
DECCAN CHRONICLE CARTOONS UPTO 1792024
POSTED BY LONDON SWAMINATHAN
CARTOONS IMPROVE YOUR KNOWLEDGE ON CURRENT AFFAIRS.
THESE ARE FROM DECCAN CHRONICLE NEWSPAPER UP TO 17TH SEPTEMBER 2024.













–SUBHAM—-
CARTOONS , UPTO 1792024

DECCAN CHRONICLE CARTOONS UPTO 1792024
POSTED BY LONDON SWAMINATHAN
CARTOONS IMPROVE YOUR KNOWLEDGE ON CURRENT AFFAIRS.
THESE ARE FROM DECCAN CHRONICLE NEWSPAPER UP TO 17TH SEPTEMBER 2024.













–SUBHAM—-
CARTOONS , UPTO 1792024
Posted by Tamil and Vedas on September 17, 2024
https://tamilandvedas.com/2024/09/17/deccan-chronicle-cartoons-upto-1792024/

Hundreds of devotees from old city thronged to witness auctioned this time at an all-time price of Rs Rs 30,01,000. It was bought by one of the local resident Mr Kolan Shankar Reddy. (Photo: P Surendra)
https://www.deccanchronicle.com/southern-states/telangana/balapur-ganesh-laddu-auctioned-for-rs-30-lakh-1824078
Posted by London Swaminathan on 17-9-2024
Balapur Ganesh Laddu Auctioned For Rs 30 Lak
17-9-2024
(Duttu is a Tamil slang term for low denomination money, which comes from the Malay word duit. Duit was a monetary unit used in the Malay archipelago and Dutch India, and was also known as the “New York penny)
Laddu Mega Laddu! Duttu Maha Duttu
Here is the news
Hyderabad: The Balapur Ganesh laddu auction, the most anticipated event of Ganesh Nimajjan, started at 10:30 a.m. today, with Kolan Shankar Reddy winning the laddu for Rs 30,01,000. Last year, the bid was won by Dasari Dayananda Reddy from Turkayamjal for Rs 27 lakh. The excitement surrounding the Balapur Ganesh laddu auction attracted thousands of devotees from across the state, with many tuning in to their televisions.
The first bidding took place in 1994 when Kolan Mohan Reddy secured for Rs 450, and very next year same person by making it Rs 4,500. In 1996, Kolan Krishna Reddy took for Rs 18,000 but the demand increased reaching Rs 1,05,000 in 2002 by Kondade Madhav. In 2015 the auction bidding reached seven digit, when Kallen Madhan Mohan Reddy took the laddu for 10,32,000. During the Covid-19 pandemic, the organizers bared the laddu auction for the preventive reasons and same laddu has been gifted to the then Chief Minister K Chandrashekar Rao. ( Source : Deccan Chronicle )
—SUBHAM—
TAGS- Laddu auction, Balapur, 2024 Ganesh festival
Posted by Tamil and Vedas on September 17, 2024
https://tamilandvedas.com/2024/09/17/laddu-mega-laddu-duttu-maha-duttu/

Rare supermoon partial eclipse to grace UK night sky
There will be a partial eclipse of the supermoon visible across the United Kingdom on Tuesday night.
This month’s full moon – known as the Harvest moon – also happens to be the second of four “supermoons” this year.
Full supermoons occur when the orbit of the moon is at perigee – the closest point to Earth in its orbit, which makes the Moon appear bigger and brighter in the night sky.
Most areas should get a good view tonight, although cloud is expected to develop for some across England and eastern Wales as the night goes on.
What time is the lunar eclipse?
The full harvest supermoon will rise on Tuesday evening at around 7.15pm BST.
At approximately 1:40am on Wednesday morning, a small shadow created by Earth will appear in the top right corner of the moon as the eclipse starts.
There are two types of shadow caused by Earth. The lighter one, called the penumbra, will not have too much effect but the umbra, the inner and darker shadow, will darken the Moon.
The partial eclipse will reach its maximum at 3.44am.
But do not expect there to be a big shadow visible on the supermoon as only around 4% of the Moon’s disc will be covered in darkness by the umbra shadow.
Where there are clear skies, even though it is a small partial eclipse, you will still be able to see it without the need for a telescope or binoculars.
Why is this lunar eclipse so special?
Full moons happen every month but supermoons are less common – even though this will be the second of four this year.
You may remember the blue supermoon only last month.
Partial lunar eclipses also do not happen very often. The next one is in August 2026, which will be special as around 96% of the Moon will be in shadow.
Therefore, to have a partial eclipse of a full moon, which happens to be a supermoon, is rare.
—SUBHAM–
lUNAR ECLIPSE, cHANDRA gRAHANAM, FOR bRITAIN
Posted by Tamil and Vedas on September 17, 2024
https://tamilandvedas.com/2024/09/17/chandra-grahanam-for-britain-today/
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,680
Date uploaded in London – 17 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
Be a Busy Bee- Learn Tirumanthiram through Pictures- Part 7 (Post No.13,680)
If you store money like a bee it will be used by someone else. That is what happened to the hoarders on earth- Tirumular in his Tiumanthiram
171: The Bee Stores Honey Only to be Appropriated by Others; So is Your Hoarded Wealth
The industrious bee from flower to flower hops,
Seeking, scenting, gathering its store of honey sweet;
But soon the subtle thief digs and steals the hoarded wealth;
Likewise, our earthly treasures the same story repeat.
ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டித் துரந்திட்டு அதுவலி யார்கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே. 4
****
The bees go in search of hidden nectar and collect it. They only know which flowers have got the nectar and use their fragrance. In the same way God seekers go in search invisible God and enjoy Hum.
Lord is the Light Beyond Visible Reach
The bee, that nectar seeks, flies high for its flower on top
And there, alone, it sucks the fragrant juice;
Even so, they who seek the blessed grace divine,
Aspire for the Light beyond visible reach of eyes.
இன்புறு வண்டிங்கு இனமலர் மேற்போய்
உண்பது வாச மதுபோல் உயிர்நிலை
இன்புற நாடி நினைக்கிலும் மூன்றொளி
கண்புற நின்ற கருத்துள்நில் லானே. 8
*****
From another Tamil Book Neethi Venba
We may compare this with a verse in Neethi Venba, by an anonymous Tamil author . one of the verses says
Beggars must be like bees. The bees suck the nectar without hurting the flowers. Don’t be like the worms that stick to the leaves and eat them slowly. Know the time and circumstances before asking alms (even donations) from the wealthy people.
ஆயுமலர்த் தேன்வண் டருந்துவது போல்இரப்போர்
ஈயு மவர்வருந்தா தேற்றலறம் – தூயஇளம்
பச்சிலையைக் கீடமறப் பற்றி யரிப்பதுபோல்
அச்சமுற வாங்க லகம். ௬௦– நீதி வெண்பா
****
Sanskrit Saying
“पिपीलिकार्जितं धान्यं मक्षिकासञ्चितं मधु ।
लुब्धेन सञ्चितं द्रव्यं समूलं हि विनश्यति ॥”
Grain collected by an ant, honey collected by bees, and wealth accumulated by an avarice; will all be destroyed along with its source.
****
Shakespeare is also very eloquent about the Bees and its Honey
1) “O, how shall summer’s honey breath hold out…” (Sonnet 64)
2) “We bring it to the hive and, like the bees,
“Are murdered for our pains.” (Henry IV)
3) “The sweetest honey is loathsome in its own deliciousness.” (Romeo and Juliet)
4)”…For honesty coupled to beauty is to have honey a sauce to sugar..” (As You Like It)
5) “Sweet honey and sweet notes together fail.” (Troilus and Cressida)
6) “The sweetest honey is loathsome in its own deliciousness.” (Romeo and Juliet)
7) “Obedience: for so work the honey-bees…” (Henry V)
8) “‘Tis seldom when the bee doth leave her comb. In the dead carrion.” (Henry VI)
9) “Thus we may gather honey from the weed,
“And make a moral of the devil himself.” (Henry V)
10) “Enjoy the honey-heavy dew of slumber.” (Julius Caesar)
11) “For you have stol’n their buzzing, Antony,
“And very wisely threat before you sting.” (Julius Caesar)
12) “When he did frown, O, had she then gave over,
Such nectar from his lips she had not suck´d.” (Venus and Adonis)
13) “Where the bee sucks, there suck I…” (“The Tempest”)
14) “We bring it to the hive and, like the bees,
“Are murdered for our pains.” (Henry IV)
15) “The commons, like an angry hive of bees
“That want their leader, scatter up and down
“And care not who they sting in his revenge.” (Henry VI)
16) “Full merrily the humble-bee doth sing,
“Till he hath lost his honey and his sting.” (Troilus and Cressida)
—Subham—-
Tags- Bees, Be a Bee, Busy, Tirumular, Neethi Venba, Tirumanthiram, Hoarders , Flowers, Beggar Learn Tirumanthiram, through Pictures, Part 7.
Posted by Tamil and Vedas on September 17, 2024
https://tamilandvedas.com/2024/09/17/be-a-busy-bee-learn-tirumanthiram-through-pictures-part-7-post-no-13680/

Tamils and Shakespeare attack Dogs! (Post No.13,679)
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,679
Date uploaded in London – 17 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

Tamils and Shakespeare attack Dogs! (Post No.13,679)
Shakespeare hated dogs. He used it more than 200 times in his plays and sonnets. Tamil poets also showed dogs in very bad light. Rarely they mentioned its grateful behaviour. One very old hero stone inscription mentioned even the name of the grateful dog Kovithan, which saved the Tamil town 1000 years ago. Rig Veda, Mahabhrata and Valmiki Ramayana have dog stories, mostly with positive connotations.
Tamil saint cum poet Tirumular used dog more than 10 times which have shown its lowest status in Tamil society. Tamils treated the pigs in the same way. 2000-year-old Sangam Tamil literature praised Brahmin streets as clean streets where even dogs and hens could not enter. Bhagavad Gita (5-18) says the learned scholars treat equally the Brahmins, elephant, cow (all holy), the dog and the dog eaters (lowest in Hindu society). But we read in newspapers that South Koreans eat one million dogs every year.
In Sanskrit literature, donkeys are more laughed at and treated with contempt.
Like Tirumular, Manikavasagar one of the great Four Saivite Saints, compared himself to a dog 62 times. Actually, he wanted to represent the common man in his poems Tiruvasagam, though he was a great saint.
****

Shakespeare was attacked for his unsympathetic treatment of animals, particularly dogs, in his great works. They say that he never wrote anything good about dogs. Let us look at some examples:
Popular Psychology magazine says in its article,
Psychology today 2015 article
None of the bard’s characters ever said a kind word about a dog.
It isn’t that people in Shakespeare’s works never mention dogs. On the contrary, the word dog appears nearly 200 times, with another 27 for cur (mutt); 53 for hound; five for brach (a female dog); and three for bitch. For comparison, Shakespeare’s people say England 271 times—so dogs are a pretty popular topic around the Shakespearean water cooler.
But what stands out in Shakespeare’s references to dogs is that they are nearly all insults.
“Whoreson dog” (Cymbeline, King Lear, and Troilus and Cressida);
“Slave, soulless villain, dog” (Anthony & Cleopatra);
“egregious dog? O viper vile!” (Henry V);
“cut throat dog” (Merchant of Venice); to name just a few.
Often it is insult enough just to liken a person to a dog. When Richard III is killed at the end of the play of that name, victorious Richmond proclaims,
“God and your arms be praised, victorious friends,/ The day is ours, the bloody dog is dead.”
Article Writer Clive D. L. Wynne, Ph.D., is Professor in Psychology at Arizona State University, USA, continues………
I know only two Shakespeare plays where a dog appears on stage.
In A Midsummer Night’s Dream, Starveling, one of the peasants who performs an amateurish play to amuse King Theseus and his friends, comes on stage and announces:
“All that I have to say, is, to tell you that the
lanthorn is the moon; I, the man in the moon; this
thorn-bush, my thorn-bush; and this dog, my dog.”
I read this presence of a dog, announced but unnamed, to underline Starveling’s foolishness: What idiot stands on a stage with three clearly visible objects and enumerates them?
The other Shakespeare play with a role for a dog, is considered the bard’s earliest work. In Two Gentleman of Verona, Launce, a comical servant, often refers to his dog, Crab. In a famous speech, Launce explains how, when Crab is caught pissing under a banquet table,
“all the chamber smelt him. ‘Out with the dog!’ says
one: ‘What cur is that?’ says another: ‘Whip him
out’ says the third: ‘Hang him up’ says the duke.
I, having been acquainted with the smell before,
knew it was Crab, and goes me to the fellow that
whips the dogs: ‘Friend,’ quoth I, ‘you mean to whip
the dog?’ ‘Ay, marry, do I,’ quoth he. ‘You do him
the more wrong,’ quoth I; ”twas I did the thing you
wot of.’ He makes me no more ado, but whips me out
of the chamber. How many masters would do this for
his servant?”
****

