விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்- 6 (Post No.13,342)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,342

Date uploaded in London – 15 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ஸர்வ ப்ரஹரணாயுதஹ — நாம எண் 1000

விஷ்ணு ஸஹஸ்ரநாம பராயணம் செய்வோர் ஸர்வ ப்ரஹரணாயுத ஓம் நம இதி என்று இரண்டு முறை சொல்ல வேண்டும்.

எய்துவது எல்லாம் ஆயுதமாய்க் கொண்டவர் .(ஆயுதங்களாக நினைக்கப்படாத அவருக்கு நரசிம்மாவதாரத்தில் ஆயுதமாக மாறியதை நாம் அறிவோம்)சத்திய சங்கல்பரும் சர்வேஸ்வரரும் ஆவதை இது குறிக்கும் என்கிறார் சங்கரர். அவர் காட்டும் மேற்கோள் – ஏஷ ஸர்வேஸ்வரஹ (மாண்டூக்ய உபநிஷத் 6).

பிருஹன் நாரதீய உபநிஷத் 1-51-10 சொல்வதாவது :

ஓம்காரஸ் ச ‘தா -ஸப்தஸ் ச த்வவ் ஏதெள பிரஹ்மணஹ புரா

கண்டம் பித்வா விநிர்யாதெள தஸ்மாத் மங்களிகா உபெள 

பொருள்

ஓம் என்ற சப்தமும் அதஹ என்ற சப்தமும் பிரம்மாவின் வாயிலிருந்து வந்தன ஆகையால் அவ்விரண்டும் மங்களம் வாய்ந்தவை.நமஹ என்பது வணங் குதலைக் குறிக்கும்.

ஈஸா வாஸ்ய உபநிஷத் சொல்கிறது: பூயிஸ்ட்டாம் தே நாம உக்திம் விதேம – நாங்கள் மீண்டும் மீண்டும் உன்னை வணங்குகிறோம்.

ஹரியை வணங்குவது எவ்வளவு புனிதமானது என்பதை கீக்கண்ட ஸ்லோகங்களும் விளக்கும்.

தன்யம் தத் ஏவ லக்னம் தன் நக்ஷத்ரம் ததேவ புண்யம் அஹஹ

கரணஸ்ய  ச  சா சித்திர் யாத்ரா ஹரிஹி ப்ராங் நமஸ் க்ரித்யே

பொருள்

எந்த லக்கினத்தில் ஹரி வணங்கப் பட்டாரோ அதுவே புனிதமானது., எந்த நட்சத்திரத்தில் ஹரி வணங்கப் பட்டாரோ அதுவே புனிதமானது., இது மனதிற்கு சந்தோசம் அளிக்கிறது

இதில் வரும் பிராக் என்பது முதல் என்ற பொருள் தரும் . ஆயினும் இறுதியிலும்  வணக்கம் சொல்லப்படும்.

வணங்குவதன் மூலம் கிடைக்கும் பலன் பற்றி மஹாபாரதம் சாந்தி பர்வமும் 47-91 கூறுகிறது,

ஏகோபி க்ருஷ்ணஸ்ய க்ருத ப்ரணாமோ

தசாஸ்வமேதா வப்ருதேன துல்யஹ

தசாஸ்வமேதி புணரேதி ஜன்ம

க்ருஷ்ண ப்ரணாமி ந புனர் பவாய

பொருள்

கிருஷ்ணனுக்குப் போடும் ஒரு கும்பிடு பத்து அஸ்வமேதம் செய்து அதன் முடிவில் அவப்ருத ஸ்நானம் செய்ததற்குச் சமம். பத்து அஸ்வமேதம் செய்தவனுக்கு மறுபிறப்பு உண்டு. கிருஷ்ணனுக்கு ஒரு நமஸ்காரம் செய்தவனுக்கோ மறு பிறப்பே கிடையாது.

XX

சாந்தி பர்வம் 47-90

அதசீ புஷ்ப -ஸங்காசம் பீதவாஸஸ -மச்யுதம்

ஏ நமச்யந்தி கோவிந்தம் ந தேஷாம் வித்யதே பயம்

ஒரு குறையுமில்லாத கோவிந்தனை வணங்குவோருக்கு பயம் என்பதே இராது. அவர் உடுத்தும் உடை மஞ்சள் ; அவருடைய வண்ணமோ நீலம்.

லோக த்ரயாதிபதீம் அப்ரதிம ப்ரபாவ

மிசத் ப்ராணாம்யசிரஸா ப்ரபவிஷ்ணும் இஸம்

ஜன்மாந்தர- ப்ரளய – கல்ப- ஸஹஸ்ர ஜாத

மாஸு ப்ரசாந்திம் உபயாதி நரஸ்ய  பாபம்

பொருள்

மூவுலகங்களுக்கு அதிபதியும் உலகத்தை தோற்றுவித்தவனுமான, எல்லையற்ற சக்தி உடையவனுமான  இறைவனை, ஒருவன் கும்பிட்டால் அவன் எண்ணற்ற பிறப்புகளில் செய்த  மற்றும் கல்ப காலங்களில் செய்த பாவங்களும் அழிந்துபோகும்

XXXX

தாமோதரஹ – நாம எண் 367

உதார குணமுள்ள மனதைப்  பெற்றவன்.நல்ல மனக் கட்டுப்பாடு (தர்மம்) உடையவன் .

பிரம்மாண்ட புராணத்தில் 76-13-14 வரும் ஸ்லோகம்

ததர்ஸ சால்ப தந்தாஸ்யம் ஸ்மித ஹாஸம் ச பாலகம்

தயோர் மத்யகதம் பத்தம்  தாம்னா காதம் ததோதரே

பொருள்

கோகுலவாசிகள் சிரித்த முகமுடைய பாலனைப் பார்த்தனர்.இரண்டு மரங்களுக்கு இடையில் வயிற்றில் கயிற்றால்  கட்டப்பட்டு இருந்தான்  உதரத்தில் தாம/கயிறு கட்டப்பட்டு இருந்ததால் அவனை தாமோதரன் என்கிறார்கள்.

வியாசர் சொல்கிறார்,

தாமானி லோக நாமானி தானி யஸ்யோதரந்தரே

தேனை தாமோதரோ தேவஹ ஸ்ரீதரஹ ஸ்ரீ ஸமாச்ரிதஹ

பொருள்   

தாம என்றால் உலகங்கள் ; யார் வயிற்றில்  இந்த உலகங்கள் இயங்குகின்றனவோ அந்த ஆண்டவனுக்கு தாமோதர, ஸ்ரீதர, ஸ்ரீனிவாச என்ற பெயர்களுமுண்டு .

என் கருத்து

புறநானூற்றிலும் சங்க நூல்களிலும்  செய்யுள் இயற்றிய புலவர்களில் தாமோதரன், கேசவன் , விஷ்ணு முதலிய பெயர்கள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் சூட்டப்பட்டன. விஷ்ணு தாசன் என்பதை விண்ணன் தாயன் என்றும் காமக் கண்ணியார்  என்பதை காமாட்சி என்றும் எழுதினர். கண்ணதாசன் என்பதை தாயங் கண்ணன் என்று எழுதினார்கள்

XXXX

க்ஷோபணாஹா — நாம எண்  374-

சிருஷ்டி காலத்தில் பிரக்ருதியையும் புருஷனையும் உட்புகுந்து கலக்குபவர் .விஷ்ணு புராணம்1-2-29 சொல்வதாவது:-

பிரக்ருதிம் புருஷஞ்சைவ  ப்ரவிஸ்யாத் மேச்சயா ஹரிஹி

க்ஷோபயாமாஸ பகவான் சர்ககாலே வ்யாயாவ்ய யெள

பொருள்

சிருஷ்டி காலத்தில்  என்றுமுள்ள ஹரியானவர், மாறக்கூடிய ப்ரக்ருதி மாறாத புருஷன் ஆகியவற்றில் நுழைந்து கிளர்ச்சியை உண்டுபண்ணுகிறார்

(இதை மாபெரும் வெடிப்பு- பிக் பேங் — என்று நான் ஏற்கனவே விளக்கியுள்ளேன்)

Xxxxx

ஹவிர் ஹரிஹி — நாம எண் 359-

யாகங்களில் ஹவிர் பாகத்தை ஏற்றுக் கொள்கிறவர் ; பகவத் கீதை 9-24:

अहं हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च ।

न तु मामभिजानन्ति तत्त्वेनातश्च्यवन्ति ते ॥९- २४॥

அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போக்தா ச ப்ரபுரேவ ச |

ந து மாமபிஜாநந்தி தத்த்வேநாதஸ்²ச்யவந்தி தே || 9- 24||

நானே வேள்விகளில் எல்லாம் உணவு உண்பவன்; நானே தலைவன்; என்னை மனிதர் உள்ளபடி அறியார்; ஆதலால் நழுவி வீழ்வர்.

புருஷோத்தமனே ஹவிஸ்ஸாகவும் இருப்பதால் ஹவிஹி ; புருஷஸூக்தமும் அபத்னன் புருஷம் பஸூம் – என்கிறது.

மனிதர்களின் பாவத்தையும் பிறவிப்பிணியையும் போக்குவதால் ஹரிஹி அல்லது ஹரி என்றால் நீலவண்ண கண்ணன் என்றும் பொருள்.

இதை ஹரி, ஹவி என்ற இரண்டு சொற்களாகவும் கொள்ளலாம்

மஹாபாரதம் சாந்தி பர்வம்352-3 கூறுவதாவது:

ஹராம் யகஞ் ஸ்மர்த்ரூணாம் ச ஹவிர்பாகம் க்ரதுஷ் வஹம்

வர்ண ஸ் சமே ஹரிர்-வேதி தஸ்மாத் தரிரஹம்  ஸ்ம்ருதஹ

பொருள்

என்னை நினைப்போரின் பாவங்களை நான் அழிக்கிறேன் ;நான் யாகத்தில் வரும் ஹவிஸ் என்னும் சோற்றையும் எடுத்துக்கொள்கிறேன் . என்னுடைய வர்ணம் மகிழ்ச்சியூட்டும் நீலம் ஆகும். ஆகையால் என்னை ஹரி என்கிறார்கள் .

XXXX

அதுலஹ — நாம எண் 355-

ஒப்பற்றவர்.

ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸஹ — ச்வேதஸ்வைத்தாரா உபநிஷத் 4-19.

பரமாத்மனுக்கு சமமானவர் எவருமிலர் அவருடைய நாமம் பெருமைமிக்கது.

****

பகவத் கீதை 11-43 சொல்வதாவது,

पितासि लोकस्य चराचरस्य

त्वमस्य पूज्यश्च गुरुर्गरीयान् ।

न त्वत्समोऽस्त्यभ्यधिकः कुतोऽन्यो

लोकत्रयेऽप्यप्रतिमप्रभाव ॥११- ४३॥

பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய

த்வமஸ்ய பூஜ்யஸ்²ச கு³ருர்க³ரீயாந் |

ந த்வத்ஸமோஸ்த்யப்யதிக: குதோந்யோ

லோகத்ரயேப்யப்ரதிமப்ரபாவ || 11- 43||

சராசரமாகிய இவ்வுலகத்துக்கு நீ தந்தையாவாய். இவ்வுலகத்தால் தொழத்தக்கனை; மிகவும் சிறந்த குரு நீ. உனக்கு நிகர் யாருமில்லை. எனில் உனக்கு மேல் வேறுயாவர்? மூன்று உலகங்களிலும் ஒப்பற்ற பெருமை உடையவனே!

xxxx

க்ருஷ்ணஹ — நாம எண் 550

கிருஷ்ணர் எனப்பெயர்கொண்ட வியாசர்

க்ருஷ்ணத்வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும்

குகோஹ்யன்யஹ புண்டரீகாக்ஷான்  மஹாபாரதக்ருத் பவேத் — விஷ்ணு புராணம் 3-4-5

பொருள்

க்ருஷ்ண த்வைபாயனர் என்ற பெயர்கொண்ட வியாஸர் நாராயணனே ஆவார் மஹாபாரதம் போன்ற ஒரு நூலை தாமரைக்கு கண்ணன் ஆன கடவுள் தவிர வேறு யார் செய்ய முடியும்?

