யோகி வேமனா (Post No.14,003)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,003

Date uploaded in Sydney, Australia – 19 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

8-12-2024 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை. 

யோகி வேமனா 

ச. நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

இன்று நாம் தெலுங்கு உலகில் யோகியாக விளங்கிய கவி வேமனா அவர்களைப் பற்றிச் சிறிது பார்க்கப் போகிறோம்.

குமரகிரி வேமன ரெட்டி என்ற பெயரைக் கொண்ட அவர் கவி வேமனா என்றும் யோகி வேமனா என்றும் பிரபலமாக அறியப்படுகிறார்.

கவி வேமனா இப்பொது ஆந்திர பிரதேசத்தில் உள்ள கொண்டவீடு என்ற நகரில் கடம் வேமா என்பவருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவரது காலம் சரியாக கணிக்கப்பட முடியாமல் உள்ளது. 1659 முதல் 1750 முடிய உள்ள காலத்தில் இவர் வாழ்ந்திருக்கக் கூடும்.

இளம் வயதில் அவர் லம்பிகா சிவா என்ற யோகியிடம் தீட்சை பெற்றார். யோகி அவருக்கு யோகாப்யாசத்தைக் கற்றுக் கொடுத்தார்.

அவர் தெலுங்கு மொழியில் ஏராளமான கவிதைகளை இயற்றினார். அவை வேதத்திற்கு ஒப்பானவை என்று அனைவராலும் போற்றப்பட்டன.

சாடு பத்யம் என்னும் நான்கு வரி கவிதைகளை அவர் இயற்றினார். மூன்று அடிகளில் பெரிய உண்மை அடங்கி இருக்கும். நான்காவது அடியில் விஸ்வதாபிராம வினுர வேமா என்று இருக்கும். அதாவது விஸ்வதா என்றால் உலகைப் படைத்த இறைவன் என்று பொருள். அபிராம என்றால் அவனுக்கு நெருங்கியவன் என்று பொருள். இறைவனுக்கு நெருங்கிய யோகியாக வேமனா திகழ்ந்தார்.

5000 பாடல்களுக்கு மேல் அவர் இயற்றியதாகக் கூறப்படுகிறது.

சி.பி.ப்ரவுன் என்ற ஆராய்ச்சியாளர் வேமனாவைப் பற்றி ஆய்வு நடத்தியதோடு அவரது கவிதைகளை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். 693 பாடல்களை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1829ம் ஆண்டு பிரசுரித்தார். 1839ல் இன்னொரு 1215 பாடல்களை அவர் பிரசுரித்தார்

வேமனாவின் வாழ்வில் ஏராளமான அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன.

ஒரு நாள் அவரது குரு ஒரு முக்கிய வேலையாக வெளியில் செல்ல வேண்டியிருந்தது. ஆற்றில் குளிக்கச் சென்ற அவர் வேமனாவிடம், “இதோ எனது துணி. இவற்றை பத்திரமாக வைத்துக் கொள். குளித்துவிட்டு வருகிறேன்” என்றார். துணிகளை வாங்கிக் கொண்ட வேமனா அதை பத்திரமாக கையில் வைத்துக் கொண்டிருந்தார். குளித்து விட்டு வந்த குரு வேமனாவை நோக்கி, “இங்கு வா” என்று கூற வேமானா துணிகளைக் கீழே சகதியில் போட்டு விட்டு அவரை நோக்கி ஓடினார்.

இதனால் வருத்தமடைந்த குரு அவரை நோக்க, வேமனாவோ முழித்தார். ஆகவே குரு மிகுந்த ஏமாற்றம் அடைந்து அவரிடம் ஒரு சுண்ணாம்புக் கல்லை எடுத்துக் கொடுத்து, “இதோ, இந்தக் கல்லில் ராம ராம என்று நான் வரும் வரை எழுது” என்று கூறி விட்டு அங்கிருந்து தனது வேலையை முடிக்க அவர் கிளம்பினார்.

வேமனா தன் குரு தன்னால் ஏமாற்றத்தை அடைந்தார் என்பதைப் புரிந்து கொண்டார். ராம ராம என்று அந்தப் பெரிய பாறையில் எழுத ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் சுண்ணாம்புக் கல் கரைந்தது. ஆனால் தன் விரலினால் ராம ராம என்று தொடர்ந்து எழுத ஆரம்பித்தார் வேமனா. அவரது கை விரல்கள் தேய்ந்து ரத்தம் சொட்ட ஆரம்பித்தது. ஆனாலும் அவர் விடவில்லை. எழுதுவதைத் தொடர்ந்தார்.

வேலையை முடித்துக் கொண்டுவந்த குரு அவரிடம் வந்த போது அவர் கை ரத்தம் சொட்டச் சொட்ட இருந்ததைப் பார்த்துத் திகைத்தார். வேமனாவை அள்ளி அணைத்து, “நான் இப்படிச் செய்து விட்டேனே” என்று வருந்தினார்.

அன்றிலிருந்து ஒரு பெரிய மாற்றம் வேமனாவிடம் ஏற்பட்டது. பெரிய கவிதை எழுதும் ஆற்றல் அவருக்கு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான கவிதைகளை சரளமாக அவர் இயற்ற ஆரம்பித்தார்

வேமனாவைப் பற்றிய இன்னொரு சுவையான சம்பவம் உண்டு. ஒருமுறை தோட்டத்தில் விதைகளை விதைக்க அவர் பலரையும் அழைத்தார். ஆனால் அதை அனைவரும் அசட்டை செய்த போது ஒரு சிலர் மட்டும் முன்வந்தனர். அவர்கள் தங்கள் வேலையை முடித்த போது சில காய்களை அவர்களது வேலைக்கான கூலியாக வேமனா தந்தார்.

வீட்டிற்கு வந்து அந்தக் காய்களை நறுக்கிய போது அதன் உள்ளிருந்து விதைகள் விழுந்தன. அந்த விதைகளுக்குள் தங்க மணிகளாக இருந்தன. இதைப் பார்த்த அவர்கள் ஓவென்று ஆச்சரியத்தால் கூவினர். செய்தி பரவியதும் கிராமத்தில் இருந்த அத்தனை பேரும் வேமனாவிடம் வேலை கேட்டு வந்தனர். அவர்களுக்கு கூலியாக தங்க மணிகள் கிடைத்தன.

சிலர் திருட்டுத்தனமாக அங்கு வந்து காய்களை எடுத்த போது அவர்களுக்கு அந்தக் காய்களிலிருந்து தங்க மணிகள் கிடைக்கவில்லை. புழுக்களே கிடைத்தன.

வேமனா சிறந்த ரசவதியாகத் திகழ்ந்தார். அவரால் எதையும் பொன்னாக மாற்ற முடிந்தது

வேமனா அசல யோகம் என்னும் ஒரு யோக முறையை உபதேசித்தார். அனைத்தையும் கடந்ததே அசலம் எனப்படும்.

இறைவனை அடைவதற்கான தத்துவ தர்சனங்கள் பல.

ஆனால் இறைவன் ஒருவனே

விவேகம் என்னும் அற்புதமான கோடாலியை எடு

அவித்யா என்னும் காட்டை அழி

அறிவு என்னும் பெரும் விளக்கைக் கையில் எடு

மோக்ஷத்தைக் காண்

கொவிலும் கல்; உள்ளே இருக்கும் விக்ரஹமும் கல்

நீ எதைத் தொழுகிறாய் என்று கேட்கும் அவர் உள்ளே இருக்கிறான் இறைவன் அவனைப் பார் என்கிறார்.


 “நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே

சுற்றி வந்து மொண மொணன்று சொல்லு மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ ?”

என்ற சிவ வாக்கிய சித்தரின் கருத்தை வேமனாவின் கவிதைகளில் காண முடிகிறது.

இறைவனை உள்ளே பார் என்று அவர் உபதேசித்தருளினார்.

தூய்மையான இதயம் இல்லாமல் சடங்குகள் எதற்காக?

பானை சுத்தமாய் இல்லாதபோது  சமைப்பது ஏன்?

மனம் தூய்மையாக இல்லாத போது வழிபாடு ஏன்?

என்று  அவர் கேட்கிறார்.

தூய்மையான இத்யயத்துடன் செய்யப்படும் தர்மம் சிறிதாய் இருந்தாலும் நல்லது. என்று சொல்லும் அவர் உதாரணமாக ஆலமரத்தின் விதை சிறிதாக இருந்தாலும் மரம் பெரிதாக வளர்கிறதல்லவா? என்று சுட்டிக் காட்டுகிறார்.

