முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—23 (Post No.13,145)

Kuppaimeni Herb

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,145

Date uploaded in London – –   16 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

மூலிகை Part 23

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—23

 கு

233. எலி கடிக்கு

குளப்பாயிலையை ஆவின் பாலில் அரைத்து உண்டு வந்தால் எலி கடி விஷம் கரப்பான் உடல் சுரப்பு கால் சுரப்பு சர்வ விஷ வீக்கம் இதுகள் தீரும்.

xxxx

செங்கருப்பான் கருங்கரப்பானுக்கு

குண்டலாத்தி என்று வழங்கும் சங்க ன் வேரை பசும்பாலில் அரைத்து அருந்தி வந்தால் தழுதணை  சொரி  தேமல் கிரந்தி செங்கருப்பான் கருங்கரப்பான் சிறு சிரங்கு பெருஞ் சிரங்கு யாவும் தீரும்.

xxxx

காதில் ஈப்புகுந்தால்

குப்பை மேனி இலையில் கொஞ்சம்  நீர் தெளித்துகே கசக்கி காதில் இரண்டு மூன்று  துளி சாறு பிழிந்தால் ஈ செத்து விழுந்து விடும்

இதுவுமது

குப்பை மேனிச் சாறு ம் கோலியவரைச் சாறு ம் சமனாய்க் கலந்து காதில் பிழிந்தால்  ஈ சாகும்

xxxx

சிரா பீனிசத்திற்கு

குப்பை மேனி ஆடு தீண்டாப்பாளை அளிஞ்சிமுஞ்சி இவைகளின்   சாறு வகைக்கு அரைப் படி நல்லெண்ணெய் படி 2 இவைகளைக் கலக்கி அடுப்பேற்றி மெழுகுபதமாய்க் காய்ச்சி வடித்து தலை முழுகி வந்தால்  சி ராப் பீனிசம் தீரும் .

xxxx

உட்குத்து  புற வீச்சும் தீர

குப்பைமேனி  சிறுபுள்ளடி  பொன்னாவாரை  இவைகள் ஓரளவாயெடுத்து வே ப்பம் இலையில் உப்பு போட்டு  இடித்துப்பிழிந்த சாறு விட்டு அரைத்து ஒருவேளைக்கு புன்னைக்காயளவு  ஒருநாளைக்கு மூன்று தபா கொடுக்க நிவர்த்தியாகும் .

xxxx

குடல் வாதத்திற்கு

குரி ஞ்சானிலையை  பிட்டவிழ்த்துப் பிழிந்த சாறு அரைக்கால் படி சுக்கு மிளகுஉள்ளி, கடுகு வெந்தியம் வகைக்கு விராகநிடை 1 வெதுப்பிப் பொடித்துப்  போட்டு  கலக்கி  மூன்று நாள் கொடுக்க சாந்தியாகும் .

xxxx xxxx

பல ரோகந்தீர

குங்குமப் பூவை அரைக்கால் விராகநிடை எடுத்து  பால் விட்டரைத்து   அரைக்கால் படி பசும்பாலில்கலந்து   குடித்து வந்தால் அண்டவாதம் உச்சிவலி கண்ணிலுண்டாகும் பூ கபம்  கால் வலி சூலை தாகம் மேக ஜலம் விந்து நஷ்டம் ஜலதோஷம் சுரம் செவி நோய்  பித்தம் மதுமேகம் இவரை தீரும் .பெண்களின் கர்ப்ப  வலி ….திரரோகம் இவைகள் தீரும். நீடித்து சாப்பிட வேண்டியது .

xxxx xxxx

பேதி கட்ட

குடசப் பாலை மரத்தின் பட்டையை  பாலில் அரைத்துக் காலையில் குடித்து வந்தால் பேதியைக் காட்டும். நீரிழிவு வாதம் இவை நிவர்த்தியாகும் .

xxxx

பொடி சிரங்கு

குடியாட்டுப் பூண்டென்னும் கொல்லை பல்லியைக் கொண்டுவந்து கொஞ்சசம் கெந்தகம் சேர்த்து அரைத்து  உடம்பில் தேய்த்துக் குளித்தால் பொ டி சிரங்கு மாறும்.

xxxx

தினவு தீர

குதிரைக் குளம்பு என்னும் நிலக்கடம்புயிலை கொண்டுவந்து மிதமாயெடுத்து பாலில் அரைத்துக் கொடுத்தால் குதிரை நடை வாய்வு ஜென்னி தினவு தீரும். இதைக் கிஷாயம் மூலியமாவும் உபயோகிக்க வேண்டும் .

xxxx

243. கண் மயக்கம் தீர

குதிரைவாலிப்பூ ண்டு கொண்டுவந்து பாலில் அரைத்து அருந்திவந்தால் கண் மயக்கம் ஈளை கடுப்பு கழிச்சல் காசம் இவை சாந்தியாகும்

xxxx

பல வியாதிகள் தீர

குரிஞ்சான் கட்டையை சூரணித்துக் கரைகூட்டி திருக்கடிப்பிரமாண ம் எடுத்து தின்று வரவும். இப்படி நீடித்து தின்று வருவதால்  தேகத்திலுள்ள காணா வியாதிகள் யாவும் தீரும்; நல்ல வலிவையுண்டாக்கும் .

xxxx

245. வாந்தியாக

குரிஞ்சான் வேரை  அல்லது உலர்ந்தயிலையை போட்டி செய்து சுமார் 30 கிறையின் வரையில் உள்ளுக்கு க் கொடுத்து சுடு தண்ணீர் மிகுதியாய்க் குடித்தால் நன்றாய் வாந்தியாகும் .

xxxx

எச்சரிக்கை

சித்த மருத்துவத்திலும் ஆயுர்வேதத்திலும் புழங்கும் சில சொற்கள் விஷயம் தெரியாதோரை திசை திருப்பிவிடும் குதிரைக்குளம்பு , கொல்லை பல்லி என்பன மூலிகைகளின் பெயர்கள்; மூலிகை அறிவு இல்லாதவர்கள் நிஜ குதிரை , நிஜ பல்லியைக் கொண்டுவந்தால் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும். அந்தக் காலத்தில் எல்லோரும் வைத்தியம் பார்த்துவிடக்கூடாது , விஷயம் அறிந்தவர்களே வைத்தியம் பார்க்க வேண்டும் என்பதற்காக பல சங்கேதச் சொற்களைப் பயன்படுத்துவார்கள்; சில மூலிகைகள் எப்படி உருவத்தில் தோன்றுகிறதோ அதை வைத்தும் பெயர்கள் உண்டாகும். உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் இப்படி சொல் வழக்கு உண்டு ஆங்கிலத்தில் ஒரு மரத்துக்கு குரங்கு மரம் MONKEY TREE என்ற பெயருண்டு. ஆனால் அதற்கும் குரங்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை!

— subham—

Tags- குப்பைமேனி, குரிஞ்சான், குதிரைக் குளம்பு, குங்குமப் பூ, முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 23

சிவபிரகாச சுவாமிகளின் சிவ பார்வதி புதிர்ப் பாடல்! (Post No.13,144)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.144

Date uploaded in London – — 16 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சிவபிரகாச சுவாமிகளின் சிவ பார்வதி புதிர்ப் பாடல்! 

ச. நாகராஜன்

சிவப்பிரகாச சுவாமிகள் சிறந்த சிவ பக்தர்.

அவர் தமிழில் சிலேடையிலும் புதிர்ப் பாடல் இயற்றுவதிலும் கூட வல்லவர்.

குறும்பாகக் கேள்வி கேட்டு பதில் அளிக்கும் வகையிலான பாடலை சிவ- பார்வதி சம்வாதமாக அவர் இயற்றியுள்ள பாடல்கள் பல.

ஒன்றை இங்கே காணலாம்.

