சூ மந்திரக் காளி வசியம்: திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை- 6 (Post No.13,223)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,223

Date uploaded in London – –   9 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

பதினெட்டு  சித்தர்கள் பட்டியலில் திருமூலரின் பெயரையும் காணலாம். ஆனால் ஏனைய 17 சித்தர்களுக்கும் திருமூலருக்கும் பெருத்தவேறுபாடு இருப்பதை சித்தர் பாடல்களைப் படித்தோர் அறிவர். கிரியைகளை, சடங்குகளை உடைத்தெறிவது சித்தர்களின் பொதுவான போக்கு .

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே

சுற்றி வந்து மொணமொணன்று சொல்லுமந்திரம்ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?”

என்ற சிவவாக்கியர் பாடலைக் காட்டி பல அரைவேக்காடுகள் கோவில் வேண்டாம், குளம் வேண்டாம் என்பர்; திருமூலரோ ஏராளமான சடங்குகளை ஆதரிக்கிறார். அதில் ஒன்று மந்திர தந்திர சக்கரங்கள். அவற்றின் மூலம் கிடைக்கும் பலன்களையும் சொல்கிறார். ஏனைய சித்தர்கள் ஒரு சில அம்சங்களை மட்டும் தொட்டுக்காட்டினால் இவரோ ஒரு ‘என்சைக்ளோப்பீடியா’வையே நம் கையில் கொடுத்து இருக்கிறார்.

ஒவ்வொரு பாட்டையும் எடுத்துக்கொண்டு ‘வெப்சைட்’டுக்குப் போனால் பழைய உரைகாரர்களுக்கும் புதிய உரைகாரர்களுக்கும் வித்தியாசம் – பெருத்த வேறுபாடு — இருப்பதைக் காணலாம்.

நான் சுலபமாக எட்டு கோடு போடு; குறுக்கே எட்டு கோடு போடு; அதை எழுது இதை எழுது ; அப்போது என்ன நடக்கிறது பார் என்று எழுதிக்கொண்டே போகலாம்.; இப்படித்தான் லண்டன் சாமிநாதன் உள்பட அனைவரும் எழுதுகின்றனர். அவை ஏட்டுச் சுரைக்காய்கள். யார் ஒருவர் அதை பின்பற்றி சித்தி அடைந்திருக்கிறார்களோ அவர்கள் சொல்லுவதைத்தான்  நம்பவேண்டும் . தற்காலத்தில் , திருமந்திர உரைகாரர்கள் யாரும்,  அப்படி பக்குவ நிலை எய்தியதாக நான் நம்பவில்லை; ஆயினும் திருமந்திரத்தில் பல ரகசியங்கள் இருக்கின்றன; படியுங்கள், பாதுகாருங்கள் என்று சொல்லுவதில் தவறில்லை .

ஆதி சங்கரர் போல சகல கலா வல்லவர் ஒருவர் அவதரிக்கையில், அற்புதங்கள் நிகழும்போது, இந்தப்பாடல்களின் பொருள் நமக்கு விளங்கும் ; அவர் நாடெங்கும் சென்றதும் உக்கிர தேவதைகளின் சக்தியைக் குறைக்க தாடங்கம் பிரதிஷ்டை செய்ததும் காசியில் மக்களை ஈர்க்க ஜன ஆகர்ஷண சக்கரத்தையும் திருப்பதியில் பணத்தை ஈர்க்க  தன ஆகர்ஷண சக்கரத்தையும் பிரதிஷ்டை செய்ததையும் நாம் அறிவோம் ; திருமூலரும் அதிசய சித்திகளை அடைய சில வழிமுறைகளை சொல்கிறார். இவைகளை யாராவது செயல் முறையில் செய்து காட்டும்வரை பாடல்களுக்கு ஓரளவு தான்மதிப்பு ; அது பாடல்களின் குறை இல்லை ; அதை பயிலுவோரின் குறைபாடே.

