சிவப்பு எறும்பு சட்னிக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு!
புவனேஸ்வர்: ஒடிசாவின் பாரம்பரிய உணவான எறும்புச் சட்னிக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
ஒடிசாவில் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் வருடம் முழுவதும், சிவப்பு `வீவர்’ எறும்புகள் (Red Weaver Ants) ஏராளமாகக் காணப்படும். மலைப் பகுதியில் ‘கை’ என்ற ஒரு வகை நெசவு செவ்வெறும்பு காணப்படுகிறது. Oecophylla smaragdina எனும் இந்த எறும்பு வகை, தான் வாழும் மரத்தின் இலைகளைக் கொண்டு நெய்து ஒரு வீட்டை அமைக்கிறது.
இந்த எறும்பு சட்னி ஒடிசா மக்களால் அதிகம் விரும்பப்படக் காரணம், அதில் உள்ள சத்துகள். அதிக அளவு புரதம், கால்சியம், ஜிங்க் Zinc, வைட்டமின் B-12, இரும்புச் சத்து, மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரம்/செப்பு மற்றும் 18 வகையான அமினோ அமிலங்கள் (Amino acids) இதில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
அங்குள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் சிவப்பு எறும்புகளை அனைத்து இடங்களிலும் காண முடியும்.
மரங்களின் இலைகளில் கூடுகட்டி வாழும் இந்த எறும்புகளைப் பிடித்து சட்னி செய்து சாப்பிடுவது அம்மாநில மக்களின் வழக்கம்.
இந்த எறும்புச் சட்னிக்கு மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
இதன் மூலம் எறும்புச் சட்னியின் பயன்கள், சுவை குறித்து உலக மக்கள் அறிந்து கொள்வதற்கு மாநில அரசின் ஆதரவுடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஒடிசா அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (Press cutting)—subham—
Roja Malare Raajakumari – Veerathirumagn by P.B.Sreenivas, P.Susheela –
எல்லோருக்கும் தெரிந்த இந்தப் பாட்டு வீரத் திருமகன் திரைப்படத்தில் இடம்பெற்றது; இதே போல நிறைய பாட்டுக்கள் ரோஜா மலரைக் கொண்டாடியுள்ளன.
(இதன் விலை 15, 000 ரூபாய் ; உலகில் நீங்கள் சொல்லும் எந்த முகவரிக்கும் அனுப்பும் தொகை இது. )
பாரஸீக நாட்டில் பிறந்த ரோஜா செடி என்று உலகெங்கும் பரவிவிட்டது. நூற்றுக் கணக்கான புதிய ரகங்களும் வந்துவிட்டன!
ஏற்றுமதி நிறுவனங்கள் உலக ஏற்றுமதிப் பட்டியலைத் தயாரித்தன . அதில் 5025 ஏற்றுமதி பண்டங்கள் இருந்தன. அதில் ரோஜா மலர் 1058ஆவது இடத்தைப் பிடித்தது.
பணத்தின் மதிப்புப்படி பார்த்தால் நெதர்லாந்து என்னும் ஹாலந்து நாடுதான் ரோஜா ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது அடுத்த இடம் ஈக்வடார் என்னும் தென் அமெரிக்க நாடு; அதைத் தொடர்ந்து கென்யா, கொலம்பியா,எத்தியோப்பியா நிற்கின்றன
In 2021 Roses were the world’s 1058th most traded product (out of 5,025). In 2021, the top exporters of Roses were Netherlands ($1.12B), Ecuador ($700M), Kenya ($630M), Colombia ($410M), and Ethiopia ($167M)..
வோல்சா என்னும் நிறுவனம் எல்லா இந்தியப் பொருட்களின் ஏற்றுமதி (Volza) விவரங்களையும் சேகரிக்கிறது . இந்தியா ஏற்றுமதி செய்த ரோஜா மலரின் அளவு 363 000 கப்பல் ‘லோடு’ ஆகும்.
இந்திய ரோஜாக்களை அதிகம் வாங்கும் நாடுகள்- அமெரிக்கா, பிரிட்டன்,
ஜெர்மனி ,மலேசியா .
ரோஜா ஏற்றுமதியில் இந்தியா, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகள் முன்னணியில் இருக்கின்றன
காதலர் தின ஏற்றுமதி
பிப்ரவரி 14ம் தேதி வரும் வாலண்டைன் டே (காதலர் தினம்), டிசம்பர் 25ம் தேதி வரும் கிறிஸ்துமஸ் தினம் ( Valentine’s Day and Christmas) ஆகிய இரண்டிலும் இந்திய ரோஜாக்களுக்கு மிகவும் கிராக்கி உண்டாகிறது. பிரிட்டனிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் நடக்கும் வைபவங்களுக்கு பெங்ளூரு , புனே நகர ரோஜாக்கள் விமானத்தில் பறந்து செல்கின்றன .
எல்லா வகைப் பூக்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்தியாவின் ஏற்றுமதி வருமானம் –இந்திய ரூபாயில் 472 பில்லியன் ;
ஒரு பில்லியன் என்பது 100 கோடி ரூபாய்.
ரோஸ் எண்ணெய் ROSE OIL
உலகில் பல்கேரியாவை ரோஜா நாடு LAND OF ROSES என்று அழைப்பார்கள்; பல நூற்றண்டுகளாக ரோஜா மலரைக் காதலிக்கும் நாடு BULGARIA பல்கேரியா ; உலகிலேயே அதிக ரோஸ் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு அது.
ரோஜா மலரின் மணம், மனதில் நல்லுணர்வுகளை தட்டி எழுப்புகிறது. மலரின் இதழ்களிலிருந்து எடுக்கப்படும் ROSE OIL எண்ணெய் பெரும்பாலான பெர்ப்பியூம் PERFUME என்னும் வாசனைப் பூச்சுகளில் பயன்படுத்தப்படுகிறது .
ஆயினும் ரோஸ் எண்ணெய்யை நேரடியாகப் பயன்படுத்தாமல் வேறு எண்ணெய்களில் கலந்து வீரியத்தைக் குறைத்த (DILUTED )பின்னர்தான் பயன்படுத்த வேண்டும்.
சருமத்தில் பயன்படுத்தும் பல கிரீம்களில் இந்த எண்ணெய் இருக்கிறது .
பன்னீரும் ROSE WATER உடலுக்கு நல்ல புத்தெழுச்சியை உண்டாக்கும். இந்துக்களின் திருமண ரிசெப்ஷன்களிலும் பூஜைகளிலும் பன்னீர் பயன்படுகிறது .
ரோஸ் வாட்டர் என்னும் பன்னீரை ரோஜா இதழ்களிலிருந்து தயாரிக்கிறார்கள். Rose water (made by distilling petals in water) i;இதைக் கண்டுபிடித்தவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பாரசீக தத்துவ ஞானியும் விஞ்ஞானியுமான ஆவிசென்னா Avicenna ஆவார் ,
காயங்களை ஆற்றுவதற்கு ரோஜா எண்ணெய் பயன்படுகிறது . ஏனெனில் இதில் கிருமிகளைக் கொல்லும் , வீக்கத்தத்தைத் தணிக்கும் ரசாயனம் உள்ளது ; சொறி சிரங்குகளைக் குணப்படுத்தவும் பயன்படுத்தலாம். நேரடியாகப் பயன்படுத்தாமல் பிற கலவைகளுடன் கலந்தே உபயோகிக்கவேண்டும்.
வயது ஆக ஆக , உடலின் செல்கள் பிரியும் வேகம் குறையும்; அதாவது புது செல்கள் உண்டாகாது. அப்படிப்பட்ட நிலையில் ரோஸ் ஆயில் கலவைகள் புது செல்களை உண்டாக்கவும், உலர்ந்த ரோமத்தை/ தோலை மிருதுவாக்கவும் உதவுகிறது .
