Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
விதியை வெல்ல முடியாது என்றாலும் முயற்சியும் தேவையே!
ச.நாகராஜன்
கர்ப்பத்தில் இருக்கும்போதே விதிக்கப்பட்ட ஐந்து விஷயங்கள்
கர்ப்பத்தில் இருக்கும்போதே ஒவ்வொருவருக்கும் ஐந்து விஷயங்கள் விதியால் நிர்ணயிக்கப்பட்டு விட்டன.
அவை யாவை?
விடை தருகிறது இந்த ஸ்லோகம்.
ஆயு: கர்ம ச வித்தம் ச வித்யா நிதனமேவ ச |
பஞ்சைதாநி ஹி ச்ருஜ்யந்தே கர்பஸ்தஸ்யைவ தேஹின: ||
ஆயுள், தொழில், செல்வம், கல்வி மற்றும் மரணம் ஆகிய ஐந்தும் மனிதர்களுக்கு அவர்கள் கர்ப்பத்தில் இருக்கும்போதே விதிக்கப்பட்டு விட்டன.
கடவுளுக்கே தெரியாத நான்கு விஷயங்கள்
ஒரு அரசன் தன் மனதில் என்ன நினைக்கிறான், ஒரு கருமியிடம் இருக்கும் செல்வம், ஒரு கெட்ட (கிரிமினலின்) மன ஓட்டமும் செய்கையும், பெண்களின் நடத்தை – ஆகிய இந்த நான்கு விஷயங்களையும் கடவுளே கூட அறிய மாட்டார் என்றால் (சாதாரண) மனிதர்களைப் பற்றி என்ன சொல்வது?
பூர்வஜென்ம புண்ணியத்தால் பெரும் செல்வம் அடைந்த ஒருவன் அடர்ந்த வனத்தை தனது சொந்த நகரமாகக் கருதுவான்; எல்லா மனிதர்களும் மிக நன்றாக தன்னிடம் நடப்பதாக நினைப்பான்; எல்லா நிலமும் ரத்னமயமாக அவனுக்குத் தெரியும்.
பீமம் வனம் பவதி தஸ்ய புரம் ப்ரதானம்
சர்வோ ஜன: சுஜனதாமுபயாதி தஸ்ய |
க்ருதஸ்னா ச பூர்பவதி சன்னிதிரத்னபூர்ணா
யஸ்யாஸ்தி பூர்வசுக்ருதம் விபுலம் நரஸ்ய ||
தலையெழுத்தில் எழுதாவிடில் என்ன பிரயோஜனம் இவற்றால்!
ஒருவனுக்கு விதியால் விதிக்கப்பட்டு அவன் தலையெழுத்தில் எழுதப்படவில்லை என்றால், அதிக படிப்பு, கூரிய அறிவு, வீரம், இன்னும் பல நற்குணங்கள் அவனிடம் இருந்தும் பயன் என்ன?
(விதி இல்லையென்றால் இவை அனைத்தும் இருந்தும் பயன் இல்லை என்று பொருள்)
முயற்சியின்றி அதிர்ஷ்டம் மட்டும் ஒன்றையும் சாதித்து விடாது!
ஒரு ரதமானது ஒற்றைச் சக்கரத்தை வைத்துக் கொண்டு ஓட முடியாது; அது போல மனித முயற்சி இல்லாமல் அதிர்ஷ்டம் (விதி) மட்டும் தானாகவே எதையும் சாதித்து விட முடியாது.
யதா ஹோயேகேன சக்ரேன ந ரதஸ்ய கதிர்பவேத் |
ஏவம் புருஷகாரேண வினா தைவம் ந சித்யதி ||
பிரம்மா, விஷ்ணு, சிவனாலும் முடியாத காரியம்!
பிரம்மா, விஷ்ணு, சிவனாலும் முடியாத காரியம் ஒன்று உண்டு!
அது என்ன?
ஒருவன் நெற்றியில் எழுதி விட்ட கோடுகளை (தலையெழுத்தை அல்லது விதியை) ஹரி, ஹரன் அல்லது பிரம்மா யாராக இருந்தாலும் சரி முற்றிலுமாக அழித்து விட முடியாது.
ஹரிணாபி ஹரேணாபி ப்ரஹ்மணாபி சுரைரபி |
லலாடலிகிதா ரேகா ப்ரிமார்ஷ்டு ந சக்யதே ||
மனதை அடக்குவது மிகவும் கடினம்!
தாயுமானவர் கூறுகிறார்
குதிரையையும், மதயானையையும் வசப்படுத்தி விடலாம்.
கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்.
ஒரு சிங்கத்தின் முதில் ஏறி உட்கார்ந்து கொள்ளலாம்.
பாம்பை (கட்செவி) ஆட்டுதலும் செய்ய முடியும்.
நெருப்பில் பாதரசம் (இரதம்) இட்டு ஐந்து உலேகங்களையும் பொன்னாக்கி விற்று உண்ணலாம்.
வேறு யாரும் காணாமல் உலகத்திலே உலா வரலாம்.
தேவர்களை ஏவல் செய்து வேலை வாங்கலாம்.
என்றும் இளமையோடு இருக்கலாம்.
மற்றொருவர் உடலில் புகுந்து கொள்ளலாம்.
நீரின் மேல் நடக்கலாம். நெருப்பின் மேல் இருக்கலாம்.
நிகரில்லாத சித்திகளைப் பெறலாம்.
ஆனால், மிகவும் கஷ்டமான விஷயம் என்னவெனில் “மனத்தை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் தான்”.
இப்படி தேஜோமயானந்தப் பாடலில் அவர் குறிப்பிடுகிறார்
(உண்மையாகி என் மனதிற் குடி கொண்டிருக்கிற, அறிவான தெய்வமே, தேஜோமயானந்தமே)
ஓ கடவுளே! ஒருவன் சிங்கம், புலி, யானை போன்ற மிருகங்களை அடக்கலாம்; ஆனால் ஒருவன் தனது வலிமையினால் காமத்தினால் வரும் இன்ப விஷயங்கள், குடி, போதை ஆகியவற்றில் ஈடுபட்ட மனதை அடக்கவே முடியாது.
வெள்ளி மலை யான கைலாசத்திலும் தங்க மலையான மேருவிலும் வளரும் மரங்கள் , மற்ற எல்லா மரங்கள் போலத்தானே இருக்கின்றன; அவைகளால் என்ன பயன்? ஆனால் மலய மலையோ கசப்பான கங்காள, கூடஜ, வேப்ப மரங்களையும் சந்தன மர வாசனையால் கமழச் செய்கின்றதே ; ஆகையால் அதைப் போற்றுவோம் .– 8080. Of what avail are the golden and silver mountains, the trees growing on which remain the same trees. We respect the Malaya Mountain, inhabiting which even Kankola, Neem and Kutaja become sandal trees.
கிம் தேன ஹேமகிரிணா ரஜதாத்ரிணா வா
யத்ராஶ்ரிதாஶ்ச தரவஸ்தரவந்த ஏவ |
மன்யாமஹே மலயம் ஏவ யத்ஆஶ்ரயேண
கங்கோலநிம்பகடுஜா அபி ச ந் தனாஃ ஸ்யுஃ –80
xxxxxx
रत्नैर्महार्हैस्तुतुषुर्न देवा
न भेजिरे भीमविषेण भीतिम् ।
सुधां विना न प्रययुर्विरामं
न निश्चितार्थाद्विरमन्ति धीराः – 81
81. The Devas were not content with the precious gems (that emerged from the ocean). They did not take fright at the terrible poison. They did not stop till they obtained ambrosia. Courageous ones do not turn back from the determined goal.
பாற்கடலைக் கடைந்த தேவர்கள் அதிலிருந்து வந்த ரத்தினங்களுடன் திருப்தி அடைந்து நின்றுவிடவில்லை.; விஷம் வெளியே வந்த போதும் பயந்து ஓடவில்லை ;அமிர்தம் கிடைக்கும் வரை கடைவதை நிறுத்திவில்லை ; துணிவுள்ளவர்கள் லட்சியத்தை அடையும் வரை பின்வாங்க மாட்டார்கள் .
