செங்கோட்டை ஆவடையக்காள் செய்த அற்புதங்கள் (Post No.13,968)

Written by London Swaminathan

Post No. 13,968

Date uploaded in London – 4 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 செங்கோட்டை ஆவடையக்காள் செய்த அற்புதங்கள்? (Post No.13,968)

தமிழர்கள்  கூட  அதிகம்  கேள்விப் பட்டிராத  செங்கோட்டை ஆவடையக்காள் பற்றி ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தா ஞானியர் வரலாறு என்ற நூலில் அதிசயமான தகவல்களை நமக்கு அளிக்கிறார்

ஆவடையக்காள் யார் ?

பிராமண வடமா இனப்பெற்றோர்களுக்கு செங்கோட்டையில் பிறந்தார் சொன்னதைச் செய்வாள் ; கொடுத்ததை உண்பாள் ; சிறு வயதிலேயே ஒரு ஞானி போல நடந்து கொண்டாள் . அக்கால வழக்கப்படி பெற்றோர்கள், ஒரு பிராமண இளைஞனுக்கு அவளை சிறுவயதிலேயே  திருமணம் செய்து கொடுத்தனர்

சாந்தி முகூர்த்த நாள் வந்தது ; தோழிகள் அனைவரும் ஆடிப்பாடி அவளை மணவறையைத் திறந்து உள்ளே நிறுத்திவிட்டுக் கதவை மூடினார்கள் ; ஆர்வத்தோடு காத்திருந்த மாப்பிளையை மாலைக் கூடையில் இருந்த ஒரு அரவம் தீண்டியது அவன் அங்கேயே இறந்தான் . மறுநாள் காலையில் தோழிகள் அனைவரும் கதவைத் திறந்தபோது அவள் அதே இடத்தில் அசையாமல் நின்றாள் ; இறந்து கிடந்த மணமகனைப் பார்த்து எல்லோரும் அலறினர் . அவளை வெளியே அழைத்து வந்து விதவைக்கான சடங்குகளை செய்தனர்.

1

முதல் அற்புதம்

அக்காலத்தில் விதவைகள், பொது மக்களின் கண்களில் படுவதைத் தவிர்ப்பதற்காக அதிகாலை இருட்டிலேயே நதிக்குச் சென்று நீராடிவிட்டு வருவது வழக்கம். ஆவடையக்காளும் அவ்வாறே சென்று கீழே கிடந்த மாவிலையால் பல் துலக்கி விட்டு குளித்தாள்; அவள் உடலில் ஆன்மீக எழுச்சி ஏற்பட்டது. ஏனெனில் அவள் உபயோகித்த , மாவிலை சதாசிவ பிரம்மேந்திராளின் குருவான ஐயாவாள் என்னும் யோகி பயன்படுத்திய எச்சில் இலை; அதிலுள்ள எச்சில் ஆவடையக்காளின் நாக்கில் பட்டவுடன் புத்துணர்வு பெற்றாள்; அங்கு மரத்தடியில் ஜபம் செய்துகொண்டிருந்த ஐயாவாள் காலில் விழுந்தாள்.

அவரும் அவளை ஆசீர்வதித்து பிரம்ம சத்யம் ஜகன் மித்ய என்ற உபதேசத்தை அளித்தார். இறைவனே உண்மைப்பொருள்; நாம் காணும் உலகே மாயம் என்பது அதன் பொருள். அதைக் கேட்டவுடன் அவளின் அஞ்ஞான இருள் திரை விலகியது; பேரானந்த ஒளி அவளைச் சூழ்ந்தது. அவர் ஒரு லிங்கத்தையும் பூஜைக்காகக் கொடுத்தார்

****

2

திருவனந்தபுரத்துக்கு ஆவடையக்காள் யாத்திரை சென்றாள். அங்கே நதிக்கரையில் அமர்ந்து சிவலிங்கத்துக்கு வில்வ இலைகளால் அர்ச்சித்தாள்  இவளது புகழ் பரவவே அரசன் ஒரு கூடையில் தங்க இலைகளை அனுப்பினான் . அவளும் பூஜை செய்துவிட்டு வழக்கம்போல ஆற்றில் எறிந்துவிட்டாள்.

பகவத் கீதையில் சமலோஷ்ட காஞ்சன என்று பகவான் கிருஷணர் சொன்னதை சேக்கிழார் போன்ற ஞானிகள் ஓடும் பொன்னும் ஒக்கவே நோக்குவர்  — அதாவது அவர்களுக்கு ஓட்டாஞ்சல்லியும் தங்கத் தகடும் ஒன்றே — என்று தமிழாக்கினார்கள் .

****

3

வேறு ஒரு வட்டார அரசனுக்கு இவளுடைய பெருமை விளங்கியது. தன்னை மணம் செய்துகொள்ளலாம் என்று ஆசை காட்டினார்; அவளும் நேசிப்பது போல நடித்து ஆன்மீக அறிவு ஊட்டவே அரசனும் அவளது சீடன் ஆனார்.

*****

4

பின்னர் திரும்பி வந்து அய்யாவாளின் காலடியில் அமர்ந்தார்; இவளுக்கு அவர் முக்கிய இடம் கொடுத்தது பழைய சீடர்களுக்குப் பொறாமையை உண்டாக்கியது

அவர் இருந்த ஆஸ்ரமம் காவிரிக்கரையில் இருந்தது; சீடர்கள் அனைவரும் நதியின் நடுவிலுள்ள ஒரு திட்டில் ஜபம் செய்து கொண்டிருந்தனர். திடீரென நதியின் நீர்மட்டம் உயரத் துவங்கியவுடன் அனைவரும் ஓடிக் கரைக்கு வந்துவிட்டனர்; ஆவடையாக்களை வேண்டுமென்றே விட்டுவிட்டு வந்தனர்; அவளது உடலில் தண்ணீர் பட்டவுடன் அவளும் புறப்பட்டடாள் ;  ஐயாவாள் கையை உயர்த்தி அங்கேயே நில் என்று சைகை காட்டினார். அவளும் அப்படியே நின்றாள்; மூன்று நாட்களுக்குப் பின்னர் வெள்ளம் வடிந்தது;  அவள் ஒரு பாதிப்பும் இல்லாமல் வழக்கம்போலத் திரும்பிவந்தாள் . அவளுடைய பெருமையை சீடர்களும் அறிந்து குருவைப் போலவே மதிப்பு கொடுத்தார்கள்

*****

5

ஆவடையக்காளின் பெருமையை ஐயாவாள் சொன்னவுடன் அவளைக் காண பக்தர்கள் திரண்டுவந்தனர். அவர் பாடிக்கொண்டே வாழ்ந்தார்; உபநிஷத்துக்களின்  கருத்துக்கள் அவரது பாடல்களில் இழையோடிக் சென்றன.  அவரைக் கேலி செய்தவர்களும் வாயடைத்துப் போயினர்..

