QUIZ அன்னம் பத்து QUIZ (Post No.13,023)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,023

Date uploaded in London – –   20 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

QUIZ  SERIAL No 113.

1.அன்னப் பறவையின் அரிய குணம் என்ன ? அதை முதலில் பாடிய கவிஞன்  யார் ?

XXXX

2.இந்த குணத்துக்கு ஸம்ஸ்க்ருத்தில் என்ன நியாயம் என்று பெயர்?. தமிழ் மொழியில் நாலடியார் நூலில் இதை எங்கே காணலாம் ?

xxxx

3.விவேக சிந்தாமணி நூலில் இந்தக் கருத்து எங்கே வருகிறது?

XXXX

4.அன்னத்தூவி  என்பது என்ன ?

xxxx

5.அன்னப்பறவை மூலம் காதலனுக்கு தூது அனுப்பிய புராண கால பெண்மணி யார் ?

xxxx

6.யாருக்கு அன்னப்பட்சி வாஹனம் ? ராஜ ஹம்சம் எங்கே வசிக்கிறது ? பிரம்மா எப்போது அன்னப் பறவை ஆனார்?

xxxx

7.வேதத்தில் அன்னம் பற்றி வருகிறதா ?

xxxx

8.அன்னம் பற்றி 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியம் என்ன சொல்கிறது ?

XXXX

9.அன்னப் பறவைக்கான வேறு சொற்கள் என்ன?

XXXX

10.ஹம்ச சந்தேசம் (அன்னம் விடு தூது)  காவியம் இயற்றியது யார்?

XXXX

ஹம்ச , பரமஹம்ச என்ற சொற்களுக்கு ஆன்மீகப் பொருள் உண்டு ; பரமஹம்ச யோகானந்தா, ராமகிருஷ்ண பரமஹம்சர் ; அங்கே ஹம்ச என்பது அன்னப் பறவை அல்ல.

அன்னத்தின் மாமிசம் பயன்படுவது பற்றியும் நூல்கள் பகர்கின்றன. அவற்றைத் தனியாகக் காண்போம்.

xxxx

விடைகள்

1.பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தாலும் பாலைமட்டும் பிரித்து எடுத்து சாப்பிடும் குணம் ஆகும். 2100 ஆண்டுகளுக்கு முன்னர் சாகுந்தலம் பாடி உலகப் புகழ்பெற்ற காளிதாசன்தான் இதை முதல் முதல் பயன்படுத்துகிறான் அதை ஏனைய புலவர்கள் ‘காப்பி’ அடித்தார்கள்

அதற்கும் முன்னர் யஜுர் வேதத்தில் இதன் அபூர்வ குணம் வந்தாலும் அங்கே சோமரசத்தை தண்ணீரிலிருந்து பிரிக்கும் குணம் என்றே சொல்லப்பட்டுள்ளது. பிற்காலத்தில் சோம ரசம், பால் என்று மாற்றப்பட்டுள்ளது.

.ஹம்சோ ஹி க்ஷீரமாதத்தே தன்மிஸ்ரா வர்ஜயத்யப:  – (சாகுந்தலம் நாடகம்), காளிதாசன்

xxxx

ஹம்ச: ஸ்வேதோ பக: ஸ்வேத: கோ பேதோ பக ஹம்சயோ:

நீரக்ஷீர விபாகே து ஹம்ஸோ ஹம்ஸோ பகோ பக: – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

தண்ணீரையும் பாலையும் கலந்து வைத்தால் அன்னம், பாலை மட்டும் எடுத்துக் கொள்ளும் நீரை விட்டுவிடும். கொக்கு, கொக்குதான்! அன்னம், அன்னப் பறவைதான்!

XXXX

2.ஹம்ச க்ஷீர நியாய என்று பெயர் ; ஹம்சம் என்பதே தமிழில் அன்னம் ஆகியது . க்ஷீரம் என்றால் பால் ; பாலும் தண்ணீரும் கலந்திருந்தாலும் பாலை மட்டும் உண்ணும் பறவை என்பது இதன் பொருள்; அதாவது தீயதை விடுத்து நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளுதல் என்பதை விளக்க வந்த உவமை .

கல்வி கரையில கற்பவர் நாள்சில

மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்

ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்

பாலுண் குருகின் தெரிந்து. – நாலடியார்: 135

– அதிகாரம்: கல்வி, பால்: பொருள்

xxxx

3.நற்குணங்கள் பதின்மூன்று

மயில் குயில் செங்காலன்னம் வண்டு கண்ணாடி பன்றி, அயிலெயிற்றரவு, திங்கள் ஆதவன் ஆழி கொக்கோடு, உயரும்விண் கமலம் பன்மூன்றுருகுண முடையோர் தம்மை, இயலுறு புவியோர் போற்றும் ஈசனென் றெண்ண லாமே.

மயில் (பொல்லாததை ஒதுக்கும் குணம்; அழகிய தோற்றம்), குயில் (இனிய பேச்சு), சிவந்த கால்களையுடைய அன்னம் (விவேகம்; பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தாலும்  பாலைமட்டும் அருந்தும்), வண்டு (தேன் போன்ற நல்லதை மட்டும் எடுத்தல்), கண்ணாடி (உள்ளதை உள்ளவாறு காட்டுதல் – உண்மை), பன்றி (உறவுகளோடு கூடி வாழ்தல்), கூர்மையான பற்கள் உள்ள பாம்பு (எதிரிகளுக்கு பயத்தைக் கொடுத்தல்), சந்திரன் (குளிர்ந்த பார்வை – கண்ணோட்டம்), சூரியன் (ஞானம்), கடல் (ஆழ்ந்த அறிவு), கொக்கு (ஒரு முகப்பட்ட மனம்),உயர்ந்த வானம் (பரந்த மனம், அகன்ற சிந்தனை), தாமரை (ஒட்டியும்  ஒட்டாத பற்றற்ற வாழ்க்கை) ஆகிய இப்பதின்மூன்று குணங்களும் ஒருங்கே உடையவரை உலகத்தார் அனைவரும் போற்றும் ஈசன் என்று கருதலாம்.- விவேகசிந்தாமணி

XXXXX

4.அன்னத்தூவி

 ‘’நெடுநல் வாடை’’யில் அன்னப் பறவையின் இறக்கை மென்மை போல (அன்னத்தூவி மயிர் போல) வெண்மையான, மென்மையான படுக்கைகள் இருந்ததாக எழுதி இருக்கின்றனர். நெடுநல்வாடை LINE 132

மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்

துணைபுணர் அன்னத் தூநிறத் தூவி

இணையணை மேம்படப் பாயணை யிட்டுக்………………………….131-133

இதே கருத்து திருக்குறள்கலித்தொகைசிலப்பதிகாரத்திலும் வருகிறது .

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம். – திருக்குறள் 1120

அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை; அதாவது பெண்களின் பாதம்  மென்மைக்கும் மென்மையானதாம்.

xxxx

5.நள- தமயந்தி கதையில் தமயந்தி தனது காதலனுக்கு அன்னப்பறவை மூலம் காதல் கடிதம் அனுப்புகிறாள் ; இது மஹாபாரத காலம் முதல் நடந்து வந்துள்ளது . புறநாநூற்றுப் புலவர் ஒருவரும் இப்படி அன்னம் மூலம் செய்தி அனுப்புகிறார் – பாடல் 67

பறவைகளைத் தூதுவிடப் பழக்கல்

பறவைகளின் மூலம் செய்தி அனுப்பும் கலை மஹாபாரதத்துக்கும் முன்னரே (கி.மு.3100-க்கும் முன்னதாக) நளன் காலத்திலேயே இருந்தது.

xxxx

6.சரஸ்வதியின் வாகனம் அன்னப் பறவை ; அவளை அன்ன வாஹினி என்பர்.

இமய மலையிலுள்ள மானச சரோவர்  ஏரியில் அழகிய, பெரிய அன்னப் பறவைகள் (ராஜ ஹம்சம்) இருக்கின்றன.

சிவ பெருமானின் அடி முடியைத்தேடும் போட்டியில் பிரம்மா அன்னம் ஆனார் ; விஷ்ணு பன்றியானார்.

xxxx

7.வேதத்தில் அன்னம்

உலகிலேயே மிகப்பழைய புஸ்தகமான ரிக் வேதத்தில் அன்னப்பறவை பற்றிய குறிப்புகள் உள்ளன . ரிக் வேதத்தில் எட்டுக்கும் மேலான  இ டங்களில் எல்லா மண்டலங்களிலும் புலவர்கள் அன்னத்தின் புகழ் பாடுகின்றனர் பின்புறம் கறுப்பு வண்ணம் உடைய பறவைகள், கூட்டமாக  ,அணிவகுத்துச் செல்லும் ;தண்ணீரில் நீந்தி மகிழும்  ; பெருத்த ஒலி  எழுப்பும் ; இரவிலும் முழித்திருக்கும் பறவைகள் என்று ரிக்வேதம் புகழ்கிறது . பாறைகளை குடியேற்றம் நடக்கையில் அவை இரவிலும் முழித்திருந்து பறப்பதை இப்பொழுதுதான் விஞ்ஞானிகள் அறிவர்.

சோமரசத்தை தண்ணீரிலிருந்து பிரித்தெடுக்கும் சக்தி அன்னப்பறவைக்கு உண்டு என்று யஜுர்வேதம் புகழ்கிறது . வெள்ளைக்காரன் சொல்லுவது போல சோமரசம் போதைப்பொருள் அல்ல என்பதற்கு இதுவும் ஒரு சான்று.. அஸ்வமேத யாகத்தில் பலியிடப்படும் 200-க்கும் மேலான பொருட்களில் இதுவும் ஒன்று

XXXX

8.சங்க இலக்கியத்தில் நிறைய இடங்களில் அன்னம், எகினம், குருகு பற்றிய செய்திகள் உள்ளன.

