திருமந்திரத்தில் வானிலை இயல் புவியியல்- ஆராய்ச்சிக் கட்டுரை-21 (Post No.13, 323)-

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,323

Date uploaded in London – 10 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

திருமந்திரத்தில் வானிலை இயல் புவியியல்- திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 21

 ஏழு கடல், ஏழு மலை, ஏழு தீவு  என்பன எல்லாம் சிறுவர் கதை புஸ்தகங்களிலும், புராணங்களில் வரும் பூகோள வருணனைகளிலும் படித்த விஷயமாகும். இவைகள் அனைத்தும் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள். ஏழு, மூன்று ஆகிய இரண்டும் இந்து மத சமய நூல்களில் அடிக்கடி வரும் எண்களாகும் . ஹரப்பன்- சிந்துவெளி நாகரீகத்திலும் இந்த இரண்டு எண்கள் உடைய முத்திரைகள்தான் அதிகம் கிடைத்துள்ளன. ஏனெனில் அது இந்து நாகாரீகம் புழங்கிய  இடம். ஆனால் இந்த சொற்களை ஆன்மீக கருத்துக்களை விளக்கவே திருமூலர் பயன்படுத்துகிறார்.

ஏழு வகை மேகங்கள் மற்றும் காற்று மண்டலத்திலுள்ள அடுக்குகள் ஆகியன  பற்றி கடந்த சில நூற்றாண்டுகளாகத்தான் மேலை  நாடுகள் அறியும்.திருமூலரோ 1200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் சொல்லிவிட்டார். அதற்கு முன்னரே ஸம்ஸ்க்ருதக் கவிஞர்கள் பாடிவிட்டனர்

மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழுந்

தேகங்கள் ஏழுஞ் சிவபாற் கரன்ஏழுந்

தாகங்கள் ஏழுடன் சாந்திகள் தாம்ஏழும்

ஆகின்ற நந்தி யடிக்கீழ் அடங்குமே.

எழுவகை மேகங்களும், எழுவகைத் தீவுகளும், எழுவகை யுடல்களும், சிவ ஞாயிறு ஏழும், ஏழுநாவினையுடைய தீயும், சாந்தியாகிய எழுவகை அடக்கங்களும் சிவபெருமான் திருவடிக்கீழ் அடங்கும்.

********

எழுவகை மேகங்கள் ஆவன: ‘சம்வர்த்த மாவர்த்தம் புட்கலாவர்த்தஞ், சங்காரித்தந் துரோணம் காளமுகி, நீலவருணமேழ் மேகப் பெயரே’ (பிங்கலம் – 71.) என்பனவாம்.

எழுவகைத் தீவுகளான: நாவலந் தீவு, சாகத்தீவு, குசத்தீவு, கிரௌஞ்சத்தீவு, சன்மலித்தீவு, கோமேதகத் தீவு, புட்கரத் தீவு என்பனவாம்.

ஏழுவகை யுடல்கள்: நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன, நாற்காலின, நிலைத்திணையன, மக்கள், தேவர் என்பனவாம்.

சிவஞாயிறு ஏழு. செவி, மெய், நோக்கு, நாக்கு, மூக்கு, மனம், இறுப்பு (புத்தி) என்னும் அறிதற்கருவி ஏழுமாகும். சிவபாற்சுரன் சிவசூரியன். எழுவகையடக்கம் மேற்கூறிய பொறிகள் ஐந்து, மனம், இறுப்பு ஆகிய ஏழும் அடங்குதல். இறுப்பு: புத்தி.

தேகங்கள் ஏழு – எழுவகைத் தோற்றங்கள்.

சிவபாற்கரன் ஏழும் – சிவசூரியன் என்னும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் மனமும் புத்தியம் ஆக ஏழு.

தாகங்கள் ஏழு – எழுநா. அக்கினி

சாந்திகள் ஏழு – ஐம் பொறிகளையும் மனம், புத்தி இவைகளையும் அடக்கி இருக்கும் நிலை.

The clouds seven, the sea-girt continents seven,

The bodies seven, the Siva-Suns seven,

The appetites seven, the alleviations (Santis) seven,

All these contained are,

At the Feet of (Dancing) Nandi.

xxxx

ஏழு வளைகடல் எட்டுக் குலவரை

யாழும் விசும்பினில் அங்கி மழைவளி

தாழு மிருநிலந் தன்மை யதுகண்டு

வாழ நினைக்கில தாலய மாமே.     2866

7 கடல், 8 மலை முதலானவற்றுக்கு இடையே இருக்கும் நிலம் ஆலயம்.

Reach the Holy Temple of Sahasrathala

Seven the circling Seas, eight the Mountain ranges

In the depths of Space is Fire, Rain and Wind

And the Land expansive;

Visioning it, if you dwell in it

That verily a Holy Temple is ganges

xxxxx

கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி

அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிரையாகி

ஒன்றின் பதஞ்செய்ய ஓம்என்ற அப்புறக்

குண்டத்தின் மேல்அங்கி கோலிக்கொண் டானே.410

மேகங்கள் மலைக்கண் தங்குதலால் நிலத்தில் இறங்கிய நீராகிய குலமகள் உலகத்தில் தங்கியும், கடலாகியும் நின்று இனிய உணவுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும் பொழுதே இறைவன் `நாதம்` என்னும் குண்டத்தில் நெருப்பை வளர்த்துவிட்டான். அஃதாவது, `அழித்தல் தொழிலை மேற்கொண்டான்` என்பதாம்.

xxxxx

பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்

உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்

குதஞ்செய்யும் அங்கி கொளுவி ஆகாச

விதஞ்செய்யும் நெஞ்சின் வியப்பில்லை தானே.-409

பல உயிர்கட்கு இடம் அளிக்கின்ற அகன்ற நிலமும், குளிர்ந்த எட்டு உயர்மலைகளும், நீரை மிகத் தருகின்ற எழுகடல் நீர்ப்பரப்பும் முதலாக அனைத்துப் பொருள்களையும் சிவபெருமான் தனது நினைவு மாத்திரத்தால் காய்தலைச் செய்யும் நெருப்பை வைத்து அழித்து உருவில்லனவாகச் செய்துவிடுவான். இதில் வியப்பில்லை.

423: The Fire Spreads*

The earth on which we tread

The snow-clad mountains eight.

The seven seas whose ebbing tides roar,

Over all these and else

The Fire that resides in Muladhara spreads;

And the spreading conflagration turned

Earth and sky seem alike;

–This the truth, imagination none.

xxxxx

2016ம் ஆண்டில் நான் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்ட கட்டுரையின் ஒரு பகுதி

Following is from my old article published in 2016

நாங்கள் எல்லோரும் சிறுவர்களாக இருந்தபோது,  பல பாலர் பத்திரிக்கைகளில் வரும் மந்திரவாதி, மாயா ஜாலக் கதைககளைப் படிப்போம். அதில் பல கதைகளில் 7 மலை, 7 கடல் தாண்டி ஒரு குகையில்…………………..!! என்று படிப்போம். நம்மாழ்வாரும் 7 மலை, 7 கடல்  பாடி இருக்கிறார்:–

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து

பேரேன் என்றுஎன் நெஞ்சு நிறையப் புகுந்தான்

கார் ஏழ்கடல் ஏழ்மலை ஏழ்உலகு உண்டும்

ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே

பாடல் 3969, நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பொருள்:-

“திருப்பேர் நகரில் உள்ள பெருமான் இன்று வந்து நின்று என் உள்ளத்தில் புகுந்து  இதைவிட்டுப் போகேன் என்று உறைகின்றான்.

ஏழு மேகங்கள், ஏழு கடல்கள், ஏழு மலைகள் உள்ள இந்தப் பூமியை அப்படியே உண்டும்,  வயிறு நிறையாத, வயிற்றை உடைய அப்பெருமானை நான் உள்ளத்தில் சிறைப் படுத்தி விட்டேன்.”

இதில் அதிசய விஷயம் மேகம்/ மழை/ காற்று மண்டலம் பற்றியதுதான். இது பற்றி நம்மாழ்வாரும், காளிதாசரும் பாடியிருப்பது இந்துக்களின் கால நிலை பற்றிய அறிவைக் காட்டும்

காளிதாசர் தரும் அற்புதச் செய்தி

காளிதாசர், சாகுந்தலம் என்ற நாடகம் செய்திருக்கிறார். அதில் (7-5) காற்று மண்டலம் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதில் நமது விமானம் எந்தப் பிரிவில் உள்ளது என்று மன்னர் கேட்கிறார். அதற்கு உரைகாரர்கள் எழுதிய உரையில் இந்து புராணங்கள் வாயு மண்டலத்தை ஏழு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் கொடுத்திருப்பதை எடுத்துக் காட்டுகின்றனர்.

