சகுனங்கள்: ஷேக்ஸ்பியர்  தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் -15 (Post13,776)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,776

Date uploaded in London – 13 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்—15

சகுனங்கள் –ஷேக்ஸ்பியர், தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் -15

சகுனங்கள் பற்றி எழுதத் துவங்கினால் மஹாபாரதம் தொடங்கி சங்க காலம் வரையே ஆயிரக் கணக்கான குறிப்புகள் கிடைக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காட்டுப்பன்றி கூட பல்லி சொல்லைக் கேட்டு பயந்து மீண்டும் அதன வலைக்குள் சென்ற செய்தி சங்க இலக்கியத்தில் உள்ளது. திருவள்ளுவரோ தமிழ் வேத நூலில் தும்மல் பற்றிக் கூட சகுன சாஸ்திரம் சொல்கிறார். பஞ்சாங்கத்தைத் திறந்தாலோ பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் ஐந்து பட்சிகளின் சாஸ்திரம் பற்றிப் படிக்கிறோம் ஆந்தை அலறினால் என்ன, காக்காய் வலம் போனால் என்ன , நரி இடம்போனால் என்ன என்று ஆயிரக் கணக்கில் படிக்கலாம். வராஹ மிஹிரர் எழுதிய பிருஹத் ஸம்ஹிதாவில் அத்தியாயம் அத்தியாயமாக சகுனங்கள் பற்றிப் பேசுகிறார். ஷேக்ஸ்பியர் இதில் கொஞ்ச  ம் சளைக்கவில்லை. நூற்றுக் கணக்கான இட ங்களில் சகுனம், தீய அறிகுறிகள், பேய் பிசாசுகள், ஆவி ரூபத்தில் இறந்தோர் வருதல் முதலியவற்றை நாடகங்களில்   அ ள்ளித் தெளித்து இருக்கிறார். அவரது காலத்தில்– அதாவது நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பா முழுதும் இந்து மத நம்பிகைகளே இருந்தன என்பதற்கு இதோ சான்றுகள்

ஜூலியஸ் சீசர் நாடகத்தில் சீசர் இரண்டு முறை குறி சொல்லுவோ பார்க்கிறார் . அவர் ஏழுமுறை மார்ச் மாத ஆபத்து பற்றி எச்சரிக்கிறார்.

இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ரோமானிய சாம்ராஜ்யத்தில் இருந்த குறி சொல்லும் சாஸ்திரத்தையும் அதில் 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஷேக்ஸ்பியருக்கு இருந்த நம்பிக்கையயும் எடுத்துக்காட்டுகிறது

மார்ச் மாத ஆபத்து இதை ஆங்கிலத்தில் The Ides of March என்பர்.

The Ides of March is the day Julius Caesar was assassinated by Roman senators in 44 BCE

மார்ச் மாத ஆபத்து என்பது சந்திரனின் போக்கினை வைத்து கணக்கிடப்படுகிறது. இன்று இந்தியாவில் வேத பாட சாலைகள் எப்படி அஷ்டமி ,நவமி ,அமாவாசை ,பெள ர்ணமி ஆகிய நாட்களில் விடுமுறை விடுகிறார்களோ இதே நம்பிக்கை ரோமானிய சாம்ராஜ்யத்தில் இருந்தது. இன்றும் கூட அஷ்டமி நவமிகளில் பிரதமையில் நாம் முகூர்த்தம் வைப்பதில்லை. ஏழு முறை குறி சொல்லுவோன் எச்சரித்தும் சீசர் அந்த ஆழ கனவு காண்கிறான் இரு சொல்லி புறக்கணித்தார். அவர் பார்லிமெண்டுக்குப் போனபோது 70 எம்பிக்கள் அவரை மாறி மாறி குத்திக் கொல்கிறார்கள். அப்போது அருமை நண்பன் புரூட்டஸ் அவர்களுக்கு தலைமை தாங்கி முதல் கத்திக் குத்து கொடுத்தவுடன் சீசர் கதறுகிறார்

அடடா புரூட்டஸ்! நீயுமா?

“Et tu, Brute?” (Latin: “You too, Brutus?”).