ஒரு கீழான மனிதன் எப்போதுமே படாடோபமாய் பேசுவான். ஒரு நல்ல மனிதன் எப்போதுமே இனிமையாகப் பேசுவான். தங்கமானது பித்தளையைப் போல சத்தம் போடாது இல்லையா?

என்று கேட்கிறார் அவர்.

கூடை நிறைய பளபளக்கும் மதிப்பற்ற கற்களை விட நீலம் போன்ற ஒரு ரத்தினம் இருந்தால் போதும். மட்டமான ஏராளமான நூல்களை விட ஒரே ஒரு நல்ல கவிதை போதும் நல்ல இன்பத்தையும் ஊக்கத்தையும் பெற!

இன்னும் பல பாடல்களில் அவர் என்றும் நிலைத்து நிற்கும் வெற்றிகரமான வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்களைக் கூறுகிறார். அவற்றில் சில இதோ:

மிளகு கருப்பாக இருக்கிறது. அதைக் கடித்தவுடன் அதன் காரம் உங்களுக்கு எரிச்சலைத் தருகிறது. ஒரு நல்ல மனிதனும் இப்படித்தான் இருப்பான். எவரையும் அவரது தோற்றத்தை வைத்து மதிப்பிடக் கூடாது. அவர்களது நிஜமான ஆளுமையை வைத்தே மதிப்பிட வேண்டும்.

நீர் நிறைந்த நதி கம்பீரமாகப் பாய்கிறது. அதனுடைய ஆழத்தையோ.அல்லது அது போகும் பாதையையோ அல்லது அதன் வேகத்தையொ அது நிரூபிக்கத் தேவை இல்லை. ஆனால் போகும் பாதை சீராக இல்லாத ஒரு சின்ன நீரோடை பாறைகளின் ஊடேயும் காடுகளின் உடேயும் வேகமாக அதிக சத்தத்துடன் பாய்கிறது. பிரபுத்வமான நல்ல நடத்தையே ஒருவரின் குணாதிசயத்தைக் காண்பிக்கிறது. வெறும் சத்தம் ஒருவரின் நல்ல குணங்களைக் காண்பிக்காது.

நீரில் இருக்கும் முதலையானது ஒரு யானையைக் கூட இழுத்து விடும்; ஆனால் அதிலிருந்து வெளியே இருக்கும் போது  அது மெலிந்த ஒரு நாயைக் கூட எதிர்க்க முடியாது. இதுதான் ஸ்தான பலம் எனப்படும் இருக்குமிடத்தைப் பொருத்து ஏற்படும் வலிமையாகும்.

ஒரு படகானது நீரில் எளிதாகப் போகும். ஆனால் அதுவே நிலத்திலோ என்றால் ஒரு அங்குலம் கூட நகராது. ஆக இதுவே சரியான இடத்தில் இருப்பதால் ஏற்படும் நன்மை என்பது பெறப்படுகிறது. திறமைசாலியான ஒருவன் கூட தவறான இடத்தில் இருந்தால் தோல்வியையே அடைவான்.

கிராமத்தலைவனுக்கு மோசடிப் பேர்வழி யார் என்று தெரியும். அதற்குத் தக அவனை அவன் நடத்துவான். அதே போல கடவுளிடம் யாரும் எதையும் மறைக்க் முடியாது. ஒரு மனைவி தன் கணவனின் பசியை அறிவாள்.

இந்தப் பாடலால் அறியப்படுவது என்னவெனில் ஒருவன் எப்போதும் தனக்கு உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதைத் தான்.

சிப்பிக்குள் விழும் மழை நீர் முத்தாக மாறுகிறது. ஆனால் நீருக்குள் விழும் மழை நீரோ நீருடனேயே கலக்கிறது. வெற்றி அடைய விதிக்கப்பட்ட ஒருவன் வாய்ப்பைத் தவற விடவே மாட்டான். சரியான நேரமும் காலமும் இடமுமே வெற்றி பெறத் தேவையானவை.

இப்படி நூற்றுக்கணக்கான நீதி மொழிகளை சரளமான தெலுங்கு வார்த்தைகளில் மிக அழகுறத் தருகிறார் வேமன கவி. அவை பட்டி தொட்டிகளில் எல்லாம் சாமான்யரால் இன்று கூட மேற்கோள்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வேமன சதகம் என்ற அவரது நூறு பாடல்களைக் கொண்ட சதக நூல் பிரசித்தி பெற்ற நூலாகத் திகிழகிறது.

அனந்தப்பூரில் கத்ரி தாலுகாவில் உள்ள கதருபள்ளியில் அவர் சமாதி அடைந்தார். அவரது சமாதி உள்ள இடத்தில் ஒரு அடையாளக் கல் உள்ளது.

வேமனாவின் கவிதைகள் பள்ளிக்கூட பாட புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன. ஆந்திர அரசு 2008ம் ஆண்டு அவர் பெயரை ஒரு பல்கலைக்கழகத்திற்குச் சூட்டியுள்ளது.

1947ம் ஆண்டு யோகி வேமனா என்ற படத்தில் நாகையா நடித்துள்ளார்.

இன்னொரு படமான ஶ்ரீ வேமன சரித்ரா 1986ல் வெளியிடப்பட்டது.

வேமனாவின் தபால் தலை ஒன்றை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

யோகி வேமனா பாரதத்தின் தலை சிறந்த மகான்களில் ஒருவர் என்பதையும் அவர் கூறும் நீதிகள் மனித குலம் அனைத்திற்கும் பொதுவானவை என்பதையும் அவர் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது நீதி பாடல்களைப் படிப்பதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

யோகி வேமனாவின் திருவடி போற்றி.

நன்றி வணக்கம்.

*********

Hindu Crossword 18-12-24 (Post No.14,002)

Written by London Swaminathan

Post No. 14,002

Date uploaded in Sydney, Australia – 18 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Across

4.Duryodhana’s wife

7.Congress people wore this during freedom struggle

8.That which is sour; acidic

10. People who lived beyond Sindhu River

Down

1.Literal translation- once again new- name of some Shankaracharyas

2.Name of Vali’s wife in Ramayana

3. Mother of Gods in the Rig Veda; also word for guest.

5.one of the Five Pndavas well versed in astrology.

6.One of Pandu’s wife

9.Go upward—well versed in gambling; helped to Kauravas to defeat Yuthisthira

1  2  3  
4 5 6    
         
  7      
         
    8    
        9
   10     

Hindu Crossword 18-12-24

A 1  R2  A3  
B4AN5UM6ATHI
H AMA H N
I K7ADHI U
N U H T K
A L A8MILA
V A R   S9
A  H10INDU 

 —subham—-

tags- Hindu Crossword 18-12-24

GNANAMAYAM BROADCAST ON 15-12-2024 SUMMARY

S. NAGARAJAN

MRS SATHYANARAYANAN

MRS VAISHNAVI ANAND

MRS VIMALA SURYANARAYANAN 

GNANAMAYAM BROADCAST FROM SYDNEY, LONDON AND INDIAN CITIES ON 15-12-2024 VIA ZOOM, FACEBOOK AND YOU TUBE.
VAISHNAVI ANAND PRESENTED WORD HINDU NEWS FROM LONDON;
BENGALURU S NAGARAJAN SPOKE ABOUT NAMMAAZVAR;
BENGALURU MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN SPOKE ABOUT SRIVILLIPUTHUR.
MRS VIMALA SURYANARAYAN FROM CHENNAI DID THE PRAYER SONG. TIRUPPUGAZ SONGS WERE PLAYED BY SRI KALYANJI FROM INDIA. LONDON SWAMINATHAN ANCHORED IT FROM SYDNEY IN AUSTRALIA.

SHRI KALYANJI

LONDON SWAMINATHAN (SYDNEY, AUSTRALIA)

–SUBHAM–

TAGS– GNANAMAYAM BROADCAST, ON 15-12-2024 SUMMARY

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்தி மடல் 15-12-2024 (Post.14,001)

xxxx  

Written by London Swaminathan

Post No. 14,001

Date uploaded in Sydney, Australia – 18 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை  வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

அனைவருக்கும் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 15–ம் தேதி 2024-ம் ஆண்டு

*****

திருவண்ணாமலை கார்த்திகை  தீபத்  திருருவிழா

ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான மக்களைக் கவர்ந்து இழுக்கும் திருவண்ணாமலை கார்த்திகை  தீபத்  திருருவிழா  இந்த ஆண்டும் வியாக்கிழமையன்று சிறப்பாக நடந்தது . மாலையில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டவுடன் அண்ணாமலைக்கு அரோஹரா என்று பக்தர்கள் எழுப்பிய கோஷங்கள் விண்ணை முட்டியது.  ஆயிரக் கணக்கில் சிறப்பு பேருந்துகள் பக்கதர்களை சுமந்த வந்தன ; வட்டார பள்ளிகளுக்கு ஒன்பது நாள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டன.

