கீதை தீர்க்கும் நோய்கள்! (Post No.13,135)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.135

Date uploaded in London – — 13 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஏப்ரல் 2024 ஹெல்த்கேர் தமிழ் மாத இதழில் பிரசுரமாகியிருக்கும் கட்டுரை

கீதை தீர்க்கும் நோய்கள்!

ச. நாகராஜன்

காலம் காலமாக அனைவருக்கும் ஆன்மீக ஊற்றாகத் திகழ்ந்து வரும் கீதையைப் போற்றாதவர் இல்லை.

சமீப காலமாக நவீன தொழில் நுட்பம் வளர்ந்து வர வளர்ந்து வர அதைப் பல்வேறு கண்ணோட்டங்களில் பார்த்து அறிஞர்கள் வியக்கின்றனர்.

மானேஜ்மெண்ட் டெக்னிக்ஸ் எனப்படும் மேலாண்மை உத்திகளை எப்படி கீதை விவரிக்கிறது என்று பலரும் புகழ்ந்து பேசுகின்றனர்; நூல்களை எழுதுகின்றனர்.

அதே போலவே கீதை எப்படி எல்லா நோய்களைத் தீர்க்கும் வழிகளைக் கூறுகிறது என்று பலரும் பேசி வருகின்றனர்; நூல்களைப் படைக்கின்றனர்.

இவற்றில் ஒரு நூல், ஒரு உரை ஆகியவற்றை இங்கு பார்ப்போம்.

நோய்களைத் தீர்க்கும் கீதை – ஒரு நூல்

The Curative Powers of the Holy Gita – என்ற நூலைDr T.R.Sesahadri என்பவர் எழுதியுள்ளார். 1997ல் வெளியான நூல் இது.

இந்த நூலில் 30 கீதை ஸ்லோகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஸ்லோகமும் எந்த எந்த வியாதிகளைத் தீர்க்கும் என்ற பட்டியலும் உள்ளது.

அத்தியாயம்       ஸ்லோக ஆரம்பம்     

ஸ்லோக எண்

2 –2               குதஸ்த்வா              

2-3                க்லைப்யம்        

2-11               அசோச்யான்

2-14               மாத்ரா

2-22               வாசாம்ஸி

2-56               துக்கேஸ்வ

2-61               தானி

2-63               க்ரோதாத்

2-64               ராக

2-67               இந்த்ரியாணாம்

3-21               யத்யாத்

4-10               வீத ராக

5-26               காம க்ரோத

6-30               யோ மாம் பச்யதி

6-35               அசம்சயம்

7-11               பலம் பலவதாம்

8-8                அப்யாச யோக

9-16               அஹம் க்ரதுர்

9-18               கதிர் பர்த்தா

9-22               அனன்யாஸ் சிந்தயந்தோமாம்

10-20               அஹமாத்மா

10-32               சர்காணாம்

10-34               ம்ருத்யு: சர்வ

10-39               யச்சாபி

11-36               ஸ்தானே

12-15               யஸ்மான்

15-9                ஸ்ரோத்ரம்

15-14               அஹம் வைஸ்வானரோ

17-8                ஆயு: சத்வ

18-66               ஸர்வ தர்மான்

,

தீர்க்கும் வியாதிகள்

 smallest Bhagavad Gita

இரத்த அழுத்தம், மூளைக் கோளாறுகள், மனச் சோர்வு, மன அழுத்தம்,

வலிப்பு, இதயக் கோளாறு, போதைப் பொருள்களுக்கு அடிமை,

ஆண்மைக் குறைவு, ஜூரம், பக்கவாதம், மூட்டு வலி, காச நோய்,

டயாபடீஸ், எய்ட்ஸ், பாலியல் நோய்கள், உளவியல் கோளாறுகள்,

கான்ஸர், தீர்க்க முடியாத வியாதிகள், ரத்தப்

புற்றுநோய், வியாதியிலிருந்து உடல் நலம் தேறல், குடல் கோளாறுகள்,

திக்குவாய், டான்ஸில், மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பம், கர்ப்பக் கோளாறுகள், ஆஸ்த்மா, பல் வியாதிகள், கண் சம்பந்தமான வியாதிகள், தொழுநோய், பல் வலி, தோல் வியாதிகள், அடி வயிற்றுக் கோளாறுகள்,வயிற்றுப்போக்கு, கல்லீரல் சம்பந்தமான வியாதிகள், அஜீரணம், சிறுநீரகக் கோளாறுகள், மலச்சிக்கள் மஞ்சள் காமாலை, தூக்கமின்மை உள்ளிட்ட வியாதிகள் அனைத்தும் நீங்க மேலே கூறிய ஸ்லோகங்களை முறைப்படி உச்சரித்தல் உதவும்.

ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் அடியில் எந்த வியாதிகளைத் தீர்க்கும் என்பதை நூல் கூறுகிறது. எப்படி சொல்ல வேண்டும் என்ற குறிப்பும் நூலில் இருக்கிறது.

இந்த நோய்கள் எல்லாம் நூலில் குறிப்பிட்ட ஸ்லோகங்களால் நீங்கி விடும் என்பதற்கான ஆதாரத்தை அறிய நேயர்கள் விரும்பலாம்.

அதற்கு ஆசிரியர் முன்னுரையில் தரும் பதில் இது தான்:

These are believed to have a curative effect on many diseases and ailments.

In this book, I have laid emphasis on faith and faith alone.

இவை பல வியாதிகளையும், சிறு நோய்களையும் குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது,

இந்த நூலில் நான் நம்பிக்கையை, நம்பிக்கையை மட்டுமே அழுத்திக் கூறுகிறேன்.

இதுவே அவரது பதில்!

நோய் தீர்க்கும் கீதை : ஒரு உரை

யூ டியூபில் நாளுக்கு நாள் எல்லோரும் அறிஞர்கள் ஆகி

வருவதைக் காண்கிறோம். எதைக் கடைப்பிடிப்பது,

எதை விடுவது என்று யாருக்கும்  புரியவில்லை.

என்றாலும், சுமார் முந்நூறு கோடி யூ டியூப் உரைகள்

இருப்பதாக ஒரு கணக்கு கூறுகிறது.

அவற்றில் சில தர்க்கரீதியாக நம்மை யோசிக்க வைத்து முடிவைப்

பெற உதவி செய்யும். சமீபத்தில் கேட்ட ஒரு உரையில்

கீதையின் அபூர்வ ஆற்றல் விளக்கப்படுகிறது. (இதை எனக்கு

அனுப்பியவர் ஹெல்த்கேர் ஆசிரியர் திரு ஆர்.சி. ராஜா

அவர்களே தான்)

ஆறாவது அத்தியாயத்தில் உள்ள 17 வது ஸ்லோகம் இது :

युक्ताहारविहारस्य युक्तचेष्टस्य कर्मसु।


युक्तस्वप्नावबोधस्य योगो भवति दुःखहा॥१७॥

யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு|
யுக்தஸ்வப்நாவபோ³த⁴ஸ்ய யோகோ³ ப⁴வதி து³ :க²ஹா ||6-17||

யுக்த ஆஹார விஹாரஸ்ய= ஒழுங்குக்கு உட்பட்ட உணவு உண்டு நடமாடுகிற ஒருவனுக்கு


கர்மஸு யுக்தசேஷ்டஸ்ய = வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட முயற்சி செய்கிறவனுக்கு


ஸ்வப்ந அவபோ³த⁴ஸ்ய யுக்த = உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டவனாக இருப்பவனுக்கு


து³ :க²ஹா யோக³: ப⁴வதி = துயரை அழிக்கும் யோகம் கை கூடுகிறது

ஒழுங்குக்கு உட்பட்ட உணவும், விளையாட்டும் உடையோனாய், வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட நடைகளுடையவனாய், உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின், அவனுடைய யோகம் துயரை அழிக்கிறது.

இங்கு ஶ்ரீ கிருஷ்ணர் ஐந்து விஷயங்களை வலியுறுத்துகிறார் – ஆரோக்கியமான துக்கமற்ற சுகமான வாழ்விற்கு.

அவையாவன

Moderate Diet – மிதமான உணவு

Moderate pleasure – மிதமான விளையாட்டு அல்லது பொழுதுபொக்கு இன்பம்

Moderate exertion – மிதமாக உளம் மற்றும் உடலை பயன்படுத்தல்

Moderate Sleep – மிதமான தூக்கம்

Moderate Wakefulness – மிதமான விழிப்பு

இப்படி உணவு, விளையாட்டு, உளத்தையும்உடலையும்பயன்படுத்தும் விதம், தூக்கம், விழிப்பு ஆகிய ஐந்திலும் எவன்  ஒருவன் மிதமான போக்கைக் கடைப்பிடிக்கிறானோ அவனுக்கு துக்கத்தை நீக்கும் யோகம் கை கூடுகிறது.

அதாவது யோக சித்தி பெற்ற இவனுக்கு எந்த வித வியாதியும் வராது.

இந்த ஸ்லோகத்திற்கு பாரதியாரின் உரை இது:

 ஒழுங்குக்கு உட்பட்ட உணவும், விளையாட்டும் உடையோனாய், வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட நடைகளுடையவனாய், உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின், அவனுடைய யோகம் துயரை அழிக்கிறது.

இந்த ஸ்லோகத்தை ஊன்றிக் கவனித்தால் வியாதி வராமல் இருக்க

சிறந்த வழி இதுவே என்பதை உணர முடிகிறது.

கீதையைக் கற்போம்; அதன் வழியில் நிற்போம்; நோயற்ற வாழ்வைப்

பெறுவோம்.!

***

Leave a comment

Leave a comment