Another writer Fred Lanting who is known to us as a “dog man” (worldwide judge, trainer, lecturer) and author of many books on dogs says,
In Julius Caesar we have the famous “Cry ‘Havoc!’ and let slip the dogs of war”—he was familiar with the use the Romans put to the Mastiff types in conquering much of the known ancient world. And when conspirators murdered Caesar, they “fawn’d like hounds, and… the damned Casca, like a cur, behind struck Caesar on the neck.”
Helena, in A Midsummer Night’s Dream says: “I am your spaniel, and the more you beat me, I will fawn on you. Use me but as your spaniel—spurn me, strike me, neglect me, lose me. Only give me leave, unworthy as I am, to follow you. What worser place can I beg in your love—and yet a place of high respect with me—than to be used as you use your dog?” In Othello, a whipping was seen as one way to feign strength and threaten others: “…a punishment more in policy than in malice even as one would beat his offense less dog to affright an imperious lion.”
Some dogs were likened to a “wolf in greediness, a dog in madness” (Tragedy of King Lear). Many others were seen as fawning and as cheap as melting candy, such as described in Henry IV: “What a candy deal of courtesy this fawning greyhound then did proffer me.” And in Anthony and Cleopatra, as the hero’s followers abandon him, he complains that “the hearts that spaniel’d me at heels, to whom I gave their wishes, do discandy, melt their sweets on blossoming Caesar; and this pine is bark’d that overtopped them all.” The imagery of candy likened to fawning, groveling, sweetness is repeated elsewhere: Hamlet says to Horatio: “Why should the poor be flattered? No, let the candied tongue lick absurd pomp, and crook the pregnant hinges of the knee, where advantage may follow fawning.” Another allusion is in King Lear: “They flattered me like a dog.”
****
Tamil Poets say,

I have given already some examples from Tirumanthiram of Tamil saint Tirumular and Naladiyar by anonymous Jain Saints of Tamil Nadu. Let us look at more examples from Tamil Neethi Venba wich is anthology by an anonymous author/s
Have you heard anyone that bites the dog back which bit a person in a rage? No.Like wise the learned will never abuse anyone even if the person schodls him—from Naladiyar
1.நாயைக் கடிப்பவன் உண்டா?
கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை – நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.—நாலடியார்
****
Will anyone drink the milk of a dog? No. In the same way the wealth of a bad person will be enjoyed only by the bad people; they force him to give the money-Neethi Venba
2.பாவிதனந் தண்டிப்போர் பாலாகும் அல்லதருள்
மேவுசிவன் அன்பர்பால் மேவாதே – ஓவியமே!
நாயின்பால் அத்தனையும் நாய்தனக்காம் அன்றியே
தூயவருக் காகுமோ சொல். 63– நீதி வெண்பா
XXXX
The dog that relishes bones and flesh hates sweets cooked in ghee. Likewise, the advice given by good people to the bad ones will be rejected –Neethi Venba
3.கன்மமே பூரித்த காயத்தோர் தம்செவியில்
தன்மநூல் புக்காலுந் தங்காதே – சன்மமெலும்(பு)
உண்டு சமிக்கும்நாய் ஊண்ஆவின் நெய்யதனை
உண்டு சமிக்குமோ ஓது. 80– நீதி வெண்பா
****
Bad women trap men and make babies, and the men are bitten by the doglike children. –Neethi Venba
ஆசையெனும் பாசத்தால் ஆடவர்தஞ் சிந்தைதனை
வீசுமனை யாந்தறியில் வீழ்த்தியே – மாசுபுரி
மாயா மனைவியரா மக்கள் மகவென்னும்
நாயாற் கடிப்பித்தல் நாடு. – நீதி வெண்பா
*****

Starving Syrians milk the dogs! Better than South Koreans who eat one million dogs every year.
One can cross a shallow river by holding the tail of a cow; have you seen anyone holding the tail of a dog to cross the river? None. Likewise stick to your own wife and children instead of going to other women
5.உற்றபெருஞ் சுற்றம் உறநன் மனைவியுடன்
பற்றிமிக வாழ்க பசுவின்வால் – பற்றி
நதிகடத்த லன்றியே நாயின்வால் பற்றி
நதிகடத்தல் உண்டோ நவில். 11 —நீதி வெண்பா
****
Tamil Proverbs against Dogs
Can anyone straighten the tail of a dog?
Can we use the dog skin to make shoes?
Why do you beat the dog? Why do you clean its poo?
If the dog barks it is not dawning; but if the cock…..
Does the dog know the taste of coconut?
Even if the dog runs fast, can it beat a horse?
Even if you bathe the dog and keeps it in the hall, it will run for the refuse on the street
Struggling like a dog
Dog is a grateful animal.
நாய்த் தோல் செருப்பு ஆகுமா?
நாய் நன்றியுள்ள பிராணி
நாயை அடிப்பானேன் ஃஃஃஃ சுமப்பானேன்
நாய் குரைத்து விடியுமா? கோழி கூவி விடியுமா?
நாய்க்குத் தெரியுமா தேங்காய் ருசி?
நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
நாய் நாலு காதம் ஓடினாலும் குதிரை வேகம் ஆகுமா?
நாய் பட்ட பாடு
****
Previous articles :
Tamil View on Biting Dogs and Barking Dogs! (Post No.13,672)
Post No. 13,672
Date uploaded in London – 15 September 2024
And
You will be born as a Dog Tamil Saint Tirumular Warns! (Post No.13,766)
Post No. 13,676
Date uploaded in London – 16 September 2024
–subham—
Tags- Tamils, on dogs, Shakespeare, proverbs,
Posted by Tamil and Vedas on September 17, 2024
https://tamilandvedas.com/2024/09/17/tamils-and-shakespeare-attack-dogs-post-no-13679/
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,678
Date uploaded in London – 17 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

நீ நாயாகப் பிறப்பாய்! திருமூலர் சாபம்!! (Post No.13,678)
சமீபத்தில் பரம்பொருள் பவுன்டேஷனைச் சேர்ந்த மஹாவிஷ்ணு என்பவர் பாவ- புண்ணியம், மறுபிறப்பு பற்றிப் பேசியதற்காக திராவிடர்கள் அவரைக் கைது செய்தனர். திருக்குறள், திருமந்திர அடிப்படையில் கோர்ட் அவரை விடுதலை செய்து கோடிக்கணக்கான ரூபாய் நஷ்ட ஈடும் தரவேண்டும் . மாமிசம் தின்னுவோரை நரகம் விழுங்கிவிடும் என்று திருவள்ளுவரும் சொல்லியிருக்கிறார். மூட நம்பிக்கை என்று சொல்லக்கூடிய 25 குறள்களை திருவள்ளுவரும் பாடியிருக்கிறார்.
உலகிலுள்ள எல்லா மதப் புஸ்தகங்களிலும் பிறர் ஆட்சேபிக்கக்கூடிய விஷயங்கள் உள்ளன. உலக மஹா கோழைகள், தொடை நடுங்கிகள், பயங்கொள்ளிகள் அவற்றை என்றுமே வெளியே சொல்லுவதில்லை.! நிற்க.
குரு நிந்தனை செய்வோர் , ஓம் மற்றும் சிவனை அவமதிப்போர் எல்லோரும் நாயாககப் பிறப்பார்கள் அல்லது நாய் பட்டபாடு படுவார்கள் என்று 1200 ஆண்டுகளுக்கு முன்னரே திருமந்திரத்தில் எழுதிவிட்டார் . பன்றியாக யார் பிறப்பார்கள் என்று திருமூலர் சொன்னது முந்தைய கட்டுரைகளில் இருக்கிறது . மனு நீதி நூலும் மிருகப் பிறப்பு பற்றி பெரிய பட்டியலைத் தந்துள்ளது.
இதோ திருமந்திர பாடல்கள்:
ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கு ஓர்உகம்
வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே.
ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை இகழ்ந்தூர் நாயாகப் பிறந்து ஒரு யுகத்துக்கு கஷ்டப்பட்டு பின்னர் புழுவாக மாறி அழிவார்கள்
Consequences of Abusing Guru
The Guru taught the wisdom
Of One-Letter mantra (Aum);
He who speaks derisive of Him
Will be born a lowly Cur;
And having led a dog’s life for a Yuga entire,
He will be a worm born;
And then to dust shall be consigned.
****
மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.
பிரணவ மந்திரத்தைக் கற்பித்த குருவை அவமதிப்போர் 100 முறை நாயாகப் பிறந்து புலையணைக்கப் பிறந்து அழிவார்கள்
533: Do not Abuse Guru
Those who wounded feelings,
Of Holy Guru who taught,
The One-lettered mantra, “AUM”
Will be a dog born,
And after a hundred dog incarnations
Will die a human out-caste.
****
பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ
அணங்குட னாதித்த னாறு விரியின்
வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே
வாழ்வு எப்படி அழியும் என்று தெரிய வேண்டுமா ? கேளுங்கள் : அழகான மனைவி ; அற்புதமான செல்வம்; இறுதியில் இறந்த பின்னர் நாய் தின்னும் உடல் ! இதுதாண்டா வாழ்க்கை.
Missing the Vision, the Body Perishes
Do you know how this body perishes?
Hear this:
A pretty damsel the man has for wife;
And like the sun his prosperity spreads;
And all bow to him in respect;
A body that waxed in a life like thus
Became a prey for prowling dogs to consume.
****
சத்தியென் பாளரு சாதகப் பெண்பிள்ளை
முத்திக்கு நாயகி என்பது அறிகிலர்
பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள்
கத்திய நாய்போல் கதறுகின் றாரே. 43
சக்தி என்பவள் சாதகனின் கடவுள்; முக்திக்கு வழிவகுப்பதும் அவள்தான். அதை அறியாமல் வழிபடும் பாவிகள், அடிபட்ட நாய் போல ஓலமிடுவார்கள்
1199: Yoga True Path to Mukti
Sakti is the Lady of Sadhaka (Yogi)
She is the Mistress of Mukti
This they know not,
And in vain, in other ways,
Their devotion went;
Wretches they are;
Unto a beaten dog,
They scream and wail.
****

1558. ஒன்றது பேரூர் வழியா றதற்கு
என்றது போல இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயையொத் தார்களே. 2
எல்லோருக்கும் குறிக்கோள் ஒன்றே; அதை அடைய அறுசமயங்கள், ஆறு வழிகள் இருக்கின்றன. அதில் இது நல்லது அது நல்லது என்று வாதிட்டுப் பொழுதைக் கழிப்போர் மலைக்கு அருகில் குரைக்கும் நாய்களை போல எதிரொலியைக் கேட்பார்கள்
1558: All Faiths Lead but to Lord
One, the Great City,
Six, the roads that lead to it;
Thus are Faiths Six;
They that contend, “This true; That false”
Are unto the dog that in ire barks
To its own echo at hilly side.
****
1671. சுத்தித் திரிவர் கழுவடி நாய்போற்
கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்
ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே
செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே. 4
போலி சாமியார்கள் சுடுகாட்டு நாய்கள் போல ஓலமிடுவார்கள். பிணம் தின்னும் கழுகுகள் போல கொத்தித் திரிவார்கள் குரங்குகளைப் போல கூத்தாடுவார்கள் ; உண்மைச்சிவ ஞானிகளோ இருந்தும் இறந்தவர்கள் போல அமைதிதாயாக வாழ்வார்கள்.
1671 Siva Jnanis are Quiescent
They howl about unto dogs at foot of gallows;
They peck about like vultures at carrion;
They frisk about like monkeys in merriment
They of false Jnana;
But quiescent are the Siva Jnanis true,
Dead to the world, though living in body and senses.
****
1910. அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்
வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில்
நொந்து நாய்நரி நுகரின் நுண்செரு
வந்துநாய் நரிக்கு உணவாகும் வையகமே. 1
சிவ ஞானிகளை அடக்கம் செய்யாமல் தீயில் வேகவைத்தால் எல்லோரும் வெப்பு நோயில் அழிவார்கள் ; அடக்கம் செய்யாமல் விட்டாலோ போர்கள் மூண்டு இறந்தர்களின் சடலங்களை நாய்களும் நரிகளும் உண்ணும்.
1910 Do not Consign Siva Jnani’s Body to Fire; Nor Neglect it
If the body of Siva Jnani is to fire consigned,
The people entire will in burning fever suffer;
If his body a prey to dogs and jackals left,
Tumultous war the land will see,
And the people a prey to dogs and jackals be.
****

உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடு உயிரிடை நட்புஅறி யாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே. 7
உடம்புக்கும் உயிருக்குமுள்ள தொடர்பினை அறியாத பக்தர்கள் மடத்தில் நுழையும் தெரு நாய்களுக்குச் சமம்.
2148 Know the Relationship Between Body and Jiva
The bodies (Causal, Subtle and Gross) embrace one another,
But the Jiva within body stood,
They know not;
They who the kinship between body and Jiva
Understood not,
Are verily bewildered
Unto the dog that into a kitchen abrupt strays.
XXXXXXXX
Also read my posts:
WHO WILL BE BORN AS A RAT OR A DOG OR AN ASS ?-MANU’s LIST (Post No.7942)
Post No.7942
Date uploaded in London – 8 May 2020
****
Who is born as a Slave, Leper, Eunuch and a Beggar? …
https://tamilandvedas.com › 2024/09/13 › who-is-born-…
3 days ago — Tamil poems say very interesting thins about Slaves, Beggars, Lepers and Hermaphrodites/eunuchs. ( I have already given a long list of animal …
Who is born as a Slave, Leper, Eunuch and a Beggar? Tamil Discovery (Post No.13,664)
Post No. 13,664
Date uploaded in London – 13 September 2024
****
Can a Man be born as a Pig in his Next Birth? By London Swaminathan Post No. 823 Date 6 th February 2014.
****
Learn Tiru manthiram through Pictures – Part 5 ( Post No.13,626; You will be born as a Pig.
****
பன்றியாய் பிறப்பாயாகுக; திருமூலர் சாபம்! திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 45 (Post.13,547)
Post No. 13,547
Date uploaded in London – 15 August 2024
You will be born as a Dog Tamil Saint Tirumular Warns! (Post No.13,766)
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,676
Date uploaded in London – 16 September 2024
—–Subham—
Posted by Tamil and Vedas on September 17, 2024
https://tamilandvedas.com/2024/09/17/%e0%ae%a8%e0%af%80-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/

WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.677
Date uploaded in London – —17 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மாலைமலர் 21-8-4 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.
ஒலிம்பிக் தங்க மெடல் நாயகி லரிஸா லடிநினா -2
ச. நாகராஜன்
ஒலிம்பிக் போட்டிகளில் லரிஸாவின் வெற்றி
மிகத் திறனுடன் ஜிம்னாஸ்டிக்ஸில் தேர்ச்சி பெற்ற லரிஸா 1956இல் மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டார். 21 வயதான அவர் ஹங்கேரியைச் சேர்ந்த 35 வயதான அக்னஸ் கேலடியுடன் மோத வேண்டியதாக இருந்தது.
மிகக் கடுமையான போட்டியில் தனது திறமையைக் காண்பித்த அவர் 4 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்று தன் பதக்கக் கணக்கைத் தொடங்கினார். ஃப்ளோர் ஜிம்னாஸ்டிக்ஸில் கேலடியுடனான போட்டி வெற்றி தோல்வி இன்றி ‘டை’யில் முடிந்தது.
அடுத்து 1960-ல் ஒலிம்பிக் போட்டி ரோமில் நடந்தது. 3 தங்கப் பதக்கங்களையும் 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்று அவர் சோவியத் யூனியனைப் பெருமைப் பட வைத்தார்.
அடுத்து 1964ல் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தது அதில் 2 தங்கப் பதக்கங்களையும் 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றார்.
இந்த மூன்று போட்டிகளிலும் அவர் நான்கு வெங்கலப் பதக்கங்களையும் வென்றார்.
ஆக 1956 மெல்போர்ன், 1960 ரோம், 1964 டோக்கியோ ஆகிய மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் (‘டை’யில் முடிந்த தங்கப் பதக்கத்தையும் சேர்த்து அவர் 18 பதக்கங்களை வென்றார்.
\நீண்ட நெடுங்காலம் அதாவது 1964லிருந்து 2012ம் ஆண்டு முடிய இவரே அதிக பதக்கங்களைப் பெற்ற ஒரே பெண்மணி என்ற பெருமை இவருக்கு இருந்தது.
2012-ல் தான் அமெரிக்கரான நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 28 பதக்கங்களை வென்று இவரது சாதனையை முறியடித்தார். என்றாலும் கூட மங்கையரில் அதிக மெடல்களைப் பெற்ற பெண்மணி என்ற இவரது சாதனையை முறியடிக்க இதுவரை பெண்மணிகளில் ஒருவரும் இல்லை. அமெரிக்கப் பெண்மணியான ஷெனான் மில்லர் இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் ஏழு மெடல்களை வென்றுள்ளார்.
மைக்கேல் பெல்ப்ஸ் இவரது சாதனையை முறியடித்த போது, “ஒரு பெண்மணி நெடுங்காலத்திற்கு முன்னர் செய்த சாதனையை ஒரு ஆண் முறியடிக்க இப்போதாவது காலம் வந்ததே” என்று அவர் கூறியதை உலகமே ரசித்தது.
அவர் 14 உலக சாம்பியன்ஷிப் மெடல்களையும் 14 யூரோபியன் சாம்பியன்ஷிப் மெடல்களையும் வென்றதால் உலகின் அதிசயமான ஜிம்னாஸ்டிக் பெண்மணி என்ற புகழையும் பெற்றார்.
தான் பெற்ற முதல் தங்கப் பதக்கத்தை தனது பயிற்சியாளரான (கோச்)
சோட்னிசென்கோவிற்குத் தந்தார் லரிஸா. இறக்கும் வரை அவர் தன்னிடம் அதை வைத்திருந்தார். அவரது இறப்பிற்குப் பின் அவரது மனைவி அந்தத் தங்கப் பதக்கத்தை லரிஸாவுக்குத் திருப்பித் தந்தார்.
அனைவரிடமும் அவர் காட்டும் மரியாதைக்கு இது ஒரு சான்றாகும்.
அன்றைய நிலை
பழைய காலத்தைப் பற்றி அவர் கூறுவது இது:
“1964ல் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட எங்களுக்கு ராணுவ கூடாரங்களில் தான் தங்க இடம் தந்தனர்; பொதுக் கழிப்பறைகளையே தான் நாங்கள் உபயோகித்தோம். ஆனால் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் குழுவினரோ சொகுசு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
சோவியத் யூனியன் சார்பில் போட்டியிட்ட எங்களுக்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற அழுத்தம் நிறைய இருந்தது. என்றாலும் அதிகாரிகள் எங்களை கண்ணியத்துடன் நடத்தினர். எங்களுக்கு தேசத்தின் கௌரவத்தை உயர்த்த வேண்டும் என்ற அடங்காத ஆசையும் இருந்தது. எங்கள் நாட்டின் கொடி ஏற்றப்படும் போதும் தேசீய கீதம் இசைக்கப்படும்போதும் நாங்கள் ஓவென்று ஆர்ப்பரிப்போம்.” என்கிறார் அவர்.
பயிற்சியாளர்
1966ம் ஆண்டு அவர் போட்டிகளில் ஈடுபடுவதிலிருந்து ஓய்வு பெற்றார்.
சோவியத் யூனியன் ஜிம்னாஸ்டிக்ஸ் குழுவிற்கு பயிற்சியாளராக ஆனார்.
இவரது நேரடிப் பயிற்சியால் சோவியத் யூனியன் விளையாட்டு வீராங்கனைகள் பல பதக்கங்களைப் பெற்றனர்.
தினமும் ஏராளமான கடிதங்கள் ரஷியாவின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் இவருக்கு வரும். அனைத்தையும் இரவு நேரத்தில் ஒவ்வோன்றாகப் படிப்பார். “எனக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். என்ன செய்வது?, இப்படி ஒரு கடிதம்; எனக்கு திறமையே இல்லையோ என்று ஒரு கடிதம் – அனைத்திற்கும் ஊக்கமூட்டும் பதிலை அனுபி உற்சாகத்தை அளிப்பது இவரது பழக்கம்.
குடும்பம்
லரிஸா மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவரது மகள் டாட்யானா இவாநோவா லாடிநினா நாட்டுப்புற நடனத்தில் நிபுணர். அவருக்கு ஒரு மகனும் உண்டு.
மாஸ்கோவில் இப்போது வாழ்ந்து வரும் அவர் ரஷிய- உக்ரேன் போரினால் ரஷிய விளையாட்டு வீரர்கள் நடுநிலைமைக் கொடியைப் பிடித்துக் கொண்டு ஒலிம்பிக்கில் கலந்து கொண்டதை தேசப்பற்று இல்லாத செய்கை என்று விமரிசித்தார்.
சமூக சேவை
கியவ் நகரில் சமூக சேவைக் குழுவைச் சேர்ந்த வயதான ஒருவர் அவரைப் பார்த்து உங்களை அடிக்கடி பார்த்த மாதிரி இருக்கிறது, எனக்கு இந்த சமூக சேவையில் உதவி புரிய வர முடியுமா என்றார்.
புன்னகை புரிந்த லாரிஸா, “ஓகே” என்றார்.
தினமும் அவரிடம் உதவி நாடி ஏராளமானோர் வருவர். உடல் பிரச்சினை ஒருவருக்கு இருக்கும், இன்னொரு வயதானவருக்கு தரை அடுக்கில் இல்லாமல் நான்காம் மாடியில் குடியிருப்பு வீடு ஒதுக்கப்பட்ட குறை இருக்கும் – ஒவ்வொன்றாக அவர் தீர்த்து வைப்பார்.
ஒரு நாளைக்கு ஒரு பெண்மணி வேகமாக அவரிடம் வந்து ஒரு பேப்பரை ஆட்டி ஆட்டிப் பேசினார். “இடம் இல்லையாம். இடமே இல்லையாம்” என்று அவர் கோபத்துடன் கத்தினார். லாரிஸா பொறுமையுடன் உங்கள் வீட்டிற்குப் போகலாமா? என்றார்.
அவர் வீட்டிற்குச் சென்று டீயை அருந்தியவாறே அவரது குறையைக் கேட்டார். தனிப் பெண்மணியாக குழந்தையை வளர்க்கும் சிங்கிள் மதரான அவரது குழந்தைக்கு நர்ஸரியில் இடம் இல்லை என்று சொல்லி விட்டார்கள். அவர் என்ன செய்வார், பாவம்! உடனே நர்ஸரி மானேஜருடன் லரிஸா பேசினார்: உங்களுக்குக் குழந்தை இருக்கிறதல்லவா என்ற அவரது மென்மையான குரலைக் கேட்ட மானேஜர் உடனடியாக அந்தக் குழந்தைக்கு நர்ஸரியில் இடம் கொடுத்தார். இப்படி நாளைக்கு விதம் விதமாக ஒரு பிரச்சனை வரும்.
89 வயதான இவர் இன்னும் இந்த சேவையில் ஈடுபடுவது அனைவரையும் பிரமிக்க வைக்கிறது.
உற்சாகமூட்டும் பெண்மணி
அனைத்துப் பெண்மணிகளையும் உற்சாகத்துடன் விளையாட்டுக்களில் பங்கேற்குமாறு அறைகூவல் விடும் லரிஸா தன்னைப் பற்றிக் கூறுவது இது:
“ஒரு சாதனையை 48 ஆண்டுகள் முறியடிக்காமல் தக்க வைத்திருப்பது போதுமான காலம் தானே!”
***
Posted by Tamil and Vedas on September 17, 2024
https://tamilandvedas.com/2024/09/17/%e0%ae%92%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%af%86%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af-2/
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,676
Date uploaded in London – 16 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
You will be born as a Dog Tamil Saint Tirumular Warns! (Post No.13,766)
Recently Dravidians arrested Mahavishnu, a Tamil Speaker of Paramporul Foundation, in Tamil Nadu because he said rebirths are caused by the evil or good deeds done by them in previous births. From Tamil Veda Tirukkural to all Hindu scriptures support what he said. if anyone doesn’t like it, let them shut their ears and leave. Court must acquit and release him immediately based on Hindu scriptures.
Here is what Tirumanthiram of Tirumular said 1200 years ago. He migrated to Tamil Nadu from Kashmir and composed 3000 poems. Earlier I posted what he said about Pig’s birth.
If you criticise your teacher, you will be born as a Dog!
ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கு ஓர்உகம்
வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே.
Consequences of Abusing Guru
The Guru taught the wisdom
Of One-Letter mantra (Aum);
He who speaks derisive of Him
Will be born a lowly Cur;
And having led a dog’s life for a Yuga entire,
He will be a worm born;
And then to dust shall be consigned.
****
After 100 Dog Births you will be an Out caste
மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.
533: Do not Abuse Guru
Those who wounded feelings,
Of Holy Guru who taught,
The One-lettered mantra, “AUM”
Will be a dog born,
And after a hundred dog incarnations
Will die a human out-caste.
****
Dogs will eat you.
பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ
அணங்குட னாதித்த னாறு விரியின்
வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே
: Missing the Vision, the Body Perishes
Do you know how this body perishes?
Hear this:
A pretty damsel the man has for wife;
And like the sun his prosperity spreads;
And all bow to him in respect;
A body that waxed in a life like thus
Became a prey for prowling dogs to consume.
****
Sinners will scream like beaten Dogs
சத்தியென் பாளரு சாதகப் பெண்பிள்ளை
முத்திக்கு நாயகி என்பது அறிகிலர்
பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள்
கத்திய நாய்போல் கதறுகின் றாரே. 43
1199: Yoga True Path to Mukti
Sakti is the Lady of Sadhaka (Yogi)
She is the Mistress of Mukti
This they know not,
And in vain, in other ways,
Their devotion went;
Wretches they are;
Unto a beaten dog,
They scream and wail.
****
Bad men will bark at the Hills
1558. ஒன்றது பேரூர் வழியா றதற்கு
என்றது போல இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயையொத் தார்களே. 2
1558: All Faiths Lead but to Lord
One, the Great City,
Six, the roads that lead to it;
Thus are Faiths Six;
They that contend, “This true; That false”
Are unto the dog that in ire barks
To its own echo at hilly side.
****
False Saints Howl like Dogs in the graveyard
1671. சுத்தித் திரிவர் கழுவடி நாய்போற்
கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்
ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே
செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே. 4
1671 Siva Jnanis are Quiescent
They howl about unto dogs at foot of gallows;
They peck about like vultures at carrion;
They frisk about like monkeys in merriment
They of false Jnana;
But quiescent are the Siva Jnanis true,
Dead to the world, though living in body and senses.
****
If you don’t respect Saints, there will be wars.
1910. அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்
வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில்
நொந்து நாய்நரி நுகரின் நுண்செரு
வந்துநாய் நரிக்கு உணவாகும் வையகமே. 1
1910 Do not Consign Siva Jnani’s Body to Fire; Nor Neglect it
If the body of Siva Jnani is to fire consigned,
The people entire will in burning fever suffer;
If his body a prey to dogs and jackals left,
Tumultous war the land will see,
And the people a prey to dogs and jackals be.
****
Who becomes Stray Dogs?
2148. உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடு உயிரிடை நட்புஅறி யாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே. 7
2148 Know the Relationship Between Body and Jiva
The bodies (Causal, Subtle and Gross) embrace one another,
But the Jiva within body stood,
They know not;
They who the kinship between body and Jiva
Understood not,
Are verily bewildered
Unto the dog that into a kitchen abrupt strays.
XXXXX
Also read my post:
WHO WILL BE BORN AS A RAT OR A DOG OR AN ASS ?-MANU’s LIST (Post No.7942)
Post No.7942
Date uploaded in London – 8 May 2020
****
Who is born as a Slave, Leper, Eunuch and a Beggar? …
https://tamilandvedas.com › 2024/09/13 › who-is-born-…
3 days ago — Tamil poems say very interesting thins about Slaves, Beggars, Lepers and Hermaphrodites/eunuchs. ( I have already given a long list of animal …
Who is born as a Slave, Leper, Eunuch and a Beggar? Tamil Discovery (Post No.13,664)
Post No. 13,664
Date uploaded in London – 13 September 2024
****
Can a Man be born as a Pig in his Next Birth? By London Swaminathan Post No. 823 Date 6 th February 2014.
****
Learn Tiru manthiram through Pictures – Part 5 ( Post No.13,626; You will be born as a Pig.
****
பன்றியாய் பிறப்பாயாகுக; திருமூலர் சாபம்! திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 45 (Post.13,547)
Post No. 13,547
Date uploaded in London – 15 August 2024
—–Subham—
Tags- Dog, born as, rebirth, Tirumular, warning.dont insult, Guru, Om, Aum
Posted by Tamil and Vedas on September 16, 2024
https://tamilandvedas.com/2024/09/16/you-will-be-born-as-a-dog-tamil-saint-tirumular-warns-post-no-13766/

