Hindu Crossword Puzzle 26112024 (Post No.13,937)

Written by London Swaminathan

Post No. 13,937

Date uploaded in London – 26 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 1   2  3    4
          
          5
 6    7     
       8   
          
 9       10  

Across

1.Mars is known in Hindu astrology as…

5. Go Left to Right—copper in Indian languages

6.Laugter; used with Mantha…..; Atta……

8.Of the waters in Hindu Vedic and Avestan literature

9.Holiest city for Sikhs

Down

1.That which is indestructible; name of the Paatra/Vessel Draupadi owned

2.Mango in Sanskrit; the prostitute who met Buddha has this name with suffix Pali

3. Commendation or interjection or participle in Sanskrit

4. Terminalia Catapa tree in Sanskrit or Almond tree with long sound

7.Opposite of Amrit

10.Go upward- Form, Shape, Figure in Tamil and Sanskrit

****

Answer/ Solution

A 1NGA 2RA 3KA V 4
K  M H   A
S  R ARMAT 5
H 6ASAM 7  A A
A   R A 8PAM
Y   I  U A
A 9MRITSAR 10  

—Subham—

Tags- Hindu crossword, 26112024

Story of Sanskrit ! How did World’s Oldest Grammar develop in 3000 Years? (Post No.13,936)

Written by London Swaminathan

Post No. 13,936

Date uploaded in London – 26 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

There is a beautiful summary of the development of Sanskrit grammar in the past 3000 years. H P Dwivedi has published a thesis to Patna University and got a doctorate. His title was Some Aspects of the Technical Terms in Astadhyayi (astaadhyaayii). When he published his thesis in a book, he has written an introduction where he has summarised the four phases in the growth of Sanskrit Grammar. It is very useful for anyone interested in the study of Sanskrit grammar. His book title is Studies in Panini (year 1978).

“It is a fact that the Astadhyayi of Panini which has been held in high esteem both by native and foreign scholars of Sanskrit grammar and distinguished above all similar works of other countries was brought to perfection by the Varttikas of Katyayana and the Mahabhasya of Patanjali.

Panini – 700-800 BCE (according to Goldstucker)

Varttikas of Katyayana – 400 BCE

Maha Bhashya of Patanjali- 150 BCE

****

Different Phases of the Study of Panini

The First Phase began earlier than Katyayana (kaatyaayana) and culminates virtually in the Mahabhasya of Patanjali continuing in the Kasika of Vamana and Jayaditya. The earlier commentators no doubt supplied materials for the Varttikas of Katyayana as did the works of grammarians like Vyadi and others for the Mahabhasya of Patanjali. These are the two works that have survived. The Varttikas and Mahabhasya show critical acumen of high order and are indispensable  for understanding the Astadhyayi. They have practically brought perfection to the Paninian system which would have otherwise not been what it is today. On account of these contributions of Katyayana and Patanjali, the tradition has nick named the system Trimuni Vyakaranam.

The chief purpose of their works are (1) a threadbare discussion of the aphorisms of the Astadhyayi with reference to illustrations  thereof(2)  rejection of unnecessary rules or their parts and (3)recasting of the rules so as to accommodate new formations that crept up in the language in course of time.

Patanjali is regarded as the ultimate authority of the Paninian system and all the later commentators are indebted to him. Patanjali follows the same order of the Sutras in his discussion as given in the parent work.

The Kasika (about 700 CE) is a commentary on the Astadhyayi. It contains, as proposed by the authors, a systematic presentation of the material of grammar scattered all over the vrtti, the Mahabhasya and Dhatupatha and the Ganappatha etc. Its method of discussion is first to give simple meaning of the sutras , illustrate them by suitable examples, cite examples to which a particular rule does not apply and to add  short critical notes, if necessary. Though the Kasika is expected to follow the Mahabhasya  in the matter of discussion yet at times it differs remarkably from it. It is to be noted that the Mahabhasya, though indispensable for understanding the spirit of Panini, presupposes preliminary acquaintance of the sutras of Astadhyayi for which purpose the Kasika alone is suitable. It claims to unfold the hidden meaning of the sutras of Astadhyayi and preserve the whole of Ganappatha of Panini intact. It teaches the formation of the derivatives of the words and explains Patanjali’s addition to Katyayana’s Varttikas. In this respect, the Kasika is a unique work serving a link between  the Astadhyayi and the Mahabhasya.

The Kasika has a couple of commentaries: the Kasika Vivarana Panjika, popularly known as Nyasa by Jitendrabuddhi  (8th century CE) and Pada Manjari by Haradatta Mishra  (12th century CE). These two works are highly informative and worthy of names and systematic paraphrasing  of the discussions available in Mahabhasya as it is evident from the prefatory verses thereof.

The Second Phase begins with the Rupavatara (ruupaavataara) of Dharmakirti and the Rupamala of (ruupamaalaa) Vimala Sarasvati (19th century CE) and culminates into Sidhdanta Kaumudi of Bhattoji Dikshita (17th century CE). These works distinguish themselves by changing  the order of the sutras of Astadhyayi, the underlying motive of this  change is to secure convenience in word formation as the ultimate purpose of grammar. The main problem confronting the authors of the first phase was to explain threadbare the rules of the Astadhyayi to supplement shortcomings  and to do away with its superfluousness. In other words their main objective was to bring about perfection of Astadhyayi which they fully achieved. To the authors of second phase,  on the other hand, the formation of words was the primary consideration. The works of this phase better known as the Prakriya Granthas, proved most suitable to the changing need of the hour, because Sanskrit was no longer a spoken language  and had long left its claim as such. They were followed by works which mark commencement of the third phase.

The Third Phase, which begins with the Sabdakaustubha and the Manorama of Bhattoji Dikshita and ends with the work of Nagesa, marks the climax of the textual study of Panini. The authors devoted themselves to subtle discussions of the theories and elements of grammar. The works of this phase were mostly Tika Granthas (tiikaa) and needed a more grounding in the principles of grammar  than it was required for understanding their original. The influence of logic in them is quite apparent and therefore they came, later on to be known as Navya Vyakarana or Neo Grammar. This new school within the old system was actually founded by Bhattoji Dikshita but attained perfection in the works of Kaunda Bhatta and Nagesa (naagesa).

 The contributions of the later grammarians to the Paninian system are quite outstanding  by virtue of their logical and subtle discussions of the theories and elements of  grammar they virtually left no place for further deliberation. The theory of Sphota though owing its origin to Nirukta period was developed by the new school of grammarians who were more logicists than structuralists.

As a matter of fact the authors of this phase devoted themselves more to pedantry than to really useful scholarship. They are mainly responsible for putting to confusion the aim and purpose of grammar which later on came to be misunderstood by the posterity as an end in itself and not a means to the study of Sanskrit language.

Then came the Fourth Phase when the Sanskrit language was introduced to the Western world. Goldstucker and others wrote their views on the great works of Panini, Katyayana and Patanjali.

My Comments

The above summary shows the development of grammar in 3000 years. We don’t have any grammar nearer to the age of Panini, Katyayana and Patanjali in any part of the world. Even the Tolkappiam of Tamil grammarian Tolkappiar or Truna Dhumagni is dated first century BCE or CE; that is they came at least 200 or 300 years later. Even there, the Third Adikara of Tolkappima is considered a later addition. My view is that the entire work is compiled in the present format around fifth century CE. The word Adikaram found in Tirukkural, Silappadikaram and Tolkappiam shows that they were compiled in the same period.  But their authors might have lived earlier than that.

Above all the development of language and literature in India shows that Hindus were the pioneers of civilization. They were first in producing grammar books, dramas, poetry, thesaurus, books on sex, astronomy and mathematics.  Unless a civilization is advanced, we can’t see such books 2000 years ago. Only Greeks produced more plays in that period. Socrates and other Greek scholars followed the Upanishads in writing intellectual and philosophical matters.