ரத்னைர்மஹார்ஹைஸ்துதுஷுர்ன தேவா
ன பேஜிரே பீமவிஷேண பீதிம் |
ஸுதாம் வினா ன பரயுர்விராமம்
ன னிஶ்சிதார்தாத்விரமன்தி தீராஃ -81
அமுதம் பெற சுரர் பாலாழி கடைந்தார்
அமுதம் பெறு முன்னர் ஆலம் — திமிதிமெ ன்று
மேலெழுந்ததற் கஞ்சார் மேலா மரத்தனங்கள்
பாலெழுந்தவற்றை ப் பரிந்து மன மா லெழுந்து
நாட்டார் அதுகாறும் நாடி எவராலும்
தேடா அமுதம் திரளுமட்டும் — வாடார்
பிடித்த பிடிவிடார் பெற்றி போல் நெஞ்சந்
தடித்த துணிவுடை யார் தாமும் — முடித்தன்றி
எண்ணி முடியுங் கருமம் எப்படியும் கைவிடார்
மண்ணிலே நின்ற வழக்கு — 81
xxxxxx
क्वचित् पृथ्वीशय्यः क्वचिदपि च पर्यङ्कशयनः
क्वचिच्छाकाहारः क्वचिदपि च शाल्योदनरुचिः ।
क्वचित् कण्ठाधारी क्वचिदपि च दिव्याम्बरधरो
मनस्वी कार्यार्थी न गणयति च दुःखं न च सुखम् ॥ ८२॥
82. Sometimes sleeping on the (bare) earth and sometimes on a couch, sometimes eating only vegetables and sometimes tasting rice, sometimes wearing rags and beautiful clothes at other times : A brave person bent upon (accomplishing) a task does not care for comfort or hardship.
ஒரு குறிக்கோளை அடைய விரும்ம்பும் லட்சியவாதி பஞ்சு மெத்தையிலும் தூங்குவான்; தரையிலும் படுப்பான் வெறும் பழம் காய்களையும் சாப்பிடுவான்; சமைத்த சாதத்தையும் சாப்பிடுவான் கந்தையையும் அணிவான்; பட்டுப் பீதாம்பரங்களையும் அணிவான்;
I published three parts from 1932 book in the past three days; now I am publishing more pictures from another anti Hindu book. Bishop Caldwell gang wrote to Europe Christians that Dravidians worship devils and ghosts. Cadwell wrote to them that Tirunelveli Nadar community, Sanars etc worship ghosts. The also spread the propaganda that Hindus throw their wives into funeral pyres of their husbands. They published pictures of rescued women. They also published pictures showing Brahmins dying holding the tail of a cow and strange pictures of Hindu saints.
Book title
Story of The World’s Worships, Frank S Dobbins,
Chicago, 1901
Here are some pictures:
Tri
Lord Indra
Tri Murthy
Kanpur temple
Brahmins die by holding tails of cows- Christian Propaganda
Hindu boys are taught to worship animas
Hindu Mothers kill childrem poem
Hindu women are Slaves
Hindus commit suicide in front of Temple Raths/ chariots
—subham—
tags – Anti Hindu Pictures, 1901 book, Dravidian , Devil, Worshippers, Caldwell propaganda, anti hindu poems
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 9
கோவில் எண் 8 – எட்டுமானூர் சிவன் கோவில்
கோட்டயம் அருகிலுள்ள புகழ் பெற்ற சிவன் கோவில் இது.
எட்டுமானூர், ஏற்றமானூர் என்று அழைக்கப்படும் இடம் கோட்டயத்திலிருந்து 11 கி.மீ தொலைவில் இருக்கிறது. கோவிலின் த்வஜ ஸ்தம்பம் / கொடிமரம் தங்கத் தகட்டில் ஜொலிப்பதால் அதையும், மேற்கு நோக்கிய கோபுரத்தையும் தொலைவிலிருந்தே காணலாம். சுவாமி மேற்கு நோக்கி இருந்து அருள் புரிகிறார் .முதலில் வலிய விளக்கு எனப்படும் பெரிய விளக்கினை வழிபட்டுவிட்டு சிவனைத் தர்சிக்கச் செல்லுவது மரபு/ சம்பிரதாயம். ஏனெனில் 1545ம் ஆண்டு முதல் சுமார் 500 ஆண்டுகளாக எரியும் விளக்கு இது. ஆகையால் விளக்கிற்கு எண்ணெய் காணிக்கை செலுத்துவது முக்கிய வழிபாடு ஆகும். விளக்கு 3 லிட்டர் எண்ணெய் வரை தக்க வைத்துக்கொள்ளும். பகதர்கள் மேலும் மேலும் ஊற்றினால் கீழேயுள்ள தொட்டியில் அது சேரும். விழாக்காலத்துக்கு தேவையான எண்ணெய் அதில் சேர்ந்துவிடுகிறது. மேலும் திரியில் சேர்ந்துள்ள கருப்பு மையை பெண்கள் கண்களுக்கு இட் டுக் கொள்கிறார்கள். இது கண் நோய்களுக்கு மருந்தாகவும் கருதப்படுகிறது .
கரண் என்ற அசுரன் சிவ பெருமானை வேண்டி மூன்று சிவலிங்கங்களைப் பெற்று அவைகளை பிரதிஷ்டை செய்வதற்கு மூன்று இடங்களை தேர்ந்தெடுத்ததை முன்னொரு கட்டுரையில் கண்டோம். அதில் ஒன்று எட்டுமானூர் .
xxxx
வலிய விளக்கின் கதை
1542-ல் கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. அப்போது கோவில் வாசலில் நின்று கொண்டிருந்த சிப்பந்திகளிடம் ஒரு தட்டான் தங்கம் போல் ஜொலிக்கும் விளக்கினைக் கொண்டு வந்து, இதை கோவிலில் வையுங்கள் என்றார். ஒவ்வொருவரும் அவரைக் கேலி பேச்சுப் பேசி உதாசீனம் செய்தனர். இவ்வளவு பெரிய விளக்கிற்கு யார் எண்ணெய் ஊற்றுவார்? இது என்ன தண்ணீரில் எரியுமோ? என்றெல்லாம் பகடி பேசினர். அப்போது இடி மின்னலுடன் மழை ஆரம்பமானவுடன் ஒருவர் விளக்கினை எடுத்துக்கொண்டு கோவிலுக்குள் ஓடினார் . மழை நின்றபின்னர் அந்த விளக்கு திரிகளுடன் எண்ணெயில் எரிந்து கொண்டிருந்தது. அன்று முதல் இன்றுவரை அணையவில்லை.
இது போல வடலூரில் ராமலிங்க சுவாமிகள் ஏற்றி வைத்த அடுப்பும் விளக்கும் 200 ஆண்டுகளாக இன்றுவரை எரிந்து கொண்டு இருக்கிறது .
2 அடி உயர லிங்கம்
எட்டுமானூரில் இரண்டு அடி உயர லிங்கம் மஹாதேவன் என்று வழிபடப்படுகிறார். அதற்கு முன்னால் அழகிய விக்கிரகமும் இருக்கிறது. 2 நந்திகள் உண்டு. இதில் பஞ்ச லோகத்தால் ஆன நந்தி செம்பகசேரி மன்னர் கொடுத்தது; அவருக்கு வயிற்று வலி வந்த போது கோவிலுக்கு வந்து 41 நாள் விரதம் இருந்தார் ; அந்த நோய் நீங்கியவுடன் இதை நெல் நிரப்பி அளித்தார்.
அதிலுள்ள ஓட்டையிலிருந்து நெல்லை எடுத்து பக்தர்களும் பிரசாதமாக கொண்டு சென்றனர். பின்னர் அது நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது இந்தக் கோவிலின் அமைப்பு, வைக்கம் மஹாதேவர் கோவில் போலவே வட்ட வடிவான கர்ப்பக்கிரகத்துடன் இருக்கும்; ஆயினும் வைக்கம் கோவிலை விடச் சிறியது.
கோவில் கூரை, தூண்கள் ஆகியன செப்புத் தகடுகளால் மூடப்பட்டுள்ளது
ராமாயண சிற்பங்கள்
கோவிலில் உள்ள தூண்கள், சுவர்கள் ஆகியவற்றில் நல்ல சிற்பங்களைக் காணலாம். ராமாயண காட்சிகள் மரச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ கோவில் எனப்படும் தேவி கோவில், சாஸ்தா, தட்சிணாமூர்த்தி, கணபதி சந்நிதிகளும் இருக்கினறன. சுவாமிக்கு தங்க வைர மாலைகள் அணிவிக்கும்போது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்..
