வலது பக்கம் ஒருக்களித்துப் படுக்காதே! (Post No.14,205)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,205

Date uploaded in Sydney, Australia – –15 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஹெல்த்கேர் பிப்ரவரி 2025 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

வலது பக்கம் ஒருக்களித்துப் படுக்காதே! முன்னோர்கள் கூறியதை அறிவியல் வியந்து போற்றுகிறது!

ச. நாகராஜன் 

காலம் காலமாக தூங்கும் போது எப்படிப் படுத்து உறங்க வேண்டும் என்பதை நமது அறநூல்கள் மற்றும் வைத்திய நூல்கள் பலவற்றிலும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். 

வலது பக்கம் ஒருக்களித்துப் படுக்காதே என்பது அவர்களின் அறிவுரை.

அவர்கள் கூறிய நூல்களில் எடுத்துக்காட்டிற்காக ஒன்றை போஜன குதூகலம் நூலில் இப்படி காணலாம்.

“சாப்பிட்டு விட்டு உட்கார்ந்தே இருந்தால் தொந்தி அதிகரிக்கும். படுத்தால் உடல் பருக்கும். நடப்பவனுக்கு ஆயுள் வளரும், ஓடுபவனைக் கண்டு மரணம் ஓடும்.

மல்லாந்து படுப்பவன் எட்டு பங்கு மூச்சையும் வலது புறம் ஒருக்களித்துப் படுப்பவன் அதன் இரண்டு பாகங்களை பதினாறு மடங்கு) மூச்சை இழக்கிறான். ஆகையால் இரட்டைப் பங்கு மூச்சை செலவாக்கும் வகையில் சுகமாகப் படுக்க வேண்டும்,. எல்லாப் பிராணிகளுக்கும் தொப்புளுக்கு மேல் இடப்புறத்தில் செரிமானத்திற்குரிய உஷ்ணமுள்ளது. ஆகையால் செரிமானத்தை அதிகரிக்க இடது பக்கத்தில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும்”.

மூச்சுக்கலையை முன்னிறுத்தி போஜன குதூகலம் ஆயுள் அதிகரிக்கவும் ஜீரணத்தை அதிகரிக்கவும் ஒரு எளிய வழியை இப்படிக் கூறுகிறது.

இதை அப்படியே இப்போது அறிவியல் ஆராய்ந்து தனது ஆய்வின் முடிவாகக் கூறுகிறது.

வலது பக்கத்தில் ஒருக்களித்துப் படுப்பதானது உங்கள் இதயம், நுரையீரல் ஆகியவற்றில் அழுத்தத்தை அதிகரித்து உங்கள் உடலின் இயக்கத்தை வெகுவாகப் பாதிக்கிறது. அது மட்டுமல்ல, வயிற்றுப்பகுதியில் மார்புப் பகுதியிலும் அதிக எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.

அதே சமயம் இடது பக்கம் ஒருக்களித்துப் படுப்பதானது உங்கள் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி உங்கள் ஜீரணத்தை சரியாகச் செய்கிறது.

ஒரு சின்ன உத்தி; ஆனால் பலனோ சொல்ல முடியாத அளவு பெரியது!

1.வலது பக்கம் ஒருக்களித்துப் படுப்பது Gastroesophageal Reflux Disease (GERD) என்ற நோயை உருவாக்குகிறது.

2. அத்துடன் மட்டுமின்றி முதுகெலும்பிற்கும் முதுகுப் பகுதிக்கும் இப்படிப் படுப்பது நல்லதல்ல. இது தொடர்ந்த முதுகுவலியைத் தரும். இரவு முழுவதும் முதுகெலும்பிற்குத் தரும் அழுத்தமானது உங்களுக்குப் பல சமயம் மரத்துப் போன உணர்வைத் தரும். காரணம் என்னவென்று தெரியாமல் நீங்கள் முழிப்பீர்கள்.

தலைக்கு ஒரு தலையணையையும் ஒருக்களித்துப் படுக்கும் போது வயிற்றுப்பகுதிக்குப் பக்கத்தில் ஒரு தலையணையையும் வைத்துப் படுப்பது நல்லது.

3. வலது பக்கம் படுப்பது தொடர்ந்து கழுத்து வலியை ஏற்படுத்தும்.

சீராக சுவாசிப்பது என்பது முடியாத ஒன்றாக ஆகிவிடும். கழுத்தும் முதுகெலும்பும் சீராக இணைந்து லயத்துடன் இருப்பதை இது போக்கி விடுகிறது. தூக்கம் சரியாக இல்லை எனில் அந்தப் பகுதியில் இருக்கும் gelatinous பகுதிகள் சேதமடையும். தொடர் கழுத்து வலி ஏற்படும்.

4. நீங்கள் ஒரு கர்ப்பமான பெண்மணியாக இருந்தால் எப்படிப் படுத்து உறங்குகிறீர்கள் என்பது மிக மிக முக்கியம். அதிகமான அழுத்தம் ஏற்பட அது கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு அதற்குத் தேவையான இடத்தைத் தராது. ஆகவே தான் டாக்டர்கள் இடது பக்கம்.

ஒருக்களித்துப் படுக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றனர்.

5. வலதுபக்கம் படுப்பது முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்துகிறது.

6. இது தேவையற்ற அழுத்தத்தை மார்பகங்களில் தந்து ஏராளமான பிரச்சினைகளை உருவாக்குகிறது. பெண்மணிகளுக்கு மார்பகங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு அதிகம். ஆகவே மார்பகங்கள் சீக்கிரம் தளர்ந்து தொங்கி விடாமல் இருக்க வலது பக்கம் ஒருக்களித்துப் படுக்கவே கூடாது.

7. பின்பக்கம் படுத்து உறங்கலாம். இதுவும் மார்பகங்களைச் சீராக வைத்திருக்க உதவும்.

8. இதயம் சரியாக இயங்க இரத்த ஓட்டம் சீராக இருக்க இடது பக்கம் ஒருக்களித்துப் படுப்பதே சிறந்தது.

இப்படி நமது முன்னோர்கள் கூறியதை இப்போது நவீன அறிவியல் தனது ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்துவது பிரமிப்பை ஊட்டுகிறது அல்லவா?

