London Wonders Continue…142 books by One Person!

London Swaminathan’s latest book on Foreign Proverbs Vs Tamil Proverbs

ABOUT THE BOOK AND THE AUTHOR 

Title – வெளிநாட்டுப் பழமொழிக் கதைகளும்

நம் நாட்டுக் கதைகளும்!

Book Title

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- Tamil

Published  – April 2025

Subject – Culture

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

+ 44 07951 370 697

Published Works

Over 9500 articles in English and Tamil and over 140+2 Tamil and English Books.

Visited 16 Countries

India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malaysia, Singapore, Italy and Greece

*****

 வெளிநாட்டுப் பழமொழிக் கதைகளும்

நம் நாட்டுக் கதைகளும்!

         Book Title

முன்னுரை

பழமொழிகள் புழங்காத நாடு உலகில் இல்லை ; அனுபவம் மிக்கவர்கள் அழகாக, சுருக்கமாக அந்தக் காலத்தில் சொன்னதை மக்கள் நினைவு வைத்துக்கொண்டு சந்தர்ப்பம் வருகையில் பயன்படுத்துகிறார்கள் அந்தக் காலத்தில் எழுத்தில் கொணர வழி இல்லாததால் நிறைய அழிந்து போய்விட்டன. இப்போது நல்ல முன்னேற்றம்! எல்லாம் எழுத்தில் வந்ததோடு பல நாட்டுப் பழமொழிகளை ஒப்பிட்டுப் பார்த்து மகிழவும் முடிகிறது . பல பழமொழிகளைப் படித்தவுடன் நான் அவைகளை ஒப்பிட்டுக் கட்டுரைகளை எழுதி வந்தேன்; அந்தத் தொகுப்பு இதில் இடம்பெறுகின்றன.

வெளிநாட்டுப் பழமொழிக் கதைகள் மிகவும் சுவையாக உள்ளன ; மேலும் வெளிநாட்டுப் பழமொழிகளுக்கும் தமிழ்ப் பழமொழிகளுக்கும் இடையே வியப்பான ஒற்றுமையும் உளது .

பழமொழிகள் விஷயத்தில் தமிழுக்கும் ஸம்ஸ்க்ருதத்துக்கும்  தனி இடம் உண்டு. தமிழில் உள்ள இருபதாயிரம் பல மொழிகளை மூன்று வெள்ளைக்காரர்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தொகுத்து வெளியிட்டுவிட்டனர். சம்ஸ்க்ருதத்தில் காளிதாசன் , பாஷா, சாணக்கியன்  முதலியோர் நூல்களில் காணப்பட்ட பழமொழிகள் போன்றவை தனித்தனியே வந்துவிட்டன. ஆனால் சுபாஷிதம் என்ற பெயரில் இருபதாயிரத்துக்கும்  மேலான சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் அந்தக் காலத்திலேயே அச்சேறிவிட்டன.  இவை எல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்திலும் சம்ஸ்க்ருதத்திலும் மட்டுமே கிடைக்கின்றன. தமிழில் இன்னும் எவ்வளவோ செய்யவேண்டிய பணிகள் இருப்பதை இது காட்டுகிறது;  எனது ‘பிளாக்’கில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான பழமொழிகளும் நூற்றுக் கணக்கான சுபாஷித ஸ்லோகங்களும் வெளியாகியுள்ளன. பெண்கள் பற்றிய 300 பழமொழிகள் யானைகள் பற்றிய 200 பழமொழிகள் ; கழுதை, நாய் குதிரை பற்றிய பழமொழிகள்  என்றெல்லாம் தனித்தனியே கட்டுரைகள் எழுதினேன். இந்த நூலில் வெளிநாட்டுப் பழமொழிகளைத் தமிழ்ப் பழமொழிகளுடன் ஒப்பிட்டுள்ளேன். படித்து மகிழுங்கள் .

முதல் பத்து கட்டுரைகளுக்குப் பின்னர் பொதுவான பழமொழிக் கட்டுரைகளும் , பிற கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. புத்தகம் மிகவும் சிறியதாகிவிடக் கூடாதே என்பதைக் கருத்திற்கொண்டு இவைகளைச் சேர்த்தேன் ஆனால் சுவையில் குறை இராது. 

அன்புடன்

லண்டன் சுவாமிநாதன்

ஏப்ரல் 2025

swami_48 @yahoo.com

swaminathan. santanam @gmail.com

 வெளிநாட்டுப் பழமொழிக் கதைகளும்

நம் நாட்டுக் கதைகளும்!

Book Title

பொருளடக்கம்

 1.உலகம் முழுதும் ஒலிக்கும் தமிழ்ப் பழமொழிகள்

2.பீமன் பற்றிய பழமொழி!

3.அர்ஜுனன் கதையும் சீனப்பழமொழியும்

4. ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது: இரண்டு கதைகள்

5.சீனக் கதை: செவிடன் காதில் சங்கு ஊதியது போல!

6.சீனப் பழமொழிக்கு தமிழில் நான்கு கதைகள்!

7.கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?

8.தமிழ்ப் படுகொலைகளும் உலகப் பழமொழிகளும்

9.ஜப்பானிய பழமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்

10.கோழி அடிக்க குறுந்தடி வேண்டுமா? 

11.உள்ளதும் கெட்டதடா நொள்ளைக் கண்ணா

12.உடையது விளம்பேல்! வல்லமை பேசேல்!

13. தைவான் நாட்டுப் பழமொழிக் கதைகள்

14.அவனின்றி ஓர் அணுவும் அசையாது- கதை

15.கண்டோம்! கண்டோம்!! கண்டோம்!!! கண்ணுக்கினியன கண்டோம்!! 2 குட்டிக் கதைகள்

16.வண்ணாத்தி அழுதது ஏன்? பாடகர் ஓடியது என்?

17.“உங்களுக்கு முதல் வரிசையில் இடம் போடவா?”

18.அண்ணன் தலையைக் கண்டு ஆனந்தம் அடைந்த அவுரங்கசீப்

19.கோமுட்டிகளைக் கொட்டிய கொண்டித் தேள் !

20.இந்திரன் நரியாக மாறியது ஏன்? நாஸ்தீகர்களுக்கு எச்சரிக்கை!

21.கடவுளுக்குக் கடிதம் !

22.டயோஜெனிஸ், உமாபதி சிவம், அலெக்ஸாண்டர்!

23.ராமனிடம் வருணன் சொன்ன நொண்டிச் சாக்கு! கம்பன் நகைச்சுவை?

24.சிவனா, விஷ்ணுவா யார் பெரியவன்? கம்பன் பதில்

25.கம்பன் மனைவி ரொம்ப மோசம்! ராமாயணத் தகவல்.

26 .தன்னைத் தானே புகழாதே-குறள் கதை

**********

பழமொழிகளுக்கு எவ்வளவு மதிப்பு என்பதை  சீனப் பழமொழிகளின் கதைகளை தைவான் எனப்படும் தேசீய சீனா தபால்தலைகளாக வெளியிட்டதிலிருந்து அறியலாம் . அட்டைப்படத்தில் இவை உள்ளன

Leave a comment

Leave a comment