விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-6; வித்தக விநாயக  விரைகழல் சரணே ( Post No.14,218)

Written by London Swaminathan

Post No. 14,218

Date uploaded in Sydney, Australia – 18 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-6; final part; நிறைவு 

வள்ளுவனும் அவ்வையாரும் இறைவனின் பாத  கமலங்களைத் தொழுது நூல்களைத் துவக்கியதைக் கண்டோம் ; விநாயகர் அகவலில் அவ்வையார், பாதங்களில் சரணடைந்து நூலை/ துதியை நிறைவு செய்கிறார்

வித்தக விநாயக விரைகழல் சரணே – வரி 72.

அதற்கு முன்னர் ஐந்தெழுத்தின் மகிமையை, பொருளை உணர்த்தி , உயர்ந்த தத்துவங்கள் கூறும் நிலையை அடைய உதவியதாகவும் நன்றிப்  பெருக்குடன் குறிப்பிடுகிறார்.

இது உண்மையில் பலசுருதி ஆகும். யார் யார் எல்லாம் இந்த அகவலைப் பொருள் உணர்ந்து படிக்கிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் கிடைக்கும் நிலை இது

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாட…….

…………………………..

என்னை யறிவித்து எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி யிரண்டுக்கு ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்து அழுத்தியென் செவியில்

எல்லை யில்லா ஆனந் தம்அளித்து

அல்லல் களைந்தே அருள்வழி காட்டி

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

இதோ கடைசி நான்கு வரிகள் :-

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே.

அதற்கு முந்தைய இரண்டு வரிகளில்

திருநீறு பூசிய ,தவ வேடம் தாங்கிய, சிவனடியார்களின் சத் சங்கத்தில் தன்னைச் சேர்த்ததாலேயே இந்த உயர் நிலை கிடைத்தது என்றும் சொல்கிறார். துவக்கத்திலேயே குருவின் பெருமையைச் சொன்னார்; இப்போது சத் சங்கத்தின் / அடியாரின் பெருமையைச் சொல்கிறார்

அதாவது உயர் நிலையை அடைய தொண்டர் குழாத்தில் இருக்கவேண்டும்; அப்படியில்லாவிடில் சாண் ஏறி முழம் சறுக்கிய கதை ஆகிவிடும் .

இதை அவ்வையார், ஆதி சங்கரர் , அபிராமி பட்டர் எல்லோரும் வலியுறுத்துகின்றனர் :

சத் சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்

நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்

நிர்மோஹத்வே நிஸ்ஸலதத்வம்

நிஸ்ஸலதத்வே ஜீவன் முக்தி —— (பாடல் 9, ‘பஜ கோவிந்தம் ஆதி சங்கரர்,’)

பொருள்; ஞானிகளின் சேர்க்கையினால், ஆசைகள் அறவே நீங்கும்; ஆசைகள் நீங்கினால் மோஹம் நீங்கும்; மோஹம் நீங்கினால் சஞ்சலமற்ற திடச் சித்தம் தோன்றும்; இந்த திடச் சித்தம் வந்துவிட்டால் முக்தி கிடைக்கும், அதாவது, உயிர்  வாழும்போதே யோகிகள் ஆகிவிடுவோம்.

****

அவ்வையாரிடம், முருகப் பெருமான் ‘அம்மையே! இனியது எது?’ என்று கேட்டார்; அவ்வை சொன்னார்:

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது! இனிது! ஏகாந்தம் இனிது !
அதனினும் இனிது ! ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது ! அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது! அறிவுள்ளோரை
கனவிலும் நனவிலும் காண்பதுதானே!”

பொருள்: தனிமையில் இருப்பது இனிது. அதைவிட இனிது அந்தத் தனிமையிலும் இறைவனைத் தொழுவது இனிது. அதைவிட இனிது சத்சங்கம், அதாவது ஞானம் படைத்த நல்லோரைச் சேர்ந்து வாழ்வது. எல்லாவற்றையும் விட இனிது கனவிலும் நனவிலும் அந்த பெரியோரை நினைப்பதே! அதாவது அவர்களைப் பின்பற்றுவதே!

