Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
One of the oldest Tamil Temples, known as Highgate Hill Murugan Temple in London, celebrated its Fourth Maha Kumbabishekam- Consecration Ceremony today 30-4-2025. It was attended by 200 to 300 people this morning. Every 12 year a Hindu temple must have a renovation and consecration according to Hindu scriptures.
Murugan is the Tamil name of Lord Skanda/ Kartikeya.
Run by Sri Lankan Tamils with the support of all the Tamils from different countries, started Pujas in 1979 and celebrated first Kumbabishekam in 1986. Late Sri Sabapathi Pillai was the force behind the temple construction.
In addition to daily Pujas, the temple runs several classes to spread Saivism and regularly conduct Manikkavasagar Festival every December.
Queen Elizabeth
Queen Elizabeth visited only one Hindu temple and that was this Highgate Hill Murugan Temple.
Queen Elizabeth II visited the Highgatehill Murugan temple on the 6th of June 2002, in her first major engagement after the “Golden Jubilee” celebration. Highgatehill Murugan Temple is the first Hindu temple to be visited by the British monarch in the British history. Accompanied by Prince Philip, the Queen spent about 45 minutes at the temple and a “Special Pooja of blessings” was performed during the visit.
Another notable thing about the temple is Mr Nagarajan has been the manager of the temple for very long time. He is known to everyone.
Mayuram Priest
For this Kumbabishekaam, the temple has invited Sri A V Swaminatha Sivachariyar from Mayiladuthurai in Tamil Nadu. He runs a successful Veda Patasala in Mayuram (Sivapuram Veda Patasala). He is expanding his Vedic Education. He was assisted by all the priests from different temples in London today. London has 28 Tamil Temples, both big and small. North Indians have more temples in London.
Late historian and famous archaeologist Dr R Nagaswamy has performed several Dance Dramas with the help of this temple – all the dramas were about Tamil Saints and Hindu stories.
The temple is visited by hundreds of people during weekends.
At the end of three hour ceremony today, all were given pack lunch and water bottle. The temple committee has done fool proof arrangements to perform everything on time.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Stamps posted today include
Brides of India: Tamil, Bengali, Kashmiri, Rajasthani Hindu Brides, Jayaprakash Narayan, Gandhi in Gold Colour Salt Satyagraha, Schubert, Annamalai Chettiyar, Great Indian Bustard, Ansari, Gold Mining, Hijri, Mavlankar, St Stephens college Scottish Church College , Government Mint, Childrens day dancing, Gold Mining etc.
–Subham—
Tags Part 24, “500 Indian Stamps, Brides of India: Tamil, Bengali, Kashmiri, Rajasthani Hindu Brides, Jayaprakash Narayan, Gandhi in Gold Colour Salt Satyagraha, Schubert, Annamalai Chettiyar, Great Indian Bustard, Ansari, Gold Mining, Hijri, Mavlankar, St Stephens college Scottish Church College , Government Mint, Childrens day dancing, Dhyan Chand, HaqueGold Mining etc.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தம்மபதம் என்பது பெளத்தர்கள் பின்பற்றும் வேத புஸ்தகம். இதிலிருந்து 31 பொன்மொழிகளை 2025 மே மாத காலண்டரில் கொடுத்துள்ளேன் ; இவை புத்த பெருமான் சொன்ன அருள் மொழிகள்.
பண்டிகை நாட்கள் : மே தினம்-1; சங்கர ராமானுஜர் ஜயந்தி-2; அக்கினி நக்ஷத்திர ஆரம்பம்-4; குரூப் பெயர்ச்சி-11; புத்த பூர்ணிமா /சித்திரா பெளர்ணமி-12; அக்கினி நக்ஷத்திர முடிவு-28.
அமாவாசை– மே 27; பெளர்ணமி– மே 12;
ஏகாதசி உணாவிரத நாட்கள்– மே 8, 23.
சுபமுகூர்த்த தினங்கள் – மே 16, 18, 23.
Auspicious Dates and Muhurat Timings in May 2025: (North Indian Panchang)
May 15th: Auspicious Muhurat timings start at 02:09 PM and end at 03:15 PM.
May 16th: Muhurat timings from 05:30 AM to 04:07 PM, with the Tithi being Chaturthi.
May 17th: Muhurat timings from 05:44 PM to 05:29 AM on May 18th, Tithi Panchami.
May 18th: Muhurat timings from 05:29 AM to 06:52 PM, Tithi Shashthi.
May 22nd: Muhurat timings from 01:12 AM to 05:26 AM on May 23rd, Tithi Ekadashi.
May 28th: Auspicious Muhurat timings start at 05:45 AM and end at 07:06 PM.
சில மாநிலங்களில் அனுசரிக்கப்படும்
நரசிம்ம ஜயந்தி- மே 11;
நாரத ஜயந்தி- மே 13;
ராணாபிரதாப் ஜயந்தி- மே 29;
சூர்தாஸ் ஜயந்தி – மே 2;
ரவீந்திரநாத் தாகூர் ஜயந்தி- மே 8, 9;
****
மே மாத காலண்டர் புத்தரின் பொன் மொழிகள்
மே 1 வியாழக் கிழமை
வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது; வெறுப்பை அன்பினால்தான் வெல்ல முடியும்; இது அழியாத உண்மை (தம்மபதம் 5)
***
மே 2 வெள்ளிக்கிழமை
பயிற்சி பெற்ற யானைகளையே போருக்கு கொண்டு செல்வர். பயிற்சி பெற்ற யானையின் மீதே அரசனும் பவனி வருவார். அதுபோலவே பயிற்சி – புலனடக்கப் பயிற்சி –பெற்றவர்களே, கஷ்டம் வந்தாலும் சாந்தமாக வாழ்வர்-321
***
மே 3 சனிக்கிழமை
பயிற்சிபெற்ற கோவேறுக் கழுதைகளும், சிந்து மாகாணக் குதிரைகளும் பலமான யானைகளும் பயிற்சி பெற்றவுடனேயே நன்றாக இருக்கின்றன. அது போலவே புலனடக்கப் பயிற்சி பெறவனே சிறந்தவன்.-322
***
மே 4 ஞாயிற்றுக்கிழமை
மற்றவர்களுடைய குறைகளை எண்ணிப் பார்க்காதே; அவர்கள் என்ன செய்தார்கள் என்ன செய்யவில்லை என்று சிந்திக்காதே; உன்னுடைய பாவச் செயல்களை எண்ணிப் பார். நீ என்ன செய்தாய், என்ன செய்யவில்லை என்பதை சிந்தித்துப்பார் (50)
****
மே 5 திங்கட் கிழமை
ஒரு அழகான மலர் வாசனை இல்லாமலிருப்பது போலத்தான் ஒருவான் நெய்போலப் பேசிவிட்டு அதைப் பின்பற்றாமல் இருப்பதும் (தம்மபதம் 52)
****
மே 6 செவ்வாய்க்கிழமை
பயப்பட வேண்டிய விஷயங்களுக்கு பயப்படாமல் இருப்பவர்களும், பயப்படக் கூடாத விஷயங்களுக்கு அனாவசியமாகப் பயப்படுவோரும் தவறான கருத்துடைய மனிதர்களே. அவர்கள் கீழ்நோக்கிச் செல்பவரே—(தம்மபதம் 317)
***
மே 7 புதன் கிழமை
தர்ப்பைப் புல்லின் நுனியினால் உணவு எடுத்துக்கொண்டு மாதக் கணக்கில் உண்ணா நோன்பு இருக்கும் முட்டாள், சத்தியதர்மத்தைப் பின்பற்றும் ஒரு மனிதனின் 16-ல் ஒரு பகுதிக்கும் சமம் ஆகான் –70
***
மே 8 வியாழக் கிழமை
உண்மையற்ற பொருளை இருக்கிறது என்று எண்ணுவோனும், உண்மையான பொருளை இல்லை என்பானும் என்றும் சத்தியத்தைக் காணவே மாட்டார்கள். அவர்கள் தவறான பாதையில் சென்று வை தப்பிப்போனவர்களாவர் (தம்மபதம் 11)
***
மே 9 வெள்ளிக்கிழமை
காலம் தாழ்த்தாது உடனே நல்லது செய்யுங்கள்; கெட்டதிலிருந்து உங்கள் மனது தள்ளியே இருக்கட்டும். ஒரு மனிதன் நல்லது செய்வதை தாமதித்தால் அவன் மனது கெட்டது செய்வதில் இறங்கி ஆனந்தமாக்ச் செயல்படும் (தம்மம் 116.)
