ஞான தீபம் ஏற்றுவோம் திசையெங்கும் திருப்புகழ் பரப்புவோம்.


குவலயமெங்கும் குமரனைப் போற்றுவோம்

ஞான தீபம் ஏற்றுவோம்

திசையெங்கும் திருப்புகழ் பரப்புவோம்.

எல்லாம்வல்ல அறுமுகசிவனாகிய ஸ்ரீ முருகப்பெருமான் அனுக்கிரஹம் துணைக்கொண்டு,

 உலகநலனை வேண்டி முருகப்பெருமானுக்குகந்த கார்த்திகை தீபதினத்தைக்

கொண்டாடும் விதமாக

எதிர்வரும் குரோதி வருடம்

கார்த்திகை மாதம் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று

உலகளாவிய முருகன் அடியார்கள் கந்தப்பெருமானை சிந்தையில்கொண்டு சந்தக்கவிச் சக்ரவர்த்தி ஸ்ரீ அருணகிரிநாதர் பாடியருளிய திருப்புகழ் மற்றும்

கந்தரனுபூதி கந்தரலங்காரம் முதலியவற்றில்

ஏதேனும் ஓர் பாடலை பாடி வீடியோவாக அனுப்பினால்

எங்களது ஞானமயம் முகநூல் பக்கம் மற்றும் யூட்யூப் பக்கத்தில் 13/12/24

வெள்ளிக்கிழமை சிறப்பு நிகழ்வில் ஒளிபரப்பு செய்யப்படும். பதிவுகளை

10/12/24ஆம் தேதிக்குள்

அனுப்பி வைக்கவும்.

Telegram or WhatsApp No +447739415067

Email gnanamayam@hotmail.com

வேலும் மயிலும் துணை, வேலும் மயிலும் துணை என்று இடையுறாது ஓதி, வேண்டிய பேறு பெற்றோர் பலர்.

இணையம் மூலம் நடைபெறும்

இவ்விழாவில் குருமுதல்வர்கள் ஆசியுரைகளும், உலகளாவிய இசைக்கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சிகளும் பாகவதர்களின் பிரவசனங்களும்

சைவ அறிஞர்களின் சொற்பொழிவுகளும் நடைபெறும்.

முருகன் அடியார்கள் அவர்களின் குழந்தைகளை கையில் வேலுடன் முருகர் அலங்காரம் செய்து, முருகன் பாடலை பாடச் செய்து தீபத்திருநாளை சிறப்பாக கொண்டாடி கந்தன் திருவடியில் சமர்ப்பிப்போம்.

  வேலையும் மயிலையும் நினைப்பதால் அங்ஞானம் நீங்கி மெய்ஞானம் பெற்று நீண்ட ஆயுளும் சகல பேறுகளும் கிடைக்கும் எனபது திண்ணம்.

சாற்றுவோம் திருப்புகழ் மாலை

போற்றுவோம் முருகனின் தாளை

வாசிப்போம் கந்தனின் நூலை

பூசிப்போம் குமரனின் வேலை

—SUBHAM—-

Leave a comment

Leave a comment