—subham—

Tags – Sanskrit , Grammar, Development, Panini, Patanjali, Astadhyayi, Mahabhasya, Varttika, Katyayana, Kasika, Bhayyoji Dikshita, Siddhanta Kaumudi, Goldstucker, Story of Sanskrit

பீமாவரம் கோவில்கள் – 46 (Post No.13,935)

Someswara Swami Temple

Written by London Swaminathan

Post No. 13,935

Date uploaded in London – 26 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Maulamma Temple

xxxx  

ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 46

ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பல புகழ்பெற்ற கோவில்கள் இருக்கின்றன. இவற்றில் இரண்டு பஞ்சராம க்ஷேத்திரங்கள் என்ற ஐந்து புகழ் பெற்ற கோவில்களில் அடங்கும் .

பின்னரும் கோவில்களுக்கு அதிகமான பக்தர்கள் செல்கிறார்கள்

ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவில்

க்ஷீர ராமலிங்கேஸ்வர கோவில்

கோட சட்டம்மா அம்மாவாரி கோவில்

வாசவி மாதா கோவில்

வீரபத்ர சுவாமி கோவில்

இவை தவிர கடந்த இருநூறு ஆண்டுகளில் எழுந்த புதிய கோவில்களும் உள்ளன.

****

Maddi Anjaneya Temple மட்டி ஆஞ்சனேயர் கோவில்

மாவட்டத்திலுள்ள முக்கிய ஆஞ்சாசனேயர் கோவில் குரவைக்கூடம் என்னுமிடத்தில் உள்ளது. மேற்கு கோதாவரி மாவட்டத் தலைநகரான ஏழூரிலிருந்து 51 கி.மீ தொலைவில் குரவைக்கூடம் அமைந்துள்ளது

மட்டி என்று தெலுங்கு மொழியில் சொல்லப்படும் மருதமரத்தின் அடியில் அனுமன் இருப்பதால் இதை மட்டி ஆஞ்சனேயர் கோவில் என்பார்கள்.

இந்த இடத்தை ஜனரெட்டிகுடம் என்றும் சொல்கிறார்கள்  ரெட்டி ராஜு சிற்றசர்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்து வணங்கினர்.

ராவணனிடம் பணிபுரிந்த ஒரு அசுரன் அனுமன் பக்தன் என்றும் அவனே பின்னர் இங்கு வந்து  குரங்காகப் பிறந்து வேண்டியதன் பெயரில் அனுமன் தோன்றியதாகவும் தல புராணம் சொல்லும்;  மட்டி மரத்துக்கு அடியில் அமர்ந்த நிலையில் அனுமன் ,ஒரு கையில் பழத்தையும் இன்னுமொரு கையில் கதையையும் ஏந்தியவாறு தரிசனம் தருகிறார்

எல்லா இந்துப் பண்டிகை தினங்களில் பக்தர்கள் வந்தாலும் ராம நவமி ,அனுமன் ஜெயந்தி போன்ற விழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் பெருகுகிறது

****

Mavullamma   Temple, BHIMAVARAM பீமாவரம்

கடந்த இருநூறு ஆண்டுகளாக மாவுலம்மா வழிபாடு பிரபலம் ஆகியுள்ளது . முதலில் வீதியில் ஒரு அரசமரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் இடையில் வழிபடப்பட்டாள்.  ஜ்யேஷ்ட மாதத்தில் ஒரு மாத கால உற்சவம் நடக்கும்போது பீமாவரம் நகரமே விழாக்கோலம் பூணும் .

வட்டார வியாபாரிகள் சங்கம் பிரபல கலைஞர்களையும் பேச்சாளர்களையும் அழைத்தது தினமும் செவிக்கு விருந்து படைக்கிறார்கள் .

தேவியின் உருவம் சக்தி வாய்ந்த கண்களுடன் காட்சி தருகிறாள்.. .

பொங்கல் /சங்கராந்தி நேரத்திலும் நிறைய பக்தர்கள் வருகிறார்கள். வெளியேயுள்ள கடைகளில் வேண்டிய பொருட்களை வாங்கும் வசதி இருக்கிறது . முன்னர் உக்ரமான வடிவில் இருந்த சிலையை ஸ்ரீ கிராந்தி அப்பராவ் சுமுகமான ,சாந்தமான சிலையாக வடிவமைத்தார்.

****

Gunupudi Someswara Janardhana Swamy Temple:

பீமாவரம் நகரிலுள்ள முக்கியக் கோவில் குனுபுடி சோமேஸ்வர ஜனார்த்தன  சுவாமி கோவில் ஆகும்.

பஞ்சராம கோவில் வரிசையில் இது சோமராம கோவில்.  எனப்படும்.

இருபதே கிலோமீட்டர் தொலைவில் பாலகொல்லுவில் இன்னும் ஒரு பஞ்சராம கோவில் இருப்பதால் பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய முடிகிறது .

இவைகள் சிவன் கோவில்கள்.  சோமேஸ்வர லிங்கத்தை  சந்திரன் (சோமன்)  நிறுவியதாக தல புராணம் சொல்லும்.  நாலாவது நூற்றாண்டில், சாளுக்கிய மன்னன் பீமன் காலத்தில்  இதன் வரலாறு துவங்குகிறது. லிங்கத்தின் நிறம் அமாவாசை , பெளர்ணமி தினங்களில் மாறுகிறது  கருவறைக்கு மேலே அன்னபூரணி சந்நிதி இருப்பதும் குறிப்பிடத்தக்கது ஆதிலட்சுமி, கந்தன், கணேசர் சூரியன் சந்நிதிகளும் இடம்பெறுகின்றன. ராம பிரானுக்கும் அனுமனுக்கும் தனியே சந்நிதிகள் இருக்கின்றன.

****

பாலகொல்லு சிவன் கோவில்

பாலகொல்லு சிவன் கோவிலை க்ஷீர ராமலிங்கேஸ்வர கோவில் என்று அழைக்கிறார்கள். சிவலிங்கத்தை நாலாபுறமுள்ள ஜன்னல்கள் வழியாகவும் தரிசிக்கும் படி கருவறை அமைக்கப்பட்டது இதன் சிறப்பு ஆகும்   விஷ்ணுவே நிறுவிய லிங்கம் என்பதால் ராமலிங்கம் பெயர் வந்தது  இங்குள்ள ஏனைய சந்நிதிகள் :  துர்கா, லெட்சுமி, சப்த மாத்ரிகா, நடராஜர்,கணேசன், கந்தன் , சனீஸ்வரன், பிரம்மா. கோவில் கோபுரம் ஆந்திரத்திலுள்ள பழமையான கோவில்களில் மிக உயமான கோபுரத்தைக் கொண்டுள்ளது ஒன்பது நிலைக்கு கோபுரத்தின் உயரம் 120 அடி.

சிவலிங்கம் பாற்கடலின் வெண்மை நிறத்தை உடையது . அருகில் ஓடும் நதி நரஸாபூரில் கோதாவரியுடன் சங்கமிக்கிறது  கோவிலில் கருங்கற்களில் சமைக்கப்பட்ட 72 அழகான தூண்களும் உள்ளன

*****

அருகில் மேலும் சில சிவன் கோவில்களும் இருக்கின்றன.

ஜூட்டிகா, நட்ட ராமேஸ்வரம் கோவில்கள் குறிப்பிடத் தக்கவை .  நட்ட ராமேஸ்வர கோவிலில் கடல் கிளிஞல்களால்  ஆன சிவலிங்கம் உளது . Juttiga and Natta Rameswaram (Dakshina kasi):

****

பாலகொல்லுவிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி கோவில் அமைந்துள்ளது

Sri Vasavi Kanyakaparameswari Temple, Penugonda:

அருகில் மிகப்பெரிய சிவலிங்கம் இருக்கும் நாகேஸ்வர சுவாமி கோவிலும் பார்க்க வேண்டிய ஆலயம் ஆகும்.

****

Famous Temples in West Godavari

Sri Venkateswara Swami Vari Devasthanam.