பாடல் இது தான்:

ஐயநின் சென்னிமிசை யுறைகின்ற மடங்கையா ரென்னவுமை வினவும்

  அன்னதொரு மடமங்கை யென்றுவெண் டிரைகொழித் தழகொழுகு  

       தண்புனலெனத்

துய்யவொளி யானனங் கரியவிழி காதுவாய் தோயத்தி 

                லுண்டோவெனச்

    சொல்லருங் கமலமலர் காவிமலர் கொடிவள்ளை தூயகெங்  

       குமுதமென்னப்

பொய்யென நினைத்துநற் கொங்கையுங் கூந்தலும் புனலிடை யுண்டோவெனப்

  புற்புதஞ் சைவலம் தெனவேமறுத்துப் புகன்றிடுதி நங்காயெனத்

தையலவ ளேயென்ன நாணொடு வணங்கி யென்றன்பிழை பொறுத்தி யென்றே

 சங்கரனுடைத்திடத் திருவுள மகிழ்ந்தசிவ சிங்கரி யுமைக் காக்கவே.

பார்வதி சிவபிரானைக் கேட்கிறாள் – உங்கள் தலையின் உறைகின்ற மடமங்கை யார் என்று.

சிவபிரான் கூறுகிறார் : அப்படி உனக்குத் தோன்றுவது ஒரு இளம் பெண் இல்லை. அது குளிர்ந்த நீராகும்.

பார்வதி கேட்கிறாள் : அப்படியானால் அதில் முகம், கரிய விழிகள், காது வாய் உண்டோ அதில்?

சிவபிரான் கூறுகிறார் : தாமரை மலரும், கருங்குவளை மலரும் வள்ளைக் கொடியும், செவ்வல்லி மலருமே அவை.

பார்வதி கேட்கிறாள் : அழகிய மார்பகங்களும் கூந்தலும் நீரில் உண்டோ?

சிவபிரான் மறுத்துக் கூறுகிறார் : அவை நீர்க்குமிழியும் , பாசியும் தான்.

பெண்ணே என்று சிவபிரான் பார்வதியை அழைத்து இப்படிச் சொல்லும் போது, தலையிலிருந்த கங்கையானவள் தன்னைத் தான் சிவபிரான் அழைத்தார் என்று எண்ணி ஏன் என்கிறாள்.

தனது குட்டு வெளிப்பட்டதைக் கண்ட சிவபிரான் என் பிழையைப் பொறுத்து அருள் என்று பார்வதியிடம் மன்னிப்புக் கேட்கிறார்.

இதனால் பார்வதி மனம் மிக மகிழ்கிறாள்.

இப்படிப்பட்ட சிவனும் பார்வதியும் உங்களைக் காக்கக் கடவது!

பாடலின் பொருளைப் பார்ப்போம்:

ஐய – ஐயனே

நின் சென்னிமிசை உறைகின்ற மடமங்கை – உன் தலையில் வசிக்கின்ற இளம் பெண்

யார் என்ன – யார் என்று

உமை வினவ – உமாதேவியார் கேட்க

அன்னது ஒரு மடமங்கை அன்று – அப்படி உனக்குத் தோன்றுவது ஒரு இளம் பெண் அல்லள்

வெள்திரை கொழித்து – வெண்மையாகிய அலைகல் வீசி

அழகு ஒழுகு தண்புனல் என – அழகு ஒழுகும் குளிர்ந்த நீரே அது என்று சொல்ல

துய்ய ஒளி – பரிசுத்தமாகிய ஒளியை உடைய

ஆநநம் – முகமும்

கரிய விழி – கருங்கண்களும் ‘

காது – செவிகளும்

வாய் – வாயும்

தோயத்தில் உண்டோ என – நீரில் உண்டோ என்று வினவ

சொல் அரு – முகம் முதலியன போலத் தோன்றுவது சொல்லுதற்கரிய

கமல மலர் – தாமரை மலரும்

காவிமலர் – கருங்குவளை மலரும்

கொடி வள்ளை – வள்ளைக் கொடியும்

தூயசெங்குமுதம் – பரிசுத்தமாகிய செவ்வல்லி மலருமேயாம்

என்ன – என்று சிவபிரான் கூற

பொய்யென நினைத்து – பொய் என்று நினைத்து

நல் கொங்கையும் கூந்தலும் – அழகு கொண்ட மார்பகங்களும் கூந்தலும்

புனலிடை உண்டோ என — நீரிடத்தில் உண்டோ என்று பார்வதி கேட்க

புர்புதம் சைவலமதெனவே மறுத்துப் புகன்றிடுதி – அப்படித் தோன்றுவது நீர்க்குமிழியும் பாசியுமாம் என்றே மறுத்துச் சொல்வாய்

நங்காய் என – பெண்ணே என்று சொல்ல

தையலாள் ஏன் என்ன – தன்னை அழைத்ததாக எண்ணி அந்தத் தங்கையானவள் ஏன் என்று கேட்கவும்

நாணொடு வணங்கி – வெட்கத்தோடு வணங்கி

என்பிழை பொறுத்திடு என்று – என் பிழையைப் பொறுக்க வேண்டும் என்று

சங்கரன் உரைத்திட – சிவபெருமான் சொல்ல

திருவுள்ளம் மகிழ்ந்த – மனம்  மகிழ்ந்த

சிவசங்கரி உமைக் காக்க – சிவசங்கரி உங்களைக் காக்கக் கடவது

 இப்பாடலில் சிவப்பிரகாச சுவாமிகள் ஒரு அற்புதமான காட்சியை அரங்கேற்றுகிறார்.

பாடலைப் படித்து மகிழ்கிறோம்; சிவ பார்வதி அருளைப் பெறுகிறோம்.

வாழ்க தமிழ்

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

***

திருவனந்தபுரம் பாலஸ் மியூசிய அதிசயங்கள் -1 (Post No.13,143)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,143

Date uploaded in London – –   15 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Palace Museum, Thiruvananthapuram & Marthandavarma Chitralayam

எனது மார்ச்-ஏப்ரல் 2024 இந்திய விஜயத்தின் போது கேரள மாநிலத்தின் தலைநகர் திருவநந்தபுரத்துக்கும் அருகிலுள்ள கோவலம் கடற்கரைக்கும் சென்றேன்.

ஏப்ரல் 5ம் தேதி (2024) அரை நாள் ஒய்வு கிடைத்தது. உடனே என்னுடைய பட்டியலில் முதலிடத்தில் இருந்த பாலஸ் மியூசியத்துக்கு காரை எடுத்துக் கொண்டு ஓடினேன். பாலஸ் மியூசியத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன.

புத்தன் மாளிகா–Puthen Maalika (New Palace) –அல்லது குதிர மாளிகா–Kuthira Maalika (Horse Palace) –என்பது முதல் பகுதி; அருகிலேயே மார்த்தாண்டவர்மா சித்ராலயம் இருக்கிறது. முதல் மியூசியத்தில் புகைப்படம் எடுக்கலாம். ஆனால் 70 ரூபாய் டிக்கெட்டுக்கு மேலாக 500 ரூபாய் கட்ட வேண்டும். நான் 500  ரூபாய் கட்டி முடிந்த மட்டும் புகைப்படங்கள் எடுத்தேன். திருவாங்கூர் சுவாதித்திருநாள் மஹாராஜா கட்டிய காட்சியகம் இது .இந்த மாளிகையில் மரத்தால் ஆன குதிரைகள் கூரையைத் தாங்கி நிற்பதால் குதிரை அரண்மனை என்ற பெயர் ஏற்பட்டது. புதிதாகக் கட்டப்பப்பட்டதால் புத்தன் அரண்மனை என்ற பெயர் ஒட்டிக்கொண்டது

கோவிலுக்கு அருகிலேயே இவை உள்ளன . மாலை 5 மணிக்கு மூட்டி விடுகிறார்கள்

xxxx

கேரளத்தில் மூன்று அரசாட்சிகள்  இருந்தன; திருவாங்கூர், கொச்சி, மலபார் என்ற மூன்று பகுதிகளை மன்னர்கள் ஆண்டுவந்தனர்

மார்த்தாண்ட வர்மா சித்திராலயத்தில் திருவாங்கூர் ராஜ வம்ச வரலாறு இருக்கிறது . அங்கு அருமையான, அபூர்வமான புகைப்படங்கள் இருக்கின்றன. ஒரு படத்தில் நாட்டின் மூன்று பிரதமர்கள் இருக்கிறார்கள் ; ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி . சின்னப்பையனாக ராஜீவ் காந்தி. ; இதில் சிறப்பு என்னவென்றால் திருமதி இந்திரா காந்தி அழகாக கொண்டை போட்டுகொண்டு அதைச் சுற்றி தமிப் பெண்கள் போல மல்லிகைப்பூ சரத்தைச் சூடியுள்ளார் .

