒரு சடங்கினைச் செய்தால் நோய் போய்விடும் என்பது நம்பிக்கை. மேலை நாட்டில் மன நோய் என்று சைக்கிட்ரியாஸ்ட் PSHYCHITRIAST இடம் சென்றால் லித்தியம் மாத்திரைகளைக் LITHIUM TABLETS கொடுத்து உண்மையிலேயே மன  நோயாளி ஆக்கி விடுவார்கள் ; இந்துக்களோவெனில் மருந்து மாத்திரை இல்லாமல் ஆறு மாதம் கோவிலைச் சுற்றச் செய்வார்கள்; உடனே தெளிவு பிறக்கும்.

மன நோயாளிகளுக்கும் அவர்களைப் பாதுகாப்போருக்கும் நம்பிக்கை ஏற்பட  சில சடங்குகள் தேவை. ஆகையால் வரும் நோயாளிகளின் தலை முடியில் ஒன்றை எடுத்து ஒரு மரத்தில் ஆணியால் அடிப்பார்கள்; பின்னர் வேப்பிலை, எலுமிச்சம் பழம் , மிளகாய்  முதலியவற்றை பிரசாதமமாக கொடுத்து அனுப்புவார்கள் .

காலம் செல்லச் செல்ல நோயும் தணிகிறது

xxxxx

எனது அனுபவம் – கொஞ்சம்  சுய சரிதை

லண்டனில் உள்ள நியூஹாம் யூனிவர்சிட்டி ஹாஸ்பிடல், பார்க் ராயல் சென்ட்ரல் மிடில் செக்ஸ் ஹாஸ்பிடல் (மருத்துவ மனைகள் ) ஆகியவற்றில் 20 ஆண்டுகளுக்கு அவ்வப்போது மன நோயாளிகளுக்கு மொழிபெயர்க்கச் செல்வேன் . அப்போது தனிப்பட்ட முறையில் டாக்டருடன் நட்பு முறையில் friendly chat அளவளாவுவேன் .

சிரித்துக்கொண்டே சொல்வேன்; இப்படி லித்தியம் மாத்திரைகளைக் கொடுத்து ஆட்களை நிஜமாகவே நோயாளி ஆக்குகிறீர்களே; எங்கள் இந்தியாவில் ஆறு மாதங்களுக்கு அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் சுற்ற வைத்து ஆறே மாதங்களில் குணப்படுத்தி விடுவார்கள் என்பேன் . லித்தியம் மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டால் அவர்களுக்கு செக்ஸ் உணர்வுகள் கூட வராது; ஆளை நடைப்பிணம் ஆக்கி விடுவார்கள்

ஒரு எகிப்திய டாக்டர் பதில் சொன்னார் – எங்கள் நாட்டிலும் இது போன்ற நம்பிக்கைகள் உண்டு; நாங்கள் பெரும்பாலும்  சைக்கிட்ரியாஸ்ட் psychiatrist களிடம் அழைத்துச் செல்வதில்லை என்று.

மற்ற டாக்டர்கள் சொன்னார்கள்; இதோ பாருங்கள் நான் கேட்கும் 3 கேள்விகளுக்கு அவர்கள் YES எஸ் என்று. சொன்னால் அதற்குத் தக்க மாத்திரைகளைக் நான் கொடுத்தாக வேண்டும் அல்லது என் வேலை போய்விடும் என்று.

(மூன்று கேள்விகள் : 1.தற்கொலை எண்ணம் வருகிறதா? 2.எல்லோரும் உங்களுக்கு எதிராக ஏதோ சதி செய்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா ? யாரோ உங்களிடம் பேசி, இதைச் செய் என்று சொல்கிறார்களா ? (வாய்ஸ் கேட்கிறதா/)

MY ADVICE TO MENTAL PATIENTS

என்னுடைய கொள்கை — சில மன நோயாளிகள் வன்முறையில் ஈடுபடுவார்கள் அத்தகையோருக்கு மட்டுமே சமனப்படுத்தும் மாத்திரைகள் தேவை; மற்றவர்களை கோவில், இயற்கைக் காட்சிகள், இன்னிசை, கேளிக்கைகள் முதலியவற்றால் ஆறே மாதத்தில் குணப்படுத்திவிடலாம்; இதை என் நண்பர்கள் சிலர் விஷயத்தில் நானே பார்த்துள்ளேன்).

XXX

நிற்க. மீண்டும் கோவிலுக்குச் செல்வோம்.

இந்தக் கோவிலை பெண்களின் சபரிமலை என்றும் அழைப்பார்கள்; அதாவது ஆண்கள் எப்படி ஆண்டுதோறும் விரதம் இருந்து சபரிமலை சாஸ்தாவை தரிசிக்கிறார்க்ளோ, அதே அளவு மலையாள பெண்மணிகள் இந்த பகவதிக்கு முக்கியம் தருகிறார்கள்.