Sri Venkateswara Swamy Temple.

Ksheera Ramalingeswara Swamy Temple.

Sree Kota Sattemma Ammavari Temple. …

Vasavi Matha Temple.

New Vasavi Kanyaka Parameswari Temple. …

Ratnalamma Temple.

Veerabhadra Temple

–subham—

Tags- பீமாவரம் கோவில்கள் , பஞ்சராம கோவில், ஆந்திர மாநில, புகழ்பெற்ற  108 கோவில்கள், Part 46

அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை – சாலி ரைட்! – 2 (Post.13,934)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.934

Date uploaded in London – –26 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

20-11-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை – சாலி ரைட்! – 2

ச.நாகராஜன் 

விசாரணைக் கமிஷனில் பங்கேற்பு

2003-,ம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதியன்று விண்ணில் ஏவப்பட்ட கொலம்பியா விண்கலம் சுக்குநூறாகச் சிதறியது. இதனால் அனைவரும் திகைத்துப் போயினர்.

விபத்து ஏன், எதனால் நடந்து என்பதை ஆராய்வதற்காக நாஸா விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்தது. நாஸா அமைத்த இந்த விசாரணைக் கமிஷனில் இடம் பெற்ற ஒரே விண்வெளி வீராங்கனை சாலி தான்.  சேலஞ்சர் கலத்தில் குளிர்ந்த உஷ்ணநிலையில் ராக்கெட் பூஸ்டரில் இருந்த ஓ-ரிங் செயல்படாமல் போனதால் தான் அந்த விபத்து ஏற்பட்டது என்பதை விசாரணைக் கமிஷன் கண்டறிந்தது. ஆனால் வெளியுலகிற்கு இதைச் சொல்லாமல் மறைத்தது. ஆனால் சாலியோ இந்த விஷயத்தை இன்னொரு கமிஷன் மெம்பரிடம் சொல்ல அவர் விஞ்ஞானி பெய்ன்மேனிடம் சொல்ல, பெய்ன்மென் உலகிற்கு பகிரங்கமாக அறிவித்து விட்டார். கொலம்பியா விண்கலம் ஏராளமான இயக்கக் கோளாறுகளுடன் இருப்பதை அறிந்தும் கூட அது விண்ணில் செலுத்தப்பட்டது. அதனால் தான் புறப்பட்ட சில கணங்களிலேயே வெடித்தது. இந்த வெளிவராத இரகசியத்தையும் பொது நலன் கருதி சாலி கூறி விட்டார்.

சாலி ரைடின் அந்தரங்க வாழ்க்கை ரகசியம்

“ஒவ்வொருவருக்கும் மூன்று வாழ்க்கைகள் உண்டு. ஒரு பொது வாழ்க்கை, ஒரு அந்தரங்க வாழ்க்கை, ஒரு இரகசிய வாழ்க்கை!”

  – –பிரபல நாவலாசிரியர் காப்ரியல் கார்சியா மர்கெஸ் சாலி ரைட் பற்றிக் கூறியது இது!

இது உண்மை என்பதை சாலி ரைட் வாழ்க்கை வரலாற்றை ஏ.பி.சி நியூஸ் நிருபரான லின் ஷெர் என்பவர் எழுதி வெளியிட்ட போது தெரிய வந்தது.

முதல் ரகசியம் அவர் கான்ஸர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததை யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தார். 2011-ல் அவர் ஒரு சொற்பொழிவை நிகழ்த்திய போது அவர் இயல்பு நிலையில் இல்லாததைக் கண்ட அவர் தோழி ஓஷானெஸி அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் செய்தார். அடிவயிற்றில் கோல்ப் பந்து அளவு ஒரு பெரிய கட்டி இருப்பது தெரியவந்தது.

இதை அவர் யாருக்கும் சொல்லவில்லை.

இரண்டாவது ரகசியம் தனது தோழியான டாம் ஓஷானெஸியுடன் அவர் ஒரு இரகசிய தொடர்பை நீண்ட காலம் கொண்டிருந்தது. இந்த இரகசியம் அவர் இறந்த பின் அவரது மறைவுக் குறிப்பில் இடம் பெற்ற  போது தான் உலகம் அறிந்தது.   

சக விண்வெளி வீர்ரான ஸ்டீவ் ஹாலியை அவர் மணந்தார். ஆனால் அதே சமயம் டாம் ஓஷானெஸியுடனான லெஸ்பியன் தொடர்பும் அவருக்கு இருந்தது.  டாம் ஓஷானெஸி அவரது இளம் வயதுத் தோழி. இருவரும் இணைந்து டென்னிஸ் விளையாடுவது வழக்கம். இது அந்தரங்க ஓரினச் சேர்க்கை தொடர்பாக பின்னால் மாறி விட்டது. சாலி இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்னால், ‘நம் தொடர்பைப் பற்றி பகிரங்கமாகச் சொல்லலாமா’ என்று டாம் ஓஷானெஸி கேட்ட போது, சாலி, ‘அது உன் விருப்பம். நீயே முடிவு எடு’ என்று சொல்லி விட்டார். ஆகவே மரணக் குறிப்பை டாம் ஓஷானெஸி வெளியிடுகையில் “பதினேழு வருடகால டாம் ஓஷானெஸியுடனான அவரது தொடர்பு” என்று பத்தே பத்து ஆங்கில வார்த்தைகளில் அதை வெளியுலகிற்குப் பகிரங்கப்படுத்தி விட்டார் அவர்.

மறைவு

கீமோதெராபி, ரேடியேஷன் தெராபி ஆகிய சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்ட போதிலும் கணையத்தில் ஏற்பட்ட புற்று நோயால் அவர் லா ஜொல்லா என்ற இடத்தில் உள்ள தனது இல்லத்தில் 2012-ம் ஆண்டு ஜூலை  மாதம் 23-ம் தேதி மரணமடைந்தார். உடல் எரியூட்டப்பட்ட பின்னர், அவரது அஸ்தி சாண்டா மோனிகாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அவரது தந்தையாரின் கல்லறைக்குப் பக்கத்தில் புதைக்கப்பட்டது.

விருதுகள்

வாழ்நாள் முழுவதும் ஏராளமான விருதுகளை சாலி ரைட் பெற்றார். நாஸா ஸ்பேஸ் ஃப்ளைட் மெடல் விருதை இரு  முறை அவர் பெற்றார். 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் அவரது சிலை ஏவியேஷன் மியூசியம் மற்றும் ரோனால்ட் ரீகன் பொது நூலகம் ஆகிய இடங்களில் திறந்து வைக்கப்பட்டது. 2018-ல் அவரது உருவம் பொறிக்கப்பட்ட தபால்தலையை வெளியிட்டு அமெரிக்கா அவரை கௌரவித்தது.

பெண்களுக்கு உத்வேகமூட்டும் விதத்தில் அவர் ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். பெண்களுக்குப் பயிற்சியையும் தந்து வந்தார்.

61 வயது வாழ்ந்த சாலியின் வாழ்க்கை வரலாறு ஒரு பெரிய உண்மையை அறிவிக்கிறது. விஞ்ஞானிகள் என்றால் மனித குலத்தின் அபூர்வப் பிறவிகள் என்ற ஒரு தவறான எண்ணம் உலகெங்கும் நிலவி வருகிறது.அவர்களுக்கும் அபிலாஷைகள், பலஹீனங்கள் உண்டு என்பது யாருக்கும் பொதுவாகத் தெரிவதில்லை. சாலியின் வாழ்க்கை வரலாறோ அற்புதமான துணிச்சல் மிக்க அறிவியல் பெண்மணியாக அவரைச் சித்தரிப்பதோடு மனிதர்களுக்கே உரித்தான பலஹீனமும் அவருக்கு இருந்தது என்பதையும் சேர்த்துச் சித்தரிக்கிறது!