கார்த்திகை தீபத் திருவிழா – காஞ்சியில் இருந்து திருவண்ணாமலை புறப்பட்ட திருக்குடைகள்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் இருந்து திருக்குடைகள் அண்ணாமலையாருக்கு சாத்த கொண்டு செல்லப்பட்டது.

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி கோயில் நிர்வாகம் சார்பில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள இந்து ஆன்மீக சேவா சமிதி அறக்கட்டளை சார்பில் 7 திருக்குடைகள் அண்ணாமலையாருக்கு சாத்த கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக ஆன்மீக பக்தர்கள் பலர் வழி நெடுகிலும் நின்று திருக்குடையை வழங்கினர். விவசாயம் செழிக்கவும், மக்கள் நோயின்றி வாழவும் திருக்குடை அளித்து வருவதாக அறக்கட்டளை நிறுவனர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

xxxx

மகா கும்பமேளா 2025 பிரம்மாண்ட ஏற்பாடு.

உலகிலேயே மிகப்பெரிய திருவிழா மஹா கும்பமேளா ; இது அடுத்த ஆண்டு திரிவேணி சங்கமத்தில் நடக்கிறது; கங்கை, யமுனை சரஸ்வதி நதிகள் கலக்கும் இடம் திரிவேணி சங்கம். சரஸ்வதி நதி மட்டும் பாதாளத்தில் கலக்கிறது; முன்னர் அலஹாபாத் என்று பெயர் இருந்த இடத்துக்கு பிரயாக்ராஜ் என்ற பழைய பெயர் சூட்டப்பட்டதை நேயர்கள் அறிவார்கள் இதற்கு முந்திய மஹா கும்பமேளாவில் இரண்டு கோடி பேருக்கு மேல் வந்து கங்கையில் புனித நீர் ஆடினர்.

பல்லாயிரக் கணக்கான சாதுக்கள் இமய மலையிலிருந்து இறங்கி வந்து புனித கங்கை நதியில் குளிக்கும் காட்சியை உலகம் முழுதுமுள்ள டெலிவிஷன் நிலையங்கள் படம் பிடிப்பது வழக்கம் 

சாதுக்களுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை

உத்தர பிரதேச மாநில முதல்மைச்சர் முதல்வர் யோகி ஆதித்யநாத் மகா கும்பமேளா 2025—க்கான ஏற்பாடுகள் குறித்து சாதுக்களுடன் ஆலோசனை நடத்தினார். சாதுக்கள் ஏற்பாடுகளில் திருப்தி தெரிவித்து, பிரதமர் மோடியின் டிசம்பர் 13 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சம்மதித்தனர். யோகி பிரம்மாண்டமான கும்பமேளாவிற்கு உறுதியளித்தார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத், மகா கும்பமேளாவின் தெய்வீகத்தன்மையும் பிரம்மாண்டமும் சாதுக்களால் வருவதே, அரசும் நிர்வாகமும் ஏற்பாட்டிற்கு உதவி செய்பவை மட்டுமே என்றார். இன்று உலக அரங்கில் சனாதன கலாச்சாரம் பெருமைப்படுகிறது என்றால் அது சாதுக்களின் அருளால்தான் சாத்தியமாகிறது என்றார். மகா கும்பமேளா ஏற்பாடுகளில் நல்லது நடந்தால் அது முன்னோர்களின் அருள், மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் சாதுக்களின் ஆசியால் நடக்கிறது. எனவே இந்த முறையும் சாதுக்கள் மேளா நிர்வாக அதிகாரிகளுக்கு வழிகாட்டுதலை வழங்க வேண்டும்

என்று வேண்டுகோள் விடுத்தார்

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் 13 அகாடாக்களின் பிரதிநிதிகள், காக்-சௌக் பாரம்பரியம், தண்டிபாடா பாரம்பரியம், ஆச்சார்யபாடா பாரம்பரியம் மற்றும் தீர்த்த புரோகிதர்களின் பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சாதுக்களுடன் மகா கும்பமேளா ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடிய முதல்வர், இந்த ஆண்டு கங்கை நீர் தாமதமாக வற்றியதால் சில பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன, ஆனால் சாதுக்களின் ஒவ்வொரு கேள்விக்கும், ஒவ்வொரு எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றார்.

பரிசுத்தமான திரிவேணி சங்கமத்தில் புனித நீராட விரும்பும் ஒவ்வொரு சாதுவும், பக்தரும் தொடர்ச்சியாக ஓடும் தூய்மையான கங்கை-யமுனையை தரிசிப்பார்கள். மகா கும்பமேளா 2025, கும்பமேளா 2019 ஐ விட பிரம்மாண்டமாக இருக்க அனைவரும் பங்களிக்க வேண்டும். சாதுக்களின் அருளாலும், பிரதமரின் வழிகாட்டுதலாலும் இன்று உலகம் முழுவதும் அயோத்தி, வாரணாசி மற்றும் பிரஜ்தாம் ஆகியன புதிய அம்சங்களை காண்கிறது என்றார்..

அகாடாக்கள் மற்றும் பல்வேறு சாதுக்களின் பிரதிநிதிகள் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு நன்றி தெரிவித்து, முதல்வர் யோகியின் தலைமையில் நடைபெறும் மகா கும்பமேளா உலகம் முழுவதும் அமைதியின் செய்தியை வழங்கும் என்றனர். முதல்வர் யோகி ஆதித்யநாத் சனாதன தர்மத்தின் பாதுகாவலர் என்றனர். அவரது தலைமையின் கீழ் இன்று சனாதன சமூகம் பெருமைப்படுகிறது என்று பாராட்டி ஆசி வழங்கினார்கள்.

xxxxx

மகா கும்பமேளாவை முன்னிட்டு கோவையில் இருந்து வாரணாசி மற்றும் அயோத்திக்கு ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரெயில் !

கோவை, இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மகா கும்பமேளாவுக்கு தமிழகத்தத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், வாரணாசி மற்றும் அயோத்திக்கு அதிகப்படியான பக்தர்கள் செல்வார்கள். அவர்களின் வசதிக்காக ஆன்மிக சிறப்பு சுற்றுலா ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கோவையில் இருந்து வருகிற 2025  பிப்ரவரி மாதம் 18-ந் தேதி திருப்பூர், ஈரோடு, சேலம், லார்பேட்டை,காட்பாடி, ரேணிகுண்டா வழியாக வாரணாசிக்கு இயக்கப்பட உள்ளது.

XXXX

உத்தர பிரதேசத்தில் கும்பமேளா ஏற்பாடுகள் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு!

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா ஏற்பாடுகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.

பிரயாக்ராஜில் மகா கும்பமேளா அடுத்த ஆண்டு கோலாகலமாக நடைபெறுகிறது. இதையொட்டி, கங்கை நதிக்கரையில் லட்சக்கணக்கான துறவிகள் திரள்வது வழக்கம். இந்த நிலையில், கும்பமேளா ஏற்பாடுகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை அளித்தார். பின்னர் அங்குள்ள புத்தக கடைக்குச் சென்ற அவர், இரண்டு புத்தகங்களை வாங்கி அதற்கான தொகையை யுபிஐ மூலம் செலுத்தினார்.

இதையடுத்து கங்கை நதியில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே பாலத்தின் உறுதித்தன்மையை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.  அந்த வழித்தட வரைபடத்தையும் அவர் பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார்.

******

நடிகர் திலீப்புக்கு முன் வரிசை தரிசனம் நான்கு பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

சபரிமலை: சபரிமலையில் பக்தர்களின் வரிசையை தடுத்து நடிகர் திலீப்புக்கு முன் வரிசையில் தரிசன வசதி ஏற்படுத்திக் கொடுத்தது தொடர்பாக தேவசம் போர்டு அதிகாரிகள் 2 பேர் உட்பட 4 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.கடந்த 5ம் தேதி சபரிமலை தரிசனத்திற்கு வந்த நடிகர் திலீப், அவருடன் வந்தவர்கள் இரவு ஹரிவராசனம் பாடும் போதும் அதிகாலை நிர்மால்ய தரிசனத்தின் போதும் முன் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இந்த நேரத்தில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

xxxxx

மதமாற்றம் செய்ய கிராமம் கிராமமாக படையெடுக்கும் கிறிஸ்தவ மிஷனரிகள் – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கிறிஸ்தவ மிஷனரிகள் மதமாற்றம் செய்ய கிராமம் கிராமமாக படையெடுத்துள்ளதாகஇந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மிஷனரிகளின் மதமாற்ற வேலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் முடுக்கிவிடபட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் சார்லஸ் நகரை சேர்ந்த ஒரு பாதிரியார், ஆரியூர் கிராமத்தில், கிறிஸ்துமஸ் விழா என்ற பெயரில் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், அதை தட்டிகேட்ட இளைஞர்களை ஆதரவாளர்களை வைத்து பாதிரியார் தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே பல மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை தமிழகத்திலும் இயற்ற வேண்டும் என்றும், புதுக்கோட்டை சம்பவத்தில் பொய் வழக்கு போட்டு கைது செய்யபட்ட இளைஞரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

XXXXXX

அமெரிக்க அரசாங்கத்தின் உச்ச பொறுப்புகளில் இந்துக்கள் நியமனம்

அமெரிக்காவின் அதிபரான டொனால்ட் ட்ரம்பின் வெள்ளை மாளிகை தேர்வுகளில் இந்திய வம்சாவளியினர் இடம் பெற்றுள்ளனர்.