***
மே 10 சனிக்கிழமை
நல்லவனூகுத் தீங்கு செய்யும் முட்டாள், தன் தலையிலேயே மண்ணைப் போட்டுக் கொண்டவன் ஆவான். பாவமற்ற தூய்மையான ஒருவனுக்குத் தீங்கு செய்தால் அந்தத் தீங்கு காறில் வீசி எறிந்த தூசி ஒருவன் முகத்திலேயே வந்து விக்ழுவது போல தீங்கு செய்தவனையே வந்து சேரும் (தம்மபதம் 125)
***
மே 11 ஞாயிற்றுக்கிழமை
ஒருவன் கெட்ட எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்குத் துன்பம், வண்டி மாட்டின் மீது அந்த வண்டிச் சக்கரங்கள் எப்படி தொடர்ந்து வருகின்றனவோ அப்படி வரும். – தம்மபதம் 1
***
மே 12 திங்கட் கிழமை
ஒருவன் நல்ல எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்கு இன்பம், ஒருவனுடைய நிழல் எப்படி அவனைத் தொடர்ந்து வருகின்றதோ அப்படி வரும்.– தம்மபதம் 2
***
மே 13 செவ்வாய்க்கிழமை
புத்திசாலி மனிதன் விழிப்புடன் இருந்து எண்ணங்களைக் கட்டுப்படுத்தினால் அவன் துன்பங்களை உதறிவிட்டு, மேலே உள்ள ஞானம் என்னும் அரண்மனைக்குச் செல்வான். அதன் பலகணியிலிருந்து துன்பப் படுவோரைக் காண்பான். இது குணம் என்னும் குன்று ஏறி நின்ற முனிவர்கள் மலை உச்சியிலிருந்து சமவெளியிலுள்ள அஞ்ஞானிகளைக் காண்பதற்குச் சமம்.–தம்மபதம் 28
***
மே 14 புதன் கிழமை
புலன்களின் சேட்டை பற்றி விழிப்புடன் இருந்ததாலேயே, இந்திரன் தேவர்களுக்குத் தலைவன் ஆனான். இதைக் கடவுளரும் பாராட்டுகின்றனர். விழிப்பின்மையை எல்லோரும் தூற்றுவர்.- தம்மபதம் 30
***
மே 15 வியாழக் கிழமை
ஒருவன் தான் செய்த தீமையின் விளைவுகள் தெரியாத வரை அதைத் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பான்; அது அவனுக்கு இன்பமாகத் தோன்றும். ஆனால் தீய செயல்களின் விளைவுகள் அவனுக்குத் திரும்பும்போது அவன் அதை அனுபவித்து அறிவான் (தம்மபதம்-119)
***
மே 16 வெள்ளிக்கிழமை
“கெட்டது செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். கெட்டது செய்தால் துன்பம் நம்மைச் சுட்டெரிக்கும். ஆகையால் நல்லதையே செய்யுங்கள். ஏனெனில் நல்லது செய்வோருக்கு என்றும் துன்பம் இல்லை” – 314
***
மே 17 சனிக்கிழமை
மற்றவன் மனைவியை அனுபவிப்பவனுக்கு நான்கு கேடுகள் விளையும்: 1.அவன் மதிப்பும் மரியாதையும் நீங்கிவிடும் 2.அவன் பயத்தோடுதான் இன்பம் அனுபவிப்பான் 3.எல்லோரும் அவனை பழி தூற்றுவர் 4. அவன் நரகத்தில் விழுவான் – தம்மபதம் 309
***
மே 18 ஞாயிற்றுக்கிழமை
பொய் பேசாதிருப்பவனை உலகமே நேசிக்கும் (தம்ம 217)
***
மே 19 திங்கட் கிழமை
ஒரு மனிதனின் தோற்றத்தையும் சொற்களையும் வைத்து அவனை கௌரமானவன் என்று நினைப்பதற்கில்லை; பொறாமை, பேராசை, அகந்தை ஆகிய மூன்று பாவங்களும் இல்லாதவன், விவேகமுள்ளவன், அன்பே உருவானவன் — ஒருவனே மதிக்கப்படத் தக்கவன் –தம்ம 262, 263
***
மே 20 செவ்வாய்க்கிழமை
நிலத்தில் விளையும் களை, பயிர்களைப் பாதிக்கின்றன; மனதில் விளையும் ஆசைகள், மனிதனின் குணநலன்களைப் பாதிக்கின்றன.- தம்மபதம் 359
ஒரு மரத்தை வெட்டினாலும் அதன் வேர்கள் சேதமாகாவிட்டால் அது தழைத்தோங்கும்; அதுபோல ஆசை வேர்கள் அறுபடாதவரை, துன்பம் தழைத்தோங்கும்- தம்மபதம் 338
***
மே 23 வெள்ளிக்கிழமை
ஒருவனை ஆசைகள் சூழுமானால், அவன் “பிரானா” கொடி வளருவதைப்போல, துன்பங்களால் சூழப்படுவாந்- தம்மபதம் 335
***
மே 24 சனிக்கிழமை
உங்களை நான் நேசிப்பதால் சொல்கிறேன்; ஆசை என்னும் பந்தக்கட்டுகளை அறுத்து எறியுங்கள்; உசிரா என்னும் வாசனைக் கிழங்கு எடுப்பதற்காக, “பிரானா” கொடியை வெட்டி எறிவது போல ஆசையை வெட்டுங்கள் – தம்மபதம் 337
***
மே 25 ஞாயிற்றுக்கிழமை
பிராமணனுக்கு ஒருபோதும் தீங்கு செய்யக்கூடாது; தீங்கு செய்தவர்களுக்கு பிராமணனும் பதிலடி தரக் கூடாது- தம்மபதம், 389
***
மே 26 திங்கட் கிழமை
நீண்ட முடி (குடுமி) வைப்பதாலோ, பிறப்பினாலோ ஒருவன் பிராமணன் ஆவதில்லை; சத்தியமும், புனிதமான தூய்மையும் கொண்டவனே பிராமணன்; அவன் மகிழ்ச்சிக்கடலில் இருப்பான்.- தம்மபதம், 393
ஒரு பிராமணனும், சந்யாசியும் பூர்வ ஜன்ம பாபத்திலிருந்து விடுபடுகிறார்கள்; தந்தை தாயைக் கொலை செய்திருந்தாலும், இரண்டு அரசர்களைக் கொன்றிருந்தாலும், ஒரு அரசையும் மக்களையும் அழித்திருந்தாலும், பாபங்களிலிருந்து விடுபடுவர்–தம்ம பத பாடல் 294
***
மே 29 வியாழக் கிழமை
ஏ பிராமணனே! ஆசையை விடுத்து, சம்சார சாகரத்தைக் கடந்து செல்; நிர்வாண நிலையை அடைவாய் – தம்மபதம் 383
***
மே 30 வெள்ளிக்கிழமை
“ஒரு மனிதன் அறியாமையாலோ, மூடத்தனத்தாலோ பேசாமல் இருந்தால் அவன சிந்தனைச் சிற்பி அல்ல. ஒரு முனிவர் சிந்தனையாளர் ஆவார். ஒரு தராசுத் தட்டில் நல்லதையும் கெட்டதையும் தனித்தனியே வைத்து சீர்தூக்கிப் பார்ப்பவன் முனிவன், சிந்தனையாளன் ஆவான்.—269
***
மே 31 சனிக்கிழமை
உண்மையே பேசு, கோபப் படாதே, கேட்பவருக்கு உன்னிடம் உள்ளதைக் கொடு; இந்த மூன்றும் உன்னைக் கடவுளை நோக்கி அழைத்துச் செல்லும் (224)
***
Bonus Quotes
ஆசை போனால், இன்பம் வரும்; தங்க நாணய மழையே பெய்தாலும் ஆசை அடங்காது. இன்பத்தின் எல்லையில் துன்பம் நிற்கிறது. கடவுள் கொடுக்கும் இன்பங்களை ஞானியானவன் நாட மாட்டான் (தம்ம-187)
***
கருமிகள் சுவர்க்கத்துக்குள் புக முடியாது; முட்டாள்கள் தானத்தைப் புகழ மாட்டார்கள்; புத்திசாலிகளே தானம் செய்து, அதன் மூலம் இன்பம் அடைவர் (தம்ம.177)
–Subham—
Tags- மே 2025 காலண்டர், புத்தர் , பொன் மொழிகள், தம்மபதம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
20-4-2025 ஞான மயம் நிகச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை! இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
துக்காராம்! – 1
ச. நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே அனைவருக்கும் வணக்கம். நமஸ்காரம்.
