பாம்புக் கடியைத் தீர்க்க உதவும்  200 மூலிகை மருந்துகள் -1 (Post No.13,163)

Acorus calamus- VASAMBU in Tamil

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,163

Date uploaded in London – –   21 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

உலகம் முழுதும் பாம்புக் கடியால் இறக்கும் மனிதர்கள் பல்லாயிரம் பேர் என்றாலும் இந்தியாவில்தான் அதிகம் பேர் பாம்புக்கு கடி விஷத்தால் இறக்கின்றனர். ஆண்டு தோறும் 11,000 பேர் இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.ஆனால் கடிபடும் மனிதர்கள் எண்ணிக்கை 81,000; அத்தனை பேரும் இறப்பதில்லை; ஏனெனில் பெரும்பாலோர் விஷமில்லாத பாம்புகளால்தான் கடிக்கப் படுகின்றனர். ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் , பாம்புக் கடியை முக்கியமாக எடுத்துக்கொண்டு பல சிகிச்சை முறைகளை எழுதியுள்ளன . சரக சம்ஹிதை என்னும் சம்ஸ்க்ருத நூலில்தான் அதிக விஷயங்கள் கிடைக்கின்றன. சரகர் 24 சிகிச்சை முறைகளைக் கூறுகிறார்

பாம்புக்கடி சிகிச்சை முறைகளைக் கூறும் ஏனைய நூல்கள் -சுஸ்ருத சம்ஹிதை, அஷ்டாங்க சம்கிரக , அஷ்டாங்க ஹ்ருதய . 

வாக் பட்டர் எழுதிய அஷ்டாங்க சம்க்ரஹ நூலில் பாம்புகளை திவ்ய, பெளம என்ற இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார். வாசுகி, தக்ஷ என்பனவெல்லாம் திவ்ய/ தெய்வீக  பாம்பு வகைகள் .

பெளம பாம்பு வகைகளை சுஸ்ருதர் மேலும் ஐந்து துணை/ உப வகைகளாகப் பிரிக்கிறார் ; நவீன காலத்தில் இரண்டே பிரிவுகள்தான்- விஷமுள்ள பாம்புகள், விஷமற்ற பாம்புகள் .

ஆயுர்வேதத்தில் எட்டு அங்கங்கள் (பிரிவுகள் ) உண்டு. அதில் அகத் தந்திரம் என்ற பகுதி பாம்பு, தேள், பூச்சிகள் விஷக்கடி பற்றி விளம்புகின்றது.

xxxx

உலகத்தில் 3150 பாம்பு வகைகள் இருக்கின்றன. இவைகளில் 600 மட்டுமே விஷப்பாம்புகள் . இந்தியாவில் 216 பாம்பு வகைகள் இருக்கின்றன. அவற்றில் 60 மட்டுமே விஷத் தன்மை கொண்டவை. உலகம் முழுதும் ஆண்டு தோறும் பாம்பு  கடித்ததனால் இறப்பவர்கள் எண்ணிக்கை 1,25,000. இந்த புள்ளி விவரங்களை உலக சுகாதார ஸ்தாபனம் தொகுத்து,  இந்தப் பிரச்சினை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது . பெரிய நகரங்களில் பாம்புக்கடிக்கு சிகிச்சை தரும் நவீன மருந்துகள் கிடைக்கின்றன. ஆயினும் பாம்புக்கடி நிகழ்வதோ கிராமப்புறங்களில்தான்.

இந்தியா , நேபாளம் , இலங்கை மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் மூலிகைகள் அதிகம் பயன்படுகின்றன. இவற்றில் சுமார் 70 மூலிகைகள் அறிவியல் ரீதியிலும் நிரூபிக்கப்பட்டுள்ளன

மூலிகை மருந்துகள் சிகிச்சை தருவதோடு, கடிபட்ட மக்களுக்கு மனத் தெம்பையும் நம்பிக்கையையும் உண்டாக்குகின்றன. ஏனெனில் கடித்த  பாம்பு விஷப் பாம்பா இல்லையா என்று அறியாமல் பீதியாலும் பயத்தாலும் பலரும் திகைத்து கண்டபடி செயல்படுகின்றனர் . முறையான வைத்தியர்கள் இருந்தால், முதலில் விஷம் உடலில் பரவாமல் தடுக்க துணிக்கட்டு போடுகின்றனர். பின்னர் விஷத்தை உறிஞ்சி எடுக்க பல்வேறு முறைகளைக் கையாளுவர் .

இந்தக் கட்டுரையில் உலகம் முழுதும் பயன்படும் விஷக்கடி மூலிகைகளின் பட்டியலைக் காண்போம்.

xxxxxx

 நாயுருவி

Angiosperms பூக்கும் தாவரங்கள்

குடும்பம் – அகாந்தேசி ; தாவரத்தின் பெயர் அகாந்தஸ் இலிசிபோலியஸ்

1. Family: Acanthaceae 1. Acanthus ilicifolius L.

தமிழில் கழி முள்ளி ; பிச்சாவரம் பகுதிகளில் விளைகிறது. ; ஒரிஸ்ஸாவில் இதை ஹரகாஞ்ச என்பர்

பிச்சாவரம் மக்கள் இந்த தாவரத்தின் பழங்களை நசுக்கி பாம்பு கடித்த இடத்தில் வைத்து கட்டுகின்றனர்

xxxx

ஆடாதோடா வசிகா

2. Adhatoda vasica Nees (Justicia adhatoda L.)

பாகிஸ்தானில் இதை கொல் யார் சாக் என்கிறார்கள் .

ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என மருவி பெயர் பெற்றுள்ளது. இதை மலபார் நட்  என்றும் அழைப்பர்

xxxx

3. Andrographis paniculata (Burm. f.) Wall. ex Nees

ஆண்ட்ரோ கிராபிஸ் பணிக்குலேட்டா

அருணாசல பிரதேச மக்கள் இதை ஹிரோடா என்கிறார்கள்

இதை மத்திய இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் வேறு சில மூலிகைகளுடன் சேர்த்து பயன்படுத்துகின்றனர் .விட்டுணுக்கிராந்தி ஈச்சுரமூலி ishvara-muli, மாம்பாஞ்சான் mampancan, பெருமருந்து peru-maruntu •என்னும் அரிஷ்டலோகியா இன்டிகாவுடன் பயன்படுத்துகிறார்கள் . இலைகளைப் பொடித்து உண்ண வைக்கிறார்கள்; மத்திய இந்தியாவில் பொடிகள் சேர்த்து அரைத்து களிம்பை கடித்த இடங்களில் வைத்துக் கட்டுகிறார்கள் சர்ப்பகந்தி, கருடக்கொடி மூலிகைகளையும் சேர்த்துக் கொள்ளுவர்

xxxx

பார்லேரியா கிறிஸ்டாடா

 4. Barleria cristata L.

Vernacular names: Tadrelu, Bansa siyah (Margallah Hills National Park, Islamabad, Pakistan)

பாகிஸ்தானில் அதிகம் உபயோகிக்கின்றனர்

xxxx

5. Elytraria acaulis (L. f.) Lindau

எலித்ராரிய அகாலிஸ்

மத்திய பிரதேச சித்திரகூட மக்கள் இதை சஹஸ்மூரிய  என்று சொல்கிறார்கள் பழங்குடி மக்கள் இந்த தாவரத்தின் வேரை மிளகுடன் சேர்த்து அரைத்து பசையாக்கி  கடிபட்ட காயங்களில் வைத்துக் கட்டுகின்றனர் .

Vernacular name: Sahasmuria (Chitrakoot, Madhya Pradesh, India)

xxxxx

6. Lepidagathis cristata Willd.

லெபிடாகதிஸ்  க்ரிஸ்டாடா

Vernacular name: Siyarbethca (Chitrakoot, Madhya Pradesh, India)

மத்தயப் பிரதேச சித்திர கூடம் பழங்குடி மக்கள் இதை மயில்துத்தம் என்னும் காப்பர் சல்பேட்டுடன் இலையின் ரசத்தைக் கொடுக்கின்றனர். இதை மூர்ச்சை தெளிவிக்க பயன்படுத்துகிறார்கள்.

xxxxx

7. Peristrophe paniculata (Forssk.) Brummitt

பெரிஸ்ட்ரோப்  பணிக்குலேடா

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆள்வார் ஜில்லா மக்கள் செடி முழுதையும் மசித்து சோற்றுடன் உண்ணுகிறார்கள்

This plant (common name: Atrilal) அத்ரிலால் என்பது வட்டார பெயர்

xxxxx

8. Thunbergia grandiflora Roxb.

துன்பெர்ஜியா க்ராண்டிப்லோரா

To treat snakebites, this plant is used with other plants by the Karbi tribes of Assam, India (Teron, 2005).

அஸ்ஸாமின் கரீபி இன மக்கள் இதைப் பாம்புக்கடி சிகிச்சையில்  உபயோகிக்கின்றனர்

xxxx

9.குடும்பம் — அகோரேசி / வசம்பு

F2. Family: Acoraceae 9. Acorus calamus L.

Vernacular name: Skha waja (Buner, NWFP, Pakistan)

வசம்பு (Acorus calamus, Sweet Flag அல்லது Calamus) .இது பேர் சொல்லா மருந்து, பிள்ளை வளர்த்தி, மற்றும் உரைப்பான் என்றும் அழைக்கப்படுகிறது.

பாகிஸ்தான், மற்றும் இந்தியாவில் கோண்ட் மற்றும் கோர்க்கு இன மக்கள் வசம்பை பயன்படுத்துகின்றனர்

xxxx

10.குடும்பம் – அமராந்தேசி / நாயுருவி

F3. Family: Amaranthaceae 10. Achyranthes aspera L.

அகிரான்தஸ் ஆஸ்பெரா

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம்  முழுதும் இந்தத் தாவரம் எதாவது ஒருவகையில் பயன்படுத்தப்படுகிறது

Inflorescence and seed paste is applied on the wounds by the rural people of Kanyakumari district, Tamil Nadu, India (Jeeva et al., 2006a).

கன்யாகுமரி மாவட்ட மக்கள் பூங்கொத்து, விதைகள் முதலியவற்றால் பசைபோல களிம்பு செய்து பாம்பு கடித்த இடங்களில் அப்புகின்றனர்

தொடரும்

—-subham—

Tags– பாம்புக்கடி, சிகிச்சை, 200 மூலிகைகள், சரக சம்ஹிதை, வாக்பட்டர் , அஷ்டாங்க சம்க்ரஹ

பெண்களே அழகுடன் முன்னேறுங்கள், சமுதாயத்தை முன்னேற்றுங்கள்!-1 (Post.13,162)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.162

Date uploaded in London – — 21 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலரில் சமீபத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

மேரி கேஆஷ் – பெண்களே அழகுடன் முன்னேறுங்கள்சமுதாயத்தை முன்னேற்றுங்கள்! – 1

ச. நாகராஜன்

 பெண்களை முன்னேற்றியவர்!

ஆணாதிக்கம் நிறைந்த சமுதாயத்தில் பெண்களும் முன்னேற வேண்டும் என்ற கூச்சலை நிறையப் பார்க்கிறோம்; ஆனால் பெண்கள் இன்னும் ஆணுக்கு நிகராக சம உரிமையை உலகளாவிய விதத்தில் எல்லா நாடுகளிலும் பெறவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

பெண்களின் அழகுக்கு அழகூட்டி, மெருகை ஏற்றி அவர்களது தன்னம்பிக்கையை மேம்படுத்தி லட்சக்கணக்கானோரை ஆயிரக் கணக்கில் சம்பாதிக்க வைத்த பெருமை ஒரு பெண்மணியைச் சேரும். அதுவும் இந்த மகத்தான காரியத்தை அவர் ஓசைப்படாமல் செய்தார். அவர் தான் மேரி கே ஆஷ்.

பிறப்பும் இளமையும்

மேரி அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஹாட் வெல்ஸ் என்ற இடத்தில் 1918ஆம் ஆண்டு மே மாதம் 12ம் நாள் பிறந்தார்.

தந்தை எட்வர்ட் அலெக்ஸாண்டர். தாயார் லுலா வெம்பெர் ஹேஸ்டிங்ஸ் வாக்னர்.