ஆவடையக்காளது சமாதி அல்லது மரணம் பற்றிய தகவலெதையும் சுவாமி சிவானந்தா அளிக்கவில்லை

ஐயாவாள் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் காவிரி நதிக்கரையில் இருக்கும் திருவிசை நல்லுரில் பிறந்தவர் ; அவரது காலத்தைக் கொண்டு ஆவடையாக்கள் காலத்தை நாம் அறியலாம் செங்கோட்டைக்கு அவர் சென்றாரா அல்லது காவிரி தீரத்துக்கு ஆவடையக்காள் வந்து அவரை முதலில் சந்த்தித்தாரா என்பதும் நூலில் இல்லை.)

—SUBHAM—

TAGS- செங்கோட்டை, ஆவடையக்காள், அற்புதங்கள்

S Nagarajan Article Index November 2024 (Post No.13,967)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.967

Date uploaded in London – 4 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

S Nagarajan Article Index November 2024

1-11-24 13838   தண்டனை செய்யும் உத்தண்டன், மூதண்டனே கோதண்டன்! (தனிப்பாடல் தமிழின்பம்)                                                                                 2-11-24 13842  வாழ்வை வளமாக்க பாம்பன் சுவாமிகள் அருளிய சஸ்திர பந்தம்! – 1 (1-11-24 ஞானமயம் நிகழ்ச்சியில் திரு ச. நாகராஜன் ஆற்றிய உரை.)

2-11-24 13843 ஆலயம் அறிவோம்  பட்டீச்சுரம்!  – ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்

3-11-24 13847  வாழ்வை வளமாக்க பாம்பன் சுவாமிகள் அருளிய சஸ்திர பந்தம்! – 2 (1-11-24 ஞானமயம் நிகழ்ச்சியில் திரு ச. நாகராஜன் ஆற்றிய உரை.)                                                     4-11-24 13850 நீ வருவாய் என நான் இருந்தேன்: பாடலில் ஒரு உண்மையான சோக சம்பவம்!

5-11-24 13854 S Nagarajan Article Index October 2024.                                                 6-11-24 13687பிரபல நாத்திகரை அயரவைத்த காதல் கீதம்! (16-9-24 கல்கி கட்டுரை).                                                          7-11-23 138360 விஞ்ஞானமா, மெய்ஞானமா, எது சிறந்தது? (29-9-24 கல்கி கட்டுரை).              

8-11-23 138364 பிரார்த்தனையே வலிமை என்ற நோபல் விஞ்ஞானி அலெக்ஸிஸ் காரெல்! 1 (6-11-24 மாலைமலர் கட்டுரை.

9-11-23 138367 பிரார்த்தனையே வலிமை என்ற நோபல் விஞ்ஞானி அலெக்ஸிஸ் காரெல்! 2  (6-11-24 மாலைமலர் கட்டுரை.

10-11-23 13870 மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு!     

            வரமா,   சாபமா?  (ஹெல்த்கேர் அக்டோபர் 24இதழ் கட்டுரை                                                         11-11-24 13874  ஶ்ரீ கோவிந்த தீக்ஷிதர் (10-11-24 ஞானமயம் உரை)                                  12-11-24 13877 காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திஜிக்கு மஹாத்மா   

             காந்திஜியின் கொள்ளுப் பேரன் அனுப்பிய கடிதம்!                              13-11-24 13881 ராமாயணத்தில் வரங்கள் (16) கைகேயி  தசரதனுக்கு 

             அலர்க்கன் என்னும் ராஜரிஷி தனது கண்களைத் தந்தது

             பற்றிக் கூறியது!

14-11-24 13884 ராமாயணத்தில் வரங்கள் (17) ஒரு சாது கேகய ராஜனுக்குக் கொடுத்த வரம்!

15-11-24 13887 ராமாயணத்தில் வரங்கள் (18) காளிந்திக்கு ச்யவனர் கொடுத்த வரம்!                                                   16-11-24 13891 உலகின் முதல் பெண்மணி எலினார் ரூஸ்வெல்ட்! – 1  (12-10-24 மாலைமலர் இதழ் கட்டுரை.)

17-11-24 13894 உலகின் முதல் பெண்மணி எலினார் ரூஸ்வெல்ட்! – 2  (12-10-24 மாலைமலர் இதழ் கட்டுரை.)                                                                                      18-11-24 13898 ஶ்ரீ அன்னை – 1 17-11-2024 அன்று நடந்த ஞானமயம் நிகழ்ச்சியில் திரு ச.நாகராஜன் ஆற்றிய உரை.

18-11-2024 13899  ஆலயம் அறிவோம் – திருக்கழுக்குன்றம் 17-11-24அன்று நடந்த ஞானமயம் நிகழ்ச்சியில் திருமதி பிரஹன்நாயகி சத்யநாராயணன் ஆற்றிய உரை. 

19-11-24 13903 ஶ்ரீ அன்னை – 2 17-11-2024 அன்று நடந்த ஞானமயம் நிகழ்ச்சியில் திரு ச.நாகராஜன்

             ஆற்றிய உரை.

20-11-24 13906 ராமாயணத்தில் வரங்கள் (19) சதி அனசூயை சீதைக்கு

             வரம் அளிக்க முன் வந்தது!

21-11-24 13911 ராமாயணத்தில் வரங்கள் (20) ப்ரம்மா விராதனுக்கு

             வழங்கிய வரம்!

22-11-24 13916 பூமியில் உங்கள் வயது 60 என்றால் புதனில் உங்கள்

             வயது 249! ஓஓ!! 

23-11-24 13922 ஶ்ரீ சத்யசாயிபாபா அருள் மொழிகள்                                                                                                           24-11-24 13925   ஓம் சல்ய தந்திர விசாரதாய நமஹ!  (ஹெல்த்கேர

            கட்டுரை)                                                                     25-11-24 13930 அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை – சாலி ரைட்! – 1 (20-11-24

             மாலைமலர் கட்டுரை)

25-11-24 13933 திருவாதவூர் (ஞானமயம் 24-11-24 உரை)

26-11-24 13934 அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை – சாலி ரைட்! – 2 (20-11-24

             மாலைமலர் கட்டுரை)

27-11-24 13939 ராமாயணத்தில் வரங்கள் (21) சரபங்க மஹரிஷியை இந்திரன் சந்தித்து அவரை

             ப்ரம்ம லோகம் அழைத்துச் செல்ல வந்தது!                                    28-11-24 13944 மனமே தான் எல்லாம்; மன அழுத்தம் மரணத்திலும் கொண்டு

            விடும்! Relax மக்களே! Kalkionline ல் தீபம் இதழில் 18-11-24 அன்று பிரசுரிக்கப்பட்ட

             கட்டுரை 

29-11-24 13948 ஶ்ரீ அன்னை – 1 (ஞானமயம் 24-11-2024உரை

30-11-24 13952   ஶ்ரீ அன்னை – 2 (ஞானமயம் 24-11-2024உரை)

 —subham—-

Sri Ramakrishna on Adi Sankara; Interesting Anecdotes (Post No.13,966)

Image of Adi Sankara

Written by London Swaminathan

Post No. 13,966

Date uploaded in London – 3 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Sri Ramakrishna Paramahamsa is teaching us lot of spiritual truths and practices through the life of Adi Sankara. I have found many interesting  anecdotes or quotes in the book “Teachings of Sri Ramakrishna”. Reading them together will help any spiritual aspirant.