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,675
Date uploaded in London – 16 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்- 5 கருமி, கஞ்சன்
ஷேக்ஸ்பியர் என்ன சொல்கிறார் என்று முதலில் காண்போம் : ஷேக்ஸ்பியர் காலத்தில் நிக்கார்ட் NIGGARD என்ற ஆங்கிலச் சொல்லை மைசர் என்ற பொருளில் பயன்படுத்தினர். இரண்டு ஆங்கிலச் சொற்களுக்கும் இப்போது வேறு பொருள் .
வள்ளுவர் போல கையை முறுக்கி தாடையில் ஒரு குத்து விடு என்று ஷேக்ஸ்பியர் சொல்லவில்லை. ஆயினும் கஞ்சன் , கருமி என்ற பொருளில் நிக்கார்ட் என்பதைக் கையாளுகிறார். இன்று இது கறுப்பர்களைத் திட்டும் சொல்லாக உபயோகப்படுகிறது.

மைடாஸ் MIDAS என்ற கிரேக்க புராணக்கதை எல்லோருக்கும் தெரியும். தொட்டதெல்லாம் தங்கம் ஆகவேண்டும் என்று வேண்டி சாப்பாடு, தண்ணீர் முதலியவற்றைத் தொட முடியாமல் தவித்த மைடாஸ் கதாபாத்திரத்தை MERCHANT OF VENICE மெர்ச்சண்ட் ஆப் வெனிஸ் நாடகத்தில் ஷேக்ஸ்பியர் குறிப்பிடுகினறார் .அதே போல ஷைலாக் என்னும் பேராசை பிடித்த கதாபாத்திரத்தையும் குறிப்பிடுகிறார். இருந்தபோதிலும் கருமிகளைத் திட்டவில்லை. அவர்கள் எல்லாவற்றிலும் சுஷ்டமானவர்கள் என்றே உவமையாகப் பயன்படுத்துகிறார். உன் பேச்சில் கருமித்தனம் வேண்டாம் என்பார்.
****
strait (adj.) Old form(s): straight=mean, niggardly, stingy= கருமித்தனம்
Brutus
The deep of night is crept upon our talk,
And nature must obey necessity,
Which we will niggard with a little rest.
There is no more to say.
ஜூலியஸ் சீசர் நாடகத்தில் ப்ரூட்டஸ் சொல்வதாவது: நம்முடைய பேச்சில் இரவு குறுக்கிடுகிறது ; கொஞ்சம் (கருமித்தனம் போல ) ஓய்வு எடுப்போம் இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை.
****
மாக்பெத் நாடகத்தில் உன் பேச்சில் கருமித்தனத்தைக் காட்டாதே என்கிறார் .
No, they were well at peace when I did leave ’em.
MACDUFF
Be not a niggard of your speech. How goes ’t?
****
niggardly (adj.) –mean-minded, tight-fisted, miserly
My daughter! O, my ducats! O, my daughter! Fled with a Christian! O, my Christian ducats!
ஷைலாக் ஒரு யூதர். அவரிடம் கடன் வாங்கிய அன்டோனியோ ஒரு கிறிஸ்தவர். அவருடன் ஷைலக்கின் மகள் ஓடிப் போய்விடுகிறாள் உடனே ஷைலாக் கதறுகிறார் என் மகள் ! என் தங்க காசு! கிறிஸ்தவனுடன் ஓடிப்போய்விட்டாள் என்னுடைய கிறிஸ்தவ தங்கமே!.
*****
2.Rich honesty dwells like a miser, sir, in a poor house; as your pearl in your foul oyster. -As You Like It. Act v. Sc. 4.
பணக்காரன் ஒரு குடிசையில் வசிப்பது போல அவள் இருக்கிறாள் ; பளபள முத்து அழுக்கான சிப்பிக்குள் இருப்பது போல. –ஆஸ் யூ லைக் இட் நாடகம்
3.Sonnet 75 in modern English
நாடகங்களைத்தவிர 154 பாடல்களையும் ஷேக்ஸ்பியர் எழுதினார். அவைகள் எல்லா வற்றிலும் 14 வரிகள் இருக்கும் ; நாம் 2 வரிப்பாடலை குறள் என்றும் 4 வரிப்பாடலை வெண்பா என்று அழை போல 14 வரிப் பாடல்களை சான்னட் Sonnet என்று சொல்வார்கள்.
Sonnet 75: So Are You To My Thoughts As Food To Life
அதில் மைஸர் என்பதைக் கஞ்சன் என்றே வியாக்கியானம் செய்கின்றனர். முதல் சில வரிகளின் தமிழ் மொழிபெயர்ப்பு: நீ எனக்கு உயிர் வாழ உணவு போலவும் பூமிக்கு வசந்த கால மழை போலவும் உள்ளாய்; ஒரு கருமி தன்னுடைய பணத்தைப் பாதுகாக்க எப்படி தவிக்கிறானோ அப்படி நான் தவிக்கிறேன்.
ஒரு சமயம் அதைப்பார்த்து ஒரு கருமி மகிழ்கிறான். மற்றோர் சமயம் திருட்டு பயம் வாட்டுகிறது
So are you to my thoughts as food to life,
Or as sweet-season’d showers are to the ground;
And for the peace of you I hold such strife
As ‘twixt a miser and his wealth is found.
Now proud as an enjoyer, and anon
Doubting the filching age will steal his treasure;
Now counting best to be with you alone,
……………
****
அடி, உதை, கொல்! கருமிகளுக்கு எதிராக தமிழ்வேதமும் ரிக் வேதமும்!