To be continued……

 TAGS-

 விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்- 6

பால் சாப்பிடுவது நல்லதா ? கெட்டதா ? – Part 2 (Post No.13,341)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,341

Date uploaded in London – 15 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

பால் சாப்பிடுவது நல்லதா கெட்டதா–  நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி

எச்சரிக்கை

இந்தக்கட்டுரையின் பிற் பகுதியில்  என் சொந்தக் கதையும் வரும்; தேவையானால், நேரம் இருந்தால் அதைப்படியுங்கள்! 

இந்துக்கள் எப்படி பசுமாடுகளை நடத்தினார்கள் ?  மது பர்க்க என்றால் என்ன? எனக்கு ஏற்பட்ட கசப்பான வேகன் அனுபவங்கள் ; எனக்கு என் பேரக் குழந்தைகள் செய்யும் உதவி! ஆகியவற்றை இந்தக் கட்டுரையில் தருகிறேன்.

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, – அந்தப்

பசுமிக நல்லதடி பாப்பா;

வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது

மனிதர்க்குத் தோழனடி பாப்பா.– மஹா கவி பாரதியார்

xxx

மது பர்க்க என்றால் என்ன?

வேகன் Vegan என்பது இந்தியாவில் இல்லாத ஒரு கொள்கை. நம்முடைய ரிஷி முனிவர்கள் அனைவரும் பாலும் தேனும் சாப்பிட்டு வளர்ந்தார்கள். ஆனால் தேனீக்களின் உயிருக்கோ பசுமாட்டின் உயிருக்கோ ஆபத்து வராமல் அதைச் செய்தனர். புது மணத்  தம்பதிகளுக்கும் , வீட்டிற்கு வந்த விருந்தாளிகளுக்கும், முனிவர்களின் ஆஸ்ரமத்தில் நுழைவோருக்கும்  மதுபர்க்கம் கொடுப்பது வழக்கம். இதை புராண இதிகாசங்களில் காண்கிறோம். இது ஆரோக்கியமானது; சக்தி கொடுப்பது; விருந்தாளியை இனிமையாக வரவேற்பதை ஒத்தது . இன்று நாம் காப்பி, டீ  கொடுப்பது போன்றது;  மது பர்க்கம் என்பது தேனுடன் பாலோ, தயிரோ நெய்யோ  கலந்தது .

More About Madhuparka from Wisdomlib.com

Madhuparka (मधुपर्क) refers to “articles of homage” (i.e., “Madhuparka is a mixture of honey, butter, sugar, curd and water offered to a guest when he first comes to the house”)

Madhuparka (मधुपर्क).—An offering of milk and honey;1 Paraśurāma was treated with it by Agastya.2

Madhuparka (मधुपर्क) refers to the “reception of the bride-groom at the bride’s house” and represents one of the various Marriage Rites (saskāra) according to the Āpastamba-gṛhya-sūtra

Madhuparka (मधुपर्क).—

1) ‘a mixture of honey’, a respectful offering made to a guest or to the bridegroom on his arrival at the door of the father of the bride; (its usual ingredients are five:dadhi sarpirjala kaudra sitā caitaiśca pañcabhi | procyate madhuparka); समांसो मधुपर्कः (samāso madhuparka) Uttararāmacarita 4; असिस्वदद्यन्मधु- पर्कमर्पितं स तद् व्यधात्तर्कमुदर्कदर्शिनाम् । यदैष पास्यन्मधु भीमजाधरं मिषेण पुण्याहविधिं तदा कृतम् (asisvadadyanmadhu- parkamarpita sa tad vyadhāttarkamudarkadarśinām | yadaia pāsyanmadhu bhīmajādhara miea puyāhavidhi tadā ktam) N.16.13; Manusmṛti 3.119 et seq.

2) the ceremony of receiving a guest.

 A dish of curds, ghee and honey, to be offered to a respectable guest on his arrival. E. madhu honey, pc to sprinkle, aff. ghañ .

இந்துக்கள் எப்படி பசுமாடுகளை நடத்தினார்கள்?

வெள்ளைக்காரர்கள் போல பால் வற்றிய பசுக்களை இந்துக்கள் கொல்லவில்லை . அவைகளை கோ சாலையில் வைத்து இறுதிவரை காப்பாற்றினார்கள் .சாப்பாடு போட்ட அம்மாவை கிழவி யானவுடன் கொல்வது போல மேல் நாட்டினர்  வயதான பசுக்களைக் கொல்கிறார்கள். மேல் நாட்டில் பசு மாட்டை ஒன்றரை வருடத்துக்கு ஒரு முறை கர்பமாக்குவது போல இந்துக்கள் செய்யவில்லை. செயற்கைக் கருத்தரிப்பையும் கையாளவில்லை.

வேதத்தில் அடிக்கடி வரும் உவமை வாத்சல்யம். பசுவானது அதன் கன்றிடம் காட்டும் அன்பு வாத்சல்யம். வத்ச என்றால் கன்று. இதிலிருந்துதான் வாக்ஸீன் என்ற மருந்து தொடர்பான சொல்லும் வந்தது .இந்த வாத்சல்யம் என்பதை அன்புக்கு உவமையாக  பிற்கால சம்ஸ்க்ருத நூல்களும் கையாண்டன.

பசுவை தெய்வமாகப் போற்றியது இந்து கலாசாரம். இந்தியாவுக்கு வெளியே பிறந்த மதங்கள், பசுவை விலங்குகளாக கருதியதோடு அல்லாமல் அதை தெரு நாய்களுக்கும் கீழ்த்தரமாக நடத்துகின்றனர். மாடுகளையும் பன்றிகளையும் கோழிக்குஞ்சுகளையும் அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதை அனிமல் ரைட்ஸ் Animal Rights  காரர்கள் பள்ளிச் சிறுவர்களுக்கு டாக்குமென்டரியாகப் போட்டுக் காட்டியவுடன் வெள்ளைக்கார சிறுவர்களும் வெஜிட்டேரியங்களாக மாறி வருகிநின்றனர் .

மேலை நாடுகள் போல மிஷின்களை வைத்து,  ஒட்ட ஓட்ட பால் கறப்பது போல அல்லாமல், இந்துக்கள், கன்றுக்கு பால் கொடுத்த பின்னர்தான் கறந்தனர் அல்லது கன்றுக்குத் தேவையான பாலை  மிச்சம் வைத்தனர். பிறந்த கன்றினை அம்மா பார்க்கும் முன்பே பறித்துச் செல்லும் வழக்கமும் இல்லை.

இந்தியாவில் பசுக்களுக்கு வைக்கோல்/வைக்கல் அல்லது புல்  அகத்திக் கீரை முதலிய வெஜிட்டேரியன் Vegetarian உணவே கொடுக்கப்படுகிறது . மேலை நாடுகளில் எலும்பு பவுடர் Bone Meal) போன்ற அசைவ உணவுகளும் கொடுக்கப்படுகின்றன. இதன் மூலம் மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் ‘மேட் கவ் டிசீஸ்’ Mad Cow Disease என்னும் பயங்கர நோய் பரவியவுடன் விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. இந்த நோய் ஏற்பட்ட இடங்களில் பல்லாயிரம் பசுக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

என் சொந்தக் கதை  

டின்னர் லேடிகள் ஜாக்கிரதை !Dinner lady advice!)

என்னுடைய ஒரு பேரக்குழந்தைக்கு வயது 6. அவனுடன் பேச்சுக் கொடுத்தபோது ஒரு ரகசியம் வெளியானது.

தாத்தா ! டின்னர் லேடி சொல்றா; சிக்கன் CHICKEN  சாப்பிட்டா  நல்லது; உடம்பில பலம் வரும்னு.

உடனேயே நான் சொன்னேன்; அது தப்பு; மகாபாரதம் முதலிய கதைகளில் பிராமணர் துரோணர் போனர்வர்கள்தான் கமாண்ட ர்களாக இருந்தனர். அவர்கள் சிக்கன் சாப்பிட்டதாக சொல்லவில்லை. யானை, காண்டாமிருகம், குதிரை, காளை மாடு  எல்லாம் மாமிசம் சாப்பிடுவதில்லை . ஆகையால் டின்னர் லேடி சொல்லுவதை நம்பாதே என்றேன்.

(இந்தப் பள்ளிக்கூடத்தின்   தலைமை ஆசிரியை முஸ்லீம்; ஆகையால் முஸ்லீம் டின்னர் லேடிக்களை நியமித்திருக்கிறார் போலும். டினார் லேடி என்போர் பள்ளிக்குழந்தைகள் லன்ச் சாப்பிடும் பொது பகுதி நேர வேலை செய்வோர். இது நான் வசிக்கும் லண்டனில் சென்ற ஆண்டு நடந்தது; மேலை நாடுகளில், குறிப்பாக முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் இது போல நிறைய பிரச்சனைகள் வருகின்றன. கல்வி அதிகாரிகளும் முஸ்லீம் பள்ளிகளை எச்சரித்து வருகின்றனர்.

Pupils at six small Muslim private schools in East London are at risk of extremist views and radicalisation, says Ofsted’s chief inspector. Sir Michael Wilshaw said the pupils’ “physical and educational welfare is at serious risk” following a series of emergency inspections.

பேரக் குழந்தையின் உதவி

நான் பிறப்பிலேயே வெஜிட்டேரியன் எங்கள் வீட்டில் கைலி கட்டும் ஆட்கள் கிடையாது; மது பாட்டில்கள் கிடையாது . மாமிசமும் கிடையாது என் குழந்தைகளையும் , பேரக்குழந்தைகளையும் பகுதி நேரமாக கவனித்த (Part Time Babysitters, Child minders ) பேபி சீட்டர்கள் சைல்ட் மைண்டர்கள்: — இரண்டு ஐரிஷ் பெண்மணிகள், 2 பிராமணப் பெண்மணிகள், ஒரு பாகிஸ்தானிய பெண்மணி. ஒரு பிராமண பெண்மணியைத் தவிர மற்ற எல்லோரும் நாங்கள் சொன்ன வெஜிட்டேரியன் வரைமுறைகளை தாண்டியதே இல்லை. ஒரு பிராமண பெண்மணி மட்டும், குழந்தைகளுக்கு சிக்கன், முட்டை எல்லாம் கொடுக்கலாமில்லியோ? என் பையன் பெண்ணுக்கு நான் கொடுக்கிறேன் அப்பத்தான் பலம் வரும் என்றாள் ; எனக்கும் என் மனைவிக்கும் தூக்கிவாரிப் போட்டது .

அடக் கடவுளே; எங்கள் குடும்பத்தில் அந்த வழக்கம்  இல்லை. தயவு செய்து கண்ணில் காட்டிவிடாதீர்கள் என்று கெஞ்சாக் குறை யாக வேண்டிக்கொண்டோம் . பின்னர் லண்டனிலேயே மூன்று சிக்கன் பிராமணக் குடும்பங்களை சந்தித்து விட்டோம்!!!. மேலை நாட்டில் இந்துப் பண்பாட்டின்படி குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கடினம்!

எனக்கு அசைவ உணவுகளை பார்க்கக்கூட பிடிக்காது ; இதனால் லண்டன் ரோட்டில் அந்தப்பக்கம் கண் செல்லாமல் நடந்து விடுவேன் . இரவு நேரத்தில் குக்கரி — உணவு சம்பந்தமான டாக்குமெண்டரிகளை (Cookery Documentaries) 6 வயதுப் பேரக்குழந்தையுடன் அமர்ந்து பார்ப்பேன். அப்போது ஒரு வெஜிட்டேரியன் ஐட்டம் வரும்; அடுத்ததாக நான் வெஜிட்டேரியன் டிஷ் வரும். உடனே கண்களை மூடிக்கொண்டு “ஐயோ இது போன வுடன் என்னிடம் சொல்லு” என்று என் பேரனிடம் வேண்டுவேன். அடுத்ததாக திடீரென்று ஒரு அசைவ உணவு வரும். அவன் “தாத்தா கண்ணை மூடு ,கண்ணை மூடு என்று சொல்லிச் சிரிப்பான். அவனுடன் நான் கண்ணா மூச்சி  விளையாட்டு விளையாடுவதாக அவனுக்கு நினைப்பு; எனக்கோ அருவருப்பு. சின்னக் குழந்தைகளுக்கு நம்முடைய பிலாசபி புரியுமா? இருந்த போதிலும் அவன் அவ்வப்போது எனக்கு செய்த உதவியை மறக்க முடியாது.