இன்னொரு படத்தில் எம் எஸ் சுப்புலட்சுமி , சதாசிவம் ஆகியோர் மிக இளம் வயதில் காட்சி தருகின்றனர். அதை மட்டும் நைசாக படம் எடுத்தேன்.

இந்த சித்திராலயத்திலுள்ள அரசர் படங்கள் குதிரை மாளிகையில் இருப்பதால் அவைகளை முன்னரே படம் எடுத்திருந்தேன்.

இங்கு எங்களுக்கு ‘கைடா’க வந்தவர் இது அரச குமாரியின் பள்ளிக்கட்டு என்று ஒரு திருமண போட்டோவைக் காட்டினார் ; பள்ளிக்கட்டு சபரி மலைக்கு என்ற வீரமணி பாட்டைக் கேட்டிருந்த எனக்கு வியப்பு மேலிட்டது ; பள்ளிக்கட்டு என்றால் அரசகுமாரியின் திருமணம் அல்லது ஒரு கிராமத்தை உருவாக்குதல் என்று மலையாளத்தில் பொருளாம்.

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு

லண்டன் வந்த பிறகு,  1935ம் ஆண்டு ஆனந்தவிகடன் தமிழ் அகராதியைப் புரட்டிப் பார்த்தேன்; அண்மையில் வெளியான  கிரியா தமிழ் அகராதியிலும் பார்த்தேன் ; பள்ளிக்கட்டு என்ற சொல்லே இல்லை ; இன்று வரை பள்ளிக்கட்டு சபரிமலைக்கு என்ற பாடல் வரிகளுக்கு அர்த்தம்  புரியவில்லை . மலையாளச் சொல் என்பதால் நம்மவர்கள் விட்டு விட்டாலும் சபரிமலைக்கும் பள்ளிக்கட்டுக்கும் என்ன தொடர்பு? தெரிந்தால் சொல்லுங்கள்

இதோ குதிரை மாளிகையின் சிறப்புகள்

அரசவைக் கூடம் , மாளிகை முழுதும் மரத்தால் ஆனது. மேற்கூரைகள் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன . அவை அனைத்தும் தஞ்சாவூர் தச்சர்கள் (தர்மலிங்கம்??)  கைவண்ணம் என்று உடன் வந்த ‘கைடு’  கூறினார் .ஜன்னல்கள் என்று நாம் சொல்லும் சாளரங்கள்,  மழை நீர் புகாத வண்ணம்  , க்கா ற்று மட்டும் உள்ளே வரும் வகையில் அற்புதமாக முழுக்க முழுக்க மரத்தால்  வடிவமைக்கப்பட்டுள்ளன

இங்கு அருமையான பளிங்குச் சிலைகளும் , பஞ்சலோக விக்கிரகங்களும் இருக்கின்றன. மன்னருக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த சீன, ஜப்பானிய ஜாடிகள், கோப்பைகள் பல வண்ணங்களில் மிளிர்கின்றன. தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம், , பீங்கான் பாத்திரங்கள் உள்ளன Rain Drum ரெயின் ட்ரம் என்னும் டமாரம் இருக்கிறது.

ரெய்ன் ட்ரம் Rain Drum என்றால் மழை டமாரம்; இதில் தவளை உருவங்கள் இருக்கும். இவைகள் மீது மழைத்துளிகள் விழும்போது தவளை எழுப்பும் ஒலி கேட்குமாம். இன்னும் ஒரு விளக்கம் இவைகளை வைத்தால் காலா காலத்தில் பருவ மழை  பெய்யுமாம் ; தென் கிழக்காசிய நாடுகளில் இவைகளைக் காணலாம்.

இந்த மழை டமாரங்கள் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவை. இப்போது புத்தமதக் கோவில்களிலும், அ ரண்மனைகளிலும்  காணப்பட்டாலும் இவைகளுக்கும் புத்த மதத்தனுக்கும் தொடர்பில்லை. இவை வியட்நாமில் தோன்றி மற்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவின. கரன்  டமாரங்கள் , தவளை டமாரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

பர்மிய கரண் இன  மக்கள் இவைகளை வயல்களில் தொங்கா விடுகின்றனர்; இதனால் பயிர்களை பூச்சிகளை அளிக்காது என்று அவர்கள் நம்புகின்றனர். கிரஹப் பிரவேசத்தில் வீட்டில் ஒலித்தால் சுப மங்களம் ஏற்படுமாம். வறட்சிக்கு காலத்தில் இவைகளை முழக்கினால் மழை வரும் என்பதும் பர்மியர்களின் நம்பிக்கை.

டமாரத்தின் நடுவில் நட்சத்திரம் பொறிக்கப்பட்டிருக்கும்; அதிலிருந்து 8, 12, 16 என்ற இரட்டைப்படை எண்களில் கிரணங்கள் புறப்படும். டமா ரத்தில் தவளைகளுக்குப் பதிலாக வேறு பிராணிகள், தாவரங்கள் ஆகியனவும் பொறிக்கப்பட்டிருக்கும் 

கதகளி நடனம் மலையாள பூமிக்கே உரித்தான நடன வகை. அதில் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு வண்ணம், தலை முடி, கவசம் உண்டு. ஒரு அறை .முழுவதும் கதகளி நாட்டிய கதாபாத்திரங்களின் முழு உருவ சிலைகள் இருக்கின்றன .

படங்களை முதலில் காண்போம்:

-TO BE CONTINUED…………………

TAGS- திருவனந்தபுரம் பாலஸ் மியூசிய அதிசயங்கள், Place Museum, Rare pictures-1, Thiruvananthapuram

Magic Books and Medical Books by Nagarjuna (Post No.13,142)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,142

Date uploaded in London – –   15 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Nagarjuna was the son of a wealthy Brahmin of Vidharba region.  He was an expert in all branches of science, particularly chemistry. We can call him Father of Chemistry and Father of Alchemy; and Father of Magic as well.

He was born under an Arjuna Tree and his Guru was a Naga and hence he was called Nagarjuna.

His achievements according to Chinese, Tibetan and Indian historians were:

Finder of Gold Mines in South India

Founder of Mahayana Buddhism

Made gold out of base metals and wiped out famine

Built dykes to save Gaya from flooding

Wrote several books dealing with many different subjects.

Invented many medicines; Nagarjuna was the discoverer of several eye medicines and of the elixir of life which strengthens the weakening forces of men in old age. He prolonged the life of many kings.

xxxx

Described colouring and alloying metals; extraction of copper from pyrites, use of metal oxides as medicines.

Famous historian Dr Raghuvira says he belonged to the same age which produced the non rusting Iron Pillar of Delhi.

The earliest datable of account of Nagarjuna is given by Kumarajiva in 405 CE. Chinese Traveller I-Tsing places Nagarjuna in the First Century CE. So we can conclude that he lived 2000 years ago.

All his works were preserved in China and not India. Muslims burnt the libraries in Nalanda University and we lost all the literary treasures of India. Fortunately Chinse translated all his works when they came to study in Nalanda.

Nagarjuna was the Vice Chancellor of Nalanda University for some time. At an early age,  at the suggestion of the High Priest Sri Saraha Bhadra of the Nalanda University, he entered Buddhist order. After Saraha Bhadra’s death he became the President (V.C.) of the University.