அத்தர், ரோஜா குல்கந்து முதலியன பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 53
கோவில் எண்கள் –98,99, 100
98.த்ரி கடவூர் மஹாதேவர் கோவில் Thrikkadavoor Sree Mahadeva Temple
தமிழ்நாட்டில் அபிராமி பட்டரின் அற்புதத்தால் பிரபலமான அபிராமி அம்மன் கோவில் திருக்கடவூரில் உள்ளது. கடவூர் என்றும் கடையூர் என்றும் கூறுவார்கள் . இதே போல கேரளத்திலும் ஒரு திருக்கடவூர் சிவன் கோவில் இருக்கிறது கொல்லத்திலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பத்து நாள் உற்சவம் நடக்கிறது.
ஒன்பதாம் நாள் திருவிழாவில் பள்ளி வேட்டை நடக்கும் அந்த நாளில் வண்ண மிகு குதிரை உருவங்களை கோவிலிலுக்கு ஊர் வலமாகக் கொண்டுவருவார்கள் கடைசி நாள் நடக்கும் ஆராட்டு உற்சவத்தில் யானை பவனி, நாட்டுப்புற நடனங்கள் இடம்பெறும் கிராம மக்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்ற இவ்வாறு குதிரை உருவங்களை காணிக்கையாக கொண்டுவருகிறார்கள்.
இந்தக் கோவில் புராணமும் தமிழ்நாட்டு திருக்கடையூர் அபிராமி- அமிர்த கடேஸ்வரர் போல மார்க்கண்டேயன் கதையையே கூறுகிறது .
கோவிலில் ஐயப்பன் , கணபதி, பிரம்மா ராக்ஷஸ, யக்ஷினி நாகராஜா, நாகா யக்ஷி ஆகியோரும் வழிபடப்படுகின்றனர் ; கருவறையில் சிவ பெருமான் இருக்கிறார்
கும்பம் மாதம் நடக்கும் பத்து நாள் உற்சவத்தைக் காண ஏராளமான வெளிநாட்டினரும் வருகிறார்கள் எட்டு திசைகளைக் குறிக்கும் வண்ணம் கோவில் சார்பில் எட்டு செயற்கை குதிரை உருவங்களும் நிற்கும் நெடும் குதிரா / எடுப்பு குதிரா என்ற சப்பரத்தை பக்தர்கள் நீர் வழியே எடுத்துச் செல்லுவார்கள்
இன்னும் ஒரு சிறப்பு அம்சம் சூட்டுக் களி ; அதில் பக்தர்கள், தீவட்டிகளுடன் ஆடுவார்கள். அவைகளை தென்னை ஓலைகளைக்கொண்டு செய்கிறார்கள். இது உற்சவம் துவங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்னரே நடக்கும் .
XXXXX
ஆனை வால் பிடிக்கும் உற்சவம்
99.உமையநெல்லூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
The rare ritual ‘Anaval pidi’ (pulling the tail of a tusker) Umayanalloor Sree Balasubramanya Temple
கொல்லம் நகரிலிருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள உமையநெல்லூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் இரண்டு உற்சவங்கள் நடக்கின்றன. மார்ச் மாதத்தில் எட்டு நாள் உற்சவம் நடக்கும். இதில் ஆறாவது நாளன்று ஆனை வால் பிடிக்கும் உற்சவம் என்ற சுவையான வைபவம் நடக்கிறது
காலையில் கோவில் யானையை , முருகன் சந்நிதிக்கு முன் நிறுத்துவார்கள்; அது இறைவனை வணங்கும். பின்னர் கோவிலை வலம் வந்து சந்நிதிக்கு முன்னர் நிற்கும். மாவுத்தன் கட்டளையிட்ட பின்னர், 300 அடிக்கு வாலையும் துதிக்கையையும் உயர்த்திக்கொண்டு பிளிறல் சப்த த்துடன் முன்னே பாயும். பக்தர்கள் அனைவரும் யானையின் வாலைப் பிடிக்க பின்னே ஓடுவார்கள். பின்னர் யானை ஓட்டம் நிறைவு பெறும் .
இந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பழைய கோவில். புத்தர்கள் இந்தக்கோவிலை ஆக்ரமித்து இருந்தனர். ஆதி சங்கரர் வந்து அதை மீண்டும் இந்துக் கோவிலாக மாற்றினார். இப்போதும் கோவிலில் புத்தமத எச்ச சொச்சங்களைக் காணலாம் .
xxxxx
100. கருநாகபள்ளி மஹாதேவர் கோவில் Padanayarkulangara Mahadeva Temple
படையனர் குலங்கரா சிவன் கோவில் பள்ளிக்கல் ஆற்றின் கரையில் கரு நாகப்பள்ளில் இருக்கிறது. கொல்லம் மாவட்டத்தில் உள்ள இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுக்கும் மேலாக பழமை உடையது புத்தர்கள் கைப்பற்றி ஆக்ரமித்திருந்த இந்தக் கோவில் பின்னர் இந்துக்கள் வசம் வந்தது .
இந்தக் கோவிலில் 10 நாள் உற்சவம் நடக்கும். எல்லா நாட்களிலும் யானை பவனி நடைபெறும். கதகளி, அம்மன் குடம், குதிரை, மயிலாட்டம், காவடி ஆட்டம் முதலியன நடக்கும்.ஆராட்டு நாளில் நடக்கும் யானைகள் ஊர்வலம் , அருகிலுள்ள தேவி கோவில் வரைசென்று திரும்பி வரும்.
ஒரு காலத்தில் இது காயம்குள மன்னர்களின் தலை நகரமாக விளங்கியது. அதற்கு முன்னர் ஆய் குல மன்னர்கள் இப்பகுதியை ஆண்டனர்
சிவராத்திரி விழாவும் இங்கு பெரிய அளவில் கொண்டாடப்படும்
ஆய் வள்ளல்
இந்த இடம் சங்க கால ஆய் அண்டிரனுடன் தொடர்புடையது என்பதை என்னுடைய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன . நாகர் குல பழங்குடி மக்கள் பாம்புத்தோல் போல ஆடை நெய்வதில் சிறந்தவர்கள் . அவர்கள் ஆய் மன்னனுக்கு அளித்த கரு நாக வண்ண உடையை அவன் தான் அணியாமல் சிவ பெருமானுக்கு அளித்தான் ; இதனால் கடையெழு வள்ளல் களில் ஒருவனாகப் போற்றப்படுகிறான்
ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் ஒன்று இவருக்கு ஓர் அரிய ஆடையை அளித்ததாம். நாகம் நல்கிய ஒளிமிக்க ஆடையை இவர், ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தாராம்.இதனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் சிறுபாணாற்றுப்படையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நிழல்திகழ்
நீலநாகம் நல்கிய கலிங்கம்
ஆலஅமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆயும்
வேள்ஆயைப் போற்றி ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடல்களும், துறையூர் ஓடைகிழார் பாடிய பாடலும் புறநானூற்றில் உள்ளன.புறநானூறு மட்டுமின்றி அகநானூறு,குறுந்தொகை மற்றும் சிறுபாணாற்றுப்படை முதலியவற்றிலும் இவரை பற்றிய மேலும் சில பாடல்கள் எழுதப்பட்டுள்ளன.
இவர் தன்னை அண்டி வருபவர்களுக்கு,களிறுகளை பரிசாக அளிக்கும் கொடை குணம் கொண்டவர். இதனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் இவரைப் பற்றி எழுதிய பாடல்களில் இருந்து அறியலாம்.
இந்தத் தகவலானது இவன் யானைகள் அதிகமுள்ள கேரளத்தையும் தன் வசம் வைத்திருந்தான் என்பதையும், முதலில் சிவன் இருந்த இடத்தையே பெளத்தர்கள் கைப்பற்றினார்கள் என்பதையும், நாகா இன மக்கள் பாம்புத்தோல் போல மெல்லிய உடைகளை நெய்பவர்கள் அல்லது பாம்புகள் கழற்றும் பாம்புச் சட்டையைக் கொண்டு ஆடை செய்பவர்கள் என்பதையும் காட்டுகிறது .
—SUBHAM—
TAGS- பள்ளிவேட்டை குதிரை உருவங்கள், சூட்டுக் களி, உமையநெல்லூர் , பாலசுப்பிரமணிய சுவாமி, கோவில், ஆனை வால் பிடிக்கும் உற்சவம் , ஆய் அண்டிரன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கர்ம ரகசியம்! – 2
ச.நாகராஜன்
ஒருவன் செய்த கர்மம் ஒருபோதும் அவனை விடாது.