10 நாள் உற்சவம்
கும்ப மாதத்தில் (பிப்ரவரி மார்ச்) வருடாந்திர உற்சவம் நடக்கிறது. அதில் எட்டாம் நாள் உற்சவம் முக்கியமானது. அன்று நள்ளிரவுக்குப் பின்னர் சுவாமி, ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி அலங் கா ரத்துடன் தரிசனம் தருகிறார். அன்று பக்தர்கள் பெருந்திதிரளாக வருகிறார்கள்.
தங்க யானைகள் – ஏழரைப் பொன்
எட்டாம் நாள், பத்தாம் நாள் திருவிழாக்களின் முக்கிய அம்சம் ஏழரைப் பொன்னால் ஆன தங்க யானைகளைக் காண்பதாகும். இவைகளை திருவாங்க்கூர் மன்னர் அனிச்சம் திருநாள் மார்த்தாண்ட வர்மா , போர் வெற்றிக்குப் பின்னர் கோவிலுக்கு தானமாக அளித்தார் ஏழரைத் துலா தங்கத்தினால் ஆன ஒவ்வொரு யானையும் 2 அடி உயர தங்க யானை.கள் . எட்டாவது யானை ஒரு அடி உயரமே இருப்பதால் ஏழரை பொன் யானை என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது
பணக்கார கோவில்
எட்டுமானூர் மஹாதேவர் கோவில் பணக்கார கோவில். சிவன் அருள்பெற்ற மன்னர்கள், எல்லாவற்றையும் தங்கத்தினால் செய்து கொடுத்துவிட்டார்கள் தங்க நகைகள், வைர நகைகள், தங்கக் குடங்கள், தங்கம் பதித்த வலம்புரிச் சங்குகள் ,யானைக்கு தங்க முக பட்டாம், வெள்ளி நந்திகள் முதலியன கோவில் கஜானாவில் உள்ளன.
மான் + ஊர் = மானூர்
ஊருக்கு வெளியே ஐந்து கி.மீ தொலைவில் தேவகிரி உள்ளது. சிவபெருமான் ஒரு மானை உருவாக்கி அங்கே விளையாட விட்டதாக ஒரு கதை. புராணங்களில் வரும் மணிமான் தீர்த்தம் அது. இதனால் எட்டு மானூர் (எட்டி இருக்கும் ) என்று பெயர் ஏற்பட்டதாம். கோவிலுக்கு சிவலிங்கத்தைக் கொண்டுவந்த கரண் தான் இப்படி மான் உருவம் எடுத்தானாம். இது போல இன்னும் பல கதைகளும் உண்டு
வில்வ மங்கள சாமியார் இங்கு வந்து சிவலிங்கத்தைக் கண்டுபிடித்து வெல்லமும் வாழைப்பழமு நைவேத்தியம் செய்தார். விஷ்ணு சிலை ஒன்றையும் நிறுவினார் அவர் அஷ்ட மங்கல மூத்தது இடம் கோவில் நிர்வாகத்தை ஒப்படைத்தார் அந்தக் குடும்பம் எட்டு குடும்பங்களாகப் பெருகியது. மக்கள் எட்டு மனைகளோட ஊர் என்று அழைக்கவே எட்டு மானூர் என்ற பெயர் நிலைத்து நின்றது என்ற விளக்கமும் உண்டு.
சிவ பக்தர்கள் அனைவரும் தரிசிக்க வேண்டிய கோவில் என்பதில் ஐயமில்லை
சம்போ மஹாதேவ சிவா சம்போ மஹாதேவா !
—subham —
Tags- கேரள மாநில, புகழ்பெற்ற, 108 கோவில்கள், Part 9, எட்டுமானூர், சிவன் கோவில், தங்க யானைகள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கொங்குமண்டல சதகம் பாடல் 31
கொங்குப் புலவர் சபை!
ச.நாகராஜன்
27-10-2019 அன்று கட்டுரை எண் 7144இல் கம்பர் தமிழுக்குத் தந்த கல்யாண வரி என்ற தலைப்பில் கொங்கு மண்டல சதகம் பாடல் 30 விளக்கமாகத் தரப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து படிக்க வேண்டிய கட்டுரை இது.
கம்பர் தமிழுக்குத் தந்த கல்யாண வரியை அவ்வப்பொழுது கொடுக்கக் கூடிய உரிமையை கொங்குப் புலவர் சபை பெற்றது.
அதை விளக்கும் பாடலாக கொங்கு மண்டல சதகம் பாடல் 31 அமைகிறது.
பாடல் இதோ:
வளவ னெழுத்துப் படிக்கம்பர்க் கான வதுவைவரி
தெளியும் பழந்தமி ழைவாணர் கொள்ளச் செயுமுரிமை
கொளவேற் றவர்தமைத் தேர்ந்தெடுக் குஞ்சபை கூடிவரு
வளமை மிகுதிருச் செங்கோடை யுங்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள் : குலோத்துங்க மன்னனின் சாசனப்படிக்குண்டான, கல்யாண வரியை ஐந்து பிரிவுகளை உடைய புலவர் வகுப்பினரில் தகுதி வாய்ந்தவர்கள் இவர்கள் என்று தேர்ந்தெடுத்து உரிமை தரும், கொங்குப் புலவர் சங்கம் கூடும் திருச்செங்கோடு கொங்கு மண்டலத்தில் உள்ளதேயாம்.
இதை விவரமாகப் பார்க்கலாம்.
பாணர் அல்லது வாணர் என்பவர்கள் பழந்தமிழ்க் குடிகளுள் மிகவும் சிறந்த பிரிவினர். தங்கள் பாடல்களால் அவர்கள் பெருந்தன்மையையும் வீரத்தையும் வளர்த்து வந்தனர்.
தமது முன்னோர்கள் பாடிய பாடல்களைத் தலைமுறை தலைமுறையாகப் பாடி வருவார்கள். புதிய பாடல்களையும் புனைந்து வருவர். வாணி தேவியே அவர்கள் நாவினின்று செய்யுளாக உதிக்கிறாள்; ஆகவே அவர்கள் தர்மசீலர்கள் என்று போற்றப்பட்டு வந்தனர்.
ஒருவனை, “நீ கெடுவாயாக” என்று அங்கதம் என்னும் அரம் பாடுவார்களாயின் அவர்களால் பாடப்பட்டோர் நிச்சயம் கெட்டுப் போவார்கள். ஆகவே இவர்களிடத்து மக்களிடத்தில் பயம் உண்டு.
வேந்தர்களும் வீரர்களும் இவர்களால் பாடப்படுவதைச் சிறந்த கௌரவமாகக் கருதினர். ஒவ்வொரு ஊராகச் சென்று பயமின்றி இவர்கள் இன்பச் சுவை தரும் அகப்பாட்டுகளையும் வீரம் தரும் புறப்பாட்டுகளையும் பாடி வந்தனர். யாழ் இசைத்து இவர்கள் பாடும் பாடல்கள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன.
இவர்கள் வேற்றரசர்களிடம் தூதும் செல்வதுண்டு. தனது அரசனின் சேனை வலிமையையும் வீரத்த்தையும் கூறுவதோடு மாற்றரசனின் பலமின்மையையும் கூசாமல் நேருக்கு நேர் நின்று எடுத்துரைக்கும் திறன் படைத்தவர்கள் இவர்கள்.
ஒருவேளை இரு மன்னர்களிடையே போர் உண்டானால் அதை சமரசம் செய்து தீர்த்து வைப்பவர்களாகவும் இவர்கள் திகழ்ந்தனர்.
அரசர்கள் நீதி தவறி தவறு இழைத்தார்களெனில் அவர்களை இடித்துரைத்துத் திருத்துவர்.
தமது அரசர் வேறு ஒரு அரசனால் சிறைபிடிக்கப்பட்டால் அந்த அரசனிடம் சென்று உரிய முறையில் பேசி தமது அரசனை விடுவிக்கச் செய்வதும் உண்டு. அதே போல ஒரு மன்னன் மாண்டு விட்டால் அவரது மக்களுக்கு பேருதவி புரிவதும் இவர்களே.
கோயிலில் இருக்கும் சாசனங்களை விட இவர்களது பாடல்களே நிலையான சாசனமாகும் என்று இவர்கள் பாடும் பாடல்களை மக்கள் போற்றி மதித்து வந்தனர்.
சங்க நூல்களில் இவர்களின் அருஞ்செயல்கள் குறிக்கப்படுகின்றன.
