Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
–Subham—
Tags-Pictures of 2500 Indian Stamps ,Part 22, Gramaphone, Flowers 25 p to Rs2, UNIDO Skinners horse, Museum stamps, coins, Statistical Institute, Engineers Institute, Music composer Shubert, Year of Child, Bhai Paramanand, Vallabhacharya, Rajya sabha, book fair, Kampta prasad, Gangaram, Happy Child, Trade fair, Jatindarnath das, Kittur Rani Channamma, Tolstoy, Punjab regiment, World Book Fair, Ram Manohar Lohia, IAEA conference, Mahavir Nirvana, Swords, three planes, Homeopathy, Five rubber trees, Cotton plants. Postman, Bulb, Ananda Coomaraswamy
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part five/ பகுதி ஐந்து
45.ரூப கோஸ்வாமின்
சைதன்ய மஹாப்ரபுவின் சீடர் ; வங்காளத்தைச் சேர்ந்த இவர் உஜ்வலநீலாமணி என்ற நூலை எழுதினார். இது கவிதை இயல் Poetics நூல்; இவரது காலம் 16-ஆவது நூற்றாண்டு.
46.ஆதிசங்கரர்
இந்தியாவில் வியாசருக்கு அடுத்தபடியாக அதிகம் எழுதியவர் சங்கரர். இவர் உபநிஷத்துக்களுக்கும் பகவத் கீதைக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கும் எழுதிய உரைகள் உலகப் பிரசித்தமானவை; இவர் அத்வைத சித்தாந்தத்தை நிலை நாட்டியவர் ; இவரது காலம் எட்டாம் நூற்றாண்டு என்றும் கிறிஸ்து பிறப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முந்தியது என்றும் இருவேறு கருத்து உள்ளது. ஆதி சங்கரரின் கவிதைகளையும் ஸ்லோகங்களையும் இன்றும் மக்கள் தினமும் வீடுகளில் பயப்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது . முக்கிய நூல்கள் : மனீஷா பஞ்சகம், விவேக சூடாமணி, பஜகோவிந்தம், ப்ரச்னோத்தர ரத்ன மாலிகா, கனகதாரா ஸ்தோத்திரம் உபநிஷத், கீதை ஸஹஸ்ரநாம உரைகள் , நூற்றுக்கணக்காக ஸ்லோகங்கள் ,துதிகள், தோத்திரங்கள்.
சம்ஸ்க்ருத மொழியை இன்றும் வீடுகளில்தவழவிட்ட பெருமை இவர் ஒருவரை மட்டுமே சாரும் ; அடுத்தபடியாக
ராமாயணத்தைத் தந்த வால்மீகியைக் குறிப்பிடலாம்; அவரது சுந்தர காண்டம், பண வரவுக்காக, பலராலும் வீடுகளில் சம்ஸ்க்ருதத்தில் பாராயணம் செய்யப்படுகிறது .
47.ராமானுஜர் 1017 to 1137 CE
விசிஷ்டாத்வைத தத்துவத்தை முன்வைத்த ராமானுஜரும் நிறைய சம்ஸ்க்ருத நூல்களை இயற்றியுள்ளார் . அவரது காலம் 1017 to 1137 CE அவர் நவமணிகளாக ஒன்பது நூல்களை எழுதினார் ; அவை விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நன்கு புரிந்து கொள்ள உதவும் நூல்கள்.1.வேதார்த்த ஸங்க்ரஹம் 2. ஸ்ரீபாஷ்யம் 3. வேதாந்த தீபம் 4.வேதாந்த ஸாரம் 5. பகவத் கீதா பாஷ்யம் 6.சரணாகதி கத்யம் 7. ஸ்ரீரங்க கத்யம் 8. ஸ்ரீ வைகுண்ட கத்யம் 9. நித்ய க்ரந்தம்.
48.சித்த
ஸ்வேதாம்பர சமண மதப்பிரிவைச் சேர்ந்த இவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ; உபமிதி பாவப்பிரபஞ்சகதா என்ற நூலில் உருவகம் (allegorical) மூலம் விஷயங்களைக் கூறுகிறார். இவரது காலம் 906 CE.
49.சோமதேவ
கதாசரித்சாகரத்தின் ஆசிரியர் ; கவிதை வடிவில் முதல் கதை புஸ்தகத்தைத் தந்தவர். காஸ்மீரைச் சேர்த்த இவரது காலம் பதினோராம் நூற்றாண்டு .
50.சுபந்து
வாசவத்தத்தா என்ற காதல் கதையை உரைநடையில் எழுதிய இவர் முதலில் 13 ஸ்லோகங்களையும் எழுதியுள்ளார் காலம் ஆறாம் நூற்றாண்டு.
51.ஷீலா பட்டாரிகா
கவிதைத் தொகுப்புகளில் பெயர் உள்ள பெண் கவிஞர் இவர்; காலம் ஒன்பதாம் நூற்றாண்டு
52.சூத்ரக
சாதவாஹனா வம்ச மன்னர் ; இவர் எழுதிய ம்ருச்சககடிகம் என்ற நாடகம் மிகவும் புகழ்பெயது ஆங்கிலம், தமிழ் முதலிய மொழிகளில் வந்துள்ளது ; தமிழில் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் மண்ணியல் சிறுதேர் என்ற பெயரில் மொழிபெயர்த்தார் ; அற்புதமான நாடகத்தை நகைச்சுவை ததும்பத் தந்த சூத்ரகரின் காலம் இரண்டாம் நூற்றாண்டு.