அவற்றில் முக்கியமானவற்றைக் காண்போம்:

1.குதிரையின் வேகம் வானத்தில்,  மழைத்துளியில் பறக்கும் அன்னத்தின் வேகம் போல விரைவாக இருந்தது- குறுந்தொகை 205

2.தென் திசைக்கடலில் மீன்களை உண்ணும் அன்னங்கள் வடதிசை இமய மலையை நோக்கிச் செல்வதாக தமிழ்ப் புலவர்கள் பாடுகின்றனர். இதை பறவைகள் குடியேற்றம் என்பர்; நீர்வாழ் பறவைகளை இப்பொழுதும் இதைச் செய்கின்றன. காளிதாசன் இன்னும் ஒருபடி சென்று அவை கிரௌஞ்ச கணவாய் வழியாக ( இப்பொழுது இதற்கு நீதி கணவாய் என்று பெயர்) வடக்கு நோக்கி (ரஷ்யா, ஐரோப்பா,) செல்வதையும் பாடியுள்ளார் . அவை பல்லாயிரம் மைல்களுக்கு ஆண்டுதோறும் இப்படி போய் வருவதாக, இப்போழுது கண்டுபிடித்துள்ளார்கள்  இதை நம்மவர் அன்றே அறிவர்

காண்க – புறநானூறு 67/பிசிராந்தையார்

நற்றிணை 356 /பரணர்

நற்றிணை70/ வெள்ளிவீதியார் மாற்றும் 54, அகம் 273.

முத்துமாலை வடிவம்

பல்லாயிரம் மைல்களுக்கு இரவிலும் பகலிலும் பறக்கும் பறவைகள் ஆங்கில V வடிவத்தில் பறக்கும் . இதை முத்துமாலை என்று காளிதாசன் வருணிக்கிறார். அதை நக்கீரரும் அப்படியே எழுதி முருகன் கழுத்து முத்து மாலை போல இருந்ததாகப் பாடுகிறார் -காண்க -அகம் 120.

அன்னப்பறவைகள்  பறக்கும்போது சப்தம் எழுப்பிக்கொண்டே பறக்கும். இந்த ஒலியை சிலம்பு ஒலியோடு (ரகுவம்சம் 13-33)காளிதாசன் ஓப்பிடுவான். அன்ன நடையைப் பெண்களின் நடைக்கும் ஒப்பிடுகிறான்; இவை அனைத்தும் தமிழிலும் உள்ளன

காளிதாசன் குறிப்பிடும் இடங்கள் — மேகதூதம் 23, 59, 70, 81; 59,71

சாகுந்தலம் 6-28;17, 33 மாளவிகாக்நிமித்ரம் -2-12

விக்ரம ஊர்வசீயம் 4- 2, 3, 4, 6, 20; 4-14 to 17; 59, 1

குமார சம்பவம் 1-30; 4-19; 8-59; 16-33,561-25, 19-40

ரகுவம்சம் 13-33; 1-25

XXXX

9.அஞ்சம் , எகினம், ஓதிமம், மராளம், விகங்கம், உன்ன வக்கிராங்கம் ,குருகு, கிரௌஞ்சம் 

XXXX

10.சுவாமி நிகமாந்த தேசிகன்

சீதைக்கு ராமன் அன்னம் மூலம் அனுப்பிய தூது

—– subham—–

Tags, Quiz, அன்னம் ,எகினம், பிரம்மா, சரஸ்வதி, வாகனம், வேதத்தில், நள -தமயந்தி, தூது, காதல், ஹம்ச, பாலையும் நீரையும் பிரிக்கும்

நவீன ஞான மொழிகள் பாகம் – 1(Post No.13,022)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.022

Date uploaded in London – — 20 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

புத்தக அறிமுகம்  – ச.நாகராஜன்

திரு சந்தானம் சீனிவாசன் அவர்கள் எழுதியுள்ள

வீன ஞான மொழிகள் பாகம் – 1 

10-12-2023 அன்று அமரரான திரு சந்தானம் சீனிவாசன் அவர்களை www.tamilandvedas.com  நேயர்கள் நன்கு அறிவர். இந்த ப்ளாக்கில் அவர் ஏராளமான கட்டுரைகளைப் படைத்துள்ளார். இப்போது அந்தக் கட்டுரைகள் புத்தக வடிவத்தைப் பெற்றுள்ளன.

ஞானமயம் ஒளிபரப்பு நிகழ்ச்சியிலும் அவர் பங்கு கொண்டு உரையாற்றியுள்ளார். அதைப் பாராட்டாதவர்களே இல்லை.

பலரது வேண்டுகோளுக்கிணங்க, சுமார் 500 மொழிகள் அடங்கியுள்ள நவீன ஞான மொழிகள் பாகம் – 1 இப்போது புஸ்தகா நிறுவனத்தின் சார்பில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

**

திரு சீனிவாசன் ஒரு அறிமுகம்

திரு சீனிவாசன் மதுரையில் மதுரை மில்லில் பல்லாண்டுகள் பணியாற்றிய பின்னர் ஓய்வு பெற்று சுயமாக நிர்வாக இயல் மற்றும் சுயமுன்னேற்றத் துறையில் ஆகச் சிறந்த பயிற்சியாளராக ஆனார். இந்தியா முழுவதும் பல்வேறு ஊர்களில் உள்ள தலையாய பெரும் நிறுவனங்கள்கல்லூரிகள் உள்ளிட்ட ஏராளமான இடங்களிலிருந்து அவருக்கு அழைப்புகள் குவிந்தன.

பற்பல ஆண்டுகள் தினந்தோறும் என்று சொல்லக் கூடிய அளவில் சிறிய குழுவினருக்கும்  பெரிய குழுவினருக்கும் பயிற்சிகள் தரப்பட்டன.

திரு சீனிவாசன் தனது ஜோக்குகளுக்குப் பெயர் பெற்றவர். அற்புதமான பெரும் எண்ணங்களை மனதில் விதைப்பதற்கு அவரது பேச்சாற்றலில் துணையாக நின்று உதவியது அவரது ஜோக்ஸ்.

கருத்துக்களை அவர் தேர்ந்தெடுத்த விதமே தனி.

தினமும் நூற்றுக் கணக்கில் பேப்பர்புத்தகங்கள்இணையதளம் ஆகியவற்றிலிருந்து துணுக்குகள்கட்டுரைகள்கார்ட்டூன்கள்பொன்மொழிகள் உள்ளிட்டவற்றைச் சேர்த்த வண்ணம் இருப்பார்.

இவை அனைத்தையும் அவர் தன்னிடம் ஆலோசனைக்கு வருவோரிடமும்தான் செல்லும் இடங்களில் ஆற்றிய உரைகளிலும் பயன்படுத்தலானார்.

ஒருவரின் முகத்தைப் பார்த்தவுடன் அவரைப் பற்றிய அனைத்தையும் அறிந்து அவரது பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லக் கூடிய அபூர்வ ஆற்றல் படைத்தவர். ஆகவே ஏராளமானோர் பல வருடங்களாக அவரை அணுகி ஆலோசனை பெற்று வந்தனர்.

**

அவரது நவீன ஞான மொழிகள் முதல் பாகத்திற்கு அவர் தந்த முன்னுரை இது:

கடந்த 50 ஆண்டு காலமாக சேர்த்து வந்த நூற்றுக் கணக்கான ஜோக்ஸ் புத்தகங்கள், மற்றும் பத்திரிகைகளில் நான் படித்து ரசித்ததில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து வழங்கும் தொகுப்பு இது.

இப்படி ஒரு தொகுப்பைச் செய்ய ஆரம்பித்ததற்கு ஒரு சுவையான பின்னணி உண்டு.

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் பிரசாரகர் திரு சிவராம்ஜி எனது வீட்டிற்கு வரும் போதெல்லாம் இவற்றில் சிலவற்றைக் காண்பித்த போது அவர் இதை நன்கு பெரிய அளவில் தொகுக்கலாமே என்று அன்புரை கூறினார்.

அவர் வார்த்தைகள் எப்போதுமே மந்திரச் சொற்களாகவே அமையும். அந்த வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்ட நான் இவற்றை முழு வீச்சில் தொகுக்க ஆரம்பித்தேன். அதன் விளைவு பிரம்மாண்டமான பீரோக்கள் முழுவதும் பெரிய பைல்கள்!

இவற்றை அவ்வப்பொழுது படித்துப் பார்த்த அனைவரும் இந்தத் தொகுப்பையும் இதற்கான முயற்சியையும் வெகுவாகப் பாராட்டினர்.

இந்த நூல் வெளிவரும் தருணத்தில் திரு சிவராம்ஜி அவர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

2020ஆம் ஆண்டு எனது சகோதரர் லண்டன் திரு ச.சுவாமிநாதன் நடத்திவரும் www.tamilandvedas.com இல் அவர் இந்தக் கட்டுரைகளைப் பிரசுரிக்க ஆரம்பித்தார். அனைவரின் கவனத்தையும் இந்த நவீன ஞான மொழிகள் ஈர்த்தன.

அவருக்கு எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

இதைப் படித்து, தொகுத்து வெளியிட்டால் எல்லோரும் ரசித்து மகிழ்வார்களே என்று தொகுக்க உதவி செய்த எனது சகோதரன் திரு நாகராஜனுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இவற்றைத் தொகுக்கும் போது பல்வேறு விதங்களில் எனக்கு உதவி செய்த எனது மனைவி, மகன்கள், மகள், மருமகள்கள், சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக!

இதைப் படித்து அவ்வப்பொழுது என்னைப் பாராட்டி ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி.

இதை டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

சென்னை                          சந்தானம் சீனிவாசன்

19-7-2023 

**

நூலுக்கு அணிந்துரை தந்துள்ள ச.நாகராஜன் தனது உரையில் கூறியிருப்பதன் ஒரு பகுதி :


காலம் காலமாக எல்லா நாகரிகங்களிலும் நிலைத்து நிற்பவை அருமையான சுருக்கமான பழமொழிகளே.

இவை அனைத்துமே கேட்பதற்கு அருமையாக இருக்கும்; சுவையான கருத்துக்களைத் தரும். அனுபவத்தின் எதிரொலியாக அவை விளங்கும்.

நவீன அறிவியல் யுகத்தில் நமது வாழ்க்கை முறை பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டிருப்பது கண்கூடு.

அதன் விளைவாக பழமொழிகளைப் போல நவீன ஞான மொழிகள் உருவாகி விட்டன.

இவை பல நாடுகளிலும் பல நாகரிகங்களைச் சேர்ந்தோர், நாடு, மொழி, அந்தஸ்து, பால், இனம், ஜாதி, வயது என்ற அனைத்து பேதங்களையும் தாண்டி அவ்வப்பொழுது உதிர்த்த மொழிகளாகும்.

இவை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.

இப்படிப்பட்ட நவீன ஞான மொழிகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் போது அவற்றின் முழுப் பயனை நம்மால் பெறமுடியவில்லை.