சிறுபாணாற்றுப் படை உரையில் குறிப்பிடப்படும் பாணர் – பாடுவோர் எனப்படுவர் இவர்களே. இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் என இவர்கள் பலவகைப்படுவர்.
பொருநராற்றுப்படை உரையில் ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என இவர்கள் குறிக்கப்படுகின்றனர்.
மதுரைக்காஞ்சியில், பாணர் வருக, பாட்டியர் வருக, யாணர்ப் புலவரொடு வைரியர் வருக என்பனவற்றின் உரையில் கவியாகிய புது வருவாயினை உடைய புலவர்களுடன் பாணர் வருவாராக, பாணிச்சியர் வருவாராக, கூத்தர் வருவாராக எனக் குறிக்கப்படுகின்றனர்.
மலைபடுகடாம் உரையில் கூத்தர் ஆடன்மாக்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பாணர்கள் விறல்பெற ஆடுதலால் விறலியர் என்றும் கூறப்படுவர்.
மேலே தரப்பட்டுள்ள கொங்குமண்டல சதகம் பாடல் 31இல் இரண்டாம் அடியில் ‘பழந்தமிழை வாணர் கொள்ள’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை,
“புரவலன் பரிசு கொண்டு மீண்ட
விரவலன் வெயிறெறு விமுங்கா னத்திடை
வறுமையுடன் வரூஉம் புலவர் பாணர்
பொருநர் விறலியர் கூத்தர்க் கந்தப்
புரவல நாடூர் பெயர்கொடை பராசு
யாங்குநீ செல்கென விடுப்பதாற் றுப்படை”
என்று இலக்கண சூத்திரம் வலியுறுத்துக் கூறுகிறது.
தற்காலத்தில் கொங்குமண்டலத்தார் கொள்ளும் ஐவாணர்கள் :-
பட்டன், புலவன், பண்பாடி, தக்கைகொட்டி மற்றும் கூத்தாடி என்ற ஐவரே ஆவர்.
இதனைக் கொங்கு வேளாளர் கல்யாணத்தில் பாடும் மங்கலவாழ்த்து என்று நாளும் பாராட்டப்படும் நூலில் காணலாம் :
“பட்டன் புலவன் பண்பாடி தக்கையன்
திட்டமாய்ச் சோபனஞ் செப்பிமுன் னேவர
அரம்பை மேனமை அணிகொள் திலோத்தமை
திரம்பெறு மூர்வசித் தெரிவையர்க் கொப்பாய்
வண்மைசேர் கூத்தி வகைபெற நின்று
நன்மை சேர்பரத நாட்டிய மாடிட”
என்ற வரிகளால் காணலாம்.
இங்கு பட்டன் – தலைவனை புகழை அவன் முன்னே நின்று பாராட்டுவோன்.
புலவன் – இயற்றமிழால் பாடல் பாடிப் புகழ்வோன்
பண்பாடி – இசைத் தமிழ் பாடுவோன்
தக்கைகொட்டி – தக்கை என்னும் ஒரு வகை வாத்தியத்தை வாசிப்பவன்
கூத்தாடி – நாடகத் தமிழை நடத்துவோன்.
இவர்களில் உயர்வு தாழ்வு வகையாகப் பல உட்பிரிவினரும் உண்டு.
கொங்குமண்டலத்தார் பெரிய நாடு என்று பாராட்டும் கீழ்கரைப் பூந்துறைத் தலைமை நகரான திருச்செங்கோட்டில், மலை முதல் படி அருகில் உள்ள அழகிய விநாயகர் சந்நிதியில் படிகாரர்கள் சபை என்ற ஒரு சபை பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டப்படுகிறது.
அப்போது இனிமேல் கம்பர் உரிமையில் பங்கு பெறக் கூடியவர்கள் இவர்கள் எனத் தேர்ந்தெடுத்து சபைத் தலைவரால் வெற்றிலை கொடுக்கப்படுகிறது. அதன் பின்னரே புலவர் அட்டவணையில் பெயர் பதியப்படும்.
இச்சங்க காலத்தில் அப்போது ஏற்படும் சங்கத் தலைவரால் நியமன தாம்பூலம் பெறாதவர் பன்னூலாய்ந்த பெரும் பாவலர் என்றாலும் படி (வரி) பணித்தல் பங்கு கொடுக்கமாட்டார்கள். கல்யாணம் முதலிய முக்கிய சபைகளில் வாழி சொல்லும் தகுதியும் இவருக்கு இல்லை என்பது சங்கத்தாரின் கொள்கை.
கொங்கு வேளாளர் கல்யாணங்களில் இப்புலவர்கள் வாழி சொல்லாவிடில் கல்யாணம் பூர்த்தியானதாகக் கருதப்படமாட்டாது.
புலவர் அப்போது வரவில்லையெனில் அவர்களது உரிமை சன்மானத்தை எடுத்து வைத்த பின்னரே அந்தணர் முதலியோருக்கு பூரி முதலியன தரும் வழக்கம் ஐந்துபடிகாரர் இருக்கும் நாடுகளில் இன்றும் நடந்து வருகிறது.
விவாகம் செய்வோரிடத்து ஏதேனும் சில ஆசாரக் குறைபாடுகள் இருப்பின் புலவர் வாழி சொல்ல மாட்டார்.
புதிதாகப் பெண் கேட்கச் செல்லும் போதும் சில முக்கிய ஆசார நற்காரியங்கள் செய்யும் போதும் புலவரில் ஒருவரேனும் இருக்க வேண்டும் என்று கொங்கு வேளாளர்கள் விரும்புகின்றனர்.
இது நாட்டதிகாரம் பெற்ற பழைய பரம்பரையைச் சார்ந்தவர்களிடத்து இன்றியமையாதது. பெண்களும் புலவர்களை உபசரிப்பர்.
புதிதாக உள்ள செல்வந்தர்களை விட பழையபரம்பரையைச் சேர்ந்த ஏழையை புலவர்கள் மனதார மதிக்கின்றனர்.
இவர்கள் சேர வேளாளர்கள் எனப்படுகின்றனர். இவர்களும் கொங்கு வேளாளர்களைப் போல நன்மை தீமை சடங்குகளுக்கான ஆசாரங்களை நடத்துகிறார்கள்.
இந்தப் புலவர் வகுப்பினர் கொங்குமண்டலத்தில் மட்டுமல்லாது, பாண்டிமண்டலத்து சங்கரநாராயணர் கோவில், ஊற்றுமலை-சொக்கம்பட்டி-புளியங்குடி- எட்டயபுரம் முதலிய இடங்களில் இன்றும் வசித்து வருகின்றனர்.
இவர்களை மதித்து இவர் தம் பழம்பெரும் பண்பாட்டை வழிவழியாக காத்து வருவது தமிழர் தம் கடமையாகும்.
Sub marine fire- Vadamukagni; Badavagni; Hindu discovery
इतः स्वपिति केशवः कुलमितस्तदीयद्वीषा-
मितश्च शरणार्थिनां शिखरिणां गणाः शेरते ।
इतोऽपि वडवानलः सह समस्तसंवर्तकै-
रहो विततमूर्जितं भारसहं च सिन्धोर्वपुः ॥ ७७॥
இதஹ ஸ்வபிதி கேஶவஹ குலம் இதஸ்ததீயத்விஷாம்
இதஶ்ச ஶரணார்தினாம் ஶிகரிணாம் கணாஹா ஶேரதே |
இதோஅபி படவானலஹ ஸஹ ஸமஸ்தஸம்வர்தகைரு
அஹோ விததம் ஊர்ஜிதம் பாரஸஹம்ச ஸின்தோர்வபுஹு –77
கடலிடத்தில் ஓர் பால் கரியமால் வாழ்வார்
ஆடலரக்கர் ஓர் பால் அமர்வார் — திடமுடைய
மாமலைகள் ஓர்பால் வடவானலமொரு பால்
தாமிருக்கும் மேன்மை பெரிதாம் –77
77. To one side lies Vishnu. Elsewhere, the clan of his foes (the demons) lives. In another part rest the group of mountains seeking refuge. In yet another side, the marine fire resides along with all the apocalyptic clouds. Oh, how vast, mighty and capable is the expanse of the ocean.