The Tibetan tradition preserved the name of his  teacher Rahula. Chinese Traveller Hiuen Tsang mentioned one of his pupils Arya Deva.

Strange stories are told about this philosopher cum scientist:

“A legend relates that he was skilled in magic and was able thereby to prolong his own and a Southern Indian King’s life indefinitely. This caused great grief to the mother of the heir- apparent, who instigated her son to ask Nagarjuna’s for his own head. Nagarjuna complied with his request   and cut his own head off with a blade of Kusa grass, nothing else has the power of injuring him “– Monier Williams- Buddhism , P.196

The following is a list of works ascribed to Nagarjuna:

In Medicine:

Rasa ratnakara,

Lauha sastra

Kaksaputa Tantra of Siddhanta Mangala

Arogya Manjari

Yoga Sara

Yoga Sataka

Rasendra Mangala

Rasakachaputa

Yoga Manjari

Varta mala

Cittanandapatisyasi

xxxx

In the Secondary Baudhdha Philosophy

Siddhanagarjuna or Madhyamika karika

Mukti swastika and its commentary

Vigrahavyavartini karika

Vigrahavyavartini karika Vrtti

xxxx

In Spiritual Knowledge

Prajnadanda

Tattvaprakasa

Paramarahsyartha

Samayamudra

xxxx

In Sexology

Ratisastra

xxxx

In Magic

Yogaratnamala ; also called Ascharya yogamala

xxxx

In Tantra

Taratantra

Kacchaputa Tantra

Siddha Camunda tantra

xxxx

In Therapy based on Tantra

Nagarjuna Cikitsa

Nagarjuniya Yoga

Nagarjunanjana

xxxx

In Art

Suhrlekha

xxxx

Many writers have pointed out that all these books were not written by one single author; may be written by others with the same name.

Caraka used only leaves, roots, barks etc. as medicines in the field of Cikitsa. Using Rasas for cikitsa was a new thing.  Nagarjuna proposed many rasa cikitsa.

In India we find many scholars to have written so many books. Vyasa, Adi Shankara, Kshemendra and Bhojaraja have written several treatises. So Nagarjuna could have produced these works.

Cakrapanidatta and Vrnda, authors of medical treatises have referred to Nagarjuna in their books. They have referred to many prescriptions in their treatises. Several times he was called by the name of Muni.

xxxx

Even today Nagarjuna is well remembered in Tibet . Nagarjuna’s two famous quotations are:

“I shall draw out the world from poverty if I am successful in preparing the Rasa”.

“On getting success in the preparation of the Rasa, I shall make the world bereft of death and old age.

xxxx

 It is amazing to see that one individual thought of wiping out poverty from the face of earth through his chemical preparations. In the West we see people inventing medicines to make more money; in India Siddhars and Vaidhyas did it for saving people without expecting any money.

–subham—

Tags – books, Nagarjuna, Quotes, Father of Chemistry , Father of Magic, Father of  alchemy.

கங்கை  மீது அணை – சரியா? (Post No.13,141)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.141

Date uploaded in London – — 15 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கங்கை  மீது அணை – சரியா? 

ச.நாகராஜன்

 சுற்றுப்புறச் சூழலுக்கு மனிதன் செய்யும் கேடுகள் என்ற எனது முந்தைய கட்டுரையில் டாக்டர் கிருஷ்ண நாராயண் சென் (Dr krishna Narayan Sen) அவர்கள் குறிப்பிட்ட சில கருத்துக்களைத் தந்துள்ளேன்.

அவர் கங்கை மீது அணை கட்டுவது சரியா என்பதைக் குறித்த தனது கருத்தை அழகுற வெளிப்படுத்தியுள்ளார்.

அதை இங்கு கீழே தருகிறேன்.

ஒரு முறை ஜோஷி மடம் ஜகத்குரு சங்கராசாரியர் இப்படிக் குறிப்பிட்டார் : “எந்தப் பணியை நாம் செய்தாலும் அதில் நமக்கு பண லாபம் எவ்வளவு கிடைக்கிறது, ஆத்ம லாபம் எவ்வளவு கிடைக்கிறது என்று பார்த்தே செய்கிறோம். ஆனால் கங்கையின் மீது அணைகளைக் கட்டுவதால் இந்த இரண்டையுமே நாம் இழந்து விட்டோம்.”

ஒடி வரும் நீரைத் தடுத்துத் தேக்கி ஒரு அணையை உருவாக்குகிறோம். அது வெள்ளத்தைத் தடுக்கிறது, வயல்களுக்கு நீரைப் பாய்ச்ச வகை செய்கிறது, தொழிலகங்களுக்கு உதவுகிறது, மனிதனுக்கு நீரைத் தந்து உதவுகிறது, ஹைட்ரோ எலெக்ட்ரிக் ஆற்றலை உருவாக்கப் பயன்படுகிறது.

இவை எல்லாம் பேப்பரில் எழுதச் சரியானவை தான். ஆனால் நடைமுறையில் ஏராளமான பிரச்சினைகள் எழுகின்றன.  சுற்றுப்புறச் சூழல் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. பல்லுயிர் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது.  செடி, கொடி, மலர்கள், தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன.

உலகின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட அணைகளால் 3,50,000 தாவரம் மற்றும் உயிரினங்களும் 110 லட்சம் மிருக இனங்களும் அழிந்து விட்டன என்று உத்தேசமாக மதிப்பிடப்படுகிறது.

மரங்கள், மிருகங்கள், நீர் வாழ் உயிரினங்கள் க்ரீன்ஹவுஸ் வாயு எனும் நச்சுப் புகையினால் உருமாறி அழிகின்றன. உயிர் பிழைத்திருக்கும் நீர் வாழ் உயிரினங்கள் பாதுகாப்பிற்காக வேறு இடத்தை நோக்கிச் செல்கின்றன.

இயல்பாகச் செல்லும் நீரோட்டம் பாதிக்கப்படுவதால் தாவர வகைகளும் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.

ஒரே இடத்தில் ஏராளமான நீர் தேக்கப்படுவதால் பூமியில் ஏற்படும் அதிக அழுத்தம் காரணமாக பூகம்பம் ஏற்படுகிறது. அணையின் அடிப்பகுதியில் உள்ள பூமிப் பரப்பில் வெடிப்புகள் ஏற்படுகின்றன.

அஹ்மத் ஜொக்லஃப் என்னும் பல்லுயிர் இனப் பெருக்கம் பற்றிய ஐ நா அறிஞர் (AHMED DJOGHLAF, HEAD OF UN BIOLOGICAL DIVERSITY), ஒவ்வொரு மணி நேரமும் மூன்று உயிரினங்கள் அழிகின்றன – அதாவது ஒரு நாளுக்கு 72 உயிரினங்கள் அழிகின்றன- என்கிறார். அத்தோடு ஒவ்வொரு வருடமும் பல்லுயிர் இனப்பெருக்க அழிவால் 17000 ஹெக்டேர் காட்டு நிலங்கள் அழிக்கப்படுகின்றன. நீரை மாசுபடுத்துவதால் ஒவ்வொரு வருடமும் 4 கோடி குழந்தைகள் இறக்கின்றன. 10 கோடி நீர் வாழ் உயிரினங்கள் கடல் நீர் மாசுபடுவதால் ஒவ்வொரு வருடமும் அழிகின்றன. இது கடலில் சேரும் தொழிலகக் கழிவுகளால் ஏற்படும் அசுத்தத்தாலேயே பெரும்பாலும் ஏற்படுகிறது.