இன்று பகவானின் பக்தர்களில் சிறந்தவராகக் கருதப்படுபவரும் ஏராளமான அபங்கம் என்னும் துதிப்பாடல்களைப் பாடி அருளியவருமான துக்காராம் மஹராஜ் பற்றிச் சிந்திக்கப் போகிறோம்.
மகராஷ்டிர மாநிலத்தில் புனே அருகில் உள்ள தேஹுவில் துக்காராம் மஹராஜ் அவதரித்தார். அவரது தந்தையின் பெயர் போல்ஹோபா. தாயார் கங்காயி என்பவர். இவரது காலம் சிவாஜி மஹாராஜின் காலத்தை ஒட்டியது. சிவாஜியின் பிறந்த தேதி19-2-1630. சிவாஜி மறைந்த தேதி 3-4-1680. ஆகவே அவர் 1630க்கு முன்னர் பிறந்தவர் என்பது தெரிகிறது. 1608ம் ஆண்டு அவர் பிறந்தார் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.
துகோபா உள்ளிட்ட பல பெயர்களால் அவர் அழைக்கப்பட்டார். வர்காரி சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர் அவர்.
கிருஷ்ணரை அவர் விதோபா என்றே அழைத்தார்.
துக்காராம் இறை பக்தியில் ஜாதியை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
‘ஒரு மனிதனின் ஜாதியைப் பற்றி ஒருபோதும் கடவுள் சிந்திப்பதில்லை. கடவுளுக்கு அவரது பக்தர்கள் அனைவரும் சமமே” என்றார் அவர். மிகப் பெரும் சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்த அவரை மக்கள் பெரிதும் மதித்தனர்.
இந்த ஒன்றே அவருக்குப் பல விரோதிகளைத் தந்தது. மாம்பாஜி என்ற ஒருவன் அவரைத் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தான். முதலில் துக்காராம் அவருக்கு கோவிலில் பூஜை செய்யும் பொறுப்பைத் தந்திருந்தார். ஆனால் கிராமத்தில் உள்ள அனைவரும் துக்காராமை பெருமதிப்புடன் வணங்குவதைக் கண்ட அவனுக்குப் பொறாமை உண்டாயிற்று. ஒரு முறை முள் கம்பினால் அவன் துக்காராமை அடித்தான். அவரை கடுமையான வார்த்தைகளினால் திட்டுவது அவனது வழக்கம். ஆனால் இறுதியில் அவனும் துகாராமின் நல்ல சீடர்களுள் ஒருவனாக ஆனான்.
4600 அபங்கங்களை அவர் இயற்றியுள்ளார் என்று தெரிகிறது.
மகராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஏழு கோடி பேர்கள் ஜாதி வித்தியாசம் இன்றி அவரது அபங்கங்களைப் பாடுகின்றனர் என்ற ஒன்றே அவரது சிறப்பைச் சுட்டிக் காட்டும்.
சத்ரபதி சிவாஜி, துக்காராமைத் தனது குருவாக மதித்தார். ஒரு முறை பண்டரிபுரத்தில் நடைபெறும் ஆஷாட சுக்ல ஏகாதசி உற்சவத்தில் தனது அபங்கங்களைப் பாட விரும்பிய துக்காராம் அங்கு சென்றார்.
சத்ரபதி சிவாஜி மஹாராஜ் துக்காராமின் அபங்கங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு அதைக் கேட்க விரும்பி மாறுவேஷத்தில் கிளம்பினார்.
அப்போது ஔரங்கசீப் எப்படியேனும் சிவாஜியைப் பிடிக்க எண்ணி தன் ஒற்றகளை நாலா பக்கமும் அனுப்பிக் கொண்டிருந்தான். சிவாஜி பண்டரிபுரத்தில் துக்காராமின் அபங்கம் கேட்க வரலாம் என்ற செய்தியை ஒற்றர் மூலம் அறிந்த அவன் அவரைக் கைது செய்து கொண்டு வர ஒரு குதிரைப் படையையே அனுப்பினான்.
இதை துக்காராமும் அறிந்தார். குதிரைப் படை வந்து கோவிலை முற்றுகை இட மன்னருக்குத் தீங்கு வராமால் காக்க பண்டரிநாதனை வேண்டினார் துக்காராம். பண்டரிநாதன் மனம் கனிந்தான், சிவாஜியைப் போல ஒரு உருவம் குதிரை மீதேறிச் செல்வதைக் கண்ட ஔரங்கசீப்பின் குதிரைப் படை சிவாஜியைத் தொடர்ந்தது. காடு மேடெல்லாம் சுற்றி அலைந்த சிவாஜி பின்னர் திடீரென்று காணாமல் போனார்.
மறுநாள் சிவாஜி மஹாராஜ் தன்னைப் போலவே ஒரு சிவாஜி குதிரையில் ஏறிச் சென்றதையும், ஔரங்கசீப்பின் குதிரைப்படை அழிந்த விதத்தையும் கேட்டு பாண்டுரங்கனின் கருணையை எண்ணி மனம் கசிந்தார்.
துக்காராம் ஒரு முறை வறுமையால் வாடியதை அறிந்த சிவாஜி தானே ஒரு வியாபாரி வேஷம் பூண்டு துக்காராமிடம் வந்து தானிய மூட்டைகளை அளித்தார். அவர் சிவாஜி தான் என்பதை அறிந்து கொண்ட துக்காராம் மறுக்காமல் அதை ஏற்றுக் கொண்டார். அதை வழக்கம் போல பக்தர்களுக்கு விநியோகித்தார்.
துக்காராமின் வாழ்வில் இறைவன் நடத்திய அற்புதங்கள் பல. உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தைச் சொல்லலாம். துக்காராமின் பக்திப் பாடல்களை கேட்டு பக்தி மேலோங்கிய குடியானவன் ஒருவன் தன் குடும்பப் பொறுப்பைக் கவனிக்கவில்லை. எதிர்பாராத விதமாக அவனது சிறிய குழந்தை இறந்து விட்டது. இதனால் துக்கமும் வெறுப்பும் கோபமும் அடைந்த அந்தக் குடியானவைனின் மனைவி நேராகத் துக்காராமிடம் வந்து முறையிட்டாள்
“உங்களால் தானே என் கணவர் குடும்பத்தையே மறந்து விட்டார். அதனால் தானே என் குழந்தையின் வியாதியைக் கூட அவர் தீர்க்க முனையவில்லை. இதோ! குழந்தை இறந்து விட்டதே? இதற்கு நீர் தானே பொறுப்பு?“ என்று அழுது புலம்பினாள்.
இதைக் கேட்ட துக்காராம் மிக்க வருத்தமுற்றார். “பாண்டுரங்கா, இந்தக் குழந்தையைக் காப்பாற்ற மாட்டாயா?” என்று முறையிட்டார்.
அவர் மெய்மறந்து கண்களை மூடிப் பாடுகையில் குழந்தை எழுந்து வந்து அவரது சட்டையைப் பிடித்து இழுத்தது. அவர் கண் விழித்துப்ப் பார்த்து பாண்டுரங்கனின் கருணையைக் கண்டு வியந்து போற்றினார்.
ஊரார் அனைவரும் தம் கண் எதிரில் நடந்த இந்த சம்பவத்தால் மெய் சிலிர்த்தனர்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 23
I have been collecting stamps for over 60 years. I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.
இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .
Here are stamps of India:
Four different Aeroplanes, Helen Keller, Olympics Jumping, Horse Riding, Prem Chand, Kesav Chandra Sen, N M Joshi, Aman Ali, Madras Sappers, Darul Deoband, Army Post Office, Ulloor Parameswara Iyer, Bulb, Hirakud dam mint, Table tennis, paddy field, Breast feeding, Shivaji 30p, Apiculture, Rs Ten Stamps, Book Fair, Copper Ticket, Bulb mint, Welthy Fisher, Mount batten,
–Subham—
Tags-Pictures of 2500 Indian Stamps ,Part 23, Four different Aeroplanes, Helen Keller, Olympics Jumping, Horse Riding, Prem Chand, Kesav Chandra Sen, N M Joshi, Aman Ali, Madras Sappers, Darul Deoband, Army Post Office, Ulloor Parameswara Iyer, Bulb, Hirakud dam mint, Table tennis, paddy field, Breast feeding, Shivaji 30p, Apiculture, Rs Ten Stamps, Welthy fisher, Rowland Hill, Theresa, Mountbatten
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
56. பாணினி 57.பதஞ்சலி
உலகமே வியக்கத்தக்க அளவுக்கு முதல் இலக்கண நூலை யாத்தவர் பாணினி (Seventhu Century BCE). ‘நம்பரும் திறல்’ என்று பாரதியார் பாடலில் புகழப்பட்டவர். சுருக்கம் என்றால் அப்படிச் சுருக்கமாக, வான் புகழ் வள்ளுவனை விழுங்கிச் சாப்பிடும் அளவுக்குச் சுருக்கமாக 4000 சூத்திரங்களைக் கொண்டு சமஸ்கிருத மொழிக்கு இலக்கணம் கற்பித்தார். அவர் எழுதிய நூலுக்கு அஷ்டாத்யாயீ (எட்டு அத்தியாயம்) என்று பெயர். அவர் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதைய பாகிஸ்தானில் பிறந்தார். அவருக்கு அடுத்த படியாக காத்யாயனர் /வரருசி என்பவர் விளக்க உரை எழுதினார். இவ்வளவு சுருக்கமாக இருந்தால் எதிர்கால சந்ததியினருக்குப் புரியாமல் போய்விடுமே என்று எண்ணி, 500 ஆண்டுகளுக்குப் பின்னர், பதஞ்சலி முனிவர் ‘மஹாபாஷ்யம்’ இயற்றினார். மஹா பாஷ்யம் என்றால் பேருரை என்று பொருள். உண்மையிலேயே அது அளவிலும் சரி, பொருளடக்கத்திலும் சரி, பேருரைதான்.
“பெரும்பாலும் காணப்படும் குறைவான அறிவுடையவர்களால், வியாடி எழுதிய ஸங்க்ராஹானை விளங்கிக் கொள்ள முடியாததால், நலிவடைந்து போன இலக்கணத்தை மிகப்பெரிய தீர்க்கதரிசியான பதஞ்சலி முனிவர், எல்லா விதமான மூலச் சொற்களையும் மஹாபாஷ்ய உரையில் விளக்கினார்” – என்று பர்த்ருஹரி புகழ்மாலை சூட்டினார்
பதஞ்சலி முனிவர் கொடுக்கும் பல எடுத்துக்காட்டுகள் அக்கால பாரத சமுதாயத்தை விளங்கிக்கொள்வதற்கு வகை செய்கிறது. விவசாயம், கிராமீயக் காட்சிகள் , நகர்ப்புற வாழ்வு, பெண்களின் உயர்ந்த கல்வி அறிவு, வரலாறு, பூகோளம் என்று அவர் தொடாத விஷயங்களே இல்லை.
பதஞ்சலி முனிவர் கி.மு 150-ல் வாழ்ந்ததை உலகமே ஒப்புக்கொள்கிறது.
58.பரதமுனி
பரதமுனி எழுதிய நூல் நாட்டிய சாஸ்திரம் . அதில் ஆறாயிரம் ஸ்லோகங்கள் உள்ளன.
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் ஸம்ஸ்க்ருத மொழியில் எழுதினார். அதில் 36 அத்தியாயங்கள் உண்டு. முதல் அத்தியாயமும் முடிவான 36ஆவது அத்தியாயமும் சுவையான செய்திகளைத் தருகின்றன . நாட்டிய சாஸ்திரத்தை ஏன் எழுதினேன்?, எப்படி எழுதினேன்? என்று பரத முனிவரே சொல்லுவது முதல் அத்தியாயத்தில் உள்ளது . சொர்க்கத்தில் மட்டுமே பயன்பட்ட நாட்டிய சாஸ்திரம் பூமிக்கு வந்தது எப்படி என்பதை கடைசி அத்தியாயம் சொல்கிறது
அவர் நாட்டியம், நாடகம், நாடக மேடை அமைப்பு என ஏராளமான விஷயங்களை எழுதியுள்ளார் ; காலம் –
59.வாத்ஸ்யாயனர்
உலகின் முதல் செக்ஸ் புஸ்தகத்தை எழுதியவர் வாத்ஸ்யாயனர் ; நூலின் பெயர் காமசூத்திரம். இதிலும் மனு தர்ம சாஸ்திரத்திலும் ரிக் வேதத்திலும் “சதி” என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் பற்றி சொல்லவில்லை . காமசூத்திரம் பொதுவான அழகு சாதனைக் குறிப்புகள் பற்றியும் சொல்கிறது; மிக வியப்பான விஷயம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கான சிலபஸை- பாட திட்டத்தையும் சொல்கிறது .
சிலப்பதிகாரத்திலும், கம்பன் பாடல்களிலும், லலிதா சஹஸ்ரநாமத்திலும், வாத்ஸ்யாயனரின் காமசூத்திரத்திலும் அறுபத்து நான்கு கலைகள் பற்றிப் படிக்கும்போது உடம்பில் புல்லரிக்கிறது! ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?’ என்று உலகமே எண்ணியிருந்த காலத்தில் 64 கலைகளைப் பட்டியலிட்டு ஒவ்வொரு பெண்ணும் அதைப் பயிலவேண்டும் என்று எழுதிய பெருமை வாத்ஸ்யாயனரையே சாரும்! பிற்காலத்தில் இது அரசர்கள், இளவரசர்கள், இளவரசிகள் ஆகியோர் அனைவருக்கும் பாட திட்டமானதை இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம். அன்று வாத்ஸ்யாயனர் எழுதியதை இந்தியர்கள் பின்பற்றி இருந்தால் இன்று உலகின் தலைசிறந்த பொருளாதார நாடாக இந்தியா ஓங்கி வளர்ந்திருக்கும்.
காம சூத்திர நூலில் வாத்ஸ்யாயனர் எழுதியது, வெறும் காகித திட்டமா? அல்லது செயல்முறையில் பின்பற்றப்பட்டதா என்று ஒரு கேள்வி எழக்கூடும். ரிக் வேதத்தில் உள்ள இருபதுக்கும் மேலான பெண் கவிஞர்களையும் அதற்கு 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் சங்க இலக்கியத்தில் வந்த இருபதுக்கும் மேலான பெண் கவிஞர்களையும் பார்க்கையில் இது காகித திட்டம் அல்ல. உண்மையில் அறிவாளிகளை உருவாக்கிய திட்டம் என்றே உறுதியாகக் கூறலாம்.
60.வராஹமிஹிரர்
மத்தியப் பிரதேசத்தில் உஜ்ஜைனி நகர் அருகில் வாழ்ந்த வராஹ மிஹிரர் இரண்டு உலகப் புகப்பெற்ற நூல்களை 1500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினார்; அவரே சொல்லிவிட்டார்: இவை அவருக்கும் முன்னால் எழுதப்பட்ட நூல்களின் சம்மரி SUMMARY / சுருக்கமான தொகுப்பு என்று!