இதையே வாக்குண்டாம் என்ற பாடலில் மேலும் தெளிவாகச் சொல்கிறார்:

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே—நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று” —-(வாக்குண்டாம்)

****

வள்ளுவர் அறிவுரை:

தமிழ் முனிவன், தெய்வப் புலவன் திருவள்ளுவரும் திருக்குறளில் பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை எனப் பல அதிகாரங்களில் இந்தக் கருத்தை விளக்குவார்:


ஒருவன் அடையும் பேறுகள் எல்லாவற்றிலும் அரிய பேறு எனப்படுவது தம்மைவிட மூத்த ஆறிவுடையோரப் போற்றித் தமக்கு சுற்றமாகக்கொள்ளும் செயலாகும் ( குறள் 443)


ஏறத்தாழ அவ்வையார், இனியது கேட்கின் தனிநெடு வேலோய் …பாடலில் சொன்ன கருத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டார் வள்ளுவர் !

*****

அருட் பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள்:


“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்” என்று பாடுகிறார்.
சத் சங்கம் வேண்டும் என்பதை வள்ளலார் தூய தமிழில் கூறிவிட்டார்!

****

மாணிக்கவாசகரும் திருமூலரும்இதை அவ்வைக்கு முன்னரே பாடிவிட்டனர்

தாமே தமக்குச் சுற்றமுந்

தாமே தமக்கு விதிவகையும்

யாமார் எமதார் பாசமார்

என்ன மாயம் இவைபோகக்

கோமான் பண்டைத் தொண்டரொடும்

அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு

போமா றமைமின் பொய்நீக்கிப்

புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. 45. யாத்திரைப் பத்து

****

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

தானே தனக்கு மறுமையும் இம்மையும்

தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்

தானே தனக்குத் தலைவனு மாமே.”

என்ற திருமூலர் வாக்கை இங்கு நினைவுகூர்க. இதனால், இறைவனது அடியார் கூட்டம் திருவடிப் பேற்றினை நல்கும் என்பது கூறப்பட்டது.

இந்தப்  பாடல்களில்  பகவத் கீதையில் கண்ணன் சொன்ன உத்தரேத் ஆத்ம நாத்மானம்  (நமக்கு நமே நண்பன் நமக்கு நாமே எதிரி ) கருத்தும் வருவதைக் கண்டு மகிழ்க.

****

இதற்கும் முன்னதாக உபநிஷதம் சொல்லும் வரிகளை அவ்வையார் சொல்கிறார் –

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி யிரண்டுக்கு ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்து அழுத்தியென் செவியில்

எல்லை யில்லா ஆனந் தம்அளித்து

அல்லல் களைந்தே அருள்வழி காட்டி

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

“anor aniyan mahato mahiyan” (Katha Upanisad 1-2-20), meaning “God is smaller than the smallest and greater than the greatest.”

இறைவன் அணுவுக்கும் அணுவானவன்/ சிறியவன்; உலகில் / பிரபஞ்சத்தில் காணப்படும் பெரிய பொருளுக்கும் பெரியவன் என்று கடோபநிஷத் கூறுகிறது.

******

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்து….

யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ”

Brahman beyond speech & thought:

(Anuvaga 4 of Anandavalli) Taitriya Upanishad

When all words turn back as well as Manas, without reaching; he who knows Brahman’s bliss fears not at any time.

மனதுக்கும் சொற்களுக்கும் எட்டாத இறைவனை உணர்பவனே பிரம்மத்தை (கடவுளை) அறிந்தவன் – தைத்ரீய உபநிஷத்

என்பது  தைத்திரீய, உபநிஷத மேற்கோள்.

****

கேனோபனிஷத்தும் இதையே கர்கிறது

“That which cannot be expressed in words but by which the tongue speaks — know that to be Brahman. Brahman is not the being who is worshiped of men.”

சொற்களால் வருணிக்க இயலாது; நாக்கு மட்டும் பேசும்.

அதுதான் பிரம்மம்- இறைவன் –கேனோபனிஷத்

(அதாவது சடங்குகளோ, துதிகளோ வழிகள்- படிகள் மட்டுமே. அதைப்   பாடுவோரும், சடங்குகளை  செய்வோரும் கடவுளை அறிந்தவர்கள் என்று எண்ணிவிடாதீர்கள் )

Kena Upanishad-

****

यद्वाचानभ्युदितं येन वागभ्युद्यते ।

तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ४ ॥

yadvācānabhyuditaṃ yena vāgabhyudyate |

tadeva brahma tvaṃ viddhi nedaṃ yadidamupāsate || 4 ||

4. What speech does not enlighten, but what enlightens speech, know that alone to be the Brahman, not this which (people) here worship.              