ஒரு புறத்தில் விஷ்ணு; மறுபுறத்தில் கடலில் ஒளிந்திருக்கும் அரக்கர்கள்; இன்னொரு புறத்தில் கடலில் தஞ் சம் புகுந்த மலைகள், இன்னொரு புறமோ உலகினை அழிக்க காள மே கத்துடன் காத்து நிற்கும் வட முகாக்கினி இந்தக் கடல்தான் எவ்வளவு பெரியது! எவ்வளவு சக்தி வாய்ந்தது !
xxxxxxxxxxxxxxxxxxxxxxx
तृष्णां छिन्धि भज क्षमां जहि मदं पापे रतिं मा कृथाः
கீர்திம் பாலய து:கிதே குரு தயாம் ஏதத்ஸதாம் சேஷ்டிதம் || 1.78||
ஆசையகற்றி அரும்பொறை மேற்கொண்டு
மோச மதத்தை முறுக்கியழித்– தேசுகின்ற
து ற்செய்கையின் மனத்தை த் தோயா தடக்கி மெய்யே
பற்பலர்க்கும் பேசிப் பணிவுடனே சற் சனங்கள்
போம் வழியிற் சென்று புலவர் ப் பணிந் தெளியோ ர்
ஆம்பலர்க்கும் நன்மை செயற் காதரித்து தாம் பகைமை
பூண்டோர்க்கும் நீதி புரிந் தறிவால் மாண்டோர்க்
கடக்கம் செலுத்தி அரும்புகழ்க்கு பங்கத்
தொடக்க மிலாத துகள் தீர் நடக்கையுடன்
வாழ்ந்து துயரப் படுவோர்க்கன்பு வழங்குவதே
ஆழ்ந்தறிவின் மேலோர்க் கழகு –78
78. Check (your) desire, practice patience, give up pride, and do not take pleasure in sinful deeds. Speak the truth, follow the path of good people, and serve the learned people. Respect those who deserve respect, appease enemies, and conceal your merits. Protect (your) good reputation and show mercy to those in sorrow. This is the definition of good people.
உங்கள் ஆசையைக் கட்டுப்படுத்துங்கள் கர்வத்தினை விடுங்கள் ;பாவ காரியங்களில் இன்பத்தினை நாடாதீர்கள்;உண்மையே பேசுங்கள் நல்லோரைப் பின்பற்றுங்கள்;கற்றோருக்கு சேவை செய்யுங்கள் மரியாதை கொடுக்க வேண்டியவர்களை மதித்து நடங்கள் உங்கள் பெருமைகளை தம்பட்டம் அடிக்காதீர்கள் துக்கத்தில் உழல்வோருக்கு உதவுங்கள் எதிரிகளுக்கும் தயவு காட்டுங்கள் ;இதுவே நல்லவரின் இலக்கணம் – 78
xxxxxxxxxxxxxxx
मनसि वचसि काये पुण्यपीयूषपूर्णाः
त्रिभुवनमुपकारश्रेणिभिः प्रीणयन्तः ।
परगुणपरमाणून् पर्वतीकृत्य नित्यं
निजहृदि विकसन्तः सन्ति सन्तः कियन्तः 79
மனஸி வசஸி காயே புண்ய பீயூஷபூர்ணாஸ்
த்ரிபுவனம் உபகாரஶ்ரேணிபிஹி ப்ரீணயன்தஹ |
பரகுணபரமாணூன்பர்வதீக்ருத்ய நித்யம்
நிஜஹ்ருதி விகஸந்தஹ ஸந்தி ஸந்தஹ கியந்தஹ—79
மனமாதி மூன்றால் மருவு நற்செய்கை
தினமாற்றல் என்கின்ற தெய்வ க் – கன மருந்தாற்
பூரணரா யார்ர்க்கு மன்பு பூண்டுதவி செய்வதற்குக்
காரணராய் மற்றவர் பாற் காணுகின்ற — ஏர ணுவா ம்
சற்குண மேனுமதைத் தாமலை போலே மதித்து
நிற்கு மனங்கொண்ட நிமல – சற்குணர்கள்
இவ்வுலகில் எங்கும் இருப்போர் சிலராவார்
தெய்வ கதியா மிதனைத் தேர்– 79
79. There are a few good people, filled with the nectar of purity in thought, word and action, pleasing the three worlds with a series of beneficial acts. They make a mountain of the tiniest virtues of others and rejoice in their heart.
சொல்லிலும் செயலிலும், சிந்தனையிலும் தூய்மை உடைய சிலர் இருக்கின்றனர்; நல்ல செயல்களினால் முருவுளக்கங்களையும் அவர்கள் திருப்திப்படுத்துகிறார்கள் மற்றவர்களிடத்தில் கடுகளவு நல்ல குணம் இருந்தாலும் அதை மலை போலக் காட்டி மகிழ்வார்கள்- 79
–subham–
Tags- பர்த்ருஹரி , நீதிசதகம் , பகுதி 24, ஸ்லோகம் 77,78, 79, Bhartruhari, Nitisataka, part 24, slokas 77,78,79 Badavagni
Part 3 from Asiatic Mythology; the book is full of anti- Hindu propaganda of Bishop Caldwell gang. It shows Tamils worshipping ghost in Tirunelveli and women are forced to die in husbands’ funeral pyre etc. Bishop Caldwell wrote in letters to England about Tamil Naadaar community worshipping ghosts in Tinnelvelly (Thiru Nel Veli)..
Like British robbers and plunderers took all the important treasures from around the world. French robbers stored most of them in Paris Louvre and Musee Guimet museums. India must get them back.
See more pictures attached below:-
PILLAYAR/ GANESH
BHADRAKALI
INDRA ON AIRAVATA
NATARAJA/ SIVA DANCING
VENU GOPALA / KRISHNA WITH VENU/ FLUTE
SKANDA / KARTIKEYA
SIVA WITH PATANJALI AND VYAGRAPADA
–subham—
TO BE CONTINUED………………………………………….
part 3, rare pictures, asiatic mythology, MUSEE GUIMET
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 8
கோவில் எண் 7 – வைக்கம் மஹாதேவன் கோவில்
வைக்கம் சிவன் கோவில் ஆன்மீக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் புகழ்பெற்ற சிவன் கோவில். 18-1-1937-ல் மஹாத்மா காந்தி விஜயம் செய்த கோவில். திருவாங்க்கூர் மஹாராஜாவும் மஹாராணியும் இந்து மதத்தின் அங்கமான ஹரிஜனங்களும் கோவிலுக்குள் வரலாம் என்ற புரட்சிகர பிரகடனத்தை வெளியிட்டு இந்துமதத்தைக் காப்பாற்ற உதவியது வைக்கம் சத்தியாகிரகம் .
வைக்கம் சிவன் கோவில் எங்கே இருக்கிறது?
எர்னாகுளத்திலிருந்து 33 கி.மீ ; கோட்டயத்திலிருந்து 40 கி.மீ. தூரத்தில் வைக்கம் இருக்கிறது. .
வைக்கத்தின் சிறப்புகள்
வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவர் ஸ்தாபித்த லிங்கம் இங்கே இருக்கிறது; வியாக்ரபாத புரம் என்ற ஊர்ப்பெயர் மருவி வைக்கம் ஆக சுருங்கி விட்டது
வ்யாக்ர என்ற ஸம்ஸ்க்ருத்சச் சொல்= புலி; பாத = கால்; புலிக்கால் முனிவர் = வியாக்ரபாதர்
கரண் என்ற அசுரன் சிவ பெருமானை வேண்டி 3 லிங்கங்களைப் பெற்று 3 இடங்களில் கொடுத்தான். அதில் வியாக்கிரபாதர் வாங்கிய ஒரு லிங்கம் போக, மீதி இரண்டை எட்டுமானூர், கடுத்துருத்தி என்ற இடங்களில் பிரதிஷ்டை செய்ய உதவினான். மூன்று மஹா தேவர்களும் பக்தர்களை ஆகர்ஷித்த வண்ணம் இருக்கின்றனர்.
வைக்கத்து மகா தேவனை மக்கள் வைக்கத்தப்பன் என்றே அழைப்பர். மலையாளிகளுக்கு குருவாயூரப்பன், ஐயப்பன் என்ற அப்பன் பெயர்களும் நெய்யப்பம் என்ற அப்பம் பெயர்களும் மிகவும் பிடிக்கும்
தங்க த்வஜஸ்தம்பம் , தங்க கோபுரம்
கோள வடிவில் அமைந்த இந்தக் கோவிலில் கூம்பு வடிவ தங்க கோபுரம் இருப்பதாலும் தங்கத் தகடு போர்த்திய 317 அடி த்வஜ ஸ்தம்பம் இருப்பதாலும் தொலை தூரத்திலிருந்து தரிசனம் கிடைக்கும்
1000 ஆண்டு வரலாறு
இந்தக் கோவில் பற்றிய வரலாறு குறைந்தது 1000 ஆண்டுகளுக்குக் கிடைக்கிறது . கோவிலின் அமைப்பு ஆறாம் நூற்றா ண்டு வரை பின்னுக்கு இழுத்துச் செல்கிறது.