ஜோதிடம் பற்றி அவர் எழுதிய நூலுக்கு பிருஹத் ஜாதகம் என்று பெயர்; விஞ்ஞானம் பற்றி அவர் எழுதிய நூலுக்கு பிருஹத் சம்ஹிதா என்று பெயர். பிருஹத் சம்ஹிதா ஒரு என்சைக்ளோ பீடியா ; அதில் வான, பூமி, , மனித, பிராணி, நவரத்தின சாஸ்திரங்கள் உள்ளன
பெண்களைக் குறைகூறுவோருக்கு எதிர்க் கேள்வி போடுகிறார் வராஹமிஹிரர் . பல ஜோதிட, வான சாஸ்திர நூல்களை எழுதிய இந்த அறிஞர் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார்.”உண்மையைச் சொல்லுங்கள் ! பெண்கள் பற்றி நீங்கள் சொல்லும் குறைகள் ஆண்களிடத்தில் இல்லையா? பெண்களிடம் கூடுதல் குணங்கள் இருந்த போதும் ஆண் அகந்தையால் பெண்களைக் குறை கூறுகிறான் ; .திருமண உறுதிமொழியை ஆண்கள் மீறினாலும் பெண்கள் மீறினாலும் பாவம் உண்டு என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனால் ஆண்கள் இந்த விதிகளை மதிப்பதில்லை; பெண்களே மதிக்கிறார்கள் ஆகையால் பெண்களே மேல் என்று பெண்களை பாராட்டுகிறார்.
61.மனு நீதி நூல்
மனு நீதி நூலில் உள்ள மொத்த சம்ஸ்கிருத ஸ்லோகங்களின் எண்ணிக்கை–2647; மொத்தமுள்ள அத்தியாயயங்கள்- 12
வெளிநாட்டினர் கருத்துப் படி இதன் காலம் – கி.மு இரண்டாம் நூற்றாண்டு. என்னுடைய கணிப்பு; கி.மு 2000க்கு முந்தியது.
உலகின் முதல் விரிவான சட்டப் புத்தகத்தை எழுதிய மனு, பெண்களை மதிக்காதவர்கள் அடியோடு அழிந்து போவார்கள் என்று எச்சரிக்கிறார். பெண் பாவம் பொல்லாதது, பெண்களை அவமதிப்பது கடவுளுக்கும் பிடிக்காது என்று எச்சரிக்கிறார்.
‘’யார் நலம் பெற விரும்புகின்றனரோ, அவர்கள் எல்லாம் பெண்களை ஆராதிக்கவேண்டும். தந்தையர், சகோதரர், கணவன், மைத்துனர் ஆகியோர் பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும்’’. (மனு3-.55)
‘’எங்கே பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ அங்கே கடவுள் ஆனந்தம் அடைகிறார். எங்கே பெண்கள் மதிக்கப் படுவது இல்லையோ, அங்கே செய்யப்படும் புனிதச் சடங்குகள் பலன் இல்லாமல் போகும்’’. (மனு.3-56)
‘’உறவுக்கார பெண்கள் எங்கே கண்ணீர் வடிக்கின்றனரோ அங்கே அந்தக் குடும்பம் அடியோடு நாசமாகும். எங்கே பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் செழித்துத் தழைத்து ஓங்கி வளரும்’’(மனு.3-57)
‘’எந்த வீடுகளில் பெண்கள் சரியாக நடத்தப் படவில்லையோ அந்த இடங்களில் பெண்களின் சாபம், மந்திர மாயா ஜாலத்தில் பொருள்கள் மறைவதைப் போல வீடுகளை முற்றிலும் அழித்துவிடும்’’(மனு.3-58)
‘’ஆகையால் யாரெல்லாம் நலம் பெறவும் வளம் அடையவும் விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் பெண்களை விழாக் காலங்களிலும், விடுமுறைக் காலங்களிலும் ஆராதிக்க வேண்டும். எப்படி? துணிமணிகள், நகைகள்,அறுசுவை உணவு படைத்துப் போற்றவேண்டும்’’(மனு.3-59)
மனுவை விட வேறு யார் பெண்களுக்கு இவ்வளவு ஆதரவு தர முடியும்? இருக்கிறார், ஒரு ஆசாமி, அவர் பெயர் வள்ளுவர். அவர் நம்மை மாயாஜால (சிலர் மூட நம்பிக்கை) உலகுக்கே அழைத்துச் செல்லுகிறார். பத்தினிப் பெண்கள் மழையைப் பெய் என்றால் பெய்யுமாம் (குறள் 55).
இவர் இயற்றிய சட்டங்கள் தொடாத விஷயமே இல்லை
62.கங்கா தேவியின் மதுரா விஜயம்
மதுரை மீனாட்சி கோவில்— துலுக்கர்கள் ஆட்சிக் காலத்தில் 40 ஆண்டுகள் மூடிக்கிடந்தபோது விஜய நகர மாமன்னர்கள் இந்து மதத்தைக் காப்பாற்ற குமார கம்பண்ண என்ற நாயக்க மன்னர் தலைமையில் படைகளை அனுப்பினர். அவன் மாபெரும் வெற்றி கண்டு தமிழகம் எங்குமுள்ள கோவில்களுக்குப் புத்துயிர் ஊட்டினான். அவன் படை எடுத்த போது அவனுடன் கூடவே வந்தாள் அவனுடைய மனைவி மஹாராணி கங்காதேவி. அவள் போர்க்கால பத்திரிக்கை நிருபர் போல தான் கண்டவற்றை அப்படியே சம்ஸ்கிருதக் கவிதையாகப் பொழிந்து தள்ளினார். இந்த நூலின் பெயர் மதுராவிஜயம். உலகில் போர் பற்றிய முதல் நேரடி வர்ணனை இந்த நூலில்தான் உள்ளது— மற்ற நூல்கள் போர் முடிந்தபின் எழுதியவை..
63.முத்துசுவாமி தீட்சிதர்
சம்ஸ்க்ருத மொழியில் வேறு எவரும் செய்யாத அதிசயங்களை செய்து காட்டியவர் ! ஒரே வேற்றுமையை – விபக்தியைப்— பயன்படுத்தி கிருதிகள் இயற்றினார்; உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லாத அதிசயம் இது.
அரிய தகவல் 1: இவர் ஒவ்வொரு பாடலிலும் ‘குருகுஹ’ என்ற முத்திரையோடு பாடலின் ராகத்தையும் இணைத்துக் கூறுகிறார்.
தகவல் 2: கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான இவர் செய்த ‘வாதாபி கணபதிம் பஜே’ என்ற ஹம்சத்வனி ராக பாடலைத் தான் முதலில் கற்பிப்பார்கள். இவர் மும்மூர்த்திகளில் ஏனைய இருவரான சியாமா சாஸ்திரிகள், தியாகராஜர் ஆகியோர் காலத்தவர்.
தகவல் 3: இவர் வாழ்ந்தகாலம் 1775- 1835. பிறந்தது திருவாரூர், சமாதி அடைந்தது எட்டயபுரம். காசியில் சிதம்பரநாத யோகியுடன் வசித்தது 5 ஆண்டுகள். திருவாரூர், தஞ்சாவூர், காஞ்சீபுரம், எட்டயபுரத்திலும் பல ஆண்டுகள் வாழ்ந்தார்.
தகவல் 4: சங்கீதம், யோக சாஸ்திரம், மந்திரம், உபநிஷதம், சம்ஸ்கிருதம், தெலுங்கு முதலியவற்றில் கரை கண்டவர். சம்ஸ்கிருத சொற்களை அடுக்கு மொழியில் அள்ளித் தெளித்திருக்கிறார். அவைகளில் அழ்ந்த மந்திர தந்திரங்கள் நிறந்திருக்கின்றன.
தகவல் 5: பிள்ளையார் மீது சுமார் 24, சிவன் மீது 100, சக்தி மீது 150, முருகன் மேல் 30, ராமர், கிருஷ்ணர், விஷ்ணு மீது 60, நவக்கிரகங்கள் மீது 9 கிருதிகள் என்று ஷண்மத தத்துவங்களையும் பாடி இருக்கிறார்.
தகவல் 6: இவர் அம்பாள் மீது பாடிய பாடல்களை ஸ்ரீசக்ரம், மந்திர, யந்திர, தந்திரங்கள் அறிந்தவர்களே பூரணமாக விளங்கிக் கொள்ள முடியும். பரம ரகசியங்கள் நிறைந்தவை. அதே போல பலன்களும் கொடுக்க வல்லவை. இதில் மிகவும் முக்கியமானது நவாவரணக் கீர்த்தனைகள் 9 ஆகும். இதே போல நவக்கிரஹங்கள் பற்றிய 9 பாடல்களில் கிரஹ பீடைகள் விலக மந்திரபூர்வ பாடல்களைப் பாடியுள்ளார்.