In Act I, Scene 2 of Shakespeare’s Julius Caesar, a soothsayer warns Caesar to take heed of the Ides of March. Caesar dismisses him: “He is a dreamer; let us leave him: pass.”

ஜுவலியஸ் சீசர் படுகொலை நமக்கு இந்திரா காந்தி படுகொலையை நினைவுபடுத்தும்; காவலர்களே அவளைக் கொன்றார்கள். வேலியே பயிரை மேய்ந்ததைக் கண்டோம்.

தமிழ் திரைப்படங்களில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால் அதைக் காட்டாமல் ஒரு ரோஜா மலர் கசங்குவதையும் ஒருவர் இறந்துவிட்டால் ஒரு விளக்கு அணைவதையும்   காட்டுவார்கள். இந்துக்கள் பின்பற்றும் இந்த  உத்தியை ;  ஷேக்ஸ்பியரும் கடைப்பிடிக்கிறார். ஆந்தைகள் அலறினால் யாரோ இறக்கப் போகிறார் என்பது இந்துக்களின் நம்பிக்கை

ஆந்தைகள அலறல்

ஆந்தைகளை தீய பறவைகளாகவே இந்துக்கள் கண்டனர். ஷேக்ஸ்பியரும் அப்படித்தான் .

ஜூலியஸ் சீசரின் படுகொலைக்கு முன்னால், இரவு நேர ஆந்தைகள் பகலில் சந்தைத்திடலில் அலறின என்று ஜூலியஸ் சீசர் நாடகத்தில் கூறுகிறார்

“Yesterday the bird of night did sit, even at noon-day upon the market-place; hooting and shrieking” is a line from Julius Caesar by William Shakespeare. It appears in Act 1, Scene 3, when an ominous owl portends the death of Julius Caesar.

அவரது நாடகங்களில் ஆந்தையை தீய சகுனமாகவே காட்டுகிறார்.

Venus and Adonis (Shakespeare poem) வீனஸ் அன்ட் அடானிஸ் கவிதையில் சொல்கிறார்

நேரமாகிவிட்டது என்று ஆந்தை அலறுகிறது அந்த கவிதையில் அடானிசை காட்டுப் பன்றிகள் கொன்றுவிடுகிறன.

*****

.

Uploading: 39565 of 39565 bytes uploaded.

In Shakespeare’s works, owls are often associated with negative things, such as bad news, hunting, and virginity. For example, in Venus and Adonis, an owl shrieks, “tis very late!”. In The Rape of Lucrece, லுகிறீஸ் கற்பழிப்பு என்ற கவிதையில் ஆந்தைகளும் ஓநாய்களும் மரண ஓலமிட்டு இட்டன என்கிறார்

ஆந்தைகள் அலறல்: நல்ல சகுனமா? கெட்ட சகுனமா?-

பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது (குறள் 481)

பஞ்ச தந்திரக் கதையை அப்படியே வள்ளுவர் கூறுகிறார். கூகையை தீ வைத்து காக்கைகள்   அழிக்கும் கதை அது; அதை பார்த்து அஸ்வத்தாமன் பாண்டவர் கூடாரங்களுக்கு இரவு நேரத்தில் தீவைத்தததாக மஹாபாரதம் கூறுகிறது சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஆந்தைகள் என்றால் அழிவு.

கிரேக்க நாட்டின் தேவதை அதீனாவுக்கு ஆந்தை வாகனம் அல்லது பிரியமான பறவை. இதேபோல இந்துக்களின் தெய்வங்களான சாமுண்டிக்கும் லெட்சுமிக்கும் ஆந்தை வாஹனம். இப்படி தெய்வ வாஹனமாக இருந்தபோதிலும் ஆந்தைகள் அலறலைக் கண்டு அஞ்சுவது ஏன்?