வைக்கத்து அஷ்டமியும் அன்னதானமும்
இந்தக் கோவிலிலின் தனிச் சிறப்பு அன்னதானம் ஆகும். ஆயிரக்கணக்கானோருக்கு நாள் தோறும் அன்னம் வழங்குவதால் இந்தக் கோவிலுக்கு மக்கள் நெல்லையும் அரிசியையும் வாரி வழங்கினார்கள்; 2 மாடி அன்னதானக் கூட்டத்தில் நூறு பந்திகள் வரை நடக்கும்
ஆட்சிகள் மாற மாற , கோவில்கள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதால் நிலைமை மாறிக்கொண்டே வருகிறது.
ஊட்டுப்புரா என்னும் DINING HALL டைனிங் ஹால், ஆயிரம் அடி நீளம் கொண்டது. மனம் போல மாங்கல்யம்; மக்களின் தாராள மனத்தைக் காட்டும் அன்னதானக் கூடம்!!
மஹாராஜா பிறந்த தினம் மற்றும் பண்டிகை நாட்களில் பலாப்பழ, தேங்காய்ப் பால் உள்ள உணவு வகைகளும் கிடைக்கும்
வைக்கத்து அஷ்டமி என்ற பண்டிகை பெயரைக் கேட்டிராத மலையாளி இந்து இருக்கமுடியாது. விருச்சிக (கார்த்திகை) மாத அஷ்டமியில் பெரிய விழா நடக்கும். 13 நாள் உற்சவத்தில் 12 ஆவது நாள் விழா அஷ்டமி திதியில் வரும்.. கேரளம் முழுதும் வைக்கத்து அஷ்டமியைக் கொண்டாடுகிறார்கள் 13 நாட்களும் சுவாமி புறப்பாடு, யானைகள் பவனி, அபிஷேக ஆராதனைகள் நடக்கும்.
அஷ்டமி தினத்தில்தான் வியாக்கிரபாதர் என்னும் புலிக்கால் முனிவருக்கு பார்வதியும் பரம சிவனும் தரிசனம் தந்தனர் ; காலையில் இது முடிந்த பின்னர் பெரிய விருந்து நடக்கும் இரவில் உதயண புர த்திலிருந்து ஊர்வலம் வரும் சிவன் மகன், அசுரர்களுடன் யுத்தம் செய்து வெற்றி கண்டு வந்து வைக்கத்தப்பனை சந்திக்கும் நிகழ்ச்சி இது. அருகாமைக் கோவில்களில் உள்ள தேவ, தேவியரும் யானைகள் மீது பவனி வருவார்கள்; மேளதாளங்களும் தீவட்டி ஊர்வலங்களும் காணக் கண் கோடி வேண்டும்.
நேரில் கண்ட ஒருவர் எழுதிய தகவல் இதோ :-
உதயண புரத்திலிருந்து வரும் இறைவன் வந்து சேர 3 மணி நேரம் ஆகும் இரு புறமும் 300 தீவட்டிகள்/ தீப்பந்தங்கள் சூழ ஊர்வலம் இரவு 1-30 க்கு வைக்கத்தை அடையும். பிரபல வித்துவான்களான காருக்குறிச்சி அருணாசலம், ராஜரத்தினம் பிள்ளை, வீராசாமி பிள்ளை ஆகியோரின் நாதஸ்வர இசையில் மதி மயங்கி பக்தர்கள் நிற்பார்கள். முத்துசாமி தீட்சிதரின் ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே கிருதியைக் கேட்க பக்தர்கள் ஆவலோடு காத்திருப்பார்கள்.. சிவனைச் சந்திக்கும்போது திருவடி சரணம் ம் தேவாதி தேவ என்ற பாட்டு வரும் ; பக்தர்கள் ஆனந்தக் கண்ணீர் விடுவதை எவரும் பார்க்கலாம் ; அப்பன் கடவுளும் மகன் கடவுளும் கோவிலை வலம் வருவார்கள் பின்னர் பிரியாவிடை நிகழும்; மகன் திரும்பிச் செல்லுகையில் நீலாம்பரி ராகம் பாடி சோகத்தை வெளிக்காட்டுவர்.
மறு நாள் ஆராட்டு உற்சவத்துக்கும் உதயணபுர இறைவன் வந்தவுடன் கூடி / ஒன்று கூடி/ பூஜை நடக்கும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் அன்னப் ராசனம், துலாபாரம் காணிக்கைகளை வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.
வைக்கத்து அஷ்டமியில் இறைவன் உண்ணாவிரதம் இருப்பார் ; பக்தர்கள் வயிறு புடைக்க தின்பார்கள்; அன்று கிடைக்கும் அறுசுவை உணவை எவரும் மறவார் .
சந்த்யா வேளை
அஷ்டமி உற்சவத்துக்கு முன்னால், 40 நாட்களுக்கு சந்த்யா வேளை என்ற சடங்கு நடக்கும். வேத பண்டிதர்கள் வேத பாராயணம் செய்வார்கள்; சீவேலி / ஸ்ரீ பலி பவனி நடக்கும். மதியத்தில் பெரும் விருந்து; இரவில் லட்ச தீபம் ஏற்றப்படும்
மாணிக்க வாசகர்
நால்வரில் ஒருவரான , திருவாசகம் தந்தருளிய மாணிக்கவாசகரைக் குதிரை வாங்குவதற்காக பாண்டிய மன்னன் அனுப்பியதும் பின்னர் நடந்த நிகழ்ச்சிகளும் எல்லாத் தமிழர்களும் அறிந்ததே அவர் மேலைக் கடற்கரைக்கு வந்து குதிரை வாங்கினார் என்ற ஐதீகம் உண்டு; அந்தக் காலத்தில் வைக்கத்தை ஒட்டிக் கடல் இருந்தது. இப்போது பின்னுக்குப் போய்விட்டது. அராபிய வணிகர்கள் குதிரைகளைக் கொண்டு வந்து குவித்த ஊர் இது..
சாப்பிட்ட இலையில், சில பக்தர்கள் சிலர் தங்கள் வேண்டுதல் நிறைவேற்றும் வகையில் உருண்டு நேர்த்திக்கடனும் செலுத்துவர்.
மாதந்தோறும் அஷ்டமி வரும். நாள்தான் / திதிதான் பைரவருக்கு விசேஷம் . ஆனாலும் கார்த்திகை மாத அஷ்டமி சிறப்பு வாய்ந்தது. இதை மகாதேவாஷ்டமி என்பார்கள். பைரவாஷ்டமி, வைக்கத்து அஷ்டமி என்றெல்லாம் போற்றுகிறார்கள்.
பரசுராமர்
கேரளத்தில் பரசுராமர் சம்பந்தப்படாத கோவிலோ ஊரோ இராது. ஏனெனில் கேரளத்தில் கடல் பின்னே செல்லச் செல்ல மக்களைக் குடியமர்த்தி புதிய பூமியை உருவாக்கினார். பிராமணர்களை அழைத்துச் சென்று குடியமர்த்தினார். இதனால் கோவில்களும் வழிப்பாடுகளும் உருவாகின .
3 வித தரிசனம்
வைக்கத்தில் சிவ பெருமான் காலையில் தட்சிணாமூர்த்தியாகவும் உச்சி வேளையில் அர்ஜுனனுக்கு அருளிய கிராட (வேடர்) மூர்த்தியாகவும் இரவில் பார்வதியுடன் அமர்ந்து ஆனந்தமாக தரிசனம் தருவதாக்வு ம் ஒரு நம்பிக்கையும் இருக்கிறது .ஞானத்தை நாடுவோர் காலையிலும், வெற்றியை வேண்டுவோர் உச்சி வேளையிலும் ஆனந்த வாழ்வினை வேண்டுவோர் இரவிலும் தரிசனம் செய்யலாம் .
