71.SUPPURATION AND SORES OF THE PENIS 6-30-168 லிங்கபாக – ஆண்குறியில் வீக்கம், புண்
72.CHRONIC ALCOHOLISM -SIX TYPES 6-24 குடி போதைக்கு அடிமை ஆதல் – ஆறுவகை உண்டு —மதத்யாய
73.DIABETES 2-4-44; 6-6-56 நீரிழிவு , சர்க்கரை வியாதி
74.SOFTENING AND DEGENERATION OF MUSCULAR TISSUES 1-20-14 மாம்சக்லேத- சதையிலுள்ள திசுக்கள் பலவீனம் அடைதல்
75.PSYCHIC DISORDERS 1-7-52 மனோவிகார – மனா உளைச்சல் முதலியன
76. POX 6-12-93 மசூரிக – அம்மை நோய்
77. URETHRITIS 1-20-14 சிறுநீரைக் கொண்டுவரும் குழாய்கள் வீங்குதல்; எரிச்சல் -மேத்ரபாக
78.CHRONIC ABORTION- 4-8-30 ம்ரித கர்ப்ப – அடிக்கடி குழந்தை இறந்து பிறத்தல் அல்லது கர்ப்பம் சிதைதல் ;
ம்ருத், ம்ரித என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களிலிருந்து மரணம் , மரித்தல் என்ற சொற்கள் வந்தன .
79. DUMBNESS 1-20-11 மூகத்வ – செவிட்டுத் தன்மை
80. ORAL DISEASES 6-26-19 வாயில் ஏற்படும் நோய்கள் – முகரோக
சஸ்ம்க்ருதத்துக்கு வாய் இல்லை ; தமிழுக்கு முகம் இல்லை என்று ஆன்றோர்கள் கிண்டலாகச் சொல்வதுண்டு. . ஏனெனில் சம்ஸ்க்ருதத்தில் முகம் என்றால் வாய்; தமிழில் முகம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையே இன்று வரை பயன்படுத்துகிறோம் ; யாரும் மூஞ்சி என்று சொல்வதில்லை.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கம்யூனிஸ்ட் சீனாவுக்கு அருகில் ஒரு தீவாக உள்ள நாடுREPUBLIC OF CHINA/ TAIWAN தைவான் என்று அழைக்கப்படுகிறது ; அந்த நாடு சீனப் பழமொழிகள் சொல்லும் கதைகளை அடிக்கடி தபால்தலைகளாக வெளியிடுகிறது .
வீட்டையும் நேசி காகத்தையும் நேசி “love house and crow,” என்பது சீனப் பழமொழி ; இதன் பொருள் ஒருவரை விரும்பும்போது அவர்களிடத்தில் உள்ள குறைகளையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும் காதலன், காதலிகளுக்கு இது ஒரு முக்கிய பாடம் ; கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதை இது வலியுறுத்துகிறது ஆங்கிலத்தில் என்னையும் விரும்பு, என் நாயையும் விரும்பு என்று சொல்லுவார்கள் .
****
பச்சை கல்லுக்கு ஒளியூட்ட செங்கலை கொடுத்தானாம்“offering bricks to elicit jade,” என்பது ஒரு சீனப்பமொழி.
இது தங்கத்தைக் கொடுத்து பித்தளை வாங்குவதற்குச் சமம் ; இதன் பின்னால் ஒரு சீனக்கதை உளது ஒரு பிரபல கவிஞர் இன்னும் ஒரு பெரியவர் கோவிலுக்கு வருவதை அறிந்து இரண்டு வரி கவிதையை சுவற்றில் எழுதினாராம்; அவர் எதிர்ப்பார்த்தது மீதி இரண்டு வரிகள் தன்னுடையதையும் மிஞ்சுவதாக இருக்கும் என்று . ஆனால் அவ்ருக்குப் பெரிய ஏமாற்றமே மிஞ்சியது; அந்தப் பெரியவர் எழுதியது சோடை போனது அவர் பாரதி அல்லது காளிதாசனைப் போன்ற்வர் அல்ல. பாரதி சின்னப்பயல் என்று கவிதை எழுத்ச் சொன்ன காந்திமதி நாதனை பாரதி மட்டம் தட்டினார்; எப்படி? காந்தி மதி நாதனைப் பார் அதி (பாரதி) சின்னப்பயல் என்று!