கருமிகளையும் கஞ்சர்களையும் கண்டால் இந்துக்களுக்குப் பிடிக்காது. வேத காலம் முதல் வள்ளுவர் காலம் வரை அவர்களைச் சாடியிருக்கிறார்கள். வள்ளுவர் கருமி களின் தாடையில் குத்துவிட்டு கரும்பு போலக் கசக்கிப் பிழி என்கிறார். வேத கால ரிஷிகள் கருமிகளைத் தீர்த்துக் கட்டுங்கள் என்கின்றனர். செல்வத்தின் பயனே ஈதல் என்கிறார் புறநானூற்றுப் புலவர்.
இதோ சில பொன்மொழிகள்:
கன்னத்தில் அடி, கையை முறுக்கு, கரும்பு போல நசுக்கு!
தமிழ் வேதம் ஆகிய திருக்குறள் சொல்லும்:
அதிகாரம் 108, கயவர்கள் பற்றியது. அதில் கஞ்சர்களையும் சேர்த்துத் திட்டுகிறார். கயவர்களின் கன்னத்தில் அடித்து ஆளை நொறுக்கு என்றும் சொல்வான் வள்ளுவன்.
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடுறுடைக்கும்
கூன்கைய ரல்லா தவர்க்கு (1077)
பொருள்: கன்னத்தில் அடித்து நொறுக்கினால்தான் கயவர்கள் உதவி செய்வர். அதுவரை சாப்பிட்ட பின்னர் ஈரக் கையால் கூட உதறித் தெறிக்க மாட்டார்கள்.
பரிதியார் உரை:கொறடாலே அடிப்பவர்க்குக் கொடுப்பர்
காளிங்கர் உரை: கொடிறு போல இடுக்கிப் பிடித்து உடம்பை உடைக்கும் திறமையால் கூனிய கையினை உடையோர்.
இன்னொரு குறளில் கரும்பு போல கசக்கி நசுக்கு என்கிறான்.
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ் (1078)
ரிக் வேதம் சொல்கிறது:
இந்திரனுக்கு பரிசு கொடுக்காதவர்களை அவன் எப்போது தன் காலடியில் களைகளைப் போட்டு மிதிப்பது போல மிதிப்பான்? (1-84-8)
(இங்கே இந்திரன் என்பது கடவுள் என்ற பொருளில் வந்துள்ளது; தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் கடவுளுக்கும் அரசனுக்கும் ஒரே சொல்தான்; நிறைய எடுத்துக் காட்டுகள் உண்டு; இதோ ஒன்று மட்டும்; கோ= அரசன், கடவுள்; கோவில்= அரண்மனை, இறைவன் உறைவிடம்; வேதங்களில் இந்திரன் என்பது அரசனையும், இறைவனையும் குறிக்கும்; இன்றுவரை நாம் கூட ராஜேந்திரன், மஹேந்திரன் என்று பெயர் வைத்துக் கொள்கிறோம்; இந்திரன் என்ற பெயர் இல்லாத நாடே மனித குலமே உலகில் கிடையாது. ஆங்கிலத்தில் ANDREW ஆன்ரூ என்பர்; அயிந்திர= அண்டிர= ஆன்ருANDREW; ஆய் அண்டிரன் என்ற தமிழ் மன்னன்= அஜேந்திரன்; எனது பழைய ஆய்வுக் கட்டுரைகளில் மேல் விவரம் காண்க)
கருமிகளிடம் செல்வம் தங்காது/நிலைக்காது–RV 7-32-21
கருமிகளைக் கொல்லுங்கள்– 1-184-2
கொல்லச் சுரப்பதாம் கீழ் – என்ற வரிகள் மூலம் ரிக் வேத கருத்தை நாலடியாரும் ஆதரிக்கிறது (இரவலர் கன்றாக ஈவர்……..கொல்லச் சுரப்பதாம் கீழ்).
தொல்காப்பியரும் கருமிகளைத் திட்டுகிறார்:
கொடுப் போர் ஏத்திக் கொடா அர்ப்பழி த்தலும் -1036
கருமிகளை கடலில் தள்ளுக! மஹாபாரதம் அறிவுரை!!
மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் ஒரு அருமையான ஸ்லோகம். இதே கருத்தை வள்ளுவனும் பிற்காலத்தில் எழுதியிருக்கிறான்:–
த்வாவம்பசி நிவேஷ்டவ்யோ கலே பத்வா த்ருடாம் சிலாம்
தனவந்தமதாதாரம் தரித்ரம் ச தபஸ்வினம்
–மஹாபாரதம், உத்யோக பர்வம் 33-60
அதாத தனிக – பணமிருந்தும் கொடுக்க மறுப்பவன்
அதபஸ்வி தரித்ர – (கடவுள்) நம்பிக்கையற்ற ஏழை
த்வா- இருவரும்
கலே பத்வா த்ருடாம் சிலாம்- கழுத்தில் கல்லைக் கட்டி
அம்பசி நிவேஷ்டவ்ய = கடலில் மூழ்கடிக்கப்படவேண்டியவர்கள்.
வெறுமனே கடலில் தூக்கிப்போட்டால், ஒருவேளை நீந்திக் கரை சேர்ந்துவிடுவார்களே என்றெண்ணி, கழுத்தில் கல்லைக் கட்டி கடலில் தூக்கி எறிக என்கிறது மஹாபாரதம்.
AVVAIYAR CLASSIFICATION
உலகில் இரண்டே ஜாதி ONLY TWO CASTES AROUND THE WORLD
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி
— “நல்வழி” ஔவையார்
உலகில் இரண்டே ஜாதிகள்தான் உண்டு; தானம் கொடுப்பவன் உயர் ஜாதி; இல்லை என்று சொல்லுபவன் கீழ்ஜாதி — அவ்வையார் அருள்மொழி
XXX
Misers are the Best Donors; they never eat; leave everything for others after death!
க்ருபண இவ தாதா ந பூதோ ந பவிஷ்யதி
ந புஞ்சன்னேவ சர்வஸ்வம் பரஸ்மை ச: ப்ரதாஸ்யதி
“உலகிலேயே மிகப் பெரிய கொடையாளிகள் கருமிகள்தான்!! அவர்களைப் போல கடந்த காலத்தில் இருந்ததுமில்லை; எதிர்காலத்தில் இருக்கப் போவதுமில்லை. ஏனெனில் அவர்கள் சாப்பிடுவது கூட இல்லை. எல்லாவற்றையும் பிறருக்கே (இறந்தபின்) விட்டு விடுகிறார்கள்.”
இது சம்ஸ்கிருதக் கவிஞர் ஒருவரின் கிண்டல்!
xxx
Trees and Men; Three Types of Men
3 வகை மனிதர்கள் பாக்கு மரம், பனை மரம் தென்னை மரம்
தமிழ் கவிஞர் வேறு ஒரு விதமாக கருமிகளைக் கிண்டல் செய்கிறார். மனிதர்களை மூன்று வகையாகப் பிரித்து விடுகிறார். மனிதர்கள் மூன்று வகையான மரங்களைப் போன்றவர்கள் என்கிறார்.
உத்தமர்தாம் ஈயுமிடத்தோங்கு பனை போல்வரே
மத்திமர்தாந் தெங்குதனை மானுவரே – முத்தலரும்
ஆம் கமுகு போல்வராம் அதமர் அவர்களே
தேங்கதலியும் போல்வார் தேர்ந்து
–நீதிநெறிவெண்பா

பனைமர மனிதர்கள்
பனைமரத்துக்கு தண்ணீர்விடவே வேண்டாம்; அது தண்ணீர் விடாமலே பலன் தரும்; உத்தம மனிதர்களும் அவ்வகையே. பலனை எதிர்பாராமல் பலன் தருவர்.
தென்னைமர மனிதர்கள்
தென்னை மரத்துக்கு அவ்வப்பொழுது தண்ணீர் விட்டால்தான் பலன் தரும். அது போல நடுத்தர (மத்திம) மனிதர்கள், பிறர் உதவி செய்தால் அந்த அளவுக்கு திருப்பி உதவி செய்வர்.
பாக்கு மரமனிதர்கள்
பாக்கு மரமும் வாழை மரமும் எப்பொழுதும் தண்ணீர் விட்டால்தான் பலன் தரும்; அது போன்ற மனிதர்கள் கடைத்தர மனிதர்கள். எப்பொழுதும் பாராட்டினாலோ, பலன் கிடைக்கும் என்று தெரிந்தாலோதான் உதவி செய்வார்கள்.
xxxx
ஆறு கருமிகளுக்கு அம்பலவாணர் போடும் Marks/ மதிப்பெண்!
அறப்பளீசுர சதகம் 38. இழிவு
இரப்பவன் புவிமீதில் ஈனன்;அவ னுக்கில்லை
என்னுமவன் அவனின் ஈனன்
ஈகின்ற பேர்தம்மை யீயாம லேகலைத்
திடும்மூடன் அவனில் ஈனன்!
உரைக்கின்ற பேச்சிலே பலன்உண் டெனக்காட்டி
உதவிடான் அவனில் ஈனன்!
உதவவே வாக்குரைத் தில்லையென் றேசொலும்
உலுத்தனோ அவனில் ஈனன்!
பரக்கின்ற யாசகர்க் காசைவார்த் தைகள்சொலிப்
பலகால் அலைந்து திரியப்
பண்ணியே இல்லையென் றிடுகொடிய பாவியே
பாரில்எல் லோர்க்கும் ஈனன்!
அரக்கிதழ்க் குமுதவாய் உமைநேச னே!எளியர்
அமுதனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அரக்கு இதழ் குமுதம் வாய் உமைநேசனே – சிவந்த
இதழும் செவ்வல்லிபோன்ற வாயும் உடைய உமையம்மையார் காதலனே!,
எளியர் அமுதனே – மெலிந்தவர்க்கு அமுதமானவனே!, அருமை ………
தேவனே!,
புவி மீதில் இரப்பவன் ஈனன் – உலகத்திற் பிச்சையெடுப்பவன்
இழிந்தவன், அவனுக்கு இல்லையென்னும் அவன் அவனில் ஈனன் –
அவ்வாறு இரப்பவனுக்கு (வைத்துக்கொண்டு) இல்லையென்பவன்
அவனைவிட இழிந்தவன் : ஈகின்ற பேர் தமை ஈயாமலே தடுத்திடும்
மூடன் அவனில் ஈனன் – கொடுப்போரைக் கொடாமலே தடுத்துவிடும் அறிவிலி ஈயாதவனிலும் இழிந்தவன்! உரைக்கின்ற பேச்சில் பலன் உண்டு
எனக்காட்டி உதவிடான் அவனில் ஈனன் – சொல்லும் சொல்லிலே
நன்மையுண்டு என்று நம்புவித்துப் பிறகு கொடாதவன் அவனினும் இழிந்தவன், உதவவே வாக்கு உரைத்து இல்லையென்றே சொலும்
உலுத்தனோ அவனில் ஈனன் – கொடுப்பதாகவே உறுதிமொழி கூறிப்பிறகு இல்லையென்றே கூறிவிடும் கஞ்சத்தனமுள்ளவனோ எனின் அவனினும் இழிந்தவன், பரக்கின்ற யாசகர்க்கு ஆசை வார்த்தைகள் சொலி – எங்கும்
பரவியிருக்கும் இரவலர்க்கு (நம்பிக்கை யுண்டாகும்படி) ஆசைமொழிகள் கூறி, பலகால் அலைந்துநிற்கப் பண்ணியே – பலதடவை உழன்று திரியும்படி செய்துவிட்ட பிறகே, இல்லையென்றிடு கொடிய பாவியே பாரில்
எல்லோர்க்கும் ஈனன் – இல்லையென்று ஏமாற்றிவிடும் கொடிய பாவியே உலகில் யாவரினும் இழிந்தவன்.
(வி-ரை.) ‘ஏற்பது இகழ்ச்சி‘,
‘இயல்வது கரவேல்’ ‘
ஈவது விலக்கேல்‘–என்பவை இங்கு உணரத்தக்கவை.
xxx
1.பிச்சையெடுப்பவன் இழிந்தவன்,- 45 / 100 Marks
2.இரப்பதைவிட இல்லையென்பது இழிவு—40/ 100 Marks
3.அதனினும் ஈவதை விலக்குதல் இழிவு- 30/ 100 Marks
4.அதனினும் பேச்சிலே பயனுண்டென நம்பும்படி சொல்லி
ஏமாற்றுவது இழிவு—25/100 Marks
5.நாளை வா என்று வந்தபின் இல்லையெனல் அதனினும்
இழிவு- 15 /100 Marks
6.அதனினும் பலமுறை அலைவித்து இல்லையெனல் இழிவு- 5/100 Marks
முள் சூழ்ந்த பழ மரம் போன்ற மனிதர்கள் Thorny trees
தமிழர்கள் இயற்கை அன்பர்கள். நிறைய பாடல்களில் மனிதர்களையும் மரங்களையும் ஒப்பிட்டு தங்களது கருத்துக்களைச் சொல்லுவார்கள். நல்ல பழம் கொடுக்கும் மரங்களைச் சுற்றி முள் புதர் வளர்ந்தால் பழங்கள் யாருக்கும் பயன்படாது. அது போல சில நல்ல கொடையாளிகளைச் சுற்றி கெட்ட மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் முட்செடிகளைப் போல தானும் கொடுக்கமாட்டார்கள், மற்றவர்களையும் கொடுக்கவிட மாட்டார்கள்.
தாமும் கொடார் கொடுப்போர் தம்மையும் ஈயாதவகை
சேமம் செய்வாரும் சிலருண்டே – ஏம நிழல்
இட்டுமலர் காய்கனிகளிந்து உதவு நன்மரத்தைக்
கட்டுமுடை முள்ளெனவே காண்- –நீதிநெறிவெண்பா
—subham—
Tags- கருமிகள் , ,ரிக் வேதம், தமிழ் வேதம், தமிழ், சம்ஸ்க்ருத நூல்கள், ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்- 5 , கருமி, கஞ்சன்
Posted by Tamil and Vedas on September 16, 2024
https://tamilandvedas.com/2024/09/16/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%b7%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af/

