
Post No. 14,208
Date uploaded in Sydney, Australia – –16 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கல்கி ஆன் லைன் இதழில் 11-2-25 அன்று வெளியானது.
MOTIVATION
நம்முடைய கேள்விகளும், அறிஞர்களின் பதில்களும்!
ச. நாகராஜன்
கேள்விகள் நம்முடையவை. பதில்கள் பல்வேறு அறிஞர்களுடையவை!
1. எந்த உரையாடல்- பேச்சு -மோசமானது?
உரையாடலில் மோசமானது விவாதம் தான்! – ஜோனாதன்
ஸ்விப்ட்
2. எவனுடன் போட்டி போடக் கூடாது?
எவனிடம் இழப்பதற்கு ஒன்றுமே இல்லையோ அவனிடம் போட்டி போடக் கூடாது. – பல்டாசர் க்ரேசியன்
3. உறுதி என்பது என்ன?
ஏழு தடவை விழுந்தாலும் எட்டாவது முறை எழுந்து நிற்பது!
– ஜப்பானியப் பழமொழி
4. வணிகத்தில் வெற்றி பெறுவது எப்படி?
வணிகத்தில் வெற்றி பெற – தைரியமாக இரு, முதலாவதாக
இரு, வித்தியாசமாக இரு. – யாரோ
5. பொறுமையாக இருப்பவனுக்கு என்ன பயன்?
மிகவும் பொறுமையாக இருப்பவன் எல்லாவற்றிலும் நிபுணன் ஆவான்! – ஜார்ஜ் சவில்
6. அதிக அதிகாரம் உள்ளவன் அதை என்ன செய்ய வேண்டும்?
அதிக அதிகாரம் உள்ளவன் அதை குறைவாகப் பயன்படுத்த
வேண்டும்! – செனேகா
7. பார்வைகள் பலவிதமாக இருப்பது எப்படி?
மூன்று பேர்கள் செங்கலை அடுக்கிக் கொண்டிருந்தார்கள்.
முதலாமவனிடம் கேட்கப்பட்ட கேள்வி: நீ என்ன செய்து
கொண்டிருக்கிறாய்?
அவன் கூறினான்: செங்கல்லை அடுக்கிக் கொண்டிருக்கிறேன்.
இரண்டாவது மனிதனிடம் கேட்கப்பட்ட கேள்வி: நீ எதற்காக
வேலை செய்து கொண்டிருக்கிறாய்?
அவனது பதில்: ஒரு நாளைக்கு ஐந்து டாலர் கிடைக்கிறது,
அதனால்!
மூன்றாமவனிடம் கேட்கப்பட்டது : நீ என்ன செய்து
கொண்டிருக்கிறாய்?
அவன் பதில் கூறினான்: நான் ஒரு பெரிய சர்ச்சைக் கட்ட உதவி
செய்து கொண்டிருக்கிறேன். – சார்ல்ஸ் எம். ஷ்வாப்
8. எப்போது ஒரு கடையை திறக்கக் கூடாது?
புன்சிரிப்புடன் பழகத் தெரியாவிடில் ஒரு கடையைத் திறக்காதே! – யூதப் பழமொழி
9. நன்மதிப்பை யார் இழக்க மாட்டார்கள்?
வெற்றி பெற்ற ஒருவன் ஒருபோதும் நன்மதிப்பை இழக்கமாட்டான். – தாமஸ் ஆல்பர்ட் கார்ல் ஃபுல்லர்
10. உயர்ந்த நிலையைப் பெறுவது எப்படி?
உயர்ந்த நிலையைப் பெறுவதற்கான விலை – பொறுப்புடன் இருப்பது! – வின்ஸ்டன் சர்ச்சில்
11. மேலே உயர்வதற்கான வழி என்ன?
பணிவதும் அனைவரையும் தயவுடன் அணுகுவதுமே மேலே உயர்வதற்கான வழி. – பென் ஜான்ஸன்
12. தந்திரம் என்பது என்ன?
ஒரு கருத்தை எதிரிகள் யாரையும் உருவாக்காமல் எடுத்துரைப்பது தான் தந்திரம்! – ஹோவர்ட் டபிள்யூ. நியூடன்
13. நல்ல நடையுடன் எழுதுவது எப்படி?
ஒருவன் நல்ல நடையுடன் எழுத விரும்பினால் அவன் தனது சிந்தனையில் தெளிவுடன் இருக்க வேண்டும். – ஜோஹன் டபிள்யூ வான் கதே
14. அதிஜாக்கிரதையாக ஒருவன் இருந்தால் என்ன நடக்கும்?
அதிஜாக்கிரதையாக செயல்படும் ஒருவன் குறைவாகவே சாதிப்பான்! – ஜோஹன் ஷில்லர்
15. மனித இயற்கையில் ஒருவன் மிகவும் அதிகமாக விரும்புவது எதை?
மனித இயற்கையில் ஒருவன் தன்னை மற்றவர்க்ள் பாராட்டுவதையே அதிகமாக விரும்புகிறான். – வில்லியம் ஜேம்ஸ்
***