உத்வேகமூட்டும் அவரது பொன்மொழிகளில் சில:

அவர் கூறியவற்றில் சில:

தான் செய்ய நினைத்ததைப் பயப்படாமல் செய்தவள் என்றும் அந்த இலட்சியத்தை அடையும் போது எதிர்வரும் அபாயங்களை ஏற்று வென்றவள் என்றும்  என்னை அனைவரும் நினவில் வைத்திருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.

எதிர்காலத்தில் அறிவியல் விஞ்ஞானிகளும் பொறியியலாளரும் வேண்டுமென விரும்பினால் நாம் பையன்களைப் பண்படுத்திப் பயிற்றுவிப்பது போலப் இளம் பெண்களையும் பயிற்றுவிக்க வேண்டும்.

வெற்றிக்கான இரகசியங்கள் மூன்று : 1) புதிய விஷயங்களை அறிய ஆவல் கொள்வது 2) புதிய செய்திகளை நன்கு அறிந்து அதை ஜீரணித்துக் கொள்வது 3) மற்றவர்களுடனும் தன்னை இணைத்துக் கொண்டு வேலையில் முன்னேறுவது!

***

SUNDAY 24-11-2024 GNANAMAYAM ZOOM BRAODCAST PICTURES

DR SHIB NARAYAN SEN, EDITOR, TRUTH MAGAZINE, KOLKATA, SPOKE ON MAYA-ILLUSION—IN ENGLISH FOR TWENTY MINUTES.

VAISHANVI ANAND FROM LONDON PRESENTED WORLD HINDU NEWS IN TAMIL.

BRAHANAYAKI SATHYANARAYANAN SPOKE ON THIRUVATHAVUR TEMPLES AND TIRUVASAGAM.

BENGALURU NAGARAJAN CONTINUED HIS TALK ON ANNAI- THE MOTHER OF PONDICHERY.

MRS PATTU SRINIVASAN GROUP DID THE PRAYER IN THE BEGINNING.

LONDON SWMINATHAN ANCHORED THE PROGRAMME.

JOIN US EVERY SUNDAY ON ZOOM, FACEBOOK AND YOU TUBE AT ONE PM LONDON TIME, 6-30 PM INDIAN TIME.

U R WELCOME TO SPEAK, INTERVIEW OR SING. WE WELCOME NEW BROADCASTERS.

NEXT BROADCASTS ON DECEMBER 1, 8, 2024


******

SPECIAL PROGRAMME ON DECEMBER 13 TO CELEBRATE KARTHIKAI DEEPAM. KALYANJI FROM INDIA WIL PRESENT SONGS ON LORD SKANDA-MURUGAN- KARTIKEYAN.

—SUBHAM—

 TAGS- SUNDAY ,24-11-2024 GNANAMAYAM,  ZOOM BRAODCAST PICTURES

வேதநாதர் அருள் புரியும் திருவாதவூர் (Post No.13,933)


WRITTEN BY Brhannayaki Sathyanarayanan

Post No. 13.933

Date uploaded in London – –25 November  2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

24-11-2024 ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பான உரை

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

பெருகும் வையைதனை அழைப்பிக்குமே

    பிரம்படிக்குப் பிரான் மேனி கன்றுமே

நரியெலாம் பரியாக நடத்துமே

    நாடி மூகைதனைப் பேசுவிக்குமே

பரிவிற் பிட்டுக்கு மண் சுமப்பிக்குமே

    பரமன் ஏடு எழுதக் கோவை பாடுமே

வருகும் புத்தரை வாதினில் வெல்லுமே

    வாதவூரர் வழங்கிய பாடலே

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது வேதநாதர் அருள் புரியும் திருவாதவூர் திருத்தலமாகும். திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் அவதரித்த திருத்தலமும் இதுவே.இத்திருத்தலம் மதுரை மாநகரின் வடகிழக்கே, 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

இறைவன் திருநாமம் : வேதநாதர் அல்லது திருமறைநாதர்

இறைவி : வேதநாயகி அல்லது ஆரணவல்லியம்மை

தல விருக்ஷம் : மகிழ மரம்

தீர்த்தம் : பைரவ தீர்த்தம் மற்றும் கபில தீர்த்தம்

இத்திருத்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.

சிவபிரான் மஹாவிஷ்ணுவிற்கு ‘வேதம் நானே’ என்று உபதேசித்த தலம் இது.

சிவபிரான் ஸ்வயம்பு லிங்கமாக எழுந்தருளி அருள் பாலிக்கிறார். சிவபிரானின் வலப்பாகத்தில் தனிக்கோயில் கொண்டுள்ள அம்மன் சந்நிதி மிகப் பழமையானது. பிரம்மா செய்த ஆரண கேதக வேள்வியில் தீப்பிழம்பில் உதித்தவளே இங்கு அருள் புரியும் ஆரணவல்லியம்மை.

மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் முடமாகி விட்ட சனி பகவான் தன் முடம் நீங்கி மீண்டும் நடக்கத் துவங்கியது இவ்வூரில் தொழுது துதித்த பின்னரே ஆகும். சனி பகவானின் வாதம் தீர்ந்தபடியால் இது வாதவூர் என்று வழங்கப்பெறுகிறது.

இங்கு வழிபட்டால் கை, கால் முடம் பக்கவாதம் ஆகியவை தீரும் என்பது அனைவரது நம்பிக்கையுமாகும்.

இங்கு சிவபூஜையில் ஆழ்ந்திருக்கும் புருஷாமிருக தேவர் பாண்டவரின் அச்வமேத யாகத்துக்கு உதவி செய்யும் பொருட்டு பீமனோடு தென் திசை வந்த பின்னர் ஹரிஹரன் விருப்பப்படி நிரந்தரமாய் இத்திருத்தலத்திலேயே தங்கி விட்ட தலம் இது.

இத்தெய்வத்தை கோயிலின் வடபுறத்தில் ஏரியின் கீழ்ப்பகுதியில் காணலாம். மழை குறைவான காலத்தில் மக்கள் இத்தெய்வத்தை வழிபட உடனே மழை பெய்து பஞ்சம் நீங்குவது இன்றும் நடக்கும் அதிசயமாகும்.

படிகளோடு அமைந்துள்ள பயிரவ தீர்த்தத்தையும் மகிழ மரத்தையும் இங்கு காணலாம்.

இக்கோவிலில் உள்ள கொடுங்கை தனிச் சிறப்பு வாய்ந்தது. திருவாரூர்த் தேரும் திருவாதவூர் கொடுங்கையும் என்பது உலக வழக்கு. ஆலயத்தின் வடகீழ் மூலையில் பண்டைக் கொடுங்கைகளைக் காணலாம். மண்டபங்களின் மேல் பகுதியிலிருந்து வரும் மழை நீரும் காற்று வாக்கில் அடிக்கும் சாரலும் சூரிய வெப்பமும் உட்புறத்தில் புகாமல் தடுக்கின்ற அமைப்பே கொடுங்கை எனப்படும். இங்கு மாணிக்கவாசகர் எழுப்புவித்த மண்டபங்களில் உள்ள 10 – 12 கொடுங்கைகள் பொறியியல் அதிசயமாகும்.

கபில முனிவர் இத்தலத்திலேயே பிறந்துள்ளார். வீரஹத்தி தோஷம் நீங்க அவர் துதித்த பழம்பெரும் திருத்தலம் இதுவே. இங்குள்ள கபில தீர்த்தமே இன்றும் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

ஐந்து நிலைகள் உள்ள இராஜகோபுரம் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. வேதநாயகர் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார்.

