வியக்க வைக்கும் 90 வயது நடிகை ஷர்லி மக்லீன்!! (Post No.14,011)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,011

Date uploaded in Sydney, Australia – 24 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

 kalkionlineல் 9-12-24 அன்று பிரசுரிக்கப்பட்ட கட்டுரை 

வியக்க வைக்கும் 90 வயது நடிகை ஷர்லி மக்லீன்!! 

ச. நாகராஜன் 

ஆஸ்கார் விருது பெற்ற நடிகை ஷர்லீ மக்லீனுக்கு வயது 90. (பிறப்பு : 24 ஏப்ரல் 1934 வயது 90) இன்னும் ‘இளமை’ குன்றாமல் அதே உற்சாகத்துடன் அனைவரையும் கவரும் விதத்தில் தன் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார் அவர்.

2024 அக்டோபர் மாதம் 22ம் தேதி அவரது புதிய புத்தகமான The Wall of Life வெளியாகி அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. தன் வாழ்க்கையில் இளமைக் காலம் தொட்டு உள்ள 150 அழகிய படங்களைத் தேர்ந்தெடுத்து இதில் அவர் வெளியிட்டுள்ளார்.

“நான் ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளேன்; அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என்கிறார் அவர்.

1983ல் அவரது படமான ‘டெர்ம்ஸ் ஆஃப் எண்டியர்மெண்ட்’ ஆஸ்கார் விருதைத் தட்டிச் சென்றது. மொத்தம் ஆறு முறை ஆஸ்காருக்காக அவர் பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

இளமையிலேயே ஆன்மீகத் தேடலில் ஈடுபட்ட அவர் ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட்டவர். இமயமலைக்கு வந்து தியானத்தை செய்தவர்.

தனது ஏராளமான அதீத உளவியல் அனுபவங்களைப் பல கட்டுரைகளின் வாயிலாகவும் புத்தகங்களின் மூலமும் அவர் பகிர்ந்துள்ளார்.

ஒரு லாமா அவருக்கு கழுத்தைச் சுற்றி அணியும் ஸ்கார்ப் ஒன்றைப் பாதுகாப்புக் கவசமாக அவருக்குத் தந்தார். அதை அணிந்து கொண்டு இமயமலையில் அவர் ஒரு சிறுத்தையிடமிருந்து தன்னைக் காத்துக் கொண்டார்.

அங்கு அந்தக் கடுங்குளிரில் அவர் போர்வை எதையும் போத்திக்கொள்ளவில்லை. “லாமா சொன்ன ஒரு மந்திரத்தை உச்சரித்தேன். உடலே வெதுவெதுப்பாக இருந்தது” என்று கூறி அனைவரையும் பிரமிக்க வைத்தார் அவர்.

பறக்கும் தட்டுகளில் ஈடுபாடு கொண்ட அவர் வானவெளியில் இனம் தெரியாத பறக்கும் பொருள்களைப் பார்த்ததாக வேறு கூறியிருக்கிறார்.

 எழுபது ஆண்டு காலம் திரைத்துறையிலும் தொலைக்காட்சியிலும் வெற்றிகரமாக வலம் வந்த அவர் தான் ‘எப்படி சபையைப் பார்த்து கூச்சப்படுவதிலிருந்தும் நடுங்குவதிலிருந்தும் மீண்டு வர முடிந்தது’ என்பதை வெளிப்படையாகவே கூறி இருக்கிறர்.

நியூ மெக்ஸிகோ பாலைவனத்தில் இருந்த ஒரு அகுபங்க்சர் நிபுணரிடம் தான் சென்றதாகவும் அவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் பின்னர் சபை நடுக்கம் என்ற பேச்சே அவர் வாழ்வில் எழவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சபை நடுக்கம் ஏன் வந்தது என்பதைப் பற்றி அவர் கூறும் விவரம் அனைவரையும் பிரமிக்க வைத்தது.

தனது முந்தைய ஜென்மங்களைப் பற்றி அவர் நன்கு அறிந்தவர். பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு அரசவையில் அரசவைக் கோமாளியாக இருந்ததாகவும் ஒரு நிகழ்ச்சியின் போது மன்னரால் தண்டிக்கப்பட்டு அவரது தலை துண்டிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அந்த நிகழ்ச்சியை நினைத்தாலேயே தலை உருண்டு ஓடுவதைத் தன்னால் மனக்கண்ணில் பார்க்க முடிகிறது என்று கூறிய அவர், “பின்னர் ஏன் எனக்கு சபையைக் கண்டால் நடுக்கம் வராமல் இருக்கும்” என்றார்.

 அவரது அதீத உளவியல் ஆற்றல் சம்பவங்களும் அவரது முந்தைய ஜென்ம வரலாறுகளும் படிக்கச் சுவையாக இருக்கும்.

தொண்ணூறு வயதிலும் உற்சாகமாக இருக்கும் இவரைப் போன்ற அதீத உளவியல் ஆற்றல் கொண்ட இன்னொரு நடிகையை உலகம் இனி பார்க்குமா என்பது சந்தேகம் தான்!

**

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்தி மடல் 22-12-2024 (Post.14,010)

Written by London Swaminathan

Post No. 14,010

Date uploaded in Sydney, Australia – 23 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை  வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

அனைவருக்கும் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 22–ம் தேதி 2024-ம் ஆண்டு

*****

ஜெய்  ஸ்ரீராம் முழக்கம் எவ்வாறு குற்றமாகும்? : உச்சநீதிமன்றம் கேள்வி

மசூதியில் “ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிடுவது எவ்வாறு குற்றமாகும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மசூதியில் “ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிட்ட குற்றச்சாட்டில் இருவர் மீதான குற்றவியல் விசாரணையை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது.

அப்போது, ஒரு மதம் சார்ந்த குறிப்பிட்ட வார்த்தையையோ அல்லது பெயரையோ முழக்கமிடுவது எவ்வாறு கிரிமினல் குற்றமாகும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மசூதிக்குள் நுழைந்ததாக கூறப்படும் குற்றம்சாட்டப்பட்டவர்களை சிசிடிவி உதவியுடன் கண்டுபிடித்தது யார் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 503-ன் கீழ் குற்றவியல் மிரட்டல் மற்றும் பிரிவு 447-ன் கீழ் குற்றவியல் அத்துமீறல் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

பின்னர் மனுவின் நகலை சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு வழங்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைத்தனர்.

xxxxxx

பூட்டானின் தேசிய தின விழாவில் சத்குரு பங்கேற்பு!

:பூட்டானின் 177-வது தேசிய தின விழா கொண்டாட்டம் இன்று (டிச.17) அந்நாட்டில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சத்குரு ஜக்கி வாசுதேவ்,  பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கின் அழைப்பின் பேரில் அரசு விருந்தினராக கலந்து கொண்டார்.

இது குறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ்  பதிவிட்டுள்ள சமூக வலைதள பதிவில் “அழகிய பூட்டான், உங்கள் தேசிய தினத்தில் இங்கு இருப்பது எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியமும் கௌரவமும் ஆகும். அரசர், அரச குடும்பத்தினர் மற்றும் பூட்டானின் அற்புதமான குடிமக்கள் அனைவரது உபசரிப்பும் மிகவும் நெகிழ்ச்சியூட்டுவதாகவும் நெஞ்சைத் தொடுவதாகவும் உள்ளது. எண்களோடு போட்டியிடுவதற்கு மேல் தனது குடிமக்களின் மகிழ்ச்சிக்கு முன்னுரிமை தரும் நாடு, மனிதகுலம் முழுவதற்கும் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. அழகிய பூட்டான் நாட்டிற்கும் அதன் குடிமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும்” எனக் கூறியுள்ளார். 

பூட்டானின் தேசிய விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, புதன்கிழமை மாலை நடைபெறும் இசை நிகழ்ச்சி மற்றும் அரச விருந்து ஆகியவற்றிலும் சத்குரு கலந்து கொண்டார்.

பூட்டானின் முதல் மன்னர் கோங்சார் உக்யென் வாங்சுக்கின் முடிசூட்டு விழா 1907-இல் நடைபெற்றது. இதனை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17-ஆம் தேதி பூட்டானில் தேசிய தின விழா கொண்டாடப்படுகிறது

இந்தியாவும் பூடானும் கலாச்சாரம் , பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் உறவுகளில் நீண்ட கால நட்பைப் பகிர்ந்து கொண்டு வருகின்றன.