முதலாவது வாயு ஆவாஹ என்றும் அது  புவர்லோகத்தில் பாயும் என்றும் அந்தப்பிரிவில் பூலோகம், பாதாள லோகம், மற்றும் சூரியன் வரையுள்ள வாயு மண்டலம் அடங்கும் என்றும் உரைகாரர் கூறுவர். மற்ற ஆறு வாயு மண்டலங்களும் சுவர் லோகத்தில் (சுவர்க) இருப்பதாகவும் சொல்லுவர். இதிலுள்ள இரண்டாவது வழி ப்ரவாக என்றும் இந்த வாயுதான் சூரியனைச் சுற்றச் செய்கிறது என்றும் சொல்கின்றனர். மூன்றாவது வாயு சம்வாஹ- அது சந்திரனை இயங்கச் செய்கிறது. நாலாவது நட்சத்திர மண்டலம்; அங்கே உத்வாஹ என்னும் காற்றுள்ளது. ஐந்தாவது கிரகங்கள் அருகிலுள்ள காற்று; அதன் பெயர் விவாஹ; ஆறாவது காற்று சப்தரிஷி மண்டலத்தில் இயங்கும் அதன் பெயர் பரிவாஹ. அதுதான் பால்வளி மண்டலம் – மில்கி வே –  நட்சத்திரப் பகுதி. அங்கேதான் இப்பொழுது இந்திரனுடைய விமானம் சென்று கொண்டிருக்கிறது.

 ஏழாவது வாயு துருவ நட்சத்திரப் பகுதியில் உள்ளது. அந்த துருவன் தான் எல்லா நட்சத்திரங்களியும் கிரகங்களையும்  சக்கரத்திலுள்ள ஆரம் எல்லாம் அச்சாணியில் இணைக்கப்பட்டிருப்பது போல கட்டி வைத்திருக்கிறான்.  அங்கே இயங்கும் காற்று பரவாஹ.

இதற்கு ஆதாரமான சம்ஸ்கிருத ஸ்லோகம்:–

ஆவஹோ நிவஹஸ்சைவ உத்வஹ: சம்வஹஸ்ததா

விவஹ: ப்ரவஸ்சைவ பரிவாஹஸ்ததைவ ச

(ஒவ்வொரு மழைக்கும் உலகில் நடந்த அதிசய நிகழ்ச்சிகள் மூலம் பழைய கட்டுரையில்விளக்கியுள்ளேன்.)

 *******

ஏழுவகை மழைகள்:-

சம்வர்த்தம் – மணி (ரத்தினக் கற்கள்)

ஆவர்த்தம்- நீர் மழை

புஷ்கலாவர்த்தம்- பொன் (தங்க) மழை

சங்காரித்தம் – பூ மழை (பூ மாரி)

துரோணம் – மண் மழை

காளமுகி- கல் மழை

நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)

 ஏழு மலைகள்

இமயம்/கயிலை, மந்த்ரம், விந்தியம், நிடதம், ஹேமகூடம், நீலம், கந்தமாதனம்

 ஏழு கடல்கள்

உவர் நீர், தேன்/மது, நன்னீர், பால், தயிர், நெய், கரும்புச் சாறு

 உப்புதேன்மதுஒண் தயிர்பால்கரும்பு,

அப்புத்தான் என்று உரைத்தன ஆழிகள்

துப்புப்போல் குருதிப் புனல் சுற்றலால்,

தப்பிற்று அவ் உரைஇன்று ஓர் தனுவினால்.

To be continued……………………………………………………..

—–subham—-

வானிலை இயல்,  புவியியல்,  திருமந்திர,  ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 21,  ஏழு கடல், ஏழு மலை, ஏழு தீவு 

ராமாயணத்தில் சாபங்கள் (21) அம்பால் அடிக்கப்பட்ட முனிகுமாரன் தசரதனை நோக்கிக் கூறியது! (Post.13,322)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.322

Date uploaded in London – 10 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (21) 

ராமாயணத்தில் சாபங்கள் (21) அம்பால் அடிக்கப்பட்ட முனிகுமாரன் தசரதனை நோக்கிக் கூறியது! 

ச.நாகராஜன்

 அயோத்யா காண்டத்தில் 63-வது ஸர்க்கமாக அமைவது ‘தசரதன் தான் முனிகுமாரனைக் கொன்றதைச் சொல்வது.

 சோகத்தால் புண்பட்ட மனதுடன் கவலையில் மூழ்கி இருந்த தசரதர் சிறிது கண் விழித்தார்.

அருகில் இருந்த கோசலையை நோக்கி முன்னர் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லலானார்.

‘”சப்தத்தைக் கொண்டே இலக்கை வீழ்த்துவார்’ என்று என்னைப் பற்றிப் பெருமையாகச் சொல்லப்பட்டது.

ஒரு சமயம் விலங்குகள் நீர் அருந்த வரும் சரயு நதியின் துறையில் எழுந்த ஒரு சப்தத்தைக் கேட்டேன். அது யானையுடையது என்று நினைத்து என் அம்பை விடுத்தேன். ஆனால் ‘ஹா, ஹா’ என்று நீரில் விழும் ஒரு மனிதன் எழுப்பும் சப்தத்தைக் கேட்டு அங்கு விரைந்தேன்.

அங்கு ஒரு ரிஷி குமாரன் என் அம்பால் அடிபட்டு ரத்த,ம் ஒழுக வீழ்ந்திருந்ததைக் கண்டேன்.

அவன் புலம்பியவாறே தன் தந்தை, தாய் இருக்குமிடத்தைச் செல்லும் வழியைக் காட்டி அவர்களிடம் நடந்ததைக் கூறுமாறு சொன்னான்.”

இயமேகபதி ராஜன்யதோ பிதுராஸ்ரம: |

தம் ப்ரஸாதய கத்வா த்வம் ந த்வாம் சங்குபித சபேத் ||

அயோத்யா காண்டம் 63-ம் ஸர்க்கம் ஸ்லோகம் 45

ராஜன் – அரசே!

மே – எனது

பிது: – தந்தையாருடைய

ஆஸ்ரம: – ஆசிரமமானது

யத: – எவ்விடத்தில் இருக்கிறதோ அதற்கு

இயம் – இதோ இருக்கும்

ஏகபதீ – ஒற்றையடிப்பாதை தான் வழி.

த்வம் – நீர்

தம் கத்வா – அங்கு சென்று

ப்ரஸாதய – அவரைச் சமாதானப்படுத்துவீராக.

சங்குபித: – பூரண கோபம் கொண்டவராய

த்வாம் – உம்மை

சபேத் ந – சபியாது இருப்பார்.

தன் தந்தையிடம் நடந்ததைச் சொன்னால் அவர் சபிக்காமல் இருப்பார் என்று முனி குமாரன் கூறுகிறான்.

சாபம் தரப்படவில்லை என்றாலும் சாபம் தரப்படக் கூடும் என்ற சந்தர்ப்பத்தை இந்த இடம் விளக்குகிறது.

செய்வதறியாது திகைத்த தசரதன் அவனது தந்தையைச் சந்தித்தான்.

முனி குமாரன் ஊகித்தபடி வருத்தப்பட்ட அவனது தந்தையார் சாபம் கொடுக்கத்தான் செய்தார்.

அதை அடுத்துப் பார்க்கலாம்.

**

Tamil Veda Tirukkural in Vishnu Sahasranama -4 (Post.13,321)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,321

Date uploaded in London – 9 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Sarvaadihi – Word No.99 in the VS

One who is the first cause of all elements.