ஆகவே இவற்றை ஊக்கமும் உத்வேகமும் கொண்டு இதற்காகவே நேரத்தையும் நுண்ணறிவையும் அர்ப்பணித்து ஒருவர் தொகுத்தாலேயே அவற்றை நாம் ஒரு சேர ஒரே இடத்தில் பெற முடியும்.

இப்படிப்பட்ட அரும் பணியில் தன்னை அர்ப்பணித்து இரவு பகல் பாராமல் ஆயிரக்கணக்கான இதழ்களைப் படித்து அவற்றில் தகுதியாக உள்ளனவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை வரிசைப்படி தொகுத்தவர் திரு சந்தானம் சீனிவாசன்.

இதைப் படிப்போர் சிரிக்கலாம்; அத்தோடு பல்வேறு விஷயங்களைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கலாம். இதனால் பயனும் பெறலாம்.

*

நூலில் உள்ள அத்தியாயங்கள் இதோ:

அத்தியாயங்கள்

   1. மதிப்பெண்ணும் மதிக்காத பெண்ணும்!

 2. உலகில் தலை சிறந்த ஜோடி!

 3. ரேஷனும் பேஷனும்

 4. கடவுளும் மனைவியும்

 5. நம்ம பொண்ணுங்க! நம்ப பசங்க!

 6. வேதனையும் சாதனையும்

 7. ரேஷன் கார்டும், ஆதார் கார்டும்

 8. வாழ்க்கையும் வழுக்கையும்

 9. பொறுமையும் பொறாமையும்

10. பேச்சும் மௌனமும்

11. முடியும் ஆனா முடியாது

12. ‘அ’க்கு அடுத்து ‘ஆ’

13. வேண்டியதும் வேண்டாததும்

14. கல்லும் சொல்லும்

15. முட்டாளும் புத்திசாலியும்

16. பாவமும் பாசமும்

17. நட்பும் காதலும்

18. உண்மையும் பொய்யும்

19. பாரமும் தூரமும்

20. அன்பும் அந்தரங்கமும்

21. போரும் சமாதானமும்

22. பேனாவும் பென்சிலும்

23. பொறுமையும் எரிச்சலும்

24. நடிகையும் நடிகனும்

**

இதை வெளியிட்ட புஸ்தகா பதிப்பக உரிமையாளர் டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் பாராட்டுக்குரியவர். நல்ல முறையில் நேர்த்தியாக புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது.

புத்தகம் பற்றி அறிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் போன் எண் : 9980387852

நூல் பற்றிய விவரங்களை www.pustaka.co.in இணையதளத்தில் பார்க்கலாம்.

Parrots in Hinduism (Post No.13,021)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,021

Date uploaded in London – –   19 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Though Hindus consider all living beings as manifestations of God, some animals and birds are held closer to god. It has got more symbolic meaning than the actual animal or bird. Parrot is one of the birds like peacock that appears in many God’s pictures.

Goddess Madurai Meenakshi, Kanchi Kamakshi, Vaishnavite saint Andal are shown with parrots. They hold the parrots in their hands or the birds sit on their shoulders. Saivite saint Sambandar who lived 1400 years ago also sing that goddess Parvati has parrot in her hand.

Several other temples use them as God’s Vahanas/vehicles during festival times.

Hindu God and Goddess of Love Manmatha and Rathi are shown riding on parrot in many temple sculptures. In some books, Kubera, Lord of Wealth , also has this bird as his Vahana.

The parrots represent recitation of Vedas. They have the capacity to repeat exactly what they hear. In London newspapers news items appeared where they helped to catch the thieves, paramours, lost birds etc.

They recite Vedas is also corroborated by 1400 year old Tamil Saivite hymns called Thevaram. Great Saivite  saint Sambandar who was contemporary of Mahendra Pallava and Pandya King Nedumaran sang in many hymns saying Brahmin houses keep parrots as pets and they recite Vedas. It is in many verses, not in one or two. Saints treat them as messengers to Gods in Messenger poems.

It also played a role in Adi Shankara’s life. Not only Tamil Brahmins but also North Indian Brahmins were raising parrots as pets, and they also recited Vedas. When Shankara was directed by Kumarila Bhatta to Mandana Mishra, Shankara went about to meet him. He saw women, nearer the town, bathing in the river Narmadha and asked them in Sanskrit the location of Mandana Mishra’s house. The women who were well versed in Sanskrit threw a puzzle at Shankara. They replied through a poem in which they said go to a house in which the parrots are reciting Vedas and there you will find the great scholar. This anecdote shows that parrots reciting Vedas is familiar thorough out India.

There is another interesting story where a saint became a parrot. Five hundred years ago Tamil Saint Arunagirinathar lived in Northern part of Tamil Nadu. He was challenged by a jealous Tantric named Sampanthandan. In all the contests held in the court of a local king, Arunagiri won. He was the author of great Tamil work called Thiruppugaz on Lord Skanda/ Kartiketya. In the last test, Sampanthandan told that if Arunagiri fetch a Parijata flower from Devaloka/ heaven he would accept his own defeat. Arunagiri took the challenge and entered the body of a dead parrot and went to heaven to get the divine flower. In the mean time, Sampanthandan, who was a master of Black Magic, burnt the body of Arunagiri ;when he returned he couldn’t enter his body again and remained a s a parrot till his end.

In Sanskrit Kavyas we see parrots’ beaks are compared to women’s red mouth, their voice to cuckoos, their hair to peacocks feathers and their gait to swans. Tamils follow the same description. In the 2000 year old Sangam Tamil books, poets have used parrot in more than 70 poems.

Though Brahmins and religious Hindus don’t consume meat, Ayurveda books mention parrot meat or flesh is good for curing certain diseases. It is more in folk (naïve) medicine.

The meat of the parrot (śuka) is astringent-sour, rūkṣa (kaṭu) in Vipāka, śītala, useful in phthisis, cough and wasting; constipating, light and appetiser.

From Persia to India, they figure in many folk tales where their intelligence is highlighted. In Hindu temple sculptures it is shown with beautiful heavenly women.

In Vedas and Kama sutra

Kamasutra was written by Vatsyayana 2000 years ago. He was the first one in the world to give a clear syllabus for women. He has listed 64 arts to be studied and mastered by clever women. One of the 64 arts is to teach and train the parrots and mynahs to repeat the words.

In Rig Veda, the oldest book in the world, we find Sanskrit word Suka for parrot. It is used in the poem of magical cure for jaundice. In the Yajur Veda, it is one of the 200++ living beings and objects that were sacrificed in Asvamedha Yaga. In Atharva Veda, it appeared in one of the verses.

Śuka (शुक, ‘parrot’) is mentioned in the Rigveda, where a desire is expressed to transfer to the Śuka and the Ropaṇākā the yellowness of jaundice. The bird is included in the list of sacrificial victims at the Aśvamedha (‘horse sacrifice’) in the Yajurveda-saṃhitās. It is described as yellow and as ‘of human speech’ (puruṣa-vāc). According to Bloomfield, this word is the correct reading for the second half of the obscure Śāriśākā of the Atharvaveda.

Vyasa’s Son named Parrot!

Greatest writer of the Hindu world was Veda Vyasa. He authored Mahabharata, compiled the Four Vedas and arranged 18 Puranas and taught them to his son Suka (meaning is parrot). But of the 18 Puranas, Bhagavata Purana is the most famous one. It gives the life history of Lord Krishna. And it repeats in umpteen places SuKa said this…….. so, all the Vaishnavites know his name very well. There is a custom followed by orthodox Hindus to recite the whole Bhgavata Purana in Seven Days through a Pundit/scholar. It is called Bhagavata Saptaham (Seven Day Bhagavata). When Parikshit was waiting for his death Suka recited it to him in Seven Days.

Thus parrot appears in the stories of Vyasa’s son Sukar, Adi Shankara, Sambandar, Andal, Arunagiri and later poets who used it in their Messenger Poems (அழகர் கிள்ளை விடு தூது என்ற நூலின் ஆசிரியர்  பலபட்டடைச் சொக்கநாதப்பிள்ளை).

—subham—

Tags- Parrot, Suka, in Hinduism, Tamil literature, Vahanas, Thevaram, Arunagirinathar, Andal, Adi Shankara, Meenakshi

QUIZ கிளி பத்து QUIZ (Post No.13,020)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,020

Date uploaded in London – –   19 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

QUIZ  SERIAL No 112.

1.கிளியைக் கையில் வைத்திருக்கும் கடவுள்கள் யார் யார் ?

XXXX

2.கிளியின் பெயர் உடைய, வியாசரின் மகன் யார் ? அவர் ஏன் விஷ்ணு பக்தர்களிடம் பிரபலம் அடைந்தார் ?

xxxxx

3.கிளியை வாகனமாக உடையவர் யார் ?

xxxx

4.ஆதிசங்கரர் கதையில் கிளி வரும் இடம் எது ?

xxxx

5.அருணகிரிநாதர் வாழ்வில் கிளி எங்கே வருகிறது?

xxxx

6.கிளியின் வேறு பெயர்கள் என்ன? வாத்ஸ்யாயனர் காம சாஸ்திரத்தில் கிளிகள் பற்றி என்ன சொன்னார்?

xxxx

7.சங்க இலக்கியத்தில் கிளிகள் பற்றிய குறிப்புகள் உள்ளனவா ?

xxxx

8.வேதத்தில் கிளிகள் பற்றிய குறிப்புகள் உள்ளனவா ?

XXXX

9.கிளி மாமிசம் சாப்பிடலாமா ?