நல்வினை, தீவினைகளின் பயன் பற்றி தர்மர் பீஷ்மரிடம் கேட்க அதைப் பற்றி விரிவாக பீஷ்மர் எடுத்துரைக்கிறார்.
இதை மஹாபாரதத்தில் அநுசாஸனபர்வம் பத்தாம் அத்தியாயத்தில் காண்கிறோம்.
பீஷ்மர் கூறுகிறார்: “கன்றானது அநேக ஆயிரம் பசுக்களில் தன் தாயைத் தெரிந்து அடைவது போல, முன் செய்த கர்மம் செய்தவனைத் தொடர்கிறது. பூக்களும், கனிகளும் யாராலும் கட்டளையிடப்படாமலே, தம் தம் காலம் கடவாமல் உண்டாவது போல முன் செய்த கர்மமும் காலத்தில் வெளிப்படுகின்றது.”
இதே பர்வத்தில் 35வது அத்தியாயத்தில் பத்து வகை கர்மங்களைப் பற்றிய விளக்கத்தை பீஷ்மர் தருகிறார்.
தேகத்தினால் செய்யப்படும் பாவ கர்மங்கள் மூன்று.
1) உயிரைப் போக்குவது
2) திருடுவது
3) பிறர் மனைவியைத் தொடுவது
ஆக இந்த மூன்று தீய கர்மங்களையும் விட வேண்டும்.
வாக்கினால் செய்யப்படும் பாவங்கள் நான்கு.
1) கெட்ட பேச்சு
2) கடுஞ்சொல்
3) கோள் சொல்வது
4) பொய் சொல்வது
இவை நான்கும் வாக்கினால் செய்யப்படும் பாவங்கள். வாக்கினாலும் இவை செய்யத் தகாதவை.
இந்த நான்கையும் விட வேண்டும்.
மனத்தினால் செய்யப்படும் நற் கர்மங்கள் மூன்று.
1) பிறர் பொருளை விரும்பாமை
2) எல்லா பிராணிகளிடத்தும் அன்பு
3) புண்ய பாவங்களுக்குப் பலன் உண்டென்ற நம்பிக்கை
இந்த மூன்றையும் மனதினால் கொள்ள வேண்டும்.
இவற்றைச் செய்பவன் நாராயணனிடம் பக்தி கொண்டு செய்யும் போது அவர் அனுக்ரஹத்தால் அவன் மேலான பதத்தை அடைவான் என்பது பீஷ்மரின் வாக்கு.
தர்மபுத்திரர் பீஷ்மருடன் உரையாடிக் கொண்டிருக்கையில் அங்கு பிரஹஸ்பதி வருகிறார்.
தர்மபுத்திரரிடம் ப்ருஹஸ்பதி, ‘மனிதன் ஒருவனாகவே பிறக்கிறான்; ஒருவனாகவே இறக்கிறான். ஒருவனாகவே நரகங்களைத் தாண்டுகிறான். ஒருவனாகவே நரகத்திற்குப் போகிறான். தந்தை, தாய், சகோதரன், புத்திரன், ஆசாரியன், தாயாதிகள், சுற்றத்தார், சினேகிதர்கள் யாரும் துணையாவதில்லை. மனிதர்கள் தேகத்தைச் சில காலம் பயன்படுத்தி உயிர் போன பின் கட்டை ஓட்டாஞ்சில்லிகளைப் போல எறிந்து விட்டு வேறு முகமாகப் போகின்றனர். தர்மம் ஒன்றே பின் தொடர்கிறது” என்கிறார்.
தர்மர் அவரிடம் மனிதன் உயிரை விடுகின்ற போது அதில் சூட்சுமமான ஆத்மா மறைந்து கண்பார்வைக்குத் தெரியாமல் போகின்றதே? தர்மம் அதைத் தொடர்வது எப்படி?’” என்று கேட்கிறார்.
உடனே பிரஹஸ்பதி கூறுகிறார்: “பூமி, வாயு, ஆகாயம், அக்னி, நீர் ஆகியவற்றின் தேவதைகள், புத்தி, ஆத்மா இவை அனைத்தும் சேர்ந்து எக்காலமும் தர்மத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. மேற்சொன்னவற்றுடன் தர்மம் பின் தொடர்கிறது. மேலே சொன்னவை தோல், எலும்பு, மாம்ஸ சுக்லசோணிதங்களையும் உயிர் விட்ட தேகத்தையும் விடுகின்றன. அதன் பிறகு ஜீவனானது தர்மத்துடன் சேர்ந்து இவ்வுலகத்திலும் பரலோகத்திலும் சுகமாக விளங்குகிறது.:
மனிதனுக்கு உள்ள மூன்று வகை தேகங்களைப் பற்றியும் பிரஹஸ்பதி விளக்குகிறார்.
மனிதனுக்கு மூன்று தேகங்கள் உண்டு.
1) போகவச்யம் (ஸ்வர்க்க சரீரம்)
2) கர்மவஸ்யம் (இது பூமியில் உள்ள சரீரம்)
3) யாதனாவச்யம் (இது நரகத்தில் உள்ள சரீரம்)
இந்த மூன்று வகை தேகங்களினால் மனிதன் தன் வினைப்பயனை அனுபவிக்கிறான்.
இதைத் தொடர்ந்து எந்தக் கர்மத்தை செய்தால் என்னென்ன பிறவிகளாகப் பிறப்பார்கள் என்ற உரை தொடர்கிறது.
தான் பிரமதேவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதை தற்போது உரைப்பதாகவும் அவர் கூறுகிறார்.
நல்ல கர்மங்களின் பயன்களை, குறிப்பாக தானம் செய்தல்,அஹிம்சை, வாக்கினால் செய்யப்படும் தவம், மௌனம் உள்ளிட்ட அனைத்தின் நலனைப் பற்றியும் அநுசாஸன பர்வத்தில் விரிவாகப் பார்க்கலாம்.
கர்ம ரகசியத்தை முழுவதுமாக அறிவது முடியாதது என்றாலும் கூட, ஒருசிறிது அறிந்து கொள்ளலாம்.
மல்லிகைப் பூ மணத்தை விரும்பாதவர் எவருமிலர். மல்லிகை மலரை அணியாத இந்துப் பெண்களை பார்ப்பது அரிது. சில கடவுளருக்கு சில பூக்கள்தான் உகந்தது என்பர்; ஆனால் மல்லிகை மலரை விரும்பாத தெய்வமில்லை. அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமை என்றாலோ முகூ ர்த்தம் என்றாலோ விலை ஏறி விடும்.
லண்டனில் அப்படி இல்லை. எப்போதும் ஒரு முழம் ஒரு பவுண்டுதான்; அதாவது ஒரு முழம் நூறு ரூபாய்..
பூஜை அல்லது வீட்டில் விசேஷம் என்றால் முன்கூட்டியே ஆர்டர் கொடுத்துவிடுவோம் . விமானத்தில் மல்லிகை வந்து இறங்கும் நாளைத் தவிர வேறு நாளில் விசேஷம் இருக்குமானால், ஸார் , பிச்சிப்பூ வாங்குங்கள். அது நாள் பட்டாலும் வாடாது என்று கடைக்காரரே நமக்கு ரகசியங்களையும் சொல்லித் தருவார் .
தாவர இயல் கணக்குப்படி மல்லிகை, முல்லை, பிச்சி என்பது எல்லாம் ஓர் குடும்ப மலர்களே. ஜாஸ்மீனியம் JASMINIUM என்ற குடும்பத்தில் வந்துவிடும்.
மல்லிகை மலர் சாகுபடியில் முதலிடம் வகிப்பது தமிழ்நாடுதான்.அதிலும் மதுரை மல்லிகை என்றால் இன்னும் மகத்துவம் அதிகம் .