The very first couplet/ Kural of Thiru Valluvar also says this,

Kural Verse 1 “A” is the first and source of all the letters. Even so is God Primordial the first and source of all the world.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.– Kural 1

Bhavad Gita 10-8 also says this,

अहं सर्वस्य प्रभवो मत्तसर्वं प्रवर्तते |
इति मत्वा भजन्ते मां बुधा भावसमन्विता||10- 8||

ahaṁ sarvasya prabhavo mattaḥ sarvaṁ pravartate
iti matvā bhajante māṁ budhā bhāva-samanvitāḥ

BG 10.8: I am the origin of all creation. Everything proceeds from Me. The wise who know this perfectly worship Me with great faith and devotion.

xxxx

Bhagavaan – Word Number 558

Lordliness, prowess, fame, beauty, knowledge, non-attachment- the combination of all these six attributes is Bhaga. One who possesses these six attributes is Bhagavaan– Vishnu Purana 6-5-74

This very word Bhagavan is in the very first couplet/Kural Aadhi Bhgavan

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.- 1

Aadhi Bhagavan is a pure Sanskrit word. Valluvar uses a lot of Sanskrit words. Over 600 out of 1330 Tamil couplets have Sanskrit words. More over neither Aadhi nor Bhavan is in one lakh words of Sangam Books. Some half baked anti Sanskrit gangs said that is the name of Valluvar’s parents. Even if one agrees with it, the words are not found in Sangam literature.

Vishnu Sahasranama has another word Aadhi deva-334. That also has the same meaning and it is found in later Divya Prabandham.

Linguists agree that Valluvar and his Tirukkural belong to fifth or sixth century CE. All Adhikaaras in the book has the Sanskrit word ADHIKAARA/chapter.

xxxxx

Sarva yoga -vinihsrtah -Word No.103 in the VS-

One who stands aside from all bondage.

Brhad Aaranyaka  Upanishad 4-3-15 says,

Asango hi ayam purusha- this purusah is without any attachment/

Tiru Valluvar uses the exact word /without any attachment/ stands aside from all bondage:

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு. — குறள் 350

The only attachment that will help to sever all other bonds and attachments, is the attachment to the Lord who is without any attachment.

Cling to the one who clings to nothing; And so clinging, cease to cling.

xxxx

Satya sandHah-510; Satyadharmaa-529; Satayah-212; Sataya paraakramah-213

Truth is God according to Hinduism. God is Truth and Truth is God. Word Satya/Trueth is attributed to God in 4 or 4 places . let us take one place.

Satyah (Word 212):

One who is embodied  as virtue of Truth.

Shankara quotes several scriptures to link God and Truth.

Tiru Valluvar has allocated one full chapter for Truth. In other chapters also he praised the virtue of Truth.

Valluvan was a great Sanskrit scholar. He has translated or adapted over 200 Sanskrit verses from various Hindu books .His use of DHAANAM and TAVAM together in many Kurals shoe he has mastered Bhagavad Gita.

When he praised Truth he used the words:

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்
செய் வாரின் தலை-295

If one is truthful in word and thought

It is better than doing penance/TAVAM and charity/DHAANAM—Kural 295.

****

He goes one step up than other sanskrit poets and says,

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று–297

If one speaks the Truth and only the Truth

He need not practise other rituals – Kural 297

****

He confirms it in another couplet,

Lamps do not give the light that holy men desire

It is in the light of Truth that illuminates their path- 299

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு- 299

This couplet equates Truth with God like the words in the VS.

More Translations of the above three couplets:

One who tells the truth, with all his heart, is ahead of those

who do  penance and charity-295

XXX

Not lying, not lying, if practiced, makes it acceptable

not to do, not to do other righteous deeds.   297

Not lying, if practiced unfailingly, makes it worthwhile

to refrain from not doing the righteous deeds.

XXX

All light is not light; for noble scholars,

truthfulness is the true light of enlightenment.-299

TO BE CONTINUED…………

 tags- Tamil Veda, Tirukkural,  Vishnu Sahasranama 4, satya, truth, Kural 1, Bhagavan, without attachment

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—42 (Post No.13,320)

வசம்பு

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,320

Date uploaded in London – 9 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

519.பிள்ளைகள் வயிற்று நோய்க்கு

வசம்பைச் சுட்டுக் கரியாக்கி முலைப்பாலில் இளைத்து நாவில் தடவினால் பிள்ளைகள் வயிற்று நோய் தீரும்.

xxxx

புண்களுக்கு

வல்லாரை இலையைப் பிடுங்கி வந்து பச்சையாகவே நன்றாய்  அரைத்து அதை ஈரத்துடன் புண்களின்மேல் வைத்துக் கட்டினால் 2,3 கட்டுகளில் ஆறிப்போகும் .

xxxx

கண்டமாலை- நாள்பட்ட மேகவியாதி -உடம்பு முழுதும் புண்  இதுகட்கு

வல்லாரை இலையை  வேண்டிய மட்டில்  பிடுங்கி வந்து கரணைகளைத் தள்ளி  இலையை மாத்திரம் குருக அரிந்து  ஒரு பயின்மேல் பரப்பி நிழலில் உலர்த்தி  வைத்து முற்றும் நன்றாய் உலர்ந்த பிறகுஇடித்து துணியில் வடிகட்டி வஸ்திரகாயம் செய்து புது கலயத்தில் போட்டு மூடிவைத்துக்கொள்ள வேண்டும் . 5 கிரையன் முதல் 8 கிரையன் வரை கொஞ்சம் வென்னீரிலாவது  பசும்பாலிலாவது கலந்து கொடுக்கவும். இப்படி ஒரு தினத்திற்கு மூன்று வேளை கொடுக்கவும். இப்படிக்கொடுத்து வரும்போது மேற்படி பொடியை புண்கள் பேரிலும் தூவிக்கொண்டு வரலாம்.  இப்படி ஒரே முறையாய் சில வாரங்கள் கொடுத்துவந்தால் வியாதிக்காரன் பல துன்பமும் நீங்கி  விசேஷ சுகமடைவான்.  ஒரு சமயம் உடம்பில் சொரியாவது நமையாவது கானுமாகில்  மருந்தை நிறுத்தி ஒரு பேதிக்கு கொடுத்து அதன் பிறகு ஒருவாரம் பொறுத்து  மறுபடியும் மருந்து கொடுத்துவரவும். இப்படியே தொடர்ந்து கொடுத்துவந்தால் குறிப்பான குணத்தைக்காணலாம் . இச்சூரணம் செய்யும்போது வெய்யிலில் சூடுகாட்டி உணர்த்தினால் மூலிகையின் சத்து போய்விடும். . ஆகையால் நிழலில் உலர்த்தி சூரணிக்க வேண்டும்.

xxxx

காணாக்கடி சொறி

வன்னி மரத்தின் சமூலத்தைப் பாலில் அரைத்துக் கலக்கியுண்டுவந்தால்  வாதம் ஜன்னி தோஷம் காணாக்கடி விஷம் கபம் சொறி இவை தீரும்.

xxxx

மருந்தீடு – தேக ஊரலுக்கு

வல்லாரை சமூலத்தைப் பாலில் அரைத்துக் கலக்கியுண்டுவந்தால்  இருமல் ஈளை மருந்தீடு , கைகாலில் உண்டாகும் ஊரல் நீங்கும். நெடுநாள் உ ண்டுவந்தால் நரைதிரை மாறும்.

xxxx

கிறந்தி  வண்டு  கடிக்கு

வக்கணத்தி மூலத்தைப் பாலில் அரைத்துக் கலக்கியுண்டுவந்தால் கிறந்தி  வண்டு  கடி சிலவிடம் கரப்பான் இவை தீரும் .

xxxx

ஆண்மையுண்டாகவும் தேக பலத்திற்கும்

வராகி மூலமென்ற நிலப்பனை கிழங்கை சூரணித்து  காய்ச்சிய பாலில் பிரயோகித்து உண்டுவந்தால் விந்து கட்டும் தாது உண்டாகும் ஆண்மை அதிகரிக்கும் தேகம் இருகும் .

xxxx

பல் வலிக்கு

வராகி மூலமென்ற நிலப்பனைக்  கிழங்கை   குப்பைமேனி சாற்றா ல் அரைத்து நல்லெண்ணெயில் கலக்கிக் காய்ச்சி பல் நோய்க்கு அந்தந்த பாகங்களில் துளித்துளியாய் விட்டால் பல் வலி  தீரும் புழுக்கள் சாகும்.

xxxx

கோசம் பூரிக்க

வராகிக்  கிழங்கும் பூமிசக்கரைக் கிழங்கும் பூனைக்காலி வித்தும் சமனிடை எடுத்து சூரணித்து பாலில் காய்ச்சியுண்டுவந்தால்  கோசம் பூரித்து விம்மும். விந்து காட்டும்.

xxxx

வயிற்றில் மரித்த பிள்ளைக்கு

வசம்பும் பெருங்காயமும் முலைப்பால் விட்டரைத்து ஆதி வயிற்றில் தடவினால் வயிற்ரிம் மரித்த பிள்ளை கீழே விழும் .

xxxx

வா

மேனியுண்டாக

வாலுவை அரிசியை சூரணித்தாவது . பால்விட்டரைத்தாவது பாலில் கலந்து உட் கொண்டு வந்தால் மேனியழகு உண்டாகும். சகல நோயும் தீரும்.

xxxx

கபம் மூலச் சூட்டிற்கு

வால் மிளகைச் சூரணித்து .திருகடியளவு பாலில் கலந்துண்டு வந்தால் கபம்- மூலச்சூடு- வேட்டை நீங்கும்.

xxxx

531. போகம் அதிகரிக்க

வாதுமைப் பருப்பைப் பாலில் கலந்து உட் கொண்டு வந்தால் போகம் அதிகரிக்கும். விந்து காட்டும். மேற்படி தைலத்தினால் கண் படலம் தீரும்.

