ஹிட்லர் அழைத்த விஸ்வநாத சாஸ்திரி! (Post No.12,795)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,795

Date uploaded in London –  –  4 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்!

அத்தியாயம் 18

ஹிட்லர் அழைத்த விஸ்வநாத சாஸ்திரி!

ச.நாகராஜன்

பகுதி 21இன் தொடர்ச்சி


தண்டிபட்லா விஸ்வநாத சாஸ்திரி எப்போதுமே எதையும் விஞ்ஞான ரீதியாகச் சிந்தித்துக் கொண்டிருப்பார். உலக சிந்தனையில் அவர் ஆழ்ந்திருப்பதே கிடையாது. தன்னைப் பார்க்க வருவோரிடம் இந்த ரீதியிலேயே அவர் பேசிக் கொண்டிருப்பது வழக்கம். ஒரு நாள் அவர் விசாகப்பட்டினம் அருகே உள்ள கோட்டவலசா என்ற கிராமத்திற்குச் சென்றிருந்தார். பயணத்தின் போது ஹிட்லர் அனுப்பிய பிரதிநிதிகள் அவரைச் சந்தித்தனர். முதலில் விசாகப்பட்டினம் சென்ற அவர் அங்கிருந்து ஹிட்லரின் பிரதிநிதிகளுடன் கல்கத்தா சென்றார்.

அவருடன் நயமாகப் பேசிய பிரதிநிதிகள் அவரைத் தங்களுடன் ஜெர்மனிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது தான் இரண்டாம் உலக மகா யுத்தம் தொடங்கி இருந்தது.

யஜுர் வேதத்திற்கு நான்கு அம்சங்கள் உண்டு. இவற்றை நான்கு விதமாகப் பொருள் கொள்ளலாம். இந்த மந்திரங்களில் வல்லவர் விஸ்வநாத சாஸ்திரி. இவற்றை விஞ்ஞான ரீதியில் அர்த்தம் காண்பதில் அவர் நிபுணர்.

விண்ணில் ஏவும் கணைகளுக்கான மந்திரங்களுக்கு உரிய அர்த்தத்தைச் சொல்லுமாறு அவர் வேண்டப்பட்டார். அதை வைத்தே முதல் ராக்கட்டை ஜெர்மானியர் உருவாக்கினர். 

வெடி குண்டுகளை எப்படி பத்திரமாக ஓரிடத்தில் சேமித்து வைப்பது என்பது நாஜி வீரர்களுக்குத் தெரியவில்லை.

அதற்கான தீர்வை யஜுர்வேதத்தில் கண்டுபிடித்து அதை எடுத்து விஸ்வநாத சாஸ்திரி கூறினார்.

 பட்டோஜி தீக்ஷிதர் எழுதிய இலக்கண நூலான சித்தாந்த கௌமுதி பற்றி அவர் எழுதிய ஒரே நூல் மட்டும் இன்று கிடைக்கிறது. இதற்கு நாகேசபட்டரின் சிறு விளக்கவுரை ஹைதராபாத் ஓரியண்டல் நூலகத்தில் இன்று உள்ளது.

இரண்டாம் உலக மகாயுத்தத்திற்குப் பின்னர் அவர் இந்தியா திரும்பவில்லை.

அவரது மனைவிக்கு மாதாந்திர தொகையாக ரூ 300ஐ ஜெர்மானிய அரசு வழங்கி வந்தது. பின்னர் மாதந்தோறும் 90ரூபாய் அவர் உயிருடன் இருக்கும் வரை வழங்கப்பட்டது. சாஸ்திரியின் மறைவுக்குப் பின்னர் இது பென்ஷன் தொகையாக அவருக்கு வழங்கப்பட்டு வந்திருக்கலாம்.

இந்தியா அவரை மறந்தே விட்டது!

இந்திரா காந்தி பிரதம மந்திரியாக இருந்த காலத்தில் ஜெர்மனியில் இருந்த இந்திய தூதரிடம் ஒரு இந்தியரின் படம் காண்பிக்கப்பட்டது.

அது யார் என்று தனக்குத் தெரியவில்லை என்று அவர் கூறினார்.

அப்போது தான் விஸ்வநாத சாஸ்திரி பற்றி அவருக்கு விளக்கப்பட்டது.

ஆர்வமும் ஊக்கமும் உடைய ஒருவர் இவரைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினால் ஜெர்மனியிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் இவரைப் பற்றிய பல உண்மை விவரங்களை நம்மால் அறிய முடியும்.

கூடவே வேதத்தில் புதைந்திருக்கும் விஞ்ஞான உண்மைகளையும் கூட, ஒருவேளை, கண்டறிய முடியும்!


***

Leave a comment

Leave a comment