சிவபிரான் கயிலையில் பைரவரின் வாகனமான நாயை மறைக்கச் செய்தார். ஆகவே  ஈசனிடம் நாய் வாகனம் வேண்டினார் பைரவர். திருவாதவூர் சென்று வழிபட அங்கு தொலைந்த வாகனம் கிடைக்கும்  என்று சிவபிரான் அருளவே திருவாதவூர் வந்த பைரவர் இங்கு ஒரு திருக்குளத்தை அமைத்து வழிபட்டார். அதுவே பைரவ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பைரவரின் வழிபாட்டினால் மகிழ்ந்த சிவபிரான் அவருக்கு நாய் வாகனத்தைத் தந்தருளினார். ஆகவே இங்கு பைரவர் கனிவுடனும் மகிழ்ச்சியுடனும் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்கு எட்டு அஷ்டமியில் பைரவரை வழிபட்டால் தொலைந்த பொருட்களும் வாகனங்களும் திரும்பக் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோவிலில் சிந்தாமணி விநாயகர், காளீஸ்வரர், விஸ்வநாதர், நடராஜர், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர், மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகியோருக்கு தனி சந்நிதிகள் உள்ளன.

மாணிக்கவாசகருக்கு சிலம்பொலி காட்டிய தலம் இது. கோயிலுக்கு வரும் வழியில் சாலை அருகில் மாணிக்கவாசகர் பிறந்த இடம் உள்ளது. இப்போது அங்கு சிறிய கோயில் ஒன்று உள்ளது.

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் 51 அதிகாரங்களில் 650 பாடல்கள் உள்ளன. திருவாசகத்தால் மகிழ்ந்த சிவபிரான் ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக’ என்று மாணிக்கவாசகரிடம் கூறவே திருக்கோவையார் 400 பாடல்களாக மலர்ந்தது.

மாணிக்கவாசகரின் திருவாசகத்தை அனுபவித்து ஓதி அதன் பொருளை உணர்ந்து ஆனந்தம் அடைந்த வள்ளலார் கூறுவது இது:

வான் கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை

நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே

தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என்

ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

திருஞானசம்பந்தர் இந்தத் தலத்தை திருக்ஷேத்திரக் கோவையில் ‘மயிண்டீச்சரம் வாதவூர் வாரணாசி’ என்று வைப்புத் தலமாகப் பாடி அருளியுள்ளார்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து ஆரோக்கியத்துடன் வாழவைத்து முக்தி அருளும் வேதநாதரும் ஆரணவல்லியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

 –subham—

.வேதநாதர், அருள் புரியும், திருவாதவூர்,

Krishnan- Kannan Mystery in Tamil Literature! (Post.13,932)

Written by London Swaminathan

Post No. 13,932

Date uploaded in London – 25 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Lord Krishna’s name creates some problems for the Tamils. We may even call them puzzles instead of problems.

What are the puzzles?

1.River Yamuna is called Thozunai in Tamil; we don’t know why.

2.Half baked foreigners, and their Indian sycophants have dated Bhagavata Purana, Hari Vamsam and Vishnu Puranam 4th century CE or later. We find references to Gopis but not Radha. Tamil Akananuru (verse 59), an anthology of 400 verses dealing with Sex, Love and Family life, is referring to Krishna Leela with Gopis; they are begging to Lord Krishna to drop their clothes from the top of the tree where Krishna was hiding them. We know for sure the age of Akanauru is first century CE. That means all the Sanskrit books mentioned above are later works. But I dont believe the half baked “scholars” on this dating issue. If they are right then the puzzle is how come Tamils sang about Krishna Leela before Sanskrit speakers?

3.The third puzzle is a linguistic puzzle. So called scholars said Dravidian languages are different from so called Aryan languages. By putting forth this classification, they proved themselves  idiots. The reason being we find thousands of Tamil words or their cognates in English. We also find scores of Tamil words in Greek . Here is the third puzzle; Maal in Tamil means Vishnu; the reason for calling Him Maal or Thiru Maal (Thiru in Sanskrit is Sri) is his colour is Black. Maal in Greek also Black and they named Melanesia after seeing black skinned people in those Pacific islands. Tol kappiam, considered to be the oldest book in Tamil which  also described Vishnu as Black (Maayon) . All the black gods of Hinduism Krishna/Vishnu, Kali, Vyasa, Draupadi are utter black; This explodes the Aryan Dravidian divide of the Western gangs. So the puzzle is how come Greek and Tamil have Maal meaning the same.

And the fourth puzzle is how come Krishna became Kannan in Tamil and Kannaiah in the North. Bharati, the greatest of the modern Tamil poets sang about Krishna in more than twenty songs calling him Kannan. He also created a new woman character ‘Kannamma’. So, Kannan became more popular than Krishna. The reason for the change is Sanskrit use pure pronunciation, where as Prakrit used corrupted pronunciation. In this way we got Kannan  rom Krishna; Prakrit became Paakatham and Sanskrit became Sangatham in Tamil.

Another surprising thing is we find four or five Sangam poets with Kannan’s name as suffixes. Rudra Kannan= Kannan,s on of Rudra; Kari Kannan= Kannan , son of Kari; Kumattur Kannan= Kannan of Kumattur, Maruthan Kannan= Kannan, son of Maruthan.

And two of the poets sing about Balaraman and Krishnan together in Puranauru (verses 56, 58). And Tamil poets describe even their Vahanas and Flags. That means Tamils were not only religious but also thorough with Hindu literature. And these 18 Sangam Tamil books are secular books. Only in Tirumurukatrup padai we see poms on Lord Skanda. Paripatal (Verses 2, 15) and Kalittokai have innumerable references to Krishna and his bull fighting etc. Last but not the least Tamil poets have names such as Damodaran, Govardhanan, Kesavan , which shows that they appreciated and venerated Krishna’s name.

At first a few scholars argued Kann +an means one who has beautiful eyes But this argument will fall fat when we see Kumattur Kannan etc. No one would say his eyes are as beautiful as Kumattur.

A few scholars derived the name Kanna, Kanniah on the basis of information available at Jataka Tales. Two Jataka stories Ghata and Mahavegga talk about Kanhayana gotram as the gotra of Vasudeva. But this Gotram is not found in Tamil Gotra books. So we have to solve the puzzle by accepting Sanskrit Krishna became Prakrit Kanna and Kanniah in the South and North. Tamils now use both Krishna and Kannan in their songs as well as naming of new children.

–subham—

Tags- Kannan , Khanna, Kanniah, Prakrit, Sanskrit, coruuption, Sangam literature.

கண்ணன் பெயரில் உள்ள மர்மம் ! (Post No.13,931)

Written by London Swaminathan

Post No. 13,931

Date uploaded in London – 25 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 கண்ணன் பெயரில் உள்ள மர்மம் ! (Post No.13,931)

கிருஷ்ண என்பது சம்ஸ்க்ருதத்தில் உள்ள பெயர். இது எப்படி, எப்போது  கண்ணன் ஆக மாறியது என்பது மொழியியல் வல்லுனர்களுக்குப் புரியாத புதிராக உள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்த சங்கத் தமிழ் பாடல்களில் இந்து தெய்வங்களைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை. மஹாவீரர், புத்தர் போன்ற பெரிய மஹான்கள் பெயர்கள் கூட இல்லை. ஐந்தாம் நூற்றாண்டு அல்லது ஆறாம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலையில்தான் சமண, புத்த மத பெரியோர்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. ஏறத்தாழ அதே காலத்தில் எழுந்த தமிழ் வேதமான திருக்குறளில் வாமனாவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியவற்றை வெளிப்படையாகவே விளம்பி இருக்கிறார். இவ்வளவுக்கும் சங்கத் தமிழ் நூல்கள் அனைத்தும் சமய சார்பற்ற இக லோக வாழ்வினைப் பற்றியவை; அதாவது குடும்ப வாழ்வு, காதல், வீரம் ஆகியவற்றைப் புலவர்கள் பாடினார்கள். ஆறாம் நூற்றாண்டு முதல் பக்தி இலக்கியங்கள் எழுந்த பின்னர் இகலோக வாழ்வு மறைந்து, பரலோக வாழ்வு பற்றிய கருத்துக்களே பெரும்பாலும் கிடைக்கின்றன.