லுலா ஒரு சிறந்த நர்ஸ். பின்னால் பெரிய உணவு விடுதி ஒன்றின் மேலாளராக ஆனார். ஹூஸ்டனில் படித்த மேரி பட்டம் பெற்றார். 17ஆம் வயதிலேயே மணம் முடித்து மூன்று குழந்தைகளையும் பெற்றார். இரண்டாம் உலகப் போரில் பணி புரிந்த அவரது கணவர் போர் முடிந்தவுடன் திரும்பி வந்தார். விவாக ரத்து ஆனது. பின்னர் அவர் ஜார்ஜ் என்பவரை மணந்தார்.

முதலில் வீடு வீடாகச் சென்று புத்தகங்களை விற்க ஆரம்பித்தார் அவர். பின்னர் வீடுகளுக்குத் தேவையான தயாரிப்புகளை வீடு வீடாகச் சென்று விற்கலானார்.

சோதனை வந்தது

ஒரு நாள் அவரை ஒதுக்கி விட்டு அவரால் பயிற்சி கொடுக்கப்பட்ட ஒருவருக்கு பதவி உயர்வு தரப்படவே மனம் வெறுத்துப் போனார் அவர். அப்போது அவருக்கு வயது 45.

1963இல் கம்பெனியை விட்டு வெளியேறிய அவர், பெண்கள் வணிகத்தில் எப்படி முன்னேறலாம் என்று ஒரு புத்தகத்தை எழுதினார்.

ஆனால் ஆச்சரியப்படும் விதத்தில் அந்தப் புத்தகம் அவருக்கே வணிகத்தை ஆரம்பிக்க உத்திகளைக் கற்றுக் கொடுத்தது; அவர் கணவர் ஜார்ஜுடன் ப்யூடி பை மேரி கே என்ற நிறுவனத்தை 1963இல் ஆரம்பித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கணவர் மாரடைப்பினால் அதே வருடம் மரணமடைந்தார். மேரி தனது மூத்த பையன் பென் ரோஜர்ஸிடமிருந்து 5000 டாலர் வாங்கினார்.

மேரி கே காஸ்மெடிக்ஸ்

மேரி கே காஸ்மெடிக்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவி

துணிந்து தனது விற்பனையை ஆரம்பித்தார். பெண்களுக்கான ஒப்பனைப் பொருள்களை அவரே தயாரித்தார். அத்தோடு பெண்களை உயரிய நிலைக்கு உயர்த்த வேண்டும் என்பதும் அவரது திட்டமாக ஆனது.

ஆகவே விற்பனையில் தனக்கென ஒரு புதிய உத்தியை அவர் மேற்கொண்டார். நேரடி விற்பனை முறை தான் அது! வீடு வீடாகச் சென்று வாடிக்கையாளர்களைச் சந்தித்து அவருக்கே உரித்தான படி அழகு சாதனப் பொருள்களைச் சுட்டிக் காட்டி அவர்களை அலங்கரித்து பின்னர் விருப்பமிருந்தால் தனது பொருள்களை அவர்களை வாங்க வைப்பது தான் அவரது வழி!

தனது ஒப்பனைப் பொருள்களை விற்பதற்கு பல பெண்களை அவர் பயிற்றுவித்தார். அவர்களை தனது சொந்த மகள்களாகவே அவர் பாவித்து அனைத்தையும் கற்றுக் கொடுத்தார்.

தாய் தந்த ஊக்கம்

கடுமையான போட்டி மிகுந்த சந்தையில் அவருக்கு ஏற்பட்ட சோதனைகள் பல. ஆனால் அப்போதெல்லாம் அவர் தனது தாயார் தன்னிடம் கூறிய சொற்களை நினைவு கூர்வார் மேரி.

அவர் தாயார் அவரிடம் கூறிய சொற்கள் : “உன்னால் முடியும் மேரி!”

மெல்ல மெல்ல வளர்ந்த நிறுவனம் அவருக்கு 980லட்சம் டாலரை ஈட்டித் தந்தது. 120 கோடி டாலருக்கும் மேலாக விற்பனை அதிகரித்தது. 80000 பேர் அவரிடம் வேலை பார்த்து முன்னேறினர்.

இன்று 46 நாடுகளில் அவரது தயாரிப்புகள் பெருமளவில் விற்பனை ஆகின்றன. (அமெரிக்க டாலரின் இன்றைய மதிப்பு ஒரு டாலர் = சுமார் 83 ரூபாய்)

To be continued………………………

அரிய எம் எஸ் புகைப்படம்; திருவனந்தபுரம் பாலஸ் மியூசிய அதிசயங்கள்- 6 (Post No.13,161)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,161

Date uploaded in London – –   20 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

1942ம் ஆண்டில் திருமதி எம். எஸ். சுப்புலெட்சுமியும் அவருடைய கணவரும் கெளடியார் அரண்மனைக்கு விஜயம் செய்தனர் 

xxxx

சீன தத்துவ   ஞானி கன்பூசியஸ், Confucius 
—subham—-

tags-  MS rare picture, Palace Museum, Thiruvananthapuram & Marthandavarma Chitralayam – Rare Pictures 6 , திருவனந்தபுரம், பாலஸ் மியூசியம், அதிசயங்கள் 6

பாலஸ் அதிசயங்கள் , பஞ்ச லோக விக்கிரகங்கள் , ஐம்பொன் சிலைகள், எம் எஸ் சுப்புலட்சுமி , அரிய  புகைப்படம்  ,, சீன தத்துவ   ஞானி கன்பூசியஸ்,

Cure for Scorpion Bites! (Post No.13,160)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,160

Date uploaded in London – –   20 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Magician , Father of Chemistry, Mahayana Buddhism Founder, Philosopher and author of many books, Nagarjuna, in his work Yogaratnamala deals with scorpion bites and malarial fever. We were lucky to get all his books from China, because Chinese students of Nalanda University translated them into Chinese 2000 years ago. Nagarjuna was the V C of the university at that time. Muslims burnt down the Nalanda University and its huge library 1300 years ago and Hindus lost all its literary treasures. Now we are translating them back into Sanskrit and English.

xxx

To cure Malaria

On tying to hand or wrist by a string oven by an unmarried girl, seven pieces of the root of Bala collected as per the previous terms, the chaturthaka fever appearing on every fourth day disappears.

xxxx

As per the previous terms , collect the roots of Gojihva (Onasma bracheutum) at the time of midday on 14th day of dark fortnight (Krishnapaksha Chaturdasi) and take it with butter milk, the chaturdak fever eventhough it may be most severe soon disappears.

Onosma bracteatum – Wall.