உலகில் வியப்பான விஷயம் என்னவென்றால் இந்துக்கள் மட்டும் மல்லிகா என்று பெண் குழந்தைக்கு பெயர் வைத்து விட்டார்கள் என்று எண்ணிவிடக்கூடாது . முலலீம்களும் யாஸ்மின் YASMIN என்றும் கிறிஸ்தவர்களும் ஜாஸ்மின் JASMINE என்றும் பெண் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவார்கள்.
அதிகம் வாங்குவது சவூதி அரேபியா !
வோல்சா Volza’s India Export data நிறுவன கணக்குப்படி மல்லிகை ஏற்றுமதி பின்வருமாறு:
இந்தியா ஏற்றுமதி செய்யும் மல்லிகைப்பூவை அதிகம் வாங்குவது சவூதி அரேபியா; அதற்கு அடுத்த இடத்தில் ஐக்கிய அரபு நாடுகளும், சிங்கப்பூரும் நிற்கின்றன.
உலகில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இந்த மலரை ஏற்றுமதி செய்யும் நாடுகள் இந்தோனேஷியா, சீனா ஆகும் .
ஆண்டுதோறும் இந்தியா 5,514 shipments 5514 தடவை கப்பல்களில் ஏற்றுகிறது
இந்தோனேஷியா 1,163 கப்பல்களில் ஏற்றுகிறது; சீனா 733 shipments.733 கப்பல்களில் ஏற்றுகிறது .
இந்திய மல்லிகை கனடா , அமெரிக்கா , பிரிட்டன் , பஹ்ரைன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் அதிகம் செல்கிறது.
மல்லிகை சாகுபடி ஆண்டு முழுதும் வருமானம் தருகிறது. GREEN HOUSE கிரீன்ஹவுஸ் அமைத்து எல்லாக் காலங்களிலும் மல்லிகை மலரைப் பெறும் நவீன உத்திகளை விவசாய பத்திரிகைகளில் காணலாம்.
மல்லிகை எஸ்சென்ஸ்
இந்துக்களைப் பொறுத்தவரை மல்லிகை என்பது இறைவனுக்கு சமர்ப்பிக்கவும், நாள், கிழமைகளில் பெண்கள் தலையில் சூட்டிக்கொள்ளவும் மட்டுமே பயன்படுகிறது. ஆனால் மற்ற மதத்தினர் இதை சென்ட் என்னும் பெர்ப்F யூமில் PERFUME அதிகம் உபயோ கிக்கின்றனர் .
மல்லிகை எஸ்சென்ஸ் மிகவும் விலை உயர்ந்தது . ஒரு மில்லி லிட்டர் எசன்ஸ் எடுக்க 8000 மல்லிகை மலர்கள் தேவை ; ஒரு லிட்டர் எடுக்க 8000 X 1000 மலர்கள் தேவை.!
மல்லிகை மலரிலேயே பல வகைகள் உண்டு. அது தவிர முல்லை , பிச்சி வகைகளும் உள்ளன. ஆகையால் இதை செடி என்றும் கொடி என்றும் சொல்லலாம். 15 முதல் 20 ஆண்டுகள் வரை பலன் தரும்
பயன்கள்
பெரும்பாலும் பெர்ப்பியூம் PERFUME என்னும் நறுமண திரவம் தயாரிக்க உபயோகிக்கிறார்கள் .
வெவ்வேறு அளவில் வெவ்வேறு எண்ணெய்களில் CARRIER OILS கலந்து மசாஜ் செய்ய, முடி வளர் தைலம் தயாரிக்க, ஆவி மூலம் நறுமணம் பரப்ப , மெழுகு வர்த்தியில் , ஊது வர்த்தியில் சேர்க்க என்று நூற்றுக் கணக்கில் மலரையும் எஸ்ஸன்ஸ் கலந்த எண்ணெயையும் பயன்படுத்துகின்றனர் .
மருத்துவ பயன்கள்
மல்லிகை மலர் வாசனை சிகிச்சை முறையில் ( Jasmine, aromatherapy scent) பயன்படுகிறது . இதை நுகர்ந்தால் மனத் தொய்வு அகன்று மன நலம் பெருகுகிறது என்று ஒரு ஆராய்ச்சி காட்டுகிறது
, (has been linked with reducing depression and improving mental health)
இன்னும் ஒரு ஆய்வில் மலரின் மணம், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதையும், ரத்த அழுத்தத்தை உயர்த்துவதையும் மூச்சுவிடுவதை அதிகரிப்பதையும் கண்டனர் . In one study, jasmine oil was found to increase blood oxygen levels, blood pressure and even the breathing rate of participants.)
ஆரோக்கியம் தொடர்பான பத்திரிகை நடத்திய ஆய்வில் (Journal of Health Research) மல்லிகை மலரை நுகர்ந்தால் (inhaling jasmine oil affected the central nervous system and stimulated brain activity, enhancing and boosting the participants’ moods. Overall, each participant reported feeling more energetic and positive.) மத்திய நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி பெறுவதையும் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்வதையும் , தெம்பான உணர்ச்சி பெருகுவதையும் கண்டனர் .
திரைப்படப் பாடல்களில் மல்லிகை
மல்லிகையைப் பயன்படுத்தும் திரைப்படப் பாடல்களைக் கேட்டால் அல்லது படித்தால் அது நல்ல மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில் மட்டும் இருப்பதைக் காணலாம் .
மல்லிகை எஸ்சென்ஸ் விலையை மட்டும் கேட்டுவிடாதீர்கள்! மயக்கம் போட்டு விழுந்துவிடுவீர்கள் ஒரு லிட்டர் 20,000 ரூபாய்க்கு மேல்.
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 52
கோவில் எண்கள் –93, 94, 95,96, 97
93.நீண்டூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
கோட்டயம் மாவட்டத்தில் பசுமையான வயல்வெளி சூழ்ந்த இடம் நீண்டூர் ஆகும். ஏத்தமானூரிலிருந்து 7 கிமீ தொலைவில் இருக்கிறது. இங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் புகழ் பெற்றது; பழமையானது
தாரகாசுரனுடன் போரிட்ட தேவ சேனாபதியாக முருகன் இங்கு காட்சி தருகிறார். தாரகாசுரனை வதம்செய்யும் பாணியில் முருகனின் வேல் கீழ் நோக்கி இருக்கும். ஏனைய சுப்ரமண்ய சுவாமி கோவில்களில் வேல் நிமிர்ந்த நிலையில் இருக்கிறது .
மே மாதத்தில் வருடாந்திர விழா நடக்கும். இது தவிர தைப்பூச நாளும் கொண்டாடப்படும் .தட்சிணாமூர்த்தி, மகா கணபதி, நாகர் சந்நிதிகளும் கோவிலில் இருக்கின்றன.ஒட்டனரங்கமாலா சமர்ப்பணம் என்ற மிகப் பழமையான சிறப்பு வழிபாடு இந்தக் கோவிலின் தனித்துவத்தைக் காட்டும். வேறு எங்கும் இந்த சடங்கு இல்லை .
கேரள பாணியில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் நல்ல மர வேலைகளைக் காணலாம்.
XXXX
94. குட்டியணி குளங்கரை பகவதி கோவில்
Neendoor Kuttiyanikulangara Devi temple, also known as Neendoor Kavu,
நீண்டூர் காவு என்று அழைக்கப்படும் இந்த பகவதி கோவில் கைப்புழா என்னும் இடத்தில் அமைந்துள்ளது
வருடாந்திர விழாவை நீண்டூர் பூரம் என்று அழைப்பார்கள். ஏத்தமானூரிலிருந்து 7 கிமீ.
இங்கு பிப்ரவரி மாதத்தில் 3 நாள் உற்சவம் நடக்கும் . நவம்பர்- டிசம்பரில் 41 நாள் களமெழுத்துப்பாட்டு விழா நடக்கும் .
3 நாள் உற்சவத்தில் கதகளி, கோல்களி நடக்கும். மூன்றாவது நாளில்தான் கும்பம் துள்ளல் என்ற கரகாட்டம் நடக்கும். மேளதாள இசைக்கு ஏற்ப தலையில் குடங்களை வைத்துக்கொண்டு ஆடுவார்கள். அத் தோடு கருடன் தூக்கம், பூரம் துள்ளல் ஆகியனவும் நட க்கிறது .