*****

Hinduphobia Tracker துவக்கம்

இந்துக்களுக்கு எதிரான செயல்கள், படைப்புகள் மற்றும் சொற்பொழிவுகளை வெளி உலகிற்குத் தெரிவிக்க ஹிந்து போபியா ட்ராக்கர் Hinduphobia Tracker என்னும் அமைப்பு துவங்கப்பட்டுள்ளது இந்துக்களை வெறுக்கும் ஆட்களின் நடவடிக்கைகள் அனைத்தையும் இது பதிவு செய்யும். இந்து விரோதிகளின் அவதூறுகளை பட்டியலிடும் இந்த அமைப்பினை ஒ பி இந்தியா OpIndia ஆசிரியர் மற்றும் தலைமை அதிகாரிகளான நூபுர ஷர்மா, ராகுல் ரோஷன் ஆகிய இருவரும் நடத்தும்  Gavishti Foundation கவிஷ்டி பவுண்டேஷன் துவக்கியுள்ளது . 

சர்வதேச விதிமுறைகளை அனுசரித்து, எட்டு வகையான குற்றங்களை இந்த அமைப்பு பட்டியலிடும்; இந்து சமய பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், இந்து மத சின்னங்களை அவமதிக்கும் செயல்கள், அதிரடி மதமாற்றம், இந்து மதத்தை எதிர்த்து அவதூறு கற்பிக்கும் எழுத்துக்கள் பேச்சுக்கள், செயல்கள் ஆகியன  இந்த எட்டு வகைகளில் அடங்கும். இனி இத்தகைய செயல்களை ஒபி இந்தியாவுக்கு அனுப்பலாம். ஒபி இந்தியா என்ற தளத்தை கூகுள் மூலம் எளிதில் கண்டு[பிடிக்கலாம்; அணுகலாம்.

 xxxxxx 

பிரதமரின் ஆலமர பிரதட்சிணம் 

உலகின் மிகப்பெரிய பண்டிகையான மஹா கும்பமேளாவுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் துவங்கிவிட்டன .அடுத்த ஆண்டு, அதாவது 2025 ஆம் ஆண்டு ,கங்கை, யமுனை சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் பிரயாக் ராஜ் நகரில் இது நடைபெறும். திரிவேணி சங்கம் என்பது இதன் இன்னும் ஒரு பெயர்.

இந்திய பிரதமர் நரேந்திரமோடி இந்த நகருக்கு கார்த்திகை நாளன்று வந்து பல புதிய திட்டங்களைத் துவக்கினார். அங்குள்ள அழியாத ஆலமரத்தை வலம் வந்து உலகம் முழுதும் சுபிட்சம் அடைய பிரார்த்தனை செய்தார்

அக்ஷய வட என்பதன் பொருள் காலத்தால் அழியாத ஆலமரம் என்பதாகும். இது பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோரின் மும்மூர்த்தி வடிவம் என்று கருதப்படுகிறது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலுள்ள இந்த ஆல மரத்தை பிரதமர் வலம் வந்து பிரார்த்தனை செய்தார்.

உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் ஏற்பாடு செய்த பூஜைகளில் எஜமானன் என்ற ஸ்தானத்தில் இருந்து , பிரதமர் கிரியைகளையும் செய்தார்

xxxxxx

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு வழிகாட்டி கொடுத்தது பெருமாள் தான்: திரிதண்டி நாராயண ராமானுஜ ஜீயர் பேச்சு

வில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் நடந்த திவ்ய பாசுரம் இசை வெளியீட்டு விழாவில் திரிதண்டி நாராயண ராமானுஜ ஜீயர் பேசியதாவது:

இந்த விழாவில், நானும், இளையராஜாவும் பங்கேற்கும் வாய்ப்பு ஆண்டாளின் அனுக்கிரகத்தால், அழைப்பால் கிடைத்தது. 82 வயதாகும் இளையராஜா, 28 வயது இளையராஜா போல் உள்ளார். இவரது இசைஞானம் அளப்பரியது. அவர், 108 வயதையும் கடந்து இசை உலகின் உச்சத்தை தொட வேண்டும் என, மங்களாசாசனம் செய்கிறோம்.

இயற்கையை மாசுபடுத்தக் கூடாது என, 5,000 ஆண்டுகளுக்கு முன்பே, ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி என்ற பாசுரத்தில் ஆண்டாள் சொல்லி உள்ளார்.

நாம் இயற்கையை பாதுகாக்க வேண்டுமே தவிர பாழாக்கக்கூடாது. ஆலயங்களின் பெருமையையும், இயற்கையின் அருமையையும் காப்பாற்றுவது நம் கடமை. இதையெல்லாம் ஆண்டாள் திருப்பாவையில் நமக்கு சொல்லி உள்ளார்.

இன்று பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் என்பது, 33 சதவீதத்தை தாண்டவில்லை. ஆனால், ஆண்டாளுக்கு சர்வ சுதந்திரத்தை பெருமாள் கொடுத்திருந்தார். இந்த மண்ணின் ஆட்சியாளர் ஆண்டாள்தான். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு வழிகாட்டி கொடுத்ததே பெருமாள் தான்.

இந்த மார்கழி மாதத்தில் தினமும் திருப்பாவை பாடல் படித்து ஆண்டாளுக்கு பெருமை சேர்க்க வேண்டும்  என்று திரிதண்டி நாராயண ராமானுஜ ஜீயர் பேசினார்.

xxxxxx 

இளையராஜா வருகையின் போது ஸ்ரீவில்லிபுத்துார் கோவிலில் நடந்தது என்ன?

ஸ்ரீவில்லிபுத்துார்: இசைஞானி இளையராஜா ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு வந்தபோது நடந்தது என்ன என்பது பற்றி, மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லதுரை, விருதுநகர் கலெக்டருக்கு அறிக்கை அளித்துள்ளார். இசைஞானி இளையராஜா, இரவு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு கோவில் வாசலிலேயே யானையை கொண்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலுக்குள் சென்ற அவருக்கு, பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஜீயர் சுவாமிகளும் இளையராஜாவுக்கு மரியாதை செய்தார்.

கருவறைக்குள் இளையராஜாவை அனுமதிக்கவில்லை என்றும், அவர் அவமதிக்கப்பட்டதாகவும், சிலர் வதந்திகளை பரப்பி இருந்தார்கள்

பொதுவாக கோவில் கருவறை என்று அழைக்கப்படும் கர்ப்ப கிரகத்தில் ஆதீனங்கள், மடாதிபதிகள், தக்கார்கள், அறங்காவலர்கள் போன்றவர்களும், மற்ற யாரும் உள்ளே செல்ல அனுமதியில்லை.

கருவறையில் அந்தந்த கோவிலில் பூஜை செய்யும் ஸ்தானிகர்கள், பட்டாச்சாரியார்கள், பரம்பரை குருக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதே கோவிலில், வேறு சன்னதியில் பூஜை செய்யும் குருக்களாக இருந்தாலும் கருவறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆகம விதிப்படி கட்டிய கோவில்களில், பண்டைய காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படும் நடைமுறை இதுதான்.

 இளையராஜா கோவிலுக்கு வந்தபோது நடந்தது என்ன என்று, அறநிலையத்துறை அறிக்கை அளித்துள்ளது.

‘ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதி அர்த்தமண்டபத்தில் (கர்ப்ப கிரகம் முன் உள்ள இடம்) மடாதிபதிகள், அர்ச்சகர்கள் தவிர, மற்றவர்கள் உள்ளே செல்ல கோவில் வழக்கப்படி அனுமதி இல்லை’ என திரிதண்டி ஜீயர் தெரிவித்ததை இளையராஜா ஏற்றுக்கொண்டு அர்த்தமண்டபம் முன் நின்று தரிசனம் செய்தார் என்று, மதுரை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லத்துரை விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அளித்துள்ளார்.

இது குறித்து இளையராஜா, சமூக வலைதள பதிவில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அவர் கூறி உள்ளதாவது;

என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக் கொடுக்கவும் இல்லை.

நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம் என்று

இளையராஜா கூறி உள்ளார்.

xxxxxxxxxx

ஸ்ரீரங்கம் ரங்கராஜன் கைது உதயநிதி குறித்து அவதுாறு:

மூன்று ஜீயர்களை அழைத்து, துணை முதல்வர் உதயநிதி பரிகார பூஜை செய்ததாக, சமூக வலைதளத்தில் அவதுாறான கருத்தை பதிவு செய்த, ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்

. சில தினங்களுக்கு முன், வி.சி., தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கூறப்பட்ட தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை பதிவு செய்தார். அதில், கூறியிருந்ததாவது:

பதற்றத்தில் ஏதேதோ பிதற்றுகிறீர்கள். உதயநிதி மூன்று பிராண சன்னியாசிகளான ஜீயர்களை தன் வீட்டிற்கு அழைத்து, கால்களை கழுவி பாத பூஜை செய்துள்ளார். அந்த தீர்த்தத்தை பருகி ஆசி பெற்று, அவர்களுக்கு உணவிட்டு வெகுமதி அளித்து வழி அனுப்பி இருக்கிறார்.

