தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்-குடிபோதை – 1 (Post.13,641)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,641

Date uploaded in London – 7 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

சான்றோர்கள், ஆன்றோர்கள் ஒரே மாதிரி சிந்திப்போப்பார்கள் என்பது முது மொழி; அது மட்டுமல்ல உண்மைக் கவிஞர்களுக்கு – உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளிஉண்டாகும் என்பது பாரதியார் கண்ட உண்மை ;இதை அவரது பாடல்களிலும் வள்ளுவன் குறளிலும் , கம்பன் கவிதையிலும்; ரிக் வேத முனிவர்கள் வாக்கினிலும் காண்கிறோம். ஷேக்ஸ்பியர் நமக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் வளைந்த கவிஞர்; நடக்க ஆசிரியர்; 37 நாடகங்களையும் நூற்றுக்கு மேலாண் அங்ககீழாக் கவிகளையும் இயற்றி இங்கிலாந்தில் இருந்து கொண்டு ஆங்கில மொழியின் புகழைப் பரப்பினார்; நம் நாட்டுக்கு கவிஞர்களையோ ஆளோ அவரை விட பல் நூற்று அல்லது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள். ஆனால் நாம் தமிழ் மொழியையு சம்ஸ்க்ருத மொழியையும் உலகம் முழுதும் பரப்பவில்லை; அதனால் நாம் புகழ் திக்கெட்டும் பரவவில்லை.நிற்க.

 இப்போதாவது அவர் 500 ஆண்டுக்கு முன் செப்பியதை நான் அதற்கு முன்னரே செப்பிவிட்டோம் ன்பதைப் பகர்வோம்; எல்லோருடனும் அதைப் பகிர்வோம் .

 குடி குடியைக் கெடுக்கும் என்பதை எல்லோரும் அறிவர் ; குடி குட்டி இரண்டும் வேண்டாம் என்று வள்ளுவன் சொல்லுவான்; மது, மாது ஆகிய இரண்டும் திருவை நீக்கும்

 இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திருநீக்கப் பட்டார் தொடர்பு.–குறள் 920

இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.

For those forsaken, misfortune’s device

Is double faced women, drink and dice-  Kural 920

Or

Prostitutes ,liquor and gambling  are the friends of those who have been forsaken by the Goddess of Wealth (Lakshmi)-920

or

Women of double minds, strong drink, and dice; to these giv’n o’er,

Are those on whom the light of Fortune shines no more.920

****

ஷேக்ஸ்பியர் நாடகங்கள்

And Shakespeare says

“Olivia:   What’s a drunken man like, fool?

Clown:   Like a drowned man, a fool and a mad man: one draught above heat makes him a fool; the second mads him; and a third drowns him.”

– Twelfth Night, or What You Will (1.5.120-124)

“Olivia:   What’s a drunken man like, fool?

Clown:   Like a drowned man, a fool and a mad man: one draught above heat makes him a fool; the second mads him; and a third drowns him.”

– Twelfth Night, or What You Will (1.5.120-124)

ஒலிவியா – முட்டாள் ! குடிகாரன் எப்படிடா இருப்பான் ?

கோமாளி பதில்- மூழ்கிப்போனவன் போல கதைப்பான்; முட்டாள் ; பைத்தியக்கார பயல். ஒரு மொந்தை கூடினால் முட்டாள் ஆகிவிடுவான் ; இன்னும் ஒரு மடக்கு, பைத்தியம் ஆகி விடுவான் மூன்றாவது டோஸ் ; ஆள் முழுகிப்போவான்.

****

கம்ப ராமாயணத்தில் குடித்துக் கெட்டுப்போன சுக்ரீவனும் இதை யே சொல்லி அழுகிறான்

கம்பன் அதை சுக்ரீவன் வாயிலாக கிட்கிந்தாக் காண்டத்தில் வழங்கும் பாங்கு படித்துச் சுவைக்க வேண்டியது.

வஞ்சமும் களவும் பொய்யும் மயக்கமும் மரபில் கொட்பும்

தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும் களிப்பும் தாக்கும்

கஞ்ச மெல்லணங்கும் தீரும் கள்ளினால் அருந்தினாரை

நஞ்சமும் கொல்வதல்லால் நரகினை நல்காதன்றே 

பொருள்:-

குடித்தால் வஞ்சனை,  திருடுதல்,  பொய் கூறல், அறியாமை, மாறான கொள்கை, அடைக்கலம் அடைந்தோரை கைவிடுதல், செருக்கு,  ஆகியன வருத்தும். அதே நேரத்தில் தாமரை மகளும் (லெட்சுமி) நீங்கிவிடுவாள் நஞ்சைச் சாப்பிட்டால் உடல் மட்டும் அழியும். இதுவோ உடலையும் அழித்து ஆளை நரகத்திலும் தள்ளும்.

****

டெம்ப்ஸ்ட் TEMPEST நாடகத்தில் ஏரியல் குடிகார காட்சியை பிரஸ்ஸ்பெரோவிடம் வருணிக்கிறது; குடிகாரர்கள் கைகளால் காற்றினை அடித்து மூச்சு விட்டனர் என்கிறார் ஷேக்ஸ் பி யர்.

 PROSPERO

170   Say again, where didst thou leave these varlets?170. varlets: ruffians, rascals.

      ARIEL

171   I told you, sir, they were red-hot with drinking;

172   So full of valor that they smote the air

173   For breathing in their faces; beat the ground

174   For kissing of their feet; yet always bending

****

ஒதெல்லோ நாடகத்திலும் ஷேக்ஸ்பியர் குடிக்கும் காட்சிகளை வருணிக்கிறார் .