வரும் ஜனவரி 20ம் தேதி, அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கிறார். அதன் பிறகு அவர் அதிகாரப்பூர்வமாக அதிபருக்கான அதிகாரங்களைப் பெற முடியும். அதற்கு முன்னதாக, வெள்ளை மாளிகையின் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 4000 அரசு நியமனங்களை செய்து வருகிறார்.

வெள்ளை மாளிகை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில், இந்திய வம்சாவளியினரை மிக முக்கிய பொறுப்புக்களில் ட்ரம்ப் நியமித்திருக்கிறார்.

அமெரிக்க நீதித்துறையின் உயர் பதவிகளில் ஒன்றாக விளங்கும் சிவில் உரிமைகளுக்கான துணை தலைமை வழக்கறிஞர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்மீத் தில்லான்என்ற பெண்ணை நியமனம் செய்வதாக டிரம்ப் அறிவித்துள்ளார்; ஹர்மீத் சீக்கிய மத சமூகத்தின் மரியாதைக்குரிய உறுப்பினர்.தற்போது 54 வயதாகும் ஹர்மீத் தில்லான், இந்தியாவின் சண்டிகர் நகரில் பிறந்தவராவார். சிறுவயதிலேயே அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்,

அரசாங்கத்தின் திறன் சார்ந்த துறை (Department of Government Efficiency – DOGE) என்ற புதிய துறையை உருவாக்கியுள்ள அதிபர் ட்ரம்ப், அதன் தலைமை பதவியில் எலான் மஸ்க் உடன் விவேக் ராமசாமியையும் நியமித்துள்ளார்.

அமெரிக்காவில் பிறந்த விவேக் ராமசாமியின் பெற்றோர் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வடக்கஞ்சேரியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

வடக்கஞ்சேரியில் பிறந்து வளர்ந்த ராமசாமிக்கும் பொள்ளாச்சியில் பிறந்த விவேக்கின் தாயார் கீதாவுக்கும் பழனியில்தான் திருமணம் நடந்திருக்கிறது. தாய் மொழி தமிழ் என்பதால், இன்றும் விவேக் ராமசாமி தமிழில் நன்றாக பேசுவார்

கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் பயின்றாலும் தான் ஒரு இந்து என்பதில் பெருமை கொள்வதாக விவேக் ராமசாமி, வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

அடுத்ததாக, தேசிய புலனாய்வு இயக்குநராக முன்னாள் ஜனநாயகக் கட்சியின் துளசி கபார்டை அதிபர் ட்ரம்ப் நியமனம் செய்திருக்கிறார். இதன் மூலம், துளசி கப்பார்ட், அமெரிக்க உளவு அமைப்புகளில் தலைவராகவும், அமெரிக்க அதிபரின் உளவுத்துறை ஆலோசகராகவும் செயல்படும் முதல் இந்து பெண்மணி ஆவார்.

இந்தியாவுடன் நேரடித் தொடர்புகள் இல்லை என்றாலும், துளசி கபார்ட்டின் தாயார், இந்து மதத்துக்கு மாறியவர் . ரோமன் கத்தோலிக்கரான துளசி கபார்ட் டின் தந்தை மைக் கபார்ட் மற்றும் தாயார் கரோல் கபார்ட் தங்கள் குழந்தைகளை இந்து மத நம்பிக்கைகளுடன் வளர்த்தனர், மேலும் தங்களின் ஐந்து குழந்தைகளுக்கும் இந்துமத பெயர்களையே வைத்தனர். தனது குழந்தைகளுக்கு இந்து பெயர்களையே துளசி கபார்ட் வைத்திருக்கிறார்.

அமெரிக்க சமோவான் வம்சாவளியைச் சேர்ந்த துளசி கபார்ட் எப்போதும் தன்னை ஒரு இந்து என்று அடையாளப்படுத்திக் கொள்வதிலேயே பெருமை படுகிறார். ஸ்ரீமத் பகவத் கீதையின் மீது கை வைத்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் .

2015ம் ஆண்டு பாரம்பரிய வேத முறைப்படி, திரைப்பட தயாரிப்பாளர் ஆபிரகாம் வில்லியம்ஸை துளசி கபார்ட் திருமணம் செய்து கொண்டார்.

இந்த வரிசையில், காஷ் படேலை எஃப்பிஐ-யின் இயக்குநராக்கி இருக்கிறார் அதிபர் ட்ரம்ப்.

ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த, குஜராத்தைப் பூர்வீகமாக கொண்ட பெற்றோருக்கு பிறந்தவர்தான் காஷ் படேல். நியூயார்க்கில் சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக தன் வாழ்க்கையை தொடங்கி, நீதித்துறையில் பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.

இந்தியாவில் ராம ஜென்ம பூமியான அயோத்தியில் ராமர் கோயிலை மீட்டெடுப்பதற்கு ஆதரவாக குரல் கொடுத்த காஷ் படேல், ஸ்ரீ இராமரின் வரலாறு மற்றும் ஸ்ரீ இராம ஜென்ம பூமியின் வரலாற்று முக்கியத்துவத்தை புறக்கணித்த மேற்கத்திய ஊடகங்களை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்தியாவின் கொல்கத்தாவில் பிறந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ஜெய் பட்டாச்சார்யாவை அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்களின் இயக்குநராக அதிபர் ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார்.

இதற்கெல்லாம் மேலாக, இந்திய வம்சாவளி இந்துவான உஷா வான்ஸின் கணவர் ஜே.டி.வான்ஸ் அமெரிக்காவின் துணை அதிபராகி இருக்கிறார். இதன்மூலம், அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாகும் முதல் இந்தியர் என்ற பெருமையை உஷா வான்ஸ் பெற்றிருக்கிறார்.

XXXXXXX

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .

அடுத்த ஒளிபரப்பு

டிசம்பர்  22 –ஆம் தேதி லண்டன் நேரம் ஒருமணிக்கும் இந்திய நேரம் மாலை ஆறரை மணிக்கும்  நடைபெறும். வணக்கம். 

—-subham—-

Tags- ஞானமயம் , உலக இந்து செய்தி மடல் 15-12-2024

சிங்கப்பூர்  சிங்கப்பூர் வீர மா காளி அம்மன் கோவில் – கார்த்திகைத் திருவிழா (Post.14,000)

Written by London Swaminathan

Post No. 14,000

Date uploaded in Sydney, Australia – 18 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நான் வெள்ளிக்கிழமை (13-12-2024) கார்த்திகைப் பெருவிழா நாளன்று சிங்கப்பூ ரிலுள்ள புகழ் பெற்ற சிங்கப்பூர் வீர மா காளி அம்மன் கோவிலுக்குச் சென்றேன்.நல்ல சுவாமி தரிசனம் செய் தேன். ஒரே ஒரு குறை; முருகன் சந்நிதியை அலங்காரத்துக்காகத் திரைபோட்டு மூடிவிட்டார்கள்;முருகன் சந்நிதிக்கு முன்னால்,வேத முழக்கங்களுடன் ஹோமம் நடந்து கொண்டிருந்தது ஏனைய சந்நிதிகளை தரிசனம் செய்தேன். நல்ல கூட்டம். பல வெளினாட்டுச் சுற்றுலாப்பயணிகளும் வெளியிலிருந்து புகைப்படம் எடுத்தனர். நானும் கோவிலுக்குள்ளேயும் வெளியேயும் படங்கள் எடுத்தேன்.

சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவிலான சிங்கப்பூர் வீர மா காளி அம்மன் கோவில், லிட்டில் இந்தியா என்ற பேட்டையில் இருக்கிறது; நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து பதினைந்து நிமிடத்தில் நடந்தே போனோம். ஒரே நகைக்கடைகளும் புடவைக்கடைகளும், ஊதுபத்தி மணமும்  பரவிக்கிடக்கிறது.

நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழைய கோவில்; அந்தக் காலத்தில் சிங்கப்பூருக்கு வந்த தமிழர்கள் கட்டிய கோவில் இது. சிறிது தொலைவில் வெங்கடேஸ்வரர் கோவிலும் உளது  பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் ஈர்க்கும் முக்கிய தலமாகும்.

நான் சமீபத்தில் அந்த கோவிலுக்கு சென்ற போது, அதே சமயத்தில் கார்த்திகை திருவிழா நடைபெற்று கொண்டிருந்தது. புனித நாளில் செல்வது அதிர்ஷ்டமாக இருந்தாலும், ஒரு சிறிய ஏமாற்றமும் இருந்தது; இது போன்ற திருவிழா நாட்களில் எல்லோரும் யாரைத் தரிசிக்க வருகிறார்களோ ,அவரைப் பார்க்கமுடியாமல் செய்து விடுகிறார்களா; நான் 30 ஆண்டுக் காலத்துக்கு மதுரையில் வாழ்ந்தபோதும் இதே அனுபவம்தான். பிள்ளையார் சதுர்த்தி அன்று பிள்ளையாரைத் திரைபோட்டு மணிக்கணக்கில் மூடிவிடுவார்கள்; ஆனால் எங்களுக்கு இந்த வாழக்கம் தெரியுமாதலால் அதிகாலையில் போய் தரிசனம் செய்து விடுவோம். மதுரையில் வடக்கு மாசிவீதி- மேல மாசிவீதி சந்திப்பிலுள்ள நேரு ஆலால சுந்தர விநாயகரைத் தரிசிக்காமல் நான் சாப்பிட்டதில்லை. இது எல்லாம் 1987-க்கு முந்திய கதை.

ஒரு கேள்வி ?

எவ்வளவோ ஆகம விதிகளை மீறிவிட்டார்கள்; கோவிலுக்குள் கண்டதும் கடையதுகளும் கர்ப்பக்கிரகம் வரை செல்கின்றன. எந்த கோவிலிலும் அரை மணி நேரத்துக்கு மேல் இப்படி எந்தத் தடையும் இல்லாமல் செய்வது நல்லது.  சுவாமியைத் தரிசிக்கக் கட்டணம் வைக்கிறார்கள். பூஜை காலங்களை மாற்றுகிறார்கள்; அபிஷேகம் ஆராதனைகளை மட்டும் அரை மணி நேரத்துக்குள் முடிக்கலாமே; அல்லது திரையையாவது திறந்து வைக்கலாமே. பக்கதர்கள் ஏமாறாமல் இருப்பார்கள்;

நாங்கள் பள்ளி மாணவர்களாக இருந்த போது கண்ணாமூச்சி விளையாடிய, உலகப் புகழ் பெற்ற மீனாட்சி கோவிலில், எங்களை ஒரு மணி நேரத்துக்கு மேல் கியூ—வில் நிறக வைத்துவிட்டார்கள்; காரணம் கேட்டபோது ஆறுகால பூஜைகளையும் ஒரே காலத்தில் செய்வதாக ஒருவர் முனுமுனுத்தார்;  சரியா தவறா என்று தெரியவில்லை. இது சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது.

எங்கள் வீட்டு அடுத்தவீட்டுக்காரர் ஒரு குஜராத்தி; அவரிடம் மதுரை மீனாட்சி  கோவில் பற்றிப் பெருமையாகப் பேசினேன். அவர் தொச்சுக் கொட்டிவிட்டு நானும் போனேன்; இனிமேல் தென்னிந்தியக் கோவிலுக்குப் போவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். எங்கள் குஜராத்துக்கு வந்து பாருங்கள் இது போன்றவை இராது என்றார்

ராமேஸ்வரம், திருப்பதி கோவில்களில் நடக்கும் அட்டூழியங்கள் நமக்குத் தெரியும். அரசாங்கத் கட்டுப்பாட்டிலிருந்து கோவில்களை விடுவித்தால் 90 சதவிகிதம் சரியாகிவிடும்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல எதிர்த்தாற்போலுள்ள மிகவும் புகழ்பெற்ற கோமள விலாஸில் சாப்பிட்டேன். காலை11 மணிக்கே முழுச்  சாப்பாடு! வடை, பாயசம் அப்பளத்துடன் கிடைத்தது. சிங்கப்பூருக்குப் பயணம் செய்யும் வெஜிட்டேரியன்கள் கோமள விலாஸ் போகாமல் இருக்க மாட்டார்கள் .

—subham—

Tags–சிங்கப்பூர்  சிங்கப்பூர் வீர மா காளி அம்மன் கோவில், கார்த்திகை, திருவிழா,   கோமள விலாஸ்

பிரமிக்க வைக்கும் பலன்களைத் தரும் மஹாபாரத ஸ்துதிகள்! (Post No.13,999)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.999

Date uploaded in Sydney, Australia – 18 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மஹாபாரத மர்மம்

பிரமிக்க வைக்கும் பலன்களைத் தரும் மஹாபாரத ஸ்துதிகள்!

ச.நாகராஜன்

கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நடந்த அரசுரிமைப் போராட்டத்தைச் சொல்லும் பெரிய இதிஹாஸம் தான் மஹாபாரதம் என்று நினைத்தால் மஹாபாரதத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தம்.

ஏராளமான மர்மங்களை உள்ளடக்கியுள்ள அந்த இதிஹாஸம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கோடானுகோடி பேர்களுக்குப் பயனைத் தரும் அற்புதமான ஸ்துதிகளையும் கொண்டுள்ளது.

விவரங்களைத் தெரிந்து கொண்டால் பிரமிப்போம்.

ஆபத்திலிருந்து காக்க வேண்டி திரௌபதி செய்த ஶ்ரீ கிருஷ்ண ஸ்துதி, அர்ஜுனன் சிவபிரானை நோக்கி செய்த ஶ்ரீ சங்கர ஸ்துதி, மற்றும் துர்க்கையை நோக்கிச் செய்த பகவதி துர்கா ஸ்துதி, சிவ சஹஸ்ர நாமம், விஷ்ணு சஹஸ்ர நாமம், தக்ஷன் சிவபிரானை நோக்கித் துதித்த சிவ சஹஸ்ர நாமம், பீஷ்மர் செய்த ஶ்ரீ கிருஷ்ண ஸ்துதி ஆகியவை மிக முக்கியமான மஹாபாரத ஸ்துதிகளாகும்.

1.       ஶ்ரீ கிருஷ்ண ஸ்துதி: (சபா பர்வம் 90ம் அத்தியாயம்)

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் அனைவரும் சபையில் இருக்க, அங்கு இழுத்து வரப்பட்ட திரௌபதியின் ஆடையை துச்சாஸனன் பலாத்காரமாக இழுத்து அவிழ்க்கத் தொடங்கினான்.

அப்போது துயரத்துடன் அழுத திரௌபதி பெரிய ஆபத்து வரும் போது ஶ்ரீ ஹரியை நினைக்க வேண்டும் என்று வசிஷ்ட மஹரிஷி  கூறியதை நினைத்தாள். சங்கமும் சக்கரமும் கையில் ஏந்தியவரே என்று கிருஷ்ணனை துதிக்கத் தொடங்கிய திரௌபதி,

கோவிந்த த்வாராகவாஸின க்ருஷ்ண கோபீஜனப்ரிய |

கௌரவை: பரிபூதாம் மாம் கிம் ந ஜானாஸி கேசவ ||

என்று மனதார அவனை அழைத்தாள்.

“சரணமடைந்தவரைக் காப்பாற்றும் ஓ!, கிருஷ்ணா, த்வாரகா வாஸா, யாதவர்களை சந்தோஷப்படுத்துபவரே, எங்கு இருக்கிறீர்.கௌரவர்கள் என்னும் கடலில் மூழ்கிய என்னை கை தூக்கி விடும்! அநாதையாக இருக்கும் என்னை ஏன் கவனிக்காமல் இருக்கிறீர்” என்ற திரௌபதியின் ஸ்துதியால், துச்சாஸனன் இழுக்க இழுக்க நூற்றுக் கணக்கான புடவைகள் வண்ண வண்ண நிறத்தில்  வந்து கொண்டே இருந்தன. அவையோர் பிரமித்தனர்.

ஆபத்தில் இருக்கும் எந்த ஒரு பெண்ணும் எந்தக் காலத்திலும் இதை உச்சரித்தால் ஆபத்தை நீக்குவான் கிருஷ்ணன் என்பது ஐதீகம்!