வெள்ளைக்கார மண்டூகங்களும் அவர்களை அடியொற்றிச் செல்லும் இந்து சமய அரை வேக்காடுகளும் கிருஷ்ண என்பவரின் புகழ் பாடும் பாகவத புராணம், ஹரி வம்சம், விஷ்ணு  புராணம் எல்லா வற்றையும் நாலாவது நூற்றாண்டுக்குப் பின்னர் வைக்கின்றன; அதாவது அதில் கடைசியில் ஏதேனும் சேர்ர்க்கப்பட்டிருந்தால் அதுதான் அதன் காலம் என்று வாதாடும் கும்பல் அது.

அதை ஏற்றுக்கொண்டால் தமிழர்தான் கிருஷ்ணரைப் பற்றிய எல்லாவற்றையும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பாடினார்கள் என்று  ஆகிவிடும். ஏனெனில் கிருஷ்ணரின் கோபி ஸ்த்ரீ விளையாட்டு அகநானூறு (59) பாடலிலே உள்ளது இவ்வளவுக்கும் அகநானூறு சமய நூல் அல்ல. போகிறபோக்கில் ராமாவதார நிகழ்ச்சிகளையும் மஹாபாரத நிகழ்ச்சிகளையுள் பாடிவிட்டுச் சென்றனர் சங்கப் புலவர்கள்.

சங்க நூல்கள் பதினெட்டில் பரிபாடல், கலித்தொகை, திருமுருகாற்றுப்படை ஆகியவற்றில் அதிக சமயச் செய்திகளைக் காண்கிறோம். கோபி- கிருஷ்ண லீலைகளை சொல்லும் அகநானூறு (59) பாடலில் யமுனை நதியைத் தொழுனை நதி  என்று காண்கிறோம் ; பிற்கால நூல்களும் அவ்வாறே குறிப்பிடுகின்றன. கங்கை நதியைக் குறிப்பிடும் சங்க நூல்கள் கங்கை என்றே பாடுகின்றன. யமுனை மட்டும் தொழுனை ஆனது எப்படி என்பது முதல் மர்மம்முதல் புதிர்.

கண்ணனிடம் கோபியர் பெண்களை எங்களது ஆடைகளைக் கொடுத்து விடப்ப என்று கெஞ்சிக்கூத்தாடி தொழுததால் இப்படிப் பெயர் வைத்திருக்கலாம் அல்லது கண்ணனைத் தொழுத, பிருந்தாவனம் அமைந்த இடம் என்பதால் இப்படிப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். தமிழில் பழமையான நூலான தொல்காப்பியத்திலேயே எல்லா இந்தக் கடவுளரையும் காண்கிறோம் .புறநானூற்றில் நக்கீரரே எல்லோருடைய வாகனங்கள் கொடிகளையும் குறிப்பிட்டுப் பாடுகிறார். ஆக இந்து மதம் கொடிகட்டிப் பறந்ததும்— இந்து மதம் மட்டுமே பின்பற்றப்பட்டதும் —சங்க இலக்கியத்தில் உறுதியாகிறது.

இப்போது கண்ணன் மர்மத்துக்கு வருவோம்;

தமிழில் திருவள்ளுவருக்கு அடுத்தபடியாக நிற்பவர் பாரதி. இருபதுக்கும் மேலான பாடல்களில் அவர் கண்ணன் பற்றிப் பாடியதோடு வேறு ஒரு புதுமையையும் செய்தார் ; கண்ணம்மா என்ற பெண் கதாபாத்திரத்தையும் உருவாக்கினார்.

கிருஷ்ணனை யார் இப்படி கண்ணன் ஆக்கினார்கள்? ஏன்?

தொல்காப்பியத்தில் வரும் மாயோன் என்பதற்கும் கிருஷ்ணன் என்பதற்கும் பொருள் ஒன்றே ; கருப்பன்; கறுப்புத் தெய்வம்

ஆரியர்கள் வெள்ளைத் தோலினர் திராவிடர்கள் கறுப்புத் தோலினர் என்ற வெள்ளைக்கார கும்பல் வாதங்களை வியாசர், கிருஷ்ணர், விஷ்ணு , திரவுபதி ஆகியோர் தவிடு பொடியாக்குகிறார்கள் ஏனெனில் இவர்கள் அனைவரும் காக்கா கருப்பு!!

பாகவத காலத்தை வெள்ளைக்கார நோக்கில் பார்த்தால் தமிழில் தான் கிருஷ்ணர் – கோபியர் பற்றிய முதல் குறிப்பு கிடைக்கிறது சம்ஸ்க்ருதத்தில் கோபியர்- ராதா பற்றிய குறிப்புகள் பின்னரே கிடைக்கின்றன. மேலும் மிகப்பிரிய அறிஞரான ராகவ அய்யங்கார் தொல்காப்பியம் சொல்லும் மாயோன் கிருஷ்ணன்தான் என்கிறார். எல்லாம் கருப்பு என்றே பொருள்.பின்னர் மாயவன் என்றும் குறிப்புகள் கிடைக்கின்றன. இது மாயம் செய்யும் அவதாரம் என்ற பொருள்தரும்; கிருஷ்ணன் செய்த மாயங்கள் ஒன்றல்ல; இரண்டல்ல.

இங்கு ஒரு மொழியியல் அதிசயமும் கிடைக்கிறது. மால, மேல, மல MELA (MELANESIA= LAND OF BLACK PEOPLE) என்றால் கருப்பு என்று கிரேக்க மொழியில் பொருள் ; கிரேக்கச் சொல் தொல்காப்பியத்தில் புகுந்தது எப்படி?

உண்மையில் சொல்லப்போனால் வெள்ளைக்காரன் மொழியியல் LINGUISTICS எல்லாம் மோசடி வேலை. ஆரிய மொழி, திராவிட மொழி என்று சொல்லிப் பொய்யுரை பரப்பின. கிரேக்க மொழியில் நூற்றுக்கணக்கான தமிழ்ச் சொற்களும் ஆங்கில மொழியில் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களும் இருப்பதை எழுபது கட்டுரைகள் மூலம் காட்டியுயுள்ளேன்.

ஆக மால், மாலன், மாயோன், என்பதெல்லாம் கருப்பு வண்ண கண்ணனை அல்லது விஷ்ணுவைக் குறிப்பதே.

****

சங்க இலக்கியத்தில் கண்ணன் !

பரிபாடலில் தாமரைக் கண்ணன் என்ற பெயர் வருகிறது. அப்போது தாமரை வடிவிலுள்ள கண்   உடையவன்  என்று பொருள் கொண்டார்கள் ஆனால் சங்க புலவர் பட்டியலில் பல புலவர்கள் கண்ணன்  என்ற பெயருடன் உள்ளனர். உருத்திரன் கண்ணனார் அதிகமான வரிகளை பாடிய  புலவர். அவரை ருத்ர கிருஷ்ணன் என்று மொழிபெயர்த்தால் கோபக் கண்ணன் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் நான் அதை மறுக்கிறேன் ; உண்மையில் ருத்ரன் மகனான கண்ணன் /கிருஷ்ணன் என்பதே பொருள்.

இதற்கு என்ன ஆதாரம்? என்று வினவலாம்.

ஒரு புலவரின் பெயர் குமட்டூர் கண்ணனானர். வெள்ளைக்காரன் போல பொருள் கொண்டால் அவரது கண்கள் குமட்டூர் போன்றது என்று அபத்தமாகப் பொருள் கொள்ள வேண்டிவரும். உண்மையில் அவர் பெயர் கண்ணன் அவர் குமட்டூரைச் சேர்ந்தவர் என்பதே பொருள்.

