
London Swaminathan’s New TAMIL book/s on Tirumanthiram! (in two volumes)
London Swaminathan has written 139 TAMIL and ENGLISH books. Two of them are out of print. Other 137 books are readily available in Pustaka.co.in
Enjoy reading them.. Two Tamil books are printed in two separate volumes.
Here is my latest book:
லண்டன் சுவாமிநாதனின் இரண்டு தொகுதி திருமந்திரம் ஆராய்ச்சிக் கட்டுரைகள்
முன்னுரை
திருமூலர் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் திருமந்திரம் என்ற நூலை எழுதினார் அதிலுள்ள மூவாயிரம் செய்யுட்களில் அவர் தொடாத ஆன்மீக விஷயமே இல்லை . மந்திரம், தந்திரம், எந்திரம், யோகம், ஞானம், அஷ்டமா சித்திகள் ,உபநிஷத மஹா வாக்கியங்கள் , அத்வைத சித்தாந்தம், சைவ சித்தாந்தம், அய்யனார் வரையுள்ள இந்துக் கடவுள்கள் என்று ஒரு கலைக்களஞ்சியமே எழுதிவிட்டார். சுமார் பத்து சதவிகித பாடல்களில் ஓம்கார விளக்கம் தந்துள்ளார். மேலும் காயத்ரீ மந்திரத்தை விதந்து ஓதியுள்ளார். ஆன்மீக உண்மைகளை விளக்க வருகையில் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போலவே தாவரம், விலங்குகளையும் பயன்படுத்தியுள்ளார்.
ஆயினும் இரும்பைத் தங்கம் ஆக்கும்-பரிசனவேதி, அஷ்டமா சித்திகள் ஆகியன பற்றி அவர் கூறியதை செய்து காட்டும் பெரியோர்கள் இப்போது இவ்வுலகில் இல்லை. ஆயினும் அந்த விஷயங்களைப் பாதுகாப்பது நமது கடமை; எதிர்காலத்தில் ஒரு ஆதி சங்கரர் தோன்றி மீண்டும் நமது பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டுவார்.
திருமந்திரத்துக்கு சைவ வழியில் உரை எழுதியோர் ‘சிவ போதையில்’ உரை எழுதியதால் யாருக்கும் எளிதில் விளங்காது. அது மட்டுமல்ல. அதில் நிறைய பிழைகளும் உள்ளன. நல்ல வேளையாக டாக்டர் பி நடராசன் செய்த ஆங்கில மொழிபெயர்ப்பு நம் உதவிக்கு வருகிறது. பாடல்களின் பொருள் விளங்கவேண்டும் என்ற ஆர்வத்தில் நூல் முழுதும் அவரது ஆங்கில மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தியுள்ளேன். அவருக்கு நன்றி. பாடல்களுக்கு மட்டும் சைவ சித்தந்த நூல்பதிப்புக்கழக வெளியீட்டைப் பயன்படுத்தியுள்ளேன். நன்றி உரித்தாகுக.
நான் ஏன் எழுதினேன் ?
திருமூலர் ஆன்மீக செயதிகளைத் தருகையில் நிறைய புவியியல் தாவர வியல், வானவியல், இயற்பியல் உவமைகளை பயன்படுத்துகிறார். இவைகளை எல்லாம் அறிவியல் அறிந்தோர் ரசித்துப் படிக்கலாம். வேதங்களைப் போலவே ஏராளமான பாடல்களில் மறைபொருளில் பேசுகிறார். இவைகளைப் படித்துவிட்டு வெள்ளைக்காரர்கள் வேதங்களை மொழிபெயர்த்து இருந்தால் பிழைகளைத் தவிர்த்து இருக்கலாம். திருமூலர் பசுக்களை எவ்வளவு விதங்களில் பயன்படுத்துகிறார் என்று பார்த்தால், அரவிந்த மகரிஷி வேதங்களுக்குச் சொன்ன பொருள்தான் சரி என்பது விளங்கும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் இந்துக்களின் பரிபாஷையை மறைமுகமாக, மரத்தை மறைத்தது மாமத யானை முதலிய செய்யுட்கள் மூலம் உலகிற்குக் காட்டியுள்ளார் நான் அறிவியல் நோக்கில் கண்ணோட்டமிட்டது எனது சொந்தக் கருத்துக்கள். அவைகளைப் படித்து உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள்.
அன்புடன்
லண்டன் சுவாமிநாதன்
செப்டம்பர் 2024
Swaminathan.santanam@gmail.com

பொருளடக்கம்
அறிவியல் நோக்கில் திருமந்திரம் – ஆராய்ச்சிக் கட்டுரைகள் (book title)
1.அதிசய தாவரங்கள்: திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரைகள்
2.மேலும் பல அதிசய தாவரங்கள்
3.பலாப்பழமும் ஈச்சம் பழமும்!
