
WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.229
Date uploaded in London – — 11 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பார்க்க வேண்டிய ஒரு ஹிந்தி திரைப்படம் ஆர்டிகிள் 370!
ச.நாகராஜன்
அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படமாக வெளி வந்து அனைவரையும் ஈர்க்கும் ஒரு ஹிந்தி திரைப்படம் ஆர்டிகிள் 370!
2024 பிப்ரவரி மாதம் 24-ம் தேதி உலகெங்கும் திரையிடப்பட்ட இந்தப் படம் ஏப்ரல் 19-ம் தேதி முதல் நெட்ப்ளிக்ஸிலும் திரையிடப்படுகிறது.
2024 மார்ச் மாதத்தில் இதற்கு மத்ய பிரதேச அரசு வரிவிலக்கை அளித்தது.
ஆர்டிகிள் 370 என்பதைப் பற்றி நான் எழுதிய கட்டுரைகளை முதலில் படித்து விட்டால் இந்தப் படத்தின் அருமை தானே புரியும்.
இதே பிளாக்கில் வெளிவந்துள்ள கீழ்க்கண்ட கட்டுரைகளை முதலில் படித்து விட்டு கட்டுரையைத் தொடர வேண்டுகிறேன்.
2-11-23 12664 ஆர்டிகிள் 370 என்ன சொல்கிறது?
10-11-23 12693 30 நிமிடத்தில் மூட்டையைக் கட்டு! மோடிஜியின் அதிரடி நடவடிக்கை!
திரைப்படத்திற்கு வருவோம்:
திரைப்படத்தை இயக்கியவர் : ஆதித்ய சுஹாஸ் ஜம்பலே
இணையாக இதை எழுத உதவியவர் ஆதித்ய தார், அர்ஜுன் தவான், மோனல் தக்கர்.
இதைத் தயாரித்தவர் ஜோதி தேஷ்பாண்டே. ஆதித்ய தார், லோகேஷ் தார்.
ஆர்டிகிள் 370ஐ அடியோடு நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அதற்கெனப் பாடுபடுபவர் NIA ஏஜன்ட் ஜுனி. இந்தப் பாத்திரத்தில் நடித்து நம்மை அசத்துகிறார் யமி கௌதம் தார். அவரது முகபாவங்கள் சோகம், வீரம், ஏக்கம், தைரியம், வெற்றி உள்ளிட்ட பல உணர்வுகளை நன்கு காண்பிக்கிரது.
பிரதம மந்திரி அலுவலகத்தில் பணியாற்றும் ஜாயின்ட் செக்ரட்டரி ராஜேஸ்வரி ஸ்வாமிநாதனாக வந்து அனைவரையும் கவர்பவர் ப்ரியா மணி. அமைதியான ஆனால் புத்திகூர்மையான பாத்திரம் – இயல்பாக நடித்திருக்கிறார் ப்ரியா மணி.
பிரதம மந்திரி நரேந்திர மோடியாக வந்து சிறப்பாக நடித்திருப்பவர் அருண் கோவில். உள்துறை மந்திரி அமித் ஷாவாக வந்து நம்மை ஆச்சரியப்படுத்துபவர் கிரண் கர்மார்கர்.
இந்த 370 என்னும் அநியாய ஆர்டிகிளை நீக்குவது என்பது சாதாரண விஷயமல்ல.
காஷ்மீரின் தனி அந்தஸ்தைப் பாதுகாக்க கல்லெறியும் கூலிப் படை, பாரத தேசத்தை கூறுகளாக உடைக்க நினைக்கும் தீவிர வாதிகள், அரசியல் ஆதாயம் தேடும் லோக்கல் அரசியல்வாதிகள், எப்போதடா வாய்ப்புக் கிடைக்கும் என்று பார்க்கும் பாகிஸ்தான் இந்த அனைத்தையும் எதிர் கொண்டு ஒரு துளி ரத்தமும் சிந்தாமல் அரசியல் சட்ட அமைப்பின் படி நடந்து கொண்டு ஆர்டிகிள் ரத்து செய்யப்பட்டதே, அது எப்படி?
அது தான் திரைக்கதை!
இது நிஜத்தின் அடிப்படையிலான கதை. ஆனால் உண்மைக்கு மாறான சில பிழைகள் உள்ளனவென்று சிலர் கூறுகின்றனர். ஆனால் ஒரு திரைப்படத்தில் உண்மைச் சம்பவம் காட்டப்படும் போது இப்படி ஓரிரு சம்பவங்கள் மாற்றப்படுவது இயல்பே.
வெறும் கூச்சலாகவே இதை நாம் கருதலாம்.
படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏப்ரல் முடிவில் சுமார் ஒரு பில்லியனை- நூறு கோடி ரூபாய் வசூலை படம் எட்டியுள்ளது ஒரு நல்ல சாதனை.
பாரதத்தின் முதல் பிரதம மந்திரியாக இருந்த பண்டிட் ஜவஹர்லால் நேரு ஷேக் அப்துல்லாவுடன் கொண்டிருந்த நட்பு நமக்குப் புரிகிறது.
அது ஒரு நிரந்தர சிக்கலுக்கு வழி கோலியதா? கேள்வி நம்முள் எழுகிறது!
எப்படியாவது தனி அந்தஸ்தைக் கொண்டு தனி நாட்டு உரிமை, தனிக் கொடி என காஷ்மீரை அப்படியே ஒரு விவகாரமாக நிரந்தரமாக ஆக்க முடிவு செய்த சக்திகளையும் அதை முறியடிக்க நரேந்திர மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளும் அனைவரும் அறியப்பட வேண்டியவை.
இதை நன்கு சித்தரித்துக் காட்டுகிறது இந்தப் படம்.
படத்தில் குறிப்பாக நம்மைக் கவர்பவர்கள் யமி கௌதம்,, ப்ரியா மணி,, அருண் கோவில் மற்றும் கிரண் கர்மார்கர்.
1958 உள்ளிட்ட ஆண்டுகளில் என்னென்ன திருத்தங்கள் செய்யப்பட்டன என்பதை கண்டுபிடிப்பதே ஒரு சவாலாக அமைந்து விட்டதைப் படம் நன்கு சித்தரிக்கிறது.
அனைத்து தீய சக்திகளையும் முன்னதாகவே ஒடுக்கி வைத்து, இந்த ஆர்டிகிளை மோடி அரசு ரத்து செய்வது மனதைக் கவர்கிறது.
அரசியல் ஆதாயத்திற்காக இந்தப் படம் என்று சிலர் கூறுவதை ஏற்க முடியாது; உண்மையை உலகிற்குச் சொல்லும் படம் என்றே அனைவரும் இதைப் பார்ப்பர்.
படத்தை வரவேற்று அனைவரும் பார்க்க வேண்டும்.
அப்போது தான் காஷ்மீர் மூலம் எப்படிப்பட்ட தலைவலி இந்தியா மீது திணிக்கப்பட்டது, அது எப்படி அகற்றப்படுகிறது என்பதை உணரலாம்.
படத்தை உருவாக்கி, நடித்த அனைத்துக் கலைஞர்களுக்கும் – வாழ்த்துக்கள்!!!
***