முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—21 (Post No.13,132)


Kaattu Aamanakku

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,132

Date uploaded in London – –   12 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்ற பகுதியில் 206  வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………

மூலிகை Part 21

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—21

207. வெள்ளைக்கு

காக்கட்டான் என்னும் வெள்ளைக் காக்கட்டான் வேர் கொண்டு வந்து தயிர் விட்டரைத்து, புன்னைக் காயளவு எடுத்து, கால் படி பசும் மோர் விளாவி வைத்துக் கொண்டிருந்து , ஒரு தகுதி பேதியானவுடன்  அந்த மோரில் கொஞ்சம் குடிக்கச் சொல்ல வேண்டியது.. இப்படி 6 அல்லது 8 விசை பேதியாகும். மோரைக் கொடுத்தால்தான் பேதியாகும். பகலில் தயிர் சாதமும் இரவில் பால் சாதமும் சாப்பிட வேண்டியது. அந்த ஒரே தினத்தில் வெள்ளை நிவர்த்தியாகும்

xxxx

208. நாபி பேதி

காக்கட்டான் இலையைக் கசக்கி சாறு பிழிந்து வெள்ளைக் குண்டுமணியும் வாளமும் சரியாயெடுத்து மேற்படி சாறறால் அரைத்து  தொப்புளைச்  சுற்றி கனமாகத் தடவினால் 1-2 விசை பேதியாகும் .

xxxx

209. தீராத வாந்திக்கு

காட்டு ஏலத்தைக் கொண்டுவந்து இளம் வறுப்பாய் வறுத்து நெல்லி வற்றல் தானிக்காய் கடுக்காய் கொஞ்சம்  கூட்டி கிஷாயமிட்டுக்கொடுக்கத்  தீராத வாந்தி, பித்தம், அரோசகம் இவை தீரும்.

xxxx

210. இரைப்புக்கு

காட்டுத்துளசியைக் கொண்டுவந்து பால் விட்டரைத்து பாலில் கலக்கிக் கொடுத்துவந்தால் இரைப்பு வியாதி சாந்தியாகும் .

xxxx

211. மேக வெள்ளைக்கு

காட்டாமணக்கின் கொழுந்தை பால் விட்டரைத்து பாலில் கலக்கிக் கொடுக்க வெள்ளை தீரும்; உடம்பில் அடிக்கடி ஜெனிக்கிற விரணங்கள் சிரங்கு கட்டிகள் இவை யாவும் தீரும் .

xxxx

212. பல் நோய்க்கு

காட்டுப்பிராயன் பால்  பல்லு  நோய்களுக்கு

மேற்படி பாலை நோயுள்ள பல்லின் மீது ஈறுகள் மீது விட்டு வந்தால்  நிவர்த்தியாகும்.

xxxx

213. உடல் பூரிக்க

காட்டு வள்ளியை பாலில் அரைத்து கலக்கியுட்கொண்டுவந்தால் குளுமை நீக்கும், உடல் பூரிக்கும் நல்ல பலன் உண்டாகும் .

xxxx

214. விஷ ஜன்னிக்கு

காட்டு முருங்கை சமூலத்தைப் பச்சையாகக் கொண்டுவந்து  பாலில் கலக்கி யுண்டுவந்தால் புரவீச்சு உஷ்ணம் இவை தீரும். கண் குளிர்ச்சியுண்டாம்  ஜன்னி கிஷயங்களுடன் மேற்படி சமூலம் சேர்த்து பாகப்படுத்திக் கொடுத்தால்  விஷ ஜன்னி தீரும்

xxxx

215. நாவறட்சி தீர

காட்டு மல்லிகை சமூலத்தைக் கொண்டுவந்து சீந்தல் மதுரம் சமமாக சேர்த்து கிஷியாமிட்டுக்  கொடுக்க நாவறட்சி  தாகம் சுரம் தீரும்.

xxxx

216. இரத்த மூலம் தீர

காரக்  கருணையை வடகம் செய்தாவது,  இடித்து சூரணித்து சமன் சக்கரை கலந்தாவது, இரு வேளையும்  தின்றுவந்தால் இரத்த மூலம் கபம் கனல் மந்தம் முளை மூலம் வாத ரோகங்கள் தீரும்; பசி தீபனமுண்டாகும் .

xxxx

217. மாந்தங்களுக்கு

காவட்டம் புல்லு மாந்த வியாதியைக் கண்டிப்பதற்கு  முதன்மையான அவுசதமாயிருக்கிறது .  ஊது  மாந்தம் , உட்பு மாந்தம் முக்கு மாந்தம்  இவைகளுக்குமே  உவஸ்து கொண்டுவந்து எட்டுக்கொன்றாய் கிஷாயம் வைத்து கஸ்தூரி கோரோசனம்  இழைத்து வார்த்தால் குழந்தைகள்  வியாதி யாவும் கண்டிக்கும். .

xxxx

218. நீர் எரிவு தீர சர்பத்து

காசினியிலையை இடித்த சாறு பலம் 13- வெள்ளை சக்கரை 20 பலம் இவையிரண்டும் கலக்கிக் காய்ச்சி பாகு பதமாய் இறக்கி  புட்டியில் வைத்துக் கொள்ளவும் . வேளைக்கு  இரண்டு தோலாயெடுத்து  கொஞ்சம் நல்ல ஜலத்தில் கலந்து  சாப்பிட்டு வந்தால் நீர் எரிவு , நீர்க்கட்டு  உட்காய்ச்சல் இவை தீரும். . பலம் உண்டாகும்

–subham—

Tags- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 21, மாந்தம், வெள்ளை விழுதல், நாவறட்சி , நீர் எரிவு , மூலிகைகள்

Leave a comment

Leave a comment