முதலில் சங்கத் தமிழ் இலக்கியத்தில் உள்ள பாடல்களைப் பார்ப்போம்:

“எம்மூர் வாயில் உண்டுறைத் தடை இய

கடவுள் முதுமரத்து உடனுறை பழகிய

தேயா வளைவாய்த் தெண்கண் கூருகிர்

வாய்ப்பறை அசாஅம் வலிமுந்து கூகை

மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்

எலி வான்சூட்டொடு மலியப் பேணுதும்

எஞ்சாக் கொள்கைஎங் காதலர் வரல்நசைஇத்

துஞ்சாது அலமரும் பொழுதில்

அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றாதீமே”–( நற்றிணை 83 )

பொருள்: வலிமைமிகு கூகையே! ஊர்வாசலில் நீர்த்துறையில் நிற்கும், கடவுள் இருப்பதாகக் கருதப்படும் மரத்தில் இருப்பாய். வளைந்த வாய், தெளிந்த கண்கள், கூரிய நகங்கள் உடைய நீ, உன் வாயால் பிறரை வருத்துகிறாய்.. உனக்கு ஆட்டு மாமிசத்தோடு நெய் கலந்த சோறு தருவோம். வெள்ளெலியின் சூட்டிறைச்சியும் தருவோம். என் காதலர் வரும் இரவு நேரத்தில் பயமுறுத்தும் சப்தத்தைப் போடாமல் இரு.

xxxxx

சில வகை ஆந்தைகள் எழுப்பிய ஒலி கர்ண கடூரமாக இருந்ததும் தெரிகிறது:–

“அத்தக் குடிஞைத் துடிமருள் தீங்குரல்” (புறம் 370)

பொருள்: கூகைகள் எழுப்பும் துடி போன்ற கடிய குரல் ஓசை……

“கூகைச் சேவல் குராலோழடேறி

ஆரிருஞ் சதுக்கத் தஞ்சுவரக் குழறும்

அணங்கு கால் கிளருங் மயங்கிருள் நடுநாள்”–-(அகம் 260)

பொருள்: முதிய மரத்தில் எப்போதும் இருக்கும் முழங்கும் பெரிய வாயை உடைய பேராந்தை வாய்குழறி ஒலிப்பதும் பேய் திரிவதும் ஆகிய பாதி இரவில்……………………….

சாவுக்கும் ஆந்தைக்கும் தொடர்பு

புறநானூற்றுப் பாடல்கள் ஆந்தையை மரணத்துடனும் இடுகாடு–சுடுகாட்டுடனும் தொடர்புபடுத்திக் காட்டுகின்றன. தமிழர்களுக்கு சகுன சாத்திரத்தில், அதாவது புள் நிமித்தத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. ஆந்தையின் கூக்குரல் பற்றி அவர்கள் பயப்படுகின்றனர். மரணத்தோடு தொடர்பு படுத்தும் மூன்று புறநானூற்றுப் பாடல்களே இதற்குச் சான்று கூறும்.

“திங்கள் கல்சேர்பு கனையிருள் மடியின்

இல்லெலி வல்சி வல்வாய்க் கூகை

கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்”– (அகம் 122)

பொருள்: நிலவானது மேற்குத் திசையில் மறைந்து இருளைப் பரப்பும் நேரத்தில் வீட்டில் வாழும் எலிகளை இரையாக உண்ணும் கூகை— பேய்கள் உறங்கும் நள்ளிரவில் அழிவு உண்டாகக் குழறும்.

“பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை

சுட்டுக்குவியென செத்தோர்ப்பயிரும்

கள்ளியம் பறந்தவை” – (புறம்.240)

பொருள்: ஆயண்டிரன் இறந்தவுடன் அவனது உரிமை மகளிரும் தீப்பாய்ந்து மாய்ந்தனர். பிளவுபட்ட வாயுடைய பேராந்தைகள், ‘சுட்டுக்குவி’ என்று செத்தோரை அழைப்பது போலக்கூவும். கள்ளிச் செடிகளை உடைய சுடுகாட்டில்,,,,,,,,,,,,,,,

பல் ஆ தழீஇய கல்லா வல்வில்

உழைக்குரற் கூகை அழைப்ப ஆட்டி–(புறம்.261)

இப்போது பல பசுக்கூட்டங்களைக் கைப்பற்றிய கல்லாத வன்மையான வில்வீரனை கூகையானது தன் இனத்தாரை அழைப்பது போல அலைத்து துரத்தும்

முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும்

கூகைக் கோழி ஆனாத்

தாழிய பெருங்காடெய்திய ஞான்றே (புறம்.364, கூகைக் கோழியார்)

பொருள்:

முதிய மரத்தின் பொந்துகளில் இருந்து கதும் எனக்கூவும் பேராந்தைகள் நீங்காத தாழிகளை உடைய இடுகாட்டை………………………..