இதோ ஒருசில எடுத்துக்காட்டுகள்

தம்பனம்

எந்த ஒரு பொருளையும் , ஆளையும் ஸ்தம்பிக்கச் செய்தல்; அதாவது இயங்க முடியாமல்  செய்யும் வித்தை
நின்ற அரசம் பலகைமேல் நேராக
ஒன்றிட மவ்விட்டு ஓலையிற் சாதகம்
துன்று மெழுகையுள் புசிச் சுடரிடைத்
தன்ற வெதுப்பிடத் தம்பனங் காணுமே. 997.

997: Sthambana Chakra

On fresh plank of a peepul tree wood

Figure out Five Letter Mantra with “Ma” to begin–Ma, Si, Va, Ya, Na

In similar fashion inscribe it on leaf of palm

Smear it with wax

And warm it gently over fire,

Center thy meditation on it,

Strong the concentration thou attain

Thine enemies rendered actionless, sure (Sthambana*).

பொருள் : நிலையான அரசம் பலகைமேல் நேராகப் பொருத்த மகரத்தை முதலாக மாற்றி எழுதிப் பனை ஓலையில் அவ்வாறே அடைத்து சாதகன் பொருந்தும் தேன் மெழுகை ஓலையுள் பூசிச் சுடரில் சிறிது வெதுப்பத் தம்பன கன்மமாகும். (தம்பனம் – கட்டுதல் அரசமரம் மெய்யுணர்வு விளங்குவதற்கு நிலைக்களமாகும்.)

xxxxx

மோகனம்

mōkaṉam  .Bewildering; confusing; மயக்கமுண்டாக்குகை. Magic art of fascinating aperson, one of aṣṭa-karumam, q.v., also one ofaṟupattu-nālu-kalai, q.v.; அஷ்டகருமத்துள் ஒன்றும் அறுபத்துநாலு  கலையுள் ஒன்றுமான பிறரை  மயங்கச்செய்யும் வித்தை.; ஒருவரை வசப்படுத்தும் வித்தை
கரண இரளிப் பலகை யமன்திசை
மரணம் இட்டு எட்டின் மகார எழுத்திட்டு
வரணமில் ஐங்காயம் பூசி அடுப்பிடை
முரணிற் புதைத்திட மோகன மாகுமே. 998.

998: Mohana Chakra

On a plank of Konrai tree wood

At the lower end

Inscribe “Na” and “Si”

And on palm leaf write letter “Ma”

Smear it with ingredients five,

(Ginger, Pepper, mustard, garlic and asofetida)

Bury it head downward in the hearth’s fire

You shall attain powers of Mohana* (Fascination).

பொருள் : கொன்றை மரப் பலகையைக் கருவியாகக் கொண்டு யமன் திசையாகிய தெற்குத் திசையில் அப் பலகையை அமைத்துத் தீமையாகிய பகையை ஒழித்தற்கு மாரக மந்திரத்தை எழுதி எட்டில் மகாரம் மட்டும் இட்டு மறைப்பற்ற ஐங்காயத்தைப் பூசி அடுப்பில் தலை கீழாகப் புதைத்தால் மோகன சத்தியுண்டாம். (நசி என்றது மரண மந்திரம். ஐங்காயம் – சுக்கு, மிளகு, கடுகு, உள்ளி, காயம் ஆகிய ஐந்து. மோகனம் – மயங்க வைத்தல்)

xxxxx

உச்சாடனம்

இருப்பிடத்தைவிட்டு விரட்டும்  தொழில்.2. Expelling an evil spirit from a person orplace, exorcism, one of aṟupattu-nālu-kalai;  பேயோட்டுகை. 3. Incitement by magical incantation of an evil spirit to cause injury ; பேய்  முதலியவற்றை ஏவுகை
ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில்
பாங்கு படவே பலாசப் பலகையில்
காங்கரு மேட்டில் கடுப்பூசி விந்துவிட்டு
ஓங்காமல் வைத்திடும் உச்சாட னத்துக்கே. 999.

999: Uchchadana Chakra

On a plank of portia tree wood

At the north-west corner

Where Aiyanar his temple has,

And on a dark leaden-plate smear poison,

Inscribe mark of Bindu. (dot)

And surround it by “Om”

Then concentrate on the Mantra,

Uchchadana* (the Science of Exorcism) will be yours.