அதேபோல கோபித்துக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறிய காளிதாசனைக் கண்டுபிடிக்க போஜ ராஜன் இரண்டு வரி கவிதை எழுதி இதை பூர்த்தி செய்வோருக்குப் பரிசு என்றவுடன் காளிதாசன் அதை அற்புதமாகப் பூர்த்தி செய்தான்; உடனே காளிதாசன் இருக்குமிடத்தைப் போஜராஜன் கண்டு பிடித்தான் அப்படியெல்லாம் இல்லாமல் சொத்தைக் கவிதையை எழுதியதால் செங்கலை வைத்து பச்சைக் கல்லுக்கு மெருகு ஊட்டியது போல என்ற சீனப் பழமொழி எழுந்தது !
When the Tang dynasty poet Chang Jian learned that Zhao Gu was going to the Lingyan Temple in Suzhou, he wrote on the temple wall: “At this old temple beside the Guanwa Palace / The clouds over the watery expanses are many, and the visitors few.” His expectation was that Zhao would add the final two lines to the poem. Zhao did indeed add: “Upon hearing of spring’s arrival, my melancholy doubles / Amid hundreds of blooms, a monk returns.” Later generations felt that Chang Jian had “offered bricks to elicit jade”—and the expression came to describe the act of offering clumsy lines of poetry or unpolished efforts in the hope of eliciting outstanding work from another person.
****
நான்கு தபால் தலைகளை வெளியிட்ட தைவான் நாடு, நாலாவது அஞ்சல் தலைக்கான சீனக்கதையையும் வெளியிட்டது ; உண்மையைப் போலவே “true to life”என்பது அந்தப் பழமொழி. ஒரு சிந்தனையாளர் நன்றாக உறங்கினார்; அப்போது அவர் பட்டுப்பூச்சி பறப்பது போலக் கனவு கண்டார்; விழித்து எழுந்தவுடன் அவருக்கே சந்தேகம் வந்துவிட்டது. நான் பட்டுபூச்சியிலிருந்து வந்தவனா அல்லது நான் நான்தானா என்று; ஏனெனில் அவரது கனவு அவ்வளவு தத்ரூபமானது; ஆகையால் ஏதெனும் ஒன்று உணமையைப் போலவே தோன்றினால் இந்தப் பழமொழியை சீனர்கள் சொல்லுவார்கள் .
****
கல்வி என்பது ஆசிரியருக்கும் மாணவருக்கும் பயன்தருகிறது “Education benefits both students and teachers,”
என்பது ஒரு சீனப் பழமொழி
பர்த்ருஹரியின் நீதி சதகத்திலிருந்து ஒரு பாடலில் இதே கருத்து உள்ளது
हर्तुर्याति न गोचरं किम् अपि शं पुष्णाति यत्सर्वदाஉप्य्
மன்னர்களே! உங்கள் கர்வத்தை/ அகந்தையை கற்றோரிடம் காட்டாதீர்.
அறிவாளிகளுடன் யார் போட்டி போட முடியும்?
****
தமிழ்ப்பாடலிலும் இதே கருத்து உள்ளது
வெள்ளதால் போகாது வெந்தணலால் வேகாது
வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது
கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவுறாது
கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது
கல்வியென்னும் உள்ளத்தே பொருளிருக்க
உலகெல்லாம் பொருள்தேடி உழல்வதென்னே
ஓம் சஹ நாவவது
சஹ நவ் புனக்து
சஹ வீர்யம் கரவாவஹை
தேஜஸ்வி நாவதீ-தமஸ்து
மா வித் விஷா வஹை
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
ॐ सह नाववतु ।
सह नौ भुनक्तु ।
सह वीर्यं करवावहै ।
तेजस्वि नावधीतमस्तु मा विद्विषावहै ।
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
என்ற உபநிஷத் மந்த்ரத்தை குருகுலத்தில் ஆசிரியரும் மாணவரும் சேர்ந்து சொல்லுவார்கள் ; இதிலும் இருவர் முன்னேற்றமும் வலியுறுத்தப்படுகிறது
பொருள்
நான் கற்கும் விஷயத்தில் இருவரும் ஒன்றாக முன்னேறுவோமாக;
இருவரும் அதை விருப்பத்தோடு படிப்போமாக;
இருவரும் முழு ஈடுபாட்டுடன் முழு சக்தியுடன் கற்போமாக;
இதன் மூலம் இருவரும் ஒளிமிக்க அறிவினை அடைவோமாக ;
வெறுப்பு என்பதே தோன்றாமலிருக்கட்டும் ;
எங்கும் அமைதி, எதிலும் அமைதி, எல்லோரிடத்திலும் அமைதி நிலவட்டும்!