2.       அர்ஜுனன் சிவபிரானை நோக்கி செய்த ஶ்ரீ சங்கர ஸ்துதி (வன பர்வம் 39வது அத்தியாயம்)

வேடன் உருவம் கொண்ட சிவபிரான் அர்ஜுனனை போருக்கு அழைத்து அவனை அடித்து மயக்கமுறச் செய்கிறார். எழுந்த அர்ஜுனன் மலர் மாலையால் பூஜித்து சிவபிரானைத் தொழவே அவர் அவனுக்கு தரிசனம் தருகிறார். அஸ்திரத்தையும் தந்து அருள்கிறார்.

‘தேவ தேவ மஹாதேவ நீலக்ரீவ ஜடாதர’ என்பது உள்ளிட்ட அர்ஜுனனின் ஸ்துதியால் மஹாதேவர் மனம் மகிழ்கிறார்.

3.       அர்ஜுனன் செய்த துர்கா ஸ்துதி: (பீஷ்ம பர்வம்) 23-ம் அத்தியாயம்

யுத்தத்திற்கு அணி வகுத்து வந்திருக்கும் கௌரவரின் சேனையைப் பார்த்த வாசுதேவர் அர்ஜுனனை நோக்கி, “யுத்தத்தில் எதிரிகள் தோற்பதற்காக நீ துர்க்கா ஸ்தோத்திரத்தைச் செய்” என்று கூறுகிறார். உடனே ரதத்திலிருந்து இறங்கும் அர்ஜுனன் துர்க்கையை நோக்கிக் கரம் குவித்து வேண்டுகிறான்.

“மகேஸ்வர ஸ்வரூபிணி,  வாசுதேவ ஸ்வரூபிணி, கைடபனை நாசம் செய்தவளே, மஞ்சள் நிறமுடைய கண்களை உடையவளே உனக்கு நமஸ்காரம் என்று பலவாறாகத் துதிக்கிறான்.உடனே வானத்திலிருந்து தோன்றிய துர்க்கை, “ சிறிது காலத்திற்குள் நீ பகைவரை ஜெயிப்பாய்” என்று அனுக்ரஹம் செய்கிறாள்.

4.       சிவ சஹஸ்ர நாமம் (அநுசாஸன பர்வம்)

சிவ பிரானின் ஆயிரம் திருநாமங்களை லிங்க புராணம் உள்ளிட்ட பல புராணங்களில் பார்க்கலாம். அநுசாஸன பர்வம் 17வது அத்தியாயத்தில் சிவ சஹஸ்ரநாமத்தைப் பல பிரதிகளில் காணலாம். ஆயிரம் திருநாமங்களை ஓதுவதன் பலனை சாந்தி பர்வம் 290வது அத்தியாயம் விவரிக்கிறது. தீர்க்க ஆயுளை அடைவதோடு எந்த விதமான அமங்களத்தையும் இதை ஓதுபவன் அடைய மாட்டான் என்ற உறுதியைக் காணலாம்.

5.       விஷ்ணு சஹஸ்ர நாமம் (அநுசாஸன பர்வம் 254வது அத்தியாயம்)

விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் பெருமையை முழுவதுமாக உரைக்க யாராலும் முடியாது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்றும் நாள் தோறும் ஒதி அதன் நல்ல பலன்களை அனுபவித்து வருகின்றனர்.

இதன் முழுப் பலன்களையும் ஶ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த பகவத் குண தர்ப்பணம் என்ற ஸஹஸ்ர நாம பாஷ்யத்தில் காணலாம். ஶ்ரீ சங்கரரது பாஷ்யத்திலும் இதன் சிறப்புகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

6. தக்ஷன் ஓதிய சிவ சஹஸ்ரநாமம் (சாந்தி பர்வம் 290வது அத்தியாயம்)

தக்ஷன் சிவனை அழைக்காமல் நடத்திய யாகத்தை வீரபத்ரரைக் கொண்டு சிவபிரான் அழிக்கவே தக்ஷன் அவரது கோபத்தைத் தணிக்க ஆயிரம் நாமங்களால் அவரைத் துதிக்கிறான். அற்புதமான ஆயிரம் நாமங்களின் அர்த்தம் ஆழ்ந்த பொருள் பொதிந்ததாக சிவனின் மகிமையைக் கூறுவதாக் அமைகிறது.

7. பீஷ்மர் செய்த ஶ்ரீ கிருஷ்ண ஸ்துதி (சாந்தி பர்வம் 46வது அத்தியாயம்)

பீஷ்மர் இரு முறை ஶ்ரீ கிருஷ்ணரைத் துதிப்பதை மஹாபாரதத்தில் காணலாம். உத்தராயணம் வருவதை ஒட்டி அவர் ஒரு முறையும் , தர்மத்தை உபதேசிக்குமாறு அவர் கேட்கப்படும் போதும் இன்னொரு முறையுமாக அவர் இருமுறை ஶ்ரீ கிருஷ்ணரை ஸ்துதி செய்கிறார்.

கிருஷ்ணரின் பெருமையை இவற்றில் காணலாம்.

இப்படி மஹாபாரதத்தில் வரும் அருமையான இந்த ஸ்துதிகள் காலம் காலமாக மனிதர்களைப் பீடிக்கும் வியாதிகளை விரட்டுவதோடு நீடித்த ஆயுளையும் சகல நலன்களையும் தருவதாக அமைகின்றன. இவற்றை ஓதுவோம்; சகல நலன்களையும் பெறுவோம்!

(குறிப்பு: பர்வத்தில் குறிப்பிடப்படும் அத்தியாயங்கள் கும்பகோணம் ம.வீ. இராமானுஜாசாரியார் பதிப்பில் உள்ளபடி தரப்பட்டுள்ளது.)

***

  tags- மஹாபாரத ஸ்துதிகள்

DECEMBER HOLIDAYS 2024

DECEMBER HOLIDAYS

ZINDABAD !

C U ALL SOON !!

 ******

DECEMBER HOLIDAYS 2024

ZINDABAD !

C U ALL SOON !!

***** 

YOU HAVE 14,000 ARTICLES TO READ.

FREE, FREE, FREE! NO MONEY; NO ADVTs; NO COOKIES!

–SUBHAM—
 TAGS- DECEMBER HOLIDAYS, 2024

Debate on Bharatiyar Books in Madras Assembly (Post No.13,998)

Written by London Swaminathan

Post No. 13,998

Date uploaded in London – 11 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Debate on Bharatiyar Books in Madras Assembly (Post No.13,998)

Subrahmanya Bharati was a man on whose tongue the Goddess Saraswati can honestly be believed to have danced the dance of patriotism. If he had been born in any free country, why in any country of the world except  India, the man would have been made the Poet Laureate of the country, would have been given honours and titles by a government which knows how to respond to the feelings of the people, and would have lived and died among the most honoured of the nation.

—S Satyamurthi in Madras Legislative Council, 1928

Late Satyamurthi was a great patriot and leader of the congress party in Madras. He was a fiery orator and contributed in no small measure to the cause of freedom in the south.

He was speaking on the no confidence motion against the then ministry headed by Raja of Panagal (year 1928). It was Satyamurthi’s maiden speech in the Madras Legislative Council. He championed the cause of the school children who were denied the inspiration of Bharathi’s songs.

Five years later in the same house , Satyamurthi returned to the theme when the police seized copies of Bharti’s songs. Speaking on an adjournment motion on the subject, Satyamurthi told the legislators about the literary genius of the fiery patriot Subramania Bharati.

Following are excerpts from the proceedings of the Madras Legislative Council (1928):

Mr President Sir, I beg leave to move the business of this House do stand adjourned to consider a matter of urgent public importance, namely, the resent action of City Police in entering upon and searching the premises of Hindi Prachar Sabha on the High Road, Triplicane, for copies of Bharati’s songs, and seizing nearly 2000 copies of the same.

…….. when I say that one wants no arguments to support vote of censure on the action of the Madras Government  in having acquiesced in or directed the City Police to seize what will remain, in spite of the Madras Government’s activities, so long as Tamil Language lasts or a single Tamilian exists, as the most priceless and patriotic songs in that great language.

Sir Late Subrahmanya Bharati was a man on whose tongue the Goddess Saraswati can honestly be believed to have danced the dance of patriotism. If he had been born in any free country, why in any country of the world except India, the man would have been made the Poet Laureate of the country, would have been given honours and titles by a government which knows how to respond to the feelings of the people, and would have lived and died among the most honoured of the nation.

But, sir, being the slave country that we are, he had to live in exile in Pondicherry, enjoying the hospitality of the French Government, and die broken wreck, because he found no use for himself under the auspices of this Government. But, sir, martyrs and patriots before him have gone to the same fate. Subrahmanya Bharati lived and died a patriot. I wat to repeat, Mr President, that so long as the Tamil Language lasts you may confiscate , all the copies which exist, even as our sacred Vedas were handed down from generations to generation, for aeons, without a single piece of writing, by the memory of our ancient Hindu ancestors  I have no doubt , that so long as a single Tamilian lives, these songs will remain the priceless heritage of the Tamil race.