வில்வமங்கள் சாமியார்
கேரளத்தில் பிரபலமான வில்வ மங்கள சாமிகள் ஒரு முறை வைக்கம் மூலஸ்தானத்தில் சிவனைக் காணாததால் தேடிவந்த போது , அவர் பக்தர்களின் பந்தியில் , உணவுக்கூடத்தில் இருந்ததாகவும் பக்தர்கள் சொல்லுவார்கள்
சாம்பல் பிரசாதம் அன்னதானப் பிரபு
சிவ பெருமானே நேரில் வந்து பக்தர்களுக்குச் சாப்பாடு போடுவதால் அவரை அன்னதானப்பிரபு என்று இங்கே அழைக்கின்றனர் ; அன்ன தானம் செய்யப் பயன்படுத்திய அடுப்பின் சாம்பல்தான் இங்கு விபூதி பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.
நம்பூதிரி & பாம்பு விஷம்
வைக்கத்தில் ஒரு காலத்தில் 108 நம்பூதிரிகள் கோவிலை நிர்வகித்து வந்ததாகவும் ஒரு முறை உணவில் விஷப்பாப்பாம்பு விழுந்தது தெரியாமல் சாப்பாட்டினை உண்டத்தில் பல குடும்பங்கள் அழிந்தததாகவும் சொல்லுவர்.
எச்சில் இலைகளில் உருளும் பக்தர்கள்
மகாதேவனே பரிமாறிய சாப்பாட்டினை உண்ட பக்தர்களின் எச்சில் இலைகளில் உருண்டு புரள்வதால் செய்த பாபங்களை அனைத்தும் போய்விடும் என்ற நம்பிக்கை இருப்பதால் பல பக்தர்கள் இந்தச் சடங்கினையும் செய்வார்கள் ; இது இப்போது பைரவர் வழிபாடு நடைபெறும் கோவில்களுக்கும் பரவிவிட்டது . தங்கள் வேண்டுதல் நிறைவேற்றும் வகையில், சாப்பிட்ட இலையில் உருண்டு நேர்த்திக்கடனும் செலுத்துவர்.
வன துர்கா
கோவிலின் தென்புறத்தில் பஞ்சிக்கல் வானதுர்கா சிலை உளது. ஒரு காலத்தில் யக்ஷியாக உலவி மக்களை அச்சுறுத்தி வந்தவளை விக்னேஸ்வரர் இப்படி வனதுர்காவாக மாற்றினாராம்.
2 தந்திரிகள்
இங்கு இரண்டு தந்திரிகள் இருக்கின்றனர் ஒவொன்றுக்கும் பின்னால் ஒரு கதை இருக்கிறது
xxxx
காந்திஜி சென்ற (Year 1937) கோவில்கள்
கேரளா மாநிலத்தில் நான் சென்ற கோவில்களை போல வேறு எங்கும் நான் சென்றதில்லை என்று 25,000பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜி சொன்னார். அவருடன் சென்ற மஹாதேவ் தேசாய் ஒவ்வொரு கூட்டத்திலும் காந்திஜி பேசியதை திருவாங்க்கூர் இதிகாசம் என்ற ஆங்கில நூலில் எழுதியுள்ளார் .
The Epic of Travancore, Mahadev Desai, Navajivan Karyalaya, Ahmedabad, 1937
கேரளத்தில் காந்திஜி சென்ற கோவில்களின் பட்டியல் (தற்போது கன்யாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டில் சேர்க்கப்பட்டுவிட்டது. முன்னர் அது கேரத்தில் இருந்தது..
அனந்த பத்மநாப சுவாமி கோவில் , திருவனந்தபுரம் ;நெய்யாற்றின்கரா கிருஷ்ண சுவாமி கோவில்;
திருவட்டாறு கோவில்; பத்மநாபபுரம் கோவில்; நாகர்கோவில் கோவில்; கன்யாகுமரி கோவில்,; சுசீந்திரம் கோவில்; ஜனார்த்தனர் கோவில், வற்கலா ; சிவகிரி நாராயண குரு மடம் ;அனந்த வாலீ ஸ்வரம் கோவில்; ஸ்ரீ ராமாவிலாசம் பஜனை மடம் ; ஹரிபாட் சுப்ரமண்ய சுவாமி கோவில்; அம்பலப்புழா கிருஷ்ணன் கோவில்; தகழி கோவில்; வைக்கம் கோவில்; ஏ த்தமானூர் கோவில்; குமாரநல்லூர் கோவில்; திருவார்ப்பு
இந்த 24 ஊர்களிலும் காந்திஜி சொற்பொழிவு ஆற்றினார் ஒவ்வொரு இடத்திலும் அவரது சொற்பொழிவுக்கு பெரிய கூட்டம் வந்தது ; அருகாமையிலுள்ள கிராமம்ங்களில் இருந்து மக்கள் நடந்தும் , கட்டை வண்டிகளிலும் வந்தனர்.
–subham —
கேரள மாநில கோவில்கள், Part 8, வைக்கம், மஹாதேவர் கோவில், , வைக்கத்து அஷ்டமி, அன்னதானம் , காந்திஜி விஜயம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
கொங்குமண்டல சதகம் பாடல் 57
சோழனை விரட்டிய வாலிப வீரன் மன்றாடி!
ச.நாகராஜன்
கொங்கு மண்டலம் சில காலம் சோழர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது.
ஆனால் சிற்றின்ப மோகம் கொண்டும் ஒற்றுமைக் குறைவாலும் சோழர்கள் வலிமை குன்றினர்.
அந்தக் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டிய அரசர்களில் ஜடாவர்ம சுந்தர பாண்டியன் ராஜாதிராஜன் ஆனான். ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி.1251இல் பட்டமேறினான்.
சோழ வம்ச மலைக்குத் தான் ஒரு இடியேறு என்ற பெயரையும் பெற்றான். சோழ நாடு, கங்க நாடு ஆகியவற்றையும் அவன் கைப்பற்றினான்.
காரையூர் பயற குலத்தவனான சர்க்கரை மரபைச் சேர்ந்த ஒருவன் பாண்டியனைக் கண்டான். அவனது முன்னோர்களின் வீரதீரச் செயல்களை அறிந்த பாண்டியன் அவனைத் தன்னுடன் உடனிலை வீரனாக வைத்துக் கொண்டான்.
சில நாட்களிலேயே அவனது ஆண்மை, எதிரியை வயப்படுத்தும் தன்மை, வெருட்டல் முதலிய அரசியல் தந்திரங்களை அவன் கையாண்ட விதம், சொற் சாதுரியம் ஆகியவற்றை அவன் அறிந்து கொண்டான். உடனே அவனுக்கு சேனாதிபதி பதவியை வழங்கினான்.
அப்போது சோழ நாட்டை ஆண்ட சோழ மன்னன் படையுடன் வந்து கொங்கு நாட்டைச் சூறையாடினான். இதனை அறிந்த பாண்டியன் சோழப் படையை விரட்டியடிக்கும்படி அவனை ஏவினான்.
வாலிப வீரன் படையுடன் சோழனிடம் சென்றான். படையை நிறுத்தி விட்டு தைரியமுடன் சோழனிடம் தனியாகச் சென்றான். தான் என்பதை அறிவித்தான்.
பின்னர் கூறினான் :”ஐயா! மிக்க அன்பாக முன்னோர்கள் காத்து வந்த இந்த கொங்கு நாட்டைச் சூறையாடினீர்கள். இது தர்மம் ஆகாது. கருணை கூர்ந்து கொள்ளைப் படையைத் திரும்பிப் போகுமாறு ஆணையிடுங்கள்” என்றான்.
இதைக் கேட்ட சோழன் அவன் மீது கோபம் கொண்டான். கொள்ளைப் படையைத் திருப்பி அனுப்ப அவன் இசையவில்லை.
வாலிப வீரன் சோழனை நோக்கி, “சோழ வேந்தர்களின் கீழ் எங்கள் முன்னோர்கள் சேனாதிபதிகளாகவும் நாட்டதிகாரிகளாகவும். படைவீரர்களாகவும் இருந்து வந்துள்ளனர். இப்போதோ சோழநாடு கொடுங்கோலாட்சி செய்யும் நாடாக ஆகி விட்டது. கொள்ளையடிக்கும் நாடாகவும் மாறி விட்டது. இனிப் பொறுக்க முடியாது. தென்னவனின் படை இதோ வருகிறது” என்று கூறினான்.