தகவல் 7: இவர் பாடல்களில் வரும் புராண, இதிஹாச நிகழ்ச்சிகள் எண்ணற்றவை. அதிகமாகக் கேள்விப்படாத விஷயங்கள் சில: ஒரு பாடலில் குபேரனின் மகன்கள் நளகூபரனும் ,மணிக்ரீவனும் நாரதர் சாபத்தால் மருத மரங்களாகப் பிறந்து கிருஷ்ணனின் உரலால் சாப விமோசனம் பெற்றதைக் குறிப்பிடுகிறார். இன்னொரு பாடலில் தானம் கொடுத்த பசுவையே மீண்டும் தானம் கொடுத்த ந்ருக மகாராஜன் ஓணாயாகப் பிறந்து கண்ண பெருமானால் முக்தி அடைந்ததைப் பாடுகிறார்..
64.வேதாந்த தேசிகன் / வேதாந்த தேசிகர் (1269-1369)
வேதாந்த தேசிகர் காஞ்சிபுரத்தில் பிறந்தார். தந்தையார் – அனந்தசூரி, தாயார்- தோத்தாத்ரி அம்மையார். இயற்பெயர் திருவேங்கடமுடையான் .
தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் நூல்கள் எழுதி வைஷ்ணவத்தை வளர்த்தார். வடகலை சம்பிரதாயத்த்தினர் இவரைப் போற்றி வருகின்றனர். இறைவனுக்கு மொழி வேறுபாடு இல்லை என்பதை நிலைநாட்டியவர் . உபாயவேதாந்த – இரு மொழியில் வல்லவர் — என்ற வழக்கினை நிலைநாட்டினார் .
நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தார் என்பது சம்பிரதாயம் .இவர் திருமாலின் மணியின் அவதாரம் என்பதும் நம்பிக்கை .
120- க்கும் மேலாக இவரெழுதிய நூல்களில் பெரும்பாலானவை சம்ஸ்க்ருதத்தில் உள்ளன அருணகிரிநாதரின் சந்தததமிழ் போல சம்ஸ்க்ருத சந்தக் கவிதைகளை இவர் பாடல்களில் காணலாம். சொல் விளையாட்டுச் சித்தர். இவர் நான்கு மொழிகளில் நல்ல பாண்டித்தியம் பெற்றவர்.
ஸ்ரீ இராமனுஜர் காலத்தைத் தொடர்ந்து வந்த பெரிய வைஷ்ணவ ஆச்சார்யார்; தத்துவ வித்தகர்; கவிஞர்; பல நூற்கண்ட பெருமகனார். மாலிக்காபூர் தலைமையில் வந்த முஸ்லீம் வெறியர்களின் தாக்குதலுக்குப் பின்னர், ஸ்ரீரங்கப்பெருமாளை கோவிலில் மீண்டும் ஸ்தாபிக்க ஊற்றுணர்ச்சி தந்தவர்
நாள்தோறும் காலையிலிருந்து இரவு வரையிலுள்ள நேரத்தைஒழுங்குபடுத்தி இவர் அமைத்திருந்த வேலைத் திட்டம் ‘தினசரியை’ என வழங்கப்பட்டது. இது வைணவரின் நித்திய கரும வழிகாட்டியாகக் கருதப்படுகிறது.
****
Last Part —மூககவி , வால்மீகி, வியாசர் ,சுபாஷித ஸ்லோகங்கள், கல்வெட்டுக் கவிஞர்கள்,அமரசிம்மனின் அமரகோஷம்ஆகியன பற்றியும் அடுத்துக் காண்போம்
To be continued………………
Tags- வேதாந்த தேசிகர் முத்துசுவாமி தீட்சிதர்,கங்கா தேவி, மனு நீதி நூல் ,வராஹமிஹிரர் ,வாத்ஸ்யாயனர் ,பரதமுனி ,பாணினி பதஞ்சலி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
25-3-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!
நிறைய விமான விபத்துக்கள்! விமானப் பயணம் மேற்கொள்வது அபாயமா?
ச. நாகராஜன்
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம் அருகே உள்ள, மின்சார துணை மின்நிலையத்தில் 2025 மார்ச் 21ம் தேதி எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்படவே 1350 விமானங்களின் பயணம் தடைப்பட 2,91000 பயணிகள் பெருந்துன்பத்திற்கு ஆளாயினர்.
இது ஒரு புறமிருக்க, மனதை நடுநடுங்க வைக்கும் கோரமான சமீபத்திய விமான விபத்துக்கள் இனி விமான பயணத்தை மேற்கொள்வதா வேண்டாமா என்ற கேள்வியைப் பலரிடமும் எழுப்பியுள்ளது!
இரண்டாயிரத்துஇருபதுகளில் மூன்று வருடங்களில் 300 மோசமான விபத்துக்கள் என்றால் ஆயிரத்திதொள்ளாயிரத்து எண்பத்தியிரண்டு மற்றும் எண்பத்தி மூன்றில் மட்டும் 600 விபத்துக்கள் நடந்துள்ளன.
பெரும்பாலான விமான விபத்துக்கள் சிறிய விமானங்கள் பறக்கும் போது தான் ஏற்படுகின்றன!
அமெரிக்க விமானம் ஒன்றும் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரும் மோதியதில் 67 பேர் இறந்தனர். வான் வழி என்பது மோசமான வழிதானோ என்ற பயத்தை இது ஏற்படுத்தி விட்டது.
டொரோண்டோவில் சமீபத்தில் நடந்த டெல்டா ஏர்லைன்ஸ் ஃப்ளைட் 4819 இன்னொரு மோசமான விபத்தாகும்.
ஆனால் உண்மையில் ஆராயப் போனால் அமெரிக்காவில் மட்டும் 90 லட்சம் வணிக விமானப் போக்குவரத்து ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. இதில் ஒன்று அல்லது இரண்டைப் பெரிதாக எடுத்துக் கொண்டால் பயம் வரத்தான் செய்யும்.
சில சமயங்கள் நெருங்கி இருந்து மோதும் நிலையில் இருந்த விமானங்கள் தப்பிப் பிழைத்த சம்பவங்களும் நிறைய உள்ளன.
ஓடுபாதை எனப்படும் ரன்வே விபத்துக்களும் தனி ரகமானவை.
காக்பிட்டில் உள்ள ஆக்ஸிஜன் அமைப்பில் உள்ள சர்க்யூட்டில் ஷார்ட் சர்க்யூட்டினால் ஏற்படும் தீயைப் பலரும் தீவிரவாதிகளின் சதித் திட்டம் என்று தவறாகப் பிரசாரம் செய்து விடுகிறார்கள்.
கைரா டெம்ப்ஸி (Admiral Cloudberg, aka Kyra Dempsey) என்ற பெண்மணி 300 விமான விபத்துக்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து விட்டார்.
இவர் தனது ஆய்வின் முடிவில் விமான விபத்துக்கள் ஏற்பட்டதன் காரணங்களை வரிசைப்படுத்துகிறார் இப்படி:
தவறான தகவல் தொடர்பு
தவறான புரிதல்
தவறான யுஎக்ஸ் டிஸைன் (யுஎக்ஸ் என்றால் யூஸர் எக்ஸ்பீரியன்ஸ் அதாவது பயன்படுத்துபவருக்கு உகந்த வடிவமைப்பு)
ஒருவேளை இந்த மூன்றும் சேர்ந்தாலும் விபத்து விளையும்.
விமானத்தில் பறப்பது ஆபத்தா அல்லது விமானப் பயணம் பத்திரமானது தானா என்ற கேள்விக்கு விமான விபத்து ஸ்பெஷலிஸ்டான கைரா டெம்ப்ஸி கூறுவது இது தான்:
“பயப்படாதீர்கள்! மிகைப்படுத்தப்பட்டு அச்சுறுத்தலைத் தரும் அறிக்கைகள் தவறானவை. இவை எப்போதோ ஏற்படும் விபத்துக்களே. ஐந்து வருட சராசரியை எடுத்துப் பார்த்தோமானால் இது ஒன்றுமில்லை என்பது புலப்படும்.
கடந்த ஐந்து வருடங்களில் உலகெங்குமுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துப் பார்த்தோமானால் விமானப் பயணம் போல சொகுசான பாதுகாப்பான பயணம் வேறு எதுவும் இல்லை.