கோவில் விழாவில் நடக்கும் ஓட்டந்துள்ளல் நிகழ்ச்சியும் ஏனைய இடங்களிலிருந்து மாறுபட்டது. அதற்கு நீண்டூர் பாணி ஓட்டந்துள்ளல் என்ற பெயரும் உண்டு.
கடைசி நாளில் யானை ஊர்வலத்துடன் வேல களி நடத்துவார்கள் ; சிப்பாய் வேஷத்தில் வருவோர் பழங்கால யுத்த முறைகளை செய்து காட்டுவார்கள் .
கோட்டயம் மாவட்டத்தில் காடுதுருத்தி அருகில் இரவிமங்கலம் என்ற ஊரில் இருக்கிறது. ரவி என்றால் சூரியன் .
கேரளத்தில் சூரியனுக்கு உள்ள ஒரே கோவில் இது.
ஆண்டுதோறும் இரண்டு விழாக்கள் நடைபெறுகின்றன.
‘ஸ்ரீகோவில்’ எனப்படும் கருவறையானது வட்ட வடிவில் உள்ளது. சூரிய பகவானின் சிலை, தியான நிலையில் மேற்கு நோக்கி இருக்கும் . பின் வலது கையில் சக்ராயுதத்தை ஏந்தியும், பின் இடது கையில் சங்கு ஏந்தியும், முன் இரு கைகளானது தவ முத்திரையோடு உள்ளன.சாஸ்தா, யக்ஷி ஆகிய துணை தெய்வங்கள் உள்ளனர்.
விழாக்களில் காவடியாட்டமும் உண்டு. மே மாதம் , டிசம்பர் மாதங்களில் விழாக்கள் நடக்கின்றன.
xxxx
96.கடுதுருத்தி மஹாதேவர் கோவில்
கோட்டயம் நகரிலிருந்து 25 கி.மீ தொலைவில் கடு துருத்தி சிவன் கோவில் இருக்கிறது .வைக்கம் மகாதேவர் ஆலயத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், ஏற்றுமானூர் மகாதேவர் கோவிலில் இருந்து 14 கிலோமீட்டர் .
கரன் என்ற அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்தபோது அவனிடம் சிவபெருமான் 3 லிங்கங்களைக் கொடுத்தார் . அவன் ஒரு லிங்கத்தை ஏத்த மானூரிலும், இரண்டாவது லிங்கத்தை வைக்கத்திலும் வைத்தான். வாயில் கடித்த நிலையில் கவ்வி வந்த கரன் மூன்றாவது லிங்கத்தை வைத்த இடம் கடித்து உருத்தி என்று அழைக்கப்படுகிறது .
மலைக்குன்றின் மீது அமைந்திருக்கும் இந்த ஆலய கருவறையில், மூன்று அங்குலம் அளவு கொண்ட மிகச் சிறிய சிவலிங்கம் கிழக்கு நோக்கிய இருக்கிறது.
மார்கழி மாதம் திருவோண நட்சத்திர நாளில், அருகிலுள்ள பாலிச்சிறை ஆற்றில் இறைவனுக்கு ‘ஆறாட்டு’ நடத்தி ஆண்டு விழாவாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி நாள், மாசி மகம், புரட்டாசி மாதம் முதல் நாள் கோவில் நிறுவப்பட்ட நாள் ஆகியவையும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
xxxxx
97.பனச்சிக்காடு சரஸ்வதி கோவில்
கோட்டயத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் சிங்கவனம் என்ற இடம் உள்ளது. அதன் அருகில் புகழ்பெற்ற பனச்சிக்காடு சரஸ்வதி கோவில் இருக்கிறது.
கல்வியில் நல்ல சிறப்புகளைப் பெறுவதற்காக மாணவர்களும், பெற்றோர்களும் நாடும் கோவில் இது. நவராத்ரி காலத்தில் வரும் சரஸ்வதி பூஜையும் அதையடுத்து விஜய தசமியன்று வரும் வித்யாரம்பம் நிகழ்சசியும் சிறுவர்களை கவர்ந்துஇழுக்கும் கோவில் இது .
கர்நாடகத்திலுள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவில், பரவூரில் உள்ள தட்சிண மூகாம்பிகை கோவில் போல இதுவும் சிறப்பு பெற்றது துர்காஷ்டமி நாளன்று தேவிக்கு முன்னால் புஸ்தகங்களை அடுக்கிவைப்பார்கள் ; விஜய தசமி நாளில் கல்வியைத் துவங்குவார்கள் உற்சவ காலத்தில் பிரபல சங்கீத வித்வான்களின் இன்னிசைக் கச்சேரிகளும் நடக்கும்.
ஆண்டுதோறும் குழந்தை வரம் வேண்டி கர்நாடக கொல்லூருக்குச் சென்று வந்த தாமோதர நம்பூதிரிக்கு இறைவியே தோன்றி இங்கு கோவில் அமைக்க வேண்டினார். நம்பூதிரியும் காட்டில் கிடைத்த சரஸ்வதி விக்கிரகத்தை வைத்து கோவிலை எழுப்பினார் ஆயினும் இப்போது இறைவியைக் காண முடியாதபடி செடி கொடிகள் முளைத்துவிட்டன .
தற்போது கிணறு போன்ற பள்ளத்தில் மறைந்திருக்கும் தேவியைப் பார்த்து வணங்க முடியாததால், பக்தர்களின் பார்வைக்காக இங்கு மேற்கு திசையைப் பார்த்தபடி கல் ஒன்றை நிறுவி , சரஸ்வதியாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். இந்த ஊரையும் பரவூர் போலவே தட்சிண மூகாம்பிகா கோவில் என்று சொல்லுவார்கள் .குழந்தை இல்லாதோர் இங்கு வந்து பாயஸப் பிரசாதத்தைச் சாப்பிட்டால் மகப்பேறு உண்டாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு இந்தக் கோவிலில் இருக்கும் வித்யா மண்டபத்திற்குச் சென்று, அங்கு அமர்ந்திருக்கும் குருவின் மடியில் தங்கள் குழந்தையை அமர வைக்கின்றனர். அவர் தங்க நாணயத்தினால் ஹரியின் பெயரை நாக்கில் எழுதுவார். பின்னர் அங்குள்ள தாம்பளத்திலுள்ள அரிசியில் ஹரி என்று குழந்தையை விரலினால் எழுத வைப்பார்கள்.. இதை வித்யாரம்பம் என்று அழைக்கிறார்கள்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கர்ம ரகசியம்! – 1
ச.நாகராஜன்
நன்மை, தீமை ஆகிய எல்லாவற்றிற்கும் காரணம் மனிதனின் கர்மமே என்று ஹிந்து மதம் திடமாகத் தெரிவிக்கிறது.
நம் மனதில் தோன்றும் ஏராளமான சந்தேகங்களுக்கு ராமாயணம், மஹாபாரதம், புராணங்கள், சாஸ்திரங்கள் விளக்கமாக விடையைத் தருகின்றன.
சந்தேகங்கள் ஆயிரம்; விடைகளும் அப்படியே.
கர்மங்களின் ஸ்வரூபம் புலன்களுக்கு எட்டாத நுட்பம்.
இதைப் பற்றி யமன், கௌதமி, காலபுருஷன், வேடன், ஒரு பாம்பு ஆகியவற்றிற்கு இடையே நடந்த ஒரு உரையாடலை மஹாபாரதம் அநுசாஸன பர்வம் முதல் அத்தியாயத்தில் தெரிவிக்கிறது.
கௌதமி என்னும் ஒரு கிழவி இருந்தாள். காம, க்ரோதம் அற்ற நல்லவள் அவள்.
அவளது மகனை ஒரு பாம்பு கடிக்கவே அவன் இறந்து விட்டான்.
அர்ஜுனகன் என்னும் ஒரு வேடன் அந்தப் பாம்பைச் சுருக்கிட்டு கௌதமியிடம் கொண்டு வந்தான்.