மிருச்சகடிகம் வாசவதத்தை , பாண , மற்றும் பத்மபிரபிரித்தகா போன்ற சமஸ்கிருத நாடகங்களை இயற்றினார்
53.நன்னையபட்டு
சம்ஸ்க்ருத மொழியில் இலக்கணத்தைத் தந்த மூன்று பெரியோர்களை முநித்ரயம் – மூன்று முனிவர்கள் – என்பார்கள் அதுபோல தெலுங்கு மொழியிலும் மூன்று முனிவர்கள் உனது அவர்களில் ஒருவர் நன்னய்ய பட்டு ; நன்னயா. திக்கனா, எர்ரனா என்பவர்கள் ‘கவித்திரையம்’ ஆவர்.
தெலுங்கு மொழி இலக்கணத்தையும் சம்ஸ்க்ருதத்தில் எழுதினார் ; அவளவு சம்ஸ்க்ருதப் பிரியர்; மேலும் அது நாடு முழுதும் பரவ சம்ஸ்க்ருத மொழி ஒன்றுதான் உதவும்; இன்று நாம் ஆங்கிலத்தில் எழுதினால் அது உலகின் பெரும்பாலான மக்களுக்குத் தெரிவது போல.
தெலுங்கு மொழிக்கான முதல் இலக்கண நூல் ஆந்திர சப்த சிந்தாமணி ஆகும்.. இவர் இராஜமகேந்திர புரத்தைத் தலைநகராகக் கொண்டு வேங்கி நாட்டை ஆண்டு வந்த ராஜராஜ நரேந்திரனின் (கி.பி. 1020-1063) அரசவையில் புலவராகத் திகழ்ந்துள்ளார்.
54.சாவர்ணி –
இவரது கவிதைகள் கவிதைத் தொகுப்பு நூல்களில் உள்ளன; வேறு தகவல் கிடைக்கவில்லை.
55.மத்வர்
த்வைத தத்துவதை நிலை நாட்டியவர் ;பிரம்ம சூத்திரம், சில உபநிடதங்கள், பகவத் கீதை முதலிய நூல்களுக்கு விரிவான உரைகள் எழுதினார். ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து 1600 சுலோகங்கள் எடுத்து அவைகளுக்கு உரை இயற்றினார். 32 அத்தியாயங்கள் கொண்ட மகாபாரத தாத்பர்ய நிர்ணயம் என்றொரு நூல், இவருடையது. மகாபாரதத்தின் உட்கருத்துகளையெல்லாம் எடுத்துச்சொல்வது. ருக்வேதத்திலிருந்து 32 துதிகளுக்கு உரை எழுதினார். காலம் 1199–1278 CE.
To be continued…………………………….
Tags- ஆதி சங்கரர், மத்வர், ராமானுஜர், சூத்ரகர், பெண் கவிஞர், சம்ஸ்க்ருத மழை , அறுபது கவிஞர்கள் , பகுதி ஐந்து
இது விசாகப்பட்டிணம் கடற்கரையோரம் ரத்னகிரி மலையில் உள்ள வனப்பகுதியின் நடுவில் அமைந்துள்ளது. இது வைணவத் தலங்களுள் ஒன்றாகும்.
கடல்மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்தில் இது அமைந்துள்ளது.
மலையடிவாரத்திலிருந்து மேலே கோவிலுக்குச் செல்ல ஆயிரம் படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மேலே செல்ல வண்டி வசதிகளும் உண்டு.
இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறுகள் உண்டு.
மஹா விஷ்ணு வசித்து வந்த வைகுண்டத்திற்கு காவல் காக்க இரு துவாரபாலகர்கள் இருந்தனர். விஷ்ணுவைத் துதிக்க வந்த முனிவர்களை இவர்கள் துன்புறுத்தவே அவர்களுக்கு விஷ்ணு சாபமிட்டார். முதல் துவாரபாலகன் இரண்யகசிபு என்ற அரக்கனாகவும் இன்னொரு துவாரபாலகன் அவன் தம்பி இரண்யாட்சன் என்ற அரக்கனாகவும் பிறந்தான்.
இரண்யகசிபு அனைத்து தேவர்களையும் கொடுமைப் படுத்தி, ‘தானே கடவுள்’, தன்னையே வணங்கவேண்டும் என்று ஆணையிட்டான்.
அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனே சிறந்த விஷ்ணு பக்தனான பிரகலாதன். நாரதரின் வளர்ப்பிலே வளர்ந்த பிரகலாதன் நாராயண நாராயண என்று எப்போதும் விஷ்ணுவின் நாமத்தைக் கூறிக் கொண்டே இருந்தான்.
இதனால் கோபமுற்ற இரண்யகசிபு பிரகலாதனைப் பல விதத்திலும் கொடுமைப்படுத்தினான். ஆனால் பிரகலாதனோ நாராயண நாமத்தை விடவே இல்லை.