***

GNANAMAYAM 16-2-2025 BROADCAST PROGRAMME

மலேசியாவிலிருந்து புகழ்பெற்ற லாஸ்ய ஆர்ட்ஸ் அகாடமி ஸ்தாபகர் திருமதி மதுர நாட்ய மாமணி குருவாயூர் உஷாதுரை பேட்டி அளிக்கிறார்

GNANAMAYAM BROADCAST FROM THREE CONTINENTS ON SUNDAYS

Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time from Asia, Australia and Europe

London Time 12 Noon

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

பிப்ரவரி 16-ம் தேதி

16-2-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி

ஆசியா, ஆஸ்திரேலியா , ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களிலிருந்து வரும் ஒளி/ஒலி பரப்பு; நேரில் காணலாம்; கேட்கலாம்

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer by Mrs Jayanthi Sundar Team

World Hindu News in Tamil  presented by Vaishnavi Anand from London

***

Bengaluru Nagarajan speaks on Tamil Poet Kambar

***

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on  Bhavani Sangameswarar Temple

***

INTERVIEW WITH FAMOUS DANCER & TEACHER FROM MALAYSIA  Mathura Natya Mamani Nrithya Aacharya Kalai Thaai Guruvayoor Usha Dorai .

LONDON SWAMINATHAN INTERVIEWS Mrs Usha Durai, founder and principal of Laasya Arts Academy .

GURUVAYUR USHA DURAI INTRODUCING NATYA ICON 

Guru Srimati Mathura Natya Mamani Guruvayur Usha Dorai 

Mathura Natya Mamani Nrithya Aacharya Kalai Thaai Guruvayoor Usha Dorai, is no stranger to the world of music as she was born into a family of acclaimed Carnatic singers and musicians from Kerala, India. It is to her father, Mridangam Maestro Guruvayur Dorai and her aunt, Tamilisai Maestro Guruvayur Ponnamal that she owes her artistic and creative visions.

The founder and principal of Laasya Arts Academy, Guruvayur Usha is a Bachelor Degree holder from Madras University, graduated in Sociology with music as an elective subject. She has made her dance debut under the tutelage of Smt.Indra Rajan and Shri Pandanallur Srinivasa Pillai with her “Arangetram” in 1983. As a testament of her dedication to her profession, the title of ‘MADURA NATYA MAMANI’ was conferred to her in 1986. She later pursued a diploma in Bharatanatyam. Her combination of talents as a dance/music teacher, choreography,composer and instrumentalist mastering not only the Nattuvangam but also mridangam, tabla and veena have made her an exceptionally rare breed of teacher.

 Laasya Arts is her dream school which serves not only as a dance academy, but also as creativity hub where a lot of ideas are created and applied in musical, dance and theater arrangements. To date, Guruvayur Usha Dorai conducted 49 arangretrams, including 3 vocal arangetrams which each one is uniquely presented and far different from each other. Apart from that, she also has produced and backboned a lot of in-house and collaboration productions. Some of her significant productions are MURUGA CHARANAM, GOVINDA, MAA..!-A TRIBUTE TO MOTHERS, NRITHYA YOGA, SAMARPANAM, and MANTHRA TANTHRA.

Recently, she toured her production KAAPIYAM, all over India and received many good critics and credits to her effort in spreading the Tamil Literature works. Besides that, Guruvayur Usha serves her passion involving herself in choreography and orchestration. LAHARI, a production by Damaru Creations, crystallizes the teachings of Aadi Sankara into a well-received dance and musical production in Malaysia and Singapore which intensified credits to her talent in choreography. In addition, AMRAPALI HARMONY FUSION PROGRAMME by a Singapore based production company, GR Vision also utilizes her expertise in music  dance and theater orchestration and it has been successfully touring the world. Not stopping there, she has indulged in some literary work where she has written 4 padha varnham lyrics, 3 shabdams and 7 padhams which is definitely helping her to soar higher in this artistic world.

All her efforts through these years had been fulfilled when she was conferred the title ‘Nrithya Aacharya’ and ‘Kalai Thaai’. It is also worth to note down that she aptly received the award ‘Queen of Nattuvangam’ in 2016 & Kappiya nattiya nayaki, Nattuva perarasi and along with Nattuvanga ratnakara award in the same year. Adding more to the list are  Aryabhatta award,  KARTANATAKA ( INDIAN AWARD) and KALA SAMMAN award by Bharatiya Samskrithi Club Kolkata in Kuala Lumpur. Other highlights in her life include life time achievement award by AIDA International and Natya Icon award by Veharra Arts Kuala Lumpur in 2020.

Life time achievement award by Sugam organisation in 2021.

Honorary Doctorate in 2022 from Kolkata university

Invitation by ICC to perform in Ayodhya in2022

2022 musical ensemble 

Eesha Sarvesha

2023

Staged in three places in Tamilnadu

Eesha Sarvesha

Comprising 50 students 

2024 

Meenakshi a warrior princess ( music dance artistic director) Singapore Sarva fine arts

***

Kalyanji  anchoring from India.

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்

உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்

***

ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு – பவானி சங்கமேஸ்வரர் ஆலயம்

. ***

பெங்களூர் நாகராஜன் சொற்பொழிவு – தலைப்பு – கவிச் சக்ரவர்த்தி கம்பர்

***

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி

மலேசியாவிலிருந்து புகழ்பெற்ற லாஸ்ய ஆர்ட்ஸ் அகாடமி ஸ்தாபகர் திருமதி மதுர நாட்ய மாமணி குருவாயூர் உஷாதுரை பேட்டி அளிக்கிறார் ; பேட்டி காண்பவர் – லண்டன் சுவாமிநாதன்

***

Anchored by London Swaminathan from Sydney and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

 tags-GNANAMAYAM ,16-2-2025 BROADCAST,  PROGRAMME

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-2 ; மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (Post.14,204)

Written by London Swaminathan

Post No. 14,204

Date uploaded in Sydney, Australia – 14 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-2 ; மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாட

பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே

முப்பழ நுகரும் மூஷிக வாகன

*****

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே

முப்பழ நுகரும் மூஷிக வாகன

****

பிள்ளையாருக்கு மூன்று கண்கள் உண்டா ?

கணபதிக்கு எலி /மூஷிகம் ஏன் வாஹனம் ?

ஐந்து கரங்களின் பொருள் என்ன ?

பேழை வயிறு ஏன்]

****

வேழ முகத்து  விநாயகரின் திருவுருவத்தை அவ்வையார் இதில் வருணிக்கிறார்  .

அருணகிரிநாதர் எப்படி வருணித்தார் ?