உரைகள் மூலம் அது பிரகாசமடைவது இல்லை; ஆனால் அது நமது பேச்சுக்களை ஒளிபெறச் செய்கிறது ; அதுதான் பிரம்மம்/ கடவுள் –கேன உபநிஷத்       

கடவுளை சடங்குகள் மூலம் வணங்குவோர் எல்லாம் கடவுளை அறிந்தவர்கள் அல்ல

ஒட்டு  மொத்தக் கருத்து – ஆயிரம் துதிகளைப் பாடித் துதித்தாலும், ஆயிரம் யாக யக்ஞங்களை செய்தாலும் —  அவைகள் மூலம் மட்டும் இறைவனை அடைய முடியாது

ஆயிரம் ஏணிப்படிகளைக் கடந்து சென்றாலும் சிகரத்தைத் தொடவில்லை- உச்சியை அடையவில்லை (பிரம்மத்தை அடையவில்லை ) என்றே பொருள்..

****

இருள்வெளி யிரண்டுக்கு ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்து அழுத்தியென் செவியில்………

या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी |

यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुने: || B.G.2-69||

yā niśhā sarva-bhūtānāṁ tasyāṁ jāgarti sanyamī

yasyāṁ jāgrati bhūtāni sā niśhā paśhyato muneḥ 2-69

For the Yogi who sees the Self, the objective world does not exist, and so it is night. For the common man who sees the world, the Self does not appear and so it is a night for him.

பகவத் கீதை BG 2.69: எல்லா உயிரினங்களும் பகல் என்று கருதுவது ஞானிகளுக்கு அறியாமையின் இரவாகும், மேலும் அனைத்து உயிரினங்களும் இரவாகக் காணும் பகல் என்பது ஞானிக்கு பகலாகும்.

For the Yogi who sees the Self, the objective world does not exist, and so it is night. For the common man who sees the world, the Self does not appear and so it is a night for him.

இங்கே யோகிக்கும் சாதாரண மனிதனுக்கும் உள்ள வேறுபாடு விளக்கப்படுகிறது

இதை நிஜமான இரவு  பகலொடு ஒப்பிட்டுக் குழம்பிக்கொள்ளக்  கூடாது ;அறியாமை என்பது – இரவு ;ஞானம் என்பது- ஒளி / வெளிச்சம் – பகவத் கீதை 2-69

******

அருள்தரும் ஆனந்தத்து அழுத்தியென் செவியில்

எல்லை யில்லா ஆனந் தம்அளித்து…………

ஏன் ஞானிகள் எல்லோரும் சேரவாறும் ஜகத்தீரே — என்று நம்மை அறைகூவி அழைக்கிறார்கள். அங்கு எல்லையில்லாத ஆனந்தத்தை அனுபவிக்கலாம்  ஒரு உணவு விடுதி பற்றியோ சுற்றுலாத் தலம் பற்றியோ எழுதிய கட்டுரைகளைப்  படித்தால் எப்படியாவது அங்கே போக வேண்டும் என்று நாம் துடிக்கிறோம்  ; அதே போல அடியார்கள் எழுதியதைப் படித்தவுடன் நாமும் எல்லையில்லாத ஆனந்தத்தை அடையத் துதிக்கவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்   பலருக்கும் பிரம்மானந்தா, நித்யானந்தா, விவேகானந்தா, ஆனந்தா , யோகானந்தா என்றெல்லாம் தாய் தந்தையர் பெயர் வைக்கிறார்கள் எல்லையில்லாத ஆனந்தத்தைப் பெற வேண்டும் என்பதே அவர்களுடைய எதிர்பார்ப்பும் கூட .

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ஒரு உபன்யாசத்தில் சொன்னதைப் போல இதை படிக்கப் படிக்க நாளுக்கு நாள் பொருள் விளங்கி ஞானம் பெருகும்.

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை நிறைவு

****

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்

பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்

காதலால் கூப்புவர்தம் கை.– கபிலதேவ நாயனார்

மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை

–சுபம்- –

 Tags–        விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை 6,  நிறைவு

Leave a comment

Leave a comment