காசியோ சொல்கிறான் நன் குடிகாரன் என்று நினைத்து விடாதீர்கள் ; இதோ பாருங்கள் இது என் வலது கை ;இது என் இட து கை; நன்றாக நிற்கிறேன்; நன றாகப் பேசுகிறேன் ( குடித்தால் இதைச் செய்ய முடியாது என்பது பொருள்)

 காசியோ  Ay, but, by your leave, not before me. The

Lieutenant is to be saved before the Ancient. Let’s

have no more of this. Let’s to our affairs. God

forgive us our sins! Gentlemen, let’s look to our

business. Do not think, gentlemen, I am drunk. This

is my ancient, this is my right hand, and this is my

left. I am not drunk now. I can stand well enough,

and I speak well enough. OTHELLO act II

*****

ஒரு குடிகாரன் எப்படி நடப்பான் என்பதை மீண்டும் வருணிக்கிறார்; உளறுவான்; கிளி போல சொன்னதையே திரும்பிச் சொல்லுவான்; பெரிய பிரசங்கி போல நடிப்பான் ; தன்னுடைய நிழலுடன் (எதிரி என்று நினைத்து)  சண்டை போடுவான் ; ஒதெல்லோ நாடகத்தில் இது போல குடி பற்றி நிறைய வசனங்கள் உள்ளன

 CASIO  I will rather sue to be despised than to deceive

so good a commander with so slight, so drunken,

and so indiscreet an officer. Drunk? And speak

parrot? And squabble? Swagger? Swear? And discourse

fustian with one’s own shadow? O thou

invisible spirit of wine, if thou hast no name to be

known by, let us call thee devil! –OTHELLO ACT II, SCENE III

****

FROM TIRUKKURAL

School girl crying over her drunken dad.

வள்ளுவனோ இதற்காக பத்து குறள்களை ஒதுக்கி எல்லோரையும் எச்சரிக்கிறான்

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

சான்றோர் முகத்துக் களி.-923

Even the mother’s face feel painful at the sight of the drunkard’s joy.  How then would the wise look at him ?- 923

Or

The drunkard’s joy is sorrow to his mother’s eyes;

What must it be in presence of the truly wise?.923

XXXX

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.–குறள் 926

The sleeping and the dead  are in no way different; those that drink are always like them that eat poison -926

Or

English Couplet 926:

Sleepers are as the dead, no otherwise they seem;

Who drink intoxicating draughts, they poison quaff, we deem.

XXXX

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்

எண்ணப் படவேண்டா தார்.-922

English Couplet 922:

Drink not inebriating draught. Let him count well the cost.

Who drinks, by drinking, all good men’s esteem is lost.-922

Or

Let none take to the drinking habit, except those who do not value,

Their reputation , and esteem among the righteous – 922

XXXX

ராமநாடக கீர்த்தனையில் அருணாசலக் கவிராயர் இதை அழகாக நாட்டுப்புற மெட்டில் தருகிறார்.

ராம நாடக கீர்த்தனைகள் – அருணாசல கவிராயர்

சுக்கிரீவன் மதுபானத்தை நிந்தித்தல்

கொச்சகம்-1

சாமி இந்தப் படியுரைக்கத் தம்பியும் கிஷ்கிந்தையிற் போய்

ஆமனுமான் தாரையைக் கண்டது சொன்னான் அவராலே

கோமகன் சுக்ரீவன் இளங்குமரன் வரவறிந்து கெட்டேன்

மாமதுஉண் டென்றுரைவான் சொல்லிக் கரைவானே

புன்னாகவராளிராகம்       ;                 அடதாளசாப்பு

பல்லவி

         மதுவே-உன்னாற்கெட்ட திதுவே

அநுபல்லவி

     புதுமை நான்பாவ சுக்கிரீவன் எய்த

     பூமிதந்தானுக்குச் சாமிதுரோகம் செய்த                 (மது)

சரணங்கள்

1. சாமிஎன்றங்கதன் கூவிஎனைத்              தட்ட

     தொட்டதும் விட்டதும் நானறியேன்       முட்ட

  பாமரனாய் உன்னைக் குடித்தேனே          பொட்ட

     பஞ்சமா பாதகன் ஆனேன்கடை          கெட்ட      (மது)

2. பித்தாம் உடம்புக்கு மத்தும்                புறப்படும்

     பெண்என்றும் தாயென்றும் தெரியாம      லேவிடும்

  குத்திரம் ஆம் நரகத்தினி                  லேயிடும்

     குடித்தவன் அடுத்தவன் எடுத்தவனும்      கெடும்      (மது)

3. குன்றாத வாலியை வென்று                பிறந்தேனே

     கோதண்ட தீக்ஷாகுருவாற்              சிறந்தேனே

  ஒன்றா அவன்செய்த நன்றி                துறந்தேனே

     உன்னைக் குடித்தேனே என்னை         மறந்தேனே   (மது)

4. வையகம்தந்து மதிதந்                    தெனையாள

     வைத்தானை எண்ணாமல் வைத்தாய் பழிமூள

  ஐயையோ நான்சொன் காலஞ்சற்      றேநீள

     ஆகாமற் போனேனே ஓகோ சண்டாள               (மது)

ஒருவன் குடித்துவிட்டால் எதிரே உள்ள பெண்கள் எல்லாம் அனுபவிக்க வேண்டிய பொருள் என்று நினைத்து விடுகிறான்.

–subham—

TAGS–தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில், ஷேக்ஸ்பியர், பொன்மொழிகள்- 1, குடி , மது, கள் , கம்பன், சுக்ரீவன், அருணாசல கவிராயர், கம்பன் ஒதெல்லோ, டெம்பஸ்ட் , டவெல்ப்த்  நைட் , நாடகம்

Leave a comment

Leave a comment