பிராமணர்களை இழிவுபடுத்தியதற்காகவும், 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறவும் இதைச் செய்துள்ளார்.

உதயநிதி வெளியில் வேண்டுமானால் எதிர்ப்பது போல செய்யலாம். உண்மையில் அவர் சனாதனத்தின் பக்கம் தான் தெரியுமா? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். ரங்கராஜன் நரசிம்மன் பதிவுக்கு, ஜீயர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அவர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காஞ்சிபுரம் வட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஜீயர் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜன் நரசிம்மனை நேற்று கைது செய்தனர்

ஸ்ரீரங்கம் ரங்கராஜன் வீட்டில் சென்னை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், கம்யூட்டர், ஹார்ட் டிஸ்க் பொருட்களை கைப்பற்றி தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

******

 ஆதிபுரீஸ்வரர் கோயிலில் துர்கா ஸ்டாலின் சிறப்பு தரிசனம்

சென்னை திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் வடிவுடையம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை பௌர்ணமியன்று ஆதிபுரீஸ்வரர் கவசம் இன்றி காட்சி அளிப்பார். இந்த வைபவத்தின் போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவது வழக்கம். முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்காவும் நேற்று இரவு ஆதிபுரீஸ்வரர் கோயிலுக்கு வந்தார். ஆதிபுரீஸ்வரர், வடிவுடை அம்மனை மனமுருகி வேண்டி சென்றார். திருவொற்றியூர் எம்எல்ஏ கே பி சங்கர் உள்ளிட்டோர் துர்கா ஸ்டாலின் உடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

*******

சென்னையில் நடைபெற்ற ஜடா பாராயணம் நிகழ்ச்சி!

சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் கலைமகள் மாத இதழ் மற்றும் தேஜஸ் பவுண்டேசன் சார்பில் ஜடா பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலைமகள் மாத இதழின் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்பட்டு கணேஷ கனபாடிகள் தலைமையில் கணபதி பூஜை, லக்ஷ்மி பூஜை, கனபாடம் மற்றும் ஜடா பாராயண பூஜைகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியை ஆர்.கே.ராகவன் ஐபிஎஸ் தொடங்கி வைத்த நிலையில், கலைமகள் மாத இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், தேஜஸ் பவுண்டேசன் நிர்வாக அறங்காவலர் பி.டி.டி ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஸ்ரீ மான் உ.வே.ஆனந்த பத்மநாபாச்சாரியார், தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது, இது போன்ற பிரச்சாரங்கள் நடைபெறுவது, தேசத்திற்கும், தேச மக்களுக்கும் நலன்தரும் என்று அவர் கூறினார்.

******

திருப்பதியில் 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனம்.. 24-ம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

இலவச தரிசன நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் 8 மையங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 10-ந்தேதி முதல் 19-ந் தேதி வரை வைகுண்ட ஏகாதசி துவார தரிசனம் நடைபெற உள்ளது. இதுகுறித்து அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக வருகிற 23-ந்தேதி காலை 11 மணிக்கு 10 நாட்களுக்கான ஸ்ரீ வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது .

பக்தர்களுக்கு வழங்குவதற்காக தினமும் 3.50 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட உள்ளது. காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை டீ, காபி, பால், உப்புமா, சர்க்கரை பொங்க ல் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்.
XXXXXXX

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .

அடுத்த ஒளிபரப்பு

டிசம்பர்  29 –ஆம் தேதி லண்டன் நேரம் நண்பகல் 12 மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும்,

ஆஸ்திரேலிய நேரம் இரவு 11 மணிக்கும் ஒளிபரப்பாகும்.

நேரம் மாறுதலைக் கவனத்திற்கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். வணக்கம்.

—-subham—-

Tags- ஞானமயம் , உலக இந்து செய்தி மடல் 22-12-2024

GNANAMAYAM SUNDAY BROADCAST 22-12-2024 SUMMARY

22-12-2024 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு

TIME:  ONE PM LONDON TIME; 6-30 PM IST

VIA ZOOM, FACE BOOK, YOU TUBE

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer was sung by Dr Subbalakshmi Nagarajan

World Hindu News in Tamil presented by Vaishnavi Anand from London

***

Bengaluru Nagarajan spoke on MAHENDRANATH GUPTA (KNOWN AS “M”)

***

Mrs Brahannayaki Sathyanarayan spoke  on THIRU VALAM SUZHI SHRINE from Bengaluru

***

Trichy K Ganesan delivered a special lecture on Tamil Saint Manikkavasagar

***

Tiruppugaz songs recorded by Kalyanji

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்

ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்யநாராயணன். -தலைப்பு – தேவாரத் திருத்தலம் திருவலஞ்சுழி

****

பெங்களூர் நாகராஜன் சொற்பொழிவு -மகேதிரநாத் குப்தா’ எம்’ என அறியப்படுபவர்;ராமகிருஷ்ண கதாம்ருதம் எழுதியவர்

திருச்சி கணேசன் – சொற்பொழிவு மாணிக்கவாசகர்

இடையிடையே திருப்புகழ் பாடல்கள்

****

JOIN US ON SUNDAYS.

—subham—

TAGS- SUNDAY 22 12 2024 , GNANAMAYAM BROADCAST summary

திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்! பறை என்றால் என்ன ?- 2 (Post No.14,009)

Very good book with English and Telugu translation of Tiruppavai by  Dr Chennai Padmanabhan

Written by London Swaminathan

Post No. 14,009

Date uploaded in Sydney, Australia – 23 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆண்டாளின் தமிழ்  அறிவினை எவரும்  சந்தேகிக்கவோ குறைகூறவோ  முடியாது; ஆயினும் பறை  என்னும்  சொல்லை அவர்  எங்கேயிருந்து  கண்டுபிடித்தார்  என்பதுதான்  வியப்பான  விஷயம் ; புரியாத  புதிர் ; சங்க  இலக்கியத்திலும்  அந்தச்  சொல்  இல்லை ; பிற்கால  அகராதிகளிலும்  அந்தச்  சொல்  இல்லை. அதாவது  அவர்  பயன்படுத்தும்  பொருளில்  இல்லை . 

ஆண்டாள் எழுதிய திருப்பாவையில் பறை என்ற சொல் பல  இடங்களில் வருகிறது.ஆனால் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருளில் வருவது வியப்பான செய்தியாகும்

பறை , பறையன், பறைகொட்டு முதலிய சொற்கள் காலப்போக்கில் மதிப்பிழந்து விட்டன. அந்தக் காலத்தில் பறைகளை முழக்கி அரசின் அறிவிப்புகளை வெளியிட்ட பெரிய அதிகாரிகள்

பறையர்கள் என்று அழைக்கப்பட்டனர்  . வள்ளுவரும் இப்படி ஒரு பறையன் என்று சொல்லுவார்கள்.

இதே போல கழகம் என்ற சொல்லுக்கு அந்தக் காலத்தில் சூதாடுமிடம் என்ற பொருளே இருந்தது . இப்போது கட்சிகள் எல்லாம் கழகம் என்று பெயர்  சூடிக்கொண்டு   திரிகின்ற்ன .  பல சங்கங்களும் கழகம் என்று பெயர் சூட்டிக் கொண்டு அலைகின்றன.

இதே போல ‘பறை’யும் அர்த்தம் மாறிவிட்டது. ஆனால் ஆண்டாளே பல இடங்களில் பல பொருளில் பயன்படுத்துவதுதான் வியப்பான

விஷயம்; அந்தப் பொருள்கள் அகராதியில் இல்லவும் இல்லை! திருப்பாவையை ஆங்கிலத்தில்  மொழி பெயர்த்தோரும் இப்படிப் பல பொருளில் சொல்லாக்கம் செய்துள்ளனர்.

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
 நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
 சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
 கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
 ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
 கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
 நாராயணனேநமக்கே பறைதருவான்,
 பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

நமக்கே பறைதருவான்=
நமக்கு அருள் தர காத்திருக்கிறான்

சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து* உன்-

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்*

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து *நீ-

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது*

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா*

எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் *உன் தன்னோடு-

உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்*

மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்-29

இன்று உன் அருளை (பறை) பெறுவது மட்டும் எங்கள் விருப்பமன்று.

*****

பறை (பெ) &  (வி) – 1) சொல்; பேசு; அறிவி, 2) தமிழக இசைக்கருவிகளில் ஒன்று.

