சிட்னி தாவரவியல் பூங்காவுக்கு எனது பயணம்—30 (Post No.14,256)

Written by London Swaminathan

Post No. 14,256

Date uploaded in Sydney, Australia –  1 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 30

லண்டனிலுள்ள க்யூ தாவரவியல் பூங்காவையும் , ஆண்டுதோறும் நடக்கும் மலர்க கண்காட்சிகளையும்  பலமுறை பார்த்திருந்தபோதிலும் சிட்னி தாவரவியல் பூங்காவைப் பார்க்காமல்  வரக்கூடாது என்று முடிவு செய்து பிப்ரவரி 28-ஆம் தேதி  (2025) பூங்காவுக்குள் நுழைந்தேன் . இரண்டு மணி நேரத்தில் வேறு எங்கும் இல்லாத பல தாவர, மர வகைகளைக் கண்டேன் ; பல பறவைகளும் காட்சி தந்தன ; ஆங்காங்கே சிலைகளும் பூங்காவை அலங்கரித்தன ஆஸ்திரேலியாவில் உலகில் வேறு எங்கும் காண முடியாத தாவர வகைகள் இருபதாயிரத்துக்கும் அதிகம் உள்ளன . இவற்றில் மனம் கவரும் வண்ண மலர்களும் அடக்கம்

மனதில் நின்ற சில காட்சிகள்

பெரணிகள்  FERNS என்னும் கீழ்வகைத்  தாவரங்கள் மிகவும் பெரிய இலைகளுடனும் உள்ளன. ஒரு செடியின் ஒவ்வொரு இலையிலும் ஒரு குழந்தை படுக்கலாம். நம்மூர் தலை வாழை இலையைப் பாதியாக வெட்டினால் எப்படி இருக்குமோ அந்த அளவு.

செவ்வாழை மரங்களும் சாதாரண பச்சை வாழை மரங்களும் உள்ளன. ஆனால் அவை மினி / குட்டி வாழைப்பழங்கள்.

நமது ஊர்களில் காடு மேடுகளில் ஊமத்தைப் பூ மலர்ந்திருப்பதைக் காண்கிறோம்; அவை வெள்ளை நிறம்; ஆனால் ஆஸ்திரேலிய ஊமத்தைகள் இளம் சிவப்பு நிறமுடையவை ; அவற்றின் சைஸ் மிகப்பெரியவை  ராட்சத ஊமத்தை என்று சொல்லலாம்.

உலக மஹா கவி காளிதாசன்,  நம் நாட்டின் பருவங்களை ஆறாகப் பிரித்து ருது சம்ஹாரம் என்ற காவியத்தை இயற்றினான். வேதகாலம் முதல் உள்ள இதே பிரிவினை சங்கத் தமிழ்ப் புலவர்களும் பின்பற்றினார்கள்; மேலை நாட்டுக் கணக்கில் பருவங்கள் நாலுதான். அந்த நாலு பருவங்களைக் காட்டும் சிலைகளும் உள்ளன.

லண்டனில் கியூ பூங்காவுக்குள்  நுழைவதற்கு  கொள்ளைக் கட்டணம் வசூலிக்கிறார்கள்  ; ஆனால் சிட்னியில் இலவசம். ஆங்காங்கே செடிகளின் தாவரவியல் பெயர்களை பொறித்து வைத்திருப்பதோடு ஒவ்வொரு சந்திப்பிலும் பாதைகளைக் காட்டும் கைகாட்டி மரங்களையும் வைத்திருக்கிறார்கள்; காரணம் சிட்னி பூங்காவுக்கு எட்டு நுழைவாயில்கள் ; புகழ்பெற்ற சிட்னி ஆபரா ஹவுஸ் பக்கமும் ஒரு வாசல் உள்ளது நான் மார்ட்டின் பிளேஸ் என்னும் ஸ்டேஷனுக்குச் சென்று பத்து நிமிடத்துக்குள் பூங்காவுக்குள் பிரவேசித்தேன்.