XXXX

10.கிளிகள் பிராமணர் வீடுகளில் வேதம் ஒதுவதாக பாடியது யார்? தேவாரத்தில் கிளிகள் பற்றி என்ன சொல்லப்படுகிறது?

xxxx

விடைகள்

1.மீனாட்சி , காமாட்சி கையில் கிளி இருக்கிறது; அடியார்கள் என்று எடுத்துக்கொண்டால் ஆண்டாள் கையிலும் கிளி உண்டு. கையில் இல்லாத இடங்களில் தோள் மீது கிளி நிற்கும் . பெரும்பாலும் பார்வதியின் பல வடிவங்களாக உள்ள தேவி சிற்பங்களில் கிளியைக் காணலாம்.

xxxx

2.வியாசரின் மகன் சுகர் ; அவர் கிருஷ்ணரின் பெருமை பேசும் பாகவத புராணத்தை பரீட்சித் மன்னனுக்கு எடுத்துரைத்தார் ; இதனால் பாகவதம் படிப்போர் சுகரின் பெயரை மறவார் . இப்பொழுதும் ஏழு  நாட்களில் பாகவதத்தை முற்றோதும் பாகவத சப்தாஹம் ஊர்தோறும் நடைபெற்றுவருகிறது. சுக/ர் என்றால் கிளி.

xxxxx

3.மன்மதன், ரதி ஆகிய இருவருக்கும் கிளி வாகனம்; குபேரனுக்கும் கிளி வாகனம் ஆகும்

xxxx

4.மண்டனமிஸ்ரருடன் வாதம் செய்ய சங்கரர் சென்று கொண்டிருந்த சமயத்தில் நர்மதை நதிக்கரையில் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர் ; அவர்களிடம் மண்டனமிஸ்ரர் வீடு எங்கே? என்று சங்கரர் வினவினார். வயதில் சிறியவரான ஆதி சங்கரனைப் பார்த்து அவர்கள் கிண்டலாக சம்ஸ்க்ருத மொழியில்  ஒரு புதிர் போட்டார்கள் ; எந்த வீட்டுத்  திண்ணையில் கிளிகள் வேதங்களை இடைவிடாமல் முழங்குகின்றனவோ அந்த வீட்டுக்குப் போ என்றார்கள் பெண்மணிகள் ; சங்கரரும் ஸம்ஸ்க்ருதத்தில்தான் கேள்வி கேட்டார்.

xxxx

5.அருணகிரிநாதர் மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்னும் புலவன் பல போட்டிகளில் தோல்வி அடைந்தான்; இறுதியில் அருணகிரியை மடக்குவதற்காக பாரிஜாத மலரைக் கொண்டுவரும்படி கேட்டான். அருணகிரி தனது  உடலை விட்டு, ஒரு இறந்த கிளியின் உடலில் புகுந்து பாரிஜாதம் வளரும் விண்ணுலகம் சென்றார். அதற்குள் சம்பந்தாண்டான் அருணாகியின் உடலை எரித்துவிடவே அருணகிரிநாதர் கிளியின் உருவத்திலேயே இறுதிக்காலத்தைக் கழிக்க நேரிட்டது .

xxxxx

6.கிளியின் வேறு பெயர்கள் : கிஞ்சுகம் , தத்தை, சுகம், அரி, காரி, கீரம் , கிளி, கிள்ளை;

வாத்ஸ்யாயனர் எழுதிய காமசூத்திரத்தில் பெண்கள் கல்விக்கான சிலபஸ் கிடைக்கிறது. இதுதான் உலகிலேயே  முதல் பெண்கள் கல்வி பாடத்திட்டம் (WORLD’S FIRST SYLLABUS FOR WOMEN) . அதில் பெண்கள் கற்கவேண்டிய 64 கலைகள் பட்டியலில் கிளிகளையும் மைனா பறவைகளையும்  பேசவைக்கும் கலையும் பெண்களுக்குரியது என்று எழுதியுள்ளார் . இது 2000  ஆண்டுப்பழமையான நூல் .

xxxx

7.கிளி , கிள்ளை   என்ற பெயர்களில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் எழுபதுக்கும் மேலான இடங்களில் கிளி வருகிறது

(பிற்காலத்தில் தூது இலக்கியத்தில் கிளி இடம்பெறுகிறது அழகர் கிள்ளை விடு தூது என்ற நூலின் ஆசிரியர் பலபட்டடைச் சொக்கநாதப்பிள்ளை).

xxxx

8.வேதத்தில் கிளி

ரிக் வேதத்தில் சுக என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல் இருக்கிறது மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும் மந்திரத்தில் இது வருகிறது ; கிளியின் மீது மஞ்சள் நிறத்தை ஏறச்செய்யும் மந்திரம் அது. யஜுர் வேதத்தில் அச்வமேத யாகத்தில் கிளியும் பலியிடப்படுவதாக மந்திரம் இருக்கிறது .

அதர்வ வேதத்தில் சாரி சாகா என்ற சொல்லிலும் கிளி குறிப்பிடப்படுவதாக ப்ளூம்பில்ட் கருதுகிறார் .

Śuka (शुक, ‘parrot’) is mentioned in the Rigveda, where a desire is expressed to transfer to the Śuka and the Ropaṇākā the yellowness of jaundice. The bird is included in the list of sacrificial victims at the Aśvamedha (‘horse sacrifice’) in the Yajurveda-saṃhitās. It is described as yellow and as ‘of human speech’ (puruṣa-vāc). According to Bloomfield, this word is the correct reading for the second half of the obscure Śāriśākā of the Atharvaveda.

xxxx

9.பதினேழாம் நூற்றாண்டு போஜன குதூகல நூலில் கிளி மாமிசம் குறிப்பிடப்படுகிறது. சரக சம்ஹிதையிலும் இதைக்காணலாம்

கிளி மாமிசம் புளிப்புச் சுவை உடையது;குளிர்ச்சி தருவது; காச நோய் , இருமல்,மலச்சிக்கல், பசியின்மை ஆகியவற்றைத் தீர்க்கும்

The meat of the parrot (śuka) is astringent-sour, rūkṣa (kaṭu) in Vipāka, śītala, useful in phthisis, cough and wasting; constipating, light and appetiser.

xxxx

10.சம்பந்தர்; அவர் பாடிய திருமுறைப்பாடல்களில் ஏராளமான இடங்களில் கிளியைக் குறிப்பிட்டு அவைகள் பிராமணர் வீடுகளில் வேதத்தைக் கேட்டுக் கேட்டு, திரும்பிச் சொல்லிக்கொண்டு இருக்கின்றன என்கிறார் .

தேவாரத்தில் கிளிகள்

வேதப் புலவர்கள் பல நாள்களும் தம்மிடம் பயிலும் மாணவர்களுக்கு வேதம் பயிற்றுவிப்பதைக் கேட்டுத் தேன் நிறைந்த பொழில்களில் வாழும் கிளிகள் நாள்தோறும் வேதங்களுக்குப் பொருள் சொல்லும் சிறப்பினதாய திருவீழிமிழலை ஆகும்- என்று பாடுகிறார் சம்பந்தர்

ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று

நேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர் நெறியளித்தோ னின்றகோயில்

பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோது மோசைகேட்டு

வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருட்சொல்லு மிழலையாமே.

கிளி வாழைப் பழத்தைக் கீறி உண்ணும் ; சொற் பயின்று (இறைவ னைத்  ) துதிக்கும். திருநின்றியூர் என்னும் தலத்திற் கிளிகள் செந்தமிழ் பயின்றிருந்தன. தேவி திருக் கரத்திற் பந்தும் கிளியும் தங்கும். ஆரூர்ப் பெருமானே உணர்த்தத் தலைவி கிளியைக் தூது அனுப்புகின்றாள். கிளியின் பேச்சு மாதர்களின் பேச்சுக்கு உவமிக்கப்பட்டுள்ளது.

தேவி

                உள்ள மாருரு காதவரூர்விடை 

                வள்ள லார்திரு வாரூர் மருங்கெலாந்

தெள்ளு மோசைத் திருப்பதி கங்கள்பைங்

கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்.

     பைங்கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள் – இக்கிள்ளையும்

பூவையும் மக்கள் தத்தம் மாளிகை முதலியவற்றில் வளர்ப்பவை.

கிளிகள் தாம் பயிலும் மக்கள்பாற் கேட்ட பழக்கத்தால்

பதிகங்களைப் பாடுவன. “சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை”

என்பது வழக்கு. “பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோது

மோசை கேட்டு. வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள்

பொருட்சொல்லும் மிழலையாமே” என்பது தேவாரம்.

“பண்மொழியா லவனாமம் பலவோதப் பசுங்கிள்ளை

வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும்                                வெண்காடே”

                  – திருஞான – சீகாமரம் – 6

“வேதத் தொலியாற் கிளிசொற் பயிலும் வெண்காடே”

                     – மேற்படி காந்தாரம் – 2

என்ற தேவாரங்களும் காண்க.

     பூவை – நாகணவாய்ப்பறவை. மக்கள்பாற் கேட்டுப்

பயின்றவற்றைக் கிளிகள் பாட, அவ்வினத்தைச் சேர்ந்த பூவை

கேட்பன என்றார்.

XXXXXX

BONUS Q

10.கிளிகள் பற்றிய பழமொழிகளை பூர்த்தி செய்யுங்கள்

ஸம்ஸ்க்ருதப் பழமொழி :

ந வ்யாபார சதேனாபி சுகவத் பாடயதே பக:- ஹிதோபதேசம்

நூற்றுக் கணக்கான முறை முயற்சி செய்தாலும் ……….கிளி போலப் பேச முடியாது.

1. ………..காத்த கிளி போல

2.கிளியை வளர்த்து ………….. கொடுக்கலாமா

3…………………….. பேச்சும் மயிலைப் போல நடையும்

4.மாமரம் பழுத்தால்……………………, வேப்ப மரம் பழுத்தால் …………………………..

ANSWERS

ஸம்ஸ்க்ருதப் பழமொழி — கொக்கு,

1.இலவு ; 2. பூனை கையில்; 3. கிளியைப் போல; 4. கிளிக்காகும்காக்கைக்காகும்

xxxx

 xxx subham xxxx

Tags- கிள்ளை விடு தூது , காம சூத்திரம், 64  கலைகள்,கிளி , வாகனம், தேவி கைகளில் , வேதம், ஆதிசங்கரர், அருணகிரி, சுகர், சம்பந்தர், தேவாரம், பழமொழிகள்

நவகிரகங்கள் – கலைக் களஞ்சியம் (Post No.13,019)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.019

Date uploaded in London – — 19 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

திரு சந்தானம் சீனிவாசன் அவர்கள் எழுதியுள்ள நவகிரகங்கள் – கலைக்களஞ்சியம் :புத்தக அறிமுகம்  – ச.நாகராஜன்

10-12-2023 அன்று அமரரான திரு சந்தானம் சீனிவாசன் அவர்களைப www.tamilandvedas.com  நேயர்கள் நன்கு அறிவர். இந்த ப்ளாக்கில் அவர் ஏராளமான கட்டுரைகளைப் படைத்துள்ளார். இப்போது அந்தக் கட்டுரைகள் புத்தக வடிவத்தைப் பெற்றுள்ளன.

ஞானமயம் ஒளிபரப்பு நிகழ்ச்சியிலும் அவர் பங்கு கொண்டு உரையாற்றியுள்ளார். அதைப் பாராட்டாதவர்களே இல்லை.

