
Date uploaded in London – – 3 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
நான் 1997, 1998 ஆம் ஆண்டுகளில் திருமந்திரத்திலுள்ள 3000 பாடல்களையும் படித்து நோட்ஸ் / குறிப்புகள் எடுத்தேன். புஸ்தகத்தின் மார்ஜினிலும் நிறைய குறிப்புகளை எழுதினேன் . அவைகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள நேரம் கனிந்துவிட்டது ; இதற்குமுன் திருவாசகத்தேனும் திருமந்திர ஜுசும் என்ற தலைப்பில் ஒரு புஸ்தகமும் பிரசுரித்ததுவிட்டேன் ; புதிய விஷயங்களை இப்போது சப்ஜெக்ட்வாரியாகக் காண்போம். முதலில் நான் பி.எஸ்சி (B Sc Botany, Madurai University) பட்டம் பெற்ற தாவரவியலை எடுத்துக் கொள்கிறேன்.
முதலில் 3 அதிசய விஷயங்களை , சுவையான செய்திகளைத் தருகிறேன்
1. விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் குறிப்பிடப்படும் மூன்று தெய் வீக மரங்களை ஒரே பாட்டில் திருமூலரும் தனது திருமந்திரத்தில் கூறுகிறார்
2.இன்னும் ஒரு பாட்டில் சிவனுக்குரிய 14 புஷ்பங்களைக் கூறுகிறார். உடனே கபிலர் என்ற பிராமணப் புலவர் எழுதிய சங்க கால குறிஞ்சிப் பாட்டு நமக்கு நினைவுக்கு வந்து விடுகிறது
3. ரிக்வேதம் போலவே திருமந்திரம் பல செய்திகளை (Symbolism) அடையாளக் குறியீடுகளால் , சங்கேத மொழியால் (coded language) சொல்கிறது. உரைகள்/ பாஷ்யங்கள் இல்லாவிடில் நாம் அவைகளை மாஜிக் என்ற வகையில் சேர்த்துவிடுவோம். கதத்தரிக்காய் விதை போட்டேன்; பாகற்காய் முளைத்தது என்று அவர் ஏன் சொல்கிறார் என்று காண்போம்.
xxxx
விஷ்ணு ஸஹஸ்ர நாமமும் திருமந்திரமும்
நைஸ சாக , ந்யக்ரோத என்ற இரண்டு சம்ஸ்க்ருத சொற்கள் கீழ் நோக்கி வளரும் மரம் என்பதாம்.
ஸூலப: ஸூவ்ரத: ஸித்த: ஸத்ருஜிச்சத்ருதாபன:
ந்யக்ரோதோ தும்பரோ அஸ்வத்தஸ் சாணூராந்த்ர நிஷூதன:88-விஷ்ணு சஹஸ்ரநாமம் –shloka-88
Sulabhah Su-Vratah Siddhah Shatru-jit Shatru-tapanah
Nyag-rodhodumbaro’Svatthah ChanurAndhra-Nishudanah ||V.S.88||
Nyagrodha – Ficus indica (Banyan Tree)
Udumbarah-Ficus glomerata (Aththi in Tamil)
Asvatthah- Ficus religiosa (Arasu in Tamil)
இதில் ந்யக்ரோத அவுதும்பர , அஸ்வத்த என்பன ஆல் , அத்தி, அரச மரங்களைக் குறிக்கும் சம்ஸ்க்ருத பதங்கள் ஆகும்
இதில் குறிப்பிடப்படும் ஆல் , அரசு, அத்தி; இவை மூன்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள் ; அதில் ஒரே உட்பிரிவைச் சேர்ந்தவை
குடும்பம் மோரேசி ; உட்பிரிவு – பைகஸ் ; 200 ஆண்டுகளுக்கு முன்னர்தான் தாவரவியலாளர் இதை ஒரே குடும்பமாக, ஒரே உட்பிரிவாக அறிவித்தனர். ஆனால் விஷ்ணு சஹஸ்ரநாமத்திலேயே (மஹாபாரத்தின் ஒரு பகுதி) இந்த மூன்றையும் தெய்வீக மரங்கள் என்று வியாசர் எழுதிவிட்டார் . அதை திருமூலர் ஒரே பாட்டில் சொல்லி பூடகமாக வேறு கருத்தை விளக்குகிறார் . திருமூலருக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் அத்துபடி!