Common Name 
FamilyBoraginaceae
USDA hardinessComing soon
Known HazardsNone known
HabitatsRocky slopes in dry areas, 3300 – 5000 metres[51].
RangeE. Asia – Himalayas from Uttar Pradesh to C. Nepal. Xxxxx  

Scorpion bites

On application of the paste prepared out of the insects of Arka (calotropis ; Erukku in Tamil), the dung of a house iguana/lizard, Manashila (Dioxide of Arsenic), Haritaki (Terminalia chabula; Kadukkay in Tamil), with oil, the poison of a scorpion disappears.

xxxx

Apply the milk of Arka (Calotropis; Erukkam in Tamil) to the seeds of Palasa (Butea Hrondosa; kalyana murungai in Tamil) 21 times and get the seeds powdered. On application of this paste with oil the poison of a scorpion disappears.

xxxx

Prepare a pill out of the root of the northern part of a pomegranate tree and beef with water, on touching the affected part with this pill the poison of a scorpion disappears.

Mix together the root and oil of Ankola (Alanghium; Azinjil tree in Tamil), root and oil of Pomegranate tree, the root of Jambhu tree (Naaval in Tamil)  and oil with equal quantity of honey and sugar and prepare a pill out of these. By touching this pill the poison of a scorpion disappears.

xxxx

Note – one should bear in mind that the mention of Ankola (Alangium) oil, Pomegrantae oil, Jambu oil is made here, but the process of their preparation is not found in the book. Therefore one should always take care to prepare them in accordance with the general process made in Ayurveda. Take one fourth of the ingredients with sixteen times water and prepare the required oil with their paste and the decoction. And with this method, all sorts of oils are to be prepared.

xxxx

Wet clothes

Mix the ashes that are available in the forest and the powder of the seeds of the Sravanika(Mundee) with water and prepare a lepa. On application of this lepa to the body,  a man can travel in rains without being affected by water. I.e. he does not become wet.

xxxx

Making the effaced letters visible

if you write letters on a picture with a paint prepared out of the juice of the Asvatta or Arka (Arsa maram or Erukku in Tamil) on a picture and let them dry. The letters are not visible to others. They become visible only when you pour water over them.

—Subham—

Tags- Scorpion, bites, cure, malaria, Nagarjuna, yogaratnamala

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 24 (Post No.13,159)

 WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,159

Date uploaded in London – –   20 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

மூலிகை Part 24

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—24

246 . குழந்தைகள் இருமலுக்கு

குண்டுமணி வேரைக்கொண்டுவந்து புது வேராய்ப் பார்த்து இரண்டு அவுன்சு எடுத்து சிதைத்து அரைப்புட்டி ஜலத்தில் போட்டு அரை மணி நேரம் வரை வேகவைத்து வடிகட்டி அதில் எட்டவுன்சு கற்கண்டாவது தேனாவது கலந்து மறுபடியும் அடுப்பேற்றி காய்ச்சி பாகுபதத்தில் இறக்கி வைத்துக்கொண்டு ஒரு வேளைக்கு  தேக்கரண்டி வீதம் ஒரு நாளைக்கு 4-5 வேளை கொடுக்கலாம். இருமல் சாந்தியாகும்  குண்டு மணி வேருக்கு நாட்டு அதிமதுரம் என்ற பெயருமுண்டு.

XXXX

குழந்தைகள் வாய்ப்புண்ணுக்கு

குண்டுமணியின் இலையின் சாற்றை கு ழந்தைகள் வாயில் வெள்ளை நிறமாகக் காணும் புண்களுக்கு கொஞ்சம் தடவி விட்டால் குணமாகும்.

XXXX

குழந்தைகள் மாந்தத்திற்கு

பொதுப் பிரயோகம்

குட்டி விளாம்பாலையை வதக்கி சாறு பிழிந்து ஆமையோடு வசம்பு இரண்டும் சுட்டுக் கரியாக்கி பொடி செய்து கொஞசம் போட்டுக் காய்ச்சி 1 அல்லது 2 சங்கு வீதம் மூன்று வேளை கொடுக்க சகலமும் சாந்தியாகும்

XXXX

கூ

கூந்தல் குதம்பையிலையைப் பாலில் அரைத்துக் கலக்கியுட்கொண்டுவந்தால் குலையைப் பற்றிய ரோகமும் ஜென்னிபத ரோகமும் மகா வைத்த ரோகமும்ஒழு க்கும் பித்தத்தை விருத்தி செய்யும் கிரமப்படி உபயோகித்தால் மண்டூரத்தை செந்தூரிக்கும்

கூழைக் கிழங்கு

மேனியிடும் வாய்க்கு மிருதுவாகு மாக்கியுண்டால்

தானிருமல்  வெப்பதிக தாகமில்லை — யேனிருக்கு

மம் பேரிளங் கிழங்கு யாவருக்கு மாணப்பூங்

கொம்பே கூழைக்கிழங்கைக்  கூறு

கூழைக்கிழங்கை சமைத்து உட்கொண்டுவந்தால் தேக புஷ்டியுண்டாகும் இருமல் , சுரம் தாகம் இவைகளை போக்கும்;  தின்பதற்கு இனிப்பாகவும் வாய்க்கு உணவாகவுமிருக்கும் .

XXXX

கெ


இரத்த வெள்ளைக்கு

கெச்சக்காய் = கழற்சிக்காய்

கெச்சக்காயிலையை இடித்து சாறு பிழிந்து அரைப்பல ம் எடுத்து அரையாழாக்கு தயிரில் கலந்து காலையில் கொடுக்கவும் . சிறு லவங்கப்பட்டையை அரைத்து களஞ்சிக்காயளவு மாலையில் கொடுக்கவும்.

கடும் பத்தியமிருக்கவும் ; இப்படி 3 அல்லது 5 நாள் கொடுக்கவும் .

XXXX

விரை வாதத்திற்கு

கெச்சக்காய் = கழற்சிக்காய்

கெச்சக்காய் பருப்பு 4 எடுத்து கோழிமுட்டை வெள்ளை அம்பில் விட்டு அரைத்து வடைபோல் தட்டி ஒரு பலம் சித்தாமணக்கெண்ணெய் அடுப்பிலேற்றி மேற்படி வடையைப்போட்டு நண்ராய்ச் சிவக்க சுட்டு எடுத்து அதி மாலை யில் அந்த வாடையைத் தின்றுவிட்டு அதில் மிஞ்சியிருக்கும் எண்ணெயைக் குடித்து விடவும். 5-6 விசை பேதியாகும் . இச்சா பத்தியம் . இப்படி மூன்று நாள் கொடுக்கவும் .