என்னுடைய 3 (வேகன் VEGAN) கசப்பான அனுபவங்கள் !

நான் பிரென்ட் வட்டார (லண்டன் வெம்பிளி) சாக்ரே (Standing Advisory Council for Religious Education) அமைப்பில் இந்து மத பிரதிநிதியாக சேவை செயதேன் . ஆண்டு பொதுச் சபைக்கூட்டத்தில் வெஜிட்டேரியன் உணவு வேண்டும் என்ற பாக்ஸை டிக் செய் திருந்தேன். நீ வேகன் தானே என்று சொல்லி ஓரு லேடி ஓர் பாக்சை  கொண்டுவந்து வைத்தாள் ; அதாவது விமானத்தில் டயாபடீஸ் காரர்களுக்கு முதலில் உணவு பரிமாறுவது போல ஸ்பெஷல் மரியாதை. அந்த பாக்ஸில் பழத்துண்டுகளும் இலை தழை களும் மட்டுமே இருந்தன. அந்த லேடிக்கு வெஜிட்டேரியன் –வேகன் வேறுபாடு தெரியவில்லை . நான் நைசாக அதை ஒதுக்கிவிட்டு மெயின் க்யூவில் நின்று எனக்கு வேண்டிய உணவு வகைகளை எடுத்துக்கொண்டேன்; தப்பித் தவறி விமானத்தில் வேகன் என்று சொல்லிவிடாதீர்கள்; அங்கும் இப்படித்தான் இலைதழைகளைக் கொடுப்பார்கள்.

குடும்பத்துடன் வியன்னா (ஆஸ்திரியா), மாட்ரிட் (ஸ்பெயின்) போயிருந்தோம். பெரிய பச்சை வர்ண  போர்டில் வேகன் ரெஸ்டாரண்ட் என்று எழுதியிருந்தனர் .மகிழ்ச்சி  பொங்க ஒரு பெரிய டேபிளைப் பிடித்து , நாக்கில் உமிழ் நீர் சுரக்க மெனு அட்டையைப் புரட்டினேன். Dad /டாட் என்று சொல்லிக்கொண்டு என் பையன் ஒரு பக்கத்தைக் காட்டினான். உலகிலுள்ள பிரபல நண்டு , மீன் , இறால் வகை உணவுகளைப் பட்டியல் போட்ட  ஐட்டத்தைக் கண்டு திடுக்கிட்டோம். அவர்கள் கணக்கில் வேகன் என்றால் பால் பண்ணை உணவுகள் கூடாது; கடல் உணவுகள் ஓ.கே  ஒரு வழியாக மனத்தைத் தேற்றிக்கொண்டு NO FISH, NO EGG, NO MEAT, NO CHICKEN: ONLY VEGETARIAN FOOD, PLEASE !!!நோ பிஷ், நோ எக் , நோ மீட், ஒன்லி  வெஜிட்டேரியன் என்று சொல்லி  வெஜிட்டேரியன் மட்டும் ஆர்டர் செய்தோம்.

இன்னொரு இடத்தில் இரவு 9 மணி ஆகிவிட்டது ; எல்லோருக்கும் பசி வயிற்றைக் கிள்ளியது. இறுதியாக ஒரு தாய் (தாய் லாந்து) உணவு விடுதியைக் கண்டுபிடித்து வெஜிட்டேரியன் கிடைக்குமா ? என்று கேட்டோம். கிடைக்கும் என்றார்கள்; ஒரே சந்தோஷம். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிவிட்டோம் என்று மகிழ்ந்தோம். வழக்கம் போல பல்லவி பாடினோம்- NO FISH, NO EGG, NO MEAT, NO CHICKEN: ONLY VEGETARIAN FOOD, PLEASE !!!நோ பிஷ், நோ எக், நோ மீட், நோ சிக்கன் என்ற பல்லவி பாடினோம். அந்தபெண்மணி சொன்னாள் :  நாங்கள் பிஷ் ஆயில் போட்டுத்தான் சமைப்போம் என்றாள் . தேங்க்  யூ; குட் நைட் என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினோம் . ஏகாதசி விரதம் அனுஷ்டிக்காமல் இருந்ததற்காக கடவுள் கொடுத்த தண்டனை என்று சொல்லி ரொட்டி பிஸ்கட்டுகளைச் சாப்பிட்டோம்.   பேரக் குழந்தைகள் அதற்குள்த் தூங்கிவிட்டன.

—subham—

Tags-மதுபர்க்கம், என்றால் என்ன, வேகன், VEGAN எலும்பு பவுடர், பால் சாப்பிடுவது, நல்லதா கெட்டதா, வாத்சல்யம். கசப்பான அனுபவங்கள், டின்னர் லேடிகள், என் சொந்தக் கதை  , milking

ராமாயணத்தில் சாபங்கள் (26) அந்தணருக்கு பதில் சொல்லாவிடில் சபிப்பாரோ என்ற சீதாதேவியின் எண்ணம்!Post.13,340)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.340

Date uploaded in London – 14 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 ராமாயணத்தில் சாபங்கள் (26) 

ராமாயணத்தில் சாபங்கள் (26) அந்தணருக்கு பதில் சொல்லாவிடில் சபிப்பாரோ என்ற சீதாதேவியின் எண்ணம்! 

ச.நாகராஜன் 

மாயமானாக வந்த மாரீசனை ராமன் தன் அஸ்திரத்தால் அடிக்க அவன் அடிபட்டுத் தரையில் விழுகிறான்.

ராமனது குரலைப் போன்று, “ஹா சீதே! ஹா, லக்ஷ்மணா” என்று கத்தியவாறே அவன் உயிரை விடுகிறான்.

இந்தக் குரலைக் கேட்ட சீதை லக்ஷ்மணனை வற்புறுத்தி ராமனைத் தேடுமாறு அனுப்ப, சீதை இருந்த குடிலுக்கு ராவணன் அந்தணர் வேடத்தில் அதிதியாக வருகிறான்.

ஆரண்ய காண்டம் 46வது ஸர்க்கம் ஆச்ரமத்திற்கு ராவணன் வருவதைப் பற்றிச் சொல்கிறது.

சந்நியாசி வேஷம் தரித்து அழகான காவித்துணி உடுத்தியவனாய் குடை உடையவனாய் பாதுகைகளை அணிந்து தோளில் அழகிய தண்டத்தையும் கமண்டலத்தையும் வைத்துக் கொண்டு சீதா தேவியை அணுகிய ராவணன், “சுந்தரீ, ஸ்த்ரீ ரத்தினமே! நீ யார்?” என்றான்.

“நீ யாரைச் சேர்ந்தவள்? எங்கிருந்து வந்திருக்கிறாய்? என்ன காரணமாக தனியாக அரக்கர்கள் வசிக்கும் பயங்கரமான தண்டகாரண்ய பிரதேசத்தில் வசிக்கின்றாய்?” என்று இப்படி அடுக்கடுக்காய் கேள்விகளை ராவணன் தொடுக்கிறான்.

அவனை ஒரு புண்ணீயவானாகக் கருதிய சீதை அவனை வரவேற்று உபசரிக்கிறாள்.

“உட்காருங்கள்! இதோ பாத்யம்! தங்களுக்குப் பழவகை சித்தமாக இருக்கிறது” என்று வந்த சந்நியாசியைப் பார்த்து சீதை உபசரிக்கிறாள்.

ஆரண்ய காண்டம் 47-வது ஸர்க்கம் ராவணனை திரஸ்கரிப்பது என்ற ஸர்க்கமாகும்.

தனக்குள்ளேயே ஆலோசிக்கிறாள் சீதை.

ப்ராஹ்மணச்சாதிதிஸாயமனுக்தகோ ஹி சபேத் மாம் |

இதி த்யாத்வா முகூர்த்தம் து சீதா வசனமப்ரவீத் ||

–    ஆரண்ய காண்டம் 47-ம் ஸர்க்கம், இரண்டாம் ஸ்லோகம்

சீதா – சீதா தேவி

அயம் – “இவர்

அதிதி – அதிதி

ச  – மேலும்

ப்ராஹ்மண ச – அந்தணர்

அநுக்த: ஹி – பதில் சொல்லப்படாவிட்டால்

மாம் சபேத என்னை சபிப்பார்”

இதி – என்று

முகூர்த்தம் – கொஞ்ச நேரம்

த்யாத்வா து – ஆலோசனை செய்து விட்டு

வசனம் – பின்வரும் சொல்லை

அப்ரவீத் – அருளிச் செய்தனள்.

 வந்த அதிதிக்கு பதில் சொல்லாவிடில் அவர் சபிப்பார் என்று சீதா தேவி தனக்குள் ஆலோசிப்பது வரும் சாபத்தைத் தவிர்க்கும் எண்ணமாக அமைகிறது. சாபம் இங்கு தரப்படாவிட்டாலும் சாபம் வரலாம் என்ற பயம் இங்கு தொனிக்கிறது. 

ஆகவே அவர் பின்னர் தன்னை ராமரின் மனைவி சீதை என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறாள்.

***

Welcome to London 3 : Don’t miss Hamleys and Shards! (Post No.13,339)

The Shards in London 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,339

Date uploaded in London – 14 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

(Welcome to London : Try lifting 13 Kilo Gold Bar in London Museum (Post No.13,292) was posted here on 31 May 2024 and Tower Bridge posted on 4th June 2024; London Changing was posted here in year 2012)

London Swaminathan with The Shards in the background; September 2024

Many tourists miss two important land marks in London. You don’t need to feel guilty for missing the Tallest building The Shards in  Britain if you have visited London before 2012. But you will feel guilty if you have missed the finest and oldest , seven floor toy store  Hamleys.

From the day I came to London on January First,1987, I have visited this toy store umpteen times. But if you go with children you must be ready to spend some money. They won’t allow you to leave the building without you buying toys or games for them. If any friend or relative comes to London with plenty of time to spend, I take them to Hamleys. You need not be a child to visit this store. At the age of 76, I went to the store in September 2024 with my visitors, I still enjoyed the amazing toys. I used to resent why didn’t I have such toys when I was young. Every time I go there I see newer and newer toys.

Every time my mother took me and my brothers to Madurai Meenakshi Temple, we would cry to get some toys the value of which was 6 annas or 4 annas, in today’s money it is only a few pennies. Before entering the main shrines you would see hundreds of shops (Now they were cleared for security reasons)

To be honest I never entered the tallest building The Shards. But I have been to the entrance to take pictures or to attend multi faith prayers at the nearby Southwark Cathedral. I take our Bhajan group to sing there. And I introduce the singers and the Bhajan songs.

London Swaminathan with LEGO Queen Elizabeth; picture taken in September 2024.

xxxx

Now let me give the details:

Shard-Tallest Tower in West Europe

You can go up the building  after buying a ticket and enjoy 360 degree views of London from the highest viewing platform.

Location: London Bridge

Nearest Underground: London Bridge

Height: 1016 feet (95 floors),covered with glass.

What is it: Tall building with space for residences and office. A restaurant for general public  opened in February 2013.

Opened: in July 2012

The View from The Shard allows you to go inside The Shard building and look out over London from the viewing platforms on levels 68 and 69. You can also head up to the Skydeck on level 72 – an open-air platform offering spectacular views over London.

Before or after enjoying the views, grab a drink, snack or meal from the top bars and restaurants at The Shard, including TingAqua ShardHutong and Oblix

The Shard was an ambitious project dreamt up by the late Irvine Sellar. A property developer who wanted to create an architecturally striking building where a vibrant community could thrive in the heart of London.

Architect, Renzo Piano, was the person who made such a dream a reality. Inspired by the spires of London’s churches, Piano designed the vertical city so that the striking yet elegant building appears to emerge from the Thames, disappearing into the clouds above. 