மூன்று பெரும் விஞ்ஞானிகள் கடவுள் மீதான நம்பிக்கை அறிவியல் முன்னேற்றத்துடன் இணைந்தே இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

அமெரிக்க அரசைச் சேர்ந்த மரபியல் விஞ்ஞானியான டாக்டர் பிரான்ஸில் எஸ் காலின்ஸ் (Dr Francis S Collins, renowned geneticist of American Government), ஹார்வர்ட் வானியல் பேராசிரியரான டாக்டர் ஓவன் ஜிஞ்ஜெரிச் (Dr Owen Gingerich, emeritus professor of Astronomy in Harvard) மற்றும் ஸ்டான்ஃபோர்ட் உயிரியல் வல்லுநரான டாக்டர் ஜான் ரப்கார்டன் (Dr John Roughgarden, Evolutionary biologist at Stanford) ஆகிய மூவரே இந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

உலகின் படைப்பானது தகுந்த மரியாதை செலுத்தப்பட வேண்டிய ஒன்று. அதன் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியது மிகுந்த அவசியம்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறினார் : “கடவுள் உலகத்தை எப்படிப் படைத்தார் என அறிய நான் விரும்புகிறேன். இந்த அல்லது அந்த நிகழ்வில் எனக்கு ஆர்வம் இல்லை. அவனது எண்ணங்களை அறிய விரும்புகிறேன். மற்றவை எல்லாம் வெறும் விவரங்களே”

(I want to know, how God created the world. I am not interested in this or that phenomenon. I want to know His thoughts, the rest are details.)

ஆக, பெரும் அறிஞர்களே கவலைப்படும் அளவு மனிதனின் சுயநலம் மிக்க செயல்பாடுகள் உள்ளன, அவை படைப்பின் அருமையை சிதைக்கின்றன என்பது தெளிவாகிறது.

ஒவ்வொருவரும் சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டில் கவனம் செலுத்தி அதைக் காத்தால் இயற்கை நம்மை வாழ வைக்கும்!

***

ஆல்பர்ட் ஐன்டைனுக்கு தெரியாதது இந்துக்களுக்குத் தெரியும் ! (Post.13,140)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,140

Date uploaded in London – –   14 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நான் இரசாயனவியல், பெளதீக இயல், தாவர இயல், பிராணியியல் படித்து பி.எஸ் சி பட்டமும் பின்னர் இரண்டு சப்ஜெக்டுகளில் எம்.ஏ. பட்டங்களும் பெற்றவன். ஆகையால் தத்துப் பித்து என்று உளறமாட்டேன் . உலக மஹா மேதை ஆல்பர்ட் ஐன்டைனுக்குத் தெரியாத விஷயங்கள் இந்துக்களுக்குத் தெரிந்திருந்தது ; ஆயினும் கிரேக்கர், சகரர், ஹூனர், மங்கோலியர், முஸ்லீம், கிறிஸ்தவர் படை யெடுப்புகளால்  நமது அறிவியல் பொக்கிஷங்கள் அழிந்து விட்டன . அவை முன்னர் இருந்ததற்கான இலக்கியச் சான்றுகள் மட்டுமே இப்போது உள்ளன . ஒரு காலத்தில் நாஸா (The National Aeronautics and Space Administration = NASA ) போன்ற அமைப்புகள் இதைக் கண்டுபிடிக்கையில் நாங்கள் அன்றே இதைச் சொன்னோம் என்று பெருமை பேசலாம்.

one stone= Einstein

Apart from being a famous last name, einstein in German literally means ‘one stone’. The word is composed of ein which means one and stein which means stone or rock. The word is pronounced /aynshtayn/ .

ஐன்ஸ்டைன் (ஜெர்மன் மொழியில் இவர் பெயர் ஒரு கல் ; ஐந் = 1, ஸ்டைன் = கல்/ ஸ்டோன் ) என்ன சொன்னார்? ஒளியின் வேகம்தான் இந்த பிரபஞ்சத்தில் அதிக வேகம் உடையது ; ஒளி ஒரு வினாடிக்கு 1,86,000 மைல் செல்லும் Light from a stationary source travels at 300,000 km/sec (186,000 miles/sec). ஆனால் இந்த வேகத்தை மனிதர்கள் நெருங்கவே முடியாது ; ஏனெனில்  அதற்கு பிரம்மாண்டமான சக்தி தேவை; அப்படிப்பட்ட சக்தியை உண்டாக்க பிரம்மாண்டமான சக்திக் கேந்திரம் தேவை ; அதை நம்மால் உருவாக்க முடியாது

ஆனால் மஹாபாரதம் , ரேவதி நட்சத்திரக் கதை , நம்மாழ்வார் பாடல் முதலியன இந்துக்களின் வெளி உலக யாத்திரை பற்றித் தெளிவாக உரைக்கின்றன ஒரே நாளில் கிருஷ்ணனும் அர்ஜுனனும் சொர்க்கலோகம் சென்று, இறந்து போன 10 பிராமணக்  குழந்தைகைகளை மீட்டு  வந்ததை நம்மாழ்வார் பாசுரம் எடுத்துரைக்கிறது . இறந்து போன குழந்தைகளை சுந்தரரும் சம்பந்தரும் மீட்டு  வந்ததை தேவாரம் பாடுகிறது (இது பற்றி தனித்தனிக் கட்டுரைகளை முன்னரே எழுதிவிட்டதால் மீண்டும் சொல்லப் போவதில்லை )

வால்மீகி ராமாயணத்தில் THOUGHT POWERED SPACE SHUTTLE எண்ணத்தால் இயக்கும் ஸ்பேஸ் ஷட்டில் பற்றிக் காண்கிறோம் ; ஒரே நாளில் இலங்கையிலிருந்து ராமன் அயோத்தி செல்கிறார். மேலும் அந்த விண்கலம் எத்தனை பேர் ஏறினாலும் அதற்குத்தக்க விரிவடைகிறது . அதே போல அனுமனும் ஒரே நாளில் இலங்கையிலிருந்து இமயமலைக்குச் சென்று சஞ்சீவி மூலிகையைக் கொணர்ந்ததையும்  காண்கிறோம்.

இவ்வாறு விரைவில் செல்ல, சில குளிகைகளை உலகம் புகழும் மந்திரவாதி நாகார்ஜுனா 2000 ஆண்டுகளுக்கு முன்னர் யோக ரத்ன  மாலா  நூலில் செப்பிய விஷயங்களைக் காண்போம் .

xxxx

இடுப்பில் கரிசலாங்கண்ணி  (Bhringaraja (Eclipta alba) Karisilankanni ) மூலிகை, பொன் வண்டு, காக்க ஜங்கா சரபுங்கா , ஏல பலூக்கா மூலிகையைச் சுற்றிக்கொண்டு  ஒரு மனிதன் காற்றினும் கடுகிச் செல்லலாம் .

xxxx

மதன பலா, சரபுங்கா , பூர்ஜ பத்ராவின் பட்டை  ஒரே கலர்  உடைய பசுவின் பாலில் பொடித்து  காலில் பூசிக் கொள்ளவும; அ ப்படிச் செய்யும் மனிதன் களைப்பே தெரியாமல் ஒரே நாளில் நூற்றுக் கணக்கான மைல்கள் பயணம் செய்ய முடியும் .

XXXX

கிர்கலச , நக்தமாலை எலும்புகளை எடுத்து தம்பலப்பூச்சி, மயில் ரத்தத்தில்  கலந்து ஒரு மாத்திரை செய்யவும்; அதை ஒரு சிறிய தங்கத்தினால் ஆன சின்னப் பெட்டியில் வைக்கவும்;  அதை வாயில் அடக்கிக்கொண்டால்  ஒரு மனிதன் ஒரே  நாளில் 350 யோஜனை தூரம் செல்லலாம்.

ஒரு யோஜனை= எட்டு மைல்கள்

கிர்கலச = பச்சோந்தி; நக்தமாலா =  Pongamia glabra தாவரம்

XXXX

வனலோசன, கரிசிலாங்கண்ணி வேர் ஆகியவற்றை ஆட்டு வெண்ணெயில் பொடித்து, காலில் பூசிக்கொண்டால்  அந்த மனிதன் நினைத்த தூரம் செல்லலாம்.

அனுமன் இலங்கைக்குச் சென்றதும், சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவர இமய மலை சென்றதும் இப்படித்தான் போலும்!

