மாம்பழம், அத்தி,  நாவல், வாழைப்பழம்:  திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை-8 (Post.13,231)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,231

Date uploaded in London – –   11 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில் வரும் தாவரங்கள், பிராணிகளின் எண்ணிக்கை நமக்கு வியப்பை ஏற்படுத்தும். சங்க காலத் தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடாத்தியதால்  நாட்டையே  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்  என்று நானிலமாகப் பிரித்து வறண்டுபோன இட ங்களை பாலை என்றும் பகன்றனர். திருமூலரோ அதற்கு 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தாலும் இயற்கையின் மூலம் ஆன்மீகக் கருத்துக்களை பரப்பினார்

இதோ சில மரம் செடி கொடிகள் பழங்கள்:

தோட்டத்து மாம்பழம் தோண்டிக்குள் விழுந்துவிட்டது. அதனை நரி என்ன செய்யும்?

தோட்டத்தில் மாம்பழம் தொண்டி விழுந்தக்கால்

நாட்டின் புறத்தில் நரிஅழைத்து என்செய்யும்?

மூட்டிக் கொடுத்து முதல்வனை முன்னிட்டுக்

காட்டிக் கொடுத்துஅவர் கைவிட்ட வாறே.–(திருமந்திரம் 2933

தொண்டி என்பது வந்து குடைந்த பழுத்த மாம்பழம்.

தோட்டம் என்பது நற்றவம் புரியும் இடம்

மாம்பழம் என்பது நிட்டை.

நிட்டை கலைந்து விட்டால் உள்ளம் அலைபாயும்; அதனால் பயன் கிடைக்காமல் போகும்.

இதற்கு உவமை; பழுத்த மாம்பழம் கீழே விழுந்ததைப்  பார்த்த நரிகள்  ஊளை இடுவதாகும் ; அவைகளுக்கு ஒரு பயனுமில்லலை  நமக்கு பரம்பொருளைக் காட்டிய குரு நம்மைக் கைவிட்டது போலத்தான் இது

ENGLISH TRANSLATION

2933: Body No More Counts When Jiva-Siva Union is Effected

When in the Garden,

The Fruit of Mango, ripened, dropped,

What matters if Jackals outside howl?

When the Primal One was by Kundalini Fire reached,

The fleshly body that led to it,  Forever left.

XXXXX

பூட்டு ஒத்து மெய்யில் பொறிபட்ட வாயுவைத்

தேட்டு அற்ற அந்நிலம் சேரும்படி வைத்து

நாட்டத்தை மீட்டு நயனத்து இருப்பார்க்கு

தோட்டத்து மாம்பழம் தூங்கலும் ஆமே.

இது மூச்சுப் பயிற்சி தொடர்பான பாடல்; எண்ணத்தைக் கண்டபடி அலையவிடாமல் அடக்கி அகமுகப் படுத்தினால் மாம்பழம் கிடைக்கும்; மாம்பழம் – சிவக்கனி,

தேட்டற்ற – மேற்செல்லுதலற்ற.; அந்நிலம் – அந்தப் பேருறக்க இடமாகிய கொப்பூழ் (துரியத்தானம்).; நாட்டத்தை மீட்டு – புறஞ்செல்லவொட்டாது அகமுகப்படுத்தி.; நயனத்திருப்பார்க்கு – இடையறாது எண்ணியிருப்பார்க்கு.; தோட்டத்து – திருவருள் வெளியில்;. தூங்கல் – உண்டுறைதல்..(பொறிப்பட்ட – அடக்கப்பட்ட;.

மாம்பழம்: இனிமை பற்றி வந்த உவம ஆகுபெயர்..

ENGLISH TRANSLATION

624: Samadhi Leads to Siva

Within the locked body

Is trapped the life-breath;

Course it to the Land

That no desire knows;

They who fix their gaze on Goal True

Will reach the Mango Fruit

That in the garden there hangs.

XXXXX

திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை

அருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப்

பொருத்தம் இலாத புளிமாங் கொம்பேறிக்

கருத்தறி யாதவர் காலற்ற வாறே.  