இன்றும் மலையாள மொழியில் பறைஞ்ஞ்சு என்ற சொல் பேசுதல் என்ற பொருளில் பயன்டுத்தப்படுகிறது . ஆனால் ஆண்டாள் பயன்படுத்திய பொருள் இல்லை.

****

திருப்பாவை முதல் பாசுரத்தில் தொடங்கி வரிசையாக 29 பாசுரம் வரை நம்மை ‘பறை’யை யூகிக்க வைத்து 29-ம் பாசுரத்தில் பறை என்பது திருமாலுக்கு என்றென்றும் சேவை செய்வதே, நாம் அடைய வேண்டிய பிறவிப் பயன் அதுவே —- என்ற உட்பொருளை உணர்த்தி, 30-ம் பாசுரத்தில் பலனை கூறி நிறைவு செய்கிறாள்.

ஆண்டாள் 29 ஆம் பாசுரம் வரை 11 இடங்களில் பறை என்பதை பயன்படுத்துகிறார் (1,8, 10, 16, 24, 25, 26, 27, 28, 29,30- எல்லா இடங்களிலும் அருள் என்ற பொருள் பொருந்தாது. குறிப்பாக ஆங்கிலத்தில் திருப்பாவையை மொழிபெயரத்தோர் வெவ்வேறு விதமாக மொழிபெயர்த்துள்ளனர். விருப்பம், ஆசை என்ற பொருளிலும் பறை வருகிறது.

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்

திங்கள் திருமுகத்துச் சேய் இழையார் சென்று இறைஞ்சி

அங்கப் பறை கொண்ட-ஆற்றை அணி புதுவைப்

பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

இங்கு இப்பரிசுரைப்பார் ஈர் இரண்டு மால் வரைத் தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.(30)

*****

என்னுடைய கேள்வி இதுதான் ?

எங்கிருந்து ஆண்டாள் இந்தச் சொல்லைப் பெற்றார் ? வேறு எங்கேயும் ஆதாரம் இருக்கிறதா ?அல்லது அவரே உருவாக்கிய சொல் என்றாலும் தவறில்லை; அந்தப் புகழ் அவருக்கே உரித்தாகுக. ஆண்டாளுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வந்த ஷேக்ஸ்பியரும் ஆயிரத்துக்கும் மேலான புதிய ஆங்கிலச் சொற்களை உருவாக்கினார். கழகம் என்ற சொல்லை இன்று நாம் வேறு அர்த்தத்தில்/ பொருளில் பயன்படுத்துகிறோம். அதே போல ஷேக்ஸ்பியர் உருவாக்கிய ஆங்கிலச் சொற்களையும் நாம் இன்று வேறு அர்த்தத்தில்/ பொருளில் பயன்படுத்துகிறோம்.;மேலும் பறை போல சில சொற்களுக்கு வெவ்வேறு பொருள்களையும் ஆங்கில அறிஞர்கள் முன்வைக்கின்றனர். நேற்றுவந்த ஷேக்ஸ்பியர் விஷயத்திலேயே நாம்மிவ்வளவு திணறினால் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ஆண்டாள் விஷயத்தில் நாம் திணறுவதில் வியப்பில்லையே!!

—subham—

Tags—ஷேக்ஸ்பியர், திருப்பாவை, ஆராய்ச்சிக் கட்டுரைகள் 2,  பறை , என்றால் என்ன , ஆண்டாள்

நம்மாழ்வார் – 2 (Post No.14,008)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,008

Date uploaded in Sydney, Australia – 23 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஞானமயம் 15-12-24 அன்று ஒளிபரப்பான உரை.

இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது

நம்மாழ்வார் – 2

ச. நாகராஜன்

முப்பததைந்து ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் நம்மாழ்வார் திருநாடு அலங்கரிக்கலானார்.

நம்மாழ்வாரின் பிரிவைத் தாங்க முடியாத மதுரகவி ஆழ்வார் அவரது பாசுரங்களைப் பாடிப் பரவி பரப்பியதோடு திருநகரியில் அவருக்கென ஒரு  கோவிலையும் எழுப்பினார். அதில் நம்மாழ்வாரின் விக்கிரகத்தையும் ஸ்தாபித்தார்.

ஒருநாள் அவரது பெருமைகளை வழக்கம் போல வீதியில் கூவிச் செல்கையில் பொறாமை பிடித்த புலவர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி ‘இதை நீர் நிரூபிக்க வேண்டும்’ என்றனர்.

இதனால் திகைத்த மதுரகவியார் நம்மாழ்வாரைத் துதிக்க ஒரு விருத்த வேதியர் அவரைச் சந்தித்தார்.

“நீர் கவலைப்பட வேண்டாம். நான் சொல்வதைச் செய்தால் போதும்’ என்று கூறினார்.

பின்னர் அவர்,

:கண்ணன் கழலிணை

நண்ணும் மனமுடையீர்

எண்ணும் திருநாமம்

திண்ணம் நாரணமே” என்ற பாசுரத்தின் முதல் அடியை ஒரு ஏட்டில் எழுதிக் கொண்டு போய் அந்த ஏட்டை அந்தப் புலவர்கள் வைத்திருக்கும் சங்கப் பலகையில் வைக்க அனுமதி பெறுங்கள். அது போதும்” என்றார்.

அதன் படியே மதுரகவியாரும் ஒரு ஏட்டில் முதல் அடியை எழுதி  சங்கப் புலவர்களிடம் தர அவர்கள் சிரித்தவாறே அந்த ஏட்டை சங்கப் பலகையில் வைத்தனர். பொற்றாமரைக் குளத்தில் விடப்பட்ட  அப்பலகையின் மீது அவர்களும் நின்றனர்.

ஏட்டை மட்டும் ஏந்திக் கொண்ட சங்கப் பலகை மற்ற புலவர்களை நீரில் ஆழ்த்தியது. அவர்கள் நீந்திக் கரை சேர்ந்தனர்.

நம்மாழ்வாரின் மகிமையை நன்கு அறிந்து கொண்ட அவர்கள் அவரைப் போற்றலாயினர்.

அது மட்டுமின்றி நம்மாழ்வாரின் பெருமையை தனித்தனிப் பாடல்களாக ஒவ்வொரு புலவரும் எழுதி சமர்ப்பிக்க எண்ணம் கொண்டனர்.

அப்படியே ஒவ்வொருவரும் ஒரு பாடலை எழுதிப் படிக்க முயன்ற போது என்ன ஆச்சரியம், அனைத்தும் ஒரே பாடலாகவே இருந்தன.

சேமங் குருகையோ? செய்ய திருப்பாற்கடலோ?

நாமம் பராங்குசமோ? நாரணமோ? – தாமம்

துளவோ? வகுளமோ? தோளிரண்டோ? நான்கு

முளவோ? பெருமா னுனக்கு

      என்ற பாடலாகவே அனைவர் எழுதியதும் இருந்தது.

ஈயாடுவதோ கருடற்கெதிரே? இரவிக்கெதிர்

   மின்மினி யாடுவதோ?

நாயாடுவதோ உறுவெம்புலிமுன்?

   நரி கேசரி முன் நடையாடுவதோ?

பேயாடுவதோ அழகூர்வசி முன்? பெருமாள்

    வகுளாபரணன் அருள் கூர்ந்து

ஒவாதுரை ஆயிரமாமறையின் ஒரு சொற்

    பெருமோ உலகிற்கவியே

கருடனுடைய வேகத்திற்கு எதிரே ஈ எங்கே?

ஒளிதரும் சூரியன் முன் மின்மினி வெளிச்சம் எங்கே?

புலிக்கு முன்னே நாய் எங்கே?

சிங்கத்தின் கம்பீர நடைக்கு முன்னே நரியின் நடை எங்கே?

தேவலோக ஊர்வசி முன் பேய் ஆடுவது எப்படி  இருக்கும்?

சடகோபரின் அருளிய  ஒரு சொல்லின் பெருமைக்கு அனைத்து வித்துவான்களின் கவிகள் ஈடாகுமோ/

என்று இப்படி பலபடப் புகழ்ந்து ஒவ்வொருவரும் பாடினர்.

நம்மாழ்வார் வைகாசி விசாகத்தன்று அவதரித்தார்.

அதை ஒட்டி மலர்ந்த பாடல் இது:

ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை

பாரோர் அறியப் பகர்கின்றேன்

சீராரும் வேதந் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை

நாதன் அவதரித்த நாள்.

மதுரகவியாரின் கண்ணி நுண் சிறுத்தாம்பில் அவர் நம்மாழ்வார் பாசுரங்களைப் போற்றிப் புகழ்கிறார்.