XXXX

விரை வீக்கத்திற்கு

கெச்சக்காயிலையை துளி விளக்கெண்ணெய் விட்டு வதக்கி விரையின் மேல் வைத்துக் கட்டி வைக்கவும். காலியில் பே திக்கு சாப்பிடவும் .

கெச்சக்காய் = கழற்சிக்காய்

XXXX

கே

254- கேணி  ஜலம்

ஆசாரக்கேணி நீரருந்த வதிதாகம்

வீசாகச் சூடு பசி மெய்க்காந்தல் — மாசூலை

மெய்யுள் வலிசந்  துளைப்பு வீழ்  மயக்கம் சோகை பி த் தம்

பையவரு மிணையும் பார்

கேணி என்னும் குற்றமில்லாத கிணற்று ஜலத்தை அருந்துவதினால் மிகுந்த தாகம்– உஷ்ணம்– தீபனம் –தேக அழலை—சரீரத்துட்  கடுப்பு– இடுப்பு குடைச்சல் –மயக்கம் — வீக்கம்– பித்தகோஷம் — சுவாசம் இவை நீங்கும்- கண் பிரகாசம் கொடுக்கும் — ஆனால் நீடித்து அருந்த வேண்டும் .

–சுபம்–

Tags- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 24, கெச்சக்காய், கழற்சிக்காய், குண்டுமணி, கேணி  ஜலம்

உழுது பயிரிடுதல் நன்று : அனைத்து தெய்வங்களும் உதவிக்கு வரும்! (Post No.13,158)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.158

Date uploaded in London – — 20 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

உழுது பயிரிடுதல் நன்று : அனைத்து தெய்வங்களும் உதவிக்கு வரும்! 

ச.நாகராஜன் 

உழவுத் தொழிலை விட மேலானதொரு தொழில் இல்லை. உழவர் முன்னே சொல்ல அவரைத் தொழுது உண்பவர் எல்லாம்  அவர் பின்னே செல்வர்.

ஆனால் உழுவதற்கு உதவி வேண்டுமே!

இதோ உதவி செய்யத் தயார் என்று ஒரு தெய்வ பட்டாளமே வருகிறது.

யார் யார் பார்ப்போமா?

திருமால் நிலத்தை அளிப்பான்.

சிவபிரானின் தோழனாகிய குபேரன் வித்தையைத் தருவான்.

பலராமன் கலப்பையைக் கொடுத்து  உதவுவான்.

யமன் எருமைக் கடாவைத் தருவான்.

முத்தலை சூலத்தைக் கொழுவாக்கிக் கொள்ளலாம்.

வடக்கயிறு முதலியவற்றை அன்பர் தருவர்.

முருகன் இருக்கிறானே, அவன் மாடு மேய்த்து உதவுவான்.

ஆக இனி உழுது பயிரிடுதலே நன்று.

யாராவது இரந்து யாசித்து உண்ணுவார்களா?

(இது நல்ல காரியம் என்று சொல்லி பரமசிவன் உம்மைக் காக்கக் கடவன்.)

இதை எழுதி அருளியது சிவப்பிரகாச சுவாமிகள்.

பாடலைப் பார்ப்போம்:

அச்சுத தனளிப்பினில முமதுநேயன் வித்தையருளுவன் பலபத்திரன்,

    அலமுதவுவன்சமன் பகடீவனந்தமக் காளதோ ரெருது முண்டே,

முச்சிரவயிற் படையினைக் கொழுவதாக்குவே மொம்புடனிழுத்திறுக்க,

  முந்தியவடகயிற்றுடன்மற்று நமன்தமர் முன்போயிரந்து கொள்வோம்

இச்சையுடை நமதிளைய தனயனாகிய கந்தனி னிமையொடு

    மாடுமேயப்பான்

   இனியுழுது பயிரிடுதல்நன்றுநன் றிதைவிட் டிரந்துண்ப தீனமெனவோ

     கச்சுமுலை மாதுமையுரைத்திடும் புத்தியைக் கைக்கொண்

      டுளத்திலிதுநற்,

காரியமெனக் கருதி  மெத்தக்களித்திடுங் கண்ணுதலுமைக் காக்கவே.

பாடலின் பொருள்:

அச்சுதன் -திருமால்

நிலம் அளிப்பன் – நிலத்தைத் தருவான்

உமதுநேயன்  – உமது தோழனாகிய குபேரன்

வித்தையருளுவன் – வித்தையை அருளுவான்

பலபத்திரன் – பலராமன்

அலம் உதவுவன்  – கலப்பையைக் கொடுத்து உதவுவான்

சமன் பகடு ஈவனன் – யமன் எருமைக் கடாவைக் கொடுப்பான்

நந்தமக்கு ஆளதோர் எருதும் உ\ண்டே, – நமக்கு ஆளாயிருப்பதாகிய எருதும் உண்டே

முச்சிரம் அயில் படையினைக் கொழுவதாக்குவோம் – முத்தலை சூலத்தை கொழுவாக ஆக்கிக் கொள்வோம்

மொம்புடன் இழுத்து இருக்க – வலிமையுடன் இழுத்து இறுக்க

முந்தியவடகயிற்றுடன் – முதன்மையாகிய வடக் கயிற்றுடன்

மற்றும் – மற்று நாம் வேண்டுவன யாவற்றையும்

நமன் தமர் முன்போய் இரந்து கொள்வோம் – நமது அன்பரிடத்துச் சென்று கேட்டு வாங்கிக் கொள்வோம்

இச்சையுடை – விருப்பத்தை உடைய

நமதிளைய தனயனாகிய கந்தன் இனிமையொடு மாடு மேயப்பான் – நமது இளைய குமாரனாகிய கந்தன் இனிதாக மாடு மேய்ப்பான்

இனி உழுது பயிரிடுதல் நன்று நன்று – இனி உழுது பயிரிடுதலே நல்லது, நல்லது

இதை விட்டு இரந்துண்பது ஈனம் – இதை விட்டு யாசித்து உண்பது இழிவே

கச்சு முலை மாது உமை உரைத்திடும் புத்தியை – கச்சணிந்த மார்பகங்களை உடைய உமாதேவி சொல்லும் புத்தியை

கைக்கொண்டு   ஏற்றுக் கொண்டு

உளத்தில் இது நற்,காரியமெனக் கருதி  – மனதில் இது நல்ல காரியம் என்று கருதி

மெத்தக்களித்திடும் – மிகவும்  மகிழ்கின்ற

 கண்ணுதல் – நெற்றிக்கண்ணை உடைய சிவபிரான்

உமைக் காக்கவே – உங்களைக் காக்கக் கடவன்.