கடைசியாக ஒரு நாள் இரண்யகசிபு, “சொல்! உன் நாராயணன் எங்கே இருக்கிறான்” என்று பிரகலாதனை அதட்டிக் கேட்க, பிரகலாதன், “நாராயணன் தூணிலும் இருக்கிறார். துரும்பிலும் இருக்கிறார்” என்று பதிலளித்தான்.
“இதோ இந்தத் தூணில் உன் நாராயணன் இருக்கிறானா?” என்று கேட்டு இரண்யகசிபு அருகில் இருந்த தூணை எட்டி உதைக்க அதிலிருந்து ஆவேசமாக தூணைப் பிளந்து நரசிங்க ரூபமாக வந்த விஷ்ணு பகவான் அவனைத் தன் மடியில் வீட்டு வாசலில் வைத்து தன் கூரிய நகங்களால் அவன் வயிற்றைக் கிழிக்க அவன் மாண்டு போகிறான்.
ஒரு முறை பிரகலாதனைக் கடலில் வீசுமாறு இரண்யகசிபு ஆணையிட்ட போது விஷ்ணு பகவான் அந்த மலையின் மீது இறங்கி அவனைக் காப்பாற்றினார். ஆகவே தான் இது சிம்மாத்ரி என்ற பெயரைப் பெற்றது.
முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் நரசிம்மராக அங்கேயே குடியிருந்து அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறார்.
இந்தக் கோவிலில் உள்ள நரசிம்மர் சந்தன மேனியுடனேயே காட்சி அளிக்கிறார். இதைப் பற்றிய வரலாறு ஒன்று உண்டு.
தந்தை இரண்யகசிபுவின் மறைவுக்குப் பிறகு பிரகலாதன் அகோரருக்கு கோவில் ஒன்றைக் கட்டினான். யுக முடிவில் அது அழியத் தொடங்கியது. மூலவரைச் சுற்றி மணல் குவிந்தது.
அடுத்த யுகத்தில் சந்திர வம்சத்தைச் சேர்ந்த புரூருவன் என்ற மன்னன் இந்த இடத்தில் இருந்த விக்ரஹத்தைக் கண்டு எடுத்து ஒரு கோவிலைக் கட்டினான். அந்தச் சமயத்தில் அசரீரி ஒன்று ஒலித்து விக்ரஹத்தின் மேனியைச் சந்தனத்தால் பூசி மேனியைக் காண முடியாமல் செய்ய வேண்டும் என்றும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே உண்மை உருவத்தைக் காண வேண்டும் என்று சொல்ல அப்படியே மேனி சந்தனத்தால் பூசப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் வளர்பிறையில் மூன்றாம் நாள் நரசிம்ம மூர்த்தியின் தரிசனம் அனைவருக்கும் காட்சி தருமாறு சந்தனப் பூச்சு நீக்கப்படுகிறது. இது அட்சய திருதியை தினத்தன்று நடைபெறுகிறது.
இந்தக் கோவிலைப் பற்றி பதினோராம் நூற்றாண்டு குலோத்துங்க சோழனின் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.
கங்க மன்னர்கள் 13ம் நூற்றாண்டில் இந்தக் கோவிலை விரிவாக்கியுள்ளனர்.
கோவிலில் உள்ள விக்ரஹம் வராக மற்றும் நரசிம்ம அவதாரங்களின் அடையாளத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
கோவிலின் நடுவே கர்பக்ருஹம் அமைந்துள்ளது. அதன் நடுவில் ஒரு சிறிய மேடையில் மூலவர் சந்தனப்பூச்சு பூசப்பட்டு லிங்கம் போலக் காணப்படுகிறார். வைகாசி மாதம் சந்தனப் பூச்சு நீக்கப்படும் சமயத்தில் அவர் தனது உண்மைத் தோற்றத்துடன் காட்சி தந்து அருள்கிறார். இதில் அவர் த்ரிபங்க தோரணையுடன் இரண்டு கைகள், காட்டுப் பன்றியின் தலை, சிங்க வால், மனித உடல் ஆகியவற்றுடன் காட்சி தருகிறார். இரு பக்கங்களிலும் ஶ்ரீ தேவியும் பூதேவியும் உள்ளனர். ஆண்டாள், லக்ஷ்,மி, ஆழ்வார் ஆகியோருக்குத் தனி சந்நிதிகள் உள்ளன.
கர்பக்ருஹத்திற்கு இடது பக்கம் கப்பஸ்தம்பம் என்ற ஒரு தூண் மணிகளாலும் பட்டுத் துணியாலும் அலங்கரிப்பட்டுள்ளது. இந்தத் தூணிற்கு அடியில் சந்தான கோபாலரின் யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த தூணைக் கட்டிக் கொள்ப்வர்கள் புத்திர பாக்கியம் பெறுவர் என்பது ஐதீகம்.
கோவிலின் பிரதான வாயில் கலி கோபுரம் என்று அழைக்கப்படுகிறாது.
கோயில் ஒரிய பாணியில் அமைந்துள்ளது.