–சுபம்—

Tags- முனிசாமி முதலியார் , மூலிகை அதிசயங்கள்  42, வல்லாரை, மூலிகை மர்மம், வசம்பு, வக்கணத்தி, நிலப்பனை கிழங்கு

அமெரிக்கா எங்கும் வால் மார்ட் கடைகளை நிறுவிய சாம் வால்டன்! – 2 (Post.13,319)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.319

Date uploaded in London – 9 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

5-6-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது

 அமெரிக்கா எங்கும் வால் மார்ட் கடைகளை நிறுவிய சாம் வால்டன்! – 2

                                         ச. நாகராஜன்

கடை அமைப்பு

சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள கடை அமைப்பு இது: (சான்பிரான்ஸிஸ்கோவில் அடிக்கடி வால்மார்ட் கடைக்குச் செல்வது இந்த கட்டுரை ஆசிரியரின் வழக்கம்)

மிக பிரம்மாண்டமான கடைக்குள் செக்யூரிட்டியைத் தாண்டி உள்ளே செல்லும் போதே தனக்கு வேண்டிய ட்ராலியை எடுத்துக் கொண்டு உள்ளே செல்லலாம். வெவ்வேறு பொருள்கள் அதற்குரிய அடையாள போர்டுடன் மிகச் சிறப்பான முறையில் வாடிக்கையாளர் தானே எடுத்துக்கொள்ளும்படி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

மளிகைப் பொருள்கள், பால், தயிர், வெண்ணெய் வகை பொருள்கள், கறிகாய்கள், பழங்கள், இறைச்சி வகைகள், எலக்ட்ரிக் சாதனங்கள், கணினிகள் மற்றும் அதன் உதவி சாதனங்கள், போன் வகைகள் என அங்கு இல்லாத பொருள்களே இல்லை என்று சொல்லும் அளவில் அனைத்தும் கிடைக்கும்.

அவற்றை எடுத்துக் கொண்டு பில் போடும் கவுண்டரில் பணத்தைக் கொடுத்து வெளியே பில்லுடன் வரலாம்.

ஒரு பொருளுக்கும் பில் போடாமல் வெளியே வர முடியாது. பில் போடாமல் வரும் பொருளுக்கு, செக்யூரிட்டிக்கு ‘க்விங் க்விங்’ எச்சரிக்கை ஒலியை அது தரும்.

வால்மார்ட் கடைக்குப் போவதில் அனவருக்கும் உள்ள ஒரு கஷ்டம் என்னவென்றால் அங்கு கார் பார்க்கிங்கிற்கு இடம் கிடைக்காது. ஆகவே வரிசையாக நின்று ஒரு கார் போனவுடன் அந்த இடத்தை உடனடியாக “பிடிக்க” வேண்டும்.

ஒரு பொருளை ஏதோ ஒரு காரணத்தால் பிடிக்கவில்லை என்றால் அதை அங்கே பில்லை எடுத்துக் கொண்டு சென்று காண்பித்து மாற்றிக் கொள்ளலாம்.

குடும்பம்

1943 பிப்ரவரி 14-ம் நாளன்று வாலண்டைன் தினத்தில் ஹெலன் ராப்ஸன் என்பவரை வால்டன் மணந்தார். அப்போது அவர் ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். இராணுவப் பணி காலத்தில் மட்டும் அவர் இரண்டு இடங்களில் 16 இடங்களுக்கு மாறி மாறிச் செல்ல வேண்டியிருந்தது.  கடைசி பணிக்களமாக அவருக்கு அமைந்தது சால்ட் லேக் சிடி ஆகும். அங்குள்ள நூலகத்திற்கு தினமும் மாலை வேளையில் சென்று சில்லறை வணிகம் சம்பந்தமான அனைத்துப் புத்தகங்களையும் படித்து முடித்தார்.

அவருக்கு மூன்று புதல்வர்களும் ஒரு புதல்வியும் உண்டு.

வால்டன் தம்பதியினருக்கு  சேவை மனப்பான்மை அதிகம். ஆகவே நல்ல காரியங்களுக்கு அவர்கள் தாராளமாக நன்கொடை வழங்க ஆரம்பித்தனர்.

மறைவு

ல்யூகேமியா வியாதியால் பாதிக்கப்பட்ட வால்டன் 1992-ல் ஏப்ரல் மாதம் 5-ம் நாள் தனது 74-ம் வயதில் மறைந்தார். ஒரு வகையான ரத்தப் புற்றுநோயால் பீடிக்கப்பட்டு அவர் இறந்த போது வால்மார்ட்டின் முப்பதாவது ஆண்டு விழாவிற்கு இன்னும் மூன்று மாதங்களே இருந்தன.

மருத்துவ மனையில் இருந்த போதும் கூட படுக்கையில் இருந்தவாறே அவர் தனது விற்பனைத் தரவை மதிப்பீடு செய்து கொண்டிருந்தார்.

அவரது மறைவு உடனடியாக சாடலைட்  மூலமாக அனைத்து வால்மார்ட் கடைகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

அவர் மறையும் போது வால்மார்ட்டில் வேலை பார்த்தோரின் எண்ணிக்கை நான்கு லட்சம்.  மொத்த வால்மார்ட் கடைகளின் எண்ணிக்கை 1960.  அப்போது வருடாந்திர விற்பனை 5000 கோடி டாலரைத் தாண்டி இருந்தது. (ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ 83.34). அவரது 1735 கடைகள், 212 சாம் கிளப்புகள் மற்றும் 13 சூப்பர் சென்டரில் வேலை பார்த்தோர் மட்டுமின்றி உலகமே அவரது மறைவிற்காக வருந்தியது.

அவரது அஸ்தி பெண்டோன்வில்லி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது உடைமைகள் அவரது மனைவிக்கும் மகன்கள் மற்றும் மகளுக்கும் உரிமை ஆயின.

விருதுகளும் பெற்ற சிறப்புகளும்

1998-ல் டைம்ஸ் பத்திரிகை அறிவித்த 20-ம் நூற்றாண்டில் தலை சிறந்த செல்வாக்கு பெற்றவர்களின் பட்டியலில் வால்டனும் இடம் பெற்றிருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்-ஷிடமிருந்து ‘பிரஸிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்’ விருதை அவர் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னால் பெற்றார்.

இது மட்டுமல்ல 1982 முதல் 1988 முடிய அமரிக்காவின் பணக்காரர்களில் முதல் இடத்தை அவர் வகித்திருந்தார்.

வால்மார்ட் அமெரிக்காவில் மட்டுமின்றி 15 வெளிநாடுகளிலும் கடைகளைக் கொண்டிருக்கிறது.

1970-ம் ஆண்டு பங்குச் சந்தையில் தனது பங்குகளை வால்மார்ட் அறிமுகப்படுதியது. அப்போது பங்குகளை பத்தாயிரம் டாலருக்கு வாங்கியோர் இன்று இரண்டாயிரம் லட்சம் டாலராக அது ஆகி இருப்பதைக் கண்டு மலைக்கின்றனர்; சந்தோஷப்படுகின்றனர். அது மட்டுமல்ல டிவிடெண்டாக அவர்களுக்கு நிறைய கிடைத்திருக்கிறது. (இப்போது வருடத்திற்கு 466000 டாலர்கள் என்ற அளவில் உள்ளது) 

வால்டனின் கொள்கையும் விதியும்

அவர் தனக்கென வகுத்துக் கொண்ட விதிகளும் கொள்கைகளும் தனி இடம் பெறுபவை.