கைத்தல நிறைகனி அப்பமொடவல்பொரி

கப்பிய கரிமுகன்அடிபேணிக்

கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ

கற்பக மெனவினைகடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்

மற்பொரு திரள்புயமதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை

மட்டவிழ் மலர்கொடுபணிவேனே

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்

முற்பட எழுதியமுதல்வோனே

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்

அச்சது பொடிசெய்தஅதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்

அப்புன மதனிடைஇபமாகி

அக்குற மகளுட னச்சிறு முருகனை

அக்கண மணமருள்பெருமாளே—-அருணகிரி அருளிய திருப்புகழ் பாடல்

கணபதி பற்றி  திரு ஞான சம்பந்தர் பாடிய தேவார பாடல்தான் தமிழில் உள்ள மிகப்பழைய பிள்ளையார் பாடல்  :

பிடியதன் உருஉமை கொளமிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்

கடிகண பதிவர அருளினன் மிகுகொடை

வடிவினர் பயில்வலி வலம்உறை இறையே! -(சம்பந்தர் தேவாரம்) 2

எல்லோருடைய கஷ்டங்களையும் இடையூறுகளையும்  களைபவர் கணபதி என்று சொல்லிவிட்டார் சம்பந்தர் .

வடமொழியில் ஷோடச கணபதி என்று பதினாறு நாமங்களை நாம் தினமும் சொல்கிறோம். புரோகிதர்கள் மஞ்சள் பொடியில் பிள்ளையாரைச் செய்து பூக்களால் இந்த 16 நாமங்களைச் சொல்லி எல்லா பூஜைகளையும் தொடங்குவார்கள்.

ஓம் சுமுகாய நமஹ என்று சொல்லி பூஜைகளைத் துவங்குகிறோம்

மங்களம் வாய்ந்த ஸுமுகன்

ஒற்றைக் கொம்பை உடைய ஏக தந்தன்

கபில நிறம் வாய்ந்த கபிலன்

யானைக் காதுகள் உள்ள கஜகர்ணன்

பெரும் வயிற்றோடு கூடிய லம்போதரன்

குள்ளத் தோற்றமுள்ள விகடர்

சகல விக்கினங்களுக்கும் ராஜாவான விக்னராஜன்

தனக்கு மேல் ஒருவன் இல்லாத நாயகன் விநாயகன்

நெருப்பைப்போல ஒளிவீசும் தூமகேது

பூத கணங்களுக்குத் தலைவரான கணாத்யக்ஷன்

நெற்றியில் பிறைச்சந்திரனைச் சூடிய fala பாலசந்திரன்

யானை முகத்தையுடைய கஜானனன்

வளைந்த துதிக்கை உள்ள வக்ரதுண்டன்

முறம் போன்ற காதுகள் உடைய சூர்ப்பகர்ணன்

தம்மை வணங்கி நிற்கும் பக்தகோடிகளுக்கு அருள்புரியும் ஹேரம்பன்

கந்தப் பெருமானின் அண்ணனான ஸ்கந்தபூர்வஜன்

–இவ்வாறு சொல்லப்படும் பிள்ளையாரின் 16 நாமங்களையும்

கல்வி கற்கும் போதும், வீட்டைவிட்டுப் புறப்படும்போதும்,

போர்க் காலத்திலும், இன்னலுற்றபோதும்,

யாராவது வாசித்தாலும், கேட்டாலும் அவர்களுக்கு

எந்த இடையூறும் வராது. –கந்த புராணம்

எளிதில் நினைவிற்கொள்ள ஸ்லோக வடிவில்

ஸுமுகைஸ்சேகதந்தஸ்ச கபிலோகஜகர்ணக:

லம்போதரஸ்ச விகடோ விக்னராஜோ விநாயக:

தூமகேதுர்கணாத்யக்ஷ fala பாலச்சந்த்ரோ கஜானன

வக்ரதுண்ட ஸூர்பகர்ண ஹேரம்பஸ்கந்தபூர்வஜ:

Don’t say Balachandra; please say FALA Chandra

ஔவையார் சொன்ன வருணனையில் உள்ள பெரும்பாலான விஷயங்கள் இந்த மேற்கோள்களில் இருக்கின்ற .

சங்கீதம் பயில்வோர் எல்லோரும் முதலில் கற்றுக்கொள்ளும் க்ருதி/ கீர்த்தனை முத்து சுவாமி தீக்ஷிதர் ஸம்ஸ்ருத மொழியில் எழுதிய ஹம்சத்வனி ராகப் பாடல் ஆகும் ;

வாதாபி கணபதிம் பஜே

முத்து சுவாமி தீட்சிதர் கிருதி

பல்லவி

வாதாபி கணபதிம் பஜேஹம்

வாரணாஸ்யம்  வரப்ரதம் ஸ்ரீ

அனுபல்லவி

பூதாதி ஸம் ஸேவித சரணம்

பூத பெளதிக பிரபஞ்ச பரணம்

வீத ராகிணம் வினத யோகினம்

விஸ்வ காரணம் விக்ன வாரணம்

…வாதாபி

சரணம்

புரா கும்ப ஸம்பவ  முனிவர  ப்ரபூஜிதம்

திரிகோண மத்யகதம்

முராரி ப்ரமுகாத் யுபாஸிதம்

மூலாதார க்ஷேத்ர ஸ்திதம்

பராதி சத்வாரி வாகாத்மகம்

ப்ரணவ ஸ்வரூப வக்ரதுண்டம் 

நிரந்தரம் நிதல சந்த்ர கண்டம்

நிஜ வாமகர வித்ருதேக்ஷு தண்டம்

கராம்புஜ பாச பீஜாபூரம்   

கலுஷவிதூரம் பூதாஹாரம்

ஹராதி குருகுஹ தோஷித பிம்பம்

ஹம்சத்வனி பூஷித ஹேரம்பம்

… வாதாபி

பொருள்:

யானை முகம் கொண்டவராகவும் வரங்களைக் கொடுக்கின்றவராகவும்

விளங்கும் வாதாபி கணபதியை நான் வணங்குகிறேன் .

பூதகணங்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவர். பூமி, நெருப்பு, காற்று, நீர், ஆகாசம் ஆகிய ஐம்புதங்களையும் அவற்றாலான மற்ற உலகங்களையும் தரிப்பவர். ஆசையில்லாதவர்.

வணங்கப்படும் யோகியவர்களை உடையவர். உலகங்களுக்குக் காரணபூதர்.

இடையூறுகளைப் போக்கடிப்பவர்.

முன்காலத்தில் கும்பசம்பவர் எனப்படும் அகஸ்தியர் என்ற

சிறந்த முனிவரால் பூஜிக்கப்பட்டவர்.

மூன்று கோணங்களுடன் கூடிய யந்திரத்தின் நடுவில் இருப்பவர்.