Here are the anecdotes:

1

Sri Sankaracharya had a disciple who had been serving him for a long time but was not still given any instruction by him. Once, while seated alone, Sankara heard the footsteps of someone coming behind. So, he called out, Who is there? The disciple answered, It is I. The Acharya thereupon said, If this “I”  is so dear to you, then expand it to Infinity (i.e. know the universe as yourself) or renounce it altogether.

****

2

After the attainment of Samadhi, some still retain the ego—the “I” of the servant or worshipper of God. Sankaracharya kept the ego of Vidhya (knowledge) for the purpose of teaching others.

****

3

Sankaracharya’s exposition of the Vedanta is indeed true and true also is what Ramanuja speaks of it – the Visishtadvaita philosophy.

****

4

There is a fabled species of birds called HOMA. They live so high up in the heavens and love those high regions so dearly that they never come down to earth. And it is said that they lay eggs in the sky and their young ones are hatched in mid-air as the eggs fall, pulled down by gravity. No sooner these fledgelings find out that they are falling downwards, than they immediately change their course and indistinctively fly upwards towards their home. Men like Narada, Sukadeva, Jesus and Sankaracharya are like these birds.  Even in their boyhood they became free from all attachments to the things of the world and betook themselves to the highest regions of True Knowledge and Divine Light.

****

5

The great Sankaracharya had a foolish disciple who used to imitate his master in all matters.  Sankara uttered Sivoham (I am Siva); the disciple also repeated Sivoham. To correct his disciple’s folly, Sankara one day while passing by a smithy, took a pot full of molten iron and asked the disciple also to do the same. Of course, the disciple could not imitate this act of his master, and thenceforward he left off saying Sivoham. Base imitation is always bad, but to attempt to correct one’s own self by the noble examples of the great ones is always good.

*****

6

Picture of  Sri Ramakrishna

An outcaste was carrying baskets of meat from the slaughter house. On the way he met Sankaracharya who was returning after his bath in the sacred Ganges. It chanced that the outcaste touched the person of the holy man . Sankara was offended and cried out “ You have touched me sirrah!”. The outcaste replied, Sir neither have I touched you, nor have you touched me. Please reason with me and say whether your true Self is the body or the mind or the intellect; tell me  what you truly are. You know that the true Self is not attached to any of the three Gunas of Nature, Satva, Rajas, Tamas. Then Sankara was abashed and had the true awakening.

–subham—

Tags- Sri Ramakrishna , Adi Sankara, anecdotes, imitation , by devotee, outcaste, touch. True Self

CARTOONS FROM DECCAN CHRONICLE UP TO 3122024

CARTOONS FROM DECCAN CHRONICLE UP TO 3 12 2024 ARE POSTED HERE BY LONDON SWAMINATHAN.

THANKS TO  DECCAN CHRONICLE FOR MEANINGFUL , INFORMATIVE AND THOUGHT PROVOKING CARTOONS.

OF ALL THE NEWSPAPERS, DECCAN CHRONICLE STANDS AT THE TOP, BECUASE THEIR CARTOONS  DO NOT HURT ANYONE AND AT THE SAME TIME CRITICISE BAD THINGS.

—SUBHAM–

TAGS- CARTOONS FROM DECCAN CHRONICLE UP TO 3122024

குடிடி பாபா கதை தெரியுமா ? “ ந ஹம், ந தும், தர்பார் கம் ?” (Post No.13,965)

Hindu Devotees Pictures from Daily Mail, year 2014

Written by London Swaminathan

Post No. 13,965

Date uploaded in London – 3 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானக் துகிவா ஸப் ஸம்சாரா, 

ஸுகியா வஹி ஜோ நாம அதாரா”

****

எவ்வளவோ பாபாக்களின் பெயர்களைக் கேட்டிருப்பீர்கள்  குடிடி பாபா-வின் சுவையான கதையைக் கேட்டிருக்கிறீர்களா?

****

குடிடி பாபா யார்?

ற்புதங்களைப் புரிந்த ஒரு சித்தர். அண்மைக்காலத்தில் வாழ்ந்த மஹான் என்று ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தா தனது புஸ்தகத்தில் எழுதியுள்ளார்.. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்

****

குடிடி என்றால் என்ன ?

பஞ்சு வைத்து தைக்கப்பட்ட போர்வையை குடிடி என்பார்கள்; அதன் மீது வண்ணத் துணிகளையும் தைத்து, போர்த்திக்கொண்டு பில்குவா என்னும் இடத்துக்கு. அவர் வந்தார். அது ஆர்ய சமாஜிகளும் காங்கிரஸ்காரர்களும் நிறைந்த வட இந்திய நகரம்.

****

அவருடைய சிறப்புகள் என்ன ?

நாஸ்தீகவாதிகளும் வியக்கும் அற்புதங்களைச் செய்து காட்டினார்.

தொலைதூரத்திலுள்ள பொருளகளை கொண்டுவரும் அதிசய சக்தி அவருக்கு உண்டு.

மூலிகை பற்றிய ஞானம் உடையவர்; அவற்றின் மூலம் நோய்களைத் தீர்த்தார்.

குடிடி பாபா நன்றாகப் பாடி பக்தி இசையைப் பரப்பினார்.

****

அவர் சமாதி ஆனது எப்போது ?

1951-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் தேதியன்று குடிடி பாபா தமது பூத உடலை விட்டு  நீங்கினார் .

அவருடைய ஜாதி, மதம், இனம், முதலியவை பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியாது; ஆயினும் அவர் பாடியது கிருஷ்ணர் மேலான பக்திப்  பாடல்களே. அவரிடம் மூங்கில் குழாய் ஒன்றும், ஒரு பாத்திரமும் மட்டுமே இருந்தன. மூங்கில் குழாயில் பாலோ நீரோ அருந்துவார்; அதையே இசைக்  கருவியாகவும் பயன்படுத்துவார்

****

முதல் அற்புதம் என்ன?

சிவன் கோவிலில் குடிடி பாபா தங்கி இருந்தபோது ராஜபுதன சிறுவர்களை அழைத்தார். கையில் நூலைக் கொடுத்து    மூ டிக்   கொள்ளுங்கள் என்றார்; கையை   திறவுங்கள் என்றார். திராட்சைப் பழங்களும் சர்க்கரையும் இருந்தது; சிறுவர்கள் உண்டு மகிழ்ந்தனர்.

****

அவர் தன்னைப் பற்றி கூறியது என்ன ?

முப்பது வயது தோற்றமே உடைய அவரிடம் கோமணம் மட்டுமே இருந்தது; அருகில் குடிடி போர்வை இருந்தது; ஆனால் தன்னை அவர் ஷா இன்  ஷா (சக்ரவர்த்தி) என்று அழைத்துக் கொள்ளுவார்; உண்மைதான்! ஆசையே இல்லாத விருப்பு வெறுப்பற்ற அந்த முனிவர் முன்னால், இந்திரனே வந்தாலும் அவன் ஒரு பொருட்டல்ல. அப்படியிருக்கும் போது இவர் இந்திரனுக்கும் மேலானவரே

****

குடிடி பாபாவின் உபதேசம் என்ன ?