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற

அருளினான் அவ்வருமறையின் பொருள்

அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்

அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே

மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்

நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்

தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு

ஆட்புக்க காதல் அடிமைப் பயன் அன்றே

வானணியும் மாமாடக் குருகை  மன்னன் வாழியே

வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே

சேனையர் கோன் அவதாரம் செய்த வள்ளல் வாழியே

திருக்குருகை சடகோபன் திருவடிகள் வாழியே

என்று கூறி என் உரையை முடிக்கின்றேன். நன்றி வணக்கம்!

 —-subham—–

திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்! ஆண்டாளும் நகைகளும் -1 (Post No.14,007)

Written by London Swaminathan

Post No. 14,007

Date uploaded in Sydney, Australia – 20 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பெண்கள் என்றால் நகை ; நகைகள் என்றால் பெண்கள்.

உலகிலேயே அதிக நகைகளை அணிவோர் இந்துக்கள்தான். எகிப்திய ஓவியங்களைப் பார்ப்போர் கழுத்தில் உள்ள சங்கிலிகளை மட்டுமே காணலாம். ஆனால் இந்துக்களின் ஓவியங்களிலும் கற்சிலைகளிலும் பாதாதி கேசம் நகைகளைக் காணலாம். அஜந்தா  ஓவியங்களையும் பர்ஹுத் முதலிய இடங்களிலுள்ள சிலைகளையும் காண்போர், ஆண்களும் குண்டலங்களையும் கை வளையங்களையும் தோள்   வளையங்களையும் அணிந்திருப்பதைக் காணலாம். இவைகளில் பல, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை. இதே போல இலங்கையில் சிகிரியா, தமிழ் நாட்டில் சித்தன்ன வாசல் ஓவியங்களிலும்  அலங்காரம் செய்துகொண்ட பெண்களைக் காண்கிறோம்.

சங்க இலக்கியத்திலும் அதற்குப் பின் வந்த சிலப்பதிகாரத்திலும் அதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரைகளிலும் நவரத்தினங்களை காண்கிறோம். ஆண்டாளும் இதற்கு விதி விலக்கு அல்ல.  அவரும் நகைகளைப் பற்றிப் பாடுகிறார்.

அவளுக்கு நகைகள் மீது பற்று உண்டோ இல்லையோ மற்ற பெண்களைக் கவர்ந்து இழுக்கவாவது நகைகளைப் பற்றிப் பேசித்தானே ஆக வேண்டும்!

சங்ககாலத்துக்கு முந்தைய காளிதாசனின் காவியங்களிலும் பெண்கள், உதட்டுச் சாயம் பூசியத்தையும் கால், கைகளில் செம்பஞ்சுச் சாயம் பூசிக்கொண்டதையும் அறிகிறோம்.

பிருஹத் ஸம்ஹிதாவில் வராஹமிஹிரர் பட்டியலிடும் பலவகை முத்து மாலைகளை சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையில் டிக்கலாம்.

காளிதாசனுக்குப்  பின்னர் எழுந்த சங்க இலக்கியத்தில் ஏராளமான நகைகள், அணிகலங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன

ஆறாவது பரிபாடலில் வையை நதியில் குளித்த பெண்களின் வருணனை வருகிறது

தொடி, தோள் வளை , மேகலை வடங்கள், ஆணிமுத்து வடங்கள் ஆகிய நகைகளும் இன்னுமொரு  பாடலில் கை வளையம் , ஆழி மோதிரம்,  தலைக்கோலம், எட்டுவட முத்து மேகலை, வாகுவலையம், காஞ்சி ஆகிய ஆபரணங்களும் வருகின்றன.

சிலப்பதிகாரம் கடலாடு காதையில் நவரத்தின அணிகளும் காணக்கிடக்கின்றன. 

இந்த அணிகளும் அவற்றின் பெயர்களும் ஆண்டாள் காலம் வரை வழக்கில் இருந்ததை திருப்பாவை  காட்டுகிறது .

இரண்டாவது பாடலில் என்ன செய்யலாம் என்ன என்ன செய்யக்கூடாது என்ற பட்டியலை ஆண்டாள் தருகிறாள்;

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள்

பையத் துயின்ற பரமன் அடி பாடி,

நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,

மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,

செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்,

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி

உய்யுமாறு எண்ணி உகந்து — ஏலோர் எம்பாவாய்.

நெய், பால் சாப்பிட மாட்டோம்;

கண்ணுக்கு மையும் கூந்தலுக்குப் பூவும் பயன்படுத்த மாட்டோம்.

(குழாயடியிலும் கிணற்றடியிலும் வம்பளக்க மாட்டோம்)).

கோள் சொல்லமாட்டோம் .

தடைசெய்யப்பட்ட விஷயங்களையும் செய்யமாட்டோம்.

செய்யக்கூடியது

பரமனடி பாடுவோம் ;

அதிகாலையில் நீராடுவோம்;

பிரம்மச்சாரிகளுக்கும் சன்யாசிகளுக்கும் வறியோருக்கும் வேண்டும் அளவுக்கு  உணவு இடுவோம்

******

ஆயிழை ஏந்திழை சேயிழை நேரிழை

ஆண்டாளின் தமிழ் அறிவினைக் காண்போம். தமிழில் பெண்களை அன்மொழித்தொகையால் குறிப்பிடும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது .

ஆண்டாளும் பிறவியிலேயே கவிஞர். இதை திருப்பாவையிலும்,

அவர் எழுதிய நாச்சியார் திருமொழியிலும் காண்கிறோம்.    

நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர் – பாசுரம் 1

திங்கள் திருமுகத்துச் சேயிழையார் -30 என்றும் பாடுகிறார்.

மாணிக்கவாசகரும் திருவெம்பாவையில்

நேசமும் வைத்தனையோ  நேரிழையாய் நேரிழையீர்-2

சேயிழையீர் சிவலோகம் பாடி- திருவாசகம் 9-53

திருக்குறளிலும் இத்தகைய பிரயோகம் உள்ளது. இது சங்ககால வழக்கு என்பதை பரிபாடலில் காண்கிறோம் அணியிழை 9-23, ஒள்ளிழை 9-39 /ஆகுபெயர்

இழை என்பது என்ன ?

நகைகள் , ஆபரணங்கள் ஆகும். ஒளிவீசும் நகைகள், அணி போன்ற நகைகள் என்பதை பரிபாடல் நன்கு காட்டும்.

திருப்பாவை நோன்பு முடிந்தவுடன் என்ன செய்வோம் என்பதை – 27-ஆவது பாடலில் வரிசைப்படுத்துகிறார்

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா *உன் தன்னைப்-

பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்*

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*

சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே*

பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்*

ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு*

மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்*

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

கையில் சூடகம் அணிவோம்

தோள் ல் பாஹுவலயம் அணிவோம்

காதுகளில்    தோடு ம் கர்ணப் பூவும் அணிவோம்

காலில் பாடகமும் அணிவோம்

பல்கலன் என்று சேர்த்திருப்பது மேலும் பல ஆபரணங்களையும் …. என்பதைக் காட்டும் 

முழங்கையில் நெய் வழியும் அளவுக்கு பால் சோறு, அக்கார அடிசில் ஆகியவற்றையும் சாப்பிடுவோம் என்கிறார் ஆண்டாள்

இப்படி நகைகளை அணியும் வழக்கம் இமயம் முதல் குமரி வரை இருந்ததை ராமாயணத்திலும் காண்கிறோம். சீதா தேவியை ராவணன், விமானத்தில  கடத்திச் செல்லுகையில் அவள் புடவைத் தலைப்பில் முடிந்து எறிந்த  ஆபரணங்களை ப் புறநானூற்றுப் புலவர் பாடி இருக்கிறார் .

காளிதாசனின் சாகுந்தலம் முதலிய நாடகங்களில் மோதிரம்,  ஆபரணம் முக்கியப்   பங்காற்றுகிறது; ராமாயணத்திலும் கணையாழி முக்கியமாக விளங்குகிறது. இவை அனைத்தும் பெண்களுக்கு —-இந்துப் பெண்களுக்கு —-நகைகள் உடலிலிருந்து பிரிக்க முடியாத அடையாளச் சின்னங்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லும்.

To be continued……………………………….

tags- திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் 1, ஆண்டாளும் நகைகளும் , ஆபரணங்கள், நகைகள், ஆண்டாள், பரிபாடல், சேயிழை, நேரிழை 

ஆலயம் அறிவோம்! ஶ்ரீ வில்லிப்புத்தூர் (Post No.14,006)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan

Post No. 14,006

Date uploaded in Sydney, Australia – 20 DECEMBER 2024.            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

15-12-24 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்

சோதி மணிமாடந் தோன்று,மூர்

நீதியால் நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகள் ஓதுமூர்

வில்லிப்புத்தூர்  வேதக் கோனூர்

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாக அமைவதும், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த தலமாகவும் அமையும் ஶ்ரீ வில்லிப்புத்தூர் திருத்தலமாகும்.