அவற்றில் முக்கியமானவை சில:

“உங்கள் வாடிக்கையாளர்களை நன்கு அறிந்து கொள்ளுங்கள். குறிப்பாக அவர்கள் வாழ்க்கையில் நீங்கள் வகிக்கும் பங்கை நன்கு உணர்ந்து செயலாற்றுங்கள்.”

“நீங்கள் விற்கும் பொருள்களைப் பற்றி நன்கு அறிவதோடு அதை யார் விநியோகிக்கிறார்கள் என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு யார் போட்டியாக இருக்கிறார்கள் என்பதை நன்கு அறியுங்கள்.”

“உங்களிடம் வேலை பார்க்கும் ஒவ்வொரு பணியாளரையும் நன்கு மதிப்பதோடு அவர்களுக்கு உரிய பணத்தை சரியாக வழங்குங்கள்.”

“சரியான பொருளை சரியான விலையில் சரியான சமயத்தில் சரியான இடத்தில், சரியான அளவில் விற்பனை செய்யுங்கள். அவர்கள் தரும் பணத்திற்கு உரிய அவர்கள் விரும்பும் பொருள்களை வழங்குங்கள்”

உலகில் வணிகத்தில் வெற்றி பெற விரும்புவோருக்கு வால்டன் கூறும் அன்புரை இது:

சாதாரணமாக எளிய உழைக்கும் வர்க்கத்தில் உள்ள யாருக்கும் சரியான வாய்ப்பு கொடுத்து ஊக்குவிக்கப்பட்டு அவர்கள் செயலுக்கு உரிய ஊக்கப்பரிசும் கொடுக்கப்பட்டால் அவர்கள் முன்னேறுவதற்கு ஒரு எல்லைக்கோடு என்பதே கிடையாது. 

கடுமையான உழைப்பு, புதிய உத்திகள், வாடிக்கையாளர் திருப்தி ஆகிய இவையே வால்மார்ட் சங்கிலித் தொடர் கடைகளின் வெற்றிக்குக் காரணம் என்பதில் ஐயமில்லை!

***

Tamil Veda Tirukkural in Vishnu Sahasranama -3 (Post No.13,318)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,318

Date uploaded in London – 8 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Let us continue with Adi Shankara’s (aadi Sankara) commentary on VS and compare it with the Tamil Veda Tirukkural.

Sumukhah- Word Number in the Vishnu Sahasranama (VS)-456

One who with a pleasant face.

(This is the name of Ganapathy and a mysterious king mentioned in Manu smriti). Or He who,  as Rama (raama), bore a pleasant and contented face even when exiled to the forest.

Valmiki Ramayana says,2-19-32

na ca asya mahatiim lakShmiim raajya naasho apakarShati |
loka kaantasya kaantatvam shiita rashmer iva kShapaa || 2-19-32

As Rama was a pleasing personality, he was loved by all the people. The loss of kingdom could not diminish such a great splendour of Rama as a night cannot diminish the splendour of the moon.

sarvo hyabhijanaH shriimaan shriimataH satyavaadinaH |
naalakshayat raamasya ki.nchidaakaaramaanane || 2-19-36

The people adjacent to Rama could not visualise any change in the face of Rama who was dignified and truthful in his words.

uchitam cha mahaabaahurna jahau harshhamaatmanaH |
shaaradaH samudiirNaa.nshushchandrasteja ivaatmajam || 2-19-37

Rama did not lose his natural joy, as an autumnal moon with lofty rays does not lose its natural splendour.

Another great Tamil poet Kamban said Rama’s face looed like a painting of Lotus that was bloomed on that day.

Probably Rama followed what the Tamil poet Valluvar said,

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில்.–குறள் 621:

The ability to laugh at adversity, which is the best

Of all strategies ultimately to overcome it- kural 621

Another translation of the same couplet,

Smile, with patience, hopeful heart, in troublous hour;

Meet and so vanquish grief; nothing hath equal power.

English poet Carlyle said,

Wondrous is the spirit of cheerfulness

And its power of endurance

xxxx

Suhrut- Word Number 460 in the VS

One who helps without looking for any return. In the

Bhagavad Gita Lord Krishna says I am your FRIEND (Suhrut)

गतिर्भर्ता प्रभुसाक्षी निवासशरणं सुहृत् |
प्रभवप्रलयस्थानं निधानं बीजमव्ययम् || 9-18||

gatir bharta prabhuh sakshi nivasah sharanam suhrit
prabhavah pralayah sthanam nidhanam bijam avyayam

BG 9.18: I am the Supreme Goal of all living beings, and I am also their Sustainer, Master, Witness, Abode, Shelter, and Friend. I am the Origin, End, and Resting Place of creation; I am the Repository and Eternal Seed.

And valluvar says

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு– Kural 788

udukkai ilandhthavan kaipola aangkae
idukkan kalaivathaam natpu

Friendship hastens help in mishaps
Like hands picking up dress that slips.- Kural 788

Another version

As hand of him whose vesture slips away,
Friendship at once the coming grief will stay.

(True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garments loosened (before an assembly).

In the Bible the Proverbs 17,17 says,

A friend loveth at all times

And a brother is born for adversity.

XXXX

Samayajnah- Word Number 358 in the VS

One to whom the most worthy form of worship consists in the attitude of equality (SAMA).

We find this virtue in Bhagavd Gita and Tirukkural of Valluvar.

विद्याविनयसम्पन्ने ब्राह्मणे गवि हस्तिनि |
शुनि चैव श्वपाके च पण्डिता: समदर्शिन: || 5-18||

vidyā-vinaya-sampanne brāhmae gavi hastini
śhuni chaiva śhva-pāke cha paṇḍitā sama-darśhina

BG 5.18: The truly learned, with the eyes of divine knowledge, see with equal vision a Brahmin, a cow, an elephant, a dog, and a dog-eater.

Tiruvalluvar says,

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி.–குறள் 118:

To stand, like balance-rod that level hangs and rightly weighs,

With calm unbiassed equity of soul, is sages’ praise

Another version,

To hold the scales even and fair is the ornament

Of those, who seek perfection in their rectitude – 118

In one more couplet ,Valluvar says,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்-குறள் 972

All men are born equal , but distinctions arise only on the basis of performance

In the respective occupations they they take on

To be continued……………………………..

Tags- equality, Bhavad Gita, Kural, friend, Valluvar, Tirukkural, Vishnu Sahasranama, Carlyle

எவ்வெப்போது குளிக்க வேண்டும்? ஆரோக்கிய குறிப்புகள்-2 (Post No.13,317)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,317

Date uploaded in London – 8 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ஆசாரக்கோவை  நூல் சொல்லும் பயன்படும் ஆரோக்கிய குறிப்புகள் (Post No.13,300) ஜூன் மூன்றாம் தேதி வெளியானது. இது இரண்டாவது பகுதி

ஆசாரக்கோவை  நூல் சொல்லும் மேலும் சிலஆரோக்கிய குறிப்புகளைக் காண்போம் 

ஆசாரக்கோவை பாடல்கள்

பாடல் 46 : இல்லம் பொலியச் செய்வன

காட்டுக் களைந்து கலங்கழீஇ இல்லத்தை

ஆப்பிநீர் எங்கும் தெளித்துச் சிறுகாலை

நீர்ச்சால் கரகம் நிறைய மலரணிந்து

இல்லம் பொலிய அடுப்பிலுள் தீப்பெய்க

நல்ல துறல்வேண்டு வார்.

பொருள் :

நல்ல செல்வத்தை அடைய விரும்புபவர், அதிகாலையில் எழுந்து, பாத்திரங்களைக் கழுவி, வீட்டைப் பெருக்கி (பசுஞ்சாணம் தெளித்துத்) தூய்மை செய்து, குடங்களில் நீர் நிறைத்து, மலரணிந்து, இல்லம் விளங்கும்படி அடுப்பில் தீ மூட்டுதல் வேண்டும்.

என் கருத்து

இந்தப்பாடலை உற்று நோக்குவோம் உடலில் சுத்தம் தேவை ; பின்னர் நாம் வாழும் இடம் தூய்மையாக இருக்கவேண்டும் . அதுமட்டுமல்ல நாம் பயன்படுத்தும் பொருட்கள் சுத்தமாக இருக்கவேண்டும் . இது எல்லாவாற்றிற்கும் மேலாக பாசிட்டிவ் வைப்ஸ் positive vibrations இருக்கவேண்டும். ஆகையால் பெண்கள் மலரணிந்து வலம் வருவதோ சமையல் செய்வதோ அவர்களின் சுத்தத்தை அறிவித்து இந்த இடத்தில் நல்லெண்ண உணர்வுகளைப் பரப்பும் .