ஆகவே, விமானப் பயணிகளே வழக்கம் போல பயப்படாமல் பயணத்தை மேற்கொள்ளுங்கள். உங்கள் திட்டங்களை வெற்றிகரமாக முடியுங்கள்.”
நல்ல வேளையாக சரியான ஒரு விளக்கம் கிடைத்து விட்டது.
“சரி சார், இதோ போர்டிங் கால் வந்து விட்டது. கிளம்ப வேண்டியது தான்!”
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
collected from popular dailies and edited for broadcast.
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்து வழங்கும் செய்தி மடல்
அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 27-ஆம் தேதி 2025-ம் ஆண்டு
முதலில் காஷ்மீர் செய்தி
காஷ்மீர் தாக்குதலால் நாடு முழுதும் அதிர்ச்சி அலைகள்
காஷ்மீரில் பஹல்காம் என்னும் சுற்றுலாத் தலத்தில் முஸ்லீம் பயங்கரவாதிகள் 28 இந்து சுற்றுலாப் பயணிகளை ஏப்ரல் 22 ஆம் தேதி தாக்கிக்கொன்ற சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது; சவூதி அரேபியாவுக்குச் சென்ற பிரதமர் பாதியில் பயணத்தைக் கைவிட்டு நாடு திரும்பினார் . பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இதற்குக் காரணம் என்பதால் இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்தது ;பயங்கரவாதிகள் நடத்திய படுகொலையில் கடற்படை, விமானப்படை அதிகாரிகள் இருவரும் கொல்லப்பட்டனர் இந்து என்ற ஒரே காரணத்துக்காக புதிதாக கலயாணம் செய்து தேனிலவுக்கு வந்தவர்களையும் பயங்கரவாதிகள் சுட்டுத்தள்ளினார்கள்
நாடு முழுதும் கோவில்களிலும் மடாலயங்களிலும் இந்துக்கள் மோட்ச தீபம் ஏற்றி ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தித்தார்கள். எல்லா அரசியல் கட்சிகளும் இந்தப் படுகொலையைக் கண்டித்தது பாரத நாடு ஒன்றே என்பதை மீண்டும் உலகிற்கு எடுத்துக்காட்டியது . மத்தியக்கிழக்கிலுள்ள பயங்கரவாதிகளை இஸ்ரேல் வேரறுத்து வருவது போல இந்தியாவும் பாகிஸ்தானிய பங்களாதேஷ் பயங்கரவாதிகளை வேரறுக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் பத்திரிக்கைகளில் எழுதி வருகின்றனர் .
நாட்டிலுள்ள இந்துக் கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் புனித பயணம் செல்வார்கள். அங்கு இயற்கையாக உருவாகும் பனிலிங்கம் சிவபெருமானின் வடிவமாக வணங்கப்படுவதே அதற்கு காரணம். யாத்திரைக்காக லட்சக்கணக்கானோர் முன்பதிவு செய்து வருகின்றனர்.
தற்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இம்முறை அமர்நாத் யாத்திரை நடக்குமா என்பது பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதற்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
பயங்கரவாத தாக்குதல் இருந்த போதிலும் ஜம்மு காஷ்மீரில் விரைவில் சுற்றுலா தொடங்கும். அந்த நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ளனர். காஷ்மீரை அதன் வளர்ச்சி பாதையில் இருந்து யாராலும் ஒருபோதும் தடுக்கவே முடியாது. அமர்நாத் யாத்திரை இம்முறை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
திருப்பதியில் உச்சகட்ட பாதுகாப்பு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து திருப்பதி மலையில் உச்சகட்ட பாதுகாப்பு பிறப்பிக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திருப்பதி மலைப்பாதையின் இணைப்புச் சாலை அருகே அனைத்து வாகனங்களும், பக்தர்களின் உடைமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. திருப்பதி மலையில் பக்தர்கள் கூடும் முக்கிய இடங்கள், சந்திப்புகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
****
காஞ்சி சங்கர மடத்தின் புதிய பீடாதிபதி தேர்வு
காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு/20 வயதான துத்து சத்திய வேங்கட சூரிய சுப்ரமணிய கணேச ஷர்மா திராவிட் தேர்வாகியுள்ளார் /ஆந்திர மாநிலம் அண்ணாவரம் ஷேத்திரத்தைச் சேர்ந்தவர் கணேச ஷர்மா திராவிட்/2006ல் வேதம் கற்க தொடங்கியதில் இருந்தே காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஆசியை பெற்றவர் /ரிக்யஜுர், சாம வேதங்கள் மற்றும் சாஸ்திர படிப்புகளை படித்து புலமை பெற்றவர் /தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் பணிபுரிந்து வந்தவர்.
ஏப்ரல் முப்பதாம் தேதி அவருக்கு தற்போதைய பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி தீட்சை வழங்குகிறார். *****
காஞ்சி சங்கராச்சார்யார் மடத்தின் இளைய பீடாதிபதி தேர்வு
காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த கணேச சர்மா திராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வரும் ஏப்ரல் 30ம் தேதி அட்சய திருதியை நாளில் தீட்சை வழங்கப்படும் என்று சங்கர மடம் அறிவித்துள்ளது.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் காஞ்சிபுரத்தில் ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமணிய கணேச சர்மாவுக்கு சன்யாச தீக்ஷை வழங்குகிறார்.
இந்த புனித சன்யாச தீக்ஷை கிமு 482 இல் காஞ்சிபுரத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை நிறுவிய ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியாரின் 2534 வது ஜெயந்தி மஹோத்ஸவத்துடன் (மே 2, 2025) ஒத்துப்போகிறது.
காஞ்சி மடத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆந்திராவின் அன்னவரத்தைச் சேர்ந்த ரிக் வேத அறிஞர் ஸ்ரீ கணேச சர்மா திராவிட், 2006 ஆம் ஆண்டு வேதப் படிப்பில் ஈடுபட்ட காலத்திலிருந்தே, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஆசிகளையும் தொடர்ச்சியான அருளையும் பெற்றுள்ளார்., ரிக் வேதத்துடன் கூடுதலாக யஜுர் வேதம், சாமவேதம்,ஆறு அங்கங்கள் , தசோபநிஷத் ஆகியவற்றையும் முடித்து சாஸ்திரப் படிப்புகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் .
அவர் ஆந்திராவில் உள்ள துனியில் 2001 ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை பெயர் ஸ்ரீநிவாச சூர்ய சுப்ரமணிய தன்வந்திரி. தாயார் பெயர் மங்காதேவி.
ஸ்ரீ சர்மா வேதக் கல்வியை கர்நாடகாவின் ரத்னாகர பட் சர்மாவிடமும் , சம்ஸ்க்ருத இலக்கணத்தை
திருமலை திருப்பதி தேவஸ்தான வேத அறிஞரான பல்லாமுடி சத்திய வெங்கட ரமணமூர்த்தியிடமும் படித்தார். ஸ்ரீ கம்மம்பள்ளி சதீஷாச்சாரியாரின் கீழ் வேத அர்த்தத்தையும் கற்றார்
வேதப் படிப்புகள் தவிர, அன்னவரத்தில்10–வது வகுப்பு தேர்வையும் முடித்துள்ளார்..
நீண்டகாலமாக எதிர்பார்த்த இந்த அறிவிப்பு பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியள்ளது.
****
பொன்முடி பதவி நீக்கம் : தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு, பொன்முடி, ஜூன் 5-ஆம் தேதிக்குள் பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கில் முதலமைச்சர் குறித்துத் தெரிவித்த கருத்துகளை மனுவில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று, வழக்கு மனுவில் திருத்தம் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரியது தொடர்பாக ஜூன் 5-ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும், பொன்முடிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 19-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.
****
சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எதிரான கருத்துகளை அனுமதிக்க முடியாது: ராகுலுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எதிரான அவதூறு கருத்துகளை அனுமதிக்க முடியாது,” என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு உச்சநீதிமன்றம் எச்சரித்து உள்ளது
கடந்த 2022ம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரையின் போது மஹாராஷ்டிராவில், சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வேண்டும் என்றே அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நிரிபேந்திர பாண்டே என்பவர் உ.பி., நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து ராகுலுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதனை ரத்து செய்யக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் முறையீடு செய்தார். ஆனால், சம்மனை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து ராகுல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த திபாங்கர் தத்தா மற்றும் நீதிபதி மன்மோகன் அமர்வு கூறியதாவது: சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது. இந்த முறை சாவர்க்கர், அடுத்த முறை மஹாத்மா காந்தி ஆங்கிலேயர்களின் ஊழியர் என்று யாராவது கூறுவார்கள்.
