Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 29 (Post No.12,759)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,759

Date uploaded in London – –  –  24 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

SLOKA 95

ब्रह्मा येन कुलालवन्नियमितो ब्रह्माण्डभाण्डोदरे

        विष्णुर्येन दशावतारगहने क्षिप्तो महासङ्कटे ।

रुद्रो येन कपालपाणिपुटके भिक्षाटनं कारितः

        सूर्यो भ्राम्यति नित्यमेव गगने तस्मै नमः कर्मणे ॥ 95॥

ப்ரஹ்மா யேன குலாலவன்னியமிதோ ப்ரஹ்மாடபாண்டோதரே

விஷ்ணுர்யேன தஶாவதாரகஹனே க்ஷிப்தோ மஹாஸங்கடே |

ருத்ரோ யேன கபாலபாணிபுடகே பிக்ஷாடனம் காரிதஹ

ஸூர்யோ ப்ராம்யதி நி த்யம் ஏவ ககனே தஸ்மை நமஹ  கர்மணே || 1.95 ||

கர்மாவுக்கு வணக்கம் சொல்லுவோம். பிரம்மாவை ஒரு குயவன் போல சதா சர்வ காலமும் படைப்புத் தொழில் ஈடுபடுத்துகிறது. விஷ்ணுவை பத்து அவதாரங்கள் எடுக்க அனுப்புகிறது ; சிவ பெருமானை கபாலம் ஏந்தி வீடு வீடாக பிக்ஷை எடுக்க வைக்கிறது ; சூரியனை சதா சர்வ காலமும் சுற்ற வைக்கிறது—95

அண்டத்திடையில் அயநெதானா லேயிருப்பான்

விண்டு வெ தனாற் பரியாய் மேவுதற்கேற்பட்டான்

பண்டுருத்திரன்தான்  பலி யோடெ தானாலே

கொண்டிரந்தான் சூரியனுங் கோளமா வானத்தில்

அண்டி எதனாற் றிரிவான் அத்தகைய  வூழ் வினைக்குத்

தெண்டனிட்டு வந்தனஞ் செய்வேன்

XXXXXX

SLOKA 96

नैवाकृतिः फलति नैव कुलं न शीलं

        विद्यापि नैव न च यत्नकृतापि सेवा ।

भाग्यानि पूर्वतपसा खलु सञ्चितानि

        काले फलन्ति पुरुषस्य यथैव वृक्षाः ॥ 96॥

நைவாக்ருதிஹி  பலதி நைவா குலம் ந  ஶீலம்

வித்யாபி நைவ ந  ச யத்னக்ருதாபி ஸேவா |

பாக்யானி பூர்வதபஸா கலு ஸஞ்சிதானி

காலே பலந்தி புருஷஸ்ய யதைவ வ்ருக்ஷாஹா  || 1.96 ||

ஒருவன் உலகத்தில் இன்பத்தை அனுபவிப்பதற்கு அவனது அழகோ , அவனுடைய குலப்பிறப்போ, கல்வி யோக்கியதாம்சங்களோ குருவுக்கு சேவை செய்வதோ காரண மல்ல. அவனுடைய கடந்த கால நற்செய்கைகளால் கிடைத்த அதிர்ஷ்டமே இதற்குக் காரணம்.

XXXXX

SLOKA 97

वने रणे शत्रुजलाग्निमध्ये

        महार्णवे पर्वतमस्तके वा ।

सुप्तं प्रमत्तं विषमस्थितं वा

        रक्षन्ति पुण्यानि पुरा कृतानि ॥ 97॥

வனே ரணே ஶத்ருஜலாக்னிமத்யே

மஹார்ணவே பர்வதமஸ்தகே வா |

ஸுப்தம் ப்ரமத்தம் விஷமஸ்திதம் வா

ரக்ஷந்தி புண்யானி புராக்ருதானி || 1.97 ||

ஒரு காட்டின் நடுவில் சிக்கித் தவித்தாலோ போரில் அகப்பட்டாலோ , எதிரிகளிடம் சிக்கினாலோ ; கடலில் விழுந்தாலோ ஒருவன் ஒரு காயம் கூட இல்லாமல் தப்பிப்பதற்கு அவன் பூர்வ ஜென்மத்தில் செய்த நற்பலன்தான்  காரணம், தீயில் விழுந்த பொழுதும் மலை உச்சியில் நின்றபொழு தும், தூங்கும் போதும் குடித்த போதும், கஷ்டத்தில் சிக்கியபோதும் நம்மைக் காப்பாற்றுவதும் நல்ல கர்ம பலனே  ,

(பல பர்த்ருஹரி  நீதி சதக நூல்களில் மேற்கண்ட ஸ்லோகங்கள் இல்லை.)

—-SUBHAM—-

 Tags- Nitisataka, Part 29, Bhartruhari, slokas 95,96,97

Leave a comment

Leave a comment