
Date uploaded in London – – 1 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

QUIZ SERIAL No.104
1.வைஷ்ணவ தேவி கோவில் எங்கே இருக்கிறது? எப்படிப் போகவேண்டும்?
xxxx
2.வைஷ்ணவ தேவி கோவிலின் சிறப்பு என்ன?
xxxxx
3.கோவிலுக்குச் செல்ல காட்டுப்பாடுகள் உண்டா ?
xxxx
4.கோவிலுக்குப் போவதற்கு குறுகிய குகை வழியாகச் செல்ல வேண்டுமா ?
xxxx
5.கோவிலுக்குள் யாரைத் தரிசனம் செய்யலாம் ?
xxxx
6.திருப்பதி மலை ஏறுவோர் கோவிந்தா கோஷம் போடுவார்கள்; சபரிமலை ஏறுவோர் சரணம் ஐயப்ப கோஷம் எழுப்புவார்கள்; வைஷ்ணவி தேவி கோவிலுக்குச் செல்லும் கோடிக்கணக்கான பக்தர் எழுப்பும் கோஷம் என்ன ?
xxxxx
7.பாண கங்கா ஆறு எங்கே இருக்கிறது? அதற்கும் தேவிக்கும் என்ன தொடர்பு ?
XXXX
8.பைரவன் காட்டிக்கும் ஐரோன்கட்டி BHAIRON GHATTI க்கும் வைஷ்ணவ தேவிக்கும் என்ன தொடபு?ர்
XXXX
9.அர்த்த குமாரி / குவாரி குகை Ardhkumari cave என்பது என்ன?
XXXX
10.கோவில் எப்போதும் திறந்திருக்குமா ?
XXXX
விடைகள்

1.இந்தியாவின் வடகோடி மாநிலமான ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு பிரதேசத்தில் திரிகூட மலையின் மேல் வைஷ்ணவ தேவி குகைக்கோயில் (VAISHNO DEVI TEMPLE) அமைந்துள்ளது . கத்ரா KATRA என்பது அடிவார ஸ்தலம்; இங்கிருந்து கால்நடையாகவும் யாத்திரை செல்லலாம். தற்காலத்தில் ஹெலிகாப்டர் வசதி, பாட்டரியால் இயங்கும் கார் வசதிகள் வந்துவிட்டன. அந்தக் காலத்தில் கால் நடையாக செல்ல முடியாதவர்கள் குதிரை மீதும், பல்லக்கிலும் சவாரி செய்வார்கள். இதற்கான வசதிகள் அங்கே உண்டு . ஒவ்வொன்றுக்கும் கட்டணம் உண்டு.
.ஜம்மு நகரிலிருந்து 42 கி.மீ தொலைவில் கத்ரா உள்ளது .
5200 அடி உயரத்தில் கோவில் இருப்பதால் 14 கி.மீ பல ஏறுவதற்கு மணி நேரம் ஆகும். மிகவும் கடினமான ஏற்றம்
ஹெலிகாப்டர், பாட்டரி கார் வேண்டியோர் கோவிலின் அதிகாரபூர்வ வெப்சைட்டில், ஆன் லைன் வழியாக டிக்கெட்டும் வாங்கலாம்.
பாட்டரி காரில் ஏறுவதற்கு ஆறு கி.மீ செல்ல வேண்டும் .மேலும் எட்டு கிலோமீட்டரில் கார் மூலம் கோவிலை அடையலாம் ; இது வயதான பயணிகளுக்கு பாதி தூரம் உதவும் சர்வீஸ்.
Helicopter services start from Katra on the foothills and the flight will drop you at Sanjhichatt. This visit to the sacred Shrine, enveloped by the clouds is the beginning of a breathtaking heli-hop.
The flight from Katra to Sanjichhat takes a total of approx. 08 minutes.
One way fare from Katra to Sanjichhat or Sanjichhat to Katra (Fare Rs.1830/- ) per passenger and Katra-Sanjichhat-Katra (Fare Rs.3660/-) per passenger.
Vaishnodevi Bhawan/temple is approx. 2.5 Km. from Helipad Sanjichhat.
xxxxx
2.நாட்டிலேயே அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவில்கள் பட்டியலில் வைஷ்ணவ தேவி கோவில் முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளது , அதிக சொத்து மதிப்பையும் கொண்ட கோவில்களில் ஒன்றாகவும் உள்ளது வருடத்திற்கு ரூ.500 கோடி வருமானம் வருகிறது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாக இருக்கும் இந்த குகை கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தின் மதிப்பு மட்டும் 1 .2 டன்னுக்கும் அதிகமாக இருக்கும்.
xxxx
3.உண்டு. கத்ரா நகரில் பதிவு செய்து அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும் .
விமானப்பயணம் போல கத்தி கபடா , சிகரெட் முதலியவற்றுக்கு அனுமதி இல்லை ; முஸ்லீம் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் இந்தக் கட்டுப்படுகள். மேலும் இந்திய பாதுகாப்புப்படைகள் 24 மணி நேரமும் இந்த இடத்தைப் பாதுகாக்க நிறுத்தப்பட்டுள்ளன . உடைக் (Dress Code) கட்டுப்பாடுகளும் உண்டு.
xxxx