From SUBRAMANIA BHARATI, PATRIOT AND POET, A.Memoir, P Mahadevan, Bharathi Tamil Sangham, Calcutta, 1970

–subham—

Tags- SUBRAMANIA BHARATI, PATRIOT AND POET, Seizure, Bharati books, by police

காக்கைச் சிறகினிலே நந்தலாலா! பாரதியும் பரமஹம்சரும்!! (Post No.13,997)

Written by London Swaminathan

Post No. 13,997

Date uploaded in London – 11 DECEMBER 2024 .             

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 காக்கைச் சிறகினிலே நந்தலாலா! பாரதியும் பரமஹம்சரும்!! (Post No.13,997)

பாரதியார் பற்றி பல நூறு  நூல்கள் வெளியாகிவிட்டன . பல்லாயிரம் கட்டுரைகள் அச்சிடப்பட்டுவிட்டன ; இன்னும் ஏதாவது எழுத இருக்கிறதா?

நிறைய இருக்கிறது; அவருடைய பாடல்களைப் படிக்கப் படிக்க தொட்டனைத்தூறும் மணற்கேணி போல புதிய கருத்துக்கள் சுரந்து கொண்டே இருக்கும்; அவரது பாடல்கள் அமுத சுரபி; அக்ஷய பாத்திரம்; அள்ள அள்ளக் குறையாதது; இந்தச் சின்னக் கட்டுரையில் ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் உபதேச மொழிகளை ஒப்பிட்டு, பாரதியார் ஒரு பெரிய அத்வைத வேதாந்தி என்பதையும் வணங்கத் தக்க யோகி, மஹான் என்பதையும் காண்போம்.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு—குறள் 396

****

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்கிறார் :

“பக்தியைக் கண்களில் தீட்டும் மைக்கு ஒப்பிட்டிருக்கின்றனர்.

ராதை ஒரு சமயம், தோழிகளே நான் எனது கிருஷ்ணனை எல்லாவிடங்களிலும் காண்கின்றேன் என்றாள்.  அதற்கு கோபி ஸ்த்ரீகள் ராதா, நீ பக்தியாகிய அஞ்சனத்தைக் கண்ணில் இட்டுக்கொண்டிருக்கிறாய் . அதனால்தான் அப்படித் தோன்றுகிறது என்றார்கள் “.

(இதிலுள்ள சிலேடை நயத்தைக் கவனிக்க வேண்டும்

அஞ்சனம்= மை =கருப்பு= கிருஷ்ணன் = கண்ணன்)

இதை பாரதியாரின் காக்கைச் சிறகினிலே பாடலில் காண்கிறோம். பெரிய யோகிகளுக்கு, எந்த நிறத்தைக் கண்டாலும் அது இறைவனின் ஒரு அம்சத்தையே நினைவுபடுத்தும்

ஸ்ரீ கிருஷ்ண பாமாத்வை அணுகும்போதெல்லாம் ராதைக்கு அவருடைய திவ்ய மங்கள சரீரத்தினின்று மனோஹரமான வாசனை வந்தது; ஈஸ்வரனிடம் ஒருவன் நெருங்கும்போது  அருகில் செல்லச் செல்ல அவனிடமுள்ள பக்தி, பிரேமை அதிகரிக்கும், சமுத்திரத்தை அணுக அணுக நதியானது மென்மேலும் பொங்கி வழியும்; அதுபோன்றதே இந்த பிரேமை.

*****

பாரதியாரின் வேதாந்தப் பாடல்

நந்தலாலா

[ ராகம் — யதுகுல காம்போதி ] [ தாளம் — ஆதி ]

காக்கைச் சிறகினிலே

   நந்தலாலா — நின்றன்

கரியநிறந் தோன்றுதையே

   நந்தலாலா;    1

பார்க்கும் மரங்களெல்லாம்

   நந்தலாலா — நின்றன்

பச்சைநிறந் தோன்றுதையே

   நந்தலாலா;

2

கேட்கு மொலியிலெல்லாம்

   நந்தலாலா — நின்றன்

கீத மிசைக்குதடா

   நந்தலாலா;  3

தீக்குள் விரலைவைத்தால்

   நந்தலாலா — நின்னைத்

தீண்டுமின்பந் தோன்றுதடா

   நந்தலாலா.– பாரதியார்

தீயும் கூட அவனுடைய ஒரு அம்சமே . இதனால்தான் யோகிகள் தீயில் புகுந்து இறைவனுடன் கலந்தார்கள்; சங்கப் புலவர் கபிலர், குமாரில பட்டர், சம்பந்தர், ஆண்டாள் , வள்ளலார் முதலிய பலர் ஜோதியில் கலந்தனர்.

(நந்த லாலா = பால கிருஷ்ணன் = குழந்தை வடிவ கண்ணன்)

*****

பார்க்கும் மரங்களெல்லாம்

   நந்தலாலா — நின்றன்

பச்சைநிறந் தோன்றுதையே

   நந்தலாலா;

பசுமையான மரங்களைப் பார்த்தாலும் அவன் நினைவே வருகிறது. பரமஹம்சர் ஒருநாள் வங்காளத்தில் கண்ணைப் பறிக்கும் பசுமை மிகுந்த வயல் வழியாக நடந்து சென்றார் ; அப்போது வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து நின்றன. அந்தப் பின்னணியில் வெள்ளை  நிறக் கொக்குகள் பறந்து சென்றன; அதைப் பார்த்தவுடன் பரமஹம்ஸருக்குப் பேரானந்தம் பொங்கியது; அப்படியே இறைவனை எண்ணி சமாதி நிலைக்குச் சென்றுவிட்டார். பின்னர் நண்பர்களும் உறவினர்களும் அவரைத் தூக்கி வந்து வீட்டில் படுக்கவைத்தனர். சமாதி கலைய சில நாட்கள் ஆயிற்று.

இதுதான்  யோகிகளுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு. நாம் இயறகையை ரசித்துவிட்டு வந்துவிடுவோம்; மஹான்களுக்கு அது கடவுளை அறிந்து கொள்ளும்  பாதையாக அமைகிறது.

பாரதியார் வாழ்விலும் இதைக் காண்கிறோம். வீட்டில் சோறு சமைக்க அரிசி இல்லையே என்று அவருடைய மனையில் பக்கத்து வீட்டில் கடன் வாங்கி வந்த நெல்லையும் அரிசியையும் அவர் குருவிகளுக்குப் போட்டுவிட்டு பேரானந்தம் அடைந்தார்.

காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று பாடி சொந்தம் கொண்டாடிய மஹாபுருஷன் பாரதி.

****

பாரதியார் ஒரு சித்தர்  என்பதை அவரே பாட்டில் பாடியும் இருக்கிறார் பிரம்மத்தைக் கண்டுவிட்டால் அவர்கள் 21 நாட்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். ஒரு சில யோகிகள் மட்டும் மற்றவர்களையும் அழைத்துச் செல்வதற்காக பிரம்மானந்த கடலில் மூழ்காமல் திரும்பிவந்து சேரவாறும் ஜெகத்தீரே என்று கூவி அழைக்கிறார்கள் என்று பரமஹம்சர் பேசியிருக்கிறார்.  பாரதியாரும் ஒரு மாதம் நோய்வாய்ப்பட்டு இருந்த போது மருந்து சாப்பிட மறுத்துவிட்டு இறைவனுடன் கலந்தார்

****

சைதன்யர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தையும் பரம ஹம்சர் கூறுகிறார்; சைதன்ய மஹாப் பிரபு ஒரு கிராமத்தின் வழியே, கிருஷ்ணனின் பெருமையைப் பாடிக்கொண்டு, செல்கையில் அவர்கள் பஜனைகளில் வாசிக்கும் தோல் கருவிகளை, மத்தளங்களை இந்தக் கிராமத்து மக்களே தயாரித்து அனுப்புகிறார்கள் என்று அடியார்கள் கூறியதைக் கேட்டவுடன் ஆனந்தக் கடலில் முழ்கி சமாதி நிலையை அடைந்துவிட்டார்.