“ஓ! பாக்யவதியே! உன் மகனைக் கொன்ற நீசமான பாம்பு இது தான். இதைத் தீயில் போடலாமா? துண்டு துண்டாக வெட்டலாமா?சீக்கிரம் சொல். குழந்தையைக் கொன்ற இதை நீண்ட காலம் உயிரோடு விட்டு வைக்கக் கூடாது” என்றான் வேடன்.
உடனே, கௌதமி, “வேடனே! இதை விட்டு விடு. புண்ணியத்தால் லேசாக இருக்கும் மனிதர்கள் நீரில் ஓடங்கள் மிதப்பது போல உலகில் மிதக்கின்றனர். பாவத்தினால் மிகுந்த கனமாய் இருப்பவர்கள் நீரில் விழுந்த ஆயுதம் போல அமிழ்ந்து போகின்றனர்.” என்றாள்.
வேடனோ, சாந்தியை விரும்புபவர்கள் தனக்கு நேர்ந்த காலத்தை விட்டுவிடுவார்கள். காரியத்தைக் கவனிப்பவர்கள், சமயம் வந்த போது அதைச் செய்து விடுவார்கள். ஆகவே இந்தப் பாம்பை நான் கொல்லப் போகிறேன்” என்றான்.
“வேடனே! இதனால் தர்மம் கெடும். இந்த சர்ப்பத்திற்கு அதிகாரி நான் இல்லை.கோபத்தை விடு. இந்த அரவத்தை விட்டு விடு” என்றாள் கௌதமி.
உடனே வேடன், “இதைக் கொல்வதினால் உண்டாகும் புண்ணியம் எனக்கு அழிவில்லாத லாபம் ஆகும். இந்த அயோக்கிய பாம்பை கொல்வதனால் எனகு புண்ணியம் உடனே கிடைக்கும்” என்றான்.
உரையாடல் தொடர்ந்தது.
கௌதமி கூறியதற்கெல்லாம் வேடன் மறுமொழி உரைத்தான். பாம்போ சுருக்கில் மாட்டி உயிரை இழந்து கொண்டிருந்தது.
அது ஒருவாறாக மெல்லப் பேசத் தொடங்கியது: “ அர்ஜுனகா! இதில் என் குற்றம் ஏதும் இல்லை. யமன் கட்டளை இட்டான். நான் கடித்தேன். பாவம் ஏதேனும் உண்டெங்கில் அது யமனுடையது” என்றது. உரையாடல் நீண்டு கொண்டே போனது.
அப்போது யமன் அங்கே வந்தான்.
“பாம்பே! நான் காலத்தினால் ஏவப்பட்டு உன்னை ஏவினேன். இந்தக் குழந்தையின் மரணத்திற்கு நானும் காரணமில்லை. நீயும் காரணமில்லை. காற்றானது பல இடங்களிலிருந்து மேகங்களை இழுத்துக் கொண்டு வரும் போது அவை எப்படி காற்றுக்கு உட்பட்டிருக்கின்றனவோ அது போலவே நான் காலத்தை அநுசரித்தே பிராணிகளிடம் செல்கிறேன்” என்றான் யமன்.
காலத்தின் வலிமையை யமன் வெகுவாக எடுத்துரைத்தான்.
“சூரியன், சந்திரன், விஷ்ணு, நீர், காற்று, இந்திரன், அக்னி, ஆகாயம், பூமி, மித்ரன் என்னும் தேவதை, மேகம், வசுக்கள், அதிதி தேவதை, நதிகள், கடல்கள், சக்தி, அசக்தி ஆகிய இவை எல்லாம் அடிக்கடி காலத்தினால் ஆக்கவும் அழிக்கவும் படுகின்றன. பாம்பே! இதை நீ அறிந்திருந்தும் என்னைக் குற்றவாளியாக நீ நினைப்பது எப்படி?” என்றான் யமன்.
இதைத் தொடர்ந்து நீண்ட வாக்குவாதம் ஏற்பட்டது. வேடன் பாம்பைச் சொல்ல பாம்பு யமனைச் சொல்ல யமன் காலத்தைச் சொல்ல காலபுருஷனே அங்கு நேரில் வந்து தோன்றினான்.
“ஓ! வேடனே! இந்தக் குழந்தை இறந்ததற்கு நானும் இந்த யமனும் இந்தப் பாம்பும் முதல் காரணங்கள் அல்லோம். நாங்கள் குற்றவாளிகளே அல்ல. இந்தக் குழந்தை செய்த கர்மமே எங்களை அவ்விதம் செய்யத் தூண்டிற்று. இவன் இறந்ததற்குக் காரணம் இவனது கர்மமே தான். நாங்கள் அனைவரும் கர்மத்திற்கு உட்பட்டவர்கள். இவ்வுலகில் கர்மம் ஒரு பாகஸ்தன். ஒவ்வொருவருக்கும் தன் தன் வினை சம்பந்தமே இலக்கணம். கர்மங்கள் எங்களை ஏவுவதற்குத் தகுந்தபடி தான் நாங்கள் ஒருவரை ஒருவர் ஏவுகிறோம். செய்பவன் மண்ணுருண்டையின் விரும்பியவற்றைச் செய்து கொள்வது போல மனிதன் கர்மங்களைச் செய்து அவற்றின் பலனைப் பெறுகிறான். நிழலும் வெயிலும் எப்போதும் இடைவிடாமல் சேர்ந்திருப்பது போல காரியமும் அதைச் செய்யும் கர்த்தாவும் முன்வினைகளால் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். ஆதலால் நான், யமன், பாம்பு, நீ , இந்த கௌதமி இன்னும் யாரும் இந்தக் குழந்தையின் மரணத்திற்குக் காரணமல்லோம்.” என்று இப்படி விளக்கமாக உரைத்தான் கால புருஷன்.
உடனே கௌதமி உலகமே கர்மத்தைக் காரணமாக உடையது என்பதை அறிந்து கொண்டாள்.
“இந்தப் பிள்ளை மரணமடையத்தக்க கர்மத்தை நானும் செய்திருக்கிறேன். பாம்பை விட்டு விடு, அர்ஜுனகா” என்றாள் கௌதமி.
வேடன் அர்ஜுனகன் பாம்பை உயிரோடு விட்டான். யமனும், காலபுருஷனும் அங்கிருந்து அகன்றனர்.
“மூவுலகங்களும் கர்மங்களைச் சார்ந்தது என்று அறிவாயாக” என்று இந்தக் கதையைக் கூறி தர்மருக்கு பீஷ்மர் ஆறுதல் அளித்தார்.
கர்ம ரகசியம் பிரம்மாண்டமானது. மிகவும் நுட்பமானது. எளிதில் அறிய முடியாதது. ரகசியமானது. இதை நமது நூல்கள் ஆங்காங்கே விளக்கமாகக் கூறுகின்றன.
அதை அறிந்து கொள்வதே ஒரு பாக்கியம் தான்! அதற்கும் ஒரு நல்ல கர்மத்தைச் செய்திருக்க வேண்டுமல்லவா!*** தொடரும்
மனோரஞ்சிதம் என்ற பெயரை சீதாப்பழ குடும்பத்தைச் சேர்ந்த வெவ்வேறு தாவரங்களுக்கும் பயன்படுத்துவார்கள். ஆர்ட்டாபாட்ரிஸ் ஹெக்ஸா பெடலா (6 இதழ்) Artabotris hexapetala என்ற தாவரம் கொடி வகை. கனங்கா ஓடோரேட்டா Cananga odoreta என்பது மரம் வகை; ஆயினும் இரண்டும் நறுமணமிக்கது . ஏறத்தாழ ஒரே குணங்களையும் பயன்களையும் உடையவை.
மனோரஞ்சிதம் மலரை காட்டு சண்பகம் என்றும் அழைப்பார்கள் கனக / தங்க நிறத்தில் இருப்பதால் , இதை பல மொழிகளில் கனங்கா என்றே அழைக்கின்றனர். வெளிநாடுகளில் இதை இலங் இலங் பூக்களுக்கெல்லாம் பூ என்பது இதன் பொருள். அதாவது மலர்களின் ராணி
மருத்துவம் முதல் வாசனைத் திரவம் வரை, பலவகைகளில் உதவுகிறது
ஸம்ஸ்க்ருதப் பெயரான மனோ ரஞ்சிதம் என்பதுதான் உண்மையான பொருளைக் காட்டும். அதாவது இந்த மலரை நீங்கள் முகரும்போது என்ன பழந்ததை அல்லது பூவை நினைக்கிறீர்களோ அந்த வாசனை வரும் . என்ன அதிசயம் !
இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் வளரும் இந்த மரம், சீதாப்பழ குடும்பத்தைச் (Custard apple) சேர்ந்தது
இதன் தெலுங்கு மொழிப் பெயர் தமிழர்களைக் குழப்பிவிடும். ‘சம்பங்கி’ என்பார்கள். ஆ னால் தமிழில் சம்பங்கி என்பது வேறு வெள்ளை நிறப்பூவைக் குறிக்கும். அதன் தாவரவியல் பெயரும் மனோ ரஞ்சிதத்துக்குத் தொடர்பு இல்லாதது .
இந்த தாவரம் இந்தியாவைச் சேர்ந்தது லாவோஸ், வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகிறது . ஆப்பிரிக்காவை ஒட்டியுள்ள மிகப்பெரிய மடகாஸ்கர் (மலகாசி) தீவிலும் காணப்படுகிறது (Native India, through parts of Indochina, Malaysia, the Philippines and Indonesia, to Queensland, Australia).
பல இடங்களில் இதை புது மண தம்பதியரின் முதலிரவுப் படுக் கையை அலங்கரிக்கவும் பயன்படுத்துகின்றனர். அதனால் இதை மன்மதன் , மதன காமன் என்றும் அழைப்பர்; அந்த சம்ஸ்க்ருத சொற்களின்பொருள் மனத்தைக் கடைபவன் ; காமம் வந்துவிட்டால் மனது, தயிர் கடைவது போலக் கடையத் தானே செய்யும்!
ஏற்றுமதியில் இந்தியாவுக்கு மூன்றாம் இடம்
இந்தப் பூவின் எண்ணையை ஏற்றுமதி செய்வதில் பிரான்ஸ் முதலிடம் வகிக்கிறது; அது மடகாஸ்கர் தீவு மூலம் பெறுகிறது . அதைத் தொடர்ந்து ஜெர்மனி, பின்னர் இந்தியா வருகிறது .
இலங் இலங் எண்ணெய் வாங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 2528, (Ylang ylang oil ); அவர்களுக்கு ஏற்றுமதி செய்யும் கம்பெனிங்கள் 756.
உபயோகங்கள் என்ன ?
அரோமா தெரபி Aroma Therapy யென்னும் வாசனை எண்ணெய் சிகிச்சையில் பயன்படுகிறது .
மெழுகுவர்த்தியில் கலந்து நறுமணத்தைப் பரப்புகிறார்கள்
பெர்Fயூம் என்னும் சென்ட் வகைகளில் பயன்படுகிறது
Health Benefits ஆரோக்கிய தகவல்
• Good Aphrodisiac மனதில் காம உணர்வுகளைத் தூண்டிவிடும்
• Stress and Depression Reliever மனா உளைச்சலை அகற்றி அமைதி உண்டாக்கும்
• Used as Antiseptic கிருமி நாசினி
• Helps You Sleep நல்ல உறக்கத்துக்கு உதவும்
• Relieves Eczema சொறி சிரங்குகளை குணப்படுத்தும்
உலகம் முழுதும் இலங் இலங் எண்ணெய் விற்கப்படுகிறது.
xxxx
Artabotrys hexapetalus என்னும் வகை மனோரஞ்சிதத்தில் 26 வகை ரசாயனப் பொருட்களிருப்பதை ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர் (The pleasant smelling flower essential oil of Artabotrys hexapetalus (L. f.) Bhandare (Annonaceae) was analyzed by GC and GC/MS. Twenty-six components of the oil including sesquiterpene hydrocarbons (33.3% of the oil) and oxygenated sesquiterpenoids (47.7%) were identified. β-caryophyllene (11.4%) and caryophyllene oxide (31.5%) were identified as the major components of the oil.)
மஞ்சள் நிறப் பூ ஜூன் ஜூலையில் பூக்காத துவங்கும் . முதலில் பச்சை நிறத்தில் இருக்கும் .
NATURAL ESSENTIAL OILS HERBAL OILS FOR AROMATHERAPY PURPOSES HERBAL OILS FOR MULTIPLE PURPOSES:- YLANG YLANG OIL
Plant Growth Habit
Fast-growing, straggling, pendulous evergreen tree
Growing Climates
Gullies and on slopes, in forest and on its edges, moist evergreen forests and teak forests
Soil
Deep, well-drained soils are required for the plant’s long taproot but the species can tolerate a wide range of soils including rich volcanic, fertile sands, clay loams and clays. It can tolerate shallow and infertile soils as well as short-term water logging but cannot tolerate permanent marshy or wetland conditions, or saline or alkaline soil
Plant Size
Up to 40 m (130 ft.) tall with a trunk diameter of 75 cm (2.5 ft)
Root
Long taproot
Stem
Pendulous, pubescent when young, striated with age
Bark
Light brown or greyish, smooth in young trees, in mature trees fissured and rough.
Leaf
Blade narrowly ovate to oblong-elliptic, (5-)10-22 cm long, 2.5-9 cm wide, chartaceous, dark green when fresh, oblong to lanceolate or elliptic, with 5-10 pairs of lateral veins, glabrous or glabrate above
Flowering season
June-July
Flower
Flower is drooping, long-stalked, with six narrow, greenish-yellow (rarely pink) petals, rather like a sea star in appearance
Fruit Shape & Size
1.5-2 cm long, 1.3-1.4 cm in diam., broadly ellipsoid to broadly obovoid, purple-black and juicy when ripe
Fruit Color
Dark green when young turning to black when ripen
Flesh Color
Yellow
Propagation
By Seed or cuttings
Flavor/Aroma
Tropical, fruity, fatty, sweet, and floral
Seed
Pale brown, oblong-elliptic in outline, flattened, 9 mm. long, 6 mm. wide, 2.5 mm. thick, with rugose or pitted faces.
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 51
கோவில் எண்கள் –88, 89, 90, 91, 92
88.அனுமன் சந்நிதியுடன் கவியூர் மஹாதேவர் கோவில்
த்ரிக்கவியூர் என்னும் ஊர் திருவல்லா அருகில் இருக்கிறது . சபரிமலை கோவில் இருக்கும் பதனம் திட்டா மாவட்டத்தில் இருக்கிறது . சிவன் கோவில் என்றபோதிலும் இங்குள்ள அனுமன் சந்நிதி புகழ் பெற்ற ஹனுமான் ஜயந்தியைக் கொண்டாடுகிறது .
பழங்கால மரச் சிற்பங்கள் இந்தக் கோவிலை அலங்கரிக்கின்றன . அவற்றில் நிறைய புராணக் கதைகளை வடித்துள்ளனர்.
ஆண்டுதோறும் சிவ பெருமானுக்கு ஒரு விழாவும் ஹநுமானுக்கு ஒரு விழாவும் நடக்கிறது.
சிறிய குன்றின் மீது கோவில் நிற்கிறது . மேலே செல்ல 21 பெரிய படிகள் உண்டு. கருவறையில் சிவனையும் பார்வதியையும் தரிசிக்கலாம். கீழே மஹாவிஷ்ணு கோவிலும் இருக்கிறது. கோவிலைச் சுற்றியுள்ள சுவர், பழங்கால மதில் ஆகும். குன்றின் மேலே குளமும் கீழே பெரிய ஏரியும் இருக்கின்றன.