விஷ்ணு முதலிய முதல்வர்களால் தியானிக்கப்பட்டவர்.

மூலாதார §க்ஷத்திரமான திருவாரூரில் இருப்பவர்.

பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ ஆகிய நான்கு வித வாக்கு சொரூபமாக இருப்பவர்.

பிரணவ சொரூபமாக(ஓங்கார சொரூபமாக) வளைந்த முகத்தை உடையவர்.

எப்போதும் நெற்றியில் பிறை சூடியவர்.

தமது இடது கையில் வைத்திருக்கப்பட்ட கரும்புத்துண்டத்தை உடையவர்.

தாமரை போன்ற கையில் பாசக்கயிறு, கொய்யாப்பழம், மாதுளம்பழம்,

இவற்றை உடையவர். பாபமற்றவர்.

பூதம் போன்ற பெரிய உருவத்தை உடையவர்.

பரமசிவன் முதலியவர்களாலும் சிவகுருவாகிய முருகனாலும்

சந்தோஷிக்கப்பட்ட சொரூபத்தை உடையவர்.

ஹம்சத்வனி ராகத்தில் இன்பமுறும் யானைமுகத்தோன்

குரு குஹ என்பது தீக்ஷிதரின் எல்லா கிருதிகளிலும் வரும் முத்திரை .

vaathaapi

raagam: hamsadwani 

taaLam: aadi

Composer: Muttuswaamee Dikshitar

Language: Sanskrit 

pallavi 

vaataapi gaNapatim bajEham |

vaaraNaasyam varapradam shree ||

anupallavi

bootaadi sam sEvita caraNam |

boota bowdika prapanca baraNam ||

veetaraagiNam vinata yOginam (shree) |

vishva kaaraNam vigna vaaraNam ||

(vaathapi)

caraNam

puraa kumba sambhava munivara prapoojitam |

trikONa madya gatam |

muraari pramukaat yupaasitam |

moolaadhaara kshEtraa stitam |

paraadi sattvaari vaakaatmagam |

praNava svaroopa vakratunDam |

nirandaram niDala candra kaNDam |

nija vaamakara vidrutEkshutanDam |

karaambuja paaSa beejaapooram |

kaloosha vidhooram bootaahaaram |

haraadi guruguha tOshita bimbam |

hamsadhwani booshita hErambam ||

(vaathapi)

இப்போது அவ்வையார் சொன்னதை மட்டும் எடுத்துக்கொள்வோம் .

விநாயகரின் அரைஞாண் தங்கத்தினால் ஆனது ; இந்துக்கள் ஆண்களாகப் பிறந்தால் அணிவது அரை ஞாண்; இப்போது அது மறைந்து ஜட்டி, அண்டர்வேர் வந்துவிட்டது.

அவர் இடுப்பில் இருப்பது வெண் பட்டு ஆடை;

பெரிய வயிறு, ஒற்றைத் தந்தம் உடையவர் (இன்னுமொரு தந்தத்தை முறித்து அதை பயன்படுத்தி மஹாபாரதத்தை எழுதினார்)

யானை முகம் உடையவர் ; இது ஓம்காரமான பிரணவ மந்திரத்தை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் ; இதை வாதாபி கணபதிம் பாடலில் காணலாம்;

ஒளி வீசும் பொட்டு, துதிக்கையுடன் சேர்த்து ஐந்து கைகளை உடையவர்; ஒரு கையில் ஐம்புலன்களை அடக்கும் பாசத்தை உடையவர்; நீலத் திருமேனி / கரிய உருவம் கொண்டவர் .

மூன்று கண்கள் சிவனுக்கும், தேவிக்கும், கணபதிக்கும் உண்டு ; மூன்றாவது கண் ஞானக் கண் .

மதம் வழிந்ததால் உண்டான தடங்களும் இரண்டு செவிகளும் இருக்கின்றன . விநாயகரின்ற முறம் போன்ற செவிகளை எல்லோரும் பாடுவதைக் கவனிக்க வேண்டும் ; சூர்ப்பகர்ணன் அவர் .

தங்க மகுடமும்,  மூன்று புரிகளை உடைய பூணூலும் அவரை அலங்கரிக்கின்றன.

தொடரும்…..

Tags- விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-2 , மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்……..……..வாதாபி கணபதிம் பஜே, 16 நாமங்கள், vaataapi gaNapatim bajEham |

Hindu Crossword14225 (Post No.14,203)

Written by London Swaminathan

Post No. 14,203

Date uploaded in Sydney, Australia – 14 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

The following Sanskrit words are used in all Indian languages.

ACROSS

1.Submarine fire in the shape of horse in Hindu scriptures

4.Passion, delusion in Sanskrit 

5.Place or residence, usually of a deity in North India

6.Great Purana detailing Krishna’s life

8. a long-necked, plucked, four-stringed used by musicians as a support in concerts in Sanskrit 

10.girls’ name; young, praiseworthy

11.vedic rishi; one of the Sapta rishis; Utathya, Brihaspati are his children 

DOWN

1.author of The Harshacharita, Court poet of Emperor Harsha.

2.short sound-wealth; long sound- donation in Sanskrit 

3.Rainbow in Sanskrit

7.Dynasty, lineage in Sanskrit 

9.Priest of the Sun God in Sakadwipa

12.furious, wild in Sanskrit 

13.God in Sanskrit 

Cw14225

1 2       3
         
     4  5
         
6    7   
         
         
8 9      
        10
11   12    
      13  

Cw14225

B1AD2AVAGNI  3
A H  S  N
N AGOM4AHD5
A N  A  R
B6HAGAV7ATA
H M R   D
A   D R H
T8AM9BURA A
T A AYVAN10
A11NGIR12AS U
  A   E13 S

—subham—

Tags- Hindu Crossword14225

நாகமணியைக் கண்டதுண்டா? (Post No.14,202)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,202

Date uploaded in Sydney, Australia – –14 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 6-2-25 கல்கி ஆன் லைனில் வெளியான கட்டுரை!

 பரபரப்பான ஒரு விஷயம் பற்றிய அலசல் ஆராய்ச்சி!

நாகமணியைக் கண்டதுண்டா? 

ச. நாகராஜன் 

நாகமணியைக் கண்டீர்களா என்றால் உடனே அதோ இருக்கிறாரே என்று நாகமணி என்ற பெயரைக் கொண்டவரைச் சுட்டிக் காட்டி விடுவர். நாகரத்தினம், நாக மணி, நாக மாணிக்கம், நாக ஜோதி, நாகமுத்து என்றெல்லாம் பெயர்களைக் கொண்டவர்கள் ஏராளம் உண்டு.