****

பரமஹம்சர் தன்னைப்பற்றியும் இப்படிக் கூறுகிறார் :

“நான் எவ்விதம் காண்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா ? இந்த மரங்கள், செடிகள், மனிதர்கள், புல், பூண்டுகள் முதலிய எல்லா வஸ்துக்களும் தலையணை உறைகள் போல எனக்குத் தோன்றுகின்றன.. சில  தலையணைகள் மிருதுவாகவும் இன்னும் சில கடினமாகவும், பல வடிவங்களிலும் இருக்கின்றன; என்றாலும் அவைகள் அனைத்தின் உள்ளேயும் ஒரே பஞ்சுதான் இருக்கிறது அது போல உலகத்திலுள்ள பொருள்கள் எல்லாவற்றின் உள்ளேயும் அகண்ட சச்சிதானந்தப் பொருளே இருக்கிறது.  ஜகதாம்பிகையே  பல போர்வைகளால் தன்னை மூடிக்கொண்டு அதற்குள்ளிருந்து எட்டிப்பார்ப்பது போல எனக்குத் தோன்றுகிறது”

*****

இதையெல்லாம் படித்துவிட்டு பாரதியின் காக்கைச் சிறகினிலே

   நந்தலாலா — நின்றன்

கரியநிறந் தோன்றுதையே

   நந்தலாலா — பாடலைப் படித்தால் பாரதி எவ்வளவு பெரிய வேதாந்தி ,அத்வைத அறிஞர் என்பது தெள்ளிதின் விளங்கும். துதிப் பாடல்களைப் படிப்பது போல அவரது தத்துவப் பாடல்களைப் படிக்கப் படிக்க நமக்கும் ஞானம் பெருகும்.

வாழ்க பாரதி!  வளர்க பாரதீயம்!!

–SUBHAM—

TAGS- காக்கைச் சிறகினிலே நந்தலாலா!, பாரதியும் பரமஹம்சரும், பாரதி,அத்வைத வேதாந்தி

தெய்வீக அருள் பெற்ற மகாகவி! (Post No13,996)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.996

Date uploaded in London – 11 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

பாரதி தினம் : 11 டிசம்பர்

தோற்றம் : 11-12-1882

மறைவு : 11-9-1921

தெய்வீக அருள் பெற்ற மகாகவி!

ச.நாகராஜன்

பராசக்தியையே வாழ்நாள் முழுவதும் நாள்தோறும் தொழுது வாழ்ந்த மகாகவி பாரதியாருக்கு அவளது அருள் பரிபூரணமாக இருந்தது. அவர் ஒரு தெய்வீகக் கவிஞர் என்பதை நிரூபிக்கும் சம்பவங்கள் ஏராளம் உண்டு. எடுத்துக்காட்டாக இரு சம்பவங்களை இங்கு பார்ப்போம்.

1

புதுவையில் ஒரு தீபாவளி தினத்தன்று நடந்த சம்பவத்தை பாரதியாரின் புதல்வி சகுந்தலா பாரதி ‘என் தந்தை’ என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார்.

தீபாவளிக்கு முதல் நாள் ஜவுளிக்கடை வைத்திருந்த ஒரு நண்பர் பாரதியாருக்கு வழக்கம் போல், வேஷ்டி, சகுந்தலா பாரதிக்கு பாவாடை, சட்டை பாரதியாரின் மனைவிக்கு புடவை ஆகியவற்றை இனாமாக அனுப்பி வைத்தார். அன்பில் சிறந்த சீடர்கள்  பட்டாஸ், மத்தாப்பு உள்ளிட்டவற்றை அளவுக்கு அதிகமாகவே தந்தனர். பூ, , வெற்றிலை, பாக்கு, பழங்கள் வேறு வந்து சேர்ந்தன.

ஆனால் பாரதியார் மட்டும் கவலையுடன் இரவில் விழித்திருந்தார்.

நடுநிசி.  இரு நண்பர்கள் வீட்டுக் கதவைத் தட்டினர். பாரதியார் சென்று கதவைத் திறந்தார்.

அந்த அன்பர்களில் ஒருவர் ஒரணாவும் இரண்டனாவும் உள்ள பணச்சுருளை பாரதியாரின் காலில் வைத்து வணங்கினார். பாரதியார் வியப்புடன், “நான் பணம் வேண்டுமென்று யாரிடமும் சொல்லவில்லையே” என்றார்.

வந்தவர்கள் பணக்காரர்கள் அல்ல. சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்த துணி நெய்யும் தொழிலாளிகள்.

அதற்கு வந்தவர்களில் ஒருவர் பதிலளித்தார்.

அவர் தூங்க முனைந்த போது அவரது கனவில் காளி தோன்றி, ‘என் பகதன் பாரதி நாளை காலையில் தன்னைக் காண வரும் ஏவலர், தொழிலாளிகள், நண்பர்களுக்குப் பரிசளிக்க கையில் காசில்லாமல் நொந்து மனம் வருந்துகிறான்.  உடனெ உன் கையிலுள்ள பணத்தைச் சில்லரைகளாக மாற்றி அவனிடம் சென்று கொடு” என்று சொன்னாள். அவர் உடனே எழுந்து பணத்தைச் சில்லரையாக மாற்றி நண்பர் ஒருவரையும் கூட அழைத்து வந்ததாகக் கூறினார்.

பராசக்தி அருளினால் அந்த தீபாவளி கோலாகலமாக திருப்தியுடன் கொண்டாடப்பட்டது.

2

இன்னொரு நிகழ்ச்சியையும் சகுந்தலா பாரதி குறிப்பிடுகிறார்.

பொன்னுமுருகேசம் பிள்ளை என்பவர் புதுவையில் பாரதியாரின் நல்ல நண்பர்களில் ஒருவர்.

அவரது முத்த மகன் ராஜாபாதர் என்பவர் மேல் படிப்புக்காக பிரான்சுக்குச் சென்றார். படிப்பு முடிக்கும் தருவாயில் யுத்தம் ஆரம்பமானது. யுத்தத்தில் அவர் ஈடுபட வேண்டியதாயிற்று. முருகேசம் பிள்ளை மனம் நொந்தார். ஒரு வழியாக விடுமுறையைப் பெற்ற ராஜாபாதர் நோய்வாய்ப்பட்டிருந்த தன் தந்தையைக் காணக் கிளம்பினார். ஆவலுடன் அவர் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த முருகேசம் பிள்ளைக்கு ராஜாபாதர் வந்த கப்பல் உடைந்து விட்டதாகச் செய்தி வந்தது.

துடிதுடித்துப் போனார் முருகேசம் பிள்ளை.

எல்லோரும், ‘உங்கள் பிள்ளைக்கு ஒன்றும் ஆகாது’ என்று ஆறுதல் கூறினார்கள். ஆனால் அவரோ இதை பாரதி சொன்னால் தான் நான் நம்புவேன் என்று கூறினார்.

பாரதியாருக்கு தர்மசங்கடமாகி விட்டது.

அவர் முருகேசம் பிள்ளையிடம், “நம் ராஜாபாதருக்கு ஒரு கெடுதலும் நேராது. ஆதற்கு நான் ஜவாப்தாரி” என்று கூறி அவருக்கு அறுதல் அளித்தார்.

ஆனாலும் நரம்புத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட முருகேசம் பிள்ளை சில நாட்களில் உயிர் துறந்தார்.

ஆனால் பாரதியார் வாக்கு பொய்க்கவில்லை. கப்பல் உடைந்த போதிலும் அதிலிருந்து தப்பித்துச் சில நாட்களில் ராஜாபாதர் புதுவைக்கு உயிருடன் வந்தார். அவரது தாயார் மனம் மிக மகிழ்ந்தார்.

நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு என்பது பாரதியாரின் வாக்கு.

அது பொய்க்கவில்லை.

குவளைக் கண்ணன் என்னும் குவளை கிருஷ்ணமாச்சாரியார் பாரதியாரின் சிறந்த சீடர்களுள் ஒருவர்.

அவரிடம் ஒருமுறை பாரதியார், “நாம் இன்னும் நானூறு வருடங்களுக்குப் பின்னாலே தோன்ற வேண்டியவர்கள். முன்னாலேயே தோன்றி விட்டோம். என்ன செய்வது?” என்று கூறினார்.

ஒரு சமயம் குவளைக் கண்ணன், “மகான்கள் தீர்க்காயுள் இல்லாமல் போய்விடுகிறார்களே ஏன்?” என்று பாரதியாரைக் கேட்ட போது பாரதியார் கூறினார்: “மகான்கள் பூலோகத்திற்கு தேவதூதர்கள். ஜனோபகாரார்த்தமாக அவர்கள் உதிக்கிறார்கள். பூலோகத்தில் அவர்கள் உதித்த காரியம் ஆனதும் இவ்வுலகில்  நிற்கமாட்டார்கள். மறைந்து விடுவார்கள்” என்றார். (ஆதாரம் : பாரதி புதையல் மூன்றாம் பாகம் – பக்கம் – 229)

அவர் வாக்கு அவர் விஷயத்திலும் பொய்க்கவில்லை.

பாரதியாரைப் போற்றுவோம்.!

அவர் புகழ் பரப்புவோம்.!!

**