மூலவரான சிவன் திருக்கவியூரப்பன் என்று அழைக்கப்படுகிறார். சிவலிங்கம் மணல் மற்றும் தர்ப்பை புல்லால் ஆனது என்று நம்பப்படுகிறது. அருகில் அவரது மகன்களான கணபதி, சுப்ரமணியர் உள்ளனர். கருவறையின் தெற்குப் பகுதியில் தட்சிணாமூர்த்தி, கணபதி உள்ளனர். தென்மேற்கில் அய்யப்பன் கிழக்கு நோக்கி மேற்கில் ராஜேஸ்வரியாக பார்வதி உள்ளனர். உள் முற்றத்தின் வடமேற்கு மூலையில் உள்ள பிரதான கருவறைக்கு வெளியில் அனுமன் உள்ளார். நாலம்பலத்திற்கு வெளியில் வடகிழக்கு முற்றத்தில் நாகர்கள் (நாகராஜா, நாக யட்சி), வடமேற்குப் பகுதியில் உள்ள பிரதான கோயில் வளாகத்தின் அடியில் அமைந்துள்ள கீழத்திருக்கோயிலில் நான்கு கைகளுடன் நின்ற நிலையில் மகாவிஷ்ணு ஆகியோர் உள்ளனர். (இது விக்கிபீடியா தரும் தகவல்.)
ஆயிரமாண்டுக்கும் மேலான பழமை உடைய கல்வெட்டுகள் இருப்பதால், இந்தக் கோவில் வரலாறு எழுதுவோருக்கு முக்கிய ஆதாரமாகத் திகழ்கிறது .
வட்ட வடிவில் அமைந்த கருவறையின் சுற்றளவு 46 அடி. முன் காலத்தில் 16 விழாக்கள் நடந்தன. தற்போது சிவனுக்கு நடக்கும் 10 நாள் உற்சவமும் அனுமனுக்கு நடக்கும் 7 நாள் உற்சவமும் முக்கியமானவை. பண்டிகை நாட்களில் சிறிய உற்சவங்களும் நடக்கும் .
சிவ பெருமான் உற்சவத்தில் பள்ளி வேட்டை, ஆராட்டு , இரவு முழுதும் நடக்கும் கதகளி நடனம் சிறப்பானவை .
ஹனுமத் ஜெயந்தி உற்சவத்தில் கடைசி நாளன்று, அருகிலுள்ள தேவி கோவிலின் சப்பரம் இங்கு வரும். மயிலாட்டம், கரகாட்டம், காவடியாட்டம் உள்பட கிராமீய நடனங்கள் அனைத்தும் நடக்கும்.
XXXXX
89.புதுக்குளங்கரா தேவி கோவில்
செங்கன்னூரிலிருந்து 7.கி.மீ. தொலைவில் ஓதரா என்னுமிடத்தில் பத்ரகாளி கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டது . ஆண்டுதோறும் நடக்கும் 10 நாள் விழாவில் ஓவ்வொரு நாளும் வெவ்வேறு முக கவசங்கள், கிரீடங்கள், உடைகள் அணியும் படையணி விழா நடக்கும் 1001 பாக்குமர ஓலைகளில் வர்ணம் அடித்து உண்டாக்கப்படும் தலையணி பைரவி கோலம் எனப்படும். பத்தாவது நாளன்று இது பயன்படுகிறது . பூப்பாத துள்ளல், காக்கரிசி நாடகம் முதலிய கலை நிகழ்ச்சிகள் இந்தக் கோவிலுக்கே உரித்தான சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகும்.
இந்த விழா மார்ச் மாதம் நடக்கும்.
xxxxx
90.அணிக்கட்டிலம்மா கோவில்
பத்தனம்திட்டா மாவட்டத்தில் , மல்லப்பள்ளியிலிருந்து 3.5 கி.மீ. தொலைவிலுள்ள அனிக்காடு என்ற கிராமத்தில் அணிக்கட்டிலம்மா கோவில் உள்ளது. ஒரே கர்ப்பக்கிரகத்தில் சிவனும் பார்வதியும் இருப்பது சிறப்பு அம்சம். மணிமாலா ஆற்றங்கரையில் எடப்பள்ளி வம்சத்தினர் 1600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய கோவில் இது. ஒவ்வொரு சிலையும் 4 அடி உயரம் கொண்டது .
தேவியின் பெயர் .அணிக்கட்டிலம்மா. ஒரு தாய் , தன்னுடைய குழந்தைகளைக் கவனிப்பது போல வேண்டிய வரம் தரும் தேவி அவள் .
கும்பம் மாதத்தில் இங்கு நடக்கும் பொங்கல் விழாவில் பல ஊர்களை சேர்ந்த தாய்மார்கள் பங்கேற்கிறார்கள் .நிறைய பெண்கள் , பொங்கல் வைக்க வருவதால் 2 கி.மீ தொலைவுக்கு பொங்கல் பானைகளைக் காணலாம்.
திருவல்லா, அருகிலுள்ள மற்றும் ஒரு தலம் ஆகும்.
Xxxx
91.நிரணம் திரிகபாலீஸ்வரர் கோவில்
நிரணம் என்னும் ஊர் திருவல்லாவிலிருந்து 8 கி.மீ தொலைவில் இருக்கிறது . இங்குள்ள திரிகபாலீஸ்வரர் கோவில் மிகவும் பழமையானது . கபாலீஸ்வரன் என்றவுடன் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் நம் நினைவுக்கு வருவார்.
நிரணம் வேறு ஒரு வகையிலும் புகழ் பெற்றது .நிரணம் கவிஞர்களான “கண்ணஸ்ஸர்கள்” மலையாள பக்தி இலக்கியத்தில் முன்னோடிகளாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் மலையாளத்தில் பாகவதம், இராமாயணம் மற்றும் பாரதத்தை எழுதியுள்ளனர். அவர்கள் 600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் .
Picture of Sapta Matrikas in Niranam.
xxxxx
92.பந்தளம் ஐயப்பன் கோவில்
ஐயப்பன் வளர்ந்த இடம் பந்தளம் ; ஐயப்பன் வரலாறே இங்குதான் தொடங்குகிறது; இங்கு பந்தள மகாராஜாவின் குடும்பக் கோவில் இருக்கிறது
செங்கன்னூரிலிருந்து 10 கி.மீ. சபரிமலையிலிருந்து 88 கி.மீ தொலைவு.
சிறப்பு அம்சங்கள்
மணிகண்டன் என்ற பாலகனாக 12 ஆண்டுகள் வளர்ந்து, கானகத்துக்குள் சென்று புலி மீது சவாரி செய்து, ராணிக்குப் புலிப்பால் கொண்டுவந்தார் மணிகண்டன்/ அய்யப்பன் என்பது புராணம் . இன்றும் புலி வாகனன் ஆகவே கோவிலில் காட்சி தருகிறார் .
ஐயப்பன் குளித்த குளம் எப்போதும் வெதுவெதுப்பாக இருக்கிறது .அவர் பயன்படுத்தியதாகக் கருதப்படும் ஓலைச் சுவைகளும் உள்ளன
சபரி மலை சாஸ்தாவுக்கு/ ஐயப்பனுக்கு மகரவிளக்கு அன்று அணிவிக்கப்படும் அத்தனை ஆபரணங்களும் பாதுகாப்புடன் பந்தளத்திலிருந்து புறப்பட்டு, மகர விளக்கிற்குப் பின்னர் திரும்பிவரும்..
இரண்டு பெட்டிகளில் (திருவாபரணம்) அணிகலன்கள்/ நகைகள் செல்லும். ஒரு பெட்டியில் சாஸ்தா அணியும் ரத்தினக் கிரீடம் , கையில் அணியும் கங்கணம், ஆரம் என்னும் மாலை , நூபுரம் என்னும் சிலம்பு, அங்குலீயம் என்னும் மோதிரங்கள், மார்பில் அணியும் பதக்கங்கள் ஆகியன ஒரு பெட்டியில் இருக்கும்.
மாளிகைப்புரத்து அம்மனுக்கு அணிவிக்கப்படும் நகைகள் இன்னும் ஒரு பெட்டியில் இருக்கும்.
—-subham—
Tags- மணிகண்டன், புலி மீது சவாரி, பந்தளம், நிரணம் திரிகபாலீஸ்வரர், அணிக்கட்டிலம்மா கோவில், அணிக்கட்டிலம்மா, ஹனுமத் ஜெயந்தி, கவியூர் ,மஹாதேவர், கோவில் , திருவாபரணம்