PICTURES ARE TAKEN FROM TTD WEBSITE;THANKS.
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,674
Date uploaded in London – 16 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

திருப்பதி சென்று திருமலையில் ஏறினால் அதிசய வெங்கடாசலபதி நமக்கு தரிசனம் தருவார். இந்த மலையப்ப சுவாமி, ஏழு மலை வாசன் பற்றி புஸ்தகம் புஸ்தகமாக எழுதலாம். அவ்வளவு அற்புதங்களை பகதர்கள் வாழ்வில் செய்துள்ளார். ஆயினும் எல்லா விஷயங்களையும் புல்லட் பாயிண்டில் பார்ப்போம்.
உலகின் பணக்கார வழிபாட்டுத்தலங்களில் திருப்பதி, முன்னிலையில் நிற்கிறது தினமும் 4 முதல் 6 கோடி ரூபாய் வரை உண்டியலில் விழுகிறது!
பாலாஜி என்றும் வெங்கடேஸ்வரன் என்றும் அழைக்கப்படும் பெருமாள் உலகில் அதிகமான பக்தர்களைக் கவர்ந்து இழுக்கிறார்.
பெருமாளே ஒரு அதிசயம்தான். வைஷ்ணவ, சைவ சின்னங்களுடன் காட்சிதருகிறார். இதனால் அருணகிரிநாதர் 500 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய திருப்புகழில் இவர் முருகப் பெருமானே என்று பாடிவிட்டார்.
மக்கள் நாட் கணக்கில் நின்று தரிசிக்கும் ஒரே கடவுள் இவர்தான்.
இந்தியாவில் அதிகமான கல்வெட்டுகள் உள்ள கோவிலும் இதுதான்.
பக்தர்களால் அதிகம் பாடப்பட்ட துதிக்கப்பட்ட கடவுளும் இவர்தான் அன்னமாசார்யா மட்டுமே ஆயிரக்கணக்கில் கிருதிகளை செய்துவிட்டார்.
சுமார் 2000 ஆண்டு வரலாறு உடைய கோவில் இது.
தமிழின் மிகப்பழைய நூலான தொல்காப்பியமே வட வேங்கடத்தைக் குறிக்கிறது.
இன்றுவரை பாலாஜி, வெங்கடேஸ்வரன், வெங்கடாசலபதி, சீனிவாசன், வெங்கட் என்ற பெயர்களை இந்துக்கள் குழந்தைகளுக்குச் சூட்டி வருகிறார்கள்.
தமிழ் இலக்கியம் குறிப்பிடும் பழைய கோவிலும் இதுதான்.
இது 108 வைஷ்ணவ தலங்களில் ஒன்று
****

எங்கே இருக்கிறது ?
சென்னையிலிருந்து 108 கி.மீ. ரயில், விமானம், சாலை வழியாகச் செல்லலாம் சாலை வழியாகச் சென்றால் கோவிலுக்கு மிக அருகில் போகலாம். இயற்கை வனப்புமிக்க 7 மலைகளையும் காணலாம்..பத்தொன்பது கி.மீ தூரம். சுமார் நாற்பது நிமிடங்கள் பிடிக்கும். சென்னை பம்பாய் ரயில்பாதையில் ரேணிகுண்டா சந்திப்பிலிருந்து 12 கி.மீ தூரத்தில் திருப்பதி ரயில்வே ஸ்டேஷன் உள்ளது அங்கிருந்து பஸ்களில் மலைக்குச் செல்லலாம்
நடந்து போனால் 11 கிமீ. மூன்று மணி முதல் ஆறுமணிநேரம் பிடிக்கும். எல்லோரும் போகும்பாதை அலிபிரி பாதை எனப்படும்; 3500 படிகளுக்கு மேல் உள்ளது.
தமிழில் திருவேங்கடம் என்றும் சம்ஸ்க்ருதத்தில் ஆதிவராஹ க்ஷேத்ரம் என்றும் அழைப்பார்கள்
செப்டம்பர் 15, 2024 ல் அவரைத் தரிசித்த பக்தர் எண்ணிக்கை 85,626. இவ்வாறு தினமும் பக்தர்கள் வருகிறார்கள். ஆண்டு முழுதும் விழா தான். ஆயினும் பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பானது
பங்குனி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி கணக்கில் கொண்டு இந்த திருவிழா நடத்தப்படுகிறது

பாலாஜியைப் பாடிய ஆழ்வார்கள்
மங்களாசாசனம் — பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்; பாசுரங்கள் 202–க்கும் மேல்
மூலவர்: திருமலையில், திருவேங்கடமுடையான். ஸ்ரீநிவாசன் வெங்கடாசலபதி. பாலாஜி, ஏழுமலையான் திருவேங்கடத்தான்.
உத்சவர் _ திருமலையில் கல்யாண வெங்கடேஸ்வரன், மலையப்ப சுவாமி
திருமலையில், கிழக்கு நோக்கி திருமுகமண்டலம்.
தீர்த்தம்– 1. ஸ்வாமி புஷ்கரிணி, 2. பாபவிநாசம், 3. ஆகாசகங்கை, 4. கோனேரி, 5. வைகுண்ட தீர்த்தம், 6. சக்ரதீர்த்தம், 7. ஜபாலி தீர்த்தம், 8. வகுள தீர்த்தம், 9. பாண்டவ தீர்த்தம், 10. இராமகிருஷ்ண தீர்த்தம், 11. தும்புரு தீர்த்தம், 12. சேஷ தீர்த்தம், 13. சுகஸந்தன தீர்த்தம் 14. மொர தீர்த்தம்.
கோவிலுக்கு அருகிலுள்ள புஷ்கரிணி/ குளம் மிகவும் பெரியது; அழகானது.
ஸ்தல வ்ருக்ஷம்- புளியமரம்
****

கோவிந்தா கோவிந்தா
நைமிசாரண்ய ரிஷிகள், கோவிந்தா என்ற திருநாமத்தை மட்டுமே ஒலித்துக்கொண்டு, திருமலை ஏறினார்கள் என்று வராஹ புராணத்தில் உள்ளது; இன்றும் பக்தர்கள் கோவிந்தா என்ற கோஷத்தை மட்டுமே சொல்கிறார்கள்.
திருப்பதி லட்டு
இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் புகழ் பெற்றது. இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தினரைத் தவிர வேறெவரும் தயாரித்து விற்கமுடியாது ; 1931 ஆம் ஆண்டு திருப்பதியில் லட்டுப் பிரசாதத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் கல்யாணம் ஐயங்கார் எனும் பெரியவர்.
****
நான் 24 AUGUST 2019 ல் எழுதிய கட்டுரையிலிருந்து முக்கியத் தகவல்கள்
திருப்பதியில் அதிசயம்- உலகிலேயே அதிகமான கல்வெட்டுகள் (Post No.6925)

திருப்பதி என்றவுடன் வெங்கடாசலபதியும் அவருடைய உண்டியலும், லட்டு-ம் தான் நம் கண்ணுக்கு முன்னே வரும். அங்கு மிகப்பெரிய வரலாற்றுப் புதையல் , தமிழ் வரலாற்றுப் புதையல்- இருப்பது பலருக்கும் தெரியாது. அதுவும் தமிழ் வரலாற்றுப் புதையல்.
2000 ஆண்டுக்கும் மேலாக வேங்கட மலை உச்சியில் நின்றுகொண்டு, போகும் வருவோரின் பணத்தை எல்லாம் வாங்கிக் கொண்டு, உலக அரசியல்வாதிகளைத் தன் கோவிலுக்கு வரவழைக்கும், காலடியில் விழ வைக்கும் வேங்கட நாயகனுக்கு பல சிறப்புகள் உண்டு. அருணகிரிநாதர் அவரை முருகா என்று பாடுகிறார்; பேயாழ்வரோ அவரை சிவனே என்று பாடுகிறார்; குல சேகர ஆழ்வாரோ உனது மலையில் எனக்குப்
பறவையாகவோ, புதராகவோ, சுனையாகவோ இருக்க அருள் புரி; அதுவும் முடியாவிட்டால், Please, At least ப்ளீஸ், அட் லீஸ்ட் என்னை வெற்றிலை எச்சில் துப்பும் தட்டாகவாது செய்து விடு என்று இறைஞ்சுகிறார்.
சிலப்பதிகார இளங்கோவோ பாடிப்பரவுகிறார். புரந்தரதாசரோ 600 ஆண்டுக்கு முன்னரே அவரை கிண்டல் செய்கிறார்; நீ ஒரு சரியான செட்டிப்பயல்; காசிலே கறாரான கெட்டிப் பயல் என்று கன்னடத்தில் பாடி சந்தோஷப்படுகிறார்.
kAsu tappidare paTTi baTTi kAsu biDade kaNDu kaTTi
dAsanendare biDa gaTTi namma kEsakki timmappasetti
இதில் எல்லாம் மயங்கிப் போன நமக்கு அங்குள்ள தமிழ்க் கல்வெட்டுகள் பற்றி அதிகம் தெரிவதில்லை. எனக்கும் தெரியாது . நேற்று லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரிக்குச் சென்று ஆறு தடித் தடிப் புஸ்தகங்களைத் தூக்கி வந்து படித்தபோது நிறைய அதிசயச் செய்திகள் கிடைத்தன. சில செய்திகளைக் காண்போம்.
பல்லவர் காலம் முதல் அண்மைக்காலம் வரை கல்வெட்டு மூலமே 800 ஆண்டு வரலாறு கிடைக்கிறது இவ்வளவு நீண்ட வரலாறு ஒரு கோவிலில் உலகில் வேறு எங்கும் கிடைக்காது!
திருப்பதி கோவிலிலும் புனித மலை வளாகத்திலும் 1150 கல்வெட்டுகள் உள்ளன. இது 1930ம் ஆண்டு கணக்கு! அவைகள் பெரும்பாலும் தமிழ் மொழியில்தான் இருக்கின்றன. ஏன் தெரியுமா?
சிவன் உடுக்கை அடித்தபோது ஒரு புறம் தமிழ் ஒலியும் மறுபுறம் ஸம்ஸ்க்ருதமும் வந்ததாம். இதற்குச் சான்று தமிழ் இலக்கியத்தில் உள்ளது பரஞ்சோதி முனிவர் பாடிய திருவிளையாடல் புராணம் அகஸ்தியரும், பாணினியும் எப்படி இரண்டு மொழிகளை சிவ பெருமானிடமிருந்து பெற்றனர் என்று பாடி இருக்கிறார்.
ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகளோடு கவிஞர்கள் பாடிய பாடல்கள் அடங்கிய 3000 தாமிர சாசனங்கள் இருக்கின்றன. இதில் அன்னமாச்சார்யா பாடிய கீர்த்தனைகளை அறியாத சங்கீத வித்துவான் கிடையாது.
ஆக உலகிலேயே அதிக கல்வெட்டுகள் நிறைந்த ஒரு வழிபாட்டுத் தலம், உலகிலேயே கல்வெட்டு மூலமே 800 ஆண்டு வரலாற்றைச் சொல்லும் ஒரு இடம், உலகிலேயே அதிகமான தமிழ்க் கல்வெட்டுகள் உள்ள இடம், உலகிலேயே அதிகமான தாமிர சாசனங்கள் உள்ள இடம், உலகிலேயே அதிகமான பக்தர்கள் வரும் இடம், உலகிலேயே அதிகமான வசூல் செய்யும் சாமி என்று எல்லா வகையிலும் வேங்கட +அசல+ பதி சாதனைப் புத்தகத்தில் நுழைந்து விடுகிறார்.
1150 கல்வெட்டுகளையும் படியெடுத்து வெளியிட்ட பெருமை சாது சுப்ரமண்ய சாஸ்திரியைச் சாரும். அவர், சிறப்புக் கல்வெட்டு பயிற்சி பெற்ற திருப்பதி கோவில் தொல்பொருட் துறை அறிஞர்; அவரை முன்னின்று நடத்திய பெருமை தேவஸ்தான விசாரண கர்த்தா சுவாமி மஹந்த் பிரயாகதாஸ்ஜியைச் சாரும். 1930ம் ஆண்டிலேயே இவைகளை வெளியிட்ட பெருமை கோவிலைச் சாரும். இவைகளை சேர்த்துவைத்து இலவசமாகப் படிக்க அனுமதிக்கும் பெருமை லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியைச் சாரும்.
1150 கல்வெட்டு பற்றியும் ஒவ்வொரு கட்டுரை எழுதலாம். இவைகளை ஆராய்ந்து பத்து டாக்டர் பட்டம் பெறலாம் ; அவ்வளவு விஷயம்.
பல்லவன் தந்திவர்மன் அவனது 51ஆவது ஆட்சியாண்டில் ஒரு கல்வெட்டு வழங்கியுள்ளான்.
51 ஆண்டுக்காலம் ஆண்ட மன்னன் தந்திவர்மன்!
ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் முதலியோர் கல்வெட்டுகளும் உள.
பழங்கால பல்லவ, பாண்டிய, சோழ , விஜய நகர மன்னர்களின் 236 கல்வெட்டுகள் ஆங்கில மொழிபெயர்ப்புடன் முதல் தொகுதியில் உளது.
ஏனைய 5 தொகுதிகளில் உள்ள கல்வெட்டுகள் :-
சாளுவ நரசிம்மன் -169 கல்வெட்டுகள்,
கிருஷ்ணதேவராயர்- 229 கல்வெட்டுகள்,
அச்யுதராயர்- 251 கல்வெட்டுகள்
சதாசிவராயர்-147 கல்வெட்டுகள்
ஆரவீடு வம்சாவளி- 135 கல்வெட்டுகள்
இவர்களில் வண்னமிகு மன்னன் – மாமன்னன், சக்ரவர்த்தி– கிருஷ்ண தேவராயர் ஆவார்; 35 முறை வெங்கடாசலாதி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தவர். ஆமுக்த மால்யதா எழுதி ஆண்டாள் புகழ்
பாடியவர் அவருக்கு நான்கு மனைவிகள். இது போன்ற ஏராளமான வரலாற்றுத் தகவல்கள், கலெட்டுகளுக்குப் பின்னணியாக தரப்பட்டுள்ளன.
*****