மஹாத்மா காந்தி கூட ஆங்கிலேயர்களை தொடர்பு கொண்ட போது, உங்களின் விசுவாசமான ஊழியர் என்ற குறிப்பிட்டது ராகுலுக்கு தெரியுமா? அவர்களை புகழ்ந்து, ராகுலின் பாட்டி இந்திரா பிரதமராக இருந்த போது கடிதம் எழுதியது தெரியுமா?
சுதந்திர போராட்ட வீரர்கள் நமக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தனர். ஆனால், நீங்கள் இப்படி செயல்படுகிறீர்கள். சாவர்க்கர் குறித்த ராகுலின் கருத்து பொறுப்பு அற்றது. சாவர்க்கரை மஹாராஷ்டிரா மக்கள் போற்றுகிறார்கள். அவருக்கு எதிரான இழிவான கருத்துகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.
அடுத்த முறை இதுபோன்ற அறிக்கைகள் வெளியிடப்பாட்டால், நாங்களாகவே முன்வந்து விசாரணை நடத்துவோம். இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள், ராகுல் மீதான குற்றவியல் நடவடிக்கைகளுக்கு தடை விதித்தனர். மேலும் ராகுலின் மனு குறித்து பதிலளிக்கும்படி உ.பி., அரசு மற்றும் நிரிபேந்திர பாண்டேவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டனர்.
*****
ஏப்ரல் 24 ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா தினம்; நியூயார்க் நகரம் பிரகடனம் செய்தது
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் உலகளாவிய சேவை, சமுதாய நலப்பணிகள், கருணை, அமைதிப் பணிகளை கவுரவிக்கும் வகையில், நியூயார்க் நகரம் சிறப்பு பிரகடனம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆதம்ஸ், ஏப்ரல் 24ம் தேதியை ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு கொண்டாட்ட தினமாக பிரகடனம் செய்தார்.
பிரகடன அறிவிப்பை, மேயர் அலுவலக பிரதிநிதிகள் முன்னிலையில் துணை கமிஷனர் திலீப் சவுகான் வெளியிட்டார்.
இதன் மூலம் உலக அளவில், இத்தகைய அறிவிப்பை வெளியிட்ட முதல் அரசு கவுன்சில் நிர்வாகம் என்ற பெருமையை நியூயார்க் நகரம் பெற்றது.இந்த நிகழ்ச்சியில் சத்ய சாய் குளோபல் கவுன்சில் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மனிதாபிமான அடிப்படையில் உலகம் முழுவதும் ஸ்ரீ சத்ய சாய் பக்தர்கள் மேற்கொண்ட நற்பணிகள் குறித்து ஒரு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது
****
இந்துக்களிடம் ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே மயானம் என்ற கொள்கை இருக்க வேண்டும் – மோகன் பகவத்
இந்துக்களிடம் ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே மயானம் என்ற கொள்கை இருக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் அலிகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்து சமூகத்தின் அடித்தளமான மதிப்பீடுகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். பாரம்பரியம், கலாசாரம் மற்றும் தார்மீக கொள்கைகளில் வேரூன்றிய ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சாதி வேறுபாடுகளை களைய வேண்டும் என வலியுறுத்திய அவர், இதற்காக ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே மயானம் என்ற கொள்கையை இந்துகள் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சந்தித்து தங்கள் வீடுகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், நல்லிணக்கம், ஒற்றுமை போன்ற செய்திகளை அவர்களிடம் பரப்ப வேண்டும் எனவும் கூறினார்.
மேலும், தேசியவாதம் மற்றும் சமூக ஒற்றுமையின் அடித்தளங்களை வலுப்படுத்த பண்டிகைகளை கூட்டாக கொண்டாடுமாறும் மோகன் பகவத் அறிவுறுத்தினார்.
****
எதிர்ப்பு இருந்தால்தான் இந்துக்களுக்கு எதிராக யாரும் செயல்பட மாட்டார்கள் – ஹெச்.ராஜா
எதிர்ப்பு இருந்தால்தான் இந்துக்களுக்கு எதிராக யாரும் செயல்பட மாட்டார்கள் என பாரதீய ஜனதாக கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கோவை ராஜவீதி தேர் நிலைத்திடலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மணி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ஹெச்.ராஜா, இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்களுக்கு நாம் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என கூறினார்.
1968-ம் ஆண்டு சேலத்தில் ஈ.வெ.ராமசாமிக்கு எதிரான வழக்கு நடந்த போது, இந்துக்கள் அந்த இடத்தில் எதிர்ப்பு தெரிவித்தார்களா என்று நீதிமன்றம் கேட்டது. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறியதும் அந்தவழக்கை அவருக்கு சாதமாக தள்ளுபடி செய்ததாக தெரிவித்தார்.
மேலும், பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யும் காவல்துறை, பொன்முடி மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
*****
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
கனாவில் லட்சுமி நாராயணன் கோவிலை காலிஸ்தான் பயங்கரவாதிகள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவில் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை எழுதி வைத்துள்ளனர். சுவர்களை சேதப்படுத்தி உள்ளனர்.
கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள குருத்வாராவை காலிஸ்தான் பயங்கரவாதிகள் முதலில் தாக்கினர். இதைத் தொடர்ந்து லட்சுமி நாராயணன் கோவிலை சேதப்படுத்தி உள்ளனர்.
இது குறித்து கனடாவில் உள்ள ஹிந்து அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
காலிஸ்தானி பயங்கரவாதிகளால் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள லட்சுமி நாராயண் கோவிலில் நடந்த நாசவேலையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஹிந்து வெறுப்பு என்ற இந்த செயலுக்கு கனடாவில் இடமில்லை. விரைவான நடவடிக்கையை நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும் வெறுப்புக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
****
பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த அமைச்சர் மீது தாக்குதல் – பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம்!
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்து மதத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் பிரிவு கட்சியை சேர்ந்த கேல் தாஸ் என்பவர் சிந்து மாகாணத்தில் மத விவகாரத்துறை அமைச்சராக உள்ளார். இவர் தாட்டா என்ற பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள், அமைச்சர் காரின் மீது தாக்குதல் நடத்தினர். இதில் அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
****
கடைசியாக ஒரு சுவையான செய்தி
கோயில் தேங்காயை விலை ரூ.10 லட்சம்
ஒரு தேங்காய் விலை ரூ.10 லட்சமா? ஆம். கோவா மாநில கோயில் தேங்காயைத்தான் ரூ.10 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கி உள்ளார் ஒரு பக்தர்.
கோவா மாநிலம், வடக்கு கோவா மாவட்டம், பெர்னெம் நகருக்கு அருகே உள்ள கோர்காவ் கிராமத்தில் ஸ்ரீ தேவ் ரகுகோன்ஷெட் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை வருடாந்திர திருவிழா நடைபெற்றது.ஐந்து நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் பெர்னெம் நகரம் மட்டுமல்லாது அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.
இவ்விழாவின் இறுதியாக, சுவாமிக்கு படைத்த தேங்காய் ஏலத்தில் விடப்பட்டது. அப்போது, ஒரு பக்தர் அந்த புனித தேங்காயை ரூ.10 லட்சத்துக்கு வாங்கி உள்ளார். இதை அவர் தனது வீட்டில் வைத்து வழிபடுவார் என கூறப்படுகிறது.இந்தக் கோயிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவின்போது, புனித தேங்காய் ரூ.11 லட்சத்துக்கு ஏலம் போனது.
திருவிழாவின்போது, தேங்காய் – பழங்கள் சுவாமிக்கு படைக்கப்படுவது வழக்கம். விழாவின் முடிவில் இவை அனைத்தும் கோயில் நிர்வாகக் குழுவினரால் ஏலத்தில் விடப்படும்.
*****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு
மே மாதம் நான்காம் தேதி லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும்
வணக்கம்.
—-Subham—-
Tags- World Hindu News letter, Gnanamayam, 27 4 2025, Tamil news