****
இது போல இந்தியாவும் பழமொழித் தபால்தலைகளை வெளியிடலாம். பெரும்பாலான பழமொழிகள் தமிழ், இந்தி, சம்ஸ்க்ருதத்தில் ஒரே பொருளைத் தருகிறது.
பகவத் கீதை வரிகள், ராமாயண வரிகள், வந்தே மாதரம் வரிகளை இந்தியா தபால் தலைகளாக வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, அந்த நாட்டு ஜனாதிபதிகள் சொன்னதை- பொன்மொழிகளை — அஞ்சல்தலைகளாக வெளியிட்டுள்ளது; நாமும் ஆயிரக் கணக்கான சாது சந்யாசிகளின் பாடல் வரிகளை– பொன்மொழிகளை தபால் தலைகளாக வெளியிடலாமே!
4. True to Life (NT$8): Chuangzi was a thinker of the Warring States era. He once dreamt that he was a butterfly, flitting hither and thither. He completely forgot he was a person. Yet when he awoke, he found that he was still Chuangzi. The vividness of the butterfly made Chuangzi remark upon how true to life his dream was. He wondered: Am I a person who has awoken from a dream that I was a butterfly, or a butterfly dreaming that I am a person? Chuangzi’s phrase is now commonly used to describe something that is extremely vivid and lifelike.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கோடைக்காலத் தலைநகரமான ஶ்ரீ நகரைப் பற்றி அனைவரும் கூறும் பிரபலமான புகழ் மொழிகள் இரண்டு உண்டு.
“அட கடவுளே! இனி சொர்க்கம் என்று ஒன்று இல்லை; இது தான் சொர்க்கமே!”
“பண்பாடு, இயற்கை அழகு, அமைதி ஆகிய அனைத்தும் கலந்த அற்புத இடம் ஶ்ரீ நகர் தான்!”
கிழக்கின் வெனிஸ் நகரம் (VENICE OF THE EAST ) என்று புகழப்படும் இதை அடைய ஜம்மு, மும்பை, டில்லி, சண்டிகர் உள்ளிட்ட இடங்களிலிருந்து விமான வசதி உண்டு. ரயில் மூலமாகவும் பஸ் மூலமாகவும் பல்வேறு இடங்களிலிருந்து இதை எளிதில் அடைய முடியும்!
அழகிய இமயமலை பின்னணியும் பிரம்மாண்டமான ஏரியும் அனைவரையும் இங்கு ஈர்க்கின்றன என்றால் அது மிகையல்ல!
இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன.
என்றாலும் முக்கியமான இடங்களை மட்டும் இங்கு பார்க்கலாம்..
சங்கராசார்யர் கோவில்
ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சிவாலயமானது ஶ்ரீ நகர் நகரத்திலிருந்து 1100 அடி உயரத்தில் சங்கராசார்யா மலை உச்சியில் உள்ளது.
பிரபல மன்னனான கல்ஹணர் காலத்திலிருந்து இது மிகவும் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. இதை அவர் கோபாத்ரி என்று அழைத்தார். சிவராத்திரியன்று ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு திரள்வர்.
தால் ஏரி
மிகவும் அழகிய தால் ஏரி ஶ்ரீ நகரின் முக்கிய ஈர்ப்பு மையமாகும். மிதக்கும் தோட்டங்களுக்கும் படகு வீடுகளுக்கும் இது மிகவும் புகழ் பெற்றது. பின்னணியில் மாபெரும் இமயமலை இருக்க இதன் அழகில் சொக்கிப் போகாதவர் இருக்கவே முடியாது.