 குபேரனுடைய புஷ்பக விமானத்தை ராவணன் பறித்தான்.அதை ராவணன் மரணத்துக்குப் பின்னர் ராமன் பெற்றார்.அது நினைத்த மாத்திரத்தில் ஒரே நாளில் 4000 மைல் பயணம் செய்து ராமர் அணியை நந்திக் கிராமத்தில் இறக்கியது.  

இவைகளை எல்லாம் படிக்கையில் அக்காலத்தில் விண்வெளிப் பயணம் சகஜம் என்றே தோன்றுகிறது.

XXXX

ஒரு துளை அல்லது உள்ளீடுள்ள குழாயில், உயிருள்ள தேனீக்களை அடைக்கவும்; அதை வானில் தூக்கி எறிந்தால் அது கீழே

விழாமல் பறந்து கொண்டே இருக்கும் !

இது போல மேலும் பல அதிசயங்களையும் தீ உண்டாக்கும் அதிசயங்களையும் நாகார்ஜுனா பகர்கிறார்

–சுபம் —

TAGS–வானில் பறக்க, ஐன்ஸ்டைன் , தொ லை தூரம் செல்ல

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—22 (Post No.13,139)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,139

Date uploaded in London – –   14 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்ற பகுதியில் 218  வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………

மூலிகை Part 22

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—21

கி

219.அந்திமாலைக்கு

கிருஷ்ண துளசி இலையைக் கசக்கி சாறு பிழிந்து நேத்திரத்தில் இரண்டு துளி விடவும். இப்படி காலையில் ஒரே வேளையாக மூன்று நாள் விடவும்; சாந்தியாகும்

XXXX

 வாந்தி விக்கலுக்கு

கிராம்பு, சீரகம், ஏலம்  வெதுப்பி மயிலிறகு சுட்ட சாம்பல் சமன் சேர்த்து பொடித்து தேனில் குழைத்து கொடுத்து வரத் தீரும் .

XXXX

காது எழுர்ச்சிக்கு

கிளு கிளுப்பை வேரை அரைத்து நல்லெண்ணெய் வீட்டுக் காய்ச்சி காதில் விட்டு பஞ்சடைக்கவும்; இரண்டு மூன்று வேளையில் தீரும்.

XXXX

உதிரக்  கிராணிக்கு

கிராம்பை பாலில் அரைத்துக் கலக்கி யுட்கொண்டு வந்தால் பித்த கோபம் அதிசாரம் உதிரக் கிராணி ஆசன கடுப்பு இவை தீரும்

XXXX

தலை வலிக்கு

கிச்சிலிக் கிழங்கைப் பொடித்து நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சி  தலை முழுகி வந்தால் தலை வலி சீதளம்  இவை பிரியும். திரேகம் வாசனை வீசும் .

XXXX

மேக சாந்தி

கிட்டிக் கிழங்கை வெவித்தாவது  பச்சையாகவே உலர்த்தி சூரணித்து அரைப்பங்கு  சக்கரை கூட்டியாவது விடாமல் 40 நாள் இருவேளையும் தின்று வந்தால்  உடம்பு இறுகும் ; மேகம் சாந்தியாகும் கபத்தை அறுக்கும் தீபனம் உண்டாக்கும் .

XXXX

கரப்பான் கிரந்திக்கு

கிரந்தி நாயகமெனும் மூலிகையை பாலில் அரைத்து  காலை ஒரு வேளையாக உண்டு வந்தாலும், எண்ணெய் பாகங்களுடன் மேற்படி சாற்றைச் சேர்த்து காய்ச்சி யுண்டாலும் கருங்கிரந்தி, செங்கிரந்தி, கரப்பான், உஷ்ணம் சீதம் இவைகள்  தீரும்

XXXX

சுர சாந்தி

கிளியூரல் பட்டையை ஒன்றிரண்டாயிடித்து எட்டுக்கொரு பங்காய் ஆக்கி வடித்து உண்டால் சுரம் சாந்தியாகும் .

XXXX

பொது

கிளுவை வேரையும் சமூலத்தையும்  அநேக வியாதிகளுக்கெல்லாம் வைத்தியர் உபயோகிப்பதுண்டு

XXXX

கீ

சோகைக்கு

கீழாநெல்லி சமூலத்தை பாலில் அரைத்து பாலில் கலக்கியுண்டுவந்தால்  சோகை காமாலை பாண்டு உடல்வெளுப்பு வாத பித்த கிறிச்சினம் இவை தீரும் . இரத்தம் உபரியாகும் ; கண் குளிரும் .

XXXX

சாம்பல் தின்கிற குழந்தைகட்கு

கீழாநெல்லி வேர் விராகநிடை 1 கடுக்காய் தோல் விராகநிடை 2  மிளகு விராகநிடை 3 புளித்த மோரில் அரைத்துக் கலக்கி  மூன்று நாள் வார்க்க சாம்பல் மண் இவை தின்னாது .

XXXX

புறவீச்சு தீர

கீழாநெல்லிச் சாறு கிலு கிலுப்பைச்  சாறு தேன் முலைப்பால் வகைக்கு பலம் அரை வெள்ளுள்ளி காந்தம் சுக்கு வகைக்கு விராகநிடை  இவைகளை அரைத்து யாவும் ஒன்றா ய்க்  கலந்து கொடுக்க நிவர்த்தியாகும் .

XXXX

இரத்தம் போல் நீர் இறங்குவதற்கு

கீழா நெல்லி சமூலம் ஒரு பிடி சீரகம் ஒரு விராகநிடை இவை அரைத்து எருமைத் தயிரில் கலக்கிக் கொடுக்கவும் .இப்படி மூன்று நாள் கொடுக்கத்  தீரும்.

XXXX

பித்த சோகை வீக்கத்திற்கு

கீழா நெல்லி மூன்று பங்கும் ஈருள்ளி  ஒரு பங்கும் சீர்த்திடித்து சாறு பிழிந்து கால் படி வீதம் மூன்று நாள் கொடுக்க நிவர்த்தியாகும்

XXXX

–subham—

Tags- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 22, மேக சாந்தி , தலை வலி, அந்திமாலை,

சுற்றுப்புறச் சூழலுக்கு மனிதன் செய்யும் கேடுகள்! (Post 13,138)

Thor Hyerdhal

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.138

Date uploaded in London – — 14 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சுற்றுப்புறச் சூழலுக்கு மனிதன் செய்யும் கேடுகள்!

ச. நாகராஜன்

இயற்கை மனிதனுக்குச் செய்யும் நன்மைகள் ஏராளம்; அதற்கு நன்றி சொல்லி அதைப் பாதுகாப்பது மனிதனின் கடமை.

ஆனால் நடப்பதோ?!

நார்வேஜியின் சாகஸவீரர் கண்ட காட்சி

நார்வேயைச் சேர்ந்த சாகஸவீரர் தோர் ஹையர்தால் (Thor Heyerdahl) என்பவர் ஒரு சமயம் பெருவிலிருந்து ஓஸியானாவிற்குக் கடலில் சென்று கொண்டிருந்தார்.

அவர் கண்ட காட்சி அவரைத் திடுக்கிட வைத்தது. கடலிலும், கடற்கரை பக்கத்திலும் சரி மனிதர்களில் செயல்பாடுகள் அவரை திகிலுறச் செய்தன. ஒவ்வொரு நாளும் அவர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களையும், தொழிலக கழிவுகளையும் கடலில் மிதக்க விட்டுக் கொண்டே இருந்தனர்.

கடல் நீரில் இருந்த அசுத்தமோ அசுத்தம்; அதில் ஒரு டூத் பிரஷைக் கூட அலசி சுத்தப் படுத்த முடியாது. அவ்வளவு அசுத்தம்; அசிங்கம்!

இப்படி கடல் நீரை அசுத்தப் படுத்துவதால் உலகெங்குமுள்ள நீர் வாழ் பிராணிகளில் நூறு கோடி என்ற அளவில் ஆண்டு தோறும் அழிந்து வருகிறது.