இத்திருத்தலம் தமிழ்நாட்டில் மதுரையிலிருந்து ராஜபாளையம்-தென்காசி, குற்றாலம் போகும் வழியில் உள்ளது.

மூலவர் திருநாமம் : வடபத்ரசாயி

புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலம்_

உற்சவர் : ரங்கமன்னார்

தாயார்: ஆண்டாள்

விமானம் : சம்ஸன விமானம்

தீர்த்தம் : திருமுக்குளம்

மங்களாசாஸனம் : பெரியாழ்வார், ஆண்டாள்

கருவறையில் விமலாக்ருதி விமானத்தின் கீழ் ஶ்ரீ தேவி, பூதேவி சமேத வடபத்ரசாயியை தரிசிக்கலாம்.

பெருமாளுக்கு ஆண்டாள் வலது புறமும் கருடாழ்வார் இடது புறமுமாக தரிசனம் தருகின்றனர். வடபத்ரசாயி ஆதிசேஷனில் பள்ளி கொண்டுள்ளார்.

இத்தலத்தைப் பற்றிய ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. முக்கியமான ஒரு வரலாறு இந்த ஊருக்குப் பெயர் வந்ததன் காரணத்தைத் தெரிவிக்கிறது.

முன்னொரு காலத்தில், இந்த நிலப்பகுதி ராணி மல்லி என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒரு நாள், அவர்கள் காட்டில் வேட்டையாடிய போது, கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், வில்லி, அவரது சகோதரர் என்ன ஆனார் என்று காட்டில் தேடிக் கொண்டு இருந்தார்.

வெகுநேரம் காட்டில் தேடிய பின்னர் களைத்துப் போய் சிறிது நேரம் தூங்கினார். அவரது கனவில், கடவுள் அவரது சகோதரருக்கு என்ன ஆயிற்று என்பதை அவருக்கு விளக்கினார். உண்மை புரிந்ததும், தெய்வீக உத்தரவின் பேரில் வில்லி அந்த காடுகளைத் திருத்தி அமைக்க, ஒரு அழகான நகரம் உருவாக்கப்பட்டது. அதுவே  வில்லிப்புத்தூர் என்ற பெயரைப் பெற்றது.

இத்தலத்தில் பிறந்த பெரியாழ்வார் கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம்.

ஶ்ரீ வில்லிப்புத்தூரில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று  பெரியாழ்வார் தனது நந்தவனத்தில் துளஸிச் செடியின் கீழ் பெண்குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தார். தன் கையில் பூமாலை போலத் தோன்றிய பெண் குழந்தைக்கு கோதா என்று பெயர் சூட்டினார். அதுவே நம்மால் கோதை என்று வழங்கப்படுகிறது. கோ என்றால் நல்வார்த்தை தா என்றால் தருபவள். திருப்பாவை 30 பாசுரங்களையும் நாச்சியார் திருமொழி 143 பாசுரங்களையும் அருளிச் செய்ததால் அவர் கோதை ஆகிறார்.. இன்னும் ஏராளமான அர்த்தங்களை வேதாந்த தேசிகன் தனது கோதா ஸ்துதியில் தெரிவிக்கிறார்.

‘இறைவனையே ஆண்டவள்’ என்பதால் ஆண்டாள் என்ற் திருப்பெயரை கோதை பெற்றார்.

பாமாலை பாடி பூமாலை சூடிக் கொடுத்ததால் சூடிக் கொடுத்த நாச்சியார் என்ற சிறப்புப் பெயரும் ஆண்டாளுக்கு உண்டு.

பெரியாழ்வாருடன் ஆண்டாள் வாழ்ந்த வீடே கி.பி. 14ம் நூற்றாண்டில் மாவலி பாணாதிராயர் என்பவரால் திருக்கோயிலாக கட்டப்பட்டது.

11 நிலைகளுடன் 11 கலசங்கள் கொண்ட ராஜகோபுரம் 196 அடி உயரமுடையது.

கோவிலில் தினமும் காலையில் ஒரு காராம்பசு வந்து நிற்கும். ஆண்டாளின் பார்வை இந்தக் காராம்பசுவின் பின்புறம் விழும். ஆண்டாள் தினமும் கண்விழிப்பது இப்படித்தான்!

.

இங்குள்ள திருமுக்குள தீர்த்தம் பற்றிய வரலாறு ஒன்று உண்டு. கலாநேமி என்னும் அரக்கனை பெருமாள் தன் சக்ராயுதத்தால் வீழ்த்தினார். ரத்தம் தோய சக்கரத்தாழ்வார் வர அந்த சக்கரத்தைத் தூய்மைப்படுத்த கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் தமது தீர்த்தத்தை ஒரு குளத்தில் சொரிய அதில் சக்கரம் சுத்திகரிக்கப்பட்டது. இந்த மூன்று நதிகளின் நீர் சேர்ந்ததால் இது திருமுக்குளம் என்று அழைக்கப்படலாயிற்று.

இங்குள்ள கோவிலின் முன்புறமுள்ள கிணற்றில் கோடைக்காலமானாலும் நீர் வற்றுவதில்லை

ஆண்டாளின் தோளில் அழகுற வீற்றிருக்கும் கிளி தினமும் மாற்றப்படுகிறது. இந்தக் கிளி பச்சிலையால் செய்யப்பட்ட ஒன்றாகும். கிளியோடு இருக்கும் பெண் தெய்வங்கள் மதுரை மீனாட்சியும் ஆண்டாளும் தான். ராஜவம்சத்தில் வந்த மீனாட்சிக்கு கிளி வலது தோளிலும் எளிய பக்தி மார்க்கத்தில் வந்த ஆண்டாளுக்குக் கிளி இடது தோளிலும் இருக்கும். இந்தக் கிளி சுக முனிவரே என்று கூறுவர். இந்தக் கிளியைத்தான் ஆண்டாள் கண்ணனுக்குத் தூது விட்டாள். பூஜை முடிந்த பின்னர் தினமும் இந்தக் கிளியை பக்தர்கள் விரும்பி வாங்கிச் செல்வது வழக்கம்.

மார்கழி மாத உற்சவத்தில் ஶ்ரீ ஆண்டாளின் எண்ணெய் காப்பு உற்சவம் மிகச் சிறப்பான ஒன்றாகும். 61 வகை மூலிகைகள் அடங்கிய இந்தத் தைலத்தைக் காயச்ச நாற்பது நாட்கள் ஆகும். ஏழு படி நல்லெண்ணெயில் பசும்பால், நெல்லிக்காய், தாழம்பூ, இளநீர் மற்றும் மூலிகைகள் சேர்த்துக் காய்ச்சினால் இது நான்கு படியாகும். இதுவே தான் உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்குச் சாத்தப்படும்.

சர்வரோக நிவாரணியாகும் இதை பிரசாதமாக பக்தர்கள் வாங்கிச் செல்வர்.

இங்கு கோவிலில் கண்ணாடிக் கிணறு ஒன்று உள்ளது. இதில் தான் தினமும் ஆண்டாள் அழகு பார்த்துக் கொள்வது வழக்கம்.

சித்ரா பௌர்ணமியன்று மதுரை தல்லாகுளத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை மற்றும் பரிவட்டங்களை அணிந்த பிறகே வைகை ஆற்றில் இறங்குகிறார்.

12 ஆழ்வார்களில் இரு ஆழ்வார்கள் அவதரித்த திருத்தலம் என்ற சிறப்பை இந்தத் தலம் பெருகிறது.

கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கலைமகள் சிற்பத்தில் நாசியும் கால் பெருவிர்ல் நுனியும் ஒரே நேர் கோட்டில் அமைந்திருப்பது சிற்பக் கலையின் சிறப்பை விளக்கும் ஒரு அபூர்வமான வேலைப்பாடாகும்.

ஒவ்வொரு ஆடிப் பூரத்திலும் அழகிய தேர் இங்கு இழுக்கப்படுகிறது.

தமிழக அரசின் அதிகாரபூர்வமான சின்னமாகத் திகழ்வது ஶ்ரீ வில்லிப்புத்தூர் கோவில் ராஜகோபுரம் தான்.

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்

வேதம் அனைத்துக்கும் வித்தாகும்

கோதை தமிழ் ஐயைந்து மைந்தும் அறியாத மானிடரை

வையம் சுமப்பதும் வம்பு

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ வடபத்ர சாயியும் ஆண்டாளும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

***

நம்மாழ்வார் – 1 (Post No.14,005)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,005

Date uploaded in Sydney, Australia – 20 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஞானமயம் 15-12-24 அன்று ஒளிபரப்பான உரை.

இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது

நம்மாழ்வார் – 1

ச. நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே நாகராஜன் வணக்கம் நமஸ்காரம்.

இன்று நாம் தமிழுக்கு வைணவ பக்தி இலக்கியத்தில் ஒரு புதிய பரிமாணத்தை அளித்ததோடு அனைவரையும் திருமாலைத் துதிப்பதற்கான சிறந்த பாசுரங்களை அருளிய ஆழ்வாரான நம்மாழ்வார் பற்றி சிந்திக்கப் போகிறோம்.

இவரது காலம் 9ம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது.

பகவானது திவ்ய குணங்களில் சதா ஆழ்ந்து இருந்ததால் ஆழ்வார்கள் என்ற பெயரைப் பெற்ற ஆசாரியர்களில் நம்மாழ்வார் தனிச் சிறப்புடன் திகழ்கிறார்.

முற்காலத்தில் பக்தியில் செழித்த பாண்டிய நாட்டில் திருக்குருகூர் என்றும் திருநகரி என்றும் அழைக்கப்படும் அழகிய நகரில் போற்காரியார் என்னும் பெயருடைய வேளளர் ஒருவர் வாழ்ந்து வந்தார். திருமால் பக்தரான அவர் உத்தமியான உடைய நங்கையார் என்ற மங்கையைத் திருமணம் செய்து கொண்டார். நங்கையாரின்  தந்தையார் திருவாழ்மார்பர் என்பவர் மலையமாநாட்டில் திருவண்பரிசாரம் என்னும் நகரில் வாழ்ந்து வந்தார்.

தனது மாப்பிள்ளையைச் சில காலம் தன்னுடனேயே தங்குமாறு திருவாழ்மார்பர் வேண்ட அப்படியே தன் மனைவியுடன் பொற்காரியார் அங்கு வாழ்ந்து வந்தார்.

சில காலம் கழித்துத் தன் ஊருக்குத் திரும்பிச் செல்ல எண்ணம் கொண்ட பொற்காரியார் திருக்குறுங்குடி என்னும் ஊரை அடைந்தார். அங்கு எழுந்தருளியிருந்த இறைவனான நம்பியை புத்திரப் பேறு அளிக்குமாறு மனதார வேண்டினார்.

இறைவன் அருளால் நங்கையார் கர்ப்பமுற்று அழகிய ஓரு ஆண் குழந்தையைப் பெற்றார். இறைவனே அப்படி ஆண் குழந்தையாக அவதரித்த போது நாராயணனுக்குத் தொண்டு செய்யும் ஆதிசேஷன் திருக்குருகூரில் ஒரு புளியமரமாகத் தோன்றி வளரலானார்.

பிறந்த குழந்தை சற்று வித்தியாசமாக இருந்தது. அழாமலும் பால் குடிக்காமலும் எப்போது மௌனத்துடன் இருந்த அந்தக் குழந்தையைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர்.

குழந்தையை பெருமாள் கோவிலுக்குக் கொண்டு சென்ற பொற்காரியார் உலக நடைக்கு முற்றிலும் மாறாக இருக்கும் குழந்தைக்கு மாறன் என்று பெயர் சூட்டி அங்குள்ள புளிய மரத்தில் ஒரு அழகிய தொட்டிலில் குழந்தையை இட்டு வீடு திரும்பினார்.

ஒரு குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்தவுடன் அக்குழந்தையின் மேல் சடம் என்னும் வாயு வீசும்.  உடனே பரிசுத்த மனம் கொண்ட குழந்தை மனம்  மாறி அழத் தொடங்கும் . உலக இயல்பைப் பெறும்.

ஆனால் இந்த தெய்வக் குழந்தையின் மீது வாயுவால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அந்த வாயுவை குழந்தை அப்புறம் தள்ளி விட்டது.

இப்படி சட வாயுவைத் தள்ளி விட்டதால் அவருக்கு சடகோபர் என்ற பெயர் உண்டாயிற்று.

இப்படியாக ஒரு நாள் அல்ல, ஒரு வருடம் அல்ல பதினாறு ஆண்டுகள் அவர் வளர்ந்து வந்தார்.

ஶ்ரீமன் நாராயணன் மாறனாருக்கு அனைத்து சாஸ்திரங்களையும் அளிக்கத் திருவுள்ளம் கொண்டு தனது கணத் தலைவரான விஷ்வக்ஸேனரை அழைத்து, ‘நீ திருக்குருகூர் சென்று அனைத்து வேதாந்த உட்பொருளையும் மாறனுக்க உபதேசித்து வா’ என்று அனுப்பினார்.

அதன்படியே விஷ்வக்ஸேனர் திருக்குருகூரில் உள்ள மாறனார் முன் பிரத்யக்ஷமாகி அவருக்கு அனைத்து வேதாந்த உட்பொருளையும் உபதேசித்தார். அனைத்து வேதங்களையும் மாறனார் அறிந்து கொண்டார். விஷ்வக்‌ஸேனர் தனது இருப்பிடம் மீண்டார்.

இப்படி நாட்கள் கழிகையில் திருமால் மீது அற்புதமான மதுரமான பாடல்களைப் பாடிய பக்தர் ஒருவர் அயோத்திக்குச் சென்றார். அவர் மதுரமான பாடல்களைப் பாடி வந்ததால் அவரை மதுரகவிகள் என்று அனைவரும் அழைத்தனர்.

ஒரு நாள் தெற்குத் திசையிலிருந்து பேரொளி ஒன்று வீசுவதைக் கண்டு ஆச்சரியப்பட்ட அவர் அது ஒளிரும் திசை நோக்கி நடக்கலானார்.

அந்த ஒளி காட்டிய பாதையால் அவர் திருக்குருகூரை வந்து அடைந்தார். அங்குள்ள புளியமரத்தடியில் தியானத்தில் இருந்த மாறனாரைக் கண்டார்.

அவர் பேசாமல் இருந்ததைக் கண்ட மதுரகவியார் ஒரு கல்லை எடுத்துத் தட்ட இதுவரை பேசாமல் இருந்த மாறனார் அவருடன் பேசலானார். அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அற்புதமாக பதிலைத் தரலானார்.

மாறனார் ரிக், யஜுர் மற்றும் அதர்வண வேதத்தின் கருத்துக்களை உள்ளடக்கி திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி என்னும் நூலகளை இயற்றி உலகிற்குத் தந்தார்.

திருவாய் மொழி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக ஆக அது பகவத் விஷயம் என்ற சிறப்புப் பெயரைப்  பெற்றது.

திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும் திருவிருத்தம் நூலில் 100 பாசுரங்களும் திருவாசிரியம் நூலில் 7 பாசுரங்களும், பெரிய திருவந்தாதி நூலில் 87 பாசுரங்களும் ஆக நான்கு பிரபந்தங்களில் மொத்தம் 1296 பாசுரங்கள் உள்ளன.

இப்படி வேதத்தை அழகிய தமிழில் விரித்துரைத்த அவரை அனைவரும் நம் ஆழ்வார் என்று அழைக்கலாயினர். அவர் நம்மாழ்வார் ஆனார்.

ஶ்ரீ ரங்க நாதரும் அவரை நம்மாழ்வார் என்று அழைக்கவே அப்பெயரே நிரந்தரமாயிற்று.

மற்ற ஆழ்வார்களை இவரது அவயவங்களாக கூறுவதால் இவரது சிறப்பு நமக்கு நன்கு விளங்கும்.

அவரது பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த பகவான் அவருக்கு ஒரு மகிழ மாலையைக் கொடுத்து அணிந்து  கொள்ளும்படி பணித்தார். அதை அவர் அணிந்தார். அதனால் அவர் வகுளாபரணர் என்ற பெயரைப் பெற்றார்.

தான் அருளிச் செய்த பிரபந்தங்களை நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வாருக்கு உபதேசித்து அருளினார்.

மஹா விஷ்ணுவே முதல் தெய்வம் என்று நிரூபித்த நம்மாழ்வார் பிற மதங்களைக் கண்டித்தார். அதனால் அவருக்குப் பராங்குசர் என்ற பெயர் உண்டாயிற்று.

பிற மதங்கள் என்னும் யானைகளைத் தன் அங்குசத்தால் அடக்கியவர் என்ற பொருளைத் தருகிறது பராங்குசர் என்ப்ற பெயர்,

நம்மாழ்வாருக்கு வேதம் தமிழ் செய்த மாறன், குருகூர் நம்பி,, ஞான பிரான், தொண்டர் பிரான் உள்ளிட்ட 35 பெயர்கள் உண்டு.

to be continued……………..