சிறப்பான  ஒட்டு மாங்கனியை உரமிட்டு வளர்த்து நல்ல மாம்பழம் பழுத்துவிட்டது.அதைப்  பறித்துப் புதைத்துவிட்டு புளியம்பழத்தைப்  பறிக்க  மரமேறி கீழே விழுந்து காலையும் ஒடித்துக்கொள்ளுவது போன்றதே  அடுத்தவன் பெண்டாட்டியை நாடுவதாகும்

மாம்பழம் – தன்  மனைவி;  புளியம் பழம் – அடுத்தவன் மனைவி

காலை ஒடித்துக்கொள்ளுதல் என்பது சமுதாயத்தில் அவமானப்படுத்தல் என்ற பொருளது தருவதாகும் .

ENGLISH TRANSLATION

202: Seek Not the Sour Tamarind: Sweet Mango is at Hand

The sweet, ripe mango, tended with loving care,

They bury deep, deeming it unripe still;

And up the gnarled tamarind they climb for the sour fruit,

Only to break their limbs–they whom the senses beguile.

XXXX

போகின்ற பொய்யும் புகுகின்ற பொய் வித்தும்

கூகின்ற நாவலின் கூழைத் தரும் கனி

ஆகின்ற பைங்கூழ் அவை உண்ணும் ஐவரும்

வேகின்ற கூரை விருத்தி பெற்றாரே.2846

இது மூச்சுப் பயிற்சி தொடர்பான பாடல்

நாவலின் கூழை= சரீரம், உடல். இதை நாவல் கனி என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதைக்  காண்க

போகின்ற பொய்யாகிய விடுத்தல் மூச்சும், புகுகின்ற பொய்யாகிய எடுத்தல் மூச்சும், ஓவாது பயிலப்படுதலால் வீணாகக்கழியும் நால்விரல் மூச்சு கூகின்ற வித்தெனப்படும்.

போகின்ற பொய் – இரேசக வாயு. புகுகின்ற பொய்வித்து – பூரக வாயு. கூகின்ற (பொய்) – கூடுகின்ற வாயு, அஃதாவது நான்கு விரற்கடையுள்ள வாயு. நாவலின் கூழை – சரீரம். பைங்கூழ் – இரு வினைப்பயன். ஐவர் – ஞானேந்திரியங்கள். வேகின்ற கூரை – சரீரம்.

ENGLISH TRANSLATION

2886: Sure Death, if Breath is not Controlled

The deceptive one that leaves,

The false seed that enters;

The Five who eat of the broth made

Of the ripe fruit of flourishing Jamun tree;

-All, all, went the burning roof’s way.

XXXXXX

1933. வறுக்கின்ற வாறு மனத்துலா வெற்றி
நிறுக்கின்ற வாறுமந் நீள்வரை யொட்டிப்
பொறிக்கின்ற வாறுமப் பொல்லா வினையை
அறுக்கின்ற நால்வரும் அத்திப் பழமே.

(ப. இ.) திருவருள் வலத்தால் விந்துவினைக் கட்டுப்படுத்தும் முறை ஏற்படும். மனத்தை அடக்கிப் புலத்தைத் தன்வழிப்படுத்தும் வெற்றியும் உண்டாகும். அவ்வெற்றியினை மனத்தே நிறுத்தும் நிறையும் உண்டாகும். பொன்வரையாகிய நீண்டமலையை ஒத்த நடுநாடிவழியை ஒட்டிச் சேர்கின்ற முறைமையும் ஏற்படும். அக்காலத்துப் பிறப்பிற்கு வித்தாம் பொல்லாவினைகள் இரண்டும் அறுக்கப்பட்டொழியும். அப்பொழுது தொன்மையனாய்த் தீமேனியையுடைய நன்மையனாய் விளங்கும் ‘கற்றவர்களுண்ணும் கனியாம்’ சிவபெருமான் வந்தருள்புரிவன். அத் + தீ + பழம் என்பன அத்திப்பழம் என்றாயிற்று.

(அ. சி.) வறுக்கின்றவாறு – விந்துவைக் கட்டும் உபாயம். நிறுக்கின்ற – அடக்குகின்ற. நீள்வரை – வீணாத் தண்டு. பொறிக்கின்ற – சேர்க்கின்ற. அத்திப்பழம் – உடல்.

TO BE CONTINUED………….

TAGS -திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை- 8, மாம்பழம் அத்தி, நாவல் வாழைப்பழம்

Leave a comment

1 Comment

  1. Athmanathan Seetharaman's avatar

    i have read in Sakthi magazine run by Late Shri Pollachi Mahalingam that Tirumoolar lived 9000 years ago. Tamil language had all the 51 letters like Sanskrit during his time.

Leave a comment