வாழ்க்கையே வாழ்க்கையின் சாரம்! (Post No.12,803)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,803

Date uploaded in London –  –  6 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரு வரி சுபாஷிதங்கள்

வாழ்க்கையே வாழ்க்கையின் சாரம்!

ச.நாகராஜன்

1. சிஷ்யஸ்யோபகர்த்தா சத்பதஸ்ய ச தர்ஷக: |

ஒரு குரு சிஷயனுக்கு உதவுகிறார்; தகுந்த வழியைக் காண்பிக்கிறார்.

2. சித்தே வாசி க்ரியாயாச்ச சாதூநாமேகசித்ததா |

மனம், வாக்கு, செயல் ஆகியவற்றை ஒரு சாது ஒரே மாதிரியாகக் கொண்டிருப்பார்.

3. சின்னே மூலே நைவ பத்ரம் ந ஷாகா |

வேரை அறுத்து விட்டால் இலையும் இல்லை, கிளையும் இல்லை.

4. ஜடரம் கோ ந விபர்த்தீ கேவலம்!

யாருக்குத் தான் வயிறு இல்லை?

5. ஜனனீ ஜன்மபூமிஸ்ச ஸ்வர்காதபி கரியஸி |

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே (பாரதியார்)

6. ஜாமாதா தசமோ க்ரஹ: |

மருமகன் பத்தாவது கிரகம் தான்!

7. ஜிதக்ரோதேன சர்வம் ஹி ஜகதேதத்திஜீயதே |

யார் ஒருவன் கோபத்தைக் கட்டுப்படுத்துகிறானோ அவன் உலகையே ஜெயித்து விடுவான்.

8. ஜீவோ ஜீவஸ்ய ஜீவனம் |

வாழ்க்கையே வாழ்க்கையின் சாரம்.

9. ததா சதுர்பி: புருஷ: பரீக்ஷயதே ச் ருதேன, ஷீலேன, குலேன, கர்மணா |

ஒரு மனிதன் நான்கு விதங்களால் பரிக்ஷிக்கப்படுகிறான். அறிவு, ஒழுக்க நடத்தை, குலம், செயல் ஆகிய நான்கே அவை.

10. தப: சீமா முக்தி: |

தவத்தின் முடிவு முக்தியே.

11. தஸ்கரஸ்ய குதோ தர்ம: |

திருடனுக்கு ஏது தர்மம்?

12. தே புத்ரா யே பிதுர்பக்தா: |

தந்தையிடம் பக்தி செய்பவர்கள் (மரியாதையோடு நடப்பவர்கள்) மட்டுமே புத்திரர்கள்.

13. துராசாரோ ஹி புருஷோ லோகே பவதி நிந்தித: |

உலகில் துராசாரமான நடத்தைகளைக் கொண்டவன் நிந்திக்கப்படுவான்.

14. துர்லபம் பாரதே ஜன்ம மானுஷ்யம் தத்ர துர்லபம் |

பாரதத்தில் ஜன்மம் எடுப்பது அரிது; அதிலும் மானுடனாக ஜன்மம் எடுப்பது இன்னும் அரிது.

15.துஷ்டஜனம் தூரத: ப்ரண்மேத் |

துஷ்டர்களுக்கு தூரத்திலிருந்து வணக்கம் சொல்ல வேண்டும்.

16. தைவமேவ ஹி சாஹாய்யம் குருதே சத்வஷாலினாம் |

சத்வசாலிகளுக்கு விதியே துணை செய்கிறது.

17. தைவ துர்பலதாம் கதே த்ருணமபி ப்ராயேண வஞ்சாயதே |

விதி எதிர்த்து நிற்கும் போது புல் கூட இடியாகத் தோன்றும். (அல்லது புல் கூட வைரம் போலக் கடினமாகத் தோன்றும்)

18. தைவி விசித்ரா கதி: |

விதியின் வழிகள் விசித்திரமானவை.

19. த்ரவ்யேண சர்வே வஷா: |

செல்வத்தால் அனைத்தும் வசமாகும்.

20. தனமூலமிதம் ஜகத் |

இந்த உலகமே செல்வத்தை அடிப்படையாகக் கொண்டது.

21. தீர: சமயம் ப்ரதிக்ஷேத் |

தைரியசாலிகள் தகுந்த சமயத்தை எதிர்நோக்கி இருத்தல் வேண்டும்.

22. தைர்ய சர்வார்த்தசாதகம் |

தைரியமே அனைத்தும் அடைவதற்கான வழி.

23. ந ச க்ரோதசமோ ரிபு: |

கோபத்திற்குச் சமமான எதிரியே இல்லை.

24. ந ஞானேன வினா மோக்ஷம் |

ஞானமின்றி முக்தி அடைய முடியாது.

25. ந புத்ராத்பரமோ லாப: |

புத்திரனை விட அதிகமான செல்வம் ஒன்று இல்லை.

***

Leave a comment

Leave a comment