கோவிலில் ஒரே பீடத்தில் அம்மனுடன் மஹா விஷ்ணுவும் இருப்பதால் அம்மன் நாரயண என்ற பெயரும் கடவுளுக்கு உண்டு; அதே பீடத்தில் பிரம்மா , சிவன் ஆகோயோரும் உளர் ; தனி சந்நிதிகளும் இருக்கின்றன

இந்தக் கோவிலில் பெரிய விழா மகம் தொழல் ; கும்ப மாதத்தில் மக நட்சத்திரத்தில் நடைபெறுகிறது அன்றுதான் தேவியானவள், விஸ்வ மங்கள சாமியாருக்கு  தரிசனம் தந்தாள் . ஆண்டுதோறும் அதே நாளன்று தேவி அங்கே வருகிறாள் என்ற நம்பிக்கையால் தனி விசேஷம்.

தனியாக உள்ள கீழக் காவு பகவதி கோவிலில் மன நோயாளிகளுக்கான சடங்குகள் நடக்கும்

கோவிலில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நைவேத்தியம் படைக்கப்படுகிறது

Ellu Nivideyam – Morning, Night எள்ளு நைவேத்தியம் , காலை, இரவு

Vella Nivideyam & Paal Payasam – Afternoon, வெல்ல , பால் பாயஸ நைவேத்தியம் , மதியம் , இரவு

Pizhinju Payasam – Afternoon, Night பிழிஞ்சு பாயஸம் நைவேத்தியம் , மதியம் , இரவு

Kootu/Katti Payasam – Morning, Night கொழுக்கட்டை பாயசம் நைவேத்தியம் , காலை  , இரவு

Ney Payasam – Morning, Afternoon,நெய் பாயசம் , காலை, மதியம் இரவு

Night

Appam, Ada, Ottayappam – Night அப்பம், அடை , ஓட்டையப்பம் நைவேத்தியம் ,  இரவு 

வலிய குருதி பூஜை

மாலையில் பகவதி கோவிலுக்கு பெரிய குருக்கள் வந்து  சில மணி நேரங்களுக்கு நீடிக்கும் வலிய குருதி  சடங்கினைச் செய்வார். மன நோயுள்ளவர்கள் அங்கே வருவார்கள்; 12 அண்டாக்களில் வலிய குருதி ஆக்கப்படும்  குருதி என்றால் ரத்தம். அங்கு படைக்கப்படுவது ரத்தம் அல்ல. ரத்த நிறத்தில் உள்ள வெஜிட்டேரியன் கலவை  மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த செந்நிற திரவம்; இதை உட்கொண்டுவிட்டு, வீட்டுக்கு எடுத்துச் சென்று நான்கு  மூலைகளில் புதைத்தால் பேய், பிசாசுகள் அணுகாது.(கந்த சஷ்டிக் கவசமும் எல்லா வகைப் பேய், பிசாசுகள்  பெயர்களையும் பட்டியலிட்டு அவைகளை அந்தக் கவசம் விரட்டுவதாக நாம் சொல்கிறோம்).

XXXX

Chottanikkara Bhagavathy Temple

Chottanikkara Bhagavathy

https://chottanikkarabhagavathy.org

It is the most important Temple among the 393 shrines spread over 3 Districts of Kerala and coming under the administration of Cochin Devaswom Board. The Divine …

Temple timing: 4 AM to 12 PM, 4 PM to 8:45 PM

Prasad’s timing: 1 PM to 3 PM

Guruthi Pooja at Temple: 8:45 PM to 9:30 PM

Dress code: Men (Dhoti), Women (Saree)

Time taken for darshan: 2 hours

Entry fee: Free, no special darshan available

குருதி  பூஜை செய்ய விரும்புவோர் அண்டாக்களின் அடைப்படையில், கட்டணம் செலுத்துவார்கள்  அண்டா என்பது பெரிய பாத்திரம் Big Vessel

Below is the list of puja names with the ticket or Guruthi Pooja Cost as per the devotee’s requirement given by the temple authorities.

Valiya Guruthy (12 Vessel) – Rs. 25000 (12 அண்டா )

Valiya Guruthy (7 Vessel) – Rs. 18500

Valiya Guruthy (5 Vessel) – Rs. 16000

Valiya Guruthy (3 Vessel) – Rs. 11000 (3 அண்டா)

குருதி பூஜை ஏற்பாடுகள் மிகவும் விரிவானவை.. மாலையில் துவங்கி இரவில் முடிவடையும் .

—subham—

TAGS – சோட்டானிக்கரை , கேரள ,  புகழ்பெற்ற 108 கோவில்கள் , Part 3, குருதி பூஜை, மகம் தொழல் ,

Leave a comment

Leave a comment