உலகத்தில் எந்தப்பிராணியின் மலமும் துர்  நாற்றத்தை வீசும்; கிருமிகளைப் பரப்பும். ஆனால் பசுமாட்டின் சாணிக்கும் மூத்திரத்துக்கும் கிருமிகளைக் கொல்லும் தன்மை  இருக்கிறது. அடுப்பு மற்றும் சமயல் அறையை மெழுகவும் வாசலைச் சுத்தப்படுத்தவும் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மாட்டுச் சாணத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

xxxx

பாடல் 57 : ஆரோக்கியம் வேண்டுவோர் செய்யக்கூடாது

பாழ்மனையும், தேவ குலனும், சுடுகாடும்,

ஊரில் வழியெழுந்த ஒற்றை முதுமரனும்,

தாமே தமியர் புகாஅர்; பகல் வளரார்;

நோயின்மை வேண்டு பவர்.

பொருள் :

நோயின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவர் பாழடைந்த வீடு, கோயில், சுடுகாடு, ஊரில்லாத இடத்தில் தனியே இருக்கும் முதுமரம், ஆகிய இடங்களுக்கு தான் மட்டும் தனியே போக மாட்டார். பகலில் உறங்க மாட்டார்.

XXXXX

பாடல் 10 : குளிக்க வேண்டிய பொழுதுகள்

தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை

உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது

வைகு துயிலோடு இணைவிழைச்சு கீழ்மக்கள்

மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும் ஐயுறா தாடுக நீர்.

பொருள் :

சந்தேகமின்றி உடனே நீராட வேண்டிய 10 பொழுதுகள் :

இறைவழிபாடு செய்வதற்கு முன்னரும், கெட்ட கனவு கண்டபின்னரும், அசுத்தப்பட்டபொழுதும், வாந்தியெடுத்த பொழுதும், மயிர்களைந்தபின்னரும், உணவுண்ணும் முன்னரும், மாலையில் தூங்கிய பின்னரும், ஆண்-பெண் சேர்க்கைக்கு பின்னரும், தூய்மையற்றவரை தொட்டபின்னரும், மலஜலம் கழித்த பின்னரும் அவசியம் குளிக்கவேண்டும்.

என் கருத்து

இதில் பெரும்பாலோருக்கு ஒப்புதல் இருக்கும். முடி வெட்டுதல் வாந்தி எடுத்தல், அசுத்தமானோரைத் தொடுதல்  ஆகியன என்ன கெடுதல்களை உண்டாகும் என்பது கோவிட் என்ற சீன வைரஸ்  நோய் உலகம் முழுதும் பல்லாயிரக் கணக்கானோரைக் கொன்று குவித்த பின்னர்தான் நமக்குப் புரிந்தது

xxxxx

பாடல் 12 : தவிர்க்க வேண்டிய சில

தலையுரைத்த எண்ணெயால் எவ்வுறுப்பும் தீண்டார்,

பிறருடுத்த மாசணியும் தீண்டார், செருப்புக்

குறையெனினும் கொள்ளார் இரந்து.

பொருள் :

தலையில் தேய்த்த எண்ணெயை வழித்து மற்ற உறுப்புகளில் தேய்க்கக் கூடாது. பிறர் உடுத்திய அழுக்கு ஆடைகளை தொடக்கூடாது. அவசரமான செயல் என்றாலும் பிறருடைய காலணிகளை அணிந்துசெல்லுதல் கூடாது.

என் கருத்து

இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் தூசி, புழுதி அதிகம் இருக்கும். தலையில் எண்ணைப் பசை இருப்பதால் அதிக அழுக்கு சேர்ந்து ஒட்டிக்கொள்ளும். எல்லோரும் தினமும் தலை முழுகுவ தும் இல்லை. அந்த சூழ்நிலையில்  தலையிலுள்ள எண்ணை உடலில் பட்டால் என்ன நிகழும் என்பது எல்லோரும் அறியக்கூடியதே. இந்தக் காலத்தில் பெண்களுக்கு மட்டும் நீண்ட கூந்தல் உளது; பாடலை எழுதிய காலத்தில் ஆண்களும் நீண்ட சடைகளுடன் இருந்தனர். நிலத்தில் உழும் விவசாயி முதல் கோவிலில் பூஜிக்கும் அர்ச்சகர் வரை எல்லோருக்கும் நீண்ட முடி இருந்தது. கோவிட் நோய் பரவியது முதல் இப்போது செருப்பு, பிறர் துணியினை யாரும் தொடுவதற்கு அஞ்சுவர்.

–subham—

Tags —ஆசாரக்கோவை பாடல்கள், ஆரோக்கிய குறிப்புகள்-2,

குளிக்கும் நேரங்கள்,  குளித்தல்

அமெரிக்கா எங்கும் வால் மார்ட் கடைகளை நிறுவிய சாம் வால்டன்! – 1 (Post No.13,316)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.316

Date uploaded in London – 8 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

5-6-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது

அமெரிக்கா எங்கும் வால் மார்ட் கடைகளை நிறுவிய சாம் வால்டன்! – 1

ச. நாகராஜன்

அமெரிக்காவில் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து அன்றாட வாழ்க்கையை நடத்தவே முடியாமல் தவியாய்த் தவித்த ஒருவர் பிரம்மாண்டமான கடைகளை நிறுவி நான்கு லட்சம் பேரை தன்னிடம் வேலைக்கு அமர்த்திய ஒரு அதிசய மனிதராக மாறினார், அவர் யார் தெரியுமா?

அவர் தான் வால்மார்ட் கடைகளை நிறுவிய சாம் வால்டன்!

பிறப்பும் இளமையும்

ஓக்லஹாமாவில், கிங்ஃபிஷரில் ஆண்டு 1918ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி தாமஸ் கிப்ஸன் வால்டன் என்பவருக்கும் நான்ஸி லீக்கும் சாமுவேல் மூர் வால்டன் மகனாகப் பிறந்தார். விவசாயத்தில் ஈடுபட்ட தந்தைக்கு வருமானம் சரியாக இல்லை. 1923-ல் ஒரு இன்ஶூரன்ஸ் கம்பெனியில் சேர்ந்த அவர் தனது தொழிலைக் கைவிட்டு விட்டு ஒவ்வொரு ஊராகச் செல்ல ஆரம்பித்தார்.  அப்போது அமெரிக்காவில் ‘க்ரேட் டெப்ரஷன்” என்று அனைவராலும் அறியப்படும் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது.

சாப்பிடவே வழியில்லை. குடும்பம் தவித்தது. அன்றாடச் செலவுக்கு பணம் வேண்டுமே! வால்டன் பசுமாட்டின் பாலைக் கறக்க ஆரம்பித்தார்.

கறந்த பாலை வாடிக்கையாளர்களுக்கு ‘டோர்- டெலிவரி’ செய்தார்.  அன்றாடம் பேப்பர் வாங்குபவர்களுக்கு நாளிதழ்களைக் கொண்டு சென்று கொடுத்தார். எந்த வேலை கிடைத்தாலும் அதைச் செய்ய ஆரம்பித்தார். ஒரு வழியாய் குடும்பச் செலவை சமாளித்தார்.

1929 முதல் 1939 முடிய இந்தப் பொருளாதார வீழ்ச்சி அமெரிக்காவைப் பெரிதும் பாதித்தது!

ஊர் ஊராகச் சென்ற குடும்பம் இப்போது கொலம்பியாவில் செட்டில் ஆனது. கொலம்பியாவில் தனது படிப்பை முடித்தார் வால்டன். பள்ளியில் , “பல்துறை திறமை வாய்ந்த பையன்” என்று அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பள்ளிப் படிப்பை முடித்த வால்டன் மிஸௌரி பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். படிப்புச் செலவிற்கு பல்வேறு சிறு சிறு வேலைகளைச் செய்யலானார். டேபிள்களை சுத்தம் செய்வது உள்ளிட்ட வேலைகளைச் செய்து பதிலாக உணவைப் பெற்றுக் கொண்டார்.

1940-ல் கல்லூரியில் தேறிய அவரை அனைவரும் நிரந்தர வகுப்புத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அந்த அளவுக்கு அவர் அனைவரிடமும் நல்ல பெயரை எடுத்தார்.