கோவிலில் பல முக்கிய விழாக்கள் உண்டு. கல்யாண உற்சவம் மற்றும் சந்தனயாத்திரோட்சவம் ஆகியவை சிறப்பு விழாக்களாக அமைகின்றன. ஏராளமான பக்தர்கள் சந்தன யாத்திரையில் பங்கு கொள்கின்றனர்.
காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ வராக லட்சுமி நரசிம்மர் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
MOTIVATION ARTICLE PUBLISHED ON 22-3-25 IN KALKIONLINE
கேட்பது நாம்! பதில் சொல்வது அறிஞர்கள்!!
ச. நாகராஜன்
1) விமரிசனத்திலிருந்து தப்ப முடியுமா? தப்புவதற்கு என்ன செய்வது?
ஓ, முடியுமே! விமரிசனத்திலிருந்து நீங்கள் தப்பவேண்டுமென்றால் ஒரு வேலையையும் செய்யக் கூடாது. ஒன்றும் பேசக் கூடாது. ஒரு மனிதனாகவும் கூட இருக்கக் கூடாது. – எல்பர்ட் ஹப்பர்ட்
2) நம்மை எல்லையற்றவராகச் செய்வது எது?
கற்பனா சக்தி நம்மை எல்லையற்றவராகச் செய்கிறது. – ஜான் மூர்
3) எவ்வளவு சுமையை ஒருவன் தூக்க முடியும்?
சுமையின் அளவு குதிரையின் வலிமையைப் பொறுத்தது. – தால்முட்
4) வணிகம் எப்படிச் செய்ய வேண்டும்?
சகோதரர்கள் போலச் சேர்ந்து வாழுங்கள்; அன்னியர்கள் போல வணிகம் செய்யுங்கள். – அராபிய பழமொழி
5) யாரைத் தவிர்க்க வேண்டும்?
மூன்றை நீங்கள் தவிர்ப்பது மிகவும் சிறந்தது. 1) தெரு நாய் 2) பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் 3) தனக்கு எல்லாம் தெரியும் தான் ஒரு மேதாவி என்று நினைப்பவன் – வேல்ஸ் பழமொழி
6) எவன் திறமையுள்ளவன்?
எவன் ஒருவன் தான் திறமையுள்ளவன் என்று நினைக்கிறானோ அவன் திறமையுள்ளவனே. – வர்ஜில்
7) எவன் அபிப்ராயத்தை மாற்றிக் கொள்ளவே மாட்டான்?
முட்டாளும் செத்துப்போனவனும் அபிப்ராயத்தை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
– ஜேம்ஸ் ரஸ்ஸல் லோவெல்
8) வெற்றிக்கான முதல் விதி எது?
தன்னை நம்புவதே வெற்றி பெறுவதற்கான முதல் விதி. – ரால்ப் வால்டோ எமர்ஸன்
9) எதற்கு விதி தேவையில்லை?
நேர்மைக்கு விதியே தேவையில்லை – ஆல்பர்ட் காமஸ்
10) அதிர்ஷ்டம் யாருக்கு வரும்?
தைரியசாலியையே அதிர்ஷ்டம் தேடி வரும். – வர்ஜில்
11) யாருடைய தவறை மன்னிக்கக் கூடாது?
தன்னுடைய தவறைத் தவிர மற்ற அனைவருடைய தவறையும் மன்னிக்கலாம்.- மார்கஸ் போர்ஸியஸ் கடோ
12) சோதனை வரும் போது எது முக்கியம்?
சோதனைக் காலத்தில் ஒரு அவுன்ஸ் விசுவாசமானது ஒரு பவுண்ட் புத்திகூர்மையை விட மேல். – எல்பர்ட் ஹப்பர்ட்
13) வெற்றி அளக்கப்படுவது எப்படி?
இலக்கை நோக்கிக் குறிபார்த்துக் கொண்டே இருந்தால் மட்டும் போதாது..இலக்கை நோக்கி தவறாமல் அம்பை எய்து விட வேண்டும். அது தான் வெற்றியின் அடையாளம் – இத்தாலிய பழமொழி
14) எதற்குக் கெட்ட காலம் கிடையாது?
நல்ல கருத்துக்களுக்கு கெட்ட காலமே கிடையாது. ஹெச். கார்டன் செல்ஃப்ரிட்ஜ்
15) எப்படி மற்றவருடன் பழகுவது?