சற்று எண்ணிப் பார்ப்போம்; விழிப்புணர்வு பெறுவோம். அனைவருக்கும் இதைச் சொல்லி விழிப்புணர்வு பெறச் செய்வோம்.

மாஸேதுங்கின் மடமை

உலகின் ஆகப் பெரும் முட்டாள்களில் தலையாய இடத்தைப் பிடிக்க முனைபவர்களில் சர்வாதிகாரியான மாஸேதுங் ஒருவர்.

ஹிட்லரை விட கொடிய மாபாதகன் ஸ்டாலின் என்றால் அதை விட கொடிய மாபாதகன் மாஸேதுங் என்று சொல்லலாம்.

அவர் செய்த முட்டாள்தனமாநன காரியங்கள் ஏராளம், ஏராளம்.

எடுத்துக்காட்டிற்கு ஒன்றே ஒன்று:

1958-ம் ஆண்டு. நிலத்தையும் பயிர்களையும் காக்க ஒரு நல்ல ஐடியா உதித்தது மாஸேதுங் மூளையில்!

பீகிங்கில் உள்ள எல்லா பள்ளிகளுக்கும் காலவரையற்ற விடுமுறையை அளித்தார் அவர்.

எதற்காக?

பயிர்களைக் காக்க!

சிட்டுக்குருவிகள் நிலத்தைப் பாழ் செய்கிறதாம்.

அதற்காக பள்ளிச் சிறுவர்களுக்கு விடுமுறை அளித்த மாஸேதுங் அவர்களை வயல்களுக்குச் சென்று இடை விடாமல் கை தட்டச் சொன்னார்.

ஒரு புல்லட் இல்லை. ஒரு பொறி இல்லை.

வெறும் கைதட்டல் தான்.

இடைவிடாமல் ஷிப்ட் முறையில் சிறுவர்கள் கை தட்டவே அந்த இடைவிடாத ஒலியால்  அனைத்துச் சிட்டுக் குருவிகளும் மயங்கி விழுந்தன; இறந்தன!

இறந்த சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை 30 லட்சம்!

எவ்வளவு பெரிய சாதனை!

தனது சாதனையை மக்களிடம் சொல்லி பெருமை அடித்துக் கொண்டார் மாஸேதுங்!

ஆனால் அடுத்த வருடமே மக்கள் வருத்தப்பட ஆரம்பித்தனர். பூச்சிகள் பெருகின. சிட்டுக்குருவிகள் உணவாகத் தின்றதை விட அதிகமாக அவை தானியத்தை நாசம் செய்தன.

விளைவு?

1958-ல் கடும் பஞ்சம் ஏற்பட்டது. 1962-ம் ஆண்டு வரை அந்தப் பஞ்சம் நீடித்தது.

360 லட்சம் பேர்கள் மாண்டனர்.

இப்படிப்பட்ட முட்டாளை உலகம் இனி தான் காண வேண்டும்!!

நேருவின் தவளை சாகஸம்

பாரத பிரதம மந்திரி பண்டிட் ஜவஹர்லால் நேரு அன்னிய செலாவணியைப் பெருமளவு பெருக்க எண்ணி, தவளைகளை பிரான்ஸுக்கும் இதர ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ஆணை பிறப்பித்தார்.

ஆனால் மஹராஷ்டிரத்தைச் சேர்ந்த விவசாயிகளோ உடனே இதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

ஏனெனில், “பயிர்களை அழிக்கும் பூச்சிகள் பெருகி விட்டன. தவளைகள் இருந்தால் இப்படிப்பட்ட பூச்சிகள் இருக்காது” என்று அவர்கள் எடுத்துக் காட்டினர்.

தவளைகளை ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டது!

இப்படி உதாரணங்கள் ஏராளம் உள்ளது.

இயற்கையின் வழிகள் அபாரமானவை!

அதில் “மாஸேதுங் மூளை” புகுந்து தன் திறமையைக் காட்டக் கூடாது!

அதைக் காப்பதில் தான் மனிதன் கவனம் செலுத்த வேண்டும்.

***

How to Fly in the Sky : Nagarjuna’s Instructions to  beat Albert Einstein! (Post No.13,137)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,137

Date uploaded in London – –   13 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Rapid Journey to other Places

On keeping tied in the waist while Bhringaraja (Eclipta alba) Karisilankanni (கரிசிலாங்கண்ணி) , Kokila ( a big round green bee)white Kakajangha (Peristroph Bicaly onlata), white Sarapunkha (Trphrosia purpurea),  and seeds of Elabaluka, a man can travel quickly just like the air!

xxxx

Take Madanaphala (Randic dematorum) ), white Sarapunkha (Trphrosia purpurea), and bark of Bhurjapatra (Batul utilis)and get these powdered with the milk of one coloured cow. On applying this paste to the feet, a man can travel hundreds of miles in a day without feeling exhausted.

xxxx

Take the bones of Krkalasa and Naktamala and mix them in the blood of Indragopa (தம்பலப்பூச்சி )  and peacock and then prepare apill. Put the pill in a capsule made up of gold.On putting such a capsule in the mouth, a man can travel easily  three hundred and fifty yojana in a day.

krkalasa, a lizard, or a chameleon. —

naktamala — Naktamala [नक्तमाल] in the Sanskrit language is the name of a plant identified with Pongamia pinnata (L.) Pierre from the Fabaceae (pea) family having the following synonyms: Millettia pinnataPongamia glabraDerris indicaCytisus pinnatus. For the possible medicinal usage of naktamala, you can check this page for potential sources and references, although be aware that any some or none of the side-effects may not be mentioned here, wether they be harmful or beneficial to health.

Xxxx

Hindus beat Einstein!

Collect Vanalochana and the root of white Bhringaraja (Eclipta alba) Karisilankanni (கரிசிலாங்கண்ணி) in Pushya star day and get these powdered in goat’s butter. On application of this to feet a man can travel as much distance as he desires.

(It is confirmed by Valmiki Ramayana. Anjaneya went to Himalayas to bring the Sanjeevi herb. Rama used Thought Powered Airplane/Spaceship to reach Ayodhya from Sri Lanka in 24 hours)

xxxx

If you throw a hollow rod full of living bees, in the sky, it does not fall. It creates a surprise among spectators.

xxxx

Prepare a rod out of a tree out of a tree which was burnt by the lightning and apply lepa of Sunthi (Zingiber officinalis/ Inji in Tamil), pippali, and marich and fresh blood from the womb of a bitch that gave birth to a bitch and then throw it in the sky. The rod  stands in the sky and does not fall.

Lepa (लेप).—m.

(-pa) 1. Plastering, smearing

xxxx

Prepare a ring out of the womb of a bitch and put it on your fingers. If you throw a lotus flower in the sky after touching the same with the ring, the flower stands in the sky without any support and does not fall.

Xxxx

In a moon lit night, put fire inside a room, under a canopy and sacrifice the fruits of Sravanika then you will see various figures of Rudra, carrying spears in their hands.

—subham—

Tags- high speed travel, thought powered, Einstein, Flying in Sky, herbs

நீர் மேல் நடக்கலாம்; நெருப்பு மீதும் நடக்கலாம்- நாகார்ஜுனா மாஜிக் (Post.13,136)

Oroxylum Indicum

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,136

Date uploaded in London – –   13 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Parmelia Perforata

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நாகார்ஜுனா , ஒரு புத்த மத தத்துவ வித்தகர், ரசவாத நிபுணர், மாயாஜால மன்னன் , ரசாயனவியல் அறிஞர், மருத்துவம் முதல் மாயாஜாலம் வரை பல புத்தகங்களை எழுதிய ஆசிரியர் ஆவார்.

அவர் எழுதிய யோக ரத்னமாலாவில் 140 சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் இருக்கின்றன . அதிலிருந்து மேலும் பல அற்புதங்களைக் காண்போம் .