இரண்டாவது என்று ஒருவரும் இல்லை; நான் ஒருவன் மட்டுமே; யார் யாருடன் பேசுவது ?  “என்று சொல்லி அத்வைதக் கருத்தினை வலியுறுத்துவார்.” ந ஹம் ந தும் ,தர்பார் கம் ?”

ஞானக் துகிவா ஸப் ஸம்சாரா, 

ஸுகியா வஹி ஜோ நாம அதாரா “

உலகில் எல்லோரும் துன்புறுகின்றனர்.  ஆனால் பகவான் நாமத்தை ஜெபிப்பவன் மட்டுமே சந்தோஷமாக இருப்பான்” என்பது இதன் பொருள்.

****

நாத்தீகர்கள்  முன்னால் நாணயங்கள் வந்த அற்புதம் என்ன ?

பில்குவாவில் நடந்த கூட்டத்தில் இந்து மத சடங்குகளை மட்டம் தட்டிப் பேசிவந்தார்கள்; குடிடி பாபா மெளனம் சாதித்தார்

நாத்தீகர்கள் பாபாஜியை மந்திரவாதி என்பர். அவர்களும் இவரது கூட்டத்துக்கு வருவார்கள்; அவர்களுக்கு முன்னால் சீடன் ஒருவன் அவருக்கு மூங்கில் குழாயில் பாலை ஊற்றினான். அது மறைந்தது; அதற்குப்பதிலாக திராட்சைப் பழம் கொத்து கொத்தாக வந்தது  அவர்கள் முன்னால் பல அ ற்புதங்களைச் செய்வார்  ஒருமுறை அவர்களுக்கு முன்னால் ஒரு சீடனைப் பால் வாங்கிவர அனுப்பினார். அவன் பாலைக்  கொண்டுவந்து மூங்கில் குழாயில் ஊற்றினான்; அதைக் குடித்துவிட்டு அவன் கொண்டுவந்த டம்பளரைத் திருப்பிக் கொடுத்தார் அதைக் குலுக்கு என்றார். ஒரு ரூபாய் நாணயம் வந்தது; இப்படி ஐந்து முறை குலுக்கச் சொன்னார்; ஐந்து ரூபாய் நாணயங்கள் வந்தன; இதை பால்காரன் கடையில் கொடுத்துவிடு என்றார்.

****

காந்தார மாதுளம்  பழம் வந்த அற்புதம் என்ன ?

ஒருமுறை மஹாத்மா ஆத்மாராம்ஜியுடன் குடிடி பாபா தங்கி இருந்தார் அப்போது பெரும் கூட்டம் கூடியது. நாத்தீகர்களின் தலைவர் ஒருவரும் அந்தக்கூட்டத்தில் இருந்தார் பலரும்  ஏதேனும் அற்புதம் செய்யுங்கள் என்று மன்றாடினார். முதலில் உங்களுக்கு என்ன வேண்டும்? என்று சொல்லுங்கள் என்றார்; அந்த வட்டாரத்தில், மாதுளம் பழமே கிடையாது; ஒருவர் காண்டஹார் நகரில் விற்கப்படும் மாதுளம்  பழம் வேண்டும் என்று கேட்டார். தனது கையில் இருந்த ஒருகை க்குட்டையில் அதை வரவழைத்து அவரிடம் கொடுத்தார் ; எல்லோரும் அதைச் சுவைத்துவிட்டு சுவையான பழம் என்று கூறினார்கள்

****

மருத்துவ அறிவுக்குச் சான்றுகள் என்ன ?

குடிடி பாபா பல நோயாளிகளை மூலிகை மூலம் குணப்படுத்தினார்; கந்தகதத்திலிருந்து எண்ணெய் வடித்து மருந்தாகப் பயன்படுத்தினார். அதே கந்தகத்திலிருந்து மற்றவர்களும் முயற்சி செய்தபோது வரவில்லை; அவர்கள் ஏன் எஙகளுக்கு வரவில்லை? என்று கேட்டபோது மணிமந்திரம் ஒளஷதம் மூன்றும்  தெரிந்தால்தான் வரும் என்றார்; சிக்கலான மருந்துகளைத் தயாரிக்க மருத்துவர்களுக்கு உதவினார். பாதரசத்தைக் கெட்டியாக்கி அதை வைத்துக்கொண்டு குடிடி பாபா வானில் பறந்தார். ஒருவருக்கு குழந்தை இல்லை; தனக்கு மகப்பேறு கிடைக்க அருள் புரியவேண்டும் என்று பிரார்த்தித்தவுடன் தங்க பஸ்பத்தைக் குடிடி பாபா கொடுத்தார். அவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைத்தது. இவ்வாறு எண்ணற்ற அற்புதங்களைச் செய்த குடிடி பாபா பற்றி, அவருக்கு சம காலத்தில் வாழ்ந்த சுவாமி சிவானந்தா எழுதுவதால் நாம் அதை அப்படியே நம்பலாம்.

–subham—

Tags- நாத்தீகர்கள் ,பில்குவா  ,குடிடி பாபா , சுவாமி சிவானந்தா, அற்புதங்கள், ந ஹம் ந தும் ,தர்பார் கம்

சந்தானம் சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி – 2 (Post No.13,964)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.964

Date uploaded in London – 3 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

 ஞான மயம் நிகழ்ச்சிகளில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நவக்கிரகக்ங்கள் , சித்த வைத்தியம் பற்றி சுமார் பத்து உரைகளை நிகழ்த்தியவர் சென்னை சந்தானம் சீனிவாசன் )

ஞானமயம் நிகழ்ச்சி 1-12-2024 அன்று சந்தான சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது. திரு ச. நாகராஜன் நிகழ்த்திய உரை இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

சந்தானம் சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி – 2

அடுத்து திரு சந்தானம் சீனிவாசன் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள இன்னொரு புத்தகம் நவகிரகங்கள் – கலைக் களஞ்சியம்

இதன் விலை ரூ 100.  85 பக்கங்கள்

கிடைக்கும் இடம் : http://www.pustka.co.in

தொலைபேசி எண் 91 7418555884 

இந்த நூலுக்கு அவர் வழங்கியுள்ள முன்னுரை இது:

நவகிரகங்கள் – கலைக் களஞ்சியம்

தமிழ் உலகில், ‘நவகிரகங்கள் – கலைக் களஞ்சியம்’ என்ற இந்த நூலை சமர்ப்பிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இளமை முதல் ஜோதிடத்தில் ஒரு ஈடுபாடு எனக்கு உண்டு. மதுரையில் தினமணியில் ராசிபலன் எழுதி வந்த திரு ரங்கநாத ஜோசியர், காரைக்குடியைச் சேர்ந்த, ஓலைச் சுவடிகள் மூலம் சித்த வைத்தியம், ஜோதிடம் இவற்றை நுணுக்கமாக அறிந்து எங்களுக்குக் கூறி வந்த, ஶ்ரீ கிருஷ்ண ஐயர், முகத்தைப் பார்த்தவுடன் வருங்காலம் உரைக்க வல்ல மதுரை காளி ஜோஸியர் உள்ளிட்டோருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டதால் பல விஷயங்களை அறிந்து கொண்டேன்.

பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட ஶ்ரீ ஐயப்பனின் விக்ரஹத்தை மீண்டும் கண்டெடுத்து அச்சன்கோவிலில் பிரதிஷ்டை செய்து அச்சன்கோவிலை நிர்மாணித்த ஆயக்குடி ஶ்ரீ ஸ்வாமிஜி கிருஷ்ணா அவர்கள் எங்கள் குடும்பத்தினருக்கு குரு. அவர் அருளால் பல தெய்வீக நுட்பங்கள் விளங்கின.

இது தவிர பல பழம் பெரும் ஜோதிட புத்தகங்கள், சாஸ்திர நூல்கள் இவற்றையும் இல்லத்தில் எனது நூலகத் தொகுப்பில் சேர்க்க முடிந்தது.

இதன் பலனாகவே இந்தத் தொடரை என்னால் உருவாக்க முடிந்தது.

லண்டனிலிருந்து வாரம் தோறும் ஒளிபரப்பாகி வந்த ஞானமயம் ஒளிபரப்பில் நவகிரகங்களைப் பற்றிப் பேசும் வாய்ப்பை திரு கல்யாண்ஜி மற்றும் திரு ஸ்வாமிநாதன் ஆகியோர் வழங்கினர்.

உலகெங்கிலுமிருந்தும் இதைக் கேட்ட பல்லாயிரக் கணக்கானோர் இந்த உரைகளை ரசித்துக் கேட்டதோடு பயனுள்ள உரைகள் என்று பாராட்டினர்.

இவை உடனடியாக கட்டுரைகளாக லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களின் www.tamilandvedas.com  பிளாக்கிலும் பிரசுரிக்கப்பட்டன.

இந்த நூலை உருவாக்குவதில் இவர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அனைவருக்கும் எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

அடுத்து உரைகளை நூல் வடிவில் ஆக்க உதவி செய்த திரு ச.நாகராஜன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

இவற்றைத் தொகுக்கும் போது பல்வேறு விதங்களில் எனக்கு உதவி செய்த எனது மனைவி, மகன்கள், மகள், மருமகள்கள், சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக!

இதைப் படித்து அவ்வப்பொழுது என்னைப் பாராட்டி ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி.

இதை டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

சென்னை                          சந்தானம் சீனிவாசன்

31-7-2023

இதற்கு அடியேன் வழங்கியுள்ள அணிந்துரை இது:

வேத அங்கங்கள் ஆறில் ஜோதிடமும் ஒன்று. இது  மிக அகன்ற ஆழமான நுட்பமான கலை.

மற்ற கலைகள் எல்லாம் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே உள்ளன. மிகவும் தேவையான காலத்தில் அவை உதவாது. ஆனால் வைத்தியம்,ஜோதிடம், மந்திரம் ஆகியவையே உயிர் காக்கும் கலைகள் என்று கீழ்க்கண்ட சுபாஷிதம் கூறுகிறது.

அன்யானி சாஸ்த்ராணி விநோத மாத்ரம்

   ப்ராப்தேஷு காலேஷு நதைச்ச கிஞ்சித்

சிகித்ஸித ஜ்யோதிஷ மந்த்ரஹதா

   பதே பதே ப்ரத்யய பாவஹந்தி

மனிதனின் வாழ்வில் அன்றாடம் தோன்றும் பிரச்சினைகள் ஏராளம்.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தத்துவஞானிகளுல் ஒருவரான டபிள்யூ. டபிள்யூ. பார்ட்லி ஆங்கிலத்தில் ஒரு சுவையான சிறு அறிவுரையைத் தருகிறார் இப்படி:

For every ailment under the Sun

There is a remedy, or there is none;

If there be one, try to find it;

If there be none, never mind it.

 ― W.W. Bartley

ஆதவனுக்குக் கீழுள்ள மனிதனின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு அல்லது இல்லை. உண்டென்றால் அதைக் கண்டுபிடி; இல்லையென்றால் அதைப் பற்றிக் கவலையே படாதே என்பதே இதன் பொருள்.

ஆனால் ஹிந்து சாஸ்திரங்களோ ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு; ஒரு பரிகாரம் உண்டு என்று திடமாகக் கூறுவதோடு வழிமுறைகளையும் விளக்குகின்றன.

அந்த வகையில் நமது வாழ்வில் ஒரு பெரும் பங்கை வகிக்கும் நவகிரகங்கள் நல்லனவற்றையும் தீயனவற்றையும் நமக்கு நல்கின்றன – நமது பழைய நல்ல மற்றும் தீய வினைகளுக்கு ஏற்ப!

ஆனால் தீமையான விளைவுகள் ஏற்படக்கூடிய சூழ்நிலையில் அவற்றை மாற்றவோ அல்லது குறைந்த விளைவுகளை மட்டும் நம்மை அதிகம் பாதிக்காதபடி ஏற்படுத்தவோ நவகிரக வழிபாடு விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வழிபாட்டிற்கு நவகிரகங்களைப் பற்றிய உரிய ஞானம் நமக்கு வேண்டும்.

அதற்கு இந்த நூல் மிக அருமையாக உதவி செய்கிறது.

 நவகிரகங்களைப் பற்றிய அரிய விவரங்களை இது தருகிறது. ஆகவே பிரச்சினைகளைத் தீர்க்கும் கலைக்களஞ்சியமாக அமைகிறது.

வாழ்க்கையை நலமுள்ளதாகவும், வளமுள்ளதாகவும் ஆக்குவதற்கு உதவும் நூல்கள் மிகச் சில தான். அவற்றில் மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது இந்த நூல்

இதை நமக்கு அளிக்கும் திரு சந்தானம் சீனிவாசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தனது ஆழ்ந்த அறிவுடன் அனுபவத்தைக் குழைத்து அவர் இந்தக் கட்டுரைகளை உருவாக்கியுள்ளார்.

இதை நம்மில் ஒவ்வொருவரும் படித்து மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரியப்படுத்தினால் அது அவர்களுக்கு நாம் செய்யும் பெரிய உதவியாக அமையும்.

நவ கிரகங்களைப் பற்றி அறிவோம்; உரிய முறையில் வழிபடுவோம். வளமான வாழ்வைப் பெறுவோம்.

நன்றி வணக்கம்.

பங்களூர்                                                       ச.நாகராஜன்

31-7-23

இந்த நூலில் உள்ள அத்தியாயங்கள் 10

அத்தியாயங்கள்

 1. சூரியனே போற்றி!

 2. அம்புலிமாமா வாவா!

 3. மங்களம் தரும் அங்காரகன்!

 4. புத்தி தரும் புதன்!

 5. குரு பகவான்!

 6. சௌபாக்யம் அருளும் சுக்கிரன்!

 7. சனீஸ்வர பகவான்!

 8. ராகு பகவான்!

 9. கேது பகவான்!

10. நவக்ரஹ மஹா மந்த்ரம்!

பெயருக்கேற்ப இது நவகிரகங்கள் பற்றிய ஒரு கலைக்களஞ்சியம் என்பதில் ஐயமில்லை.

அவரது நினைவைப் போற்றுவோம். அவருக்கு நமது அஞ்சலியைச் செலுத்துவோம்.