Today this office, retail, hotel, restaurant, apartment and public viewing space serves thousands of locals and visitors every day, becoming an iconic landmark in the London skyline. 

The closest stations to The Shard are London Bridge Underground Station (Northern and Jubilee Lines) and London Bridge Railway Station (Southern and Southeastern trains).

  • Tickets to The View from The Shard cost £28.00 per person. Admittance is free for children aged three and under. Entry to our indoor viewing platforms on levels 68 and 69
  • Entry to our outdoor viewing platform on level 72 – our Skydeck
  • Digital Photo Package four digital photos
  • View Guarantee terms apply
  • Access to our London Experts

Tickets price goes upto £45

You can book tickets with the attraction directly

The Shard is 306m (1,016ft) tall. It is the tallest building in the United Kingdom and the seventh tallest building in Europe.

How long does View from the Shard take?

There is no time limit for the View from the Shard experience. Book your timeslot tickets and then once inside, you can enjoy the experience for as long as like, until closing time.

xxxx

Wonderful  Seven Floor Toy Store! Hamleys at Regent Street, London! Bought by Ambani

Mukesh Ambani bought the world’s oldest toy store Hamleys at Rs 620 crore in an all-cash deal. Mukesh Ambani, India’s richest man and head of Reliance Industries owns Hamleys, the world’s oldest toy store. Hamleys was established in 1760 by William Hamley.

Hamleys in  London’s Regent Steet is a multi-storey toy store; seven floors of demonstrations, events and elaborate displays.

William Hamleys opened its first store in Hall Bourne, London in 1760 and in 1881 his grandson opened a new toy store named Joy Emporium on Regent Street which was appreciated by the royal family of Britain. 

The British monarch Queen Elizabeth described the Hamleys store as her favourite toy store in the year 1955. With time, Hamleys has grown its global presence in Europe, Asia, the Middle East, Africa, and North America.

Hamleys currently has 100 stores spread across 36 cities. It is currently the country’s largest toy retailer. Over half of the 190 locations that the Reliance-owned Hamleys currently operate worldwide are in India. Hamleys toys are famous among children and their parents across the world. 

the billionaire Mukesh Ambani has boosted his retail spending internationally over the past several years and has expressed interest in purchasing new businesses as part of Reliance’s ambitious expansion strategy for its retail company.

Mukesh Ambani and Isha Ambani-led Reliance Retail is now valued at a whopping Rs 9,26,055 crore by brokerage firm Bernstein.

London Regent Street 188-196 Regent Street London W1B 5BT United Kingdom

Nearest tube stations

Oxford Circus – 2 minute walk

Picadilly Circus – 6 minute walk

Tottenham Court Rd – 10 minute walk

—subham—

Tags- The Shars, Hamleys , Toy Store, Tallest Building, London, welcome to London

யானைகளுக்கும் பெயர் உண்டு! இந்துக்கள் கண்டுபிடிப்பை உலகம் ஏற்றது! (Post No.13,338)

Sri Sathya Saibaba with SaiGita.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,338

Date uploaded in London – 14 JUNE 2024                                    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

யானைகள் பற்றி இந்து மத புராணங்கள் என்ன சொல்லிற்றோ பஞ்ச தந்திரக் கதைகள்  என்ன சொல்லிற்றோ கஜேந்திர மோட்சக் கதை என்ன சொல்லிற்றோ  அதை இப்போது விஞ்ஞானிகள் சொல்லி ஏதோ புதிதாக கண்டுபிடித்ததாக கதைத்துக் கொண்டிருக்கிறார்கள் . எல்லா பத்திரிகைகளும் இதைச் சிறப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளன

சங்கத் தமிழ்  நூல்களும் அதற்கு முன்னதாக சம்ஸ்க்ருத நூல்களும் பிராணிகள் கனவு காண்பதை பாடல்களில் செப்பின. வெள்ளைக்காரர்கள் அண்மைக்காலத்தில் இதை பெரிய ஆராய்ச்சியாக வெளியிட்டனர் .

விலங்குகளும் பறவைகளும் கூடு கட்டுவது முதல் உணவுப் பண்டங்களைத் தேடுவது வரை பல கருவிகளை பயன்படுத்துகின்றன என்று நாம் சொன்னதை அண்மைக்காலத்தில்தான் மேலை நாட்டு அறிவியல் சஞ்சிகைகள் வெளியிட்டன .

சந்திரனும் தாவரங்கள் வளர்ச்சிக்கு உதவுகின்றன என்று இந்துக்கள் சொன்னதை இதுவரை அவர்கள் சொல்லவில்லை. கொஞ்ச காலம் கழித்துச் சொல்லுவார்கள்; அப்போது நாம்   மார் தட்டிக்கொள்ளலாம் .

நவ கிரக ஸ்தோத்திரத்தில் நாம் என்னென்னெ கிரகங்களுக்கு என்ன உறவுமுறை என்று சொல்லியுள்ளோம். இன்னும் நாஸா NASA  அதைச் சொல்லவில்லை. பாதியயை மட்டும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் .

ஆல்ப்ரெட் ஐன்ஸ்டைன் சொன்னார்- ஒளியின் வேகம்தான்; அதை பிரபஞ்சத்தில் யாரும் விஞ்ச இயலாது; அப்படிப் போனால் அந்த ராக்கெட்டில் செல்லுவோர் என்றும் 16 வயது மார்கண்டேயனாக இருப்பர் என்று. ஆனால் நாமோ மனோவேகம் அதைவிட வேகமானது அதன் மூலம் வேற்றுலகங்களுக்குச் செல்லலாம் என்று நம்மாழ்வார் , சுந்தரர் , சம்பந்தர் பாடல்கள் மூலமும் , ரேவதி நட்சத்திரக் கதை மூலமும்- அர்ஜுனன் மாதலி தேரில் விண்ணுலகம் சென்று திருப்பிய   மஹாபாரத வன பர்வக் கதை மூலமும் காட்டிவிட்டோம்.

எண்ண அலைகள் மூலம் இயங்கும் அதிவேக புஷ்பக விமானத்தை ராமாயணத்தில் காட்டிவிட்டோம் .

யானைகளும் நம்மைபோல பெயர் சொல்லித்தான் உறவினர்களையும் நண்பர்களையும்  அழைக்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள்  தெரிவிக்கின்றன.

யானைகள் தனது சகயானைகளை பெயர்ச்சொல்லி அழைப்பதாக சபத்திரிகைகள் பெரிய செய்திகளை வெளியிட்டு  ஏதோ புதிதாகக் கண்டுபிடித்ததாகப் பெருமை பேசுகின்றன.

கஜேந்திர மோட்சக்கத்தை 2000 ஆண்டுக்கு முந்தைய புராணக் கதைகளிலும் குப்தர் கால சிற்பங்களிலும் உள்ளன. அதில் கஜேந்திரன் என்ற பெயர்கொண்ட யானை விஷ்ணுவை அழைத்தவுடன் அவர் வந்து அதை முதலையிடமிருந்து காப்பாற்றினார். இதில் யானையின் பெயர் உள்ளது; யானையின் பேச்சு உள்ளது.

அஸ்வத்தாமா

அஸ்வத்தாமா செத்துப்போச்சு என்று தர்மன் சொன்ன பொய் மஹாபாரதப் போரின்  போக்கையே மாற்றி,  கெளவர்களைப் படுதோல்வி அடைய வைத்தது. அஸ்வத்தாமா என்ற பெயர் யானைக்கும் உண்டு; படைத்த தளபதி பிராமணன் துரோணரின் மகனுக்கும் உண்டு.. வழக்கம் போல கிருஷ்ணர் தனது ராஜ தந்திரத்தைப் பயன்படுத்தி அஸ்வத்தாமா யானையைக் கொன்று அதை உரத்த குரலில் அறிவிக்க தருமன் என்னும் யுதிட்டிரனை   வேண்டினார் . ஆனால் அஸ்வத்தாமா எனும் யானை என்பதை தாழ்ந்த குரலில் சொல்லச் சொன்னார் ; இதுதான் ராஜ தந்திரம் ! நமக்கு இந்தக் கதையில் வேண்டிய விஷயம் 5200 ஆண்டுகளுக்கு முன்னரே யானைக்கு பெயர் இருந்தது என்பதாகும்.

நாம்  நம் வீடுகளில் வசிக்கும் நாய்களுக்கும் பூனைகளுக்கும் பெயர் வைத்து அதைச் சொன்னவுடன் ஓடி வருவது போல அந்தக் காலத்தில் யானைகளுக்கும் பெயர் வைத்தனர்..

அது சரி ; மிருகங்கள் தமக்குள் பேசிக்கொண்டனவா? அதற்கு எங்கே சான்று? பஞ்சதந்திரக்கதைகளில் எல்லா மிருகங்களுக்கும் பெயர்கள் உள்ளன. அவைகளை ஒன்றுக்கொன்று பேசியதை எல்லாக் கதைகளிலும் காணலாம்.

சத்ய சாயிபாபா வளர்த்த சாயிகீதா  என்ற யானையுடன் அவர் பேசிய கதை பாபா வெப்சைட்டில்  உள்ளது

இது தவிர புத்தர் அடக்கிய யானையின் பெயர் நளகிரி; இந்திரனின் யானையின் பெயர் ஐராவதம் அஷ்ட திக் கஜங்கள் எனும் எட்டு திசை யானைகளுக்குப் பெயர்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்  சங்க இலக்கியத்தில் வரும் காரி, ஓரி என்பன அவர்கள் வளர்த்த குதிரைகளுக்கு உன்டு அலெக்ஸ்சாண்டர் கூட தனது குதிரைக்கு பூ செபலஸ்  என்று பெயர் வைத்தார்.

கிருஷ்ணன் கொன்ற யானையின் பெயர் குவலயாபீடம்;

முருகன் பயணம் செய்யும் யானையின் பெயர் பிணி முகம்

குருவாயூரில் உள்ள ஒவ்வொரு யானைக்கும் பெயர் உண்டு.

Karikal Choza

உதயனின் கதையில் வரும் யானை, சந்திர காந்தா என்ற யானை கரிகால் சோழனுக்கு மாலைபோட்டு அரசனாக்கிய யானை , மூர்த்தி நாயனாருக்கு மாலை போட்டு பாண்டிய மாமன்னனாக்கிய யானை எல்லாம்– யானையின் அறிவினைக் காட்டுகின்றன. தமிழ்த் தாத்தா உ.வே.ஸா . சொன்ன உண்மைக்கதைகள் முதலியனவும் யானை அறிவினை விளக்கும்

ஆகையால் யானைக்குப் பெயர் இருந்தது, அவை பேசியது  முதலிய ஒவ்வொன்றையும் நமது இலக்கியங்கள் முன்னரே செப்பிவிட்டன .

xxxx

இனி பத்திரிகைச்  செய்தியைக் காண்போம்

டால்ஃபின், கிளி போன்றவை சில உயிரினங்கள், சில நேரம் குறும்புத்தனமாக சக டால்ஃபின் அல்லது கிளி எழுப்பும் ஒலியைக் கேட்டு அதேபோல் ஒலியெழுப்புவதுண்டு. அதிலும்கூட சில கிளிகள் நாம் பேசுவதை தெளிவாக திரும்பவும் நம்மிடையே பேசும். ஆனால், இவையாவும் வெறும் ஒலி மட்டுமே. அதாவது, சுயமாக அவை யோசித்து பேசுவதில்லை. மொழியாக அவற்றுக்கு தெரியாது. வெறுமனே நாம் எழுப்பும் ஒலியை, திரும்பவும் அவை நம்மிடமே எழுப்புகின்றன.

ஆனால் இவை போல இல்லாமல், மனிதர்களை போலவே யானைகள் தங்களின் சக யானைகளை தங்கள் மொழியில் பெயர் சொல்லி அழைக்கும்.