ஏரியின் தூய்மையான நீரில் மலையின் பிரதிபலிப்பைக் காணலாம். இங்கு ஷிகாரா ரைட் எனப்படும் பாரம்பரிய படகு சவாரியை மெற்கொள்ளாதவர் இல்லை. சுமார் 16 கிலோமீட்டர் நீளமுள்ள ஏரியில் அழகாகப் படகு சவாரி செய்தவாறு இயற்கையை அணுஅணுவாக ரசிக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. குறைந்தபட்சம் 45 நிமிடங்களை எடுக்கும் இந்த சவாரிக்கு கட்டணம் உண்டு. ஒரு நாளில் எந்த நேரத்திலும் இந்த சவாரியை மேற்கொள்ளலாம்.
ஷாலிமார் பாக், – முகல் கார்டன்
முகலாய மன்னனான ஜஹாங்கீர் தனது மனைவி நூர் ஜஹானுக்காக அமைத்த தோட்டம் முகல் கார்டன் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தோட்டங்கள், நீரூற்றுகள் மிக்க அழகுடன் காட்சி அளிக்கின்றன. பின்னால் உள்ள பிர்பஞ்சல் மலைத்தொடர் சரியான பின்னணியைத் தருகிறது. மலர்ந்து குலுங்கும் ஒளி வீசும் மலர்கள் மனதிற்கு இன்பத்தைத் தரும்.
நைகீன் ஏரி
நாகீன் ஏரி என்றும் அழைக்கப்படும் இந்த நைகீன் ஏரி பர்பத் மலையின் அடிவாரத்தில் வில்லோ மரங்களும் பாப்லர் மரங்களும் ஏரியைச் சூழ்ந்திருக்க பரந்திருக்கும் ஒரு ஏரியாகும், படகு வீடுகளும் ஷிகாரா படகுகளும் இங்கு உண்டு. இது தால் ஏரிக்கு அருகிலேயே உள்ளது. பரபரப்பில்லாமல் அமைதியாக இயற்கையை ரசிக்க விரும்புபவர்கள் தேர்ந்தெடுக்கும் இடம் இது.
ஹரி பர்பத்
ஹரி பர்பத் என்றால் மைனா குன்று என்று பொருள். ஹிந்து, முஸ்லீம்,, சீக்கியர் ஆகியோர் வழிபடுவதற்காகன் அநேக வழிபாட்டு இடங்கள் இங்கு உள்ளன.
இந்தக் குன்றின் மீதுகுள்ள துர்ரானி கோட்டையை அக்பர் 1590ல் கட்ட ஆரம்பித்தார். ஆனால் திட்டம் முழுவதுமாக முடியவில்லை. இப்போது நாம் காணும் கோட்டையை 1808ல் ஷூஜா ஷா துரானி என்பவர் கட்டி முடித்தார். இந்தக் குன்றின் மேற்குப்புறத்தில் உள்ள ஷாரிகா தேவி ஶ்ரீ நகரின் காவல் தெய்வமாக இருக்கிறார் என்பது ஐதீகம்.
துலிப் கார்டன்
இந்திரா காந்தி நினவாக இது ‘இந்திரா காந்தி நினைவக துலிப் கார்டன்’
என்றும் அழைக்கப்படுகிறது. ஜபர்வான் குன்றில் அமைக்கப்பட்ட இந்தத் தோட்டத்தில் வண்ண வண்ண மலர்களை இமயமலை பின்னணியோடு பார்த்து மகிழலாம், இந்த மலர்ப் படுக்கை மையத்தில் ஓய்வாக நடந்து செல்வதே மனதுக்கு இதம் தரும்.
துலிப் என்பது ஒருவகை தண்டுக் கிழங்கு கொண்ட காட்சிப் பூக்களைக் கொண்ட ஒரு தாவரமாகும். இது லிலியாசே என்று அழைக்கப்படும் அல்லிக் குடும்பத்தைச் சேர்ந்தது. காணக் கண் கொள்ளாக் காட்சி தரும்
60 வகைக்கும் மேற்பட்ட 15 லட்சம் துலிப் இங்கு உள்ளன.