பொருள் : அவ்விடம் வடமேற்குப் புலமாகிய வாயுதிக்கில் ஐயனார் கோயிலில் தொழும் படியாகப் புரசப் பலகையில் காரீயத் தகட்டில் நஞ்சு பூசி விந்துவாகிய வட்டம் அமைத்து அதன்மேல் ஓங்காரம் சூழ உச்சாடனத்திற்கு இடவும். (உச்சாடனம் – ஏவுதல்; பேயோட்டுதல்.)

xxxxx

ஒருவனை மந்திரத்தாலிறக்கச்செய்யும் வித்தை;  மரணம்
மாரணம்
உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையில்
பச்சோலை யில் பஞ்ச காயத்தைப் பாரித்து
முச்சது ரத்தின் முதுகாட்டில் வைத்திட
அச்சமற மேலோர் மாரணம் வேண்டிலே. 1000

ஏய்ந்த அரிதாரம் ஏட்டின்மே லேபூசி
ஏய்ந்த அகாரம் உகாரம் எழுத்திட்டு
வாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக்கு
ஏய்ந்தவைத்து எண்பதி னாயிரம் வேண்டிலே. 1001.

1000: Marana Chakra

Smear a green palm leaf with ingredients five stated

In a triangle Chakra in the cremation ground

Bury it at noon in southeast corner,

Where God Agni stands,

That the Mantric device for Marana*,

(Death) spell for enemies to destroy.

***********

1001 : Vasiya* Chakra

Smear palm leaf with yellow arsenic

Inscribe on it letters “A” and “U”

Place it on a bilva plank,

For a receptacle to serve,

And chant the Mantra eighty thousand times.

பொருள் : நண்பகற் போதில் ஒளி உடைத்தாகிய தென் கிழக்கு மூலையில் பச்சையான பனைஓலையில் ஐங்காயத்தைத் தடவி முச்சந்தியிலோ சுடுகாட்டிலோ புதைத்து வைத்திட பகையை அழிக்கும் மாரணமாக. அஃது அமையும் (மாரணம் – ஏவலால் செய்யும் கொலை, வசியம்)

973ல் ஓதியபடி மகர முதலாக வரைந்த ஐந்தெ ழுத்து ஏட்டின் மேல் அரிதாரமாகிய மருந்து பூசி , அதன்மேல் அகார உகாரங்களை எழுதி, வில்வப் பலகையின் மேலும்  மகர முறையாக வரைந்து முன்னெழுத்திய ஏட்டையும் அதன் மேல் வைத்து வசியமென்னும் கவர்ச்சி அமைத்தற்பொருட்டு, அம்மந்திரத்தினை எண்பதாயிரம் திருவுரு ஏற்றல் வேண்டும் ஜெபம் செய்தல் = திருவுரு ஏற்றல்

xxxxx

ஆகர்ஷணம்- தன முன் நில்லாதவரை தனக்கு முன்னே கொண்டுவரச் செய்யும் வித்தை  magic art of summoning an absent person into one’s presence, one of aṣṭa-karumam,

ஆகர்ஷணம்
எண்ணாக் கருடனை ஏட்டில் உகாரமிட்டு
எண்ணாப் பொனefனாளிf எழுவெள்ளி பூசிடா
வெண்ணாவல் பலகையில் இட்டுமேற் கேநோக்கி
எண்ணா எழுத்தோடுஎண்ணாயிரம் வேண்டிலே. 1002.

1002: Akarshana Chakra

Smear palm leaf with silver powder on a Thursday

Inscribe letter “U”,

Place it on the plank of white Jamun tree

Face Westward,

And Chant Pranava mantra (“Aum”) eight thousand times;

This the way to attain

Power of bringing things and people unto you–Akarshana*.

ஓலையில் யகார முதலாக மாறி அமைத்து , ஐந்தெழுத்தினையும் எழுதி , வியாழக் கிழமையில் அவ்வோலையில் வெண்ணிறமான பொடியைப் பூசி வெண் நாவல் மரப் பலகையில் அதை வைத்து மேற்கு பார்த்து அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி 8000 தடவை உரு ஏற்றல் வேண்டும்.

To be continued………………………….

xxxxx

Tags-திருமந்திரம், திருமூலர் , சூ மந்திரக் காளி வசியம் திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 6

Leave a comment

Leave a comment