ரிக்வேதத்தில் மஹா வ்ருக்ஷம் என்ற பெயரில் ஆலமரம் குறிப்பிடப்படுகிறது; உலகிலேயே பெரிய மரம் இதுதான் (பரப்பளவில்).
பகவத் கீதையில் ‘மரங்களில் நான் அஸ்வத்தம் என்னும் அரச மரம்’ என்கிறான் கண்ணன். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஆலமரம் (ந்யக்ரோத), அரச மரம் (அஸ்வத்தம்), அத்திமரம் ஆகிய மூன்றும் விஷ்ணுவின் பெயர்களாக வருகின்றன. அதாவது மரமே கடவுள். மௌனத்தின் மூலம் மாபெரும் தத்துவத்தை உபதேசம் செய்யும் தட்சிணாமுர்த்தியொவெனில் ஆலமரத்தின் கீழே அமர்ந்திருக்கிறார். (இது குறித்து ‘இந்திய அதிசயம்:ஆலமரம்’ Indian Wonder: The Banyan Tree என்ற நீண்ட கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்டேன்).
தாவரவியல் என்பதும் மரங்களை இனம் வாரியாக, குடும்பம் வாரியாகப் பிரிப்பதும் 1735ஆம் ஆண்டு முதல்தான் லின்னேயஸ் என்பவரால் உண்டாக்கப்பட்டது. ஆனால் விஷ்ணு சஹஸ்ரநாமம் (மஹாபரதத்தின் ஒருபகுதி) 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இதைப் பின்பற்றிவிட்டது. விஷ்ணுவின் பெயராக வரும் ஆல், அரசு, அத்தி மூன்றும் மோரேசி என்னும் குடும்பத்தையும் பைகஸ் என்ற ஜீனஸ்—ஐயும் சேர்ந்தவை!! (Family Moraceae, Genus: Ficus)
புத்த கயாவில் புத்தர் நின்று போதித்த அரச மரம் உள்ளது. இதை போதி மரம் என்று அழைப்பர். கயாவில் அக்ஷய வடம் எனப்படும் அழியாத ஆலமரம் ஒன்றும் இருக்கிறது. இவ்விரு மரங்களையும் பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கிச் செல்வது வழக்கம்.

1667 அரசுட னாலத்தி யாகும்அக் காரம்
விரவுகனலில் வியனுரு மாறி
நிரவயன் நின்மலன் தாள்பெற்ற நீதர்
உருவம் பிரமன் உயர்குலம் ஆமே. 3 திருநீறு ,திருமந்திரம்
ஆறாம் தந்திரத்தில் திருநீறு என்ற தலைப்பின் கீழ் வரும் பாடல் இது.
திருமூலர் சொல்லும் கருத்து
வேத கால யாக யக்ஞங்களில் ஆலம் , அரசம், அத்தி ஸமித்துக்களை (குச்சிகளை) போட்டு எரிப்பார்கள்; அதன் சாம்பலை நெற்றியில் இட்டுக்கொள்ளுவார்கள் இதுவே விபூதி எனப்படும் .இவ்வாறு திரு வெண்ணீறு அணிபவரே உண்மையான சிவனடியார்.
அவ்வையாரும்
மேதினியில் இட்டார் உயர்ந்தோர், இடாதார் இழிகுலத்தோர் , பட்டாங்கில் உள்ளபடி என்று சொல்கிறார்
பட்டாங்கு என்றால் சாஸ்திரம் மெய்ப்பொருள், உண்மை என்று தமிழ் அகராதி சொல்லும். விபூதி இட்டவர்கள் பெரியவர்கள்; விபூதி இடாதவர்கள் கீழ்ஜாதி மக்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதையே திருமூலரும் சொல்கிறார்
பிச்சை இடுவோர் பெரியார் (தானம் செய்பவர்கள்) ; தானம் செய்யாத கருமிகள் கீழார் என்ற கருத்தும் பொருந்தும். அதுவும் பகவத் கீதையிலும் அதற்கு முன்னர் வேதத்திலும் உள்ள கருத்தே .