கடை ஆரம்பிக்கும் எண்ணம்

மாதம் 75 டாலர் சம்பளத்திற்கு ஒரு நிர்வாகப் பயிற்சி பெறும் பயிற்சியாளராக அவர் ஐயோவா நகரில் ஒரு நிறுவனத்தில் சேர்ந்தார். இரண்டாம் உலக மகாயுத்தம் வரவே 1942இல் இராணுவத்தில் சேர்ந்தார்.

அப்போது தான் அவருக்கு ஒரு கடை ஆரம்பித்தால் என்ன என்று தோன்றியது!

1945இல் இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்ட அவர் தனது மாமனாரிடமிருந்து 20000 டாலரைப் பெற்றார். தனது சேமிப்பாக இருந்த 5000 டாலரையும் சேர்த்து ஒரு கடையை அர்கான்ஸாஸில் நியூபோர்ட் என்ற இடத்தில் வாங்கினார். 26-ம் வயதில் அவர் ஆரம்பித்த முதல் கடை இது!

தனது வியாபாரத்தில் புதுப்புது உத்திகளைத் தொடர்ந்து அவர் புகுத்திக் கொண்டே இருந்தார். கடைகளை விரிவுபடுத்த ஆரம்பித்தார்.

அனைத்துப் பொருள்களும் அவர் கடையில் எப்போதும் இருக்கும்! விலை மிகவும் சரியாக இருக்கும்! வாடிக்கையாளர்களை வரவேற்று திருப்திப்படுத்தி அவர் அனுப்புவார்.

இதனால் மூன்றே ஆண்டுகளில் அவரது விற்பனை 80000 டாலரிலிருந்து 2,25,000 டாலராக ஆனது.

தனது கடையை அவருக்கு லீஸுக்குக் கொடுத்திருந்த பெரும் செல்வந்தரான ஹோம்ஸ் வால்டனின் வெற்றியைப் பார்த்து சற்று அதிர்ச்சி அடைந்தார் .லீஸை புதுப்பிக்க மறுத்தார். இது வால்டனுக்கு வணிகத்தில் முதல் பாடமாக அமைந்தது. தானே ஒரு சொந்தக் கடையை பெண்டன்வில்லி என்ற இடத்தில் ஆரம்பித்தார்.

ஏராளமான போட்டிகளைச் சமாளிக்க வேண்டி இருந்தது. ஆகவே கடையின் மீது கவனம் செலுத்துவதே அவரது 24 மணி நேர வேலையாக ஆனது.

முதல் வால்மார்ட் கடை

1962, ஜூலை மாதம் இரண்டாம் நாள் அர்கான்ஸாஸில் ரோஜர்ஸ் என்னுமிடத்தில் முதல் வால்மார்ட் கடை அதே பெயருடன் தொடங்கப்பட்டது. ஒரே இடத்தில் அனைத்துப் பொருள்களையும் எந்த வாடிக்கையாளரும் பெற வேண்டும் என்ற கொள்கையுடன் அனைத்துப் பொருள்களையும் அவர் கடையில் அற்புதமான அடுக்கி வைக்கும் முறையைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்தார்.

ஒவ்வொரு சிறு சிறு நகரத்திலும் கடைகளைத் திறக்க ஆரம்பித்தார்.

கடைகளில் பொருள்கள் தீரத் தீர உடனடியாக அதை நிரப்ப நிறைய சேமிப்புக் கிடங்குகளையும் அவர் தொடங்கினார். விலையில் சிறப்புத் தள்ளுபடி முறையையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

1977-ல் 190 கடைகள் இருந்தன. அதுவே 1985-ல் 800-ஆக வளர்ந்தது.

இந்த வெற்றியைப் பார்த்த அனைவரும் இதை ‘வால்மார்ட்- எஃபெக்ட்”

(“வால்மார்ட் விளைவு”) என்று கூற ஆரம்பித்தனர்.

ஆறு லட்சம் என்ற பெரும் எண்ணிக்கையில் விற்பனையை அமெரிக்காவில் மட்டும் வால்மார்ட் செய்கிறது. ஒவ்வொரு விற்பனையையும் வாடிக்கையாளர் திருப்தியுறும் வகையில் அது மிக்க மரியாதையுடனும் மதிப்புடனும் செய்கிறது.

**

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-2 (Post No.13,314)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,314

Date uploaded in London – 7 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

முதல் பகுதி நேற்று 6-4-2024 வெளியாகியது.

விஷ்ணு சஹஸ்ரநாம (வி.ச.)த்திலுள்ள அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்களை  தொடர்ந்து  காண்போம்.

அத்புத -நாமத்தின் எண் 895

அற்புதமாய்த் திகழ்பவர் .

கேனோபநிஷத்திலிருந்து 1-2-7 சங்கரர் மேற்கோள் காட்டுகிறார்

ஸ்ரவணாயாபி பஹுபிர் யோ ந லப்யஹ

ஸ்ரவந்தோபி  பஹவோ யம்  ந வியூஹ்

ஆச்சர்யோ வக்தா குசலாஸ்ய லப்தா

ஆச்சர்யோ ஞாதா  குசலானுஸிஸ்தஹ

பொருள்

பலர் இதைப் பற்றி கேட்டதே இல்லை;

பலர் இதைப் பற்றிக்  கேட்டும் புரிந்துகொண்டதில்லை ;

இதைப் பற்றி ஒருவர் பேசுவதே ஆஸ்ச்சர்யமானது ;

உயர்ந்த மனிதன் ஒருவனே இதை அடையமுடிகிறது .

என் கருத்து

பகவத் கீதையும் இதை இன்னும் எளிய நடையில் உரைக்கிறது.

आश्चर्यवत्पश्यति कश्चिदेन

माश्चर्यवद्वदति तथैव चान्य: |

आश्चर्यवच्चैनमन्य: शृ्णोति

श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित् ||2- 29||

āśhcharya-vat paśhyati kaśhchid enan
āśhcharya-vad vadati tathaiva chānyaḥ
āśhcharya-vach chainam anyaḥ śhṛiṇoti
śhrutvāpyenaṁ veda na chaiva kaśhchit B.G.2-29

ஆஸ்²சர்யவத்பஸ்²யதி கஸ்²சிதே³நமாஸ்²சர்யவத்³வத³தி ததை²வ சாந்ய:|

ஆஸ்²சர்யவச்சைநமந்ய: ஸ்²ருணோதி ஸ்²ருத்வாऽப்யேநம் வேத³ ந சைவ கஸ்²சித் ||2-29||

கஸ்²சித் ஏநம் = யாரோ ஒருவன்

ஆஸ்²சர்யவத் பஸ்²யதி = ஆச்சர்யத்துடன்  காண்கிறான்

ஆஸ்²சர்யவத் வத³தி = ஆச்சர்யத்துடன் ஒருவன் சொல்கிறான்

ஆஸ்²சர்யவத் அந்ய ஸ்²ருணோதி = ஆச்சர்யமாக  ஒருவன் கேட்கிறான்

கஸ்²சித் ஸ்²ருத்வா அபி ஏநம் ந ஏவ வேத³ = கேட்கினும் இதனை அறிந்தவன் எவனும் இலன்

இந்த ஆத்மாவை, ஒருவன் காண்தே , வியப்பானது ; இதைப்பற்றி  ஒருவன் சொல்லுவதும் ,ஆச்சர்யமானதே  ஆச்சர்யமாக எவனோ ஒருவன்  கேட்கிறான், கேட்கினும், ஆயினும் இதனை அறிவான் எவனுமிலன்.”

ஆதிசங்கரர் எழுதிய விவேக சூடாமணியிலும் இதை வலியுறுத்துகிறார்

ஜந்தூனாம் நரஜன்ம துர்லபம் அதஹ பும்ஸ்த்வம் ததோ விப்ரா

தஸ்மாத் வைதி கதர்மமார்க்கபரதா வித்வத்வம் அஸ்மாத் பரம்

ஆத்மாநாத்ம விவேசனம் ஸ்வனு பவோ ப்ரஹமாத்மனா ஸம்ஸ்திர்

முக்திர் னோ சத கோடி ஜன்ம ஷு க்ருதைஹி புண்யைர் வினா லப்யதே

–விவேக சூடாமணி, ஸ்லோகம் 2

जन्तूनां नरजन्म दुर्लभमतः पुंस्त्वं ततो विप्रता तस्माद्वैदिकधर्ममार्गपरता  विद्वत्त्वमस्मात्परम्।

आत्मानात्मविवेचनं स्वनुभवो ब्रह्मात्मना संस्थिति- र्मुक्तिर्नो शतकोटिजन्मसु कृतैः पुण्यैर्विना लभ्यते।। VIVEKA CHUDAMANI -2 ।

jantUnAm narajanma durlabham atah pumstvam tato vipratA

tasmad vaidikadharmamArgaparatA vidvatvam asmAt param|

AtmAnAtmavivecanam svanubhavo brahmAtmanA samstitih

muktirno satakotijanmasu krtaih: punyairvinA labhyate||

பொருள்

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது; அதிலும் ஆண்மகனாகப் பிறத்தல் அரிது;

அதிலும் பிரம்மத்தையே நாடும் பிராமணனாகப் பிறத்தல் அரிது;

அதிலும் வேதம் சொல்லும் தர்மத்தைப் பின்பற்றுதல் அரிது;

அந்த தர்மத்தைப் புரிந்துகொண்டு ஆத்மா எது அதற்குப் புறம்பானது எது என்ற விவேகத்தை அடைவது அரிது.

