
Post No. 13,749
Date uploaded in London – 5 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஜோதிடம்-தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள் -12
Part 12
ஷேக்ஸ்பியரும் ஜோதிடமும்
ஜோதிடத்தில் ஷேக்ஸ்பியருக்கு நல்ல நம்பிக்கை இருந்ததை அவருடைய நாடக வசனங்களிலிருந்து அறிய முடிகிறது. நாம் கிரகங்கள் என்று சொல்வதற்குப் பதிலாக அவர் நட்சத்திரங்கள் என்ற சொல்லை பிரயோகிக்கிறார். இது அவரது நமபிக்கை என்பதோடு ஐநூறு வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பா முழுதும் இருந்த நம்பிக்கை என்று கொண்டாலும் பொருந்தும்.
தமிழர்களுக்கு ஜோதிடத்திலும் சகுனத்திலும் இருந்த நம்பிக்கையை சங்க இலக்கிய நூல்களிலிருந்தே காண முடிகிறது . ஒன்றல்ல இரண்டல்ல ; நூற்றுக் கணக்கான குறிப்புகள் கிடைக்கின்றன .
இந்துக்களின் நூல்களிலுள்ள எல்லா குறிப்புகளுக்கும் சம்ஸ்க்ருத நூல்களே அடடிப்படை என்பதை பிருஹத் சம்ஹிதா, பிருஹத் ஜாதகம் ஆகிய நூல்களைப் படித்தோர் அறிவர் . தமிழர்கள் வடக்கத்தியரைப் போல ரோகிணி நட்சத்திரத்தில் கல்யாணம் கட்டியதை அக நானூறு செய்யுட்களில் படிக்கிறோம்.
ஆயினும் சம்ஸ்க்ருத நூல்களை மிஞ்சும் ஒரு விஷயத்தை நான் எனது கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன். நான் செய்த ஆராய்ச்சியில் 27 நட்சத்திரங்களுக்கும் தமிழில் உள்ள பெயர்கள் அளவுக்கு சம்ஸ்க்ருதத்தில் பெயர்கள் இல்லை. இதனால்தான் தமிழன்தான் ஜோதிடத்தைக் கண்டுபிடித்தான் என்று நான் கட்டுரை எழுதினேன் நிற்க.
பாரதியார் ஜோதிடத்தை இகழ் என்று புதிய ஆத்திச்குடியில் சாடுகிறார். மனு ஸ்ம்ருதியோ சில விஷயங்களுக்கு ஜோதிடரைக் கூபிடா தே என்று தடை போடுகிறது
****

மனு ஸ்ம்ருதி
न चोत्पातनिमित्ताभ्यां न नक्षत्राङ्गविद्यया ।
नानुशासनवादाभ्यां भिक्षां लिप्सेत कर्हि चित् ॥ ५० ॥ 6-50
துறவியோ வானப்பிரஸ்தனோ குறி சொல்லியோ ஜோதிடம் கைரேகை பார்த்தோ காசு பணம் வாங்கக்கூடாது
na cotpātanimittābhyāṃ na nakṣatrāṅgavidyayā |
nānuśāsanavādābhyāṃ bhikṣāṃ lipseta karhi cit || Manu 6-50 ||
****
उत्कोचकाश्चोपधिका वञ्चकाः कितवास्तथा ।
मङ्गलादेशवृत्ताश्च भद्राश्चैक्षणिकैः सह Manu Verse 9.258
utkocakāścopadhikā vañcakāḥ kitavāstathā |
maṅgalādeśavṛttāśca bhadrāścaikṣaṇikaiḥ saha || 9-258 ||
லஞ்சம் வாங்குவோர், சூதாடிகள் குறி சொல்லுவோர் கைரேகைக்காரர்கள் ஆகியோரிடத்தில் அரசன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் (9-258)
****
हस्तिगोऽश्वौष्ट्रदमको नक्षत्रैर्यश्च जीवति ।
पक्षिणां पोषको यश्च युद्धाचार्यस्तथैव च ॥ 3-१६२ ॥
hastigo’śvauṣṭradamako nakṣatrairyaśca jīvati |
pakṣiṇāṃ poṣako yaśca yuddhācāryastathaiva ca || 3-162 ||
யார் யாரை திதி, திவசத்துக்குக் கூப்பிடக்கூடாது என்ற நீண்ட பட்டியலில் சோதிடர்களையம் மனு சேர்த்துள்ளார் . திதி /திவசம் முதலியவற்றை முதல் மூன்று வர்ணத்தினரும் செய்வார்கள்.