நமது கேள்வி நிஜமான நாகமணியைக் கண்டிருக்கிறீர்களா என்பது தான்.

தமிழ்நாடு முழுவதும் “நிஜமான” நாகமணியை பல லட்சம் ரூபாய்க்கு விற்க அலைபவர்களைப் பற்றிய ‘ஏமாற்றுத்’ தகவல்கள் பல உண்டு. போலீஸாரிடம் சொன்னால் உடனே அவர்கள் இதற்குத் தானே காத்திருந்தோம் என்று அவர்களைப் பிடிக்கப் ப டையுடன் கிளம்பி விடுவர்.’

சுயமாக ஒளியை உமிழும் நாகரத்தினக் கல், குழாய் போன்ற வடிவில் இருக்கும். ஒரு நாகமானது நூறாண்டுகளுக்குப் பிறது தனது ஜீவ சக்தியை இப்படி ஒளி உமிழும் மாணிக்கமாக மாற்றுவதை நமது புராணங்கள் நன்கு விவரிக்கின்றன.

தேவி பாகவதத்தில் எட்டாம் ஸ்காந்தத்தில் பதினெட்டாவது அத்தியாயத்தில் நாராயணர் நாரதருக்கு ஒவ்வொரு மண்டலமாக விவரிக்கிறார். அதில் பூமியின் கீழ் உள்ள அதலம், விதலும், சுதலம், தராதலம், மகாதலம், ரஸாதலம், பாதாளம் என்னும் ஏழு லோகங்களைப் பற்றி விவரிக்கையில், “அங்கு இராப்பகல் எப்போதும் கிடையாது. ஏனெனில் அங்குள்ள பாம்புகளின் தலைகளிலிருந்து வரும் ரத்ன காந்தியால் இருள் நீங்கி விடுகிறது” என்கிறார். 

அப்படிப்பட்ட ஒளி நாகரத்தினக் கல்லின் ஒளி என்பதை அறிகிறோம்.

அடுத்து கம்பன் சுந்தர காண்டத்தில் ஊர்தேடு படலத்தில்  இலங்கையில் பெண்மணிகள் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் போது, “பாம்புகளின் தலைவனான ஆதிசேஷனின் சிவந்த நிறம் மிக்க படத்து மணியினை வலிமையால் கவர்ந்து எனக்கு ராவணன் அளித்தான்” என்று ஒரு பெண்மணி கூறுவதாகப் பாடியுள்ளான். (பன்னக அரசர் செங்கேழ்ப் பணா மணி வலிதின் பற்றி இன் உயிர்க் கணவன் ஈந்தான் – பாடல் 183)

அவனே உருக்காட்டு படலத்தில் (பாடல் 65) சீதை கணையாழியைப் பார்த்தவுடன் அவள், “தவற விட்ட மாணிக்கத்தை தன் எதிரில் கண்ட புற்றில் உள்ள பாம்பு போல இருந்தாள் – “இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்”) என்றும் பாடுகிறான்.

ஆக இப்படி இலக்கியம் கொண்டாடும் நாக மணி எங்கே?

பாம்புகளைப் பற்றி நன்கு ஆராய்ந்த ம.வீ.இராசேந்திரன் உலகில் 2000 பாம்பு வகைகள் உண்டு என்றும் இந்தியாவில் மட்டும் 390 வகைகள் உண்டு என்றும் கூறி பற்பல வியக்க வைக்கும் தகவல்களை ‘நம் நாட்டுப் பாம்புகள்’ என்ற தனது நூலில் விவரிக்கிறார்.

ஆனால் ‘நாகமணி கவிஞனின் கற்பனையில் உதித்த மணியான சிந்தனைச் சிற்பம். கவிஞனுக்குக் களிப்பூட்டும் கருந்தனம்” என்கிறார் அவர்.

பாம்பின் நஞ்சே முத்தாக மாற வேண்டுமானால் அது பல ஆண்டுகளாக விளைந்து கொண்டே இருக்க வேண்டும். பாம்பின்  நச்சுப்பை நமக்கு இருப்பது போல ஓர் உமிழ் நீர்ப்பை தான்.” என்கிறார் அவர்.

ஆக அறிவியல் ரீதியாக நாகமணி இல்லை என்பது தான் உண்மை.

ஆனால் கற்பனை ரீதியாக? 1986ல் எடுத்து ஶ்ரீ தேவி நடித்த நாகின் படத்தின் முழுக்கருத்தே நாகமணியை அடிப்படையாகக் கொண்டது தான். படம் சக்கை போடு போட்டது!

2008ல் வெளியான நீல் கைமன் எழுதிய ‘தி க்ரேவ்யார்ட் புக்’  என்ற நாவல் நாகமணி அரிதாகவே கிடைக்கும் ஒரு ரத்தினம் என்றது. புத்தகம் பிரபலமானது.

 2017ல் வங்காள நாவலான ‘சர்ப மானவ்: நாகமணி ரஹஸியம்’,  நாகமணியை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்ட நாவல்.

 நாகமணியை விஷம் முறிவுக்காகத் தரும் நாட்டு வைத்தியர்கள் ஏராளம் பேர் உண்டு. இவர்கள் நாகமணியைக் கொண்டிருக்கவில்லை.

மிருக எலும்புகளையோ அல்லது நாகத்தின் பாகங்களையோ வைத்து இப்படி நாகமணிக் கல்லை உருவாக்குகிறார்கள் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

 ஆக நாகமணி இலக்கியத்தில் பொக்கிஷம்; நிஜமான வாழ்க்கையிலோ ஏமாற்றுபவரின் பொக்கிஷம். 

நாம் ஜாக்கிரதையாக இலக்கியத்தை நம்புவோம்; ஏமாற்றுவோரை ஒதுக்குவோம்! 

***

Tags-. நாகரத்தினம், நாக மணி

Hindu Crossword13225 (Post No.14,201)

Written by London Swaminathan

Post No. 14,201

Date uploaded in Sydney, Australia – 13 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1 2 3  4
        
5      6  ←
        
7    8  
        
9      10  ←
        
      11  ← 

Across

1.Number five in many Indian languages

5. hot, burning in Sanskrit

6.Sapless, insipid, vain, unprofitable  ←

7. There is a nāḍī (tube) called XXXXXX, passing upward from the heart, and often referred to in the yoga-śāstras. When it reaches this last place, the nāḍī passes up breaking open the two regions of the head. That is the path to attain to one’s own true nature.