இது குறித்து ஆய்வாளர்கள் தெரிவிக்கையில் “மனிதர்கள் பெயர் வைத்து அழைப்பது போலவே, ஒவ்வொரு யானையும் தனது சக யானைக்கு குறிப்பிட்ட அழைப்பு ஒலியை எழுப்புகின்றன. தங்களுக்கான அழைப்பொலியை தவிர மற்ற யானைகளுக்கான அழைப்பொலியை யானைகள் நிராகரித்து விடுகிறது என்பது தெரியவந்துள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் சமீபத்திய ஆய்வு ஒன்று இதை கண்டறிந்துள்ளது.

கென்யாவில் உள்ள அனைத்துலக ஆய்வாளர் குழு ஒன்று இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வில், அம்போஸ்லி தேசிய பூங்காவைச் சேர்ந்த இரண்டு யானை மந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தி கார்டியன் The Guardian  பத்திரிகையின்படி, 36 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. யானைகளை பொறுத்தவரை பலவிதமான சப்தங்களை அவை எழுப்பக்கூடும். அதிக ஒலியை எழுப்பும் எக்காளங்கள் முதல் தாழ்வான சத்தம் வரை அவற்றில் பலவகைகள் உள்ளன. ஆனால், அனைத்து சத்தங்களும் மனிதர்களின் செவிகளுக்கு கேட்பதில்லை.

1986-2022 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், யானைகள் எழுப்பும் சிறிய அளவிலான அழைப்பொலிகளின் பதிவுகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். யானைகள் எழுப்பும் பேரொலியானது பிளிறல் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆய்வில் 468 தனிப்பட்ட அழைப்பொலிகள் அடையாளம் காணப்பட்டன. அதில், 101 யானைகள் அத்தகைய அழைப்பொலிகளை எழுப்பியுள்ளன, 117 யானைகள் அந்த அழைப்பொலிக்கு பதிலளித்துள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஆய்வின் முடிவுகளானது, செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் உதவியுடன் கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலும் இளம் யானைகளை வயதில் முதிர்ந்த யானைகளே பெயர் சொல்லி அழைக்கிறார்களாம். மேலும், இதை பழக இளம் யானைகளுக்கு சிறிது காலம் எடுத்துக்கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.

Elephants call out to each other using individual names that they invent for their fellow pachyderms, according to a new study.

While dolphins and parrots have been observed addressing each other by mimicking the sound of others from their species, elephants are the first non-human animals known to use names that do not involve imitation, the researchers suggested.

For the new study published on Monday, a team of international researchers used an artificial intelligence algorithm to analyse the calls of two wild herds of African savanna elephants in Kenya.

The research “not only shows that elephants use specific vocalisations for each individual, but that they recognise and react to a call addressed to them while ignoring those addressed to others”, the lead study author, Michael Pardo, said.

“This indicates that elephants can determine whether a call was intended for them just by hearing the call, even when out of its original context,” the behavioural ecologist at Colorado State University said in a statement.

The researchers sifted through elephant “rumbles” recorded at Kenya’s Samburu national reserve and Amboseli national park between 1986 and 2022.

Using a machine-learning algorithm, they identified 469 distinct calls, which included 101 elephants issuing a call and 117 receiving one.

Elephants make a wide range of sounds, from loud trumpeting to rumbles so low they cannot be heard by the human ear.

—subham—

Tags-யானைகள் பெயர்கள், அழைக்கும் , புதிய கண்டுபிடிப்பு , கென்யா, சாயிகீதா

பால் சாப்பிடுவது நல்லதா ? கெட்டதா ? -1 (Post No. 13,337)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,337

Date uploaded in London – 14 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நம் எல்லோருக்கும் தெரியும் பாலில் எல்லாவித சத்துக்களும் இருப்பதால் குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை பால் சாப்பிடுகிறார்கள் ; இது என்ன அசட்டுப்பிசட்டான கேள்வி ? பால் சாப்பிடுவது நல்லது என்றல்லவா கட்டுரைத் தலைப்பு இருக்கவேண்டும் என்று உடனே ஒரு சிலர் போர்க்கொடி தூக்கி விடுவார்கள் என்று எனக்குத் தெரியும். அது இந்தியாவில்தான். மேலை நாடுகளில் இல்லை. ஒரு வேளை கட்டுரையைப் படித்து முடித்தவுடன் நீங்களே பால் சாப்பிடுவதை நிறுத்தினாலும் ஆச்  சரியப்படமாட்டேன் . ஒரு வேளை ரத்தக் கண்ணீர் சிந்துவீர்கள்!

மேலை நாடுகளில் பசு மாடுகளை எப்படி வளர்க்கிறார்கள் ?

கொடுமையிலும் கொடுமை !

கன்று பிறந்தால்தான் மாடு பால் சுரக்கும் . இதற்காக முதல் கன்று போட்ட மூன்றாம் மாதத்தில் அதை செயற்கை முறையில் மீண்டும் மீண்டும் கருத்தரிக்க வைக்கிறார்கள்.

கன்று போட்டவுடன் அந்தக் கன்றினை எடுத்துக்கொண்டு போய்விடுகிறார்கள்.

அது ஆண் கன்றாக இருந்தால் மாட்டு மாமிசத்துக்கு BEEF வளர்த்து பலி இடுகிறார்கள். பெண் கன்றாக இருந்தால் அதை வளர்த்து (தாயைப் பார்க்காமலேயே) மீண்டும் மீண்டும் கர்ப்பமாக்கி வதைக்கிறார்கள் .

பண்ணையின் கொள்ளளவுக்கு மேல் கன்றுகள் இருந்தால் கூசாமல் சுட்டுக் கொல் கிறார்கள்.

பசுக்களை வெளியே மேய விடாமல் கூண்டுக்குள் அடைக்கிறார்கள் .

ஒவ்வொரு நாளும் மிஷின் மூலம் ஓட்ட ஓட்ட பால் கறக் கிறார்கள் ; அப்படி கறக்கும் போது பசுவின் முடி, நிணம் எல்லாம் வந்து விடும்.  

ஆண்  கன்றாக இருந்தால் அதை கொழுக்க வைக்க கண்ட கண்ட உணவுகளைக் கொடுத்து மேயவிட்டு, கொன்று மாட்டு மாமிசமமாக விற்கிறார்கள்.

தாய்ப்பசு பால் கறக்காது போனால் கொன்று குவித்து குப்பைத் தொட்டியில் எறிகிறார்கள்  பால் கற்கும் எந்திரம் ஒரு வட்டச் சக்கரம் போல இருக்கும். ஒவ்வொன்றாக பால் கறக்கும் இடத்திற்கு வந்தவுடன் பாலைக்  கறக்கும். இதுதான் அவர்களின் சிறை வாழ்வு . இவ்வளவையும் நமது சகோதரிக்கோ அம்மாவுக்கோ வருவதாக நினைத்துப் பாருங்கள் ரத்தக் கண்ணீர் சிந்துவீர்கள். இது தொடர்பான படங்களைப் பார்த்தால் பால் சாப்பிடுவதையே நிறுத்திவிடுவீர்கள். மாட்டைக் கொன்று தின்னும் மனிதமிருகங்களுக்கு மனிதாபிமானம் இருக்குமா ?

xxxxx

மஹாத்மா காந்தி பசும்பால் சாப்பிடுவதை ஏன் நிறுத்தினார் ?

பசும் பாலில் இருக்கும் ப்ரோட்டீன் Proteinசத்து அசைவ சத்து என்பது அவரது நம்பிக்கை. மேலும் கன்றுக்குப் பால் கொடுக்காமல் பசுவை வாட்டுவது பாவம் என்று கருதினார்.

இன்று மேலை நாட்டில் நடக்கும் கொடுமைகள் காந்திஜிக்குத் தெரிந்திருந்தால் அவர் உடனே சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்திருப்பார்.

இந்தியாவில் பால் பண்ணைகளில் மாடுகள் நடத்தப்படும் முறை குறித்து காந்திஜி தனது கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்ததை அவரது சுயசரிதையில் காண முடிகிறது . குழந்தைகளாக இருக்கும்போது சாப்பிட்ட தாயப் பாலே போதும் என்பது அவரது நம்பிக்கை.  இனி பசும் பால் சாப்பிடுவதில்லை என்று 1912ம் ஆண்டில் தென் ஆப்ரிக்காவிலுள்ள டால்ஸ்டாய் Tolstoy farm பண்ணையில் அவரும் நண்பர் ஹெர்மன் கல்லென்பாக்கும் Hermann Kallenbach உறுதிமொழி எடுத்தனர்

பிற்காலத்தில் காந்திஜி கடும் நோய்வாய்ப்பட்டார் . அப்போது டாக்டர்கள் அவரை மாமிச சத்து அல்லது முட்டை அல்லது பசும்பால் சாப்பிடச் சொன்னார்கள்; காந்திஜி மறுத்துவிட்டார். அவரது மனைவி சொன்ன படி ஆட்டுப் பால் சாப்பிட்டார். அதிலும் அவருக்கு மன வருத்தமே ஏற்பட்டது.

xxxx

லாக்டோஸ் ரெசிஸ்டன்ஸ் Lactose Intolerance or Resistance என்றால் என்ன ? வேகன் VEGAN என்றால் என்ன?

லாக்டொஸ் என்பது பாலில் உள்ள சர்க்கரைச் சத்து ஆகும். சிலருக்கு இது எளிதில் ஜீரணம் ஆகாது அப்படிவரும் அஜீரணக் கோளாறுகள் அவர்களை வயிற்றில் பொருமலையும் வாயுவையும், வயிற்றுப்  போக்கையும், எளிதில்   உணவு செ மிக்காமையும் உண்டாக்கும். இது வியாதி அல்ல; ஆனால் தாங்க முடியாத அசெளகாரியத்தைத் தரும். ஏனிந்த லாக்டோஸ் ஒவ்வாமை ஏற்படுகிறது?  சிலருக்கு அந்த வகை மரபணு (ஜீன்) LCT gene  பிறக்கையிலேயே இருக்கிறது மற்றும் சிலர் நோய்வாய்ப்பட்ட காலத்தில் குடல் பாதிக்கப்பட்டாலும் திடீரென்று லாக்டோஸ் ஒவ்வாமை வந்துவிடும். இதனால் அவர்கள் பால் மட்டுமின்றி தயிர், மோர், சீஸ் , வெண்ணெய் என்ற பால் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் DAIRY PRODUCTS தவிர்க்கிறார்கள் இவர்களை  வேகன் என்று அழைக்கிறார்கள்

வேகன் என்ற கொள்கை பரவவே பலரும் மேலை நாடுகளில் ஓட்ஸ் மில்க்/பால் , வாதாம்பருப்பு பால் , சோயா மில்க் , கோட் மில்க் (Oats, Almond, Soya Milk, Goat’s Milk)  என்ற வகை பால் பொருட்களை பயன்படுத்தத் துவங்கி விட்டனர். இதன் விற்பனை அதிகரித்து வருகிறது. இதில் லாக்டோஸ் ஒவ்வாமை பிரச்சனை வராது .

வேகன் என்பதும் வெஜிட்டேரியன் என்பதும் வேறு. இந்துக்கள் வேகன் இல்லை. இந்து மதத்தில் வேகன் பற்றிய குறிப்புகளும் இல்லை . பாலும் தெளி தேனும் கடவுளுக்கு தினமும் படைக்கப்படுகின்றன. விருந்தாளிகளுக்கு புது மண தம்பதிகளுக்கும் மது பர்க்க என்னும் பாலும் தெளி தேனும் அளிக்கப்படுகிறது . இது பெரும் மரியாதை ஆகும்

பாலாபிஷேகம் தேனாபிஷேகம் இல்லாத கோவில்கள் இல்லை.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்

சங்கத் தமிழ் மூன்றுந்தா -ஒளவையார்

XXXXX

இந்துக்கள் எப்படி பசுமாடுகளை நடத்தினார்கள் ? மது பர்க்க என்றால் என்ன? எனக்கு ஏற்பட்ட கசப்பான வேகன் அனுபவங்கள் ; எனக்கு என் பேரக் குழந்தைகள் செய்யும் உதவி ஆகியவற்றை கட்டுரையின் இரண்டாம் பகுதியில் தருகிறேன்.

என்னுடைய 3 (வேகன் VEGAN) கசப்பான அனுபவங்கள்

பேரக் குழந்தையின் உதவி; மதுபர்க்கம் என்றால் என்ன?