இனி ஷேக்ஸ்பியர் சொல்வதைக் காண்போம் :
அவருக்கு வானசாஸ்திரம் ஜோதிடம் முதலியவற்றில் அக்கறையும் ஆர்வமும் இருந்ததை கீழ்க்கண்ட புள்ளிவிவரம் காட்டும் :
நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன், கிரகங்கள், கிரககங்கள் பாரிய குறிப்புகள் ஷேக். நாடகங்களில் நானூறு முறைகளுக்கு மேலாகவும் கவிதைகளில் அறுபதுக்கு முறை மேலாகவும் வருகின்றன. மிட் சம்மர் நைட்ஸ் ட்ரீம் என்ற நாடகத்தில் மட்டுமே முப்பது முறை வருகிறது.
Stars, the sun, the moon, planets, eclipses, and astronomy in general are mentioned more than four hundred times in the plays and sixty times in the poems. A Midsummer Night’s Dream contains thirty references to celestial objects, whereas most of the plays average from twelve to twenty each
*****
CALPURNIA
When beggars die, there are no comets seen;
The heavens themselves blaze forth the death of princes.
CAESAR
Cowards die many times before their deaths;
The valiant never taste of death but once.
—Juius Caesar
பிச்சைக்காரர்கள் செத்தால் வால் நட்சத்திரங்கள் வராது;
இளவரசர் இறந்தால் வானம் ஒளி வீசிப் பிரகாசிக்கிறது
ஜுலியஸ் சீசர் நாடகம்
இது புறநானூற்றிலும் உள்ளது
புறநானூற்றில் வால் நட்சத்திரம்
வால் நட்சத்திரம் தோன்றினால் தேசத்துக்கும் அதை ஆள்வோருக்கும் ஆபத்துவரும் என்ற நம்பிக்கை மஹா[பாரத காலத்தில் இருந்து நிலவி வருகிறது. சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இதே செய்தி வருகிறது. ஒரு வால் நட்சத்திரம் தோன்றிய பின்னர் ஒரு சேர மன்னன் இறப்பார் என்று புலவர் கவி பாடினார். எதிர்பார்த்தபடியே அம் மன்னன் ஏழாம் நாளில் இறந்தான். மாபாரதத்திலும் போருக்கு முன் தூமகேது தோன்றியது.

இதோ புறநானுற்றில் உள்ள பாடல்:
புறநானுற்றில் கூடலூக் கிழார் பாடிய பாடல் எண் 229-ல்:
ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அரை இரவில்
முடப்பனையத்து வேர் முதலாக்
கடைக் குளத்துக் கயம் காய
பங்குனி உயர் அழுவத்துத்
தலை நாள்மீன் திரிய…………..
கனை எரி பரப்பக், கால் எதிர்பு பொங்கி
ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே………….. (புறம் 229)
அதாவது தூமகேது ஒன்று தோன்றிய ஏழாம் நாளில் சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை இறந்து விடுவான் என்று கூடலூர்க் கிழார் அஞ்சினார். அதன்படியே அவன் இறந்துபட்டவுடன் புலவர் பாடிய பாடல் இது. சிலர் இதை எரிகல் விழுந்தது என்பர். தினமும் பூமியில் பல்லாயிரக் கணக்கான எரிகற்கள் விழ்வதால் பல அறிஞர்கள் இதை தூம கேது என்றே விளக்கியுள்ளனர்.
