
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,658
Date uploaded in London – 12 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்-4 கோபம், சினம்(Post.13,658)

தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் கோபம், சினம் (க்ரோதம்) பற்றிப் பாடாத புலவர்கள் யாரும் இல்லை. நரகத்தின் மூன்று வாசல்களில் ஒன்று கோபம்/ க்ரோதம் என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொல்லிவிட்டார்; சிறைக்குச் செல்லுவோர் எல்லோரையும் வகைப்படுத்திப் பார்த்தால் காமம், க்ரோதம், லோபம் (பேராசை) என்ற மூன்றில் ஒன்றைக் காணலாம்.
கோபம் பற்றி ஷேக்ஸ்பியரும் நிறைய பொன்மொழிகளை உதிர்த்து இருக்கிறார்; அவர் அள்ளித்தூவிய தங்க மொழிகளை 37 நாடகங்களிலிருந்து சிலவற்றை மட்டும் காண்போம் .
Come not between the dragon and his wrath –
King Lear1-1-123
சீறும் ராட்சத மிருகத்துக்கும் அதன் கோபத்துக்கும் இடையே வராதே.– கிங் லியர் நாடகம்
****
Let grief convert to anger; blunt not the heart, enrage it-
Macbeth 4-3-22
உன்னுடைய துக்கம் கோபமாக மலரட்டும்; சாணைக்கல்லில் கத்தியைத் தீட்டு; பழி வாங்கு– மாக்பெத் நாடகம்
****
I understand a fury in your words. But not the words- Othello 4-2-32
உனது சொற்களில் தீப்பொறி பறக்கிறது; ஆனால் சொற்களை புரிந்துகொள்ள முடியவில்லை – ஒதெல்லோ நாடகம்
****
Who is man that is not angry ?
Timon of Athens
கோபப்படாத மனிதன் உண்டா ?
அல்லது கோபப்படாதவான் மனிதனா?- டிமோன் ஆப் ஏதென்ஸ்
****
Come not within the measure of my wrath
The gentlemen of Verona 5-4-125
என் கோபத்துக்கு ஆளாகிவிடாதே- ஜென்டில்மேன் ஆப் வெரோனா நாடகம்
****
My tongue will tell the anger of my heart, or else my heart concealing it will break.–The Taming of the Shrew
கொதிக்கிறது என் இதயம் ; இதோ சொல்லால் சுடுவேன் அல்லது என் இதயமே வெடித்துவிடும். —டேமிங் ஆப் தி ஷ்ரூ நாடகம்
****
Heat not a furnace for your foe so hot that it do singe yourself.
‘Henry VIII’ act 1, sc. 1, l. 140
உன் எதிரியைப் பொசுக்க, கோபப்படாதே ; அது உன்னையே சுட்டுவிடும் – ஏழாவது ஹென்றி நாடகம்
****
Anger’s my meat. I sup upon myself,
And so shall starve with feeding.
– Coriolanus, act 4, sc.2, l.53-4.
கோபம்தான் எனக்கு உணவு கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவேன். பட்டினியும் சாப்பிடுவதும் மாறி மாறி வரட்டும் (கோபத்தில் சாப்பிடாமல் தன்னைத் தானே வருத்திக் கொள்ளல் ) – கொரியாலனஸ் நாடகம்
****
Be wise as thou art cruel, do not press ,My tongue-tied patience with too much disdain: Lest sorrow lend me words and words express, The manner of my pity-wanting pain.-. “Sonnets”,
புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள் ; உன்னை நிந்திக்கும் எனது பொறுமையைச் சோதிக்காதே ஒருவேளை, உள்ளத்தில் உள்ள தாங்க முடியாத துயரத்தை துக்கத்தில் கொட்டிவிடுவேன்.- தனிப் பாடல்
****
She speaks poniards, and every word stabs: if her breath were as terrible as her terminations, there were no living near her; she would infect to the north star. I would not marry her, though she were endowed with all that Adam bad left him before he transgressed.
‘Much Ado About Nothing, act 2, sc. 1, l. [257]
அவளது பேச்சு கத்தி போல என்னைக் குத்துகிறது அவளது மூச்சு போலவே அவள் பேச்சும் இருக்குமானால் அவளுடன் வாழ்வதே கஷ்டம்; அவளது சொற்கள் வட துருவம் வரை விஷத்தைப் பரப்பவல்லன. ஆதாமிடம் கெட்டுப்போவதற்கு முன்னால் இருந்த தூய்மை இருந்தாலும் கூட அவளைக் கல்யாணம் கட்ட மாட்டேன்– மச் அடோ அபவுட் நத்திங்
****

பாரதியும் ‘கோபத்தைக் கொன்றுவிடு’ என்று பாடுகிறான். ஆனால் ‘ரெளத்திரம் பழகு’, என்றும் ‘சீறுவோர்ச் சீறு’ என்றும் ஆத்திச் சூடியில் எச்சரிக்கிறான். யாரேனும் தரும விரோதக் செயல்களைச் செய்தால் கோபம் கொள்ளுவதில் தவறில்லை என்பான்.
“அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்”
என்பது பாரதியின் அருள்வாக்கு
……
“சினங்கொள்வார் தம்மைத்தாமே தீயார் சுட்டுச்
செத்திடுவாரொப்பார் ; சினங்கொள்வார் தாம்
மனங்கொண்டு தம் கழுத்தைத் தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் “
சினம் என்பது ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்ற வள்ளுவன் கருத்தை பாரதி சொன்னதோடு, கோபம் என்பது வலியப் போய் தற்கொலை செய்து கொள்வதற்குச் சமம் என்றும் செப்புகிறான்.
அதே பாடலில் பாரதி,
“கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்;
கொடுங்கோபம் பேரதிர்ச்சி; சிறிய கோபம்
ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறியதாகும்;
அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்;
தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்;
கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;
கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான்
கொல்வதற்கு வழியென நான் குறித்திட்டேனே”
. என்பான்.

