புத்தக அறிமுகம் : சேஷாத்ரிநாதன் எழுதிய இராமாயணம் – அயோத்யா காண்டம்- – 2 (Post.13,010)



WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.010

Date uploaded in London – — 15 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

புத்தக அறிமுகம் : ஆர். சேஷாத்ரிநாதன் எழுதிய இராமாயணம் – அயோத்யா காண்டம்- வால்மீகி – பாகம் 2

பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் இந்த நூலை வெளியிட்டுள்ளார்.

நூலில் உள்ள அத்தியாயங்கள் இவை:

1. சித்ரக்கூடத்தை அடைதல்

2. தசரதன் மரணம்

3. பரதன் வருகை

4. பரதன் – குஹன் சந்தித்தல்

5. பரதன் – இராமன் சந்திப்பு

6. தண்டகாரண்யத்தை அடைதல்

பிற்சேர்க்கை

இராமாயணம் பற்றிய ஆய்வு நூல் வரிசையில் திரு ஆர் சேஷாத்ரிநாதன் எழுதிய இந்த நூல் ஆறாவது நூலாக அமைகிறது.

தூத்துக்குடியில் பாரம்பரியம் மிக்க பெரும் இசைக் குடும்பத்தில் பிறந்த திரு சேஷாத்ரிநாதன் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் என பல்மொழிகளில் வல்லுநர். இராமாயண மஹாபாரத இதிஹாஸங்களையும் புராணங்களையும் நன்கு பயின்றவர். சென்னையில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையில்,  வால்மீகியின் ஸ்லோகங்களிலும், கம்பனின் கவிதைகளிலும், துளஸிதாஸரின் தோஹாக்களிலும் ஓராயிரம் விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றன என்றும் அவற்றை உபன்யாசகர்கள், உரையாசிரியர்கள், பேராசிரியர்கள், சான்றோர்கள் ஆகியோரின் உரைகள், புத்தகங்கள், கட்டுரைகள், காணொளிகள் மூலமாக தான் தெரிந்து கொண்ட சுவையான விஷயங்களைத் தொகுத்து கட்டுரைகளாகப் படைத்ததாகவும் தெரிவிக்கிறார்.

திரு சேஷாத்ரிநாதன் தனது அருமையான ஆய்வினால் பல்வேறு இரகசியங்களைத் தொகுத்துத் தந்திருக்கும் விதம் பயனுள்ளது. பாராட்டுக்கும் உரியது என்று அணிந்துரை வழங்கியுள்ளார் ச.நாகராஜன்.

வால்மீகி ராமாயணத்தை மட்டுமின்றி இராமாயண வெண்பா, வீரபத்திர ராமாயணக் கும்மி. நலுங்கு மெட்டு ராமாயணம், ராமாயண அம்மானை உள்ளிட்ட பல இராமாயண இசை, நாடக நூல்களிலிருந்து ஆங்காங்கு மேற்கோள்களைத் தந்து அவர் நூலில் தந்திருப்பதால் பல சிறந்த அறிஞர்கள், உபந்யாசகர்களின் கருத்துக்களை ஒருங்கே சேர்ந்து அனுபவிக்கும் வாய்ப்பை இந்த நூல் நல்குகிறது.

சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் ஆங்காங்கே மேற்கோளாகத் தரப்படுகின்றன.

பிற்சேர்க்கையில் வால்மீகி முனிவரின் அயோத்யா காண்டத்தில் உள்ள 119 ஸர்க்கங்களின் பட்டியலையும் நூலுக்கு உதவிய நூல்களின் பட்டியலையும் காண முடிகிறது.

நூலின் அச்சுப் பதிப்பு மிக்க தரத்துடன் அமைந்துள்ளது.

500 ஆண்டுகளுக்கு மேற்பட்டு அயோத்தியில் ராமர் கோவில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு, அயோத்தியில் ராமர் தனது சொந்த இருப்பிடத்திற்கு வந்து விட்ட இந்த காலகட்டத்தில், காலத்திற்கேற்ற அருமையான ஆன்மீக சேவையைப் புரிந்தமைக்காக திரு சேஷாத்ரிநாதன் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள் உரித்தாகுக.

அவர் தம் இந்தத் தமிழ்த் தொண்டு சிறக்க வாழ்த்துவோம்.

இந்த நூல் பற்றிய விவரங்களை www.pustaka.co.in இணைய தளத்தில் காணலாம். நூல் பற்றிய விவரங்களை 99803 87852 என்ற மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டும் பெறலாம். படிக்கடிஜிடல் வடிவத்தில் நூலைப் பெறஅச்சுப் பதிப்பாகப் பெற என இப்படி மூன்று விதங்களில் இந்த நூலைப் பெறலாம்.

***

tags- valmiki, ayodhya kanda

Leave a comment

Leave a comment