மருதன் கண்ணனார் , காரிக்கண்ணனார் என்ற புலவர் பெயர்களும் உள்ளன. காரிக்கண்ணன் பெயரையாவது கறுப்புக் கண்ணன் என்று சொல்லிவிடலாம்; மருதன் கண்ணனாரை மருத நிலம் போன்ற கண் உடையவர் என்று பொருள் சொல்ல முடியாதே! ஆகவே எல்லா கண்ணன்களையும் “கண்” பற்றி எழுந்த சொற்கள் அல்ல கிருஷ்ணன் பெயரால் வந்த சொற்களே என்று அறிகிறோம்; இதற்கு மேலும் பல சான்றுகள் சங்க இலக்கியத்திலே கிடைக்கின்றன. கோவர்த்தனார்தாமோதரனார், கேசவனார் போன்ற புலவர்களும் சங்கத் தமிழ் பட்டியலில் இடம்பெறுகின்றன இவை அனைத்தும் கிருஷ்ண பரமாத்மாவின் லீலி,,,,,,களால் உண்டான பெயர்கள்; ஆக சங்க இலக்கியத்தில் வரும் கன்னங்கள் கண் அழகினால் பெயர் பெறவில்லை கிருஷ்ண பரமாத்மாவின் பெயரையே தாய் தந்தையர் சூட்டியதால் மருதன் மகன் கண்ணன் , உருத்ரன் மகன் கண்ணன் என்று உறுதியாகச் சொல்லலாம்.

அகம் 59, பரிபாடல் 2, 15;

கிருஷ்ணன், பலராமன் – புறநாநூறு  56;

மதுரைக் காஞ்சியில் பகவத் கீதை நடந்தது/ உபதிசித்தது பற்றிய மறைமுகக் குறிப்பும் உளது

மால் என்ற பெயரை பரிபாடலில் காண்கிறோம்

புறம் 58-ல் ‘காரி’க் கண்ணனார் நீல் நிற நேமியோன் என்ற கண்ணனைக் குறிப்பிடுவதால் அவர் பெயரும் கூட கிருஷ்ண/ கண்ணன் என்பது உறுதியாகிறது.

அது சரி வடக்கில் கிருஷ்ணன் எப்படி கண்ணா ஆகியது ? அதற்கும் பதில் உண்டு. சம்ஸ்க்ருதத்திலுள்ள தூய உச்சரிப்புகளை  கிராமத்து மக்களும் வீட்டிலுள்ள பெண்களும் கொச்சையாகப் பேசுவர்; அதை பிராகிருதம் என்பர். திருவிளையாடல் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் இலக்கியத் தமிழையும் விற கு வெட்டியானபோது கொச்சை தமிழையும் பேசுவதைக் காண்கிறோம்; இது சம்ஸ்க்ருதம்- பிராகிருதம் போன்றது.

“க்ரு” ஒலி தமிழில் கிடையாது; ஆகையால் சங்கதம் , பாகதம் என்ற சொற்களைத் தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தினர். இதே முறையில் “க்ரு”  “க”  ஆக மாறியது. பின்னர்    “கண்ண” என்று மாறியது; இதனால் வடக்கிலும் கன்னையா லால் , கன்னா என்ற பெயர்களைக் காண்கிறோம். இன்றும் வடக்கில் கன்னையா பெயர்கள் உள்ளன. ஆண்களாக இருந்தால் தமிழ் பெயர்கள் பெரும்பாலும் ‘ன்’ அல்லது ‘ம்’ என்பதில் முடியும். சுவாமிநாத: என்று சம்ஸ்க்ருதத்தில் எழுதும் என் பெயர் தமிழில் சுவாமிநாத+ன் ஆகிவிடும்; ஸ்கந்த: என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர் கந்த+ன் ஆகிவிடும் இதே முறையில் கண்ண +ன் சேர்ந்து கண்ணன் ஆகியது .

பழங்காலத்தில் கொச்சைத் தமிழ் இலக்கியம் கிடையாது. எல்லா மொழிகளிலும் கொச்சைத் தமிழில் இலக்கியம் படைப்பது பிற்காலத்தில்தான். இதை முதலில் காண்பது பிராகிருத மொழி இலக்கியத்தில்; சம்ஸ்க்ருத   இலக்கியம் எழுந்த பின்னரே பிராகிருத இலக்கியம் எழுந்தது. தமிழிலும் பல்லாயிரக்கணக்கான கொச்சைத் தமிழ் இலக்கியங்கள் கடந்த இரு நூறு ஆண்டுகளாகவே வருகின்றன. அவற்றை நாம் பத்திரிகைகளில் வரும் கதை, நாவல்களில் காண்கிறோம். இலக்கிய மொழியும் , கொச்சை மொழியும் சம காலத்தில் புழங்கி இருந்தாலும் அதை எழுத்தில் வடிக்கும் துணிவு மிகவும் பிற்காலத்திலேயே எழுந்தது

இதனால் கிருஷ்ண என்பதற்குப் பதிலாக கண்ண/ கன்னா என்பதை பிற்காலத்திலே காண்கிறோம்.

இதற்கு இன்னும் ஒரு விளக்கத்தையும் சில அறிஞர்கள் முன்வைக்கின்றனர்; ஆனால் அது புத்த மத ஜாதகக் கதைகளில் வருவதால் சரியானதா என்று சொல்ல  முடியாது ; கட ஜாதகக் கதையிலும் மஹா வக்க ஜாதகக் கதையிலும் கா ன்ஹாயன என்ற கோத்ரம் இருந்ததாகவும் வாசுதேவன் அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவன் என்றும் கதை போகிறது. ஆயினும் அப்படிப்பட்ட கோத்ரம் கோத்ரப் பட்டியலில் இன்று இல்லை.

ஆக மொழியியல் கொள்கைகள் அபத்தம் என்பதையும், திராவிட மொழி என்று தனி பிரிவு கிடையாது என்பதையும் கிருஷ்ண= கண்ணா காட்டுகிறது; மால் = மேலனேஷியா தீவுகள் காட்டுகிறது.

–subham—

Tags-கண்ணன் கிருஷ்ணன், பாகதம் சங்கதம் மால் திருமால் மாயோன் , கருப்பு,  கண்ணன் பெயரில் உள்ள மர்மம் ! (Post No.13,931)

அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை – சாலி ரைட்! – 1 (Post No.13,930)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.930

Date uploaded in London – –25 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

20-11-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை – சாலி ரைட்! – 1

ச.நாகராஜன்

அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனையாகப் புகழ் பெற்றதோடு அனைத்துப் பெண்களுக்கும் விண்வெளி ஆர்வத்தை ஊட்டி, பல்வேறு மேம்பாட்டுப் பயிற்சிகளையும் அளித்தவர் விண்வெளிப் பெண்மணியான சாலி க்ரிஸ்டென் ரைட் ஆவார்.

பிறப்பும் இளமையும்

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1951-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி பிறந்தார் சாலி ரைட். தாயார் கரோல் நார்வேஜிய வமிசாவளியினர். பெண்களின் சீர்திருத்தத்தில் அவர் ஈடுபட்டவர். தந்தை டேல் பர்டெல் ரைட் அமெரிக்க ராணுவத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் பணியாற்றியவர். போர் முடிந்த பிறகு அவர் லாஸ் ஏஞ்சல்ஸில் சாண்டா மோனிகா கல்லூரியில் பேராசிரியர் ஆனார்.

நல்ல சூழ்நிலையில் வளர்ந்த சாலி ரைட் ஒன்பது வயதாகும் போது ஸ்பெயினுக்குக் குடும்பத்துடன் பயணப்பட்டார். அங்கு அவர் டென்னிஸ் விளையாட்டில் வெகுவாக ஈர்க்கப்பட்டார்.  12 வயதாகும் போது தென் கலிபோர்னியாவில் டென்னிஸ் விளையாட்டில் தர வரிசையில் 20 என்ற இடத்திற்கு முன்னணியில் வந்தார்.

வான் இயற்பியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட சாலி இயற்பியலில் தேர்ச்சி பெற்றார்.