பாரி மஹால்
தால் ஏரிக்குத் தென்மேற்கே அமைந்துள்ள பாரி மஹால் பெரிய தோட்டமாகும். க்விண்டிலான் என்று பிரசித்தி பெற்றிருக்கும் இது ஆறு தளங்களைக் கொண்டுள்ளது. இதன் நீளம் 400 அடி. அகலம் 205 அடி. பாரி மஹால் என்றால் தேவதைகளின் இல்லம் என்று பொருள். இது ஷாஜஹானின் மூத்த மகனான தாரா ஷிகோவினால் தனது ஆசிரியர் முல்லா ஷா படாக்ஷியின் நினைவாகக் கட்டப்பட்டதாகும். பழைய காலத்தில் இது ஒரு புத்த மடாலயமாக விளங்கியது. தாரா வானவியலில் ஆர்வம் கொண்டவர். வானவியல் மற்றும் ஜோதிடம் கற்பிக்கும் மையமாக இது முன்பு திகழ்ந்தது.
லால் சௌக்
இது சந்தடி நிறைத்த ஒரு பிரபலமான சந்தையாகும். ஏராளமான கடைகளில் விதவிதமான பொருள்களை வாங்கலாம். இந்தப் பகுதியில் ஒரு சுற்று சுற்றினாலே காஷ்மீர் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்பதால் பல நாட்டினரும் இங்கு சுற்றி வருவதைப் பார்க்கலாம்.
இன்னும் ஜாமா மசூதி, மகிழ்ச்சியின் தோட்டம் எனப்படும் நிஷாத் பூங்கா உள்ளிட்ட ஏராளமான இடங்கள் ஶ்ரீ நகரில் பார்ப்பதற்கு உள்ளன.
நதிகள் கீதம் பாட, மலைகள் முணுமுணுக்க, காற்று சிலுசிலுக்க சிலிர்க்க வைக்கும் ஶ்ரீ நகர் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு இடமாகும்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Two years ago I posted here a lot of pictures of paintings from the famous Ramaswami temple at Kumbakonam. The idols in the Garbhagriha are as beautiful as the idols in Vaduvur and Mathuranthakam. Once you see them you would never forget the images or Lord Rama and his retinue
I made a very quick visit this time after having Darshan at Kumbeswarar Temple in March 2025. Though it was a very short visit, I couldn’t resist clicking with my Samsung Camera. This time I did not use my I pad.
I took the pictures on the wall and some sculptures. Since the paintings on the wall are in three rows, one must spend hours to take all the figures separately.
The temple must preserve the 500 year old paintings and publish them in a book which will be sold as hot cakes.
They have protected paintings of Anjaneya and Rama in a locked room. The temple must publish them. The department of archaeology can do this with the permission of the temple authorities.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 13
I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.
The stamps posted here are MINT (not used); so more valuable.
I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.
இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .
Here are stamps of India:
PART 13, INDIAN STAMPS,
Kasturba, Dr Hafkine, Sarojini Devi, Raja Rammohun Roy, Maharana Pratap, Abraham Lincoln, Asutosh Mukerjee, Vidyapati, Lalarajpatrai, Mediaeval Sculpture, Chittaranjan Das, St Thomas, Nehru, Sri Aurobindo, Cyrus the Great, Unesco, Swami Virajanand, Dadasaheb Phalke, Dr Ambedkar, Abanindranath Bose, Kasi Vidyapith, Beethoven, Sant Namdeo, Maharsi Valmiki, Jamnalal Bajaj, Iswar Chandra Vidyasagar, V S Srinivasa Sastri, J N Mukerjee, UN Day
–SUBHAM—
TAGS– PART 13, INDIAN STAMPS, Kasturba, Dr Hafkine, Sarojini Devi, Raja Rammohun Roy, Maharana Pratap, Abraham Lincoln, Asutosh Mukerjee, Vidyapati, Lalarajpatrai, Mediaeval Sculpture, Chittaranjan Das, St Thomas, Nehru, Sri Aurobindo, Cyrus the Great, Unesco, Swami Virajanand, Dadasaheb Phalke, Dr Ambedkar, Abanindranath Bose, Kasi Vidyapith, Beethoven, Sant Namdeo, Maharsi Valmiki, Jamnalal Bajaj, Iswar Chandra Vidyasagar, V S Srinivasa Sastri, J N Mukerjee, UN Day
49.ஹ்ரித் ரோக – இருதய நோய்கள் – ஐந்து வகை HEART DISEASE 1-17-6
50.ஹ்ரிம் மோஹ – சீரற்ற இருதயத்துடிப்புCARDIAC IRREGULARITY OR HEART BLOCK 1-20-11
ஹ்ருத் என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லிலிருந்து ஹார்ட் HEART என்ற ஆங்கிலச் சொல் வந்ததை அறிந்தால் இந்த நோய்களின் பெயர்களை எளிதில் புரிந்து கொள்ளலாம் . உலகம் முழுதும் ஸம்ஸ்க்ருதச் சொல்லையே பயன்படுத்துவதால் இந்துக்கள்தான் மருத்துவத்தின் தந்தை என்பதையும் அறியலாம் .