இவைகளை ஆராய்வோம்

TO BE CONTINUED………………………………………

Tags- பால், கொடுமைகள், கறக்கும் மிஷின், சிறை வாழ்வு, பசுக்கள் பலி , லாக்டோஸ் , காந்தி, ஆட்டுப்பால், ஓட்ஸ் மில்க், சோயா மில்க் , 

ராமாயணத்தில் சாபங்கள் (25) ரிஷிகள் ராக்ஷஸர்களுக்கு சாபம் கொடுக்காமல் இருப்பதற்கான காரணம்! (Post.13336)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.336

Date uploaded in London – 14 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (25)

ராமாயணத்தில் சாபங்கள் (25) ரிஷிகள் ராக்ஷஸர்களுக்கு சாபம் கொடுக்காமல் இருப்பதற்கான காரணம்!

ச.நாகராஜன்

அயோத்யா காண்டத்தை அடுத்து வரும் ஆரண்ய காண்டத்தில் 6 சாபங்களை நாம் காண்கிறோம்.

ஆரண்ய காண்டத்தில் நாம் 10-ம் ஸர்க்கத்தில் ரிஷிகள் ஏன் ராக்ஷஸர்களுக்கு தாமே சாபம் கொடுத்து அவர்களை அழிப்பதில்லை என்பதற்கான காரணத்தை ரிஷிகள் கூறுவதைப் பார்க்கிறோம்.

ஆரண்ய காண்டத்தில் 10வது ஸர்க்கமாக அமைவது ‘ஆயுதம் தரிப்பதன் அவசியத்தை ஶ்ரீ ராமர் சொல்வது’’.

ஶ்ரீ ராமரை தரிசித்த ஏராளமான தபஸ்விகளும் முனிவர்களும் வந்து, தாங்கள் ராக்ஷஸர்களால் கொடுமைப் படுத்தப்படுவதாகவும் தவத்தைச் சரியாகப் புரியமுடியவில்லை என்றும் முறையிட்டனர்.

சீதை ஶ்ரீ ராமரிடம் ஆயுதத்தைத் தரிக்க வேண்டாம், தண்டகாரண்யம் செல்ல வேண்டாம் என்று தன் அபிப்ராயத்தைக் கூற ஶ்ரீ ராமர் ஒரு க்ஷத்திரியனின் தர்மம் மற்றவர்களைக் காப்பதே என்பதை எடுத்துக் கூறுகிறார்.

“சீதே! கடுமையான விரதம் பூண்ட அந்த முனிவர்கள் கஷ்டமடைந்து ரக்ஷகனைத் தேடி என்னையே தண்டகாரண்யத்தில் சரணமடைந்தார்கள்” என்று கூறிய ராமர் அவர்களைக் காக்க தான் வாக்களித்து விட்டதாகவும் கூறுகிறார்.

ரிஷிகள் ராமரிடம் கூறிய வார்த்தைகளை இங்கு பார்ப்போம்:

காமம் தப:ப்ரபாவேன சக்தா ஹந்தும் நிஷாசரான் |

சிரார்ஜித் து நேச்சாமஸ்தப:கண்டயிதும் வயம் ||

தப: ப்ரபாவேன – தவ மஹிமையால்

நிஷாசரான் – அரக்கர்களை

ஹந்தும் – நாசம் செய்ய

சக்தா: – வல்லவர்களாக

காமம் – இருக்கின்றோம்

து – என்றாலும்

வயம் – நாங்கள்

சிரார்ஜிதம் – வெகுநாள் சிரமப்பட்டு சம்பாதித்த

தப: – தவத்தை

கண்டயிதும் – குலைக்க

இச்சாம: ந – துணிவுறாதிருக்கிறோம்

பஹுவிக்னம் தபோ நித்யம் துச்சரம் சைவ ராகவ |

தேன சாபம் ந முஞ்சாமோ பக்ஷ்யமாணாஸ்ச ராக்ஷசை: |\

ராகவ – ஓ! ஶ்ரீ ராம

தப: ச – தவம் என்பதே

நித்யம் – எக்காலமும்

பஹுவிக்னம் – அநேக இடையூறுகளைக் கொண்டதாகும்.

துச்சரம் ஏவ – முடிக்க முடியாததுமாகும்

தேன – அந்தக் காரணத்தால்

ராக்ஷசை: – ராக்ஷஸர்களால்

பக்ஷ்யமாணா: ச – தீங்குறுத்தப்படுபவர்களாக இருந்தும் கூட

சாபம் – சாபத்தை

முஞ்சாம: ச – இடாதிருக்கிறோம்

ஆரண்ய காண்டம், 10-ம் ஸர்க்கம் ஸ்லோகங்கள் 14 & 15,

இங்கு முனிவர்கள் ஏன் சாபம் இடுவதில்லை என்பதற்கான காரணத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது.

ரிஷிகள் தவசக்தி உடையவர்கள் என்றாலும் சாபம் கொடுப்பதால் அந்த சக்தி வீணாகப் போகும் என்பதோடு கூட ஒரு தவத்தை முடிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று என்பதையும் அறிய முடிகிறது.

சாபம் பற்றிய இதிஹாஸ புராணங்களில் நமக்கு ஏற்படும் ஒரு முக்கியமான சந்தேகத்திற்கு விளக்கமாக இந்த இடம் அமைகிறது.

**

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-5 (Post13,334)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.334

Date uploaded in London – 13 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

Aadi Sankara’s Vishnu Sahasranaama (VS) commentary continued

ஊர்ஜித சாசனஹ – நாம எண் 910

சுருதி -ஸ்ம்ருதி வடிவானவர்

உறுதியான கட்டளைகளைப் பிறப்பிப்பவர்.

ச்ருதி -ஸ்ம்ருதீ  மமை வாஜ்ஞே  யஸ்தே உல்லங்க்ய வர்த்ததே

ஆஜ்ஞா சேதீ மம த்வேஷீ ந மத்பக்தோ ந வைஷ்ணவஹ

பொருள்

சுருதியும் (வேதம்) ஸ்ம்ருதியும் (இந்துக்களின் சட்ட புஸ்தகம் ) என்னுடைய கட்டளைகள்.அவைகளை மீறுவோர் என் கட்டளைகளை மீறியவர்கள் ஆவர்.என் புகழுக்கு இழுக்கு கற்பித்தவர் ஆவர்.அவர்கள் என் பக்தர்களும் அல்லர்; வைஷ்ணவர்களும் அல்லர்.

XXXX

புண்ய-ச்ரவண கீர்த்தனஹ – நாம எண் 922

தம்மைப் பற்றிக் கேட்பவர்க்கும் கீர்த்தனம் செய்பவர்க்கும் புண்ணியத்தைக் கூட்டிவைப்பவர்.

விஷ்ணு ஸஹஸ்ரநாம (வி.ச.) பலச்ருதியில் வரும் ஸ்லோகம் இதை உறுதி செய்கிறது

ய இதம் ச்ருணுயான் நித்யம் யச்சாபி பரிகீர்த்தயேத்

நாஸு பம் ப்ராப்னுயாத்  கிஞ்சித் ஸோ அ முத்ரேஹ  ச மானவஹ

பொருள்

இதை தினமும் கேட்பவனும் கீர்த்தனம் செய்பவனும்

இம்மையிலும் மறுமையிலும் யாதொரு கெடுதலையும் அடைய மாட்டான்

XXXX

ப்ரமாணம் — நாம எண் 959

தானே ஒளிர்வதான ஞான வடிவினர்

வேதங்களின் ரஹஸ்ய அர்த்தங்களை  ஐயந்திரிபின்றி அறிவிப்பவர்

தைத்ரீய உபநிஷத் 1-2-1 சொல்கிறது :

ஞான ஸ்வரூபம்  அத்யந்த நிர்மலம் பரமார்த்ததஹ

தம் ஏவார்த்த  ஸ்வரூபேண ப்ராந்தி  தர்சனதஹ ஸ்திதம்

பொருள்

எது ஒன்று பரிபூரண தூய்மை உடையதோ ஞான ஸ்வரூபமாக உளதோ உன்னத நிலையில் உள்ளதோ மாயை என்னும் திரை வழியே பார்க்கையில் உலகத்திலுள்ள ஒரு பொருள் போல தோற்றமளிக்கிறது.

xxxx

ப்ராண ஜீவனஹ – நாம எண் 962

பிராணிகளை ஜீவிக்கச் செய்பவர் .

கடோபநிஷத் 4-5 சொல்வதாவது

ந ப்ராணேன நாபானேன மர்த்யோ ஜீவதி கஸ்சன

இதரேண  து ஜீவந்தி யஸ்மின் நேதா வுபாஸ்ரிதெள

பொருள்

எவரும் பிராணன் , அபானன்  போன்றவற்றால் வாழ்வதில்லை.அவர்களுக்கு எல்லாம் சக்தியூட்டும் ஒன்றால்தான் வாழ்கிறோம்.

xxxx

ஏகாத்மா — நாம்  எண் -965

ஒன்றேயாகிய ஆத்ம  அல்லது எங்கும் வியாபித்திருப்பவர்..

தைத்ரீய உபநிஷத் 1-1 சொல்லுவதாவது :

ஆத்மா வா இதம் ஏக ஏவாக்ர  ஆஸீத்

ஆரம்பத்தில்  ஆத்மா மட்டுமே இருந்தது

ஸ்ம்ருதி சொல்கிறது:

யச்சாப்னோதி யத் ஆததே விஷயான்  த

யத் சஸ்ய சந்ததோ பாவஸ்  தஸ்மாத் ஆத்மே தி கீயதே

பொருள்

எல்லோரிடத்திலும் இருப்பதே ஆத்மா. எல்லோரையும் உயிர்வாழ வைக்கிறது . அது எப்போதும் மாறுபடாமலிருக்கிறது . எல்லோரையும் அனுபவத்தில் உணர வைக்கிறது.

xxxx

பூர் -புவஹ -ஸ்வஸ்தரஹ — நாம எண் 967-

பூலோகம், புவர் லோகம், ஸு வர் லோகம் என்ற மூன்று உலகத்தையும் வியாபிக்கும் ஸம்ஸார விருக்ஷ வடிவினர்.  அல்லது பூஹு , புவஹ,ஸு வஹ என்ற வியாஹ் ருதி மந்திரங்களால்  உலகை வழிநடத்துபவர் .

மனு சொல்கிறார் :

அக்னவ் ப்ரஸ்தா ஹதிஹி சம்யக் ஆதித்யம் உபதிஷ்டதே

ஆதித்யாத் ஜாயதே வ்ருஷ்டிர் வ்ருஷ்டேர்  அன்னம் ததா ப்ரஜாஹா

பொருள்

அக்கினியில் போடப்படும் ஆஹுதி / பொருட்கள் சூரியனை அடைகின்றன . சூரியன் மூலமாக மழை உண்டாகின்றது மழையிலிருந்து உணவு கிடைக்கிறது. உணவு மூலமாக மனிதர்கள் வாழ்கிறார்கள்.

अग्नौ प्रास्ताऽहुतिः सम्यगादित्यमुपतिष्ठते ।
आदित्याज् जायते वृष्तिर्वृष्टेरन्नं ततः प्रजाः ॥3- ७६ ॥

agnau prāstā’hutiḥ samyagādityamupatiṣṭhate |
ādityāj jāyate vṛṣtirvṛṣṭerannaṃ tataḥ prajāḥ || 3-76 || MANU

An oblation duly thrown into the fire reaches the sun; from the sun proceeds rain from, rain food, and from food, the creatures.—(3-76) MANU SMRITI

இதை பகவத் கீதையிலும் காணலாம்

अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भव: |
यज्ञाद्भवति पर्जन्यो यज्ञ: कर्मसमुद्भव: || 14||

annād bhavanti bhūtāni parjanyād anna-sambhavaḥ
yajñād bhavati parjanyo yajñaḥ karma-samudbhavaḥ

அன்னாத்3ப4வந்தி1 பூ4தா1 னி ப1ர்ஜன்யாத3ன்னஸம்ப4வ: |

யஞ்ஞாத்3ப4வதி1 ப1ர்ஜன்யோ யஞ்ஞ: க1ர்மஸமுத்3ப4வ: || 3- 14 ||

அன்னாத்—–உணவிலிருந்து; பவந்தி–—பிழைக்கின்றன; பூதானி—–உயிரினங்கள்; பர்ஜன்யாத்–—மழையிலிருந்து; அன்ன—–உணவு தானியங்களின்; ஸம்பவஹ—–உற்பத்தி; யஞ்ஞாத்—–யாகம் செய்வதிலிருந்து; பவதி—–சாத்தியமாகிறது; பர்ஜன்யஹ—–மழை; யஞ்ஞஹ—-தியாகம் செய்தல்; கர்ம-—-வகுக்கப்பட்ட கடமைகள்; சமுத்பவஹ—-பிறந்தது

BG 3.14: அனைத்து உயிரினங்களும் உணவின் மூலம் வாழ்கின்றன, மழையால் உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. தியாகம் செய்வதால் மழை பெய்யும், விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவது தியாகம் ஆகிறது.

