
WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.326
Date uploaded in London – —11 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (22)
ராமாயணத்தில் சாபங்கள் (22) தசரதனை முனிவர் சபித்தது!
ச.நாகராஜன்
அயோத்யா காண்டத்தில் 64-வது ஸர்க்கமாக அமைவது ‘’தசரதனது மரணம்’.
இந்த ஸர்க்கத்தில் தசரதன் தான் முன்னொரு சமயம் முனிகுமாரன் ஒருவனைத் தவறுதலாகக் கொன்றதையும் முனிகுமாரனது கண்ணில்லாத தந்தை தன்னை சபித்ததையும் கோசலையிடம் கூறுவதைக் காண்கிறோம்.
கண்ணில்லாத முனிவர் தசரதன் தன் மகனை அம்பால் அடித்து (தவறுதலாக) கொன்றதைக் கேள்விப்பட்டு புலம்பலானார்.
தன் மகனின் உடல் இருக்கும் இடத்திற்கு தன்னையும் தன் மனைவியையும் கொண்டு செல்ல அவர் வேண்டினார்.
அப்படியே தசரதன் அவர்களை அழைத்துச் செல்ல, தன் குமாரனின் உடலைத் தடவியவாறே அவர் பலவாறு புலம்பி வருந்தினார்.
பின்னர் தசரதனை நோக்கிப் பின்வருமாறு சபித்தார்:
த்வதா து விஞ்ஞானான்னிஹதோ மே சுத: சுசி: |
தேன த்வாமபிசப்ஸ்யாமி சுது:கமதிதாருணம் ||
த்வயா மே – உம்மால் எனது
சுசி: – நிரபராதியாகிய
சுத: – எனது புதல்வன்
அவிஞானாந்த் து – அறியாமையால் என்றாலும்
யத் – எவ்விதத்திலும்
நிஹத: – கொல்லப்பட்டவனே
தேன – அக்காரணத்தால்
த்வாம் – உம்மை
சுது:கம் – மிகக் கஷ்டமாயும்
அதிதாருணம் – அதிகக் கொடுமையாயும்
அபிசப்ஸ்யாமி – பின்வருமாறு சபிக்கிறேன்
புத்ரவ்யசனஜம் து:கம் யதேதன்மம சாம்ப்ரதம் |
ஏவம் புத்ரசோகேன ராஜன்காலம் கமிஷ்யஸி ||
ராஜன் – அரசே
மாம சாம்ப்ரர்தம் – எனக்கு இப்போது
ஏதத் துக்கம் – இந்த கஷ்டம்
புத்ரவ்யசனஜம் – புதல்வனது பிரிவால் உண்டானது
யத் – அக்காரணத்தால்
ஏவ த்வம் – இவ்வண்ணமே நீ
புத்ரசோகேன – புத்திர சோகத்தால்
காலம் – யமனை
கமிஷ்யஸி – அடைவாயாக
அஞானத்து ஹதோ யஸ்மாத்க்ஷத்ரியேண த்வயா முனி: |
தஸ்மாத்த்வாம் நாவிஷத்யாஷு ப்ரஹ்மஹத்யா நராதிப ||
நராதிப – அரசே
க்ஷத்ரியேண – க்ஷத்திரியனாகிய
த்வயா முனி: – உன்னால் தவசி (முனிகுமாரன்)
அஞானாத் – அறியாமையால்
ஆஷு – ஆலோசனையின்றி
ஹத: – கொல்லப்பட்டான்
யஸ்மான் தஸ்மாத் – அக்காரணத்தால்
து – இவ்விஷயத்தில்
த்வாம் – உன்னை
ப்ரஹ்ம ஹத்யா – பிரம்மஹத்தி தோஷமானது
அவிஷதி ச – அணுகாது
த்வாமப்யேதாத்யஷோ பாவ: க்ஷிப்ரமேவ கமிஷ்யதி |
ஜீவிதாந்தகரோ கோரோ தாதாரமிவ தக்ஷிணா ||
ஜீவதாந்தகர: – உயிரை மாய்க்கிற
கோர: – கொடிய
ஏதாதஷ: – இப்படிப்பட்ட
பாவ: – நிலைமை
தக்ஷிணா – தக்ஷிணையின் பலன்
தாதாரம் – கொடுப்பவனை
இவ – எவ்வண்ணமோ அவ்வண்ணமே
த்வாம் அபி – உன்னையும்
க்ஷிப்ரம் ஏவ – சீக்கிரத்திலேயே
கமிஷ்யதி – அடையும்
ஏவம் சாபம் மயி ந்யஸ விலப்ய கருணம் பஹு
சிதாமாரோப்ய தேஹம் தன்மிதுனம் ஸ்வர்கம்ப்யயாத் ||
ஏவன் – இவ்விதமாக
மயி – என் பேரில்
சாபம் ந்யஸ்ய – சாபத்தை வைத்து
கருணம் – பரிதாபமாக
பஹு விலப்ய – பலவாறாகப் புலம்பியவாறே
தேஹம் – உடலை
சிதாம் ஆரோப்ய – சிதையில் ஏற்றி
தத் மிதுனம் – அவ்விருவரும்
ஸ்வர்கம் – பரலோகத்திற்கு
அப்யயாத் – சென்றனர்.
-அயோத்யா காண்டம் 64-ம்ஸர்க்கம், ஸ்லோகங்கள் 54 முதல் 57 முடிய
இவ்வாறாக நடந்த சம்பவத்தையும் தனக்குக் கிடைத்த சாபத்தையும் கோசலைக்கு தசரதன் கூறுகிறார்.
தசரதன் ராமனைப் பிரிந்து புத்திரசோகத்திற்கு ஆளாகி உயிரையும் துறப்பதற்கு மூல காரணமாக விளங்கும் சம்பவத்தை இங்கு நாம் அறிகிறோம்.
**