பலரது வேண்டுகோளுக்கிணங்க நவகிரகங்கள் கலைக்களஞ்சியம் இப்போது புஸ்தகா நிறுவனத்தின் சார்பில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

**

திரு சீனிவாசன் ஒரு அறிமுகம்

திரு சீனிவாசன் மதுரையில் மதுரை மில்லில் பல்லாண்டுகள் பணியாற்றிய பின்னர் ஓய்வு பெற்று சுயமாக நிர்வாக இயல் மற்றும் சுயமுன்னேற்றத் துறையில் ஆகச் சிறந்த பயிற்சியாளராக ஆனார். இந்தியா முழுவதும் பல்வேறு ஊர்களில் உள்ள தலையாய பெரும் நிறுவனங்கள்கல்லூரிகள் உள்ளிட்ட ஏராளமான இடங்களிலிருந்து அவருக்கு அழைப்புகள் குவிந்தன.

பற்பல ஆண்டுகள் தினந்தோறும் என்று சொல்லக் கூடிய அளவில் சிறிய குழுவினருக்கும்  பெரிய குழுவினருக்கும் பயிற்சிகள் தரப்பட்டன.

திரு சீனிவாசன் தனது ஜோக்குகளுக்குப் பெயர் பெற்றவர். அற்புதமான பெரும் எண்ணங்களை மனதில் விதைப்பதற்கு அவரது பேச்சாற்றலில் துணையாக நின்று உதவியது அவரது ஜோக்ஸ்.

கருத்துக்களை அவர் தேர்ந்தெடுத்த விதமே தனி.

தினமும் நூற்றுக் கணக்கில் பேப்பர்புத்தகங்கள்இணையதளம் ஆகியவற்றிலிருந்து துணுக்குகள்கட்டுரைகள்கார்ட்டூன்கள்பொன்மொழிகள் உள்ளிட்டவற்றைச் சேர்த்த வண்ணம் இருப்பார்.

இவை அனைத்தையும் அவர் தன்னிடம் ஆலோசனைக்கு வருவோரிடமும்தான் செல்லும் இடங்களில் ஆற்றிய உரைகளிலும் பயன்படுத்தலானார்.

ஒருவரின் முகத்தைப் பார்த்தவுடன் அவரைப் பற்றிய அனைத்தையும் அறிந்து அவரது பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லக் கூடிய அபூர்வ ஆற்றல் படைத்தவர். ஆகவே ஏராளமானோர் பல வருடங்களாக அவரை அணுகி ஆலோசனை பெற்று வந்தனர்.

**

அவரது நவகிரகங்கள் கலைக் களஞ்சியம் என்ற நூலுக்கு அவர் தந்த முன்னுரை இது:

தமிழ் உலகில், ‘நவகிரகங்கள் – கலைக் களஞ்சியம்’ என்ற இந்த நூலை சமர்ப்பிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இளமை முதல் ஜோதிடத்தில் ஒரு ஈடுபாடு எனக்கு உண்டு. மதுரையில் தினமணியில் ராசிபலன் எழுதி வந்த திரு ரங்கநாத ஜோசியர், காரைக்குடியைச் சேர்ந்த, ஓலைச் சுவடிகள் மூலம் சித்த வைத்தியம், ஜோதிடம் இவற்றை நுணுக்கமாக அறிந்து எங்களுக்குக் கூறி வந்த, ஶ்ரீ கிருஷ்ண ஐயர், முகத்தைப் பார்த்தவுடன் வருங்காலம் உரைக்க வல்ல மதுரை காளி ஜோஸியர் உள்ளிட்டோருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டதால் பல விஷயங்களை அறிந்து கொண்டேன்.

பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட ஶ்ரீ ஐயப்பனின் விக்ரஹத்தை மீண்டும் கண்டெடுத்து அச்சன்கோவிலில் பிரதிஷ்டை செய்து அச்சன்கோவிலை நிர்மாணித்த ஆயக்குடி ஶ்ரீ ஸ்வாமிஜி கிருஷ்ணா அவர்கள் எங்கள் குடும்பத்தினருக்கு குரு. அவர் அருளால் பல தெய்வீக நுட்பங்கள் விளங்கின.

இது தவிர பல பழம் பெரும் ஜோதிட புத்தகங்கள், சாஸ்திர நூல்கள் இவற்றையும் இல்லத்தில் எனது நூலகத் தொகுப்பில் சேர்க்க முடிந்தது.

இதன் பலனாகவே இந்தத் தொடரை என்னால் உருவாக்க முடிந்தது.

லண்டனிலிருந்து வாரம் தோறும் ஒளிபரப்பாகி வந்த ஞானமயம் ஒளிபரப்பில் நவகிரகங்களைப் பற்றிப் பேசும் வாய்ப்பை திரு கல்யாண்ஜி மற்றும் திரு ஸ்வாமிநாதன் ஆகியோர் வழங்கினர்.

உலகெங்கிலுமிருந்தும் இதைக் கேட்ட பல்லாயிரக் கணக்கானோர் இந்த உரைகளை ரசித்துக் கேட்டதோடு பயனுள்ள உரைகள் என்று பாராட்டினர்.

இவை உடனடியாக கட்டுரைகளாக லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களின் www.tamilandvedas.com  பிளாக்கிலும் பிரசுரிக்கப்பட்டன.

இந்த நூலை உருவாக்குவதில் இவர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அனைவருக்கும் எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

அடுத்து உரைகளை நூல் வடிவில் ஆக்க உதவி செய்த திரு ச.நாகராஜன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

இவற்றைத் தொகுக்கும் போது பல்வேறு விதங்களில் எனக்கு உதவி செய்த எனது மனைவி, மகன்கள், மகள், மருமகள்கள், சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக!

இதைப் படித்து அவ்வப்பொழுது என்னைப் பாராட்டி ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி.

இதை டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

சென்னை                          சந்தானம் சீனிவாசன்

31-7-2023

**

நூலுக்கு அணிந்துரை தந்துள்ள ச.நாகராஜன் தனது உரையில் கூறியிருப்பதன் ஒரு பகுதி :
நவகிரகங்களைப் பற்றிய அரிய விவரங்களை இது தருகிறது. ஆகவே பிரச்சினைகளைத் தீர்க்கும் கலைக்களஞ்சியமாக அமைகிறது.

வாழ்க்கையை நலமுள்ளதாகவும், வளமுள்ளதாகவும் ஆக்குவதற்கு உதவும் நூல்கள் மிகச் சில தான். அவற்றில் மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது இந்த நூல்

இதை நமக்கு அளிக்கும் திரு சந்தானம் சீனிவாசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தனது ஆழ்ந்த அறிவுடன் அனுபவத்தைக் குழைத்து அவர் இந்தக் கட்டுரைகளை உருவாக்கியுள்ளார்.

இதை நம்மில் ஒவ்வொருவரும் படித்து மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரியப்படுத்தினால் அது அவர்களுக்கு நாம் செய்யும் பெரிய உதவியாக அமையும்.

**

நூலில் உள்ள அத்தியாயங்கள் இதோ:

1. சூரியனே போற்றி!

2. அம்புலிமாமா வாவா!

3. மங்களம் தரும் அங்காரகன்!

 4. புத்தி தரும் புதன்!

 5. குரு பகவான்!

 6. சௌபாக்யம் அருளும் சுக்கிரன்!

 7. சனீஸ்வர பகவான்!

 8. ராகு பகவான்!

 9. கேது பகவான்!

10. நவக்ரஹ மஹா மந்த்ரம்!

**

அருமையான இந்த கலைக்களஞ்சியம் அனைவராலும் படிக்கப்பட வேண்டிய ஒரு புத்தகம். இதை வெளியிட்ட புஸ்தகா பதிப்பக உரிமையாளர் டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் பாராட்டுக்குரியவர். நல்ல முறையில் நேர்த்தியாக புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது.

புத்தகம் பற்றி அறிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் போன் எண் : 9980387852

நூல் பற்றிய விவரங்களை www.pustaka.co.in இணையதளத்தில் பார்க்கலாம்.

***

Cuckoo/Koel Bird/ Kokila in Hinduism (Post No.13,018)

cuckoo and crow

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,018

Date uploaded in London – –   18 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Hindus give utmost respect to all birds and animals and trees and creepers. Koel (Kuyil) குயில் is a Tamil word used in most of the languages in India or its Tamil sound cuckoo is used. It will be interesting to do research on the words Koel and Kokila. They are onomatopoeic words (sound based words).

xxxx

The Sanskrit word for Koel is Kokila, which is a popular feminine name used by Indian women (My aunt’s name in Mayuram and another aunt in Nagpur was Kokila). From Kalidasa to Bharatiyar , all famous poets sang about it’s beautiful voice.

xxxx

Great Saivite saint Manikka vasagar used Koel bird to pray to god Shiva in Tiruvasagam under the title Kuyil Pathu குயில் பத்து .

xxxx

Greatest of the Modern Tamil Poets , Subrahmanya Bharati (bhaarathiyaar) composed a whole poem with the title Kuyil Paattu குயில் பாட்டு . The theme of the song is Love.

Kuyil’s Song (Kuyil Pattu) குயில் பாட்டு is a narrative poem in nine parts, totalling about 750 lines. It may be called a fable, because the principal character is a Kuyil and two of the other characters are a monkey and a bull. It may be called a dream-sequence, for some of the events partake of the tantalising quality of dreams. A fable and a dream poem, it is also a sort of vision seen or imagined by the poet.

The framework of the story is rather simple. It is neither tangled nor complex. The story which is narrated is in keeping with the traditions and beliefs of our race. The transmigration of souls, the relentless pursuit of love down the ages, the overwhelming power of fate which shapes even the course of love, all this is traditional and having this as an effective scaffolding, he has raised an immortal palace of art.

Bharati’s “Kuyil Pattu” discloses the splendour of human love with a keen sustained undercurrent of allegory; the material love with a spiritual glow pervades the entire poem in an exalted diction; simple words, hurled by the poet’s creative spell, speak lofty truths from height of emotional excellence, and candour.