XXXX

யக்ஞாங்கஹ – நாம் எண் 974

யாகங்களைத் தன் உறுப்புகளாகக் கொண்ட யக்ஞ வராஹ வடிவினர்.

வே தங்களைப் பாதங்களாகவும் யூபங்களைப் பற்களாகவும் அக்கினியை நாக்காகவும் பிரம்மத்தை தலையாகவும் தர்மங்களைக் கேசமாகவும், சோமரசத்தை இரத்தமாகவும் உடையவர் . இது ஹரிவம்ச நூலில் 7 ஸ்லோகங்களில் விரிவாக உள்ளது 3-34- 34 -41

என் கருத்து

சோமா ரசத்தைப் பற்றித் தப்பும் தவறுமாக வியாக்கியானம் செய்த மாக்ஸ் முல்லர் கும்பலுக்கு மரண அடி கொடுக்கும் விஷயம் இது . சோமரசத்தை கடவுளின் ரத்தமாக வருணிக்கிறது  ஹரிவம்சம்.

வெள்ளைக்காரர் கூற்றுப்படி இது போதைப் பொருள். உலகில் எந் மதமாவது கடவுளின் ரத்தத்தை கஞ்சாஅபினிவிஸ்கிபிராந்தி என்று வருணிக்குமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். உண்மையில் சோம ரசம் என்பது அற்புதமான உயிர் காக்கும் உற்சாக சக்தியூட்டும் ஒரு டானிக். துரதிருஷ்டவசமாக அந்த தாவரம் அழிந்துவிட்டது. வெள்ளைக்காரர் சொல்லும் இரண்டு தாவரங்களாக இது இருந்திருந்தால் அவைகளை வளர்த்து கோகோ கோலா போல விற்றிருப்பார்கள் வெள்ளைக்காரர்கள்.

கிரிஃபித் என்பவர் தனது ரிக்வேத மொழிபெயர்ப்பின் ஆங்கில மொழிபெயப்பில் முதல் பக்கத்திலேயே தாவரங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இந்து மதத்தை  அபினி- கஞ்சா ஆட்கள் என்று தாக்குகிறார்.

XXXX

தேவகீ  -நந்தனஹ – நாம எண் 989

தேவகியின் மகனாக கிருஷ்ண  அவதாரம் எடுத்தவர். மஹாபாரதம்- அனுசாசன பர்வம் – 158-31 சொல்வதாவது:

ஜ்யோதீம்ஷி சுக்ராணி ச யானி லோகே த்ரயா லோகோ  லோகபாலாஸ்  த்ரயீ ச

த்ரயோ க்ன யஸ்   சாஹூ தயஸ் ச பஞ்ச ஸர்வே தேவா தேவகீ பு த்ர ஏவ

வானத்தில் ஒளிவீசும் கிரகங்களும் நட்சத்திரங்களும் மூன்று உலகங்களும், அங்குள்ள தேவர்களும் மூன்று வேதங்களும் மூன்று யாகத் தீக்களும் ஐந்து ஆஹுதிக்களும் தேவர்களும் அவதாரமாக உதித்தே கிருஷ்ண பரமாத்மா.

இங்கே புத்திரப் பேற்றை அளிக்கும் ஒரு மந்திரமும் கூறப்பட்டுள்ளது :

தேவகீ நந்தனஹ ஸ்ரேஷ்டேதி  சக்திஹி

 தேவகீ ஸுத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே

தேஹி மே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம் கதஹ

XXXX

பாபநாசனஹ —  நாம எண் —992

பாவங்களை அகற்றுபவர் — விருத்த சாதாபா ஸ்லோகம் சொல்கிறது:

பக்ஷோ பவாஸத்  யத் பாபம் புருஷஸ்ய ப்ரணஸ்யதி

ப்ராணாயாம சதேன இவ தத் பாபம் நஸ்யதே ந்ருநாம்

ப்ராணாயாம சஹஸ்ரேன யத் பாபம் நஸ்யதே ந்ருநாம்

க்ஷண மாத்ரேன தத் பாபம் ஹரேர்  த்யானாத் ப்ரணஸ்யதி

பொருள்

ஒரு மனிதன் செய்த பாவங்களை ஒரு வார உண்ணாவிரதமிருந்து அழிக்கலாம் அதை நூறு தடவை ப்ராணாயாமம் செ.ய்தும் அகற்றலாம்  . ஆயிரம் ப்ராணாயாமம் செ.ய்து அகற்றக்கூடிய பாவங்களை ஒரு க்ஷண நேரம் ஹரி தியானத்தின் மூலம்நீக்கலாம் .

(ஒப்பிடுக – ஆண்டாள் இயற்றிய திருப்பாவை : வாயினாற் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்).

–subham—

Tags- விஷ்ணு சஹஸ்ரநாம, அதிசயங்கள்ரகசியங்கள்மேற்கோள்கள்-5

One more Hindu discovery confirmed by Scientists! Elephants have names!! (Post No.13,335)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,335

Date uploaded in London – 13 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

From latest science magazines,

“Elephants seem to use personalized calls to address members of their group, providing a rare example of naming in animals other than humans.

“There’s a lot more sophistication in animal lives than we are typically aware,” says Michael Pardo, a behavioural ecologist at Cornell University in Ithaca, New York. “Elephants’ communication may be even more complex than we previously realized.”

Other than humans, few animals give each other names. Bottlenose dolphins (Tursiops truncatus) and orange-fronted parakeets (Eupsittula canicularis) are known to identify each other by mimicking the signature calls of those they are addressin”g.

What Hindus said 5000 years ago is confirmed by today’s scientists .

Hindus said that animals too dream in hundreds of Sanskrit and Tamil poems 2000 years ago. Now only dream researchers confirm it. Neither Freud nor Jung knew it.

Hindus say moon helps plants to grow. Scientists do not know until this day. Probably they will confirm it soon. If Hindus move in rocket speed, western scientists move in snail speed.

All that we said in Navagraha Hymn is yet to be confirmed by them. They are very, very slow. We said about Big Crunch and Big Bang. The western scientists are yet to confirm Big Crunch.

We said Time is cyclical and till this day western scientists think Time is linear. They will realise their blunder soon.

We showed Einstein is wrong. We showed that speed of light can be beaten from Mahabharata stories, Bhagavata stories and Tamil Sambandar and Sundarar stories. Scientists still believe that speed of light cannot be beaten. Ony in science fiction stories they talk like Hindus . They are terribly slow in physics and cosmology.

Elephants have Personal Names!

When you call your son or daughter or a friend you call them by their personal names. The latest research shows that elephants have personal names which is already in Hindu epics 5000 years old at least.

Hindus named all the famous Indian elephants and horses. Even Alexander named his horse as Bucephalus. Sangam age Tamils named their horses Kari (kaari), Ori etc.

Asvattama (asvataamaa) , the most famous elephant, changed the course of the Mahabharata war 5200 years ago.

Pandava chief Yudhisthira was the embodiment of truth, justice, compassion and righteousness. On the fifteenth day of the battle Drona, the commander of the Kaurava army, heard that his son Asvattama was killed. Dejected and disappointed Drona dropped his bow and arrow and as planned by Krishna, Pandava army commander Dhrishtadhyumna killed him . But  Asvattama that was killed was not his son. It was the name of an elephant. Krishna asked someone to kill it and asked Yudhisthira to announce it loudly, but the last few words in low tone. Only the last few words had the message it was elephant named Asvattama. Because Kaurava army lost its Chief commander Drona, father of Asvattama, the Kauravas lost the war.

This episode shows that Hindus named their pet animals 5200 years ago . Mahabharata war is dated around 3200 BCE. This is not the only animal name. Hindus named Ashta Dik Gajangal (8 elephants in 8  directions) with eight special names.

Indra’s elephant was Airavata,

elephant that was killed by Krishna was Kuvalayapeetam,

elephant that was tackled by Buddha was Nalagiri, and

Lord Skanda’s elephant was named Pinimukha etc.

Words for elephant in other languages came from the Sanskrit word Ibha= Ebur (Latin), Ephos (Greek), Ebu (Ehyptian), Elephant (English).

In the Panchatantra stories we have names for all animals. And we reported that they spoke to one another. So, Hindus knew they have names and they addressed each one with that personal name. Now scientists report it as if they discovered something new!

In the most famous Gajendra Moksha story, we know that elephant named Gajendra called Vishnu to save it from the crocodile.

Most of us name our pet dogs and cats and they respond immediately when we call them with that name.

Here is the latest news from magazines:

Elephants call out to each other using individual names that they invent for their fellow pachyderms, according to a new study.

While dolphins and parrots have been observed addressing each other by mimicking the sound of others from their species, elephants are the first non-human animals known to use names that do not involve imitation, the researchers suggested.

For the new study published on Monday, a team of international researchers used an artificial intelligence algorithm to analyse the calls of two wild herds of African savanna elephants in Kenya.

The research “not only shows that elephants use specific vocalisations for each individual, but that they recognise and react to a call addressed to them while ignoring those addressed to others”, the lead study author, Michael Pardo, said.

“This indicates that elephants can determine whether a call was intended for them just by hearing the call, even when out of its original context,” the behavioural ecologist at Colorado State University said in a statement.

The researchers sifted through elephant “rumbles” recorded at Kenya’s Samburu national reserve and Amboseli national park between 1986 and 2022.

Using a machine-learning algorithm, they identified 469 distinct calls, which included 101 elephants issuing a call and 117 receiving one.

Elephants make a wide range of sounds, from loud trumpeting to rumbles so low they cannot be heard by the human ear.

Names were not always used in the elephant calls. But when names were called out, it was often over a long distance, and when adults were addressing young elephants.

Adults were also more likely to use names than calves, suggesting it could take years to learn this particular talent.

The most common call was “a harmonically rich, low-frequency sound”, according to the study in the journal Nature Ecology & Evolution.

When the researchers played a recording to an elephant of their friend or family member calling out their name, the animal responded positively and “energetically”, the researchers said.

But the same elephant was far less enthusiastic when played the names of others.

Unlike those mischievous parrots and dolphins, the elephants did not merely imitate the call of the intended recipient.

This suggests that elephants and humans are the only two animals known to invent “arbitrary” names for each other, rather than merely copying the sound of the recipient.

“The evidence provided here that elephants use non-imitative sounds to label others indicates they have the ability for abstract thought,” the senior study author George Wittemyer said.

The researchers called for more research into the evolutionary origin of this talent for name-calling, given that the ancestors of elephants diverged from primates and cetaceans about 90m years ago.

Despite our differences, humans and elephants share many similarities such as “extended family units with rich social lives, underpinned by highly developed brains”, the CEO of Save the Elephants, Frank Pope, said.

“That elephants use names for one another is likely only the start of the revelations to come.”

—subham—

Elephants , personal names, they talk, Gajendra, Airavata, Nalagiri, Kuvalayapeedam, Asvattama.

கடல் தீ பற்றி திருமூலர் தரும் அதிசய செய்திகள் ! திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 22 (Post No.13,334)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,334

Date uploaded in London – 13 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கடலில் தோன்றும் மர்மத் தீயை வடமுகாக்கனி, வடவா, படபா என்று வடமொழி நூல்களும் மடங்கல், ஊழித் தீ என்று சங்கத் தமிழ் நூல்களும் கூறுகின்றன.