தியானம் செய்து சொந்த அனுபவத்தினால் பிரம்மா நிலையை அடைந்து முக்தியை அடைவது என்பது

நூறு கோடி ஜன்மத்தில் அடைந்த புண்ணியத்தால் மட்டுமே கிடைக்கக்கூடியது.

XXXXX

சநாத் – நாமத்தின் எண் 896

அநாதியான கால ரூபியாக இருப்பவர் . விஷ்ணு புராணம் 1-2-15 சொல்கிறது,

பரஸ்ய ப்ரஹ்மணோ  ரூபம் புருஷஹ பிரமம் த்விஜ

வ்யக்தாவ்யக்தே தாதிவானியே ரூபே காலஸ்ததா  பரம்

விஷ்ணு புராணம் – 1-2-15

பொருள்

புண்யவான்களே ! பரம்பொருளின் முதல் தோற்றம் புருஷன் ; பின்னர் அது விவேகமானது விவே கமற்றது என்று பிரிந்தது .மஹாதத்வம் முதலியன இவற்றின் வே றுபாடுகளே ; காலம் என்பதும் அவன் தோற்றுவித்ததே .

காலம் என்பது நம்முடைய நாலாவது பரிமாணம்; அது இல்லாமல் எதையும் பிரித்துப் பேசமுடியாது என்பதை சமீப காலத்தில்தான் ஐன்ஸ்ட்டின் சொன்னார்.அதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்களுக்கு அது தெரியும்.

XXXX

பணஹ — நாமத்தின் எண் 958

பண என்றால் வணிக பரிமாற்றம் .

தைத்ரீய ஆரண்யகம் தரும் ஸ்லோகம் 1-2-7; புருஷ சூக்தத்திலும் உளது

சர்வாணி  ரூபாணி விசித்ய தீரஹ

நாமானி க்ருத்வா அபிவதன் யதாஸ்தே –

எல்லா புண்ணிய கர்மங்களையும் பணமாக ஏற்றுக்கொண்டு அவற்றைச் செய்தற்கு உரிய பலனைத் தருபவர்

எல்லாவற்றையும் சிந்தித்த இறைவன் அவைகளுக்குப் பெயர் சூட்டினான்.அதே பெயர்களால் அவை அழைக்கப்டுகின்றன

என் கருத்து

பணம் என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல் வணிக என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுடன் தொடர்புடையது (ப= வ இடமாற்றம்)

ஆங்கிலத்திலுள்ள மணி (பணம்) என்ற சொல்லும் ஸம்ஸ்க்ருத்த்திலிருந்து வந்ததே (ப-ம, ப-வ இடமாற்றம் மொழியியலில் உண்டு)

xxxx

ஸமஹ  – நாமத்தின் எண் 581

அனைத்தையும் அடக்குபவர்  அல்லது அடக்கத்தை உபதேசிப்பவர் .

யதீநாம் ப்ரஸமோ  தர்மோ நியமோ வன வாஸினாம்

தானமேவ க்ருஹஸ்தானாம்  ஸுஸ்ருஷா பிரம்மசாரினாம்

பொருள்

சன்யாசிகளுக்கு தர்மம் (கடைபிடிக்கவேண்டிய குணம்)- மன அடக்கம்;

வானப்ரஸ்தம் கடைப்பிடிப்போருக்கு தர்மம்  தவம்;

இல்லறத்தாருக்கு தர்மம் தான தர்மம் செய்வதாகும்;

பிரம்மசாரிகளுக்கு  தர்மம் பணிவிடை செய்வதே என்று ஸ்ம்ருதி (சட்ட நூல்) சொல்கிறது.

xxxx

விஷ்ணு – 657

எங்கும் வியாபித்து இருப்பவர்

மஹாபாரதம் சாந்தி பர்வம் 350-40-49 சொல்வதாவது,

வியாப்ய மே ரோதசி  பார்த்த காந்திர் அப்யதிகா ஸ்திதா

க்ரமனாத் வ்யாபியஹம் பார்த்த விஷ்ணு இதி அபிசம்ஞிதஹ

பொருள்

குந்தீ புத்திரனே ! என்னுடைய ஒளி ஆகாயத்தையும் பூமியையும் வியாபித்து இருப்பதனாலும் என்னுடைய பாதத்தினால் உலகத்தை ஆக்ரமிப்பதனாலும் நான் விஷ்ணுவென்று அழைக்கப்படுகிறேன்.

(விஷ்ணு என்பது சங்கத் தமிழ் இலக்கியத்தில் விண்ணன் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது ;

விண்ணந்தாயன் = விஷ்ணு தாசன்; கண்ணந்தாயன் = கண்ணதாசன் )

To be continued……………………………….

Tags-விஷ்ணு சஹஸ்ரநாம ,அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள், Part-2, விஷ்ணு

Tamil Veda Tirukkural in Vishnu Sahasranama -2 (Post No.13,315)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,315

Date uploaded in London – 7 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 First part was posted here yesterday.

Uttaaranah- Word No.923

One who takes beings over to the other shore of the ocean of Samsaara.

This is a typical Hindu phrase- crossing the ocean of the Cycle of Birth and Death (Samsara).

Jains and Buddhists and Sikhs also follow this tenet.

Jains use the word Tirthankara for their saints or Gurus.

The word tirthankara signifies the founder of a tirtha, a fordable passage across saṃsāra, the sea of interminable birth and death.

Tiruvalluvar, author of Tamil Veda Tirukkural used the exact wrds of Adi Shankara. Here it is:

None can swim the great sea of births but those who are united to the feet of God.

This is in all Hindu Bhajan songs.

Piravip Perungatal Neendhuvar Neendhaar

Iraivan Adiseraathaar- Kural couplet 10

குறள் 10:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

This is in all Hindu Bhajan songs. Only Hindus call this birth and death a disease. Because of this doctrine

Rudram in Yajur Veda, V.S. part of Mahabharata called God as Bishak/Doctor and the medicine He gives as Besajam.

Adi Shankara (aadi) also mentioned it in his famous hymn Bhaja Govindam :

“Being born again, dying again, and again lying in the mother’s womb; this samsara is extremely difficult to cross over. Save me, O destroyer of Mura, through your infinite compassion.”

पुनरपि जननं पुनरपि मरणं,पुनरपि जननी जठरे शयनम्।
इह संसारे बहुदुस्तारे,कृपयाऽपारे पाहि मुरारे ॥२१॥
punarapi jananam punarapi maranam punarapi janani jathare sayanam,
iha samsare bahudusare krpaya’pare pahi murare – 21

xxxx

Taarah – Word No.968

One who helps Jiivas to go across the ocean of Samsara. Or it signifies Pranava (Om) with which the deity is one.

xxx

Niyantaa-  Word No.864

One who appoints everyone to his respective duties.

When a country elects its Prime Minister or President that person only appoints ministers  to different departments knowing their capacity and knowledge. God also gives us what we deserve.

In Hindu literature, in Sanskrit and Tamil, the king is celebrated as God . In fact the word God and his Palace are interchangeable.

Tiru Valluvar also considered the King as God. It is evident in several Kurals. He even talks about miracles in the land of a just king. About allocating duties Valluvar says,

“Having examined and decided that this job could be competently done, with these means

By this person, he may be left free to do it on his own.”

 குறள் 517:

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.- Kural 517

To be continued……………………………………….

 tags- Tamil Veda ,Tirukkural,  Vishnu Sahasranama, part -2  , Samsara, ocean, crossing, Punarapi Jananam, allocation of duty, Valluvar