முப்பது கோடிமுகமுடையாள்! இந்திய ஜனத்தொகை பற்றி பாரதியார்!!(Post.14351)

Written by London Swaminathan

Post No. 14,351

Date uploaded in London –  6 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

முப்பது கோடி முகமுடையாள் உயிர்-

மொய்ம்புற வொன்றுடையாள்-இவள்

செப்புமொழி பதினெட்டுடையாள் எனிற்

சிந்தனை ஒன்றுடையாள்.– பாரதியார் 

பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது . அப்போது இந்தியாவின் ஜனத்தொகை முப்பது கோடி என்ற அரிய செய்தியை நமக்கு பாரதியார் அளிக்கிறார். இதனால்தான் பாரதி பாடாத பொருளே இல்லை என்று அறிஞர்கள் செப்புகிறார்கள் . இதை எழுதும் இந்த ஆண்டில் பாரத மக்கட் தொகை 146 கோடி . அதாவது உலகிலேயே அதிக ஜனத்தொகை உள்ள நாடு. சீனாவையும் நாம் மிஞ்சிவிட்டோம்!

சரி, அப்பட்டியானால் மஹாபாரத காலத்தில் என்ன மக்கட்தொகை? ராமாயண காலத்தில் ஜனத்தொகை என்ன? இவை பற்றி பல சுவையான செய்திகள் உள்ளன. சிந்து-சரஸ்வதி நதி தீர நாகரிக காலத்தில் ஜனத்தொகை என்ன ?  ஹரப்பா வட்டாரத்தில் நமக்கு 300 க்கும் குறைவான எலும்புக்கூடுகளே கிடைத்துள்ளன. ஆனால் நாடு முழுதும்  பழங் கற்கால தடயங்கள் கிடைத்துள்ளன எல்லாம் குறைந்தது 5000 ஆண்டுகள் பழமை உடைத்து .

மஹாபாரதப் போரில் 7+11=18  அக்சௌகிணி अक्षौहिणी சேனைகள் கலந்து கொண்டதாகப் படிக்கிறோம்.

அந்தக் காலத்தில் படைகளில்தான் அதிகம்பேர் சம்பளத்துக்கு வேலை பார்த்தார்கள் ;  விவசாயம்  என்பதெல்லாம் பெரும்பாலும் குடும்பத்துக்கான தொழிலாகவே இருந்தது; ஆகையால் படைபலத்தைக் கொண்டு ஒரு நாட்டின் ஜனத்தொகையைக் கணக்கிட ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்கிறார்கள்.

ஒரு அக்சௌகிணி अक्षौहिणी  என்பது 65,610 குதிரைகள், 21,870 தேர்கள்,  21,870 யானைகள், 109,350 காலாட்படை வீரர்கள் = : 218,700 வீரர்கள் கொண்டது! இது போல பதினெட்டு பட்டாளங்கள்.

 பெண்கள் அக்காலத்தில் போருக்கு வரவில்லை. ஆகையால் இதே போல இன்னும் ஒரு மடங்கு வீட்டில் இருந்திருப்பார்கள் இவர்களைத் தவிர வயதானோரும் ஏனைய தொழில் செய்வோரும், குழந்தைகளும் இருந்திருப்பார்கள்; ஆகவே குத்து மதிப்பாகத்தான் கணக்கிடலாம்.

ஆயினும் இந்த எண்ணிக்கை பிற்கால எண்ணிக்கையுடன் ஒப்பிட உதவுகிறது.

In the Mahabharata, an “akshauhini” is a military formation comprising 21,870 chariots, 21,870 elephants, 65,610 horses, and 109,350 infantry, totaling 218,700 warriors, excluding charioteers. 

Here’s a more detailed breakdown: 

  • Chariots: 21,870
  • Elephants: 21,870
  • Horses: 65,610
  • Infantry: 109,350
  • Total: 218,700 warriors (excluding charioteers)
  • In the Kurukshetra War: The Kauravas (Duryodhana’s army) had 11 akshauhinis, while the Pandavas (Yudhishthira’s army) had 7.

புராதன இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யம் மெளரிய பேரரசு ஆகும் ; அதில் அங்கம் வகித்த மாமன்னன் அசோகன் நடத்திய கலி

ங்கத்துப் போரும் அதனால் அவன் மனம் மாறி புத்த மத்தை ஏற்றுக் பரப்பியதையும் நாம் அறிவோம் . அந்த கலிங்கத்துப் போரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர்; ஒன்றரை லட்சம்பேர் காயமடைந்தனர் ; ஆனால் இதில் மஹாபாரதப் போர் போல இமயம் முதல் குமரி வரையுள்ள படைகள் ஈடுபடவில்லை.  நாட்டின் பெரும் பகுதியில் உள்ளோர் ஈடுபட்டிருக்கலாம் ; ஆக அப்போது இரண்டரை லட்சம் படைவீரர்கள் இந்த மாபெரும் யுத்தத்தில் இருந்துள்ளனர்

ஒரிஸ்ஸாவிலுள்ள ஹத்திக்கும்பா கல்வெட்டு நமக்கு ஒரு எண்ணிக்கையைக் கொடுக்கிறது; ஒரிஸ்ஸா ஜனத்தொகை  மூன்றரை லட்சம்! இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்!