 ‘‘கலிபோர்னியா கேர்ல்’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட அவர் டென்னிஸ் விளையாடுவதில் சிறந்து விளங்கியதோடு. அறிவியலில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். விண்வெளி என்றால் போதும் அடங்காத ஆர்வத்துடன் அனைத்துச் செய்திகளையும் கவனிப்பார்

நாஸாவின் அழைப்பு

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா 1977ல் விண்வெளி செல்ல விரும்புவோருக்கு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பைப் பார்த்த சாலி இதில் பெண்களுக்கு இடம் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். ஏனெனில் அது வரை பெண்களுக்கு விண்வெளித் திட்டத்தில் இடம் தரப்படவில்லை.

நாஸா பெண்களை விண்வெளிக்கு அனுப்ப இருக்கும் இந்தச் செய்தியைப் பார்த்தவுடன், சாலி ரைட் விண்வெளி செல்ல ஒரு வீராங்கனைக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று பார்த்தார். “ஆஹா, இது என்னால் முடியும்” என்ற முடிவுக்கு உடனே வந்த அவர் நாஸாவிற்கு விண்ணப்பத்தை அனுப்பி விட்டார்.

ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் பிஹெச்டி படிப்பை அவர் முடித்த தருணம் அது. பல்கலைக் கழகத்திலேயே அனைவரும் அவர் தான் முதல் விண்வெளி வீராங்கனை என்று முடிவு கட்டி விட்டார்கள் என்றால் எப்படிப்பட்ட துணிச்சலும் விண்வெளி ஆர்வமும் அவருக்கு இருந்திருக்க வேண்டும்!

1977, ஜூன் மாத இறுதியில் நாஸா 8079 விண்ணப்பங்களைப் பெற்றது. அதில் 208 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கடுமையான மருத்துவ பரிசோதனைகள், நேர்முகத் தேர்வுகள். எதையும் சமாளிக்கும் திறன் இருக்கிறதா, குழுவாக இணைந்து செயல் ஆற்றும் திறன் உள்ளதா என்பதற்கான சோதனைகள் உள்ளிட்ட அனைத்திலும் அவர் தேர்வு பெற்றார். இறுதித் தேர்வில் 35 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விண்வெளிக்கான பயிற்சிகள் தொடங்கின. 1979, ஆகஸ்ட் மாதம் இவர்களுக்கான பயிற்சிகள் வெற்றிகரமாக முடிந்து விட்டதாக நாஸா அறிவித்தது.

முதலில் அவர் தரை நிலையத்தில் தகவல் தொடர்புக்கான வேலையைத் திறம்படச் செய்தார்.

விண்கலத்தின் ரொபாட்டின் கரத்தை இயக்குவதில் அவர் நிபுணராகத் திகழ்ந்தார். இதற்கான காரணம் அவரது டென்னிஸ் விளையாட்டு தான். கண்ணுக்கும் கைகளுக்கும் இடையே உள்ள இசைவு டென்னிஸ் விளையாட்டில் மிக அதிகம் தேவைப்படும். அதுவே ரொபாட்டை இயக்க அவருக்குப் பெரிதும் உதவியாக ஆனது,

  நாஸா எப்போதுமே தனிப்பட்ட நபருக்குள்ள திறனை அதிகமாகப் பாராட்டாது.  குழு மனப்பான்மை கொண்டு குழுவாக இசைந்து செயல்படுபவரின் செயல் திறத்தையே நாஸா எப்போதும் பாராட்டும். சாலி இதிலும் நல்ல பெயரைப் பெற்றார்.

விண்வெளிக்குச் செல்லும் தகுதியான பெண்மணி என்று அவரைத் தேர்ந்தெடுத்த நாஸா அதை அறிவித்தது.

அவ்வளவு தான், உடனடியாக 500 பேர்கள் அவரைப் பேட்டி காண வந்து விட்டனர். அவர் அதற்கு இணங்கவில்லை. நாஸாவே ஒரு பத்திரிகையாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.

சங்கடமான கேள்விகள் உட்பட கேள்விக் கணைகள் பறந்து வந்தன சாலி ரைடை நோக்கி.

“பயணத்தில் ஏதேனும் தவறாகப் போய்விட்டால் நீங்கள் அழுவீர்களா? உங்கள் ஜனன உறுப்பு விண்வெளிப் பயணத்தினால் பாதிக்கப்படுமா என்பன போன்ற கேள்விகளுக்கு, தான் தன்னை ஒரு விண்வெளி வீராங்கனையாக மட்டுமே பார்ப்பதாக அவர் பதில் அளித்தார்.. ஒரு பெண்மணிக்கு விண்வெளியில் மேக்-அப் செட் வேண்டாமா,அதை வடிவமைக்க உதவி செய்யுங்களேன் என்று நாஸா பொறியாளர்கள் வேறு அவரைக் கேட்க ஆரம்பித்தனர்.

விண்வெளிப் பயணம்

1983-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ம் தேதி சாலஞ்சர் விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட போது அதில் பயணப்பட்ட சாலி ரைட் உலகில் விண்ணில் பறந்த முதல் அமெரிக்கப் பெண்மணி ஆனார். அவரே விண்ணில் பறந்த மிகக் குறைந்த வயதினர் என்ற பெருமையையும் பெற்றார்.

அவர் விண்ணில் பறந்த தினத்தன்று ஏராளமானோர் குதூகலத்துடன் “ரைட் சாலி ரைட்” (Ride Sally Ride) என்ற ஆங்கில வார்த்தைகளுடன் கூடிய ‘டி’ ஷர்ட்டுகளை அணிந்து அவரை வழியனுப்பி வைத்தனர். ஆறு நாட்கள், இரண்டு மணி 23 நிமிடங்கள் 59 விநாடிகள் இந்தப் பயணம் நீடித்தது.

உலகமே கொண்டாடும் சிறந்த விண்வெளி வீராங்கனை ஆகி விட்டார் சாலி ரைட்!

மீண்டும் 1984-ல் அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி அவர் சேலஞ்சர் விண்கலத்தில் எட்டு நாட்கள் பறந்தார். 197.5 மணி நேரத்தில் சேலஞ்சர் 132 முறை பூமியை ஓடுபாதையில் சுற்றி வலம் வந்தது.

இந்த இரு பயணங்களிலும் சுமார் 343 மணி நேரங்கள் அவர் விண்வெளியில் பறந்திருந்தார்.

28-1-1986ல் விண்ணில் ஏவப்பட்ட சேலஞ்சர் விண்கலம் கிளம்பிய சில வினாடிகளிலேயே வெடித்துச் சிதறியது. இதில் ஏழு விண்வெளிவீரர்கள் இறந்தனர். இந்த விபத்து ஏற்பட்டதையொட்டி  அவரது மூன்றாவது பயணம் திட்டமிட்டபடி நடக்கவில்லை.

1987-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி நாஸாவிலிருந்து ஓய்வு பெற்று ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சேரப்போவதாக அவர் அறிவித்தார். 1989ல் அவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியை ஆனார்.

***

Tags-அமெரிக்கா , விண்வெளி, வீராங்கனை – சாலி ரைட்

Hindu Crossword Puzzle 24112024 (Post No.13,929)

Written by London Swaminathan

Post No. 13,929

Date uploaded in London – 24 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1 2    3  4
        
5       
        
 6       
        
  7      

ACROSS

1.Swami Vivekananda’s name

5.Lord Vinayaka’s name

6.Ignorance, delusion in Sanskrit and other Indian languages

7.In Tamil it means tenth star in 27 stars; also Yagam, Havan. In Sanskrit the star has similar sound.

DOWN

2.Strange, Extra ordinary, wonderful in Sanskrit and other Indian languages

3. a substance, fluid, medicine, diet in Sanskrit and other Indian languages

4.Horse in Sanskrit and other Indian languages

star Regulus is tenth star

N 1A 2REND 3RA 4
 P   R S
S 5UMUKA V
 R   V A
A 6VIDHYA 
 A   A  
 M 7AKAM  

–Subham—

Tags- Hindu Crossword Puzzle24112024