ஆயினும் மூன்று மரக்குச்சிகளை எரிப்பதை திருநீறு என்ற அத்தியாயத்தில் சொல்லுவதால் விபூதியையே திருமூலர் சொல்கிறார் . திருமூலர் வாழ்ந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே. லின்னேயஸ் மூன்று தாவரங்களையும் ஒரே குடும்பமாக வகுத்தது 200 ஆண்டுகளுக்கு முன்னரே. ஆனால் வேத வியாசரோ இதை விஷ்ணுவின் அம்சமாக பாடியிருப்பது 5000 ஆண்டுகளுக்கு முன்னர் என்பதிலிருந்து இந்துக்கள் உலக மஹா தாவர இயல் (Great Botanists) அறிஞர்கள் என்பது விளங்கும் .
xxxx
சிவபெருமானுக்கு உகந்த 14 புஷ்பங்கள்
உலகில் பூவையும் பழத்தையும் காயையும் இலையயையும் புல்லையும் தினமும் க டவுளுக்கு அர்ப்பணிப்பவர்கள் இந்துக்கள் மட்டுமே; இதை இந்தியாவிலுள்ள இரண்டு லட்சம் கோவில்களில் தினமும் காணலாம். இதை பகவத் கீதையில் கண்ணனும் பத்ரம் புஷ்பம் பலம் தோயம் என்ற ஸ்லோஅகத்தில் சொல்லிவிட்ட்டார். அதை புறநானுற்று பிராமணப் புலவர் கபிலரும் அப்படியே மொழிபெயர்த்துவிட்டார் (காண்க புறம்.106)
திருமூலர் சொல்லும் 14 பூக்கள்
தாமரை, கருங்குவளை, செங்கழுநீர், நெய்தல், பலா, மாதவி, மந்தாரம், தும்பை, மகிழ், சுரபுன்னை, மல்லிகை, செண்பகம், பாதிரி, செவ்வந்தி ஆகிய 14 பூக்களைக் கொண்டு சிவனை வழிபட வேண்டும்.
மாதவி= குருக்கத்தி; வகுளம் = மகிழ்;
1003 அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளம் சுரபுனனை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே. 1
தேவாரமும், திருவாசகமும் பல இடங்களில் இந்தப் பூக்களைக் குறிப்பிடுகின்றன. குறிஞ்சிப் பாட்டில் 99 தமிநாட்டு மலர்களைக் காண்கிறோம். அதற்கு முன்பாக காளிதாசனும், வால் மீகியும் பூக்களை பட்டியலிட்டாலும் கபிலரைப் போலவோ திருமூலரைப் போலவோ ஒருசேர சொல்லவில்லை. திருமாலைஃப் பொரு த்தமட்டில் துளசி மட்டுமே போற்றப்படுகிறது . சைவர்கள் மலர்ப் பிரியர்கள் !
xxxx
கத்தரிக்காய் பாகற்காய் ஆக மாறிய மாஜிக்
திருமந்திரத்தின் ஒன்பதாவது தந்திரத்தில்,’சூனிய சம்பாஷணை என்ற அத்தியாயத்தில் எளிதில் பொருள் விளங்காத குறியீட்டு மொழியில் பாடல்கள் கிடைக்கின்றன . பரம்பரை பரம்பரையாக வந்த உரைகளை சிலர் எழுதி வைத்துள்ளதால் நாம் பொருள்கொள்ள முடிகிறது. மதுரை நகர பாரத்துவாஜ கோத்திர பார்ப்பனன் நச்சினார்க்கினியன் உரை இல்லாவிடில் சங்க இலக்கியப் பாடல்களை நாம் புரிந்துகொள்ள இயலாது; அதே போல திருமந்திரத்துக்கும் பழைய உரைகள் உள்ளன.
”வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது
தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.” 2868.
To be continued……………………………………………….
tags- விஷ்ணு ஸஹஸ்ர நாமம், திருமந்திரம் , திருமூலர் , 14 பூக்கள், அதிசய தாவரங்கள், திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரைகள்