
Date uploaded in London – – 9 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
நூலின் பெயர் — மூலிகை மர்மம்
வெளியிட்ட ஆண்டு 1899
By முனிசாமி முதலியார்
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதோ தொடர்ச்சி………
மூலிகை Part 29
முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 30
xxxx
சீ
326. வெட்டுக் காயத்திற்கு
சீதா செங்கழுநீர் இலையை அரைத்து வெட்டுக்காயத்தில் வைத்துக் கட்டினால் இரண்டு மூன்று கட்டில் ஆறிவிடும்.
XXXXX
மேக ரோகிகளுக்கு உண்டாகும்
தாக ரோகத்தத்திற்கு
சீந்தில் தண்டும் நெற்பொரியும் சமனாய்ப் போட்டு தண்ணீரில் காய்ச்சி, வேண்டிய போது தாகத்திற்கு கொடுத்துவர வேண்டியது.
XXXX
பித்தத்திற்கு
சீரகம்- சுக்கு- நெல்லி வற்றல் -ஏலம் – இவை சமன் கொண்டிடித்து இதற்குப் பாதி சீனி கலந்து திருகடிப் பிரமாணம் இருவேளையும் தின்றுவர நிவர்த்தியாகும்
xxxx
மந்த வாய்வுக்கு
சீரகம்-ஏலம் – பச்சைக் கற்பூரம் — ஓர் நிறையாய் சூரணித்து சரி பங்கு சீனி சக்கரை கூட்டி திருகடியளவு அந்திசந்தி கொடுத்துவரத் தீரும் .
xxxx
குளிர் சுரத்திற்கு கிஷாயம்

சீந்தில் — நிலவேம்பு – சிறு காஞ்சொரி – மல்லி – வட்டத்திருப்பி- விலா மிச்சம் வேர் — வேலிப்பருத்தி பற்பாடகம் – சுக்கு – வகைக்கு ஒரு பலம் இடித்துப் போட்டு தண்ணீர் விட்டு அரைப்படியாகக் காய்ச்சி ஆறு வேளை கொடுக்கச் சாந்தியாகும்.
இதுவுமது
சீரகமும் குருந்தொட்டி வேரும் ஓர் நிறையாய் எடுத்து கிஷாயம் செய்து ஆறு வேளை கொடுக்கச் சாந்தியாகும்.
xxxx
உடம்பு நோயும் காய்ச்சலுக்கும்
சீதேவிப் பூண்டை இடித்துப் புட்டவித்து சாறு பிழிந்து கடுகு ரோகணியை அரைத்துக் கலக்கி வெள்ளாட்டுப் பாலுடன் கலந்து கொடுக்க நிவர்த்தியாகும்.
xxxx
படர்தாமரைக்கு
சீமை அகத்தியிலையை அரைத்து தேங்காயெண்ணெயில் குழைத்து படர்தாமரை — இடுப்பரணை முதலிய படைகளுக்குத் தேய்த்தால் நிவர்த்தியாகும்.
xxxx
சு
மூல வாய்வுக்கு சாந்தி
சுக்கையிடித்து வஸ்திரகாயம் செய்து, அப்போது கறந்த பால் அரைக்கால் படியில் திருகடிப்பிரமாணம் சுக்குத் தூள் போட்டு சாப்பிடவும். இப்படி சில நாள் சாப்பிட்டால் மூல வாய்வு உருத்தி வாய்வு தீரும் பசியுண்டாம் .
xxxx
வாய்வு முதலிய சில்லறை விடம் தீர
சுடுதுரட்டி மூலத்தை பாலில் அரைத்து அருந்தி வந்தால் சில்லறை விடங்கள் புடை கிரந்தி கரப்பான் இவை தீரும் .
xxxx
336. நீர்க்கட்டு உடைக்க

சுறா மீன் தலையிருக்கிற இரண்டு கல்லையெடுத்து உலர்த்தி இளம் வெந்நீரில் உரைத்துக்கொடுக்க உடனே நீர் கட்டு உடையும்.
xxxxx
பிரமியத்திற்குப் பொதுப்பிரயோகம்
சுண்ணாம்பு தெளிவு , தண்ணீர் , நல்லெண்ணெய் — வகைக்குப்படி மாகாணி ஒன்றாய்க் கலந்துகொடுக்கத் தீரும் .
xxxxx
இரத்த மூலத்திற்கு
சுருள் பட்டையைச் சூரணித்து தேனில் குழைத்து இருபோது தின்று வந்தால் இரத்த மூலம் சாந்தியாகும் .
xxxx
சுண்டைக்காய் குணம்

வெண்பா
நெஞ்சிற் கபம் போம் நிரை கிருமி நோயும் போம்
விஞ்சுவாதத்தின் விளைவும் போம் – வஞ்சியரே
வாயைக் கசப்பிக்கும் மாமலையிலுள்ள சுண்டைக்காய்
காயைச் சுவைய்ப்பவர்க்கு காண் .
*************
சுண்டைக்காய்வற்றல் உபயோகம்
வெண்பா
பித்தவரோசகம் போம் பேராப்புழுச்சாகும்
உற்ற கிறாணியும் போம் — உட்பசியாம்
பண்டைக்குதவாமம் பற்றுமிங்கியாரையுந்தான்
சுண்டைக்காய் வற்றலுண்ணச் சொல்

தொடரும் ………………………………….
Tags- முனிசாமி முதலியார் , மூலிகை அதிசயங்கள் 30, சுண்டைக்காய், சீந்தில் கொடி