விளையாட்டாக ஆரம்பித்து முக்கிய கருத்தை வலியிறுத்தி இறையருளை வேண்டி சிவபிரான், பார்வதியின் அருள் கிடைப்பதை சிவபிரகாச சுவாமிகள் உறுதி செய்யும் விதமே தனி!

***

Magic Sex Tips by Nagarjuna (Post No.13,157)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,157

Date uploaded in London – –   19 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

World famous philosopher cum magician describes many magic sex formulas in his book Yogaratnamala, that was found in China and retranslated into Sanskrit. The book is at least 2000 years old.

All the following tips look like practical jokes; but the Chinese took the book in translation before 2000 years. Nagarjuna was the Vice Chancellor of Nalanda University in Bihar at that time. Later the Muslims burnt down the university along with its huge library. That was burning for 7 days according to historians.

All the 140 slokas were translated into English by Dr Pushpendra Kumar of Sanskrit Department of Delhi University. Book Title- Nagarjuna’s Yogaratnamala.

(Better not practise these without proper supervision; but research is welcome to find out the truth. Famous Tamil hymn — S/Kanda Sashti Kavacham, Atharvana Veda etc also confirm the existence of Voodoo procedures)

xxxx

Keeping in mind the couple on cohabitation, if a man puts a piece of the inside bone of a dead man into the hole of a throat bone of a camel, the organ of the male does not come out from the uterus of the female. On removal of the bone from the hole, the organ comes out from the uterus.

xxxx

Contraction of Uterus

pounder together Girikarnika, Indragopa (Thampala Poochi in Tamil), Satapadika, Sahasrapadika (Centipedes, Millepedes) and Arka. On application of this powder, the uterus becomes healed and contracted.

Xxxx

Widening of Uterus

On application of the dust that has dropped from the horns of a moving cow, the organ of a female becomes contracted and inaccessible. But on the paste prepared out of the rising horns of the cow, the organ becomes accessible.

xxxx

Fall of uterus

On crossing the urine (of woman??) mixed with the blood of a bimouthed snake, the uterus of the woman falls down and blood begins to flow continuously

(Bimouthed Snake- throughout the book Nagarjuna mentioned this Bimouthed Dundhuba snake. What is it? Snakes have split tongue. But Nagarjuna may mean creatures like Burmese Python which can devour whole deer, crocodiles etc. Their jaws open up to 76 cms)

xxxx

Collect the mud from both sides of a river and the hairs of a dog and a bitch that are on cohabitation. Then prepare pill out of those two. On thinking a person in mind, if this pill is put into the oil of Ankola tree (Azinjil in Tamil), then the man stands confined to that particular place wherever he stands at that time. On removal of that pill from the oil, he moves.

xxxx

Tiger! Tiger!!

Collect blood of a tiger, pieces of flesh of a tiger, Bhramara (bee), curd and lotus flower. Then preserve them in water pot for  seven days. On the seventh day a couple of tiger looking apparently, six month cubs , will come out.

xxxx

Collect the dung, blood, sperm and the bad substances of ear of a man and woman. Preserve this in water pot for 21 days. Cover it with the skin of a monkey. On the 21st day there appear a couple of man and woman.

xxxx

On putting a pot with Krikalasa under the ground near  the gate of a cowshed, the cows of that cow pen do not move and remain inactive even if they are beaten severely. On removal of the pot they rise and move.

Krikalasa= chameleon, garden lizard

xxxx

Trouble from Crows

Write the name of a person on a wing of a crow in the blood of a heart of a crow and with the wing as a pen  and keep this wing inside the faeces of a person. The man faces the disturbance caused by crows. On removal of this wing from the faeces that person gets relief .

Write the name of a person on a leaf of mango in the blood of a heart of a crow and keep this wing inside the faeces of a person. The crows disturb the person like anything. On removal of this leaf from the faeces he gets relief .

xxxx

Protecting earthen lamp

If you light a wick with the oil  extracted from the seeds of  mangoes , it burns very bright just like a gem and does not extinguish even though the wind blows in gale force.

— subham—

Tags- sex magic, Nagarjuna, tiger, lamp , crow trouble, Uterus, male organ, Tips

திருவனந்தபுரம் பாலஸ் மியூசிய அதிசயங்கள் – 5 (Post No.13,156)

விசாகம் திருநாள் ராம வர்மா துலா பாரம்; எடைக்கு எடை பொற்காசுகள் துலா பாரம் செய்தார் 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,156

Date uploaded in London – –   19 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 Palace Museum, Thiruvananthapuram & Marthandavarma Chitralayam – Rare Pictures 5 , திருவனந்தபுரம், பாலஸ் மியூசியம், அதிசயங்கள் -5

xxxx

 Maharajas of Travancore

Chitra Tirunal Balarama Verma

Moolam Tirunaal Maharaja

Maharani Sethu Lakshmi Bhayi

TAGS—

பாலஸ் மியூசியம், அதிசயங்கள், ஐம்பொன் , பஞ்சலோக , விக்கிரகங்கள், கணபதி, சிவன், விஷ்ணு, கஜலட்சுமி   விசாகம் திருநாள் ராம வர்மா,  துலா பாரம்

மேலும் மூன்று ராமாயண அதிசயங்கள்- பகுதி 2 (Post No.13,155)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,155

Date uploaded in London – –   19 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

பகுதி 2

நேற்று இதன் முதல் பகுதி வெளியானது

பெங்களூரில் அரிய ராமாயண படங்கள்

கர்நாடக மாநில தலைநகரமான பெங்களூரில் ‘மேப்’ Museum of Art & Photography (MAP) என்னும் மியூசியம் உள்ளது. அங்கு காஞ்சன (தங்கம்) சித்திர ராமாயணம் என்னும் புஸ்தகத்தில் எண்பது பக்கங்களை மட்டும் காட்சிக்கு வைத்துள்ளனர். அது பற்றிய விளக்கங்களை ஆடியோ /ஒலி மூலம் கேட்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