சிம்ம வாசல் என்னும் கேட்டில் இரண்டு சிங்கத்தின் சிலைகள் உள்ளன. ஓரிடத்தில் நான் விரும்புவது….. என்று பொறித்த பெண்ணின்/ தேவதையின் சிலை உளது ; அதில் இளம்வெட்டுகள் பூக்களை வைத்து தங்கள் (காதல்) விருப்பங்களை சொல்கிறார்கள்.

பெரிய மரங்கள் இந்திய ஆலமரங்களுக்குப் போட்டியாக அங்கே இருக்கின்றன. எல்லாம் உயரத்தில் நமது மரங்களைத் தோற்கடித்துவிடும்; அத்தனை உயரம்.  பூங்காவை பலவகைகளாகப் பிரித்து போகும் வழியையும் காட்டி இருக்கிறார்கள் பாலைவனத் தாவரங்கள், ரோஜாத் தோட்டம், பெரணிகள், மூலிகைகள், பனைவகைத் தாவரங்கள், கட்டாயம் காண வேண்டிய தாவரங்கள் என்று பல பிரிவுகள் .

நாமாகச் சென்று பார்த்தால் நேரம் அதிகமாகும். அவர்களே நடத்தும் நடைப் பயணத்தில் WALKING TOURS  சேர்ந்துகொண்டால் எல்லா செடி கொடிகளையும் பார்ப்பதோடு அவற்றின் மகிமையையும் அறியலாம்

****

சிட்னி தாவரவியல் பூங்காவின் சிறப்புகள்

இது ஆஸ்திரேலியாவில் மிகவும் பழைய தோட்டம்; இருநூறு ஆண்டு வரலாறுடைத்து .

மேலும் இத்துடன் தாவரவியல் ஆராய்ச்சிக்  கழகமும்  இணைந்திருப்பதால், தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடக்கின்றன.

மொத்தம் 27,000 வகைத் தாவரங்களைக் காணலாம் ; அவை உலகின் பல இடங்களை சேர்ந்தவை  ஆஸ்திரேலியாவிலுள்ள 24,000 வகைத் தவரங்களில் 87 சதவிகிதம் இந்த நாட்டிற்கே உரித்தானவை உலகில் வேறு எங்கும் காணக்கிடைக்காதவை.

ஆண்டு முழுதும் திறந்திருக்கும்; அனுமதி இலவசம்  

பூங்காவில் 15 வகைப் பிரிவுகள் இருக்கின்றன. நாட்டின் மழை வனக்காடுகள் எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் ஒரு பிரிவும் அதில் அடக்கம் ; அங்கு பத்து லட்சம் தாவர வகைகளை சேமித்துப் பாதுகாத்து வைக்கும் ஆராய்ச்சிப் பிரிவும் உள்ளது இந்த விஷயத்தில் லண்டன் கியூ கார்ட்டன் இதைவிடப் பெரியது

Facts about Sydney Botanical Gardens

Royal Botanic Garden Sydney

•             Australia’s oldest botanic garden, established in 1816.

•             Home to over 27,000 plants from around the world.

•             Includes 15 themed gardens, including an Australian Rainforest Garden and a Tropical Garden

•             Free to visit, open every day of the year

•             Located on Sydney Harbour, next to the Sydney Opera House

•             Features a National Herbarium with about one million reference specimens

•             Australia is home to approximately 24,000 species of plants, 87 per cent of which can’t be found anywhere else on the planet

–subham—

Tags- சிட்னி, தாவரவியல் பூங்கா, எனது பயணம், சிறப்புகள் , சிலைகள், ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 30

GNANAMAYAM 2-3-2025 BROADCAST PROGRAMME

GNANAMAYAM 2-3-2025 BROADCAST PROGRAMME

GNANAMAYAM BROADCAST FROM THREE CONTINENTS ON SUNDAYS

Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time from Asia, Australia and Europe

London Time 12 Noon

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

2-3-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி

ஆசியா, ஆஸ்திரேலியா , ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களிலிருந்து வரும் ஒளி/ஒலி பரப்பு; நேரில் காணலாம்; கேட்கலாம்

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer by Mrs Jayanthi Sundar Team

World Hindu News in Tamil  presented by Vaishnavi Anand from London

***

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on  Tiruvarur Temple

***

SPECIAL TALK BY Dr Tenkasi D. Ganesan Ph.D

Masters degree and Ph.D.