திருப்பதி மலைமேல் முருகன் !
(எனது பழைய அக்கட்டுரையில் ஒரு பகுதி)
திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை– 9
அருணகிரிநாதரால் பாடப்பட்டு நமக்குக் கிடைத்துள்ள அற்புதமான 1300+ திருப்புகழ் பாடல்களில் பல அழகான சொல்லாக்கமும், சொல்லாட்சியும், சொற்சிலம்பமும் இருப்பதை கண்டோம். அவர் போடும் பல புதிர்களுக்கு விடை கிடைக்காமல் அறிஞர்கள் திண்டாடுகிறார்கள் ஒரு மூன்று புதிர்களை மட்டும் இங்கே காண்போம்.
1. திருவேங்கட மலையில் முருகன் கோவில் இருப்பதாகப் பாடுகிறார். நமக்குத் தெரிந்து வேங்கடாசலபதி (பாலாஜி ) கோவில் இருக்கிறது. அப்படியானால் முருகன் கோவில் ஒன்று இருந்து அழிந்துவிட்டதா? அல்லது இப்போதைய பாலாஜி கோவில் ஒருகாலத்தில் முருகன் கோவிலாக இருந்ததா? இது அவர் போடும் முதல் புதிர்.
1. சரஸ்வதி நதிக்கரையில் வயிரவி வனம் என்று ஒரு இடம் இருப்பதாகவும் அங்கே முருகன் கோவில் இருப்பதாகவும் பாடுகிறார். சரஸ்வதி நதி வேத காலத்தில் ஓடி மகாபாரத காலத்தில் மறையத் துவங்கிவிட்டது. அருணகிரி காலத்தில் சரஸ்வதி நதி இல்லையே! நமக்குத் தெரிந்து வயிரவி வனம் என்று ஊரும் இல்லையே. வயிரவி வனம் எது? முருகன் கோவில் எங்கே? இது அவர் போடும் இரண்டாவது புதிர்.
1. பிள்ளையார் கையில் ஒரு மாதுளம் கனியை பார்வதி தேவி கொடுத்ததாகப் பாடுகிறார். அது என்ன புதிய கதை? நமக்குத் தெரிந்ததெல்லாம் பழனியில் மாங்கனி கொடுக்கப்பட்டது. முருகன் கோபித்துக் கொண்டு ஓடிப் போய் தண்டாயுதபாணியாக நின்றார். இந்த மாதுளம் பழக் கதை என்ன?
திருப்பதி (திருவேங்கடம்) பற்றி அருணகிரி நாதர் பாடியது இதுதான்:
வேந்த குமார குகசேந்த மயூர வட
வேங்கட மாமலையில் உறைவோனே
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது
வேண்டவெறாது உதவு பெருமாளே
திருவேங்கடத்தில் பாடிய இன்னும் ஒரு திருப்புகழில்
ராவணார் முடி பொடியாகச்
சிலை வாங்கிய நாரணார் மரு
மகனாம் குகனே பொழில் சூழ்தரு
திருவேங்கடமாமலை மேவிய பெருமாளே
என்று பாடுகிறார்.
திருப்பதி கடவுள் பற்றி நிறைய புதிர்கள் உள்ளன. வேறு எந்த வைணவ தலங்களிலும் இல்லாத உருவ அமைப்பும், பல நடைமுறைகளும் பூஜைகளும் திருவேங்கடநாதருக்கு இருக்கின்றன. ஆனால் சிலப்பதிகார காலம் முதல் ஆழ்வார்கள் காலம் வரை அங்குள்ள விஷ்ணுவையும் பாடி இருக்கிறார்கள் அப்படியானால் முருகன் கோவில் எங்கே? இதுவரை ஏழு மலைகளில் முருகன் கோவில் கண்டுபிடிக்கப்படவில்லை
வேங்கடேசன் என்று சிவனைப் போல ‘ஈஸ்வரன்’ என்று பெயர் வைக்கிறோம். பொதுவாக ‘ஈசன், ஈஸ்வரன்’ என்பது சிவனையே குறிக்கும். எதற்காக ஈசன் பெயரைச் சேர்க்கிறார்கள்? ‘வேங்கட சுப்ரமணி’யனென்றும் பெயர் வைக்கிறோம். வேங்கடத்தில் (திருப்பதி-திருமலை) சுப்பிரமணியன் எங்கே இருக்கிறார்? குன்று தோராடும் குமரன் தமிழக வட எல்லையான வேங்கடத்தில் கட்டாயம் கோவில் கொண்டிருப்பாரே? அது எங்கே? சிலர் விஷ்ணு கோவில் (பாலாஜி), முதலில் முருகன் கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள். அதற்கும் ஆணித்தரமான ஆதாரங்கள் இல்லை.
இருதரப்பு வாதங்களையும் படித்த பின்னர் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஒருவேளை இரண்டு கோவில்களும் இருந்து ஒன்று மறைந்திருக்கலாம். தமிழ் நாட்டில் கூட சிதம்பரம் போன்ற இடங்களில் சிவனும் விஷ்ணுவும் அடுத்தடுத்து இருப்பதைப் பார்க்கிறோம். “அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு” என்ற பொன்மொழியை அறிந்தவர்களுக்கு இது வியப்பு தராது. காலப் போக்கில் ஒன்று மறைந்திருக்க வாய்ப்பு உண்டு. தமிழ்நாட்டில் பலகோவில்களில் பலராமன் வழிபாடும் இருந்தது. ஆனால் இன்று அறவே இல்லை. புறநானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் பலராமன் வழிபாடு உள்ளது. பழமுதிர்ச்சோலை காணாமற்போகவே நமது காலத்தில் நாமாக புதிய பழமுதிர்ச்சோலையை உருவாக்கினோம்.
நமது ரெகுலர் வாசகரும் பேரரறிஞருமான காலஞ்சென்ற நஞ்சப்பா அவர்கள் தரும் தகவல்
R.Nanjappa
/ August 24, 2019
Tirupathi- the abode of Balaji,the most famous and wealthy of our Hindu temples- is it a wonder or mystery?
If we follow the ancient Tamil tradition of the five-fold division of the land with a Deity for each, then the hilly region of Tirumala-Tirupati qualifies as Kurinji land, of which the presiding Deity is Subrahmanya, the eternal Kumara ie Balaji! So claims are made that this was originally a Subrahmanya temple.
On the other hand, ancient Tamil literature gives the extant of the land of the Tamil speaking people as “lying between Venkatam in the North and Kumari in the South”. The interesting inference here is that as Kumari is the famous seat of Devi, which is the southern border, the northern border could as well have been a seat of Devi!. In fact we see the image of lion on the four corners of the Gopuram in Tirupati, and lion is the va-hana of Devi!
When Swami Brahmananda [ Rakhal Maharaj] the spiritual son and direct disciple of Sri Ramakrishna and the first President of the RK Math and Mission visited Tirupati around 1911/12, he had a mystic experience there. He felt the presence of Devi there. He asked the priests there about the Deity. And the priests confirmed that it had been a De-vi temple. This is clearly stated in the book ‘Swami Brahmananda As We Knew Him’, published by RK Math, Chennai.
So there is enough mystery surrounding this temple. Wish someone will unravel it with-out bigotry and prejudice.
நாமக்கல் மலைமீது பெரிய நாமம் இருந்தது உண்மை. நான் 60களில் சேலத்திலிருந்து திருச்சி செல்லும் போது அதைப் பார்த்திருக்கிறேன்.
நந்தி உருவம் போல் வேறு பல தெய்வ உருவங்களும் பிற இடங்களிலும் இருக்கலாம். இத்தகைய ஆஞ்சனேயர் உருவம் ஒன்றை நான் அறிவேன். 60களில் சேலம்-பங்களூர் ரயில் பாதை (மீட்டர் கேஜ்) புதிதாக அமைக்கப்பட்டு வந்தது. அதில் தர்மபுரியிலிருந்து சுமார் 12 மைல் தொலைவில் முத்தம்பட்டி என்ற இடத்தில் ரயில் தண்டவாளம் உயரத்தில் இருக்கும். இருபக்கமும் உயர்ந்த குன்று/மலை. கன்ட்ராக்டர் தினமும் அங்கு ஜல்லிக்கல்லைக் கொட்டி தளத்தை உயரச்செய்வார்;மறுநாள் காலையில் அது கலைந்திருக்கும்! இப்படி பலமுறை நடந்தபின் அங்கு வேலை செய்பவர்களுக்கு ஏதோ பயம் தோன்றியது. அப்போது ரயில் தடத்தின் இருபுறமும் வளர்ந்திருந்த செடிகொடி புதர்களை நீக்கி மலையைத் தேடிப்பார்த்தார்கள். ஒருபுறம் மலையில் ஒரு ஆஞ்சனேயர் உருவம் செதுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே கன்ட்ராக்டர் தன் செலவில் அதற்குமுன் ஒரு மேடை அமைத்து, கோபுரம்போல் ஏதோ சிறிதாகக் கட்டுவதாகவும் , பூஜைக்கு ஏற்பாடு செய்வதாகவும், ஆஞ்சனேயர்தான் தடங்கல் இல்லாமல் ரயில் பாதை சரியாக அமைய அருள்புரியவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார். அதன்பிறகு வேலைகள் துரிதமாக நடந்தன. கன்ட்ராக்டரும் தன் வேண்டுகோள்படி ஆஞ்சனேயர் திருமுன் மேடை அமைத்து, கோபுரம் போல் சிறிய அமைப்பையும் மலையையொட்டியே எழுப்பி, 1967ல் பெரிய விழாவாக பூஜை செய்தார். இந்த உருவம் எப்போது யார் செதுக்கியது என்று தெரியவில்லை. இது வியாசராயர் நிறுவிய 732 விக்ரஹங்கள் போல் இல்லை. சேலம்-பெங்களூர் புதிய இருப்புப்பாதையில் 1968 ஜனவரி பொங்கலன்று ரயில் போக்குவரத்து தொடங்கியது. அதன்பிறகு ஒவ்வொரு வருடமும் தை அமாவாசையன்று அந்த ஆஞ்சனேயருக்கு விழா எடுத்தார்கள். அப்போது முத்தம்பட்டிக்குச் செல்ல யாரும் டிக்கட் வாங்கவேண்டியதில்லை! முத்தம்பட்டி ஸ்டேஷன் சிறிது தள்ளி இருந்தாலும் பாசஞ்சர் ரயிலை கோவிலுக்கு நேரெதிரிலேயே நிறுத்துவார்கள். எக்ஸ்பிரஸ் வண்டி அங்கு வரும்போதெல்லாம் இஞ்சினில் விசில் அடித்து தங்கள் மரியாதையைத் தெரிவிப்பார்கள். இப்படிப் பல வருஷங்கள் நடந்தன. தற்போது நிலை தெரியவில்லை!
****
திருப்பதி கோவில் அறிவிப்பு
திருமலையில் பிறந்தார் அனுமன்!
’திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள, சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்ரி என்ற மலை தான், அனுமனின் பிறப்பிடம்’ என, திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமான ஆதாரங்களுடன் அறிவித்தது.
ராம பக்தரான அனுமன் பிறந்த இடம் குறித்து, புராணங்களிலும், இதிகாசங்களிலும் பல்வேறு குறிப்புகள் உள்ளன. வெங்கடாசல மகாத்மியம் உள்ளிட்ட சில புராணங்களில் அனுமன் பிறந்த இடம், திருமலையில் அமைந்துள்ள அஞ்சனாத்ரி மலை என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்வு செய்ய, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் முரளி தர சர்மா தலைமையில், பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் அடங்கிய குழுவை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் நியமித்தது. இக்குழுவினர், நான்கு மாதங்களாக ஆய்வு நடத்தி, தங்கள் அறிக்கையை நேற்று வெளியிட்டனர். அதில், ‘திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள சோஷாசல மலைத் தொடரில் ஒன்றான, அஞ்சனாத்ரி மலையில் தான், அனுமன் பிறந்தார்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விளக்க உரை மற்றும் ஆதாரங்கள் அடங்கிய, 20 பக்க கையேடும் வெளியிடப்பட்டது.
இந்தப் பணிக்காக ஆய்வு செய்யப்பட்ட, 12 புராணங்களிலும் அனுமன் திருமலையில் பிறந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், 12 மற்றும் 13ம் நுாற்றாண்டுகளில் எழுதப்பட்ட பல புராணங்களில் அஞ்சனாத்ரி பற்றிய குறிப்புகள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
****
QUIZ திருப்பதி பத்து QUIZ (Post No.12,291)
Post No. 12,291
Date uploaded in London – 18 July , 2023
1.திருப்பதியில் இருப்பது முருகனே என்று பாடியவர் யார் ?
2.திருப்பதியில் எத்தனை கல்வெட்டுகள் இருக்கின்றன ?
****
3.திருமலையில் உள்ள புதராகவோ பறவையாகவோ , சுனையாகவோ பிறந்தாலும் போதும் என்று பாடியவர் யார்?
****
4.திருமலையில் உள்ள பெருமாள் மீது அதிக துதிகளை இயற்றியவர் யார்?
****
5.வெங்கடேச சுப்ரபாதத்தை இயற்றியவர் யார் ? ஸுப்ரபாதத்தின் முதல் வரி எங்கிருந்து எடுக்கப்பட்டது ?
****
6.திருப்பதி மலையை தமிழ் பாட்டுக்கள் எப்படிக் குறிப்பிடுகின்றன?
****
7.திருப்பதியில் உள்ள அருவியின் பெயர் என்ன?
XXXXXX
8.ஏழு மலையான் என்று ஏன் பெருமாளை அழைக்கின்றனர்?
****
9.பெருமாள் எப்படி உலகிலேயே பணக்கார கடவுள் ஆனார்?
****
10.வெங்கடாசலபதியைத் தரிசிக்கும் பக்தர்கள் உடனே வழிபடும் திருமலைக்குக் கீழேயுள்ள கோவில் எது ?
****