காசியில் உதித் நாராயணன் என்ற மன்னர் (Maharaja Udit Narayan Singh of Banaras) சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சன சித்திர ராமாயணத்தை புகழ்பெற்ற தங்க வினைஞர்கள் மூலம் உருவாக்கினார். ஏராளமான தங்கத்தையும் நீலக் கற்களையும் கொண்டு பக்கம் பக்கமாக அரிய  ராமாயணக் காட்சிகளை தத்ரூபமாக உருவாக்கினார். இதிலுள்ள பக்கங்கள் 500 க்கு மேல். ஆயினும் இதன் மதிப்பை  அறியாத பணத்தாசை பிடித்தவர்கள் அதை பக்கம் பக்கமாகப் பிரித்து விற்று வந்தனர். நல்ல வேளையாக  ரிச்சர்ட் சிக்னெர் என்ற நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் 1970ம் ஆண்டுகளில் புஸ்தகம் முழுவதையும் The book was documented in its entirety in the 1970s by Prof Richard Schechner of New York University, IN 1970s)

(எல்லா பக்கங்களையும ப டம் எடுத்து வைத்திருந்தார். இப்பொழுது மேப் M.A.P மியூசியம் அவற்றில் 80 பக்கங்களைக் காட்சிக்கு  வைத்துள்ளது.

இதன் சிறப்பினை அறிய உதவும் சில தகவல்கள்

ராஜஸ்தானில் மேவார் மஹாராஜா மஹாராணா ஜகத் சிங் இதே போல மேவார் ராமாயணாவை 17-ம் நூற்றாண்டில்  உருவாக்கினார் அதில் 450 ஓவியங்கள்தான் இருந்தன. ஆனால் காஞ்சன சித்திர ராமாயணத்திலோ 548 பக்கங்களில் ஓவியங்கள் உள்ளன. மேலும் ஒவ்வொரு பக்கத்திற்கும் எதிராக ராமாயணக் கதையும் எழுதப்பட்டுள்ளது .

இதை காக பூசுண்டி முனிவர் கருடனுக்குச் சொல்லுவது போல எழுதியுள்ளனர்.

ஒரு எடுத்துக்காட்டை  பாருல் சிங் எடுத்துக் காட்டுகிறார். அவரும் கவிதா சிங்கும் இந்தப் புஸ்தகத்தை  மேப் மியூசியம் மூலமாக 2023ல்  வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தினார்கள் . மேப் மியூசியத்தில் இதைக் கட்சியாக உருவாக்கிய கவிதா சிங் புற்றுநோயில் இறந்துவிட்டார். அவருக்கு உறுதுணையாக நின்றவர் , பிஎச். டி . மாணவர் பாருல்  சிங் .

ராவணனும் அங்கதனும் ஒருவருக்கு ஒருவர் சவால் விடுவதையும் ஏச்சுப்பேச்சு பேசுவதையும் 9 பக்கங்களில் படமாக வரைந்துள்ளனர். அதில் அவர்களுடைய முக பாவங்கள் எப்படி மாறுகின்றன என்பதைக் கண்டால் அவை எவ்வளவு தத்ரூபமானவை என்பது விளங்கும் என்கிறார் பாருல் சிங்.

இந்த நூலில் வர்ணனை உள்பட 1100 பக்கங்கள் உள்ளன. இதை 1796 முதல் 1814 வரை 18 ஆண்டுகளில் பல்வேறு கலைஞர்கள் வரைந்துள்ளனர் . வரிக்கு வரி தங்க வரிகள். தங்கத்தை அள்ளித்  தெளிக்க சிறிதும் தயங்கவில்லை . கலைஞர்களும் பல்வேறு பாணியைப் பின்பற்றுவோர் ஆவார்கள். இதனால் பலர் கைவண்ணத்தைக் காணமுடிகிறது .

இந்த நூல் துளசிதாஸ் எழுதிய ராமசரித மனஸ் நூலை அடிப்படையாகக்கொண்டு வரையப்பட்டுள்ளது.

மியூசியத்திலுள்ள படங்கள் 80ம், ஒரிஜினல் புஸ்தகத்திலிருந்த 548 படங்களிலிருந்து கிடைத்தவையாகும். இவைகளை விளக்கங்களுடன் புஸ்தகமாகவும் வெளியிட்டுள்ளது மேப் மியூசியம் பல்வேறு பாணியைப் பின்பற்றும் கலைஞர்கள் ஒன்றுகூடி இந்த புஸ்தகத்தை வரைந்தால் கலைஞர்களின் பார்லிமென்ட் உருவாக்கிய நூல் இது என்று கூறுகின்றனர் . கலைஞர்களின் பெயர்கள் இல்லையென்றாலும் படங்களை பார்த்தமாத்திரத்தில் அவை அவந்தி ஜெய்ப்பூர், மூர்ஷிதாபாத், டில்லி, லட்சுமணபுரி பகுதியிலிருந்து வந்தவர்கள் என்பது தெரிகிறது.

போர்க்களத்தில் லெட்சுமணன் மூர்ச்சையாகி விழுந்தவுடன் அனுமன், சஞ்சீவினி மூலிகையைக் கொண்டுவரும் காட்சி ஒரே படமாக வரையப்பட்டுள்ளது. பல ஓவியங்களில் நூற்றுக் கணக்கான கதா பாத்திரங்களையும் காணலாம். 18 ஆண்டுகளில் உருவான இந்தப் புஸ்தகத்துக்கு அந்தக் கால பணத்தில் ரூ 150,000 செலவழிந்தது. இந்தக் காலக் கணக்கில் அது பல கோடிகளாகும் . இந்த புஸ்தகம் வெளியானவுடன் மேலும் பல புஸ்தகங்களை, ஓவியங்களை அச்சிட பலரும் முயற்சித்தனர். ஆயினும் காஞ்சன ராமாயணத்தை  மிஞ்ச எவராலும் இயலவில்லை.