நன்றி, வணக்கம்.

***

tags– சந்தானம் சீனிவாசன்,  அஞ்சலி – 2,  நவகிரகங்கள் – கலைக் களஞ்சியம்

HINDU CROSSWORD 21224 (Post No.13,963)

Written by London Swaminathan

Post No. 13,963

Date uploaded in London – 2 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 1  2    3
       
 4      
    5  
 6      
       
7      
A      
D      
8      

Yellow colour words- Across

1.Lord Krishna shifted his capital to this Gujarat port city

4.Persian word for Pomegranate

6. The Sanskrit word …….. has multiple meanings, including “pleasant, sweet, snow, beautiful, clouds, morning dew“. It is also the origin of the Indian name …….. which is primarily given to girls. In Tamil also it means cloud.

7.Son in all Indian languages

8.World famous Indian caves with old paintings and Buddha sculptures.

*****

Orange brown words – Down

1.Buddhists’s Holy book

2.Ice Linga of Lord Shiva in this cave in Kashmir

3. Capital of Tripura state in India

5.It means religious debt or religious obligation in Sanskrit  owards Deva/God, Pitru/ancestors and Rishis/seers

*****

Ujjayanta palace in the capital city, Tripura

HINDU CROSSWORD 21224 answer

D 1WA 2RAKA 3
H M   G
A 4NAR  A
M R R 5 R
M 6ANJU T
A A N A
P 7UTRA L
A H   A
D      
A8JANTA 
D 1WA 2RAKA 3
H M   G
A 4NAR  A
M R R 5 R
M 6ANJU T
A A N A
P 7UTRA L
A H   A
D      
A8JANTA 

–subham—

Tags– Hindu Crossword21224

LAST SUNDAY GNANAMAYAM BROADCAST 1-12-2024


ON SUNDAY 1-12-2024 FOLLOWING PEOPLE TOOK PART IN THE GNANAMAYAM BROADCAST FROM LONDON.

POSTED BY LONDON SWAMINATAN ON 2nd  DECEMBER 2024.

GNANAMAYAM SUNDAY BROADCAST 1-12-2024

TIME:  ONE PM LONDON TIME; 6-30 PM IST

VIA ZOOM, FACE BOOK, YOU TUBE

JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

PRAYER BY MRS HAMSINI RAJARAM FROM IRELAND

***

World Hindu News in Tamil presented by Vaishnavi Anand from London

***

Talk by Bengaluru Nagarajan on Books written by Late Srinivasan’s

***

Talk by Brahannayaki Sathyanarayan on SRI VAIKUNDAM temple from Bengaluru

***

Talk on Navagrahas by Chennai Srinivasan; Rebroadcast in Memory of Late Santanam Srinivasan .

***

Tiruppugaz songs recorded by Kalyanji

***

Anchored by London Swaminathan

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

சென்னை சந்தானம் சீனிவாசன் நூல்கள்

—subham—

Benglauru Nagarajan spoke on Late Chennai Srinivasan’s two books.

Sri Kalyanasundara Sivacharya did play Late Srinivasan’s broadcast on Mars graha (Angaraka)

Mrs Anand

Mrs Hamsini Rajaram, Ireland

London swaminathan

Mrs B Sathyanarayanan

–subham—

tags- LAST SUNDAY, GNANAMAYAM BROADCAST, on 1-12-2024 

QUIZ நாம தேவர் QUIZ (Post No.13,962)

Written by London Swaminathan

Post No. 13,962

Date uploaded in London – 2 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1.நாம தேவர் யார், எங்கே எப்போது பிறந்தார் ?

அவர் மகாராஷ்டிரத்தில் 1269-ஆம் ஆண்டு  பிறந்தார் . பெரிய ஞானி; இறைவன் மீது பக்திப்பாடல்களைப் பாடிய பெரியவர் . அவர் நர்சி என்னும் கிராமத்தில் பிறந்தார் . ஹிங்கோலி , றிசாத் என்னும் இரண்டு ஊர்களுக்கு இடையே உள்ளது

****

2.நாமதேவருடைய குடும்பம் என்ன தொழில் செய்தது ?

அவருடைய குடும்பம். தையல்கார குடும்பம். அவர்கள் தையல் தொழிலைச் செய்தனர்.  வருமானத்தைப் பெருக்குவதற்காக விட்டோபா கோவில் கொண்டுள்ள பண்டரீபுரத்துக்குக் குடியேறினர்.

****

3.நாமதேவர் கற்றது என்ன ?

இரண்டு வயதில் அவர் சொன்ன பிழையற்ற முதல் சொல் விட்டல. ஏழு வயதில் அவர்  பஜனை செய்வதற்கான தாளக் கருவிகளை செய்து பஜனை செய்யத் துவங்கினார் . பள்ளிப்படிப்பைப் புறக்கணித்தார். பிரஹலாதன் போல சிறு வயதிலிருந்தே விட்டல நாமத்தைச் சொல்வதில் இன்பம் கண்டார்.

*****

4.நாமதேவருடைய மஹிமையை தாயார் அறிந்தது எப்படி ?

விட்டோபா கோவிலுக்கு நாமதேவரை அவரது தாயார் தினமும் அழைத்துச் சென்று நைவேத்தியங்களைப் படைப்பார். ஒரு நாள், வேலை மிகவும் இருந்ததால் நாமதேவரிடம் நைவேத்தியத்தைக் கொடுத்து அனுப்பினார். அவரும் இறைவன் முன்னால் அதை வைத்துவிட்டுக் காத்திருந்தார். விடோபா வரவில்லை; விம்மி விம்மி அழுதார் ; அப்போது இறைவனே வந்து அதைச் சாப்பிட்டார் . இதைத் தாயாரிடம் சொன்னபோது அவர் நம்பவில்லை மறுதினமும் சிறுவனிடம் நைவேத்தியத்தைக் கொடுத்தனுப்பி, மறைவாக பின்னே தொடர்ந்து சென்று பார்த்தார். இறைவனே வந்து அதை உண்டதைக் கண்டு அதிசயித்தார்.

****

5.தந்தையார் அவருக்கு கொடுத்த வேலை என்ன ? அவர் என்ன செய்தார் ?

திருமணமாகியும் குடும்பத்தில் பற்று இல்லாமல் விட்டல நாமம்  ஜெபிப்பதிலும் பஜனை செய்வதிலும் நாமதேவர், காலத்தைக் கழித்தார். இவருக்கு வேலை  கொடுத்து வெளியே அனுப்புவதற்காக  புதிய துணிகளைக் கொடுத்து கடைத்தெருவுக்கு அனுப்பினார்; அவர் துணியை விற்காமல் ஒரு கல்லினை இறைவன் என்று சொல்லிக் காவலுக்கு வைத்து விட்டு பஜனை செய்தார். துணிகள் அப்படியே இருந்தன . மராத்திய மொழியில் கல்லுக்குத் தொண்டியா என்ற சொல்லும்ஒரு ஆள் என்றும் பொருள். இரவில் வீட்டுக்குத் திரும்பிய போது தந்தை கேட்ட கேள்விக்கு தொண்டியாவை நிறுத்திவிட்டு வந்ததாகச் சொன்னார். மறு நாள் போனபோது அந்த இடத்தில் துணிகள் இல்லை. உடனே தொண்டியாவைக் (கல்லைக் ) கொண்டுவந்து ஒரு அறையில் பூட்டினார். தந்தை மீண்டும் கேட்டபோது துணிகள் மாயமாய் மறைந்துவிட்டதால் தொண்டியாவைக் அறையில் பூட்டி வைத்ததாகச் சொன்னார். கதவைத் திற அவனைப் பார்க்கிறேன் என்று சொன்னவுடன், தந்தை திட்டப்போகிறார் என்று பயந்து கொண்டே கதவைத்Nதிறந்தார். உள்ளே இருந்த கல் தங்கக் கட்டியாக மாறியிருந்தது. இந்த அற்புதம், அவர் பெரிய யோகி என்பதைக் காட்டியது.