Music, O sweet music;
And when music fails,
And when music fails,
Only cacophony.
Beat the rhythm, beat the rhythm:
And when rhythm fails,
Mere confusion.
Divine the poetic voice;
But when poetry fails,
Only the dross of the earth. (used from Wisdom Library website)

xxxx

Andal used Koel like Manikavasagar in her divine poem Nachiyar Tirumozi (நாச்சியார் திருமொழி).  It has 143 verses which is part of the 4000 divine hymns of Nalayira Divya Prabandham.  Kuyil Pattu or cuckoo’s song forms the fifth decad where Andal requests cuckoo to sing in praise of Krishna.

xxxx

Bharatidasan was a great disciple of Bharati. He started a magazine called Kuyil/ Cuckoo . He imitated Bharati in many of his poems; His love for Tamil language is well known; but he was misguided by anti Hindu, anti India and anti god bad elements of Dravidian movement. Following it, he advocated for separate Tamil Nadu from India. Because of his Anti India writings his Kuyil magazine was banned.

xxx

In Subhashitas

Sanskrit has another word for Cuckoo – Pikah.

There is a popular Subhasita in the language

काकः कृष्णः पिकः कृष्णः कः भेदः पिककाकयो ।

वसंत समये प्राप्ते काकः काकः पिकः पिकः ।

It mocks at imitations.

Crow is black, cuckoo is black… what’s the difference between the two. Come spring, a crow is a crow, a cuckoo is a cuckoo

.

In appearance, a crow and a cuckoo aren’t very different. A crow is black and so is a cuckoo. How can we tell the difference? It doesn’t matter… Come spring, the difference automatically becomes evident! While a cuckoo sings melodiously, a crow, well…, crows.  Lot of people dress like VIPs, pretend like VIPs; dull wits pretend like scholars; once they open their mouths people will find their true nature .

This Subhasita is based on a nature’s wonder. Cuckoo lays its eggs in Crow’s nest and the innocent crow takes care of them. By the time the difference is noted, cuckoos fly away. Cuckoos never build its own nests. It is a kind of cheating. This behaviour is used as similes in literature.

xxxx

In Puranas

In  Siva Purana

Wisdom Library adds more points from Hindu scriptures:  Kokila (कोकिल) refers to “cuckoos”, according to the Śivapurāṇa 2.2.22. Accordingly as Śiva said to Sitā:—“[…] O my beloved, beautiful woman, clouds will not reach the place where I have to make an abode for you. […] O beloved, do you wish to go to the Himālayas, the king of mountains wherein there is spring for ever, which abounds in hedges and groves where the cuckoos (kokila) coo in diverse pleasing ways and which contains many lakes filled with cool water and hundreds of lotuses”. Chandas (prosody, study of Sanskrit metres)

xxxx

Kokila in Chandas /Prosody

Kokila (कोकिल) is the name of a catuṣpadi metre (as popularly employed by the Apabhraṃśa bards), as discussed in books such as the Chandonuśāsana, Kavidarpaṇa, Vṛttajātisamuccaya and Svayambhūchandas.—Kokila has 25 mātrās in each of their four lines, divided into groups of 4, 5, 5, 4, 3 (IS) mātrās.

xxxx

Cuckoo meat for departed souls

Dharmashastra (religious law)

Kokila (कोकिल) refers to “coeal”. The word is used throughout Dharmaśāstra literature such as the Manusmṛti. (See the Manubhāṣya, verse 8.250)

Kokila (कोकिल) refers to the bird “Cuckoo” (Eudynamys scolopacea enumerated in almost several Smṛtis in context of specifying the expiations for killing them and their flesh being used as a dietary article to give satisfaction to the manes (Pitṛs) in Śrāddha rites. These are elaborated especially in the Manusmṛti, Parāśarasmṛti [chapter VI], Gautamasmṛti [chapter 23], Śātātapasmṛti [II.54-56], Uśānasmṛti [IX.10-IX.12], Yājñavalkyasmṛti [I.172-I.175], Viṣṇusmṛti [51.28-51.29], Uttarāṅgirasasmṛti [X.16].

Please use and support Wisdom Library site; it is free; support it with donations.Doing wonderful work.

—subham—

Tags Koel. Kuyil, Bharati, Andal, Manikkavasagar, Kuyil Pattu, Kuyil Paththu, Cuckoo, Kokila, in Hinduism , குயில் பாட்டுகுயில் பத்து குயில்

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 9 (Post No. 13,017)

உத்தாமணி

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,017

Date uploaded in London – –   18 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

Part 9 

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

By முனிசாமி முதலியார் 

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

சென்ற பகுதியில் 80  வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………

 xxx

81 .பித்த சுரத்திற்கு

ஈச்சங்குத்து- வெட்டிவேர்- கோவைக்கிழங்கு -விளாமிச்சம் வேர்- வில்வம் வேர்- சித்தாமுட்டி-  தாமரைக்கிழங்கு- சந்தனத்தூள்- இலுப்பைப்பூ- இவை சமன்கொண்டு இரண்டுபடி தண்ணீர் வைத்து கால்படியாக கிஷாயம் வடித்து இருவேளை கொடுக்க எப்படிப்பட்ட பித்தமும் சாந்தியாகும்; சுரம் தணியும்

XXXXX

82.கண் சதை வளர்த்திக்கு

ஈருள்ளியும் குறிஞ்சாநிலையும் சமயிடை எடுத்து சிதைத்து கண்ணில் 4-5 துளி பிழியவும். இப்படி இரு இரண்டோரு  வேளை பிழியத் தீரும்.

XXXX

83 .வைசூரியினால் மலஜலம்காட்டினால்

ருள்ளி- கற்கண்டு- வகைக்கு விராகனிடை 5 இவை இரண்டும் அரைத்து அரைக்கால் படி  ஆமணக்கெண்ணெயில் கலக்கி  கொஞ்சம் கொஞ்சம் உட்கொண்டு வந்தால் மலஜலக்கட்டு உப்பிசம் இவை தீரும்

XXXX

84 .கணக்கழிச்சலுக்கு

ஈருள்ளி பத்து திரி – கருவேப்பிலை ஈர்க்கு- ஒரு  பிடி – சீரகம் விராகநிடை  1 வெந்தயம் விராகநிடை 2 – இவைகளை வறுத்துக் கிஷாயம் வைத்துக் கொடுக்கவும் தீரும்

XXXX

85 . வைசூரியினால் ரத்த பேதி கண்டால்

ஈருள்ளியை ஆவின் நெய்யில் வேகவைத்துக் கொடுத்தால் நிவர்த்தியாகும் .தேக திடமறிந்து 3-4 வேளை வரை நிதானமாய் கொடுக்கவேண்டியது .

இதுவுமது

ஈருள்ளிச்சாறும் பசு நெய்யும் சமனாய்க் கலந்து வீசம்படி வீதம் மூன்று பொழுது கொடுத்தால் , கடுப்பு- இரத்தம்- சீதம் இவை நிவர்த்தியாகும்

XXXX

86 . க்ஷயத்திற்கு

ஈனாத எருமைக்கிடாவின் சாணிப்பாலை வடிகட்டி ஆவின் பாலும் நெய்யும் சமன் கலந்து அரைக்கால்படி வீதம் அந்தி சந்தி கொடுத்துவர தீரும். க்ஷயம் 96 -ம்  சாந்தியாகும் . பத்தியம் புளி தள்ளவும் .

XXXX

87 .நேத்திரபேதி

ஈனாத எருமை சாணிப்பாலில் சித்தாமணக்குப் பருப்பை இழைத்து கண்ணில் தடவ துர்நீர் யாவும் நீங்கிவிடும்; நேத்திரம் சுத்தியாகும்

XXXXX

உ 

88 .ஆமைகணத்துக்கு 

உத்தாமணி – பாவட்டை- காவட்டை- சங்கு- முருங்கை- துனா- பொடுதலை — இவைகளின் ஈர்க்கு வகைக்கு ஒரு  பிடியிடித்து  ஒரு படி தண்ணீர் விட்டு- ஓமம் -திப்பிலி- வசம்பு- ஆமையோடு- கருஞ்  சீரகம் – ஓர் நிரையாய் அறைத்து துணியில் முடிந்து கூடப்போட்டு எட்டொன்றாய் வற்றக்காய்ச்சி மேற்படி மருந்தையெடுத்து அந்த கிஷாயத்தினால் அறைத்து கழச்சிக்காயளவு மூன்று வேளை கொடுத்துவர தீரும்.

இதுவுமது

உத்தாமணிக் கொழுந்து- வசம்பு- உள்ளி– விளாம் ஓடு –ஓமம்- ஆமையோடு- வகைக்கு  இருகளஞ்சி எடுத்து இடித்து வறுத்து  விளாங்காய்ப் பிரமாணம் வெண்ணெயில் போட்டுக் காய்ச்சிக் கொடுக்கத் தீரும் .

இதுவுமது 

உத்தாமணி- சங்கு- தூதுவளை- கொடும்பை – இவைகளின் வேர் வகைக்கு ஒரு பிடி நறுக்கி ஒரு படி தண்ணியில் போட்டு பொடுதலை- ஓமம்- திப்பிலி- வசம்பு- மிளகு- பூண்டு- ஆமையோடு ஓர் நிறையாய்  இடித்து துணியில் முடிந்து போட்டுக் காய்ச்சி மேற்படி மருந்தை அறைத்துக் கொடுத்து வந்தால் ஆமை கணம் சுரம் தீரும் .

XXXXX

89.பிள்ளைகள் கழிச்சல் வாந்திக்கு

உத்தாமணிச் சாறு- எருமை வெண்ணெய் – வகைக்கு கால் படி- கருஞ்சீரகம்-  ஒரு களஞ்சி அறைத்துப் போட்டு காய்ச்சி மேற்படி மருந்தை  அறைத்துக் கொடுத்துவரத் தீரும் .

XXXX

90 .மாந்தக் கழிச்சலுக்கு

உத்தாமணி வேளை, நாய் வேளை, குப்பைமேனி -இவைகளைத் தட்டி  சாறு வாங்கி துட்டு இடை உள்ளுக்குள் கொடுத்து மேலுக்கு துவாலையிடவும்

சுபம்—

Tags- உத்தாமணி, முனிசாமி முதலியார் , மூலிகை அதிசயங்கள்-, part 9

ஹோண்டா : தோல்விகளால் துவளாதீர்கள் – 2 (Post No.13,016)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.016

Date uploaded in London – — 18 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலர் 14-2-2024இல் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு தரப்படுகிறது.

ஹோண்டா : தோல்விகளால் துவளாதீர்கள் – 2

ச.நாகராஜன்

தோல்விகளில் துவளாதே

வாழ்க்கை முழுவதும் அவருக்கு ஏற்பட்ட தோல்விகள் பல. தடைகளும் பற்பல.