சித்தர் பாடலாகும் இது பற்றிப் பேசுகின்றன.

கடலில் ஒளிந்திருந்த கனல் எழுந்து வந்தாற் போல்

உடலில் ஒளிந்த சிவம் ஒளி செய்வது எக்காலம்?—பத்திரகிரியார் பாடல்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காளிதாசரும் சிவனின் கோபம் கடலில் எழுந்த தீயைப் போ இருந்தததாக சாகுந்தல் நாடகத்தில் சொல்கிறார்

“Siva’s fiery wrath must still burn in you

Like Fire smouldering deep in the ocean’s depths

Were it not so, how can you burn lovers like me,

When mere ashes is all that is left of you?” –Sakuntala of Kalidasa III-3

லண்டனில் இருந்து வெளியாகும் மெட்ரோ பத்திரிக்கையில் (செப்.18, 2012) ஒரு அதிசயப் படம் வெளியாகி இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அலீஸ் ஸ்பிரிங்ஸ் என்னும் இடத்தில் ஒரு சூறாவளி தீயைக் கக்கிக்கொண்டு சீறிபாய்ந்து வந்ததை ஒருவர் படம் எடுத்திருக்கிறார். நீர்க்கம்பம் ஏற்படுவதைப் பலர் கடலில் பார்த்திருக்கின்றனர். ஆனால் தீக் கம்பம் ஏற்படுவது இயற்கையில் அபூர்வமாகத்தான் நிகழும். சாதாரணமாக இரண்டே நிமிடம் நீடிக்கும் இந்த இயற்கை அற்புதம் ஆஸ்திரேலியாவில் 40 நிமிடங்களுக்கு நீடித்தது.

1923ஆம் ஆண்டில் ஜப்பானில் ஏற்பட்ட கிரேட் காண்டோ பூகம்பத்தின் போது இப்படிப்பட்ட தீக்கம்பம் தோன்றி 15 நிமிடங்களுக்குள் 38,000 பேரைக் கொன்றது. இயற்கையின் சீற்றத்தைத் தடுக்க எவரால் முடியும்?

1977ஆம் ஆண்டில் ஆந்திரத்தில் ஏற்பட்ட புயலில் பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்தனர். சுனாமி போல ராட்சத அலைகள் புகுந்ததில் ஆந்திரக் கடலோரமாக இருந்த பல கிராமங்கள் சுவடே இல்லாமல் அழிந்தன. அப்போது கடலில் பெரும் தீயைக் கண்ட மக்கள் அதை விவரித்தபோது விஞ்ஞானிகளும் வானிலை நிபுணர்களும் இது சாத்தியமில்லை என்று கூறினர். 

கடலில் தோன்றிய மர்மத் தீ என்ன?

 ஆந்திராவில் புயல் தாக்கியபோது தரை மீது உருண்டுவந்த அலைகளின் மேல் தோன்றிய தீயைப் போல, வேறு நாடுகளிலும் தெரிந்தது உண்டு என தெரியவருகிறது.

கடல் தீ என்பது மின்சாரத்தால் உண்டாகும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கலாம். ‘அட்லாண்டிக் கடல் புயல்கள்’—என்ற ஆங்கில நூலில், கோர்டண்டன் மற்றும் பானர் மில்லர் எழுதிய நூலில், இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் உள்ளது.

பெருங்காற்றால் உந்தப்பட்டுப் பேரலைகள் கடற்கரையைத் தாக்கும்போது அலைகளின் மேல் பரப்பில் லட்சக் கணக்கான மின்மினிப் பூச்சிகள் போன்ற நீல நிறப் பொறிகள் தென்படும் என்றும் 1935ல் அமெரிக்காவில் ப்ளொரிடா மநிலத்தில் கீவெஸ்ட் கடலோரத்தைப் புயல் தாக்கியபோது மிகப் பரவலாக கடல் தீ காணப்பட்டது என்றும் அவர்கள் எழுதியுள்ளனர்.

இதோ அபிதான சிந்தாமணி தரும் விளக்கம்

1.வடவை என்பது கடலின் வடக்குப் பக்கத்தில் இருக்கும் ஊழித் தீ. பகன் என்பவன் தான் செய்த தவ அக்கினியை, பிதுர்கள் (இறந்தவர்கள்)  கட்டளைப்படி கடலில் விட, அது பெட்டைக் குதிரை உருக்கொண்டு தங்கியது.

2.சூரிய மண்டலத்தை தேவர் சாணை பிடிக்கையில் தெறித்த தீப் பொறிகளை விச்வகர்மன் சேர்த்துக் கடல் நீரை அடக்க கடலில் விட்டனன் என்பது விரத சூடாமணி தரும் தகவல்.

பதிற்றுப்பத்து விளக்க உரையில் கிடைக்கும் தகவல் இதோ:

“ கடலில் ஊற்று முதலியவற்றால் மிகுகின்ற நீர் கரை கடந்து உலகை அழிக்காதபடி, அதனை உறிந்து வற்றச் செய்வதொரு தீ பெண் குதிரையின் தலை வடிவில் கடலின் கண் உள்ளதென்று கூறுவர். படபாமுகாக்னி என்பது பெண் குதிரைத் தலை வடிவமாக உள்ள தீ என்று பொருள்படும் வட சொல்லாகும். அத் தீ உலகையே அழிக்கும் ஆற்றல் உள்ளதாகையால் அதனை ‘மடங்கல்’ எனக் குறிப்பிடுவர்.”

பல வடஇந்தியர்கள் பெயருக்குப் பின்னால் ‘படபாக்னி’ என்பதை ஜாதிப் பெயர் போல வைத்திருப்பதும் குறிப்பிடத்த்க்கது.

இதை ஏன் “குதிரை முகம்” கொண்ட தீ என்று வருணிக்கின்றனர் என்பது புரியவில்லை. வான நூல் நிபுணர்கள் அறிந்தது ஒரே குதிரை முகம் கொண்ட ‘நெபுலா’ தான்

ஊழித் தீ என்பது வடக்கில் இருக்கும் என்றும், கடலுக்கு அடியில் ஒளிந்து கொண்டிருக்கும் என்றும் யுக முடிவில் அது வெளியே வந்து எல்லாவற்றையும் அழித்துவிடும் என்றும் வடமொழி தமிழ் மொழி இலக்கியங்கள் கூறும்.

கபிலர், அரிசில் கிழார் போன்ற புலவர்கள் பதிற்றுப் பத்து என்னும் சங்க நூலில் சேர மன்னர்களின் சீற்றம் ஊழித் தீ போன்றது என்றும் சுவடே இல்லாமல் எதிரியை நிர்மூலமாக்கிவிடும் என்றும் பாடுகின்றனர். இது காளிதாசன் சாகுந்தலம், ரகுவம்சம் ஆகிய நூல்களில் கூறிய கருத்து. இதன் மூலம், கபிலருக்கு முன் வாழ்ந்தவன் காளிதாசன் என்று ஏற்கனவே ஆங்கிலக் கட்டுரையில் எழுதி இருக்கிறேன்.

வடவைத் தீ என்பது நார்வே, ஸ்வீடன், பின்லாந்து ஆகிய வட துருவப் பகுதியில் தோன்றும் ஆரோரா போரியாலிஸ் (Auroora Borealis) என்ற ஒளியோ என்று பலர் கருதினர். பூமியின் காந்த மண்டலம் காரணமாக வட துருவத்தை ஒட்டியுள்ள நாடுகளில் இரவு நேரத்தில் வானத்தில் வண்ண மிகு ஒளிகள் இந்திர ஜால வித்தைகள் காட்டும். சில நாட்களில் பிரிட்டனின் வட பகுதியான ஸ்காட்லாண்டிலும் கூட இதைக் காணலாம். ஆனால் இது வடவைத் தீ அல்ல.

ஹவாய் போன்ற தீவுகளிலும் பின்லாந்து போன்ற நாடுகளிலும் கடலில் இருந்து எரிமலைத் தீக்குழம்பு (lava from sub marine volcanoes) வந்த வண்ணம் இருக்கும். இது கோடிக் கணக்காண ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறுகிறது. அங்கே கடலில் எப்போதும் தீக் குழம்பைப் பார்க்கலாம்.

இதோ திருமூலர் சொல்லும் அதிசய செய்திகள் !

கடல் தீ

வல்லவன் வன்னிககு இறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே. 23

23: Infinite Grace

The Mighty Lord, the God of Fire, set amidst the seas,

Whom the comprehending souls never deny;

He, the Lord of the Heavenly Beings all,

Who , day and night, pours forth His Divine Grace.

   xxxxx

அங்கிமி காமைவைத் தானுடல் வைத்தான்எங்குமி காமைவைத் தான்உலகு ஏழையும்தங்குமி காமைவைத் தான் தமிழ்ச் சாத்திரம்பொங்கிமி காமைவைத் தான்பொருள் தானுமே. 1587: Splendour Of Tamil Agamas
In Himself He contained the glowing Fire,
In Himself the Seven Worlds, and yet all space not filling
He contained too the Tamil Sastra, in lone splendour set,
Pregnant of import, deep yet recondite.

அங்கி மிகாமை வைத்தான் உடல்; வைத்தான்            

எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும்;

தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச்சாத்திரம்

பொங்கி மிகாமை வைத்தான் பொருள்தானுமே.- திருமந்திரம்

     உடலை அளித்த சிவபெருமான் அந்த உடலில் அக்கினியை மிகாமல் இருக்கும்படி வைத்துள்ளான். பூவுலகம் முதலியவற்றையும் அழியாத வண்ணம் தீயை வைத்தான். குழப்பம் இல்லாமல் இருக்கத் தமிழ் ஆகமமான திருமந்திரத்தை வைத்தான். அனைத்துப் பொருள்களும் இதனுள் அடங்கும்படி வைத்துள்ளான்.

     விளக்கம் : அங்கி – தீ. உடலில் அங்கி குடரைச் சீர் செய்யும் சாடராக்கினி. உலகத்தில் வைக்கப்பட்ட தீயானது கடலைப் பெருகி எழாதபடி செய்யும் வடவாமுகாக்கினி. உலகம் – உயிர் ஆகியவை வாழும்படி செய்வது.

   xxxxx

365. சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்திஅமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரேதிகைத்தெண் ணீரிற் கடலொலி ஓசைமிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே365: To Quell Rising Tides Lord Placed Primal FireThe Lord, He creates allHimself the Being Uncreated–Who is there in the world belowThat thinking thus holds Him to heart?When the oceans ebbed and roaredHe placed the Primal Fire to quell the tides;How compassionate He was!

சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி

அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே

திகைத்தெண் ணீரிற் கடலொலி ஓசை

மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே.  4

சிவபெருமான் ஒளிப் பிழம்பாய்த் தோன்றிப் பிரம விட்டுணுக்களது மயக்கத்தை நீக்கித் தெளிவித்தபின், யாவரும் திகைக்கும்படி எழுந்த பிரளய வெள்ளம் குறையச் செய்து, பின்பு கடல் ஒலிக்கின்ற ஓசை மிக, அதனைக் கேட்டு அக்கடல் அடங்கி என்றும் அளவுட்பட்டு நிற்குமாறு அதன் நடுவில் வடவைத் தீயை வைத்தான்.

இவ்வாறு ஒன்றோடு ஒன்று ஒத்தும், ஒவ்வாதும் நிற்கும் ஆற்றல்களை கூட்டி உலகம் நெறிப்பட்டு நடக்குமாறு ஆக்கிக் காத்து நடத்த வல்லவனும், அவ்வாறு தன்னை ஆக்குவார் ஒருவர் இன்றித் தானே என்றும் நிற்பவனும் ஆகிய பெருமானை அறிந்து உளத்துள் துதித்தவர் உளரோ! இல்லை.

 —subham—-

Tags-  கடல் தீ,  திருமூலர் திருமந்திரம், வடவாக்கினி, , குதிரை முகம்,

அதிசய செய்திகள், திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 22