குடும்பங்கள் வாழும் கூடாரத்தின் மேல் கோட்டான்கள் உட்கார்ந்தால் பழங்குடி மக்கள் சில பரிகாரங்களைச் செய்வர். சிலநேரங்களில் புதுக் கூரையே வேய்ந்துவிடுவர் என்று பிலோ இருதயநாத் கூறுவார். இவர் பழங்குடி இனங்களை ஆராய்பவர்.

மாயன் நாகரீகத்திலும்…………

இன்னொரு வியப்பான ஒற்றுமையும் இருக்கிறது:

புறநானூற்றில் எப்படிப் புலவர்கள் ஆந்தையை மரணத்துடனும் சுடுகாட்டுடனும் தொடர்புபடுத்தினரோ அதே போல மாயன் நாகரீக மரணக் கடவுள் ஹூனாஹுவும் ( God Hunahau) ஆந்தையுடன் தொடர்புடையது. இதனுடைய தலை ஆந்தைத் தலைபோலவே காட்டப்பட்டிருக்கும். சாவு பற்றிய ஒற்றுமையுடன் நின்றுவிடவில்லை. எப்படி இதற்கு ஆந்தையின் தலை (long eared owl )இருக்கிறதோ அதே போல கந்தனுடைய சேவகர்களில்(M.Bh. 9-45-79) ஒருவனுக்கு ஆந்தைத் தலை என்றும் மாத்ரீகளில் ஒருவர்க்கும் இப்படி இருப்பதாகவும் கந்தபுராணம் கூறும்.

மெக்சிகோவில் அஸ்டெக் நாகரீகத்துக்கு முந்தைய நாகரீகம் ஆந்தையைப் புனிதப் பறவையாகக் கருதியது. ஆனால் அஸ்டெக் நாகரீகத்தில் இது தீய பறவையாகக் கருதப் பட்டது. சீனாவிலும் இப்படித் தீய பறவையாகவே கருதப் பட்டது.

இந்தியாவில் பொதுவாக மரணத்துடன் சம்பந்தப்பட்ட பறவை, எப்படி செல்வத்துக்கு அதிதேவதையான லெட்சுமிக்கு வாகனமாகியது என்பது மர்மமாகவே நீடிக்கிறது.

ஆந்தையும் ஜெங்கிஸ்கானும்

மங்கோலிய தார்தார் இனத்தைச் சேர்ந்த ஜெங்கிஸ்கான சூறாவளித் தாக்குதல் நடத்தி உலகின் பலபகுதிகளைப் பிடித்தான். அவனது படையினர் உடைகளில் ஆந்தைச் சின்னத்தைப் பொறித்துக் கொண்டனர். இதற்குக் காரணம், அந்த சாம்ராஜ்யத்தை நிறுவிய ஜெங்கிஸ்கானை ஒரு ஆந்தை காப்பாற்றியதாகும். பல போர்களைப் புரிந்து முன்னேறிவந்த ஜெங்கிஸ் கானின் குதிரையை எதிரிகள் தாக்கிக் கொன்றனர். அவன் உயிருக்குத் தப்பி ஓடினான்.. ஒரு பெரிய மரத்துக்கு அடியில் போய் ஒளிந்து கொண்டான். எதிரிகள் துருவித் துருவி தேடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெரிய ஆந்தை அந்த மரத்தின் மேல் உட்கார்ந்தது. ஆந்தை அமைதியாக உட்கார்ந்து இருப்பதால் அந்தப் புதர்ப் பகுதியில் மனித நடமாட்டம் இருக்க வாய்ப்பில்லை என்று கருதி எதிரிகள் எதிர்த் திசையில் தேடச் சென்றனர்.

இவ்வாறு ஆந்தையே வந்து தன்னைக் காப்பாற்றியதால் அவன் ஆந்தைச் சின்னத்தைத் தன் படைகளில் பொறிக்கச் செய்தான்.