துந்துபா (இரட்டை வாய் பாம்பு) பாம்பின் ரத்தத்தை ஒரு சிறிய கொள்கலத்தில் (Capsule) விடவும் ;அதை மூடிவிட்டு, வாய்க்குள் வைத்துக்கொள்ளவும் ; பின்னர் தண்ணீரில் இறங்கினால் வீட்டிற்குள் இருப்பது போல எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம்.

xxxx

ஸ்யோனக்  விதைகளால் ஆன இரண்டு செருப்புகளை செய்யுங்கள் ; அவைகளை அணிந்து கொண்டால் வீட்டில் தரையில் நடப்பது போல, தண்ணீரிலும் நடக்கலாம்.

ஸ்யோனக் =ஓரோக்ஸைலம் இன்டிகம் OROXYLUM INDICUM செடி).

XXXX

வெண்ணெய், சுவர்ணகைரிகா (ரெட் ஆக்ர்  என்னும் இரும்பு தாதுள்ள மண் ),  துர்கந்தா, மீன் எண்ணெய் ஆகியவற்றால் எண்ணெய் தயாரிக்கவும். அதை உடம்பு முழுதும் பூசிக்கொண்டு தண்ணீரில் இறங்கினால் முதலையைப் போல எளிதாகத் தண்ணீரில் வலம் வரலாம். 

சுவர்ணகைரிகா /(ரெட் ஆக்ர்)  RED OCHRE=is a natural clay earth pigment, a mixture of ferric oxide and varying amounts of clay and sand.  In Ancient Egypt, red ochre was used in celebrations as a symbol of life and victory and was used as an early form of cosmetics by women.

துர்கந்தா /Durgandha in India is the name of a plant defined with Allium cepa in various botanical sources. This page contains potential references in Ayurveda, modern medicine, and other folk traditions or local practices It has the synonym Allium ascalonicum auct. (among others).

XXXX

தீ மிதி விழா / பூக்குழி இறங்கல் / நெருப்பு மீது நடத்தல்

Fire Walking in Greece

அட்டைப் பூச்சி, சசிஜா (பிரமாலியா பெர்போரேட்டா  தாவரம்), தவளை, பாடலம் (பாதிரி) ஆகியவற்றைக் கொண்டு எண்ணெய் தயாரிக்கவும். அதைப் பாதங்களில் பூசிக்கொண்டு நடந்தால் நெருப்பு உங்களைச் சுடாது ; எளிதாக அனல் மீது நடக்கலாம்

XXXX

முண்டி(Sphaeranthus indicus Linn) , அட்டைப் பூச்சி, ஷைபல் PARMELIA PERFORATA/ பர்மேலியா பெர்போரேட்டா) ஆகியவற்றுடன் தவளைக் கொழுப்பைக் கலந்து பசை அல்லது களிம்பு செய்யுங்கள்; கைகளிலும் கால்களிலும் பூசிக்கொண்டு தீ மீது நடந்தால் அனல் குளிர்ச்சியாக இருக்கும்; உடலுக்கு ஒரு தீங்கும் வராது

XXXX

தண்ணீரில் விழுந்த யோகி

பக்தர்கள் தீ மீது நடப்பதும், தண்ணீர் மீது நடப்பதும் ரசாயனப் பூச்சுகளால் அல்ல ; அவை நம்பிக்கையின் அடிப்படையில் நடப்பது ; மனதை ஒருமுகப்படுத்தி சில அற்புதங்களை செய்யலாம் . தவம் செய்து அஷ்டமா சித்திகளையும் பெறலாம். இதன் மூலம் எட்டு வகை அற்புதங்களை நிகழ்த்தலாம் ; ஹட யோகம் போன்ற யோகப் பயிற்சிகளாலும் இப்படிச் செய்யலாம்.

ஆதி சங்கரரின் நான்கு முக்கிய சீடர்களில் ஒருவர் பத்ம பாதர் (தாமரைக் காலன்); குரு அழைத்தவுடன், நதி குறுக்கே இருப்பதையும் மறந்து, தண்ணீர் மீது ஓடிவந்தார். அவர் கால் வைத்த இடம் எல்லாம் தாமரை மலர்ந்து அவரது பாதங்களைத் தாங்கின ; இதனால் அவருக்கு பத்ம பாதர் / தாமரைக் காலன் என்று பெயர்.

XXXX

சத்ய சாய் பாபாவுக்கு ஹட யோகி சவால்

சுமார் 30, 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஹட யோகி சத்ய சாய் பாபாவுக்கு சவால் விட்டார்; என்னைப் போல  தண்ணீரில் நடக்க முடியுமா என்று சொல்லிவிட்டு பெரும் கூட்டத்தைக் கூட்டி, பத்திரிகையாளர்களையும் அழைத்துவிட்டு, பெரிய நீர்த்  தொட்டிக்குள் காலை வைத்தார். தொபுக்  என்று தண்ணீரில் விழுந்தார். எல்லோரும் நகைத்தனர் ; அஹங்காரம் , மம காரம் (யான் எனது என்னும் செருக்கு- திருக்குறள் ) இருந்தால் யோகம் பலிக்காது .

2016ம் ஆண்டிலும், 2018ம் ஆண்டிலும் எஸ் ஆர் ராவ் என்ற சர்ச்சைக்குரிய யோகி, தனது ‘ஷோ’ வுக்கு டிக்கெட் வைத்து 600 பேர் முன்னிலையில் முயன்றார் ;பெரிய நீர்த் தொட்டிக்குள் காலை வைத்தார். தொபுக்  என்று தண்ணீரில் விழுந்தார். எல்லோரும் நகைத்தனர்; டிக்கெட் பணத்தைத் திருப்பிக்கொடு என்று கலாட்டா செய்தனர் ; மீண்டும் நடக்கும்போது வரலாம் என்று சொல்லி சமாளித்தார்; ஆயினும் அவரால் எந்தக் காலத்திலும் அப்படி தண்ணீர் மீது நடக்க முடியவில்லை .

XXXX

அற்புதங்களின் பட்டியலைத் தரும் தாயுமானவர் மனதை அடக்குவது, அதை விடக் கடினம் என்கிறார்.

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்;

கரடி வெம்புலி வாயையுங் கட்டலாம்;

ஒரு சிங்கம் முதுகின் மேற் கொள்ளலாம்;

கட்செவி எடுத்தாட்டலாம்

வெந்தழலின்  இரதம் வைத்தைந்து லோகத்தையும்

வேதித்து விற்றுன்ண்ணலாம்;

வேறொருவர் கானாமல் உலத்துலாவரலாம்

விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;

சந்ததமும் இளமையோடிருக்கலாம்

மற்றொரு சரீரத்திலும் புகுதலாம்;

சலமேல் நடக்கலாம்கனல் மேலிருக்கலாம்

தன்னிகரில் சித்தி பெறலாம்

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது!

XXXXX

 ஹேம சந்திரர் எழுதிய த்ரிசதிசலாகா புருஷ சரிதத்தில் வரும் விஷயம் பின்வருமாறு: 

“ஊசியின் காதில் நுழையும் அளவுக்கு உருவத்தைக் குறுக்கலாம்.

மேரு மலையை முழங்கால் அளவாகக் காட்டும் வரை உயரலாம்

காற்றை விட லேஸாகலாம்.

இந்திரனின் வஜ்ராயுதத்தை விட வலிமை பெறலாம். 

பூமியில் இருந்தவாறே கிரஹங்களைத் தொடலாம் 

நீரின் மீது நடக்காலாம். பூமிக்குள் புகுந்து எழலாம்

பொந்துக்குள் நுழைவது போல மலைகளுக்குள் எளிதில் நுழையலாம்.

உருவமே தெரியாமல் மறையலாம்; வானம் முழுதும் வியாபித்தும் நிற்கலாம்.” 

அஷ்டமா சித்திகள் — அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசிதை என்னும் எட்டுவகைச் சித்திகள்.

—SUBHAM—

Tags- சத்ய சாய் பாபா, ஹட யோகி சவால், தீ மிதி விழா, பூக்குழி இறங்கல், நெருப்பு மீது நடத்தல்,  நீர் மேல் நடக்கலாம்.