****

6.நாமதேவரின் புகழ்பெற்ற தோழர் – சகா யார் ?

மஹாராஷ்டிர பஜனைகளில் ஒலிக்கும் போற்றி நிவ்ருத்தி ஞானதேவ் சோபான முக்தாபாய் ஏகநாத  நாமதேவ் துகாராம் என்பதாகும். இதன் பின்னர் சமர்த்த ராமதாசுக்கு போற்றி சொல்லுவார்கள் அப்படிப் புகழ் வாய்ந்த ஞானேஸ்வர், மற்றும் அவருடைய அண்ணனான  நிவ்ருத்தியின் நட்பினால் பெரும் நன்மை அடைந்தவர் நாமதேவ். ஞானேஸ்வருடன் இறுதிவரை தல யாத்திரை செய்தார்.

****

7.நாமதேவரின் குரு யார்?

நாமதேவர் வாழ்ந்த காலத்தில் கோரா என்ற ஞானியும் வாழ்ந்தார்; அவர் தொழிலால் குயவர். ஒரு முறை பக்குவப்படாத பக்தர்கள் யார் என்று சிலர் கேட்டனர். அந்தக்  கூட்டத்தில் நாமதேவரும் இருந்தார் . பிரம்மத்தை உணர்ந்து கொள்ளாத பாத்திரங்கள்  (மட்கலங்கள்) யார் என்று கண்டுபிடிக்க அவர் ஒவ்வொருவர் தலையிலும் சந்தன கட்டையால் தட்டினார். நாம    தேவர் தலையைத் தட்டியபோது அவர் அலறினார்; அவர் ஒருவர்தான் பக்குவப்படாத மட்கலம் என்று எல்லோரும் நகைத்தனர். பின்னர் அவர் தனக்கும் ஒரு குரு தேவை என்பதை உணர்ந்தார் . விட்டோபாவிடம்/ இறைவனிடம் முறையிட்டார். இறைவனே அவருக்கு  விசாபகேச்சர் என்ற ஞாநியைக் காட்டினார் அவரிடம் நாமதேவர் சரணடைந்து உபதேசம் பெற்றார்.

****

8.நாமதேவர் எங்கே சமாதி அடைந்தார் ?

ஞானதேவர்,  தான் ஆலந்தி என்னும் இடத்தில் சமாதி அடையப்போவதாக அறிவித்தவுடன் அவருடன் நாமதேவரும் சென்றார். நிவ்ருத்தி, ஞானதேவர், சோபானர், அவர்களின் தங்கை முக்தாபாய் ஒவ்வொருவரும் உலகை விட்டு நீங்கும்போதும் நாமதேவர் அருகில் இருந்தார்; அவர்களின் பிரிவினையும் பாடிவைத்தார்  இவையாவும் ஓராண்டுக் காலத்துக்குள் அடுத்தடுத்து நடந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.; நாமதேவரும் இருபத்தாறாவது வயதில் (1295-ஆம் ஆண்டு) பண்டரீபுரத்தில் சமாதி அடைந்தார்.  சிலர் 1350-ஆம் ஆண்டு என்றும் சொல்கிறார்கள்.

****

9.அவர் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு ? அவர் பாடல்களில் ஜனாபாயை பாராட்டியது ஏன்?

நாமதேவர் புஸ்தகம் எதுவும் எழுதவில்லை. ஆயினும் அவர் பாடிய நாலாயிரம் பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அவர் நீண்ட காலம் பஞ்சாபில் தங்கி யாத்திரையும் தியானமும் செய்தார்; அவருடைய பாடல்கள் சீக்கியர்களின் புனித நூலான ஆதிக்கிரந்தத்திலும் இடம்பெற்று இருக்கிறது.

நாமதேவரின் குடும்பத்தில் அவருக்குப் பணிவிடை செய்த ஜனாபாய் என்ற பெண்ணும் அடக்கம்  அவர் பல பாடல்களில் ஜனி என்ற பெயரில் அவருடைய பக்தியைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

ஜனாபாயும் பாடல்களைப் பாடினார்; எந்த விலங்காகப் பிறந்தாலும் பண்டரீபுரத்தைத் தரிசிக்கவேண்டும்; நாமதேவருக்குப் பணிவிடை செய்யவேண்டும் என்று ஜனாபாய் பாடினார்.

****

10.நாமதேவரின் போதனைகள் என்ன ?

நாமதேவரின் மார்க்கத்தை வர்கரி சம்பிரதாயம் என்று சொல்லு வார்கள்; அதாவது பக்தி மார்க்கம்; கீர்த்தனையும் யாத்திரையும் இறைவனை அடைவதற்கான சிறந்த வழிகள் என்கிறார். இன்றும்  பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் பண்டரீபுரத்துக்குச்

சென்று விடோபாபாவை /இறைவனைத்  தரிசிப்பதை பக்தர்கள் ஒரு இயக்கமாகவே நடத்தி வருகின்றனர்.

—subham—–

Tags—விடோபாபா,வர்கரி சம்பிரதாயம், ஜனாபாய், . தையல்கார குடும்பம், பண்டரீபுரம், ஆதிக்கிரந்தம்

ஆலயம் அறிவோம்! ஶ்ரீ வைகுண்டம் தலம் (Post No.13,961)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 13,961

Date uploaded in London – –2 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

1-12-2024 அன்று ஒளிபரப்பாகிய ஞானமயம் நிகழ்ச்சியில் நிகழ்த்தப்பட்ட உரை

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

புளிங்குடிக் கிடந்து வரகுண மங்கையிருந்து

    வைகுந்தத்துள் நின்று

தெளிந்த என் சிந்தையகங் கழியாதே

   என்னை ஆள்வாய்! எனக்கருளி

நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப

   நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப

பளிங்கு நீர் முகிலின் பவளம் போல்

   கனிவாய் சிவப்ப நீ காண வாராயே

–    நம்மாழ்வார் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றான ஶ்ரீ வைகுண்டம் தலமாகும். நவதிருப்பதிகளுள் முதல் திருப்பதியாக அமைவதும் இதுவே,

இத்திருத்தலம் தமிழ்நாட்டில் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குப் போகும் வழியில் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

விண்ணுலகில் இருக்கும் ஶ்ரீ வைகுண்டம் என்ற பெயரைத் தாங்கி பூலோகத்தில் இருக்கும் திருத்தலம் இது.