மவுரிய பேரரசின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல ; ஏனெனில் மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா நூலிலும் பெரிய எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறார் மெகஸ்தனிஸ் சொல்லும் எண்ணிக்கை – மவுரிய பேரரசில் 6.5 லட்சம் படைவீரர்கள் உள்ளனர்

ஆக 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய ஜனத்தொகை சுமார் நாலு கோடிப் பேர்தான்

சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் நூல், மவுரியர் கால மக்கட் தொகை கணக்கெடுப்பு பற்றிப் பேசினாலும் சென்சஸ் புள்ளிவிவரங்   களைத்த தரவில்லை.

வெள்ளைக்கார்கள்  நடத்திய 1881 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி  இந்திய ஜனத்தொகை  23-5 கோடி

இப்போது இந்திய படைவீரர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு கோடி ; பொதுவாக உலகம் முழுதும் ஜனத்தொகை பெருகிக்கொண்டுதான் வருகிறது ஆகையால் இந்தப் படைவீரர் எண்ணிக்கை அதைக் காட்டுவதைக் காணலாம்.

The Indian Army, the world’s largest standing army, has a strength of approximately 1.237 million active troops and 960,000 reserve troops, making it a significant military force. 

The Indian Armed Forces, with over 1.4 million active personnel, are the world’s second-largest military force and possess the world’s largest volunteer army, comprising the Indian Army, Navy, and Air Force. 

Here’s a more detailed breakdown:

Indian Army: காலாட் படை / ராணுவம்

    • 1,232,000 active personnel 
    • 900,000 reserve personnel 
    • ~310 manned aircraft 
  • Indian Navy: கப்பற்படை
    • 135,000 active personnel 
    • 100,000 reserve personnel 
    • Approx 1926+ aircraft 
    •  

Indian Air Force: விமானப் படை

  • 135,000 active personnel 
  • 100,000 reserve personnel 
  • Approx 1926+ aircraft 
  • Paramilitary Forces: Approximately 1.3 million paramilitary personnel பாரா மிலிட்டரி எனப்படும் ஓரளவு ராணுவம்.

இது தவிர போலீஸ் காவலர்கள்!

புற நானூற்றில் கபிலர் நிறைய விஷயங்களை நமக்கு அளிக்கிறார் ; பாரியின் முன்னூறு ஊர்களையும் அவன் தானம் செய்துவிட்டதாகப் பாடுகிறார்  சிறிய பறம்பு நாட்டில் 300 ஊர்கள் இருந்திருக்குமானால் சேர சோழ பாண்டிய தேசங்கள் முழுதும் எவ்வளவு இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்; இன்றைய இந்தியாவில் ஆறு லட்சம் கிராமங்கள்; ஊர்கள் உள்ளன. மக்கட் தொகையில் நூறு கோடிப்  பேர் அங்கே இருக்கிறார்கள் என்று ஊகிக்கலாம்..

எண்கள் பற்றி எச்சரிக்கை தேவை

ராமாயண காலத்தில் மிகவும் குறைவான மக்களே நாடு முழுதும் வாழ்ந்திருக்க வேண்டும். ஆயினும் எல்லா  எண்களுடனும் ஆயிரம் , கோடி என்ற சொற்களை பிற்காலக் கவிஞர்கள் சேர்த்துக் கொண்டனர். இதை ரிக்வேதம் முதல் ராமாயணம் வரை காணலாம். தசரதனுக்கு அறுபதாயிரம் மனைவியர்  என்றால் அவருக்கு எண்ணற்ற மனைவியரென்று பொருள்; இதே போல ரிக் வேதத்தில் இந்திரனால் கொல்லப்பட்ட அரக்கர்களின் எண்ணிக்கை லட்சக் கணக்கில் வருகிறது . அங்கும் ஆயிரம் என்பதை நாம் எண்ணற்ற என்ற பொருளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

–SUBHAM—

TAGS- மக்கட்தொகை, ஜனத்தொகை, சென்சஸ், பழங்கால, போர் வீரர் , ராமாயண, மஹாபாரத, சிந்துவெளி , காலம் , வெள்ளைக்காரர், முப்பது கோடிமுகமுடையாள்,  பாரதியார்

Leave a comment

Leave a comment