மந்திர தந்திரத்தில் ஆந்தை

தீபாவளிப் பண்டிகை காலத்தில் ஆயிரம் ஆந்தைகள் வரை கொல்லப்படுவதாகப் பத்திரிக்கை செய்திகள் கூறும். ஆந்தைகளைப் பலி கொடுத்தால் செல்வம் கிடைக்கும், அபூர்வ சக்திகள் கிட்டும் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம். இரவு நேரத்தில் ஓசையின்றி பறப்பதாலும், பாழடைந்த கட்டிடங்களில் பயமின்றி உலவுவதாலும் ஆந்தையை மாய, மந்திரத்தில் தொடர்புடையதாகக் கருதி இருக்கலாம்.

மேலும் ஆந்தை இறைச்சி, குழந்தைகளின் வியாதிகளைத் தீர்க்கும் என்ற நம்பிக்கை காரணமாகவும் ஆந்திகள் கொல்லப்படுகின்றன.

வேதத்தில் ஆந்தை

உலகின் மிகப் பழமையான மத நூல் ரிக் வேதம். இதிலும் ஆந்தை இடம் பெறுகிறது. உலூக (10-165-4; 7-104-17) என்ற பெயரில் ஆந்தையைக் குறித்தனர். தீய சகுனமாகவே வருணிக்கிறது (அதர்வ வேதம் 6-19-2)வாஜசனேய சம்ஹிதையில், அஸ்வமேத யாகத்தில் அக்னியில் போடப்பட்ட பட்டியலில் ஆந்தையை வனதேவதைகளுக்கு என சொல்லி இருக்கிறது.

பஞ்ச தந்திரக்கதைகளில் ஆந்தை

காகங்களுக்கும் ஆந்தைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பஞ்ச தந்திரக்கதைகளில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. ‘காகோலூகீயம்’ (காகம்+ உலூகம்) என்ற தத்துவத்தில் எப்படிப் பகைவர்களை அழிப்பது என்பது மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளது. கூகைக்குப் பகலில் கண் தெரியாது என்பதால் ஆந்தைகள் வாழும் மரங்களைச் சுற்றி காகங்கள் சுள்ளிகளை வைத்து அவைகளை எரித்டுக் கொன்றதை விஷ்ணுசர்மன் விரிவாக கூறுகிறார். பறவை இயல் நிபுணர் தவே எழுதிய புத்தகத்தில் இப்படி காகங்களை மட்டும் விரும்பிச் சாப்பிடும் ஆந்தை வகை இமயமலையில் இருக்கின்றன என்று புத்தகம் எழுதியுள்ளர். ஆகையால் ஆந்தை—காகம் மோதல் என்பது உண்மையில் நடந்ததே.

அஸ்வத்தாமன் கொலைகளும் ஆந்தையும்

கௌரவர்கள் அடியோடு அழிந்தவுடன் அன்றிரவில் துரோணரின் புதல்வன் அஸ்வத்தாமனுக்குக் கொலைவெறி வந்துவிடுகிறது. கிருபர் அவனை எவ்வளவோ தடுத்துப் பார்க்கிறார். ஆயினும் அவன் பாண்டவர் கூடாரத்துக்குச் சென்று அவர்களுடைய புதல்வர்களை வஞ்சனையாகக் கொன்றுவிடுகிறான். இதற்குக் காரணம் ஆந்தைகள்தான். அவைகள் இரவு நேரத்தில் காகங்களைத் தாக்கிக் கொன்றதைப் பார்த்தவுடன அவனுக்கு கொலைவெறி ‘ஐடியா’ கிடைக்கிறது. இதில் ஆந்தைகளுக்குரிய பங்கு பணி யை மஹாபாரதம் தெளிவாக விளக்கியுள்ளது.

ராமாயணத்தில் ஆந்தை

ராவணனைக் கைவிட்டு ராமபிரான் கட்சியில் சேரவந்த விபீஷணன் பற்றி சுக்ரீவன் எச்சரிக்கையில் இவன் ஆந்தை போல தந்திரம் உடையவனாக இருக்கலாம் என்பான்.