GNANAMAYAM SUNDAY BROADCAST 22-12-2024

22-12-2024 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி நிரல்

TIME:  ONE PM LONDON TIME; 6-30 PM IST

VIA ZOOM, FACE BOOK, YOU TUBE

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

World Hindu News in Tamil presented by Vaishnavi Anand from London

***

Talk by Bengaluru Nagarajan on MAHENDRANATH GUPTA (KNOWN AS “M”)

***

Talk by Brahannayaki Sathyanarayan on THIRU VALAM SUZHI SHRINE from Bengaluru

***

Talk BY GANESAN on Tamil Saint Manikkavasagar

***

Tiruppugaz songs recorded by Kalyanji

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்

ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சுப்புலட்சுமி -தலைப்பு – தேவாரத் திருத்தலம் திருவலஞ்சுழி

****

பெங்களூர் நாகராஜன் சொற்பொழிவு -மகேதிரநாத் குப்தா’ எம்’ என அறியப்படுபவர்;ராமகிருஷ்ண கதாம்ருதம் எழுதியவர்

திருச்சி கணேசன் – சொற்பொழிவு மாணிக்கவாசகர்

இடையிடையே திருப்புகழ் பாடல்கள்

****

JOIN US ON SUNDAYS.

—subham—

TAGS- SUNDAY 22 12 2024 PROGRAMME, GNANAMAYAM BROADCAST

தொல்காப்பியத்தில் முக்கோல் அந்தணர் (Post.14,004)

Written by London Swaminathan

Post No. 14,004

Date uploaded in Sydney, Australia – 19 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தமிழில் கிடைத்துள்ள பழைய நூல் தொல்காப்பியம் என்பதே பெரும்பாலோரின் கருத்து . அதில் அந்தணர், பார்ப்பனர் பற்றியும் வேதங்களில் உள்ள உச்சரிப்பு பற்றியும் பல இடங்களில் குறிப்பிடுகிறார். அந்தணர் கைகளில் ஏந்தும் மூன்று கிளையுள்ள முக்கோல் அந்தணர் பற்றி நாம் தொல்காப்பியம் முதல் கம்பராமாயணம் வில்லி பாரதம் வரை காண்கிறோம்.

நூலே கரகம் முக்கோல் மணையே 

ஆயுங்காலை அந்தணர்க்குரிய

என்று ஒரு சூத்திரம் கூறும்.

எல்லா பிராமணர்களும் முக்கோல் ஏந்துவதை நாம் எந்தக் காலத்திலும் கண்டதில்லை. ஆயினும் சந்யாசிகள், ஜீயர், சங்கரா  ச்சார்யார்கள் எப்போதும் முக்கோலைப் பிடித்த வண்ணமே வலம் வருகிறார்கள்; இன்றும் இதைக் காண்கிறோம் .ஆக இந்த இடத்தில் அந்தணர் என்பது பிராமணர்அல்ல, சந்யாசிகள் என்பது தெளிவு.

ஆயினும் அந்தணர் என்ற சொல் முக்கோல் ஏந்தாத பிராமணர்களையும் குறிக்கும் என்பதைத் தொல்காப்பிய பாயிரமும் புறநானூறும்  ஏனைய சங்க நூல்களும் நமக்கு காட்டும்.

நூல் என்பது முப்புரிநூல், கரகம் என்பது கமண்டலம், முக்கோல் என்பது த்ரிதண்டம் , மணை என்பது ஆமை மணை என்று விளக்குகிறார்கள்

பூணூல் இல்லாத சன்யாசிகளாக இருந்தால் வேதத்தின் முடிவை அறிந்தோர் என்றும் கொள்ளலாம் 

தொல்காப்பிய பாயிரம் பாடிய பனம்பாரனார் நான் மறை முற்றிய அதங்கோட்டு ஆச்சாரியார்தான் தொல்காப்பியருக்கு சர்டிபிகேட் கொடுத்தார் என்று சொல்கிறார். அந்த நான்மறை , அந்தணர் என்பதுடன் சேர்ந்து வருவதை சங்க இலக்கியங்களில் பல இடங்களில் காண்கிறோம் ..

சன்யாசிகளைக் குறிக்கையில் நான்மறை/ நால்வேதம் பற்றிப் பேசுவதில்லை; ஏனெனில் அவர்கள் வேதத்தின் அந்தத்தைக் கண்டவர்கள்; அந்தம் என்றால் முடிவு. அதனால் அவர்களை வேதாந்திகள் என்கிறோம்.

அத்வைத சந்யாசிகள் ஏக தண்டம் / ஒரே தண்டம் கொண்டு செல்வார்கள். முப்பகையை வென்ற கருத்துடன் இறைவன் ஒருவனே/ சர்வம் பிரம்ம மயம் என்பதையும் இது உணர்த்தும்.

தண்டத்தை எடுத்துச் செல்வதன் பின்னுள்ள கருத்து ஒன்றே.

முக்கோல் ஏந்துவது எதற்காக?

காமம், க்ரோதம் லோபமென்ற மூன்று தீய குணங்களை வென்றதைக் காட்டும் அடையாளம் முக்கோல்.

மண், பெண், பொன் ஆசைகளைத் துறந்தவர்கள் என்றும் சொல்லலாம்.

திருமழிசை ஆழ்வாரும் மூங்கில் மூன்று தண்டு என்று த்ரிதண்டத்தை பாடுகிறார்.

வைஷ்ணவர்கள் ஜீவன் , பிரம்ம, ஐக்கியத்தை முக்கோல்  குறிப்பதாகச் சொல்லுவார்கள்

சங்க  நூலான  கலித்தொகையில்  இரண்டு  இடங்களில்  முக்கோல்  வருகிறது.

ஒரு பெண் காதலனுடன் ஓடிவிட்டாள் ; செவிலித் தாய் அவளைத் தேடிவரும்போது

எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடை நீழல்

உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்

உடைய சந்நியாசியை செவிலித்தாய் கண்டு வினவுகிறாள்.அங்கும் அந்தணர் என்ற சொல் வருகிறது.

கையில் கரகமும் குடையும் முக்கோலும் ஏந்திக்கொண்டு , இறைவன் திருவடிகளையே நினைக்கும் நெஞ்சத்தை உடையவர்ககளாய், ஐம்பொறிகளை அடக்கியவர்களாய்  உள்ள அந்தணர் என்பது முழுப் பாட்டின் பொருள் 

கலித்தொகையில் இன்னும் ஒரு இடத்தில்

முக்கோல் கொள் அந்தணர்  முதுமொழி நினைவார் போல்

என்றும் காண்கிறோம்.

இங்கு ஓம் என்னும் பிராணவத்துக்கு முதுமொழி என்ற சொல் பயிலப்பட்டுள்ளது

முல்லைப்பாட்டு என்னும் சங்க நூலில் போர் வீரர்கள் பற்றிய காட்சியைப் புலவர் வருணிக்கிறார். அவர்கள் அம்பினை நட்டு அதன் மீது அம்பராத் துணியைப் போட்டிருந்தது படிவப் பார்ப்பான் முக்கோல் மீது காவி வஸ்திரத்தைப் போட்டு வைத்தது போல இருந்ததாம்..

இவைகளைப் பார்க்கும்போது தொல்காப்பிய காலம் முதல் வில்லி பாரதம் காலம் வரை குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முக்கோல் என்னும் த்ரி தண்டம் இருந்தது வெள்ளிடை மலை.

ராவரணன் சந்நியாசி வேடம் தரித்து வந்ததைக் ஆரண்ய காண்டத்தில் பாடுகையில் கம்பனும்,

தண்டோரு மூன்று முப்பகைத் தளையரி தவத்தவர்  என்று வருணிக்கிறார்.

வால்மீகியும் ராவணன் குடையுடன் வந்ததைக் குறிக்கிறார் (சைத்ரீ= குடை)

காமம் க்ரோதாம் லோபம் (காமம் , வெகுளி, மயக்கம்) அல்லது மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை ஆகியன முப்பகை  என்று திருவள்ளுவரும் பாடியுள்ளார்.

காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்

நாமம் கெடக்கெடும் நோய்– குறள் 360

விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.

ஆக தொல்காப்பியர் காலம் முதல் இமயம் முதல் குமரி வரை ஒரே இந்து நாகரீகம் நிலவியதை  நாம் சங்க நூல்கள் மூலம் அறிகிறோம்.

–SUBHAM—

TAGS-முக்கோல் அந்தணர் , படிவப் பார்ப்பான், த்ரிதண்டம், சந்யாசிகள் , மூன்று பகை,