விடைகள்
1.முருகனே என்று பாடியவர் அருணகிரி நாதர் (திருப்புகழில் ); சிவனே என்று பாடியவர் பேயாழ்வார்.
திருப்பதி (திருவேங்கடம்) பற்றி அருணகிரி நாதர் பாடியது இதுதான்:
வேந்த குமார குகசேந்த மயூர வட
வேங்கட மாமலையில் உறைவோனே
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது
வேண்டவெறாது உதவு பெருமாளே
திருவேங்கடத்தில் பாடிய இன்னும் ஒரு திருப்புகழில்
ராவணார் முடி பொடியாகச்
சிலை வாங்கிய நாரணார் மரு
மகனாம் குகனே பொழில் சூழ்தரு
திருவேங்கடமாமலை மேவிய பெருமாளே
என்று பாடுகிறார்.
கச்சியப்ப சிவாசாரியார் திருவேங்கடத்தில் முருகன் இருந்தான் என்பதற்கு ஒரு வரலாற்றைச் சொல்கிறார்………. … தாமரைமலர் போன்ற வடிவுடைய சிவந்த திருக்கத்தில் வேலாயுதத்தை ஏந்திய குமரக் கடவுளே குகையின் வழியாக வந்து வெளிவந்த மலையாகிய சிகரத்தையுடைய திருவேங்கடமலை மீது எழுந்தருளியுள்ள பெருமாளே…என்கிறார்
****
2.திருமலை-திருமலை கோவிலிலும் அதன் கீழ் வரும் பகுதியிலும் 1150-க்கு மேலான கல்வெட்டுகள் உள்ளன. உலகிலேயே அதிக கல்வெட்டுகள் உள்ள வழி பாட்டுத் தலம் இதுதான். பல்லவர் காலம் முதல் 800 ஆண்டு வரலாற்றைக் கல்வெட்டுகள் மூலம் அறியலாம் .
****
3. குலசேகர ஆழ்வார்
****
4.திருப்பதி பெருமாள் குறித்து அதிகமான பாடல்களை இயற்றியவர் அன்னமாச்சார்யா
****
5.பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியாரால் ஸம்ஸ்க்ருத மொழியில் இயற்றப்பட்டது.
இதன் முதல் வரி கெளசல்யா ஸுப்ரஜா சந்த்யா பிரவர்த்ததே — என்பது வால்மீகி ராமாயணத்தில் உள்ள வரி .
कौसल्यासुप्रजा राम पूर्वा संध्या प्रवर्तते ।
उत्तिष्ठ नरशार्दूल कर्त्तव्यं दैवमाह्निकम् ॥- Valmiki Ramayana
kausalyāsuprajā rāma pūrvā sandhyā pravartate ।
uttiṣṭha naraśārdūla karttavyaṃ daivamāhnikam ॥
Valmiki Ramayna Translation, 1.23.2
O Rāma, the noble son of Kausalyā! The Sandhyā of the East commences. O! best of men (Purushottama)! Wake up, the daily duties have to be performed.
The Veṅkaṭeśasuprabhātam begins with this very verse.
****
6.வடவேங்கடம் முதல் தென்குமரி
தொல்காப்பியத்துக்கு பாயிரம் எழுதிய பனம்பாரனார் சொல்கிறார்
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து—(தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3)
****
நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு
(சிலப்பதிகாரம்,வேனிற்காதை:1-2)
****
பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்…..(அகநானூறு, 211:7-மாமூ லனார் )
XXXX
7.ஆகாய கங்கா.
திருமலையில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று ஆகாச கங்கை. இங்கிருந்து தான் தினமும் திருமலை ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்ய நீர் கொண்டுவரப்படுகிறது. இந்த நீரில் பக்தர்களும் பொது மக்களும் குளித்து மகிழ அனுமதி உண்டு. இந்த இடம் ஸ்ரீ வாரி திருக்கோயிலில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
****
8.திருமலை வெங்கடாசலபதி, ஏழு குன்றுகள் இடையே காட்சி தருகிறார். அவையாவன:
Vrushabhadri – விருஷபாத்ரி
Anjanadri – அஞ்சனாத்ரி (ஹனுமான் பிறந்த இடம்)
Neeladri – நீலாத்ரி
Garudadri or Garudachalam – கருடாத்ரி
Seshadri or Seshachalam – சேஷாத்ரி
Naraynadri–நாரதாத்ரி அல்லது நாராயணாத்ரி
Venkatadri – வேங்கடாத்ரி
****
9.திருப்பதி பாலாஜி தன் திருமணத்துக்காக குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், கடனை அடைப்பதற்காக பக்தர்களிடம் காணிக்கை வாங்குகிறார் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். 600 ஆண்டுகளுக்கு முன்னர் கீர்த்தனை பாடிய புரந்தரதாசரோ நீ சரியான செட்டிப்பயல் என்று பெருமாளை கிண்டல் செய்கிறார்..
****
10.திருப்பதியிலி ருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள திருச்சானூர் என்றும் அலமேல் மங்காபுரம் என்றும் அழைக்கப்படும் புனிதத் தலத்தில் பத்மாவதி தாயாரின் அழகிய திருக்கோவில் உள்ளது.
****
தொல்காப்பியர் காலத்தில் திருப்பதி
தொல்காப்பியத்துக்கு பாயிரம் (முன்னுரை) எழுதிய பனம்பாரனார் பாடுகிறார்:-
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ் கூறு நல்லுலகத்து
வழக்கும் செய்யுளும் ஆ இரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கைச் சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு
…………………
பொருள்:-
வடக்கே வேங்கட மலையும் தெற்கே குமரி முனையும் ஆகிய இந்நிலத்திற்கு இடைப்பட்ட செந்தமிழ் பேசும் தமிழகத்தில் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்ற இரு வழக்குகளில் உள்ள எழுத்து, சொற்கள், பொருள்களை நன்கு ஆராய்ந்து (தொல்காப்பியர் நூல் இயற்றினார்).

புராணங்களில் வரும் 56 தேசங்களில் திராவிட தேசத்துக்கும் தெற்கில்தான் பாண்டிய சோழ தேசங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆக திராவிட என்ற சொல்லையும் தமிழ்நாட்டுக்குப் பயன்படுத்த வில்லை.
கம்பன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்;
வடசொற்கும் தென்சொற்கும் வரம்பு ஆகி
நான் மறையும் மற்றை நூலும்
இடைசொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய்
நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு
புடை சுற்றும் துணை இன்றிப் புகழ் பொதிந்த
மெய்யேபோல் பூத்துநின்ற
அடைசுற்றும் தண்சாரல் ஓங்கிய
வேங்கடத்தில் சென்று அடைதீர் மாதோ
பொருள்:-
வடமொழிக்கும் தென்மொழியாகிய தமிழ் மொழிக்கும் எல்லையாகியும், நான்கு வேதங்களுக்கும், ஆறு அங்கங்களுக்கும் மற்றுமுள்ள நூல்களுக்கும் முடிவான பொருளைக் காட்டுவதாகவும் நல்லறங்களின் மேன்மையாகவும், ஈடு இணை இல்லாததும் புகழ்மிக்கதும், எல்லோரும் வணங்கக்கூடியதுமான, குளிர்ந்த மலைப்பகுதியான வேங்கட மலையில் போய்த் தேடுங்கள்.–கிட்கிந்தா காண்டம், நாடவிட்ட படலம்- கம்ப ராமாயணம்
சீதையைத் தேடச் செல்லும் வானரப் படைகளுக்கு கட்டளையிட்டபோது இச்செய்யுள் கூற்று வருகிறது
–SUBHAM–
TAGS- ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள், Part 32, திருப்பதி கோவில் , அதிசயங்கள், முருகன் கோவில், அருணகிரிநாதர் , அதிகமான கல்வெட்டுகள் , லட்டு, பக்தர் எண்ணிக்கை , அனுமன் பிறந்த இடம், தொல்காப்பியத்தில் , திருமலை
Posted by Tamil and Vedas on September 16, 2024
https://tamilandvedas.com/2024/09/16/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af%e0%ae%99%e0%af%8d/