இரண்டாம் உலகப் போரில் இடாவா என்ற இடத்தில் இருந்த அவரது தொழிற்சாலை மீது குண்டு போடப்பட்டு அது முற்றிலுமாக சேதம் அடைந்தது.

1945இல் மிகாவா என்ற  இடத்தில் இருந்த அவரது தொழிற்சாலை பெரிய பூகம்பம் ஒன்றினால் சேதமடைந்தது.

ஆனால் ஒருபோதும் அவர் மனம் தளர்ந்ததில்லை.

உலகப்போர் முடிந்த பிறகு கார் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆகவே அனைவரும் சைக்கிளுக்குத் திரும்பி வர ஆரம்பித்தனர். ஹோண்டா ஒரு சிறிய எஞ்சினை சைக்கிளுடன் இணைத்தார். அனைவரும் அதை விரும்பி வாங்க ஆரம்பித்தனர். ஆனால் தேவைக்குத் தகுந்தபடி அவரால் உற்பத்தி செய்ய முடியவில்லை.

ஜப்பானை வலிமையுள்ளதாக்க தனக்கு உதவி செய்யுமாறு 18000 சைக்கிள் விற்பனையாளர்களுக்கு அவர் உத்வேகமூட்டும் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். 5000 பேர்கள் அவருக்கு உதவ முன்வந்தனர். அதை வைத்து சிறிய எஞ்சின்கள் ஏராளமானவற்றை அவர் உருவாக்கி அனைவருக்கும் தந்தார்.

முதலில் அவர் உருவாக்கிய எஞ்சின்கள் சற்று பெரிதாக இருந்ததால் சந்தையில் விற்பனையாகவில்லை. ஹோண்டா விடவில்லை. தொடர்ந்து முயற்சி செய்து சிறிய மாடல் எஞ்சினை உருவாக்கினார். விற்பனை சக்கை போடு போட்டது. சூப்பர் கப் என்ற அந்த மாடலை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும்  வாங்க ஆரம்பித்தன.

இதே போல இன்னொரு முறை ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் கார் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட மறுபடியும் களத்தில் இறங்கினார் ஹோண்டா. இந்த முறை அவர் சிறிய காரைத் தயாரித்தார். எரிபொருள் சிக்கனத்தைக் கொண்ட அந்த காரை அனைவரும் வாங்க இந்த முறையும் பெரிய வெற்றி அவருக்குக் கிடைத்தது!

1973ஆம் ஆண்டு வரை தனது நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை அவர் வகித்தார். பின்னர் ஆலோசகராக மாறினார். பீப்பிள் பத்திரிகை

1980ஆம் ஆண்டின் உலகின் ஆகப்பெரும் மனிதர்கள் 25 பேரில் ஒருவராக அவரை அறிவித்தது. அனைவரும் அவரை ‘ஜப்பானின் ஹென்றி போர்டு’ என்று புகழ ஆரம்பித்தனர்.

பழகுவதற்கு இனிமையானவர், தவறுகளைச் சுட்டிக் காட்டும் போது உடனடியாக அப்படியே ஏற்றுக் கொள்வார். அதைத் திருத்திக் கொண்டு முன்னேறுவார். இரண்டு மகன்களையும் இரண்டு மகள்களையும் அவர் அன்புடன் வளர்த்தார்; நற்பண்புகளை தன் வாழ்க்கை மூலம் வாழ்ந்து காட்டினார்.

ஆனால் தனது மகன்களை அவர் வற்புறுத்தி தனது நிறுவனத்தை மேற்கொள்ளச் செய்ய அவர் விரும்பவில்லை. அவரது மகன் ஹிரோடோஷி ஹோண்டா தனக்கென ஒரு மோட்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

தனது தொழிலகத்தில் அவர் தரத்தைக் கண்டிப்பாக வற்புறுத்துவார். நேரம் தவறாமை அவரது முக்கியப் பண்பானது. தனது தொழிலாளர்கள் மத்தியில் அவர் மிஸ்டர் தண்டர்ஸ்டார்ம் – மிஸ்டர் இடிமின்னல் புயல்- என்று அறியப்பட்டார்.

ஹோண்டாவிற்கும் அவரது மனைவி சசிக்கும் விமானம் ஓட்டுவது பொழுது போக்கு. ஸ்கீயிங், பலூனில் பறப்பது உட்பட்ட பல பொழுதுபோக்குகளில் அவர் தனது 77ஆம் வயதிலும் ஈடுபட்டது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.

மறைவு

ஹோண்டா 1991ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ஈரல் கோளாறு  காரணமாக மரணமடைந்தார். அவர் மரணமடையும் போது அவர் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் 470. காப்புரிமைகள் 150. ஜப்பான் நாட்டின் உயரிய விருதான ‘ப்ளூ ரிப்பன்’ விருது அவருக்கு தரப்பட்டது.

கடந்த 40 ஆண்டுகளில் 3 கோடி வாகனங்களை அமெரிக்காவில் ஹோண்டா நிறுவனம் உருவாக்கியுள்ளது.

3200 டாலருடன் ஆரம்பிக்கப்பட்ட அவரது நிறுவனம் 30 பில்லியன் டாலர் அதாவது 3000 கோடி டாலர் (ஒரு அமெரிக்க டாலரின் இன்றைய மதிப்பு ரூ 83) என்ற அளவுக்கு வளர்ந்திருந்தது.

ஹோண்டாவின் தயாரிப்பு நிறுவனங்கள் இப்போது அமெரிக்கா, சீனா, இந்தியா, கனடா, பிரிடன் ஆகிய நாடுகளில் உள்ளன. அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும்ஹோண்டா அக்கார்ட் காரைப் பார்க்கலாம்.

ரேஸுக்கான ஹோண்டாவின் மோட்டார்சைக்கிள்கள் உலகப் பிரசித்தி பெற்றவை.

150 நாடுகளில் ஹோண்டாவின் கார்களும், மோட்டார் சைக்கிள்களும் இன்று ஓடுகின்றன.

வெற்றிக்கு வழி

ஹோண்டாவின் கருத்துப்படி அவர் தனது வெற்றிக்குக் காரணமாகக் கூறியவை இரண்டு விஷயங்கள்

1) ட்ரையல் அண்ட் எர்ரர் வழிமுறை: ஒரு பொருளைத் தயாரித்து சோதனை செய்து அதில் உள்ள குறைகளைக் களைந்து கொண்டே இருந்தால் நல்ல பொருள், தரத்துடன் உற்பத்தியாகி விடும்.

2) தோல்விகளால் துவளாதீர்கள் ; ஒரு பொருளைக் கண்டுபிடித்து தயாரிக்கும் போது ஏற்படும் தோல்விகளைக் கண்டு துவளாதீர்கள்

Every Stumbling Block is a stepping stone – ஒவ்வொரு தடைக்கல்லும் வெற்றிக்கான படிக்கல் – என்று உணருங்கள்.

ரிஸ்க் எடுக்க பயப்படக் கூடாது என்பது அவரது கொள்கை.

மூன்று கொள்கைகளைத் தனது கம்பெனி கொள்கைகளாக அவர் கொண்டிருந்தார். வாங்குவதில் சந்தோஷம், விற்பதில் சந்தோஷம், உருவாக்குவதில் சந்தோஷம் ஆகியவையே அந்த மூன்று.

அவர் ஒரு முறை கூறினார் இப்படி: பலரும் வெற்றி பெற வேண்டுமென்று விரும்புகின்றனர். வெற்றியானது பல தோல்விகளுக்கும் சுயபரிசோதனைகள் செய்த பின்னருமே அடையப்படும் என நான் நம்புகிறேன். வெற்றி பெற ஒரு சதவிகித உழைப்பே தேவை மற்ற 99 சதவிகிதம் தடைகளை மீறி முன்னேறுவது தான்! தடைகளைக் கண்டு பயப்படவில்லை என்றால் வெற்றி தானே உங்களை வந்து அடையும்!

அவரது வாழ்க்கை போதித்த போதனை :தோல்விகளைக் கண்டு துவளாதீர்கள் என்பது தான்.

****

QUIZ குயில் பத்து QUIZ (Post No.13,015)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,015

Date uploaded in London – –   17 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

QUIZ SERIAL No.111

1.குயில்- காகம் பற்றிய பிரபல சம்ஸ்க்ருத சுபாஷிதம் என்ன சொல்கிறது ?

XXXX

2.இந்தப் பாடலுக்கு (சம்ஸ்க்ருத சுபாஷிதம்) காரணம் என்ன ?

XXXX

3.இந்தியாவின் கவிக்குயில் யார் ?

XXXX

4.சங்க இலக்கியத்தில் குயில் எங்கெங்கு வருகிறது ?

XXXX

5.குயில் பத்து பாடிய சைவப் பெரியார் யார் ?

XXXX

6.மயில் அகவும் காகம் கரையும் குயில் என்ன செய்யும் ?

XXXX

7.குயில் பழமொழிகள் -பூர்த்தி செய்யுங்கள்

………….. இருந்தாலும் குரங்கு போல் ஒரு வைப்பாட்டி வேணும்.

………… இடக் காகம் கண்டு களிக்க.

………….. கூவுகிறான்.

XXXX

8.குயில் பாட்டு எழுதிய தமிழ்க் கவிஞன் யார் ?

XXXX

9.குயில் என்ற பெயரில்  பத்திரிக்கை நடத்தியவர் யார் ?

XXXX

10.குயிலுக்குள்ள தமிழ், ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் என்ன ?

XXXX

விடைகள்

1.काकः कृष्णः पिकः कृष्णः कः भेदः पिककाकयो ।

वसंत समये प्राप्ते काकः काकः पिकः पिकः ।

காகமும் கருப்பு குயிலும் கருப்பு இரண்டுக்கும் என்ன வித்தியாசம்

வசந்தகாலம் வந்துவிட்டால் காகம் ரகம்தான் ; கையில் குயில்தான்

வசந்த காலம் வந்துவிட்டால் காகம் கரையும்; குயில் கூவும் ; அப்போது சாயம் வெளுத்துவிடும்!