ஒருபோதும் காது கேளாதவனிடம் முணுமுணுக்காதே; கண் தெரியாதவனிடம் கண் சிமிட்டாதே! அவ்வளவு தான்! – ஸால்வேனியா பழமொழி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு ; லைப்ரரியில் புஸ்தகம் எடுத்தால் இடையிடையே பென்சிலால் சிறிய ஓரெழுத்துக் குறிப்புகள் எழுதுவேன்; சில நேரங்களில்ஆங்கிலப் புஸ்தகத்தில் தமிழிலும் எழுதுவேன் . சில நாட்களுக்கு முன்னர் லண்டன் பல்கலைக்கழக லைப்ரரிக்குச் சென்று நான்கு புஸ்தகங்களை எடுத்தேன் ; ஜான் ப்ரோ JOHN BROUGH என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஸம்ஸ்க்ருதக் காதல் கவிதைகளின் தொகுப்பு அந்தப் புஸ்தகம்; நான் முதல் தடவையாக அதை எடுப்பதாக நினைத்துக்கொண்டு கடைசிப்பக்க இண்டெக்ஸ் பகுதிக்குச் சென்றேன்; என் கையெழுத்தில் 10-3-1999 தேதி எழுதப்பட்டிருந்தது என்ன அதிசயம் அதே புஸ்தகத்தை கால் நூற்றாண்டுக்குப் பின்னர் நான் எடுத்திருக்கிறேன் . உள்ளே புரட்டிப் பார்த்ததில் என்னுடைய ஓரெழுத்துக் குறிப்புகள் இருந்தன
ஜான் ப்ரோ JOHN BROUGH அந்த நூலில் முன்னுரையில் கவிதை என்றால் என்ன, யாப்பு என்றால் என்ன , மொழிபெயர்ப்பில் என்ன சிக்கல்கள் உள்ளன என்பதையெல்லாம் மிக அழகாக எடுத்துக்காட்டுகளுடன் வெளியிட்டுள்ளார் அவை கிரேக்க, லத்தீன், ஆங்கில மொழிகளிலிருந்து எடுக்கப்பட்டவை ஒரு ஜெர்மன் மொழிக்கவிதையை ஆங்கிலத்தில் எப்படி மொழிபெயர்க்கலாம் என்பதையும் காட்டியுள்ளார் .எனக்குள்ள கெட்ட பழக்கங்கள் ; இரவில் ஒன்பது மணிக்கே தூங்கப் போய் காலை நாலு மணிக்கு எழுந்திருப்பதாகும்; சமீப காலமாக இன்னும் ஒரு கெட்ட பழக்கமும் வந்துவிட்டது ;நள்ளிரவில் அல்லது இரவு ஒரு மணி வாக்கில் எழுத்து ஒரு மணி நேரத்துக்கு ஏதாவது படித்தல் அல்லது நான் சேகரித்த 20,000 தபால்தலைகளின் ஆழகினை ரசித்தல் போன்றவற்றில் ஈடுபடுவேன்; அப்படிப் படித்தபோது என்ன நிகழந்தது என்பதைச் சொல்கிறேன்:
ஜான் ப்ரோ JOHN BROUGH மொழிபெயர்த்த ஒரு எறும்புக் கவிதையை படித்தேன். நள்ளிரவில் எழுந்த நான் அந்த எறும்புக் கவிதையை படித்தேன் . மீண்டும் தூக்கம் கண்களை சிமிட்டும் முன்பாக அதைத் தமிழில் மொழிபெயர்த்தேன் ; இதோ ஜெர்மன், ஆங்கில மொழிபெயர்ப்பும் என்னுடைய தமிழ்த் தழுவல் கவிதையும்
IN HAMBURG LEBTEN ZWEI AMEISEN
DIE WOLLTEN NACH AUSTRALIEN REISEN
BEI ALTONA AUF DER CHAUSSEE
DA TATEN IHNEN DIE BEINE WEH
UND DA VERZICTETEN SIE WEISE
DANNAUF DEN LETZTEN TEIL DER REISE (German)
MEANING
In Hamburg there lived two ants who made up their minds to travel to Australia. Then, on the pavement at Altona (just outside Hamburg) their feet hurt; and thereupon they sensibly gave up the last part of the journey.
ஜெர்மனியிலுள்ள ஹாம்பர்க் நகரில் வாழும் இரண்டு எறும்புகள் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முடிவுசெய்தன . நகரின் வெளிப்புறத்துக்குச் சென்றபோதே கால்கள் வலி எடுத்தன ; உடனே அடுத்த பகுதி பயணத்தை புத்திசாலித்தனமாகக் கைவிட்டன.
இதை அப்படியே மொழிபெயர்த்தால் ஆங்கிலம் படித்தோருக்கு முழு வீச்சு புரியாது என்பதற்காக ஜான் ப்ரோ பின்வருமாறு ஆங்கிலத்தில் எழுதுகிறார்
Two ants who lived in London planned
To walk to Melbourne overland
, but footsore in Southampton Row
When there were still some miles to go,
They thought it wise not to extend
The journey to the bitter end. (English)
POEMS FROM THE SANSKRIT; TRANSLATED WITH INTRODUCTION BY JOHN BROUGH; PENGUIN BOOKS
கவிதையில் எதுகை, மோனை வருவதற்காக ஐயாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள ஆஸ்திரேலியாவை சம்பந்தப் படுத்துகிறார்கள்; தேசப்பட புஸ்தகத்தில் இந்த இடங்கள் எங்கே, எங்கே உள்ளன என்று பார்த்தால் கவிதையின் முழுத்தாக்கம் தெரியும்.
இதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம் என்று இரவு ஒரு மணிவாக்கில் யோசித்தேன்; வேகமாகப் பேனாவை எடுத்து ஒரு தாளில் எழுதினேன். இதோ அந்தக் கவிதை
மகாராஷ்டிர கோவில்கள் , கர்நாடக கோவில்கள் , ஆந்திர கோவில்கள் பற்றி மூன்று புஸ்தகங்களை எழுதி வெளியிட்ட பின்னர் பல கோவில்களுக்குச் சென்று தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது ; சில கோவில்கள் ஏற்கனவே சென்ற கோவில்கள்; மீண்டும் சென்றேன்; புதியன கண்டேன்; ஏனையவை புதிய கோவில்கள் . இவைகளையெல்லாம் தொகுத்தால் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேஷியா ஆந்திரம்= தமிழ் நாடு (தென் இந்தியா) என்ற நான்கு நாடுகளை குறிப்பிட வேண்டியுள்ளது ; ஆஸ்திரேலிய கோவில்கள் மூன்றும் ஏற்கனவே ஆஸ்திரேலிய புஸ்தகத்தில் வந்தாலும் கோவில்கள் பற்றிய புஸ்தகத்தில் ஆலய விஷயம் இருக்க வேண்டும் என்று சேர்த்துள்ளேன்; மற்றவை புதியவை.
கடவுள் பெயரை எத்தனை முறை சொன்னாலும் கேட்டாலும் புண்ணியம்தான் . இதுவரை இந்தக் கோவில்களை பார்க்காதோருக்கு இது ஒரு கைடு/ வழிகாட்டி நூல் அல்லது ஆற்றுப்படை நூலாகும். மேலும். எந்தக் கோவிலுக்குப் போகும் முன்னரும் அதன் சிறப்புகளை அறிந்து சென்றால் குறுகிய நேரத்தில் நிறைய பலன்களைப் பெறலாம். இறைவன் புகழ் மட்டுமின்றி கட்டிடக் கலை, சிற்பக் கலை, கல்வெட்டு , இடர்ப்பாடுகள் என எத்தனையோ விஷயங்களை நினைவிற்கொண்டு எழுதினேன். ஆனால் இது முழுவதும் சொன்னதாகாது;. சொல்லாமல் விட்ட புராணக் கதைகள் , நம்பிக்கைகள் ஆகியனவும் இருக்கின்றன. அவற்றை அந்த ஊர் மக்களிடமிருந்து நீங்களே அறிவீர்கள் .
கோவில்களைத் தவிர பல ஆஸ்ராமங்களுக்கும், சித்தர் சமாதிகளுக்கும் சென்றுவந்தேன் ; ஆந்திரத்தில் சத்ய சாய்பாபாவைத் தரிசிக்க புட்டபார்த்திக்கு பல முறை சென்றேன்; மந்திராலயத்திலுள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் சமாதிக்கும் சென்றுவந்தேன். அந்த அனுபவங்களைத் தனியாக எழுதுவேன் .
படிப்பதோடு நில்லாமல் பயணம் செய்யுங்கள்; காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளுங்கள். உடல் வலு ,மன வலு, பண பலம் எல்லாம் இருந்து, புயல்- மழை இல்லாமல் இருந்தால், உடனே புறப்படுங்கள் .நான் ஆஸ்திரேலியா வரை சென்று இடையே இந்தியா, சிங்கப்பூர் மலேஷியாவுக்கும் சென்றதால்- 45,000 கிலோமீட்டர் பயணம் செய்ததால்– உடல் எடையில் ஏழு கிலோ குறைந்தது! இது ஒரு போனஸ். உங்களுக்கும் நிறைய போனஸ் கிடைக்கட்டும் ; அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம்!
அன்புடன்
லண்டன் சுவாமிநாதன்
ஏப்ரல் 2025
swami_48 @yahoo.com
swaminathan.santanam @ gmail.com
நான்கு நாடுகளில் நான் சென்ற கோவில்கள் book title
பொருளடக்கம்
1.பத்து மலை முருகனைப் பார்க்க மலேசியாவுக்கு வாருங்கள்!
2.சிங்கப்பூர் வீர மா காளி அம்மன் கோவில் – கார்த்திகைத் திருவிழா
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
R S Pandit who translated Kalhana’s Rajatarangini from Sanskrit into English praised poet Kshemendra as Voltaire of Kashmir. He added more information about the poet in his footnote to one of the slokas in the book.
“Kshemendra was of a wealthy parentage, well-educated and had travelled extensively abroad. Although he was born within the fold of Saivism he had been drawn towards Vaishnavism owing to his studies with Soma Bhagavata . His unbiased mind led him to the study of Buddhism which he esteemed very highly. A number of his works have survived, a list of which is given by Pandit M S Kaul . According to him Kshemendra lived in the period of 990-1065 CE.
The Narmamala written by the poet is a remarkable work in Sanskrit language in the style of Voltaire . Kshemendra is bitterly critical of government officials of his day – Kayasthas , but with regard to the numerous other caricatures and scenes from the daily life of the period his sarcasm is much less bitter and often Addisonian. He tells us that he was the first person to render into Sanskrit, the work of Gunadhya , Brhat-Katha or Great Story which was in Pisaca dialect . The work composed in ancient Pushto in the first century CE must have rivalled Mahabharata which has 100 000 verses.