4.கோரை,ஆரை,சூரை!
5.மூத்திரம் குடிப்பது நல்லது!
6.சூ மந்திரக் காளி வசியம்!
7.எட்டும் இரண்டும், காயத்ரீ மந்திரமும்
8.மாம்பழம், அத்தி, நாவல், வாழைப்பழம்!
9.வாழைப்பழம் வாழ்க!
10.நெல் உவமையும் பயிர் உருவகமும் !
11.தினையும் பனையும்!
12.அன்னம், ஆமை, குயில், காகம்!
13.திருமந்திரத்தில் யானை!
14.திருமந்திரத்தில் மேலும் யானைகள்!
!15.பல்லியும் பாம்பும்!
16.கருட மந்திரம் செய்யும் அதிசயம் !
17.பூனையிடம் அகப்பட்ட கிளி! நாயாய்ப் பிறப்பவர் யார்?
.18.திருமந்திரத்தில் அணுகுண்டு
****
19.இரும்பைத் தங்கம் ஆக்கலாம்
20.திருமந்திரத்தில் லென்ஸூம் கண்ணாடியும்
21.திருமந்திரத்தில் வானிலை இயல் புவியியல்
22.கடல் தீ பற்றி திருமூலர் தரும் அதிசய செய்திகள்
23.உலகம் உருண்டை
24.காடு வளர்ப்போம்! கவின் சோலை அமைப்போம்!!
25 ஏழு கடல், 8 எட்டு மலை, 9 கண்டம் பற்றி திருமூலர்
26.திருமூலர் தரும் நோய்கள் பட்டியல்
27.இருதய நோய் பற்றி திருமூலர்
28.திருமந்திரத்தில் பழமொழிகள்
29.திருமந்திரத்தில் அற்புதச் சொற்கள்
30.திருமந்திரத்தில் ஞானானந்தம், ஞான விளக்கொளி,
ஞான நெறி, ஞானக் கூத்து
31.திருமூலரும் தீர்க்கரேகையும்
32.வடக்கில் அடங்கிய வையகம்!
33.திருமந்திரத்தில் அப்பட்டமான செக்ஸ் பாடல்
34.திருமூலரின் அழகிய சொல்லாக்கம்
35.திருமந்திரத்தில் மஹாவாக்கியம்
36.திருமூலரும் ஆதிசங்கரரும்
38.திருமந்திரத்தில் 18 பாஷை மர்மம்
39.திருமந்திரத்தில் ஜோதிடம்
40.பாரதி, திருமூலர், பரமஹம்சர்- வர்ணங்கள் ஒப்பீடு
41.திருமந்திரத்தில் கலர்கள் நிறங்கள்
42.யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை
43.திருமந்திரத்தில் காயத்ரீ மந்திரமும் ஓம்கார விளக்கமும்!
44.திருமூலர் சித்தர் இல்லை; ஆதி சங்கரரரின் சீடர்!
45.பன்றியாய் பிறப்பாயாகுக; திருமூலர் சாபம்!
46.திருமூலர் காட்டும் அதிசய ஐயனார் கோவில்!
47.திருமந்திரத்தில் முருகன்
48.திருமந்திரத்தில் சம்ஸ்க்ருதம், தமிழ்
49.திருமந்திரத்தில் குறளும் கீதையும்
50.நாஸ்தீகர்களுக்கு பயங்கர எச்சரிக்கை
*****
அட்டைப்படத்திலுள்ள திருமூலர் படம் திருவாவடுதுறை ஆதீன நூல்களிலிருந்து எடுக்கப்பட்டது.
About the Author and the Book
Title- அறிவியல் நோக்கில் திருமந்திரம் – ஆராய்ச்சிக் கட்டுரைகள் (book title)
IN TWO PARTS
Author – London Swaminathan (Santanam Swaminathan)
Language- Tamil
Published – September 2024
Subject – Religion
xxx
AUTHOR’S PROFILE
Santanam swaminathan (London swaminathan)
Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)
Higher Diploma in French and Sanskrit
DOB 6-11-1948
Work Experience- Now retired.
Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,
BBC Tamil Producer in London 1987-1991,
Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,
Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.
Living with his wife and two sons in London from 1987.
xxx
Blog Details
tamilandvedas.com
swamiindology.blogspot.com
xxx
Contact Details
swami_48@yahoo.com
swaminathan.santanam@gmail.com
Mobile Number in London
07951 370 697
Published Works
Over 9000 articles in English and Tamil and 137+2 Tamil and English Books
Visited 16 Countries
India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malysia, Singapore, Italy and Greece
*****