XXXX

2.குயிலுக்கு முட்டையிடத்  தெரியும் ஆனால் முட்டையை அடைகாத்து குஞ்சசுபொரிக்கத் தெரியாது .ஆகையால் காக்கையின் கூட்டில் முட்டையிடும். காக்கைக்கு வேறுபாடு தெரியாதாகையால் அதை காக்கும் ; குஞ்ச்சுகள் வெளியே வந்தபோதுதான் குரல் ஓசை வித்தியாசத்தால் உண்மை வெளிப்படும்; நிறத்தைப் பொறுத்தமட்டில் இரண்டும் கருப்புதான்.

xxxx

3.சரோஜினி சட்டோபாத்தியாயா என்ற வங்காளி பிராமணப் பெண் கவிஞர்; பின்னர் முத்யாலா கோவிந்தராஜுலு நாயுடுவைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டதால் சரோஜினி நாயுடு என்று அழைக்கப்பட்டார். சுதந்திர போராட்ட தியாகி; கவிதைகள் இயற்றியதால் இந்தியாவின் கவிக்குயில் என்று அவரை  அழைத்தனர்.

XXXX 

4.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் சுமார் 35 இடங்களில் குயில் பற்றிக் கவிஞர்கள் பாடியுள்ளனர்

XXXX

5.மாணிக்க வாசகர்

XXXX

6.குயில் கூவும் .

xxxx

7.குயில் போலப் பெண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல் ஒரு வைப்பாட்டி வேணும்.

குயில் முட்டை இடக் காகம் கண்டு களிக்க.

குயிலைப் போலக் கூவுகிறான்.

XXXX

8.தேசீய கவி சுப்பிரமணிய பாரதியார்.

XXXX

9.பாரதிதாசன் ; பின்னர் தேச விரோதக் கருத்துக்கள் காரணமாக தடை செய்யயப்பட்டது .

XXXX

10.கோகிலம் ,களகண்டம், கோரகை , பிகம், பரபுட்டம் அந்நியம்

—subham—

Tags- குயில் பத்து, குயில் பாட்டு, கோகிலம்

ஹோண்டா : தோல்விகளால் துவளாதீர்கள் – 1 (Post13,014)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.014

Date uploaded in London – — 17 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலர் 14-2-2024இல் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு தரப்படுகிறது.

ஹோண்டா : தோல்விகளால் துவளாதீர்கள் – 1 

ச.நாகராஜன்

மேட் இன் ஜப்பான் 

ஹோண்டா – இந்தப் பெயரை அறியாதவரே இன்று இருக்க முடியாது. ஏனெனில் சாலையில் நாம் பார்க்கின்ற கார்களும் மோட்டார் சைக்கிள்களும் பெரும்பாலும் ஹோண்டாவாகவே இருக்கும். ஜப்பானுக்கு ஒரு தனி கௌரவத்தைத் தந்தது ஹோண்டா நிறுவனத் தயாரிப்புகள்.

ஆனால் ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் ‘மேட் இன் ஜப்பான்’ என்று பொறிக்கப்பட்டிருந்த வார்த்தைகளை எந்த ஒரு பொருள் மீதும் பார்த்தாலும் அனைவரும் எள்ளி நகையாடுவர். அது தரமில்லாத உதவாக்கரை பொருள் என்று தூக்கி எறிவார்கள்.

இந்த அவமானத்தைத் தாங்க முடியாத ஜப்பானியர்கள் ஒரு உறுதிமொழியை எடுத்தனர். தரமில்லாத எதையும் விற்பனைக்கு அனுப்பாதே என்று.

நாளடைவில் தரக் கட்டுபாடுகள் அதிகமானது. உற்பத்தி உத்திகள், கடுமையான மேற்பார்வை சோதனைகள் எல்லாமாகச் சேர்ந்து ஜப்பானில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் தரத்தில் நம்பர் ஒன்

என்ற பெயரைப் பெற ஆரம்பித்தன.

இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்ல, ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்புகளைச் சொல்லலாம்.

ஹோண்டா உற்பத்தி செய்யும் கார், மோட்டார் சைக்கிளைப் பார்ப்பவர்கள் அந்த நிறுவனத்தின் நிறுவனரான ஹோண்டாவைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பிறப்பும் இளமையும்

சோய்சிரோ ஹோண்டா (Soichiro Honda) 1906ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் நாளன்று ஜப்பானில் உள்ள கோம்யா என்ற கிராமத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார்தந்தை ஜிஹெய் ஒரு கொல்லர். தாய் மைகா ஒரு நெசவாளி. ஏழ்மையான குடும்பம் என்றாலும் மனதிருப்தியுடன் ஒழுக்கத்துடன் வாழ்ந்த குடும்பம் அது.

ஹோண்டாவின் இளமைப் பருவத்தில் எங்கு பார்த்தாலும் சைக்கிள் மயம். ஆகவே சைக்கிள் ஓட்டுபவர்கள் தங்கள் சைக்கிளை பராமரிக்கவும் புதுப்பிக்கவும் ரிப்பேர் செய்யவும் ஹோண்டாவின் தந்தையிடம் வருவது வழக்கம். அங்கு ஆரம்பித்தது ஹோண்டாவின் மெஷின்கள் மீதான ஆர்வம். தானே சொந்தமாக ஒரு ரிப்பேர் கடையை ஆரம்பித்தார்.

1922இல் பள்ளியை விட்டு வெளி வந்த ஹோண்டா டோக்கியோ சென்று கார்கள், மோட்டார்சைக்கிள்கள் பற்றி அறிய ஆர்வம் கொண்டார்.

ஆகவே வீட்டை விட்டு வெளியேறி டோக்கியோவில் ஹோங்கோ என்ற இடத்தில் யூஜோ சகாகிபாரா என்பவரிடம் கத்துக்குட்டி வேலையாளாகச் சேர்ந்தார். ஹோண்டாவின் ஆர்வத்தைப் பார்த்த யூஜோ அசந்து போனார். ஹோண்டாவிற்கு எல்லாவற்றையும் சொல்லித் தர ஆரம்பித்தார்.

1928இல் வீடு திரும்பிய ஹோண்டா தன் சொந்தத் தொழிலை ஆரம்பித்தார். அவருக்கு வயது 22 தான்! இரண்டே வருடங்களில் அவரது நிறுவனத்தில் 30 பேர் வேலை செய்தனர். ஹோண்டாவிற்கு திருமணம் ஆனது. அவரது மனைவி சசியும் (Sachi) நிறுவனத்தில் சேர்ந்து தொழிலைக் கவனிக்க ஆரம்பித்தார்.

உழைப்பதில் இன்பம்

உழைப்பதில் அவருக்கு இருந்த ஈடுபாட்டால் அவர் பசி, தாகத்தையே மறந்தார்.

அவரே பின்னால் கூறியது இது: “நான் கத்துக்குட்டி பயிற்சியாளராக உழைத்துக் கொண்டிருந்த போது எனது கவனத்தைத் திசை திருப்ப விடமாட்டேன். எனது நண்பர்கள் என்னை விரும்பி அழைத்தாலும் போக மாட்டேன். ‘உணவுக்கான நேரம் வந்து விட்டது. சாப்பிட வா’ என்று என் தாயார் என்னை அழைத்தாலும் போக மாட்டேன். என்னை இழுத்துக் கொண்டு போய் எனக்கு உணவைப் பரிமாறுவார் அம்மா. என் காதுகள் இப்படி ‘செயலிழப்பதைக்’ கண்ட எனது தாயார் நாளடைவில் எனது கவனத்தின் தீவிரத்தை உணர்ந்து  கொண்டார். ‘வேலையை முடித்து விட்டு சாப்பிட வா’ என்று கூறும் அளவுக்கு அவருக்கு மனப்பக்குவம் வந்து விட்டது. பசி தாகம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை 

ரேஸ், ரேஸ், ரேஸ்

ரேஸில் பங்கு எடுப்பது ஹோண்டாவிற்கு மிகவும் பிடிக்கும் ஆனால் 1936இல் ஒரு பெரிய விபத்தில் அவர் சிக்க அவர் மனைவி அழ ஆரம்பிக்க, ரேஸில் பங்கு பெறுவதை அவர் விட்டு விட்டார். 

அப்போது நடந்த ஒரு ரேஸ் போட்டியில் மணிக்கு 78 மைல் வேகத்தில் காரை ஓட்டி அனைவரையும் அவர் பிரமிக்க வைத்தார். 

உலகப் போர்

 காலம் மாறத் தொடங்கியது. 1937இல் ஜப்பானுக்கும் சீனாவிற்கும் போர்.

பின்னர் வந்தது இரண்டாம் உலகப் பெரும்போர். ரிப்பேர் செய்வதை விட்டு விட்டு மோட்டார் சைக்கிள் மற்றும் கார் தயாரிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கினார் ஹோண்டா. சிசிரோ கதோ என்ற நண்பருடன் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.

பிஸ்டன் ரிங்குகளைத் தானே தன் கையால் தயாரிக்கத் தொடங்கினார் ஹோண்டா. ஆனால் அவை தரத்துடன் இல்லை. ஒரே தோல்வி மயம். ஆகவே உலோக இயல் பற்றிய தனது அறிவு போதுமானதாக இல்லை என்பதை அறிந்து கொண்ட ஹோண்டா அதில் கவனம் செலுத்தி தரமான படைப்புகளை உருவாக்குவதில் வெற்றி பெற்றார். 

நிறுவன வளர்ச்சி 

1939ஆம் ஆண்டு அவர் ஒரு தேர்ந்த நிபுணராக ஆக முடிந்தது. மெல்ல மெல்ல ஆர்டர்கள் வர ஆரம்பித்தது. தரமோ சூப்பர். 2000 பேர்கள் உள்ள பெரிய நிறுவனமாக அவரது நிறுவனம் வளர்ந்தது.

 1948இல் மோட்டார் பொருத்தப்பட்ட முதல் சைக்கிளை அவர் அறிமுகப்படுத்தினார். அவரது தயாரிப்பின் பெயர் ட்ரீம் (கனவு).

 1959இல் அவர் கார்களைத் தயாரிக்க ஆரம்பித்தார்.

 தனது முதல் ஸ்போர்ட்ஸ் காரில் அவர் பழைய விமானம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட எஞ்சினைப் பொருத்தி ஓட்டினார்.

 மெல்ல மெல்ல வளர்ந்த அவரது நிறுவனம் 1959இல் நம்பர் ஒன் நிறுவனமாக மாறியது. தனது மாடலை மாற்றும் போதெல்லாம் அந்த மாடலின் முதல் காரை அவரே ஒட்டிப் பார்ப்பது வழக்கமானது. இந்தப் பழக்கத்தை தனது 65 வயது முடிய அவர் விடவில்லை.

To be contined…………………………