One of Kshemendra’s strikingly original poems which is extant in the Samayamatrka describing the rakish progress of a courtesan throughout the Kashmir valley. The various scenes of the courtesan Kankali’s thrilling adventures can all be easily traced on the map.
Kshemendra was a lover and patron of the stage and a frequent play-goer. Kashmir remained the refuge of the Indian theatre after it had ceased to exist in India. In his work, Kavi Kanthabharana , Kshemendra advises aspirants to poetic frame to improve their taste by the study of current theatrical representations. At the end of his book, the Sanskrit drama, Professor A B Keith referring to the work of Kshemendra adds
“doubtless the Mohammedan conquest seriously affected the vogue of the classical drama , which was obnoxious to the Mohammedan rulers is being closely identified both with the national religion and the national spirit of India. The kings, who had been the main support of the actors and poets alike , disappeared from their throne or suffered reverses in fortune. The tradition of dramatic performances gradually vanished”.
Kalhana in his Rajatarangini criticised Kshemendra in sloka 1-13
“While owing to incompressible lack of care in the work of Kshemendra, known as the list of kings, even a portion of it is not free from error, although it is the composition of a poet”.
***
We have lost many of Kshemendra’s works. Now we have the following books:
Fourteen other works are known only from references in other literature.
***
Humour
Kshemendra’s “Kalaavilasa deals humorously with the follies of men. In “Desopadesa”, a miser wanting to take his wealth with him after death ( A lawyer may advise that a cheque may be placed in his coffin!).
***
From Wisdom Library website:
Kṣemendra (क्षेमेन्द्र) (11th century) is one among the Kashmiri scholars who glorified the legacy of rhetorics with a new interpretation of the soul of poetry namely aucitya. He is not only a poet but also a scholar of high repute. His compositions focus on a wide range of topics which mark his in depth knowledge on various subjects including treatises on poetics and prosody. He composed Kāvyas, Mahākāvyas, a drama, many didactic poems, poetical epitomes of the Rāmāyaṇa, the Mahābhārata and Bṛhatkathā of Guṇāḍhya (which is lost to us).
Vyasadeva
Kṣemendra was otherwise known as Vyāsadāsa as most of the colophons of his works attribute to him. He was the son of Prakāśendra, grandson of Sindhu and father of Somendra and also the brother of Cakrapāla. He was also the descendant of Narendra, the minister of King Jayāpīḍa. Kṣemenda was the disciple of Abhinavagupta, and Somapāda, who was well versed in Bhāgavata. He also studied under Gaṅgaka and Vīryabhadra (a Buddhist). He was the preceptor of Bhaṭṭa Udaya Siṃha and prince Lakṣmaṇāditya.
***
Kshemendra (c. 990 – c. 1070 CE) was a Kashmirian poet of the 11th century, writing in Sanskrit. Born into an old, cultured, and affluent family, both his education and literary output were broad and varied. He studied literature under “the foremost teacher of his time, the celebrated Shaiva philosopher and literary exponent Abhinavagupta”. He also studied — and wrote about — both Vaishnavism and Buddhism.
Kshemendra’s literary career extended from at least 1037 (his earliest dated work, Brihatkathāmanjari, a verse summary of the lost “Northwestern” Bṛhatkathā; itself a recension of Gunadhya’s lost Bṛhatkathā — “Great Story”) to 1066 (his latest dated work, Daśavataracharita, “an account of the ten incarnations of the god Visnu”). In addition to the genres listed below, Kshemendra also composed plays, descriptive poems, a satirical novel, a history, and possibly a commentary on the Kāma Sūtra (all now known only through references in other works).
***
More information is available from Ksemendra – The Peoples’ Poet
எப்போதும் தொலைக்காட்சியைப் பார்க்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு எச்சரிக்கை – 15 தீங்குகள் இதனால் ஏற்படும்!
என்னென்ன தீய விளைவுகள் – இதோ பார்க்கலாம்!
1) உடல் எடை கூடுதல் : தொலைக்காட்சியை ஒரு இடத்தில் இருந்து உட்கார்ந்து கொண்டு பார்த்துக் கொண்டே இருந்தால் உடல் எடை கூடும். குண்டானதற்கு விசேஷமாக ஒரு காரணத்தை நீங்கள் தேட வேண்டிய அவசியமே இல்லை.
2) தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து வெளிவரும் ஒளியானது மெலடோனின் என்ற ஒரு முக்கியமான ஹார்மோனின் உற்பத்தியைக் குறைக்கிறது. (Suppresses the production of the key hormone – Melatonin). இது பாலின முதிர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும்.
3) உடலின் இயல்பான எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும். குறைந்த அளவே மெலடோனின் இருந்தால் அது உடல் எதிர்ப்பு சக்தியைப் பாதிக்கும். மரபணுக்களில் சிதைவு ஏற்படும். அதனால் கேன்ஸர் அபாயம் ஏற்படும்.
4) குறைந்த அளவே மெலடோனின் இருந்தால் பூப்பெய்துவதை காலத்திற்கு முன்னாலேயே ஏற்படுத்தும். உடல் உறுப்புகளை ஊக்குவிப்பதால் தூக்கம் வராது.
