விசித்திர கோவில்! ஒரு புறம் பெருமாள் !மறுபுறம் மோகினி! –Part 30 (Post.13,643)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,643

Date uploaded in London – 8 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

ஜகன்மோகினி  கேசவர் கோவில்:  ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்—Part 30

விசித்திர கோவில்! ஒரு புறம் பெருமாள்! மறுபுறம் மோகினி! ஜகன்மோகினி  கேசவர் கோவில்:  ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்-30

ஆந்திரப் பிரதேசத்தில் ராஜ மஹேந்திரபுரம் /ராஜமுந்திரி அருகிலுள்ள ரயலி மஹாவிஷ்ணு-ஜகன்மோகினி கோவில் ஒரு விசித்திரமான– வேறு எங்கும் இல்லாத புதுமையான— கருங்கல் சிற்பம் உடைய கோவில் ஆகும் .

எங்கே உள்ளது?

ரயலி மஹாவிஷ்ணு-ஜகன்மோகினி கோவில்

ராஜமஹேந்திரபுரத்திலிருந்து 40 கி.மீ.

காகிநாடாவிலிருந்து 74 கி.மீ.

அமலாபுரத்திலிருந்து 34 கி.மீ.

கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள இந்த ஸ்தலம் கோதாவரி நதியின் உபநதிகளான வசிஷ்ட ஆற்றுக்குக்கும் ,கெளதமி ஆற்றுக்கும் இடையே இருக்கிறது.

என்ன அதிசயம் ?

கருங்கல்லிலான சிலையில் ஒரு புறம் மஹாவிஷ்ணுவும்/கேசவ சுவாமி,  மறுபுறம் ஜகன்மோகினியும் இருப்பது ஒரு அற்புதம் ஆகும். அதில் சிற்பியின் மகத்தான கைவண்ணத்தைக் காணலாம். சிலை மிகவும் பெரியது  சுமார் இரண்டு மீட்டர் உயரம் ! ஐந்து அடி உயரம் , மூன்று அடி அகலம்!

ஆணும் பெண்ணும் ஒரே கல்லில் எதிர் எதிர் புறம் இருக்கின்றன.

சங்கரநாராயணர், அர்த்த நாரீ ஸ்வரர் போன்ற சிலைகளில் ஒரே புறத்தில் ஆண் பெண் உருவங்கள் இருக்கும். இது அப்படியல்ல.

ஏன் இந்த வடிவம்?

தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்த கதை தெரியாத இந்து இல்லை.அப்போது அசுரர்களை ஏமாற்ற மஹாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். அவர் எடுத்த ஒரே பெண் வடிவ அவதாரம் மோகினி. அசுரர்கள் காம வயப்பட்டு அமிர்தத்தை இழந்தனர். சிவனை ஏமாற்றிய பஸ்மாசுரனை , மோகினி தனது தந்திரத்தால் அழித்தாள் ; சிவனுக்கு மோகினி மேல் காதல் ஏற்படவே ஐயப்பன் /சாஸ்தா பிறந்தார் . அந்த மோகினி இங்கே ஒரே கல்லிலான தத்ரூப சிற்ப  வடிவத்தில் உள்ளார்.

விக்ரமதேவன் என்ற மன்னர் கனவில் , விஷ்ணு வேண்டிக்கொண்டதன் பேரில் இங்கே கோவில் கட்டப்பட்டது . சிலையும், கனவில் கண்டபடி பூமிக்கு அடியிலிருந்து கிடைத்ததாக தல வரலாறு மொழிகிறது.

சிலையின் அழகு

கேசவ சுவாமி என்னும் மஹா விஷ்ணு நான்கு கைகளுடன் காட்சி தருகிறார். சங்கு சக்கரம் இரண்டு கைகளில்; மந்தர மலையும் கதையும் மேலும் இரண்டு கைகளில். .

சிலையின் மறுபுறத்தில் மோகினியின் உருவம் பெண்களுக்கே உரித்தான முடி அழகுடன் உள்ளார்

கேசவரைச் சுற்றி நாரதர், தும்புரு, கின்னர தேவர்கள், ஆதி சேஷன் ஸ்ரீதேவி பூதேவி உருவங்களையும் காணலாம்.

மேலும் ஒரு சிறப்பு

பெருமாளின் பாதங்களிலிருந்து எப்போதும் தீர்த்தம் வருகிறது. இதை கங்கை ஜலம் போல் புனிதமாகக் கருதி பகதர்கள் எடுத்துக் கொள்கின்றனர்.

கோவிலுக்குப் பழமையான வரலாறு இல்லை; சிலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழும்பிய கோவில் இது. 11ஆம் நூற்றா ண்டுக்குக் பின்னர் எழுந்த கோவில்; பழைய கோவில் இருந்த இடத்தில் புதிய கோவில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.

திருவிழாக்கள்

மார்ச்/ஏப்ரல் மாதத்தில் கல்யாண உற்சவம், இதே போல வெவ்வேறு மாதங்களில் மேலும் இரண்டு கல்யாண உற்சவம்; கிருஷ்ணன் பிறப்பு, பீஷ்ம ஏகாதசி, கார்த்திகை மாத க்ஷீராப்தி த்வாதசி , நவராத்ரி

SRI JAGANMOHINI KESAVA & GOPALA SWAMY TEMPLE, RYALI

Executive Officer,

Sri Jaganmohini Kesava & Gopala Swamy Temple,

Samalkota

East Godavari District, AP

***

எதிரே சிவன் கோவில்

உமா கமண்டலேஸ்வர  கோவில்

ஜகன் மோகினி  கோவிலுக்கு எதிரே சிவலிங்கம் காட்சி தரும் உமா கமண்டலேஸ்வர கோவில் இருக்கிறது.

கமண்டலத்துடன் சிவலிங்கத்தை பிரம்மா பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். இங்கும் சிவலிங்கம் மீது தண்ணீர் அபிஷேகம் செய்தவாறு இருக்கிறது. ஒரு காலத்தில் காடுகளாக இருந்த இடத்தில் இந்தக் கோவில்கள் தோன்றியுள்ளன. அதில் கடவுள் மீதோ அல்லது பாதங்களிலிருந்தோ தீர்த்தம் வரும்படி செய்தது சிற்பிகளின் சிறப்பு, அவ்வாறு வரும் தண்ணீர் தேஙகாது மறைவதும் குறிப்பிடத்தக்கது.

–subham—

Tags- ரயலி , உமா கமண்டலேஸ்வர கோவில், விசித்திர கோவில், ஒரு புறம் பெருமாள் மறுபுறம் மோகினி, ஜகன்மோகினி கேசவர் கோவில், ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்–30 ,

Leave a comment

Leave a comment