****
பாரி வள்ளளின் பெருமையைப் பாடும் கபிலன் அந்த நாட்டில் “மைம்மீன் புகையினும், தூமம் தோன்றினும்,, தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்” (பொருள்: சனிக் கிரகம் புகை போல மங்கிக் காணப்படினும், தூமகேது (வால் நட்சத்திரம்) தோன்றினும், வெள்ளி கிரகம் தென் திசை நோக்கிச் சென்றாலும்) மழை பொய்க்காது என்கிறார். ஆக கபிலரும் தூமகேது தோன்றினால் கெடுதிகள் வரும் என்பதை அறிந்திருந்தார்.
****
அம்பலவாணரும் ஜோதிடம் உண்மையே என்று பாடினர்
அறப்பளீசுர சதகம் அம்பலவாணர்
அறப்பளீசுர சதகம் 52. உண்மையுணர் குறி
சோதிடம் பொய்யாது மெய்யென்ப தறிவரிய
சூழ்கிரக ணம்சாட்சி ஆம்!
சொற்பெரிய வாகடம் நிசமென்கை பேதிதரு
தூயமாத் திரைசாட்சி ஆம்!
ஆதியிற் செய்ததவம் உண்டில்லை என்பதற்
காளடிமை யேசாட்சி ஆம்!
அரிதேவ தேவனென் பதையறிய முதல்நூல்
அரிச்சுவடி யேசாட்சி ஆம்!
நாதனே மாதேவன் என்பதற் கோருத்ர
நமகசம கம்சாட்சி ஆம்!
நாயேனை ரட்சிப்ப துன்பாரம்! அரியயன்
நாளும் அர்ச் சனைசெய் சரணத்
தாதிநா யகமிக்க வேதநா யகனான
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
திருமாலும் பிரமனும் எப்போதும் மலரிட்டு வழிபடும் திருவடிகளையுடைய முதன்மையான தலைவனே!, மிக்கவேத நாயகன் ஆன அண்ணலே –
சோதிடம் கணித நூல் பொய்படாது; உண்மையே என்பதற்கு பொதுமக்களால் அறியமுடியாத கிரகணத்தை அவர்கள் முன் கூட்டியே அறிவிப்பது பெரிய சான்று ஆகும்,
புகழ்பெற்ற பெருமைமிக்க மருத்துவநூல் உண்மையென்பதற்குப் பேதிக்குத் தரும் நல்ல மாத்திரைகளே சான்று தரும்,
முன்னே செய்த நல்வினை உண்டா இல்லையா என்பதற்கு ஆளும் அரசனும் ,அடிமையுமே சான்று ஆகும்.
திருமால் வானவர் தலைவன் என அறிவதற்குச் சிறுவர்கள்க ற்கும் முதல் நூல் அரிச்சுவடியாக இருப்பதே சான்று ஆகும்,
சிவபெருமானே தலைவன் என்பதை அறிவதற்கோ என்னில் ருத்திர நமக-சமகம் என்னும் யஜூர்வேதத் துதியே சான்று ஆகும்,
நாய் போன்று இழிவுற்ற என்னைக் காப்பது உன் பொறுப்பு.
****

KING LEAR PLAY
It is the stars,
The stars above us, govern our conditions.
Else one self mate and mate could not beget
Such different issues. You spoke not with her since?
(It’s the stars, the stars above us who decide our fates. Otherwise one couple couldn’t have children so different from each other as Cordelia and her sisters are. )
கிங் லியர் நாடகத்தில் வரும் வசனம் :
நமக்கு மேலே பிரகாசிக்கும் நட்சத்திரங்களே நம்மை ஆளுகின்றன; நமது தலை விதியை நிர்ணயிக்கின்றன அப்படி இல்லாவிட்டால் கார்டீலியாவுக்கும் அவளது சகோதரிகளுக்கும் பிறந்த குழந்தைகள் எப்படி வெவ்வேறாக இருக்கின்றன ?.
To be continued…………………………………..
–subham—
Tags- ஷேக்ஸ்பியரும் ஜோதிடமும், தமிழ் சம்ஸ்க்ருத நூல்கள்,
ஜோதிடம், ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள், அறப்பளீசுர சதகம், புறநானூறு, கூடலூக் கிழார் புறம் 229, வால் நட்சத்திரம், மனு ஸ்ம்ருதி