9. 1. A mountain, a rock. 2. A cloud, (in the language of the Vedas:)

10.    ← Loss, failure, absence, non-existence; damage, detriment

11.   ← Turtle or Tortoise and one of the Avatars of Lord Vishnu

Down

1.Vyasa’s father

 2.Lion-Man incarnation of Lord Vishnu

 3.O God in the famous Rama, Krishna mantras

4.Offence or punishment in Indian languages

8. Lovely, beautiful, charming, sweet, pleasing, agreeable, attractive; girls’ name

P1AN2CH3A A4
A A A  P
R5URARASA6  ←
A A E  R
S7USHUM8NA
H I  A D
A9SMAINAH10  ←
R H  J A
A AMRUK11  ← 

-subham-

Tags- Hindu Crossword13225

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-1 ; சீதக் களபச் செந்தாமரைப்பூம் (Post No.14,200)

Written by London Swaminathan

Post No. 14,200

Date uploaded in Sydney, Australia – 13 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாட

பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே

முப்பழ நுகரும் மூஷிக வாகன

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்

தாயா யெனக்குத் தானெழுந் தருளி

மாயாப் பிறவி மயக்கம் அறுத்து

திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்

பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்

கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்து

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

ஆறா தாரத்து அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்து எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி யிரண்டுக்கு ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்து அழுத்தியென் செவியில்

எல்லை யில்லா ஆனந் தம்அளித்து

அல்லல் களைந்தே அருள்வழி காட்டி

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே

***

விநாயகர் அகவல் துதியில் எத்தனை வரிகள் உள்ளன ?

72 வரிகள் உள்ளன .

****

இந்தத் துதியைப் பாடியவர் யார் ?

அவ்வையார் .

****

எந்தக் காலத்தில் பாடினார் ?

ஆறு அவ்வையார்களில் கடைசியாக வந்த ஆறாவது அவ்வையார் பாடினார்; தமிழ் நடையிலிருந்தும், ஸம்ஸ்க்ருதச் சொற் பிரயோகத்திலிருந்தும், யோக ரகசிய விளக்கத்திலிருந்தும் இவர் சுமார் 200 ஆண்டுகளுக்கு முந்தியவர் என்று துணியலாம்.

****

இது பற்றி காஞ்சி சங்கராசார்யார் (1894- 1994) என்ன சொன்னார் ?

இதைப் படிக்கப் படிக்க உங்களுக்கே பொருள் விளங்கும் என்று சொன்னார்

அதாவது இதற்கு எத்தனை விளக்க உரைகள் இருந்தாலும் தினமும் அதிகாலையில் படித்துக் கொண்டே வந்தால் இதன் உண்மைப்பொருள் விளங்கும் .

****

இந்தத் துதியை எத்தனை பகுதிகளாகப் பிரிக்கலாம் ?

1.பிள்ளையாரின் — கணபதியின்– விநாயகரின் — தோற்றம்  – முதல் 15 வரிகள் .

2.எனக்கு வேண்டியது என்ன —அடுத்த 15 வரிகள்

3.குண்டலினி முதலிய யோக விஷயங்கள் – வரி 55 வரை

4.பலன் என்ன —  கடைசி 17 வரிகள்.

****

முதல் இரண்டு வரிகளில் பாதச் சிலம்பு பற்றி ஏன் பாடினார் ?

இந்துக்களுக்கு ஒரு விதி உண்டு ; இதை ஸம்ஸ்க்ருத  , தமிழ்ப் புலவர்கள் பாடல்களில் காணலாம் ; பெண்களைப் பாடுகையில் முடி முதல் அடி வரை பாட வேண்டும் ; இறைவனைப் பாடுகையில் அடி முதல் முடி வரை பாட வேண்டும் ; அதாவது பெண்களின் கூந்தல் அழகினை வருணித்து விட்டு கால்களில் அணிந்த ஆபரணங்கள், அவளது அன்ன நடை பற்றிச் சொல்லலாம்.

இறைவனைப் பாடுகையில் முதலில் பாதங்களையே பாட வேண்டும் அவரது கண்களின் பார்வையை நாம் தாங்க முடியாது ; அதன் வீரியத்தைக் குறைத்து கடைக் கண்களால் மட்டுமே அவர் நம்மைக்  காண வேண்டும் என்பது நம்முடைய வேண்டுகோளாக இருக்க வேண்டும்.

ஒருவரை இந்துவா அல்லது பிற மதத்தினரா என்பதைக் கண்டுபிடிக்க இது உதவும்.

தமிழ்ப் புலவன் திருவள்ளுவன் ‘பக்கா’ இந்து ; அதனால் முதலில்  கடவுள் வாழ்த்துப் பாடினான்; புத்தர்களும், சமணர்களும் கடவுள் பற்றிப் பேசவில்லை  ; முதல் பத்து குறள்களில் ஏழு குறள்களில் பாதம் பற்றிப் பாடினான் வள்ளுவன் ; இதனால் அவனைத் தீவிர இந்து என்று அறிகிறோம்; அவனைப் பின்பற்றி அவ்வையும் பாதச்  சிலம்பு பற்றிப் பாடினார். இஸ்லாமிய, கிறிஸ்தவ, யூத மதக் கடவுளருக்கு உருவம் கிடையாது.

****

மேலும் இறைவனின் கால் பட்டால் முக்தி கிடைக்கும் ; அது விதியை வெல்ல உதவும் என்று அருணகிரி நாதரும் பகர்ந்தார்

சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேங்கடம்பின்

மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்

வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்

கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே.–கந்தரலங்காரம்-40

(சேல் என்னும் மீன்கள் துள்ளித் திரிந்ததால், செந்தூர் வயல் பொழில்கள் அழிந்தன; தேன் கடம்ப மரத்தின் மலர்கள் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனங்கள்; மா மயில் வாகனனின் வேலாயுதம் பட்டு அழிந்தது வேல் என்னும் கடலும் சூரனும் வெற்பு என்னும் மலையும்; அவனின் கால் என்னும் திருவடிகள் என் தலைமீது பட்டு அழிந்தது, அயன் என்னும் பிரம்மன் எனக்கு எழுதிய என் தலையெழுத்து).

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா

மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த

பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி

வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே—அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  – 70

****

களபம் என்றால் என்ன?

குட்டி யானைக்கும் வாசனை மிகுந்த குளிர்ச்சி தரும் கலவைக்கும் களபம் என்று பொருள் ; அதனால் அவ்வையார், சீத/ குளிர்ச்சிமிக்க களபம் என்று அகவலைத் தொடங்குகிறார்

சீத+ உஷ்ணம் = சீதோஷ்ணம் ஸம்ஸ்க்ருதச் சொல் .

