முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—37 (Post No.13,270)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,270

Date uploaded in London – –   24 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 37

Snake Skin

 xxxx

எச்சரிக்கை

எங்கள் பிளாக்கில் வரும் கட்டுரைத் தொடர்களில் காணும் மருத்துவ சிகிச்சை முறைகளை அனுபவம் வாய்ந்த, அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்கள், டாக்டர்களின் ஆலோசனை இன்றி பயன்படுத்துவது ஆபத்தானது. ஆகையால் மருத்துவர்களைக் கேட்காமல்  எதையும் செய்க்கூடாது.

xxxx

432. சொற்ப வாய்வுக்கு

பரங்கிப் பட்டையை அரைத்து பாலில் கலக்கியுண்டுவந்தால் சொற்ப வாய்வு-சூலை-கரப்பான்-கூட்டம்-கிரந்தி  இவை தீரும்.

xxxx

அஸ்தி காங்கைக்கு

பற்பாடகத்தை அரைத்து பாலில் உ,ண்டுவந்தால் அஸ்தி காங்கை- வேட்டை- மேகம் -எரிவு- காந்தள்- இவை தீரும்

xxxx

சரஸ்வதி கடாட்சமுண்டாக

பனங்கோரை – பெருங்கோரை என்கிற குறட்டை மூலிகையைப் பாலில் அரைத்து உபயோகித்து வந்தால் லட்சுமி கடாக்ஷமுண்டாகும்.நரை திரை மாறும் .

xxxx

என் குறிப்பு – தலைப்பில் சரஸ்வதியும் உள்ளே லட்சுமியும் இருப்பது என் பிழை அல்ல. புஸ்தகத்தில் அவ்வாறே உள்ளது

xxxx

தழுதணைக்கு

பழுபாகல் சமூலத்தைப் பாலில் பிரயோகித்து உண்டு வந்தால் , தழுதணை ,- தொழுதணை கிருமி இவை தீரும். மேற்படி மூலிகையின் கிழங்கை  பத்திய பாகமாய் நாட்பட தின்று வந்தால் தேகம் பலக்கும் .

xxxx

சகல விஷத்திற்கும்

பங்கம் பாளை என்னும் ஆடு தீண்டா மூலிகையை அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து வெள்ளாட்டுப் பாலில் கலக்கியுண்டுவந்தால் புண் புளவை சகல விஷங்களும் தீரும் .

இதுவுமது

 பழுபாகல் என்னும் ஆடு தீண்டா மூலிகையை கருங்குறுவை நெல்லுடன் விக்கித்து அவள் இடித்து அந்த அவலை  தினமும் அரைக்கால்படி ஒரு மண்டலம் தின்றால்  சொறி -சிரங்கு -வங்கு- தழுதணை – வண்டு கடி- அரணை கடி- செய்யான் கடி- பூரான் கடி- பேய் சொறி – வெள்ளைப் புள்ளி கரப்பான்  இவை தீரும் . மூன்று இரண்டு மாதம் வரை நல்லெண்ணை புணர்ச்சி ஆகாது .

xxxx

பேன் சாக

படிகாரத்தைப் பொடித்து தண்ணீரில் கரைத்து தலையில் தேய்த்து ஒரு ஜாமம் சென்று ஸ்நானம் செய்யவும் .பேன் –  ஈறு முதலானதும் சாகும்.

xxxx

பல்லு நோய்க்கு

படிகாரமும் கொட்டைப்பாக்கும் சமனிடை கொண்டுஇடித்து வஸ்திர காயம் செய்து பல் தேய்த்து வெந்நீரில் வாய் கொப்பளித்து  வரவும். சவுக்கியமாகும்.

xxxx

பாம்பு விஷத்திற்கு

பச்சைத் தவளை மாமிசத்தை உப்பு-நல்லெண்ணெய் அல்லது வெண்ணெயுடன் கலந்து தின்றால் சகல பாம்பு விஷமும் தீரும். மறு தினம் வரை நித்திரை கூடாது.

xxxx

அஸ்தி சுரத்திற்கு

பச்சைத் தவளையை கிரமப்படி சாறு காய்ச்சிக்குடிக்க அஸ்திசுரம் – நாட்பட்ட ரோகம்  தீராத இருமல் இவைகள் தீரும். தேக புஷ்டியுண்டாகும் . உடம்பு குளிர்ச்சியுண்டாம் .

xxxx

பிளவை கட்டிகட்கு

பச்சைத் தவளையை உயிருடன் கொண்டுவந்து பிளவை மேல் கட்டி வைக்கவும் அது இறந்த பிறகு எடுத்துவிட்டு வேறே கட்டவும். இப்படிச் செய்வதினால் கட்டிகள் விஷம் நீங்கும். நோய் தீரும்- பிடிப்புகள் நீங்கும்.

xxxx

பா

அரையாப்புக்கட்டிக்கு

பாவட்டம் வேரும் பூலாப்பூவும் சமன்கூட்டி அரைத்து கனமாய்ப் பூச கட்டி கரையும் .

xxxx

பல் நோய்க்கு

பாக்கு  அதாவது கொட்டைப்பாக்கை  துண்டு துண்டாய்க் கருக்கி  சட்டியிலிட்டு கருக வறுத்து கற்பூரம் சமன் கூட்டி நசுக்கி பல் துலக்கி வரவும் .

xxxx

சீக்கிரத்தில் பிரசவமாக

பாம்பு தானாயுரித்த தோலைக்கொண்டுவந்து இடுப்பிலாவது வயிற்றிலாவது கட்டிவைக்க உடனே பிரசவமாகும் .

xxxx

தினவு நீங்க

பாம்புத்  தோலை போடி செய்து  அல்லது சாம்பலாக்கி உடம்பில் தேய்க்க  தினவு தீரும்.. மயிரற்ற இடத்தில் மயிர் முளைக்கும் .

xxxx

நீர்க்கோவை தீர

பாம்புத்  தோலை அங்கவஸ்திரம் போல மேலுக்காவது கச்சையைப்போல இடுப்பிலாவது கட்டியிருந்தால் பாண்டு – நீர்க்கோவை இவைகள் தீரும் .

xxxx

448. அறுபட்ட நரம்புக்கு

பாம்புத் தோலின் பொடியும் வயல் நண்டு உலர்த்திய பொடியும் சமன் கூட்டி அறுபட்ட நரம்பின்மேல் தூவி வந்தால்  அறுபட்ட நரம்பு கூடி, மூன்று தினத்தில் குணப்படும் .

தொடரும்……………………………………..

Tags- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 37, பாம்புத் தோல், தவளை, பாக்கு, படிகாரம், பேன் , ஈறு, Snake treatment

Leave a comment

Leave a comment