ஆனால் சோழனோ எதையும் கேட்கவில்லை. உடனே அந்த வீரன் கடும்போரை மேற்கொண்டு சோழனை விரட்டி அடித்தான். சோழனின் படை அலங்கோலப்பட்டு சிதறி ஓடியது.
இதை ஒரு பழம்பாடல் இப்படிக் கூறுகிறது:
ஆறெல்லாஞ் செந்நீ ரவனியெஅலாம் பல்பிணங்கள்
தூறெல்லாஞ் சோழன் கரிகுஞ்சி – வீறுபெறு
கன்னிக்கோ னேவலினாற் காரைக்கோன் பின்றொடரப்
பொன்னிக்கோ னோடும் பொழுது
இந்த வெற்றியைப் பெற்றுத் தந்த வீரனை பாண்டியன் பாராட்டி பல விருதுகளைக் கொடுத்துச் சிறப்பித்தான். “நீ ஒரு நல்ல சேனாதிபதி” என்று வாழ்த்தினான்.
இந்த வார்த்தையான ‘நல்ல சேனாதிபதி’ என்ற பெயரை நாளும் அடுத்தடுத்து தமது வமிசாவளியினருக்கு அவர்கள் இட்டு வர ஆரம்பித்தனர். அது இன்றும் தொடர்கிறது.
இந்த வீரனைப் புகழ்ந்து கொங்குமண்டல சதகம் இப்படிக் கூறுகிறது:
பெருமை யுறுகொங்கிற் சென்னி யிடர்செயப் பெருஞ்செழியன்
அருமை யுளந்தெரிந் தன்னோன் முதுகிட் டகலவிசை
வரும முறுகாரை மன்றாடி யுங்கொங்கு மண்டலமே
– பாடல் 57
பாடலின் பொருள் : வளமை மிகுந்த கொங்கு மண்டலத்தில் சோழன் பல தீங்குகளை இழைக்க, அதைப் பார்த்த பாண்டியனின் கருத்தை அறிந்து சோழ அரசன் புறமுதுகிட்டு ஓடும்படி செய்து ஓட்டிய காரையூர் மன்றாடி என்பானும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவனேயாம்.
இந்தப் பாடலில் நான்காம் அடியில் வரும் சொல் மன்றாடி என உள்ளது.
இந்தப் பெயரைக் கொண்டு தற்காலத்திலும் பட்டக்காரர்கள் என்ற தலைவர்கள் இருந்து வருகின்றனர். இவர்கள் பெயருக்கும் பின்னால் மன்றாடியார் என்று வருவது வழக்கம்.
இந்தச் சொல்லைக் கொண்ட பல சாஸனங்கள் உள்ளன.
“ஸ்வஸ்தி ஶ்ரீ மதுரை கொண்ட கோபர கேசர்பன்மர்க்கு யாண்டு பதினைஞ்சாவது கச்சப்பெட்டு பெரிய திருக்கற்றளி மஹாதேவர்க்கு சண்டபராக்கிரம மன்றாடியேன் எழுத்து;” என்று ஆரம்பிக்கிறது ஒரு சாஸனம். (S.I.I.Vol I No 82)
இது காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் பிள்ளையார் மண்டபத்தில் உள்ளது.
அடுத்து சாஸனம் No 83 – ராஜ ஸிம்மவர்மேசுவர சிரேணியுள்ள சாசனமும் இது போலவே உள்ளது.
சோழநாட்டில் திருவிடைமருதூர் சாசனம் ஒன்று (S.I.I.Vol III Part I) இதே போல மன்றாடி என்ற சொல்லைக் குறிப்பிடுகிறது.
இன்னும் திருவாலவுடையார் திருவிளையாடல் புராணத்தில் வரும் 11ஆம் பாடலும் மன்றாடி என்ற சொல்லைக் கொண்டிருக்கிறது.
இந்த மன்றாடியார் பற்றி நல்ல ஒரு ஆய்வை மேற்கொண்டால் பழைய வரலாறும் அவர் தம் பெருமையும் நன்கு விளங்கும்.
குளத்தில் உள்ள தாமரை மலர்களை சூரியன் தானாகவே மலரச் செய்கிறான் ;
சந்திரனும் தன் ஒளியால் அல்லி மலர்களை தானாகவே மலரச் செய்கிறான் ;
மேகங்களும் யாரும் கேட்காமலே மழையைக் கொட்டுகிறது. அதே போல நல்லவர்கள், மற்றவர்களின் நலனுக்குத் தாமாகவே உதவுகின்றனர்
74. The sun causes the pool of lotuses to bloom. The moon makes the host of lilies blossom. Even though unasked, the cloud gives water. Good people take efforts towards others’ welfare voluntarily.
ஆரும் வேண்டாமலே ஆதித்தன் தாமரையை
நீருள் மலர்த்து நிலாவுந்தன் –ஆரொளியால்
அல்லி மலரை அலர்த்தும் விண் நீர் வழங்கும்
நல்லோர்க்குவமை இவை நன்கு– 74
xxxx
SLOKA 75
एते सत्पुरुषाः परार्थघटकाः स्वार्थं परित्यज्य ये
सामान्यास्तु परार्थमुद्यमभृतः स्वार्थाविरोधेन ये ।
तेऽमी मानवराक्षसाः परहितं स्वार्थाय विघ्नन्ति ये
ये विघ्नन्ति निरर्थकं परहितं ते के न जानीमहे ॥ 75॥
தேஅ மீ மானவ ஷராக்ஷஸாஹா பரஹிதம் ஸ்வார்தாய விக்னந்தி யே
யே விக்னந்தி நிரர்தகம் பரஹிதம் தே கே ந ஜானீமஹே —.75
தன்னுடைய சொந்த நலன்களையும் தியாகம் செய்து பிறர்க்கு உதவுவோர் உயர்ந்தோர்;
தன்னுடைய சொந்த நலன்கள் பாதிக்காதபடி பிறர்க்கு உதவுவோர்சாதாரண மக்கள் ;
தன்னுடைய சொந்த நலன்களுக்காக பிறர் நலன்களைக் கெடுப்போர் கீழ்த்தர மக்கள் ;
எந்தவிதக் காரணமும் இல்லாமல் மற்றவர்களைக் கெடுப்பவர்களை என்ன பெயர் சொல்லி அழைப்பது என்றே தெரியவில்லை
75. Those who enable the welfare of others, giving up their own good, are noble people. Common people are those who take up enterprises that help others without conflicting with their own good. Human ogres are those who ruin public good for their own benefit. We know not what to call those who ruin others’ welfare for no purpose.
(பால் பொங்குதலைக் கண்ட பர்த்ருஹரி நல்ல நண்பர்களுக்கு அந்த நிகழ்ச்சியை ஒப்பிட்டுக் காட்டுகிறார்
முதலில் பால் , தன் நல்ல குணங்கள் அனைத்தையும் தண்ணீருக்குக் கொடுத்துவிட்டது
பால் பொங்குவதை பார்த்தவுடன் தன்னுடைய தண்ணீரை எல்லாம் கொடுத்து ஆவியாகிப் போகிறது; இதற்கு இந்த தீ தான் காரணம் என்ற கோபத்தால் பொங்கி நெருப்பை அணைக்கிறது உடனே பொங்கும் பாலில் நீரை விட்டால் கோபம் அடங்கி விடுகிறது; இப்படித்தான் நல்ல நண்பர்கள் ஒருவருக்கொருவர் உதவுவார்கள்
76. At first, all its qualities were given by milk to the water in itself. Seeing the boiling (suffering) of milk, water sacrificed itself to fire (evaporated). Seeing its friend’s difficulty, the milk rose to immolate itself in fire, but when united with water it cooled down. Such (always helping each other in distress) is the friendship of good people.
தன்னிடத்திலே கலந்த தண்ணீர்க்குத் தீம் பால் தன்
இன் குணங்களெல்லாம் ஈந்ததனால் — அந்நீரும்
வெப்பத்தால் பால்படும் மா வேதனையைக் கண்டழ லில்
ஒப்பி விழுந்தே ஒடுங்குமால் – இப்புதுமை கண்ட
பால் தானுந்தன் காதலுறு நண்பனுடன்
மண்டழ லில் வீழுங்கால் மற்று நீர் அண்டிவந்து
சேருவதால் வெங்கோபம் தீரும் இதுபோலாம்
சீரியர் செய் நட்பின் திறம்– 76
—subham —
Tags- Nitisataka, Bhartruhari, part 23, slokas 74, 75, 76