4.முன்னர் இப்படி குகை வழியாகச் செல்ல வேண்டியிருந்தது . இப்போது இரண்டு செயற்கை சுரங்கப் பாதைகள் கட்டப்பட்டுவிட்டன. உள்ளே, வெளியே என இரண்டு வழிகள்; கோவில் தொடர்பான சம்பிரதாய சடங்குகளுக்கு மட்டுமே குகைப் பாதை திறக்கப்படுகிறது. ஒவ்வொரு பயணியும் இதன் வழியாகச் சென்றால் அதைக்கடக்க சில நிமிடங்கள் தேவைப்பட்டது .இதனால் சுரங்க வழிகள் கட்டப்பட்டன.
xxxxx
5. கோவிலுக்குள் சக்தியை / தேவியை தரிசிக்கலாம். துர்கா, லெட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரின் இருப்பிடமாக கருவறை கருதப்படுகிறது
மனித உருவில் ஒரு பக்தனுக்கு அருள்பாலித்த தேவி தனது உருவத்தை மறைத்து, ஐந்தரை அடி உயரம், மூன்று தலைகள் (பிண்டி) உள்ள பாறையாக மாறினாள்; இதுவே குகையில் உள்ள மூலவர். இது தவிர உற்சவ மூர்த்திகள் இருக்கின்றன.
Meanwhile, Vaishnavi decided to shed off her human form and assuming the face of a rock she immersed her self into meditation forever. Thus Vaishnavi, in the form of a five and a half feet tall rock with three heads or the Pindies on the top is the ultimate destination of a devotee. These Pindies constitute the Sanctum Sanctorum of the holy cave known as the shrine of Shri Mata Vaishno Devi Ji, which is revered by one and all.
xxxx
6.,“ஜெய் மாதா தி” Glory/Victory to Mother. அன்னையின் நாமம் வாழ்க/ வெல்க!
xxxxx
7.கத்ரா நகரிலிருந்து புறப்படும் யாத்ரீகர்கள் முதலில் சந்திப்பது இந்த ஆறுதான். சுமார் 2 கி.மீ. தொலைவு.
தேவியானவள் திரிகூட மலைக்குச் செல்லுகையில் அவருடன் வந்தவருக்கு தாகம் எடுக்கவே தேவி ஒரு அம்பு விட்டு இந்த ஆற்றை உருவாக்கினாள் என்பது ஐதீகம். பெரும்பாலான யாத்ரீகர்கள் இங்கே குளித்துவிட்டு மலை ஏறத்துவங்குகிறார்கள் .
XXXXX
8.திரிகூட பர்வதத்தின் மற்றொரு சிகரத்தின் உச்சியில் இருப்பது பைரவர் கோவில். இதுதான் அதிக உயரமான இடம் . தேவியைத் தரிசித்த பின்னர் இங்கும் வந்து சிவனை தரிசிக்கவேண்டும் என்பது சம்பிரதாயம். ஆனால் மூன்று கி.மீ பாதை மிகவும் ஏற்றம் கொண்டது. இப்போது கம்பி வழி ரயில் பாதை ROPE CAR போட்டுவிட்டதால் ஐந்தே நிமிடத்தில் கோவிலை அடையலாம்.
xxxxx
9.பவன் என்று அழைக்கப்படும் கோவிலை அடைவதற்கு முன்னால் அர்த்த குமாரி / குவாரி குகை இருக்கிறது . இங்கு ஒரு மகானுக்கு தேவி தரிசனம் தந்தாள் ; மேலும் பவனை அடையும் முன்னர் ஒன்பது மாதங்களுக்கு இந்தக் குகையில் தங்கி இருந்தாள் என்பதால் புனித இடமாகக் கருதப்படுகிறது . இது 15 அடி நீள குகை ; இதை கர்ப்பா ஜூன் என்பர்.
XXXX

10.ஆண்டு முழுதும் கோவில் திறந்திருக்கும். ஆயினும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை பருவ நிலை நன்றாக இருக்கும்.; போகும் வழி முழுவதும் நல்ல வசதிகளை செய்து இருக்கிறார்கள்; சாப்பிடுவதற்கு, தங்கி ஓய்வு எடுப்பதற்கு, மின்சார விளக்குகள் ஆகிய அனைத்தும் உண்டு . ஆகையால் எந்த நேரமும் பயணம் செய்யலாம்.
–subham—
Tags– வைஷ்ணவ தேவி, கோவில் பத்து, QUIZ ,