Worked as a Human Resource Head in Larsen & Toubro Ltd.

Doctorate on the subject – Human resources in Bhagavad Gita

Public speaker, Writer and Poet

Visited around 100 colleges and schools for talk on behavioural topics

Trustee in Sri Vidyatheertha foundation, associated with Sringeri Sharatha Peetam. 

Public Relations Officer in Uratha sinthanai, a literary forum. 

Secretary of Rasikaas, a forum for arts and culture

Published 10 books so far including Bhagavad gita for daily life

Having a library of 4000 books of various interests in the house

Sharing literary and spiritual thoughts through You tube – Rasikaas TV.

So far approximately 100 videos have been shared and nearly 1,50,000 viewers have seen.

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்

உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்

***

ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு  திருவாரூர் ஆலயம்

. ***

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி

சிறப்புச் சொற்பொழிவு வழங்குபவர் தென்காசி டாக்டர் டி. கணேசன்

***

Anchored by London Swaminathan from Sydney and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags- GNANAMAYAM ,2-3-2025, BROADCAST PROGRAMME

Hindu Crossword1325 (Post No.14,255)

Written by London Swaminathan

Post No. 14,255

Date uploaded in Sydney, Australia –  1 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1325

12 3   4
     5  
6       
        
7       
        
8       
        
910 11    

Across

1.Rig Vedic Deity; general meaning Friend

6.one day and one night; Tamil worlds for Day/pahal and night/raathri/iravu came from this.

7. The natural order or connection of words in a sentence, construing grammatical order or relation in Sanskrit

8.Name of a river in Rig Veda

9.Mount of Gods like Elephant, Bull, Peacock, Lion, Yali, Anna/swan etc

Down

2.One of the Five Faces of Shiva; also represents North East Direction

3. xxxxx is the name of an asura king who terrorised the gods (devas), according to the Varāhapurāṇa chapter 96. xxxxx was eventually defeated by Raudrī who struck him and severed his head (muṇḍa) from his trunk (carma).

4.Breath control doe by Brahmins thrice a day

5. For one’s own sake, for the sake of one’s self in Sanskrit

10.Life, spiritual life in the Rig Veda; also life of departed spirits

11. Agni or the god of fire in Indian languages.

1325

M1I 2TR3A  P4
 S U A5 R
A6HORATRA
 A U M N
A7NVAYA A
 A L R Y
S8UVASTUA
 S N H M
V9A10HA11NAMA

—subham—

Tags- Hindu Crossword1325, PRANAYAMA

மூன்று வில்களின் தோற்றம்! (Post No.14,254)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,254

Date uploaded in Sydney, Australia – –1 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மஹாபாரதத் துளிகள்!

மூன்று வில்களின் தோற்றம்!

ச.நாகராஜன்

மூன்று வில்கள்: பினாகம்சார்ங்கம்காண்டீவம்!

உமா தேவிக்கு சிவபிரான் உரைத்தது:

முன்னொரு யுகத்தில் கண்வர் என்னும் ஒரு மஹரிஷி இருந்தா. அவர் அற்புதமான தவம்செய்யத் தொடங்கினார். அவர் அவ்வாறு கடும் தவம் செய்யும் போது அவர் தலையில் நாளடைவில் புற்று உண்டாயிற்று. புற்று இருந்ததனால் அவர் தலையில் மூங்கில் முளைத்தது. அவற்றையெல்லாம் அவர் தாங்கிக் கொண்டு முன் போலவே தவம் செய்து கொண்டிருந்தார். தவத்தினால் பூஜிக்கப்பட்ட பிரம்மதேவர் அவருக்கு வரங்கொடுக்கப் போனார். அவர் அவருக்கு வரம் அளித்த பிறகு, அந்த மூங்கிலைப் பார்த்து அதனால் உலகிற்கு உபயோகம் செய்வதைக் குறித்து ஆலோசித்தார்.