மூலவர் திருநாமம் : ஶ்ரீ வைகுண்ட நாதர் (நின்ற திருக்கோலம்)_

உற்சவர் : ஶ்ரீ கள்ளப்பிரான்

தாயார்: வைகுந்தவல்லி, சோரநாத நாயகி

தீர்த்தம் : தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம்  மற்றும் கலச தீர்த்தம்

இத்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. பிரம்மாண்ட புராணத்தில் சொல்லப்படும் வரலாறு இது. பிரம்மா எழுந்தருளியுள்ள சத்திய லோகத்தில் ஒரு சமயம் பிரளயம் ஏற்பட்டு எங்கும் நீர் சூழ்ந்திருந்த நேரத்தில் சோமுகாசுரன் என்னும் அசுரன் ஒருவன் அவரிடமிருந்து வேதங்களைத் திருடிச் சென்று விடுகிறான்.

பிரம்மா இங்குள்ள கலச தீர்த்தத்தில் நீராடி வைகுந்தத்தில் உள்ள நாராயணனை நோக்கித் தவம் புரிய நாராயணன் வேதங்களை அவரிடம் மீட்டுத் தருகிறார்.

வைகுண்டநாதராய் அவர் இங்கு எழுந்தருளியிருக்கிறார்.

இன்னொரு வரலாறு இது. வைகுண்டநாதரின் பக்தனான காலதூஷகன் என்னும் திருடன் வைகுண்டநாதரைத் தொழுத பின் தனது திருட்டில் பாதியை தர்மத்திற்குச் செலவிட்டு வந்தான். ஒரு சமயம் அவன் அரண்மனையில் திருட முயன்ற போது அவனுடன் சென்றவர்கள் சிக்கிக் கொள்ள, காலதூஷகனை அரண்மனை சேவகர்கள் தேடலாயினர்.இதை அறிந்த காலதூஷகன் வைகுந்தநாதரைப் பணிய அவன் வேஷத்தில் வைகுந்தநாதரே அரண்மனையில் அரசன் முன் சென்று நின்றார். மன்னன் காலதூஷகனிடம் திருடியதைப் பற்றிக் கேட்க அரசனின் குற்றங்களை வரிசையாக அடுக்கினார் வைகுண்டநாதர். செல்வத்திற்கு சத்ருக்கள் நால்வர். தர்மம், அக்னி, சோரன், ராஜா ஆகிய நால்வரே அவர்கள். நீ கொஞ்சமேனும் தர்மத்தைச் செய்யவில்லை. ஆகவே தான் இந்த நாடகத்தை நாம் ஆடினோம்” என்றார் வைகுந்தநாதர். திடுக்கிட்ட அரசன் இப்படிச் சொல்வது யார் என்று யோசிக்க அரசனுக்கும் காலதூஷகனுக்கும் தரிசனம் தந்து மறைந்தார் வைகுண்டநாதர். திருடன் வடிவில் வந்ததாலும் பக்தர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதாலும் அவர் கள்ளபிரான் என்று அழைக்கப்படலானார்.

Pictures from trip advisor; thanks.

காலகிரமத்தில் கோவில் இடிபாடு அடைந்தது. ஒரு சமயம் பாண்டிய மன்னனின் அரண்மனைப் பசு ஒன்று ஓரிடத்தில் தினமும் பால் சொரிந்து வர அங்கு சென்ற பாண்டியன் அந்த இடத்தில் இருந்த விக்ரஹத்தைக் கண்டு அதை மீண்டும் கோவில் எழுப்பி நிறுவினான்.

இங்குள்ள கள்ளபிரானின் சிலையை வடிவமைத்த சிற்பி அதன் அழகில் சொக்கி கன்னத்தைக் கிள்ளி விட்டான். ஆத்மார்த்தமாக செய்யப்பட்ட அந்தக் கிள்ளலை கள்ளபிரான் ஏற்றுக் கொண்டார். அந்தக் கிள்ளலின் வடுவை இன்றும் சிலையில் காணலாம்.

நவத்திருப்பதிகளுள் முதலாவதாக அமையும் இதை முதலில் அடைந்து வழிபட்டு பின்னர் இதர தலங்களான  வரகுணமங்கை எனப்படும் நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி (தேவர்பிரான்) இரட்டை திருப்பதி (அரவிந்தலோசனார்) பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகிய தலங்களை ஒரே நாளில் தரிசிப்பது மரபாகும்.

இங்குள்ள முகப்பு கோபுரத்தின் அடி 136 அடியாகும். கோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால் நாம் காண்பது பெரிய மண்டபமும் அதன் நடுவே ஒரு காட்சி மண்டபத்தையும் நாம் காணலாம்.

மூலவர் வைகுண்டநாதர் சந்திர விமானத்தின் கீழ் ஆதி சேஷன் குடைபிடிக்க  நான்கு கரங்களுடன் மார்பில் மஹாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி காட்சி தருகிறார். ஆதிசேஷன் நின்றவாறே கொடைபிடிக்கும் காட்சி இந்தத் திருத்தலத்தில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தகுந்தது. வைகுண்டநாதருக்கு இங்கு தினமும் ஆறு கால பூஜைகள் நடத்தப்படுகின்றன.

கோவிலின் உள்ளே உற்சவர் கண்ணபிரான் ஶ்ரீ தேவி மற்றும் பூதேவியுடன் காட்சியளிக்கிறார். வைகுந்தநாயகியும் சோரநாத நாயகியும் தனித்தனி சன்னிதிகளில் காட்சி அளிக்கின்றனர்..

பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் அற்புதமான சிற்பங்கள் உள்ளன. சித்திரை  மற்றும் ஐப்பசி மாதங்களில் ஆறாம் நாள் சூரியனின் ஒளிக் கிரணங்கள் ஶ்ரீ வைகுண்டநாதர் மீது விழுகின்றது. அதற்கு ஏற்றாற் போலக் கொடிமரம் சற்றே விலகி உள்ளது.

ஆண்டு தோறும் கருடசேவை திருவிழா உள்ளிட்ட ஏராளமான திருவிழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. இவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

இத்தலம் பற்றி ‘புளிங்குடி கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்தில் நின்று’ என்று நம்மாழ்வார் மங்களாசாஸனம் செய்துள்ளார். இதற்கு விளக்கம் அளித்துள்ள  வைணவ ஆச்சாரியரான அழகிய மணவாளப் பெருமாள், புளியங்குடியில் படுத்த கோலமாகக் கிடந்தும், வரகுணமங்கையில் அமர்ந்தும், வைகுண்டம் தலத்தில் நின்றும் காட்சி தருகிறார் எனக் கூறுகிறார்.

சோரநாதர் மீது இயற்றப்பட்ட சோரநாத சுப்ரபாதம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

பிரிட்டிஷாரை எதிர்த்துப் போர் புரிந்த வீரபாண்டிய கட்டபொம்மன் இத்தலத்தைத் தனது கோட்டையாகப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ வைகுண்டநாதரும் வைகுந்த நாயகியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

 –subham—

 tags- ஆலயம் அறிவோம்,  ஶ்ரீ வைகுண்டம் தலம்