
Date uploaded in London – – 16 MAY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
நூலின் பெயர் — மூலிகை மர்மம்
வெளியிட்ட ஆண்டு 1899
By முனிசாமி முதலியார்
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதோ தொடர்ச்சி………
முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 33
xxxx
362. பல் நோய்க்கு
தாளிசப் பாத்திரியைப் பொடிசெய்து பல்லுதேய்த்துக்கொண்டுவந்தால் பல்வலி தீரும் .
xxxx
சர்பத்து

தாழம்பூவின் விறைக்க கிஷயம் வைத்து சக்கரை சேர்த்தது சர்பத்து போல் பாகுபதமாய் காய்ச்சி சாப்பிட்டுவந்தால் சொறி சிரங்கு தினவு இதுகள் தீரும்.
xxxx
கலிதமாகாதிருக்க
தாழம்பூவின் உள்ளேயிருக்கும் விபூதியை எடுத்து கோழிமுட்டை வெள்ளைக்கருவால் ஈழத்து ஆண்குறியில் தடவிப் புணர்ந்தால் விந்து சீக்கிரம் கலிதமாகாது .
xxxx
குளிர்ச்சிக்கு
தாமரைக்கிழங்கைப் பாலில் அரைத்தது பாலில் உட்கொண்டுவந்தால் மேகம் வேட்டை கிரி ச்சினம் இவை தீரும். தேக சாந்தியும் கண் பிரகாசமும் உடம்பு குளிர்ச்சியும் உண்டா கும்
.xxxx
தி
சிறு விஷங்களுக்கு
தில்லை வித்தை பாலில் அரைத்து உண்டுவந்தால் சில்லறை விஷங்கள் பெரு விஷங்கள் திமிர் வாய்வு கபம் கோழை கு ட்டம் இவை சாந்தியாகும்.
xxxxx
இந்திரியம் கட்ட
திசை கருடன் என்னும் காட்டுக்கொடி மூலத்தைப் பாலில் உட் கொண்டுவந்தால் மலக்கழிச்சல் பேதி இவை தீரும். நீற்ற இந்திரியத்தைக் காட்டும். இதன் இலை தண்ணீரைக் கட்டும்.
xxxx
அறிவுண்டாக
திருநீற்றுப் பச்சிலையைப் பாலில் அரைத்துக்கலந்து உட்கொண்டால் கப வாந்தியை நிவர்த்தியாக்கும். அறிவு துலங்கும்.
xxxx
து
கருமேக சாந்தி
துத்தி விரையைப் பசும்பாலில் அரைத்துப் பாலில் கலக் கி நீடித்து உண்டுவந்தால் கை காலில் படருகிற கருமேகம் கு ட்டம் வெப்பு இவை தீரும்
xxxx
மேக சூட்டுக்கு
துத்தி இலையைக் கஷாயம் வைத்து பாலும் சக்கரையும் கூட்டி காப்பிபோல் சாப்பிட்டு வரவும். தணியும் .
xxxx
மலச்சிக்கலுக்கு
துத்தியிலையில் வெங்கயம் சிறு பயறு போட்டு கிரமப்படி சமைத்து தின்று வந்தால் மலச்சிக்கல் தீரும் மூல ச் சூடு தணியும் .
xxxx
நீர் சுருக்கு
துத்தி வேர் 3 பலம் திராட்ச்சிப்பழம் ஒன்னரைப்பலம் இரண்டும் கிஷாயம் வைத்து கொஞ்சம் நெய்விட்டுச் சாப்பிடவும். நீர் சுருக்கு தீரும்.
xxxx
பருவுகள் உடைய
துத்தியிலையை அரைத்து பருவுகள் மேல் தடவி வந்தாலும் அல்லது துத்தியிலையில் காட்டி வார் த்துக்கு கிளறி கட்டி வந்தாலும் பருவுகள் உடையும்.
xxxxx
தூ
கபரோகத்திற்கு
தூதுளங்காயை துவரம் பருப்பிட்டுக் கிரமப்படி சமைத்து தின்றுவந்தால் கபரோகம் பயித்திய தோஷம் பித்த வாய்வு இவைகள் சாந்தியாகும் .
xxxx
மந்த வாய்வுக்கு
தூதுவேளை இலையை குறுக அரிந்து துவரம்பருப்பு மிளகு இவைகளைக்கூட்டி கிரமப்படி குழம்பு செய்து இரண்டொ ரு வேளை சாதத்துடன் சாப்பிட்டால் உடம்பு ஆதி யந்தமும் குத்தல் – குடைச்சல் – திரேகபாரம்- வயறு மந்தம் – மலச்சிக்கல் யாவும் தீரும் .
xxxx
தெ
நாதவிருத்தி
தென்னம்பாளை மிகவும் இளசியாகக் கொண்டுவந்து அதன் அரிசிகளை எடுத்து பால் விட்டரைத்து எலுமிச்சங்காயளவு சாப்பிடவும். இப்படி காலை மாலை இருவேளையும் தின்று வந்தால் நாதம் விருத்தியாகும் . இடுப்பு வலிவு உண்டாகும் .
xxxx
தே
ஈளை இருமலுக்கு
தேத்தான் வித்தை ஊறவைத்துப் பாலில் அரைத்து கலக்கியுண்டுவந்தால் பித்தகாசம், க்ஷ்யம், ஈளை, இருமல்- மேகம்- பிரமியம்- உந்திப்புண் – கிருச்சிரம் – கண்ணெரிவு – தேகக்கடுப்பு இவை தீரும் . தீபனமுண்டாகும்
.—subham–
Tags- முனிசாமி முதலியார் , மூலிகை அதிசயங்கள்-33