ஆந்தை, கூகை, கோட்டான் பற்றிய பழமொழிகள்

ஆந்தை அலறல் கெட்ட சகுனம்

ஆந்தை சிறிது கீச்சுப் பெரிது

ஆந்தை பஞ்சையாய் இருந்தாலும் சகுனத்தில் பஞ்சை இல்லை

பஞ்சாங்கத்தில் ஆந்தை

பஞ்சாங்கத்தில் ஐந்து பறவைகளின் படங்களைப் போட்டு அதற்கான பலன்களை எழுதி இருப்பர். அவைகளில் ஆந்தையும் ஒன்று. இது தவிர அவை பறக்கும் திசை, எழுப்பும் ஒலி, எத்தனை முறை ஒலி எழுப்பின என்பனவற்றின் அடிப்படையிலும் ஆரூடம் கூறுவர். மயில் வல்லூறு, சேவல்,காகம் ஆகிய நான்குடன் ஆந்தையையும் சேர்த்துக்கொண்டது இதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. நேரத்தையும் பறவைகளின் அடிப்படையில் பிரிப்பர்.

கொடுங்கோலன் கஜினி முகமதுவுக்கு ஆந்தைகள் கற்பித்த பாடம்

 இந்தியாவை ஆண்ட வெளிநாட்டினர் செய்த அக்கிரமங்களை மஹா கவி பாரதி ஒரே வரியில் சொல்லிவிட்டார்: “ ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி” என்று. அப்படிப்பட்ட அன்பில்லாத கொடுங்கோலர்களில் மிகக் கொடியவர்கள் கஜினி முகமதுவும் அவுரங்கசீப்பும் ஆவர். இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடித்ததோடு நிற்காமல், 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான சோமநாதபுரத்தில் இருந்த 15 அடி உயர சிவலிங்கத்தை சுக்கு நூறாக உடைத்த மதவெறியன் கஜினி முகமது. அவன்கூட ஆந்தைகளிடம் பாடம் கற்று அடங்கி ஒடுங்கிய ஒரு சம்பவம் இதோ:-

 கஜினி நகருக்கு மேற்கே தொலைதூரத்திலுள்ள கிராமங்களை முகமதுவின் படை வீரர்கள் அழித்து நாசமாக்கி வந்தனர். ஆடுமாடுகளைக் கொள்ளையடிப்பது, பயிர்பச்சைகளை அழிப்பது அகியவற்றில் ஈடுபட்டதால் கிராம மக்கள் ஓடி ஒளிந்தனர். கிராமங்கள் எல்லாம் பாழடைந்த திடல்களாகிவிட்டன.

கஜினி முகமதுவிடம் மந்திரியாக வேலை பார்த்த ஒருவருக்கு தெய்வ பக்தி இருந்தது. “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்” என்பது வள்ளுவன் குறள். ஆகையால் தன் கடமை கஜினி முகமதுவிடம் சொல்லி அட்டூழியங்களை நிறுத்துவதே என்று உறுதி பூண்டார். அவருக்கு பீர் என்ற முஸ்லீம் சந்யாசி பறவைகளின் பாஷையைக் கற்பித்திருந்தார். இது விஷயம், கஜினி முகமதுவுக்கும் தெரியும். ஒரு நாள் இருவரும் வேட்டையாடப் போனார்கள்.

இருவரும் மாலையில் திரும்பிவருகையில் ஒரு மரத்தின் மீது இரண்டு ஆந்தைகள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தன. கஜினி முகமது, குதிரைகளை நிறுத்தச் சொல்லி, மந்திரியிடம் சொன்னார்:

உனக்குத்தான் பறவைகளின் மொழி தெரியுமே! அவைகள் என்ன பேசிக்கொள்கின்றன? என்று கேட்டார்.

 அமைச்சரும் அதை உற்றுக் கேட்பதுபோல கொஞ்ச நேரம் பாவனை செய்தார். பின்னர் வந்து, “அரசே அவைகள் பேசுவதைச் சொல்வதற்குத் தயக்கமாக இருக்கிறது. அது உங்களுக்கு உகந்ததல்ல” என்றார்.

