WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.761
Date uploaded in London – —9 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தேவார பதிகங்கள் பற்றிய ஆய்வு!
ச. நாகராஜன்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பாடிய தேவாரப் பதிகங்கள் எத்தனை என்பது பற்றிய ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
திருஞானசம்பந்தர்
திரு தி.வே.கோபாலையர் ஆய்வு
திருஞானசம்பந்தர் அருளிய பதிகங்கள் 383.
பாடல்கள் மொத்தம்: 4080
திருவிடைவாய்த்தலம் பற்றிய அவ்வூர் கோவில் கல்வெட்டில் ஒரு தேவாரப் பதிகம் உள்ளது. அந்தப் பதிகம் 384-ம் பதிகம் என்பர்.
திரு பாண்டியராஜா ஆய்வு
திருஞானசம்பந்தர் அருளிய பதிகங்கள் 385
4169 பாடல்கள் இதில் உள்ளன.
16501 அடிகள் உள்ளன.
இவற்றில் வரும் மொத்த சொற்களின் எண்ணிக்கை 1,08,252
சதுரா ஜீ.ச. முரளி அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு பன்னிரு திருமுறை என்ற நூல்கள் சதுரா பதிப்பகம், சென்னை-109 சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி:
திருஞானசம்பந்தர் அருளிய பதிகங்கள் 385
பாடல்கள் 4169
திருநாவுக்கரசர்
Shaivam.org ஆய்வின் படி
திருநாவுக்கரசர் அருளிய பாடல்கள் 49000-ல் நமக்குக் கிடைத்துள்ளவை சுமார் 3000 பாடல்கள். பதிகங்களின் எண்ணிக்கை 312. தலங்கள் 126.
சதுரா ஜீ.ச. முரளி ஆய்வின் படி:=
திருநாவுக்கரசர் அருளிய பதிகங்கள் : 312
அருளிய பாடல்கள் : 3066
சுந்தரர்
திரு தி.வே.கோபாலையர் ஆய்வு
சுந்தரர் அருளிய பதிகங்கள் 100
திரு பாண்டியராஜா ஆய்வு
சுந்தரர் அருளிய பதிகங்கள் 101
1037 பாடல்கள் இதில் உள்ளன.
4146 அடிகள் உள்ளன.
இவற்றில் வரும் மொத்த சொற்களின் எண்ணிக்கை 30,322
சதுரா ஜீ.ச. முரளி ஆய்வின் படி:=
சுந்தரர் அருளிய பதிகங்கள் : 100
அருளிய பாடல்கள் : 1026.
திருநாகைக்காரோணம் பற்றிய ‘பொன்னாம் இதழி விரைமந்தம்’ என்ற சுந்தரர் பதிகம் 101-ம் பதிகமாகக் குறிப்பிடப்படுகிறது. இதை வெள்ளிப்பாட்டு என்பர் . (தி.வே.கோபாலையர் குறிப்பு)
மேலும் சில குறிப்புகள்:
திருஞானசம்பந்தர் 276 தலங்களில் 225 தலங்களில் பாடியுள்ளார்.
பாடாத தலங்கள் 51.
சம்பந்தர் அருளியவை முதல் மூன்று திருமுறைகள்.
அப்பர் அருளியவை நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகள்
சுந்தரர் அருளியது: ஏழாம் திருமுறை.
இந்த ஏழு திருமுறைகளும் தேவாரம் என வழங்கப்படும்.
திருவாசகம் – எட்டாம் திருமுறை
எட்டாம் திருமுறை மாணிக்கவாசகர் அருளியது. இது திருவாசகம் என வழங்கப்படும்.
இதில் திருவாசகம் 858 பாடல்கள்
திருக்கோவையார் பாடல்கள் 400
திரு பாண்டிய ராஜா : திருவாசகத்தில் 51 அதிகாரங்கள் உள்ளன. இதில் 3438 அடிகள் உள்ளன. 21798 சொற்கள் உள்ளன.
ஒன்பது முதல் 12 திருமுறைகள் வரை
ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா, திருப்பல்லாண்டு – 301 பாடல்கள்
பத்தாம் திருமுறை திருமந்திரம் 3000 பாடல்கள்.
திரு பாண்டிய ராஜா : பத்தாம் திருமுறை 3047 பாடல்கள். இதில் 12188 அடிகள் உள்ளன. 58225 சொற்கள் உள்ளன.
11-ம் திருமுறை 40 பிரபந்தங்கள்.
12-ம் திருமுறை சேக்கிழார் அருளிய பெரியபுராணம் – இதில் 4286 பாடல்கள் உள்ளன.
ஆக பன்னிரு திருமுறைகளில் நமக்குக் கிடைத்துள்ள பாடல்கள் 18179 ஆகும். (சதுரா ஜீ.ச.முரளி)
தேவாரத் தலங்கள் 276
தேவாரத் தலங்கள் மொத்தம் 276.
தேவார வைப்புத் தலங்கள் மொத்தம் 283
காவிரியின் தென்கரைத் தலங்கள் மொத்தம் 128
காவிரியின் வடகரைத் தலங்கள் மொத்தம் 63
ஈழ நாட்டுத் தலங்கள் 2
கொங்கு நாட்டுத் தலங்கள் 7
துளுநாட்டுத் தலம் 1
தொண்டைநாட்டுத் தலங்கள் 33
நடுநாட்டுத்தலங்கள் 22
பாண்டிநாட்டுத்தலங்கள் 14
மலைநாட்டுத் தலம் 1
வடநாட்டுத் தலங்கள் 5
ஆக மொத்தம் தலங்கள் : 276 (தி.வே.கோபாலையர் குறிப்பு)
பொதுப்பதிகங்கள் 48-ல்
திருஞானசம்பந்தர் அருளியவை 7
திருநாவுக்கரசர் அருளியவை 37
சுந்தரர் அருளியவை 4
ஆக மொத்தம் 48 (தி.வே.கோபாலையர் குறிப்பு)
இப்படி இன்னும் பல ஆய்வுகள் உள்ளன.
அவையும் ஏறத்தாழ இதே எண்ணிக்கைகளையே குறிப்பிடுகின்றன.