அவ்வையார் ஸம்ஸ்க்ருதச் சொற்களுடன் அகவலைத் துவங்கியதைக் கவனிக்கவேண்டும் ஆனால் வள்ளுவனும் திருக்குறளை ஸம்ஸ்க்ருதச் சொற்களுடன் துவங்கி ஸம்ஸ்க்ருதச் சொற்களுடன் நூலை முடிப்பதையும் நாம் காண்கிறோம். இது ஒரு குற்றமில்லை. நூலின் சிறப்பினை உயர்த்த வள்ளுவனும் அவ்வையும் கண்ட உத்தி!

*****

திருப்புகழில் களபம்

பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய

     பவனி வரும்படி …… யதனாலே

பகர வளங்களு நிகர விளங்கிய

     இருளை விடிந்தது …… நிலவாலே

வரையினி லெங்கணு முலவி நிறைந்தது

     வரிசை தரும்பத …… மதுபாடி

வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு

     மகிழ வரங்களு …… மருள்வாயே

அரஹர சுந்தர அறுமுக என்றுனி

     அடியர் பணிந்திட …… மகிழ்வோனே

அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத

     குறமக ளிங்கித …… மணவாளா

கருதரு திண்புய சரவண குங்கும

     களபம ணிந்திடு …… மணிமார்பா

கனக மிகும்பதி மதுரை வளம்பதி

     யதனில் வளர்ந்தருள் …… பெருமாளே.

****

களபம் ஒழுகிய புளகித முலையினர்

     கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்

          கழுவு சரிபுழு கொழுகிய குழலினர் …… எவரோடுங்

கலகம் இடுகயல் எறிகுழை விரகியர்

     பொருளில் இளைஞரை வழிகொடு மொழிகொடு

          தளர விடுபவர் தெருவினில் எவரையும் நகையாடிப்…….

இது போல நிறைய பாடல்களில் காணலாம்………..

முதல் இரண்டு வரிகளைக் கண்டோம் ; மேலும் காண்போம் .

தொடரும்…………………

Tags- விநாயகர் அகவல், ஆராய்ச்சிக் கட்டுரை-1, சீதக் களபச் செந்தாமரைப்பூம் 

வந்தே மாதரம்! கீதம் பிறந்த கதை!! (Post No.14,199)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,199

Date uploaded in Sydney, Australia – –13 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கல்கி ஆன் லைன் இதழில்6-2-25 அன்று பிரசுரமான கட்டுரை

தேசத்தை எழுப்பிய தேசீய கீதம்

வந்தே மாதரம்! கீதம் பிறந்த கதை!! 

ச. நாகராஜன் 

பிரம்மாண்டமான தேசம். பாரம்பரியமான தெய்வீக அறிவைக் கொண்டிருக்கும் தேசம். உலகில் உள்ள நாடுகளுக்கு வழி காட்டுவதற்காக இறைவன் படைத்த தேசம்.

அது தூங்கிக் கொண்டிருந்தது. அடிமைப்பட்டிருந்தது. வருவோர் போவோர் எல்லாம் அதன் மீதிருந்த ஆபரணங்களையும் இதர செல்வங்களையும் கொள்ளையடித்துச் சென்று கொண்டிருந்தனர்.

இதைப்பார்த்த தெய்வீக புருஷர்கள் அன்னையை வேண்டினர். அன்னை மனம் கனிந்தாள்.

வந்து உதித்தார் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா!

1838ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதியன்று வங்காளத்தில் 24 பர்கணா மாவட்டத்தில் கண்டலபதா என்ற ஊரில் அவர் பிறந்தார். இருபது வயதிலேயே ஆங்கில ஆட்சியில் துணை நீதிபதியாக ஆனார்.

பாரதப் பாரம்பரியத்தில் ஆழ்ந்த பக்தி கொண்ட அவருக்கு வழிகாட்டி, உணவு, மருந்து எல்லாமே பகவத் கீதை தான்!

அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இதை மெய்ப்பிக்கிறது.

ஒரு சமயம் அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவரது டாக்டர் அவரிடம் வந்து ஒரு குறிப்பிட்ட மருந்தை உட்கொள்ளுமாறு கூறினார். பங்கிம் சந்திரர் சிரித்தார். இது டாக்டருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

“நீங்கள் தற்கொலை செய்து கொள்கிறீர்கள்” என்று அவர் கத்தினார்.

பங்கிம் கேட்டார்: “எப்படி?”

“இந்த மருந்தை உட்கொள்ளாமல் இருந்தால் அது தற்கொலை செய்து கொள்வதாகத்தானே அர்த்தம்?”

“யார் சொன்னது நான் மருந்தை எடுத்துக் கொள்ளவில்லை என்று?”

“எங்கே நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்தைக் காண்பியுங்கள், பார்ப்போம்!”

பங்கிம் பேசவில்லை. தன் அருகில் இருந்த  ஒன்றைச் சுட்டிக் காட்டினார்.

அது ஒரு புத்தகம். கீதை புத்தகம்.

அது தான் அவரது வாழ்க்கைக்கு வழிகாட்டி!

தேச மக்கள் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அவர் பரிதவித்தார்.

தேசம் எப்போது விழித்தெழும், எப்படி விழித்தெழும் என்ற சிந்தனை தான் அவருக்கு எப்பொழுதும்,!

1875ம் ஆண்டு. அப்போது அவருக்கு வயது 37. ஒரு நாள் கல்கத்தாவின் பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து சற்று தப்பிக்க எண்ணி தனது சொந்த ஊரான கண்டலபதாவிற்குச் செல்லும் ரயிலில் ஏறினார். நகரை விட்டுத் தாண்டியவுடன் ரயிலின் ஜன்னல் வழியே வெளியே பார்த்தார் பங்கிம்.

அடடா! என்ன அற்புதம்! எங்கும் பச்சை பசுமையான வயல்கள். பசுமைத் தோட்டங்கள் அவர் மனம் சந்தோஷத்தால் துள்ளிக் குதித்தது. பாரதத் தாய் அவர் முன்னே தரிசனம் தர ஆரம்பித்தாள். அற்புதமான ஜீவ நதிகள் அங்கு ஓடின. மலர்கள் பூத்துக் குலுங்கின. பரந்த காடுகள்   தெரிந்தன. ஒரு உற்சாகம் அவர் உடல் முழுவதும் பாய்ந்தது.

தாயின் செழுமையையும் அழகையும் கண்டு அவர் புல்லரித்தார்.’அவர் மனதில் தோன்றியது:

வந்தே மாதரம்!