–subham—

Tags- மேப்’ மியூசியம் , Museum of Art & Photography (MAP) , காஞ்சன சித்திர ராமாயணம், ராமசரித மனஸ், காக பூசுண்டி முனிவர், மன்னர் உதித் நாராயணன், தங்கத்தில் ராமாயணம்

புராணத் துளிகள்! – 1; புராணங்கள் கூறும் வாழ்க்கை நெறிகள்(Post No.13,154)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.154

Date uploaded in London – — 19 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

புராணத் துளிகள்! – 1

ச. நாகராஜன்

புராணங்கள் கூறும் வாழ்க்கை நெறிகள் அபாரமானவை.

அவற்றில் சில:

 மத்ஸ்ய புராணம்

 இந்த லோகத்தில்  நல்ல குணம் மற்றும் செல்வத்தில் மேல் நிலை  ஒருவருக்கு மாத்ரு பக்தியினால் (தாயாரிடம் பக்தி செலுத்துவதால்) உண்டாகிறது.

 மத்யம லோகம் என்று சொல்லப்படும் அந்தரிக்ஷ லோகத்தில் உயர்வு

பித்ரு பக்தியினால் (தந்தையிடம் பக்தி செலுத்துவதால்) உண்டாகிறது.

ப்ரம்ம லோகத்தில் உயர்வு குரு பக்தியினால் உண்டாகிறது.

 அக்னி புராணம்

கோடி பசுக்களை தானம் செய்யும் பலன் ஒருவருக்கு மூன்றே மூன்று தினங்கள் ஸ்நானம் செய்வதால் ஏற்படும். ஆனால் இந்த மூன்று தினங்களும் ஸ்நானம், மாசி (மாக) மாதத்தில் ப்ரயாகையில் செய்யப்பட வேண்டும்.

 விஷ்ணு புராணம்

 எந்த ஒருவன் மனதாலும் வாக்காலும் செயலாலும் மற்றவருக்குக் கெடுதல்களை விளைவிக்கிறானோ அவன் அநேக அசுப ஜன்மங்களை எடுத்துக் கஷ்டப்படுவான். (மோசமான ஜன்மங்கள், மோசமான பலன்கள் உறுதி)

பவிஷ்ய புராணம்

 ஹே, சிவ,  

ராமாயணம் என்ற பெயரைக் கொண்ட புத்தகத்தை ஒருவன் தானம் செய்தால் அவன் வாஜ்பேய யாகம் செய்த புண்ணியத்தை அடைவான். அவன் விஷ்ணு லோகம் அடைவான்.

 கருட புராணம்

மனிதனுக்கு ஆயுள் நூறு வருடங்கள். அதை விட குறைவாகவே இருக்கும்.

அதில் பாதி இரவில் கழிந்து விடுகிறது. 

அதிலும் பாதி இளமைப்பருவத்தில் கழிந்து விடுகிறது.

அதிலும் வியாதி, சோகம், மூப்பு, ஆகியவற்றில் கழிந்து விடுகிறது.

வாயு புராணம்

பாதையை (நேராகப்) பார்த்து வழி நடக்க வேண்டும்,

நீரை ஆராய்ந்து பரிசோதித்த பின்னர் குடிக்க வேண்டும்.

பேச்சை சத்யமாகப் பேச வேண்டும்.

இதுவே தர்ம சாஸ்திர சம்மதமாகும்.

பத்ம புராணம்

தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் எதுவாக இருந்தாலும் சரி, அது இருக்கிறதோ இல்லையோ, – சாஸ்திரம் விதிக்கின்ற ரூபத்திலேயே பலன் உண்டாகிறது. வேறு விதத்தில் அல்ல!

 மார்கண்டேய புராணம்

எங்கு ஒரு புத்ரனானவன் தந்தை, தேவதைகள், ஆகியவர்களை பூஜிக்கிறானோ எங்கு ஒரு பத்தினியானவள் தனது கணவனுக்கு சேவை செய்கிறாளோ அங்கு தரித்திரம் இருக்காது.

பாகவத புராணம்

எவன் ஒருவனின் சிரவணமும் கீர்த்தனமும் புண்யமயமாக இருக்கிறதோ, அவனை கிருஷ்ணன் தனது ஹிருதயத்தில் வைத்துக் கொள்கிறான். அவனது துர்வாசனைகள் அனைத்தும் அழிந்துபடுகின்றன. ஏனெனில் கிருஷ்ணன் சஜ்ஜனங்களின் இதயத்தில் இருப்பவன்.

 கூர்ம புராணம்

அனாசக்தி பாவத்துடன் செய்யப்படும் கர்மங்களால் (செயல்கள்) சென்ற ஜன்மத்தில் செய்த பாவம் இந்த ஜன்மத்தில் செய்த பாவம் ஆகிய அனைத்தும் அழிந்து போகின்றன. மனம் நிர்மலம் ஆகிறது. மனிதன் ப்ரஹ்மவித் ஆகி விடுகிறான்.

 ப்ரஹ்ம புராணம் 

பாரதத்தில் ஜன்மம் எடுத்த ஒரு உத்தமன் சிறந்தவன் (தன்யன்) அவனுக்கு, தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோக்ஷம் ஆகிய அனைத்து புருஷார்த்தங்களும் சித்திக்கின்றன

 வராஹ புராணம்

குருவானவர் வித்வானோ அல்லது வித்வான் இல்லையோ சிஷ்யனுக்கு அவரே ஜனார்தனன் ஆகிறார்.

 ப்ரஹ்மவைவர்த புராணம்

எவன் ஒருவன் குருவின் ஆக்ஞையை பாலனம் செய்கிறானோ அவனே பண்டிதன், அவனே ஞானி. அவனே கல்யாண்வான். அவனே

புண்யசாலி. அவனது ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் நல்லதே நடக்கும்.

வ்ருஹநாரதீய புராணம்

மூன்று தானங்கள் உத்தமமானவை.

1.      கோ தானம் 2. பூமி தானம் 3. வித்யா தானம்

இந்த மூன்றும் ஒருவனை நரகத்திலிருந்து விடுவிக்கிறது. இந்த மூன்றில் வித்யாதானம் இன்னும் சிறந்தது.

 ஸ்கந்த புராணம் 

பாரதத்தில் ஜன்மம் எடுப்பது, சிவனுக்கு பூஜை செய்வது, கங்கையில் ஸ்நானம் செய்வது, சிவ பக்தி ஆகியவை துர்லபமானவை. (எளிதில் கிடைக்காதவையாகும்)

—subham—