ஆலோசித்தபிறகு, அந்த மூங்கிலை எடுத்து வில்லாகச் செய்வித்தார்.

உலகங்களைப் படைத்தவராகிய பிரம்மதேவர் அப்போது விஷ்ணுவிடத்திலும் என்னிடமுத்திலும் சாமர்த்தியம்  இருப்பதை அறிந்து விஷ்ணுவுக்கும் எனக்குமாக இரண்டு விற்களைத் தந்தார்.

பினாகமென்பது என் வில்.

சார்ங்கமென்பது விஷ்ணுவின் வில்.

மிகுதியுள்ள மூங்கிலினால் காண்டீவம் என்னும் மூன்றாவது வில் உண்டாயிற்று. அதைச் சந்திரனுக்குக் கொடுத்து ப்ரம்மா திரும்பத் தன் உலகம் சென்றார்.

–    அநுசாஸன பர்வம் அத் 206

சிவபிரானைத் தொழுவதால் ஏற்படும் பலன்கள்!

யுதிஷ்டிரரிடம் கிருஷ்ணர் தனக்கு உபமன்யு கூறியதை விளக்குகிறார் இப்படி: (அநுசாஸனபரவம்ம் 49வது அத்தியாயம்)

மனத்தினாலாவது சிவனைச் சரணம் அடையும் மனிதர்கள் எல்லாப் பாவங்களையும் நீக்கித் தேவர்களுடன் வசிப்பர். குளம், ஆறு முதலியவற்றின் கரைகளைப் பலமுறை இடித்தும் இவ்வுலகம் அனைத்தையும் தீயில் போட்டும் இருப்பவனும் ஈஸ்வரரைப் பூஜை செய்வானாயின் அவனை அப்பாவம் பற்றாது.

எல்லா நற்குணங்களும் குன்றி  எல்லாப் பாவங்களோடும் சேர்ந்திருந்தாலும் சிவனை மனத்தினால் தியானிப்பவன் அந்தப் பாவங்கள் அனைத்தையும் ஓட்டி விடுகிறான். மகாதேவரைச் சரணம் அடைந்த புழு, பக்ஷி,  விட்டில், மிருகங்கள் இவற்றிற்கும் கூட எங்கும் பயம் இராது. ஆப்படியே பூமியில் சிவபக்தியுள்ள மனிதர்கள் சம்சாரத்திற்கு உட்படமாட்டார்கள்.”

எந்த திசையில் யாருக்கு பலி போட வேண்டும்?

பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு வாசுதேவருக்கும் பூமி தேவிக்கும் நடந்த ஒரு உரையாடலைத் தெரிவிக்கிறார்.

பூமிதேவி மாதவரிடம் கூறுகிறாள் “மாதவரே! தெற்கில் யமனுக்கும் மேற்கில் வருணனுக்கும் வடக்கில் சந்திரனுக்கும் நடுவீட்டில் பிரம்மதேவருக்கும் வடகிழக்கில் தன்வந்தரிக்கும் கிழக்கில் இந்திரனுக்கும் வீட்டின் வாயிலில் மனிதர்களுக்கும் என்று சொல்லிப் பலி போடச் சொல்லுகின்றனர்.  மருத்துக்களுக்கும் தேவர்களுக்கும் பலியை வீட்டின் உட்புறத்தில் போட வேண்டும். விசுவதேவர்களுக்கு பலியை ஆகாயத்தில் போட வேண்டும். இரவில் சஞ்சரிக்கும் பேய், பிசாசுகளுக்கு பலியை இரவில் போட வேண்டும். இவ்வாறு பலியை நன்றாகப் போட்ட பிறகு பிராம்மணனுக்கு பிக்ஷையிட வேண்டும். பிராம்மணன் கிடைக்காத போது முதல் அன்னத்தை எடுத்து அக்னியில் போட வேண்டும்.

–    அநுசாஸன பர்வம் 154வது அத்தியாயம்

***