Date uploaded in London – 18 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
PART 7 TAMIL
விஷ்ணுஹு — நாம எண் 2
எங்கும் வியாபித்தவர்
அந்தர்பஹிஸ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்திதம்-நாராயண சூக்தம்
விஷ்ணு புராணம் 3-1-4-5 செல்கிறது,
யஸ்மாத் விஷ்டமித்தம் ஸர்வம் தஸ்ய சக்த்யா மஹாத்மனஹ
த ஸ்மாத் விஷ்ணுரிதி க்யாதோ விசேர் -தாதோ ப்ரவேஸனாத்
பொருள்
பரம்பொருளின் சக்தியானது பிரபஞ்சத்தில் புகுந்துவிட்டது விஸ் என்ற வேர்ச்சொல்லுக்கு நுழை, புகு என்று பொருள்.
பகவத் கீதையும் 13-13 ஸர்வதஹ பாணி பாதம் தத் என்று வருணிக்கிறது
ரிக் வேத மந்திரமும் விஷ்ணுவைப் புகழ்ந்து பாடுகிறது: துதி பாடுவோரே ! சாசுவதமான, சத்தியமான
பரம்பொருள் பற்றி அறிந்து மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு முடிவு கட்டுங்கள் ; விஷ்ணுவின் பெயரை மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.
XXXX
வைகுண்டஹ – நாம எண் 405-
சிருஷ்டியின் தொடக்கத்தில் பஞ்சபூதங்களை சிதறிப்போகாமல் ஓன்று சேர்த்துக் கட்டுப்படுத்துபவர்..
மஹாபாராத சாந்தி பர்வத்தில் 362-15 சொல்வதாவது,
மயா ஸம் ஸ்லேஷி தா பூமி-ரத்பிர் வ்யோம ச வாயுனா
வாய்ஸ் ச தேஜஸா சார்த்தம் வைகுண்டத்வம் ததோ மம.
பொருள்
நான் பூமியை நீருடன் சேர்த்து வைத்தேன் ஆகாயத்தைக் காற்றுடனும் , காற்றைத் தீயுடனுன் சேர்த்துவைத்தேன். அதனால் வைகுண்ட அந்தஸ்து பெற்றேன் .
எல்லையற்றவர் எதிர்ப்பற்றவர. என்ற பொருளுமுண்டு.
பக்தர்கள் தம்மை அடைவதற்கு இடையூறு களையெல்லாம் விலக்கி அவர்களை எளிதில் தம்மிடம் சேர்த்துக் கொள்ளுகிறவர்.
XXXX
இஜ்யஹ — நாம எண் 446-
யாகங்களினால் ஆராதிக்கப்படுபவர்.
ஹரிவம்சம் 3-40-27 சொல்வதாவது –
ஆத்மான-மாத்மனா நித்யம் விஷ்ணுமேவ யஜந்தி தே
பொருள்
தெய்வங்களையும் பித்ருக்களையும் யாக யக்ஞங்கள் மூலம் போற் றுவோர் விஷ்ணுவையே வழிபடுகின்றனர். அவனே ஆத்மாவில் உறைபவன்.
பகவத் கீதையிலும் 9-24 இது உள்ளது
xxxx
ஸுவ்ரதஹ நாம எண் –455
நாடியவர்களை ரக்ஷிக்கும் சிறந்த விரதமுடையவர்.
வால்மீகி ராமாயணத்தில் 6-18-33 வரும் ஸ்லோகம் இந்தக் கருத்தை வலியுறுத்துகிறது-
ஸக்ருத் ஏவ ப்ரபன்னாய தவ அஸ்மி கே யாசதே
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம
सकृद् एव प्रपन्नाय तव अस्मि इति च याचते ||६-१८-३३
अभयम् सर्व भूतेभ्यो ददामि एतद् व्रतम् मम |
பொருள்
எவன் ஒருவன் என்னைக் காப்பாற்றுங்கள் என்று ஒரே ஒரு முறை சொல்லி சரண் அடைந்தாலும் அவனுக்கு நான் எந்த ஆபத்திலிருந்தும் அபயம் /பாதுகாப்பு அளிப்பேன் இது என்னுடைய மாற்றமுடியாத உறுதி மொழி.
ராம பிரான் கூறும் இந்த உறுதி மொழி விபீஷண சரணாகதியின் முக்கிய பாடலாக விளங்குகிறது .
இன்னும் ஒரு விளக்கம்-
தனக்கு ஒரு கருமமும் வேண்டமாயினும் தம்மைப்பார்த்து பிறர் தர்மத்தைக் கடைப்பிடித்து பலன் அடைவதற்காக தருமத்தை விடாமல் பின்பற்றுபவர் .
XXXX
த்ரிவிக்ரமஹ – நாம் எண் 530-
மூன்று அடிகளால் மூன்று உலகங்களையும் வியாபித்தவர்..
வேதம் சொல்கிறது-
த்ரீணி பாதா விசக்ரமே – அவரது பாதங்களால் மூன்று உலகங்களையும் வியாபித்தவர்…
(ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி – ஆண்டாள் திருப்பாவை )
ஹரிவம்சம் சொல்வதாவது-3-88-51
த்ரிரித்யேவத்ரயோ லோகாஹா கீர்த்திகா முனி சத்தமை ஹி
க்ரமதே தாம்ஸ்ரிதா ஸர்வாம்ஸ் த்ரிவிக்ரமோஸி ஜனார்தன
பொருள்
மூன்று என்ற சப்தத்தால் ரிஷிகள் மூன்று உலகங்களை குறிப்பிடுகின்றனர்.இறைவன் அவைகளை மும்முறை க டந்தான் ; ஆகையால் அவனை த்ரி விக்ரம என்கிறார்கள்
XXXX
சக்ர- கதாதரஹ –நாம எண் 546-
எவர் ஒருவர் கைகளில் சக்கரத்தையும், கதையையும் வைத்திருக்கிறாரோ அவர்.
மனஸ் தத்துவமாகிய சக்கரத்தையும்,புத்தி தத்துவமாகிய கதையையும் உலகங்களை ரக்ஷிப்பதற்காக தரித்துக் கொண்டிருப்பவர் என்று ஒரு ஸ்லோகம் சொல்கிறது-
மனஸ் தத்வாத்மகம் சக்ரம் புத்தி தத்வாத்மிகாம் கதாம்
தாரயன் லோக ரக்ஷார்த்த- முக்தஸ் சக்ர- கதாதரஹ
XXXX
நக்ஷத்ர நேமிஹி — நாம எண் 440-
நக்ஷத்ர மண்டலமாகிய சிம்சுமார சக்கரத்தின் குடம் போன்றவர்.
இதை விளக்கும் ஸ்லோகம் பின்வருமாறு-
நக்ஷத்ர தாரகைஹி சார்தாம் சந்த்ர சூர்யாதயோ க்ரஹாஹா
வாயுபாஸ- மயை ர் பந்தைர் நிபத்தா த்ருவ சம்ஞிதே
பொருள் :
வானில் உலவும் சந்திரன், சூரியன் , விண்மீன்கள், ,கிரஹங்கள் முதலியன காற்று என்னும் பிணைப்புகளால் துருவத்துடன் / சிசுமார சக்ரத்துடன் கட் ப்பட்டுள்ளன. .அதை இயக்குபவர் இறைவனே.
வேதங்களோ சிசுமார சக்ரத்தை விஷ்ணுவின் இருதயம் என்று துதி பாடுகிறது.
–SUBHAM—
tags- விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்- 7