சுஜலாம் சுபலாம் மலயஜ சீதலாம்

சஸ்ய சியாமளாம் மாதரம்

வந்தே மாதரம்.

கீதம் பிறந்தவுடன் எல்லையற்ற மகிழ்ச்சி அவருக்கு ஏற்பட்டது.

நாட்கள் கழிந்தன. 1880ம் ஆண்டு பங்கதர்ஷன் என்ற இதழில் இரு வருடங்கள் ஆனந்தமடம் என்ற ஒரு தொடர் நாவலை அவர் எழுதி வந்தார். அதில் இந்த கீதம் இடம் பெற்றது. 1882ல் ஆனந்தமடம் புத்தகமாக வெளியானது.

1772ல் ஏற்பட்ட சந்யாசிகளின் போராட்டத்தைச் சித்தரிக்கும் இந்த நாவல் நாட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று பங்கிம் நினைத்தார். ஆனால் உடனே அது நடைபெறவில்லை.

ஆனால் அவர் முன் ஒரு பெரிய காட்சி விரிந்தது. அதில் இந்த கீதம் தேசத்தில் விளைவிக்கும் தெய்வீகக் காட்சியைக் கண்டு அவர் மனம் சிலிர்த்தது.

 அவர் தனது மகளுக்கு எழுதிய கடிதத்தில், “இன்னும் 20, 30 வருடங்களில் இந்த கீதத்தைப் பித்துப் பிடித்தது போல வங்காளத்தில் அனைவரும் பாடப் போகின்றனர். வங்காளம் இந்த கீதத்துடன் இணைந்து இருக்கும்” என்று எழுதினார்.

அரவிந்தர்,  தாகூர் உள்ளிட்ட பலரும் பங்கிம் சந்திரரைப் போற்றி எழுதினர்.

வந்தே மாதரத்தை எழுச்சி பெற்ற தேசம் தேசீய கீதமாக ஏற்றது.

அதன் ஒலி இமயத்தில் ஆரம்பித்து குமரி வரை ஒலித்தது!

1894 ஏப்ரல் மாதம் 8ம் நாளன்று அவர் மறைந்தார்; என்றாலும் அவரது கீதம் இமயம் இருக்கும் வரை நிலைத்திருக்கும்!

வந்தே மாதரம் என்போம்! எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்!

****

Hindu Crossword12225 (Post.14,198)

Written by London Swaminathan

Post No. 14,198

Date uploaded in Sydney, Australia – 12 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1 2 3 
      
4     
  5   
  6   
 7 8 9

ACROSS                    

1.In Sanskrit, “xxxxxx means “world,” “realm,” “plane of existence,” or “abode,” essentially referring to a place or dimension within the universe, often used in Hindu, Buddhist, and Jain contexts. 

 4. In Sanskrit, “XXXXX Mantra” translates to “the liberating mantra” or “the mantra that helps one cross over,” where “XXXXX means “to cross over” or “liberator,” referring to its ability to guide the soul beyond the cycle of birth and death in Hindu belief. 

5.The Sanskrit word XXXXX means “immortal,” “everlasting,” or “long life”. It is a gender-neutral name that is often associated with positive qualities such as strength, courage, and wisdom. Boys’ name.

6.Hand; used in Indian languages.

7. “essence,” “taste,” “flavor,” or “juice in Indian languages

DOWN

1.It means creeper; popular name for girls .

2. The Sanskrit word xxxxx has multiple meanings, including “hailstones”, “participant in an action”, and “semantic relation between a verb and a noun”

3. xxxxx is a Sanskrit word that means “sea monster” or “crocodile”. It has multiple meanings, including a water monster in Hindu mythology, a zodiac sign, and a yoga pose. 

8.Third Veda dealing with music

9. Another name of Manmatha; God of Love; also death, Killing, slaughter, slaying;

L1OK2AM3 
A A A 
T4ARAKA
H A5MAR
A K6ARA
 R7AS8AM9

–Subham—

Tags– Hindu Crossword12225

தமிழ் தெரியுமா12225 ? – (Post.14,197)

Written by London Swaminathan

Post No. 14,197

Date uploaded in Sydney, Australia – 12 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்; சொற்களைக் கண்டுபிடிக்க அம்புக்குறிகளைப் பின்பற்றுக. இரண்டு சொற்கள் குறுக்கே செல்கின்றன.

 x1      
      2 
   3  4 4a
      5 
  6  7 ←  
    8x 9↑ 
10   11←  

ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குச் செல்க; இரண்டு சொற்கள் குறுக்கே செல்கின்றன

1. திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோவிலில் உள்ள சிவபெருமான்,;

2. நெசவாளரின் கருவி;

3. தோழி என்பதற்கான ஸம்ஸ்க்ருதச் சொல்,;

4.இளமை, பெண்மை, எருமை, மரை, பெற்றம் என்பவற்றின் பெண், நத்தை, பசுவின் பெண்கன்று; கிடாரிக் கன்று, பெண் மீன்,சங்கு,மரக்கன்று;

5. காய் என்பதை அடுத்து வரும்; மாமிசத்துக்கும் பெயர்;

7. ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர் ←  ;

10. கோட்டான், ஆந்தை, கெளசிகம் , உலூகம் 11. வேசி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கான இன்னுமொரு ஸம்ஸ்க்ருதச் சொல் ←,

1. அத்வைத தத்துவத்தைப் பரப்பியவர் ;(மேலிருந்து கீழே செல்க)  1. லிங்கத்தின் கீழ்ப் பகுதியைச் சுற்றியுள்ள மேடை போன்ற அமைப்பு,  6. சங்கீதம், நடனம், நடிப்பு ஆகியவற்றில் புகழ்பெற்றோரைப் பின்பற்றும் பெண் 8.  பூட்டு, தாழ்ப்பாள், சங்கிலி இவை மாட்டவுதவும் கதவுநிலையுறுப்பு. ↑ 8.  கணவனை மனைவி அழைக்கும் ஸம்ஸ்க்ருதச்  சொல்  8 மூக்கு என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல் 9. திருவரங்கத்தில் பள்ளிகொண்ட பெருமாள் ↑,4.a. அடையாளம்

x1த்நார் 
வு தி   த2றி
டை  ச3கி நா4கு 4a
யா   ங் க5றி
ர் ர6தாக7 ←ங் 
 சி நா↑8x ர9↑ 
கூ10கை சிதா11← ர்

 —-Subham—

 Tags– தமிழ் தெரியுமா12225 ?