கஜினி முகமது அதைச் சொல்லும்படி வலியுறுத்தவே, “நான் சொல்கிறேன். ஆனால் கோபத்தில் என்னைக் கொன்று விடக்கூடாது” என்று சொன்னார். கஜினி முகமதுவும் ஒரு தீங்கும் வராது என்று உறுதி கூறியவுடன் அமைச்சர் (மந்திரி) சொன்னார்:

அந்த ஆந்தைகளில் ஒன்று ஆண், மற்றொன்று பெண். அவைகள் இரண்டும் கல்யாணப் பேச்சில் ஈடுபட்டுள்ளன. ஒரு ஆந்தையின் பையனை மற்றொரு ஆந்தையின் பெண்ணுக்கு மணம் முடிப்பதைப் பற்றி பேசுகையில் ஆணின் தந்தை (ஆந்தை) சொன்னது: “இதோ பார் உன் பெண்ணை என் பையனுக்குத் திருமணம் செய்யத் தயார்தான். ஆனால் பெண்ணுடன் எனக்கு 50 பாழான கிராமங்களைச் சீதனமாக அனுப்ப வேண்டும்” என்றது. அதற்குப் பெண்ணின் தாயார் “நமது சுல்தான் ஆட்சியில் இருக்கும் வரை பாழாய்ப்போகும் கிராமங்களுக்கு என்ன குறை? 50 என்ன 500 கிராமங்களை வேண்டுமானாலும் தருவேன்” என்றது

கஜினி முகமது இதைக் கேட்டுவிட்டு வெட்கித் தலை குனிந்தான்.

முடிவுரை: 1. ஆந்தைக்கும் கெட்ட சகுனங்களுக்கும் (மரணத்துக்கும்) உள்ள தொடர்பு, வேத காலம் முதல் சங்க இலக்கிய காலம் வரை ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆரிய-திராவிட இனவாதம் பேசும் அறிவிலிகளுக்கு இது அடி கொடுக்கிறது. 2,லிங்க புராணமும் சங்க இலக்கியமும் ஆந்தைக்கும் இசைக்கும் உள்ள தொடர்பை நிலை நாட்டுகின்றன. இது ஆரிய-திராவிடக் கொள்கையினருக்கு அடி கொடுப்பதாக அமைகிறது. 3. பஞ்சதந்திரக் கதையை வள்ளுவனும் குறள் 481ல் தருகிறார். 4.மாயன் முதலிய மத்திய அமெரிக்க நாகரீகங்களில் ஆந்தை பற்றிய இந்து மதக் கருத்துகள் இருப்பது நோக்கற்பாலது. இந்திய நாகர்களே, மாயா நாகரீக அடிகோலிகள் (ஸ்தாபகர்கள்) என்று நான் எழுதிய பல கட்டுரைகளை இது மேலும் உறுதிப் படுத்துகிறது.யூத மதத்தினரும் ஆந்தைகளை மரணத்துடன் தொடர்புபடுத்துவது ஆய்வுக்குரியது 4. காகம் தின்னும் (Dusky Horned Owls) ஆந்தை, நீண்ட காது ( Long eared owl ) ஆந்தை முதலிய பலவகை ஆந்தைகள் பற்றிய தற்கால அறிவு மஹாபாரத (M.Bh.10-1-36), பஞ்சதந்திர, ராமயணக் கதை உவமைகளை உண்மை என்று உறுதிப் படுத்துகிறது. 5. சங்க இலக்கியம், காளிதாசனின் மேகதூதம், ரிக்வேதம் ஆகியவற்றில் புள் நிமித்தமும் ஒரே மாதிரியாக இருப்பதும் ஆரிய திராவிட இன வாதத்தை ஆட்டம் காண வைக்கிறது.6.ஆந்தையின் சம்ஸ்கிருதப் பெயர்களாகிய கௌசிக, உலூக, ரிஷி என்பனவற்றை சங்கப் புலவர்களான பிசிர் ஆந்தையார், ஓதல் ஆந்தையார், கூகைக் கோழியார் ஆகியோர் பயன்படுத்தி இருப்பது வேத காலப் பண்பாடும் தமிழர் பண்பாடும் ஒரே நாணயத்தின் இரண்டு பகுதிகளே என்பதை உறுதிப்படுத்துகிறது.

–subham—

Tags-தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்—15

சகுனங்கள் ஷேக்ஸ்பியர்  தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் -15

நல்ல, கெட்ட சகுனங்கள்! அம்பலவாணர் தரும் நீண்ட பட்டியல்

Leave a comment

Leave a comment