கோபம் பற்றி திருக்குறள் உள்ளிட்ட பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் நிறைய பாடல்கள் இருக்கின்றன. இந்த வெகுளாமை என்னும் lesson பாடம் அவைகளுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அதர்வண வேதத்தில் இருந்து வந்தது என்பது பலருக்கும் தெரியாது ; வேதத்தில் இல்லாத விஷயம் வெளியில் இல்லை!
தன்னைத்தான் காக்கின் சினங் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் — திருக்குறள் 305
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும் — திருக்குறள் 306
பொருள் —
உன்னைப் பாதுகாத்துக் கொள்ள கோபம் வராமல் பார்த்துக் கொள் ; அல்லது அதுவே உன் மரணத்துக்குக் காரணமாகிவிடும் –திருக்குறள் 305
****
கோபம் என்னும் தீ ஒரு மரத்துடன் நட்புகொண்டு அதைத் தழுவினால் மரமும் அழியும்; மரத்துக்குப் பக்கத்திலுள்ள காடே அழியும்.
****
அது போல கோபம் நெருப்பு போல உன்னுடன் சேர்ந்தால் அது உன்னை மட்டும் கொல்லாமல் உனக்கு ‘சப்போர்ட்’ support
கொடுத்த அத்தனை பேரையும் அழிக்கும் — –திருக்குறள் 306
****
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.-129
****
அனுமனும் கூட கோபத்தில் இலங்கைக்குத் தீ வைத்த பின்னர் கோபத்தில் செய்த காரியத்தை எண்ணி வருந்துகிறான் . வால்மீகி அழகாகச் சொல்கிறார்:
தன்யாஸ்தே புருஷ ச்ரேஷ்டோ யே புத்யா கோபமுத்திதம்
நிருந்தந்தி மஹாத்மானோ தீப்த மக்னி மிவாம்பஸா
எவர்கள் சீறி வரும் சினத்தை அறிவைக் கொண்டு பற்றி எரியும் தீயை ஜலத்தால் அணைப்பது போல அடக்கிக் கொள்கிறார்களோ அவர்களே தன்யர்கள்; புருஷர்களில் உயர்ந்தவர்கள்; மஹாத்மாக்கள்.
*****
க்ருதத: பாபம் ந குர்யாத்க: க்ருத்தோ ஹன்யாத் குரூநபி
க்ருத்த: பருஷயா வாசா நர: ஸாதூநதிக்ஷிபேத்
கோபத்திற்காளாகிய எவன் தான் பாவத் தொழிலைச் செய்யாதிருப்பான்? கோபம் கொண்டவன் பெரியோர்களைக் கூடக் கொலை செய்வான். கோபத்திற்காளான புருஷன் கடுமையான மொழியால் சாதுக்களை எடுத்தெறிந்து பேசுவான்,
****
வாச்யாவாச்யம் ப்ரகுபிதோ ந விஜானாதி கர்ஹிசித்
நாகார்யமஸ்தி க்ருத்தஸ்ய நாவாச்யம் வித்யதே க்வசித்
கோபம் தலைக்கேறியவனுக்கு எது சொல்லத் தகுந்தது எது சொல்லத் தகாதது என்பதைப் பகுத்தறியவே முடியாது. கோபம் கொண்டவனுக்குத் தகாத செயல் என்பது இருக்கவே இருக்காது. அப்படிப்பட்ட நிலையில் தகாத சொல் என்பதும் அவனுக்குக் கிடையாது,
*****
ய ஸமுத்பதிதம் க்ரோதம் க்ஷமயைவ நிரஸ்யதி
யதோரக ஸ்த்வசம் ஜீர்ணாம் ஸவை புருஷ உச்யதே
எவனொருவன் தலைக்கு மேலேறிய கோபத்தை பொறுமையின் மூலம் சர்ப்பம் ஜீரணமான தோலை எப்படி விட்டு விடுகிறதோ அதே போல விட்டு விடுகிறானோ அவனே ஆண்பிள்ளை என்று சொல்லப்படுகிறான்.
(பெங்களூர் எஸ். நாகராஜன் தொகுத்தது)
*****
அதர்வண வேதப் பாடல்
காண்டம் 6; துதி 42 (சூக்தம் 215)
1.வில்லிலிருந்து விடுபட்ட அம்பினைப் போல உன்னுடைய இதயத்திலிருந்து கோபத்தை விரட்டுகிறேன்; நாம் இருவரும் ஒருமித்த மனதுடன் நண்பர்களாக உலா வருவோம்.
2.நாம் நண்பர்களாக நடந்து செல்லுவோம் ; நான் உனது கோபத்தை நீக்குகிறேன் ; நான் உன்னு டைய கோபத்தைக் குழி தோண்டிப் புதைக்கிறேன்
3. நான் உனது கோபத்தை என் கால்களுக்கு அடியில் போட்டு நசுக்குகிறேன் நீ அடங்கி நட ; இனியும் எதிர்த்துப் பேசாதே
இதற்குப் பழைய விளக்கம்:
இரண்டு நண்பர்கள் இடையே இருந்த கோப தாபத்தை நீக்கும் பாடல் என்பதாகும்; இதைப் படித்துவிட்டு பாபநாசம் சிவனின் ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடி’ என்ற பாடலைப் படித்தால், பொருள் இன்னும் நன்றாக விளங்கும்.
–subham—
Tags- தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில், ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்-4 ,கோபம், சினம்.