5) உடல் கொழுப்பு அதிகமாவதால் ஆடிஸம் வரலாம். ஏனெனில் லெப்டின் மற்றும் க்ரெலின் கொழுப்பைக் கூட்டி பசி உணர்வைத் தூண்டும். (Hormones Leptin and Ghrelin produce fat and boost appetite.)
6) கவனக்குறைவு எல்லாவற்றிலும் ஏற்படும். கவனத்தை ஊக்குவிக்கும் மூளை செல்கள் பாதிக்கப்படும்.
7) படிப்பதில் கஷ்டம் ஏற்படும். இளமையிலேயே மந்தமான புத்தி ஏற்படும்.
8) தொலைக்காட்சியைப் பார்த்தக் கொண்டே உணவை உண்பதால் அதிக கலோரிகள் உள்ள உணவு உள்ளே செல்வதால் டைப் 2 டயபடீஸ் ஏற்படும்.
9) டி.வி. பெட்டியிலிருந்து வெளி வரும் அலைகள் தோலில் உள்ள
MAST CELLSகளைப் பாதிப்பதால் தோலின் எதிர்ப்பு சக்தி போய் வியாதிகள் உருவாகும்.
10. அதிக கொலஸ்ட்ரால் உருவாகும். ஏனெனில் உடலின் இயக்கத்தை மந்தப்படுத்துவதால் குழந்தைகளிடம் இது ஏற்படும்.
11. ஒன்றுமே செய்யாமல் இருந்தாலும் இருக்கலாம், ஆனால், டிவி பார்ப்பதானது மெடபாலிஸம் எனப்படும் வளர்சிதைமாற்றத்தை வெகுவாக பாதிக்கும்.
12. அருகிலிருந்து பார்த்துக் கொண்டே இருப்பதால் கிட்டப்பார்வை கோளாறு ஏற்படும்.
13. மிகுதியாகப் பார்ப்பது அல்ஜெமீர் வியாதியில் கொண்டுபோய் விட்டு விடும்.
14. நியூஜிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்ந்து டிவி பார்க்கும் குழந்தைகள் 26ம் வயதில் கல்வியில் மிகவும் பின் தங்கி குறைந்த மதிப்பெண்கள் பெறுவதைக் காட்டுகின்றன.
15. குறைந்த நேர கவனம் மட்டுமே கொள்ள முடிவதால் ATTENTION DEFICIT HYPERACTIVIRY DISCORDER எனப்படும் வியாதி உருவாக இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு உண்டு.
ஆகவே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை கண்டிப்பாக அளவுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
டாக்டர் சிக்மன் (Dr. Aric Sigman – British Psychological Society) நீண்ட கால ஆய்வுகளை நடத்தி இந்த முடிவுகளை அறிவித்ததை மேற்கொண்டு செய்யப்பட்ட பல ஆய்வுகள் ஆமோதிக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதற்கு முன்னர் 1995ல் ஒரு தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. டாக்டர் ஏ.ஜே. வாக்கர் மற்றும் டாக்டர் சச்சின் ஷா ஆகிய இரண்டு புனே நகரைச் சேர்ந்த ஆய்வாளர்கள் டிவி பார்ப்பது பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.
வன்முறைக் காட்சிகள், ஆபாசக் காட்சிகள் பார்ப்பதானது அமிலத்தன்மை கூடுதல், அஜீர்ணம், உயர் அழுத்தம், தீவிர தலைவலி
உள்ளிட்ட பல வியாதிகளை உருவாக்கும் என்பதை ஆய்வின் முடிவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறும் வியாதிகளின் பட்டியல் : Acidity, Indigestion, Palpitartion, Dyspnoea, Hypertension, Ulcerative Colitis, Severe Headache, Eye Strain and even Schizophrenia and depressive psychoneurosis!
இதைத் தவிர பெண்கள் அதிகமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க்கும்போது அவர்களுக்கு ஹார்மோன்களில் சமச்சிர்தன்மை போய் பல வித வியாதிகளையும் தரும்.
சீரியலே கதி என்று இருக்கும் பெண்மணிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
குறிப்பாக கர்ப்பிணிகள் எக்ஸ்ரே கதிர்களை அதிகமாக எப்போதும் தங்கள் மீது பாய்ச்சிக் கொண்டே இருப்பதால் பிறக்கவிருக்கும் குழந்தைக்கு சொல்லவொண்ணா தீங்குகளைத் தருவர்.
உடல்நலம் இப்படி பாதிக்கிறது என்றால் மனநலம் பாதிப்பது என்பது இன்னொரு பெரிய விஷயம்.
குழந்தைகளின் கள்ளங்கபடமற்ற தன்மை போகிறது. ஆண்களையும் பெண்களையும் இது உளவியல், மற்றும் உடலியல், ரீதியாகப் பாதிப்பதோடு ஒழுக்கத்திலும் பாரம்பரியப் பழக்கங்களை விட்டு விடுவதற்கான காரணமாகவும் அமைகிறது.
ஆகவே பெற்றோர்கள் முதலில் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும். பின்னர் குழந்தைகளுக்கு இது பற்றிய விழிப்புணர்ச்சியை ஊட்ட வேண்டும்.