51.இக்ஷுவாளிகரசமேக -கிளைகோசூரியா என்பது சிறுநீரில் அதிக அளவு சர்க்கரை இருப்பதாகும்.GLYCOSURIA 2-4-10
52.ஜலககர்தப- கிருமிகளால் சீழ்பிடித்து ஏற்படும் ஜுரம் FEVER DUE TO SUPPURATION 6-12-99
53.ஜானுபேத – கால் வளைவு, சின்னி நாய்-BOW LEGS 1-20-11
55.ஜடராக்கினிவிகார – ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற உணர்வு – இதில் நான்கு வகைகளை சரகர் பட்டியல் இடுகிறார் MORBID APPETITE 3-6-12
56.ஜ்வர – காய்ச்சல் – இதில் எட்டு வகைகளை சரகர் பட்டியல் இடுகிறார் FEVER 6-3
57.கக்ஷ – அக்கி- 3 HERPES 1-20-14
58.கண்டு – உடலில் ஏற்படும் அரிப்பு PRURITUS 6-29-17
59.கர்ண ரோக – காது நோய்கள்DISEASES OF THE EAR 6-26-127
கர்ண என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு காது என்பது பொருள்; இதை கர்ணன் கதை மூலம் எல்லோரும் அறிவார்கள். காதில் கவச குண்டலங்களுடன் பிறந்தவன் அவன் . அதாவது குந்தி தேவி அவனை குழந்தையாக ஆற்றில் ஒரு கூடையில் மிதக்கவிட்டபோது காதில் குண்டலங்களைப் போட்டு அவனை அனுப்பினாள்; யார் குழந்தையை எடுத்தாலும் அவர்கள் அந்தக் குழந்தையை பராமரிக்க பணம் தேவை அல்லவா ? அவள் எதிர்பார்த்தது போலவே ஒரு ஏழைத் தேரோட்டியின்கையில் அந்தக் கூடை குழந்தையுடன் அகப்பட்டது .
A – பதிர்யா – செவிட்டுத்தனமை DEAFNESS 6-26-128
B – கர்ண ஸ்போட்டை- காதுக்குள் வீக்கம்/ புண்INFLAMMATORY SWELLING INSIDE THE EAR 6-29-127
C- கர்ண ச்ரவ – காதுக்குள் சீழ் வடிதல் PUS DISCHARGE FROM THE EAR 6-26-127
D – புதிஸ்ரவண- உட்காதில் வீக்கம் – இதில் எட்டு வகைகள் உள்ளன SUPPURATION OF THE INNER EAR 6-26-127
60.காச – நிற்காத இருமல் – இதில் ஐந்து வகைகள் உள்ளனCHRONIC COUGH 6-18
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
20-3-25 கல்கிஆன்இதழில் பிரசுரமான சிறுகதை!
மாற்றி யோசித்தால்! (ள்) (ன்)
ச. நாகராஜன்
ஹால் நிரம்பி வழிந்தது.
வானதி பேச ஆரம்பித்தாள்.
“பண்பாடு பற்றி ஒரு பண் பாடு என்று சொன்னவுடன் அந்தப் பண் பாட நான் பட்ட பாடு பெரும்பாடு” என்ற அவளது பேச்சின் ஆரம்பத்தை அனைவரும் ரசித்தனர்.
“பண்பாடு சீரழியும் விதத்தால் மனமே
சஞ்சலம் நீ படாதே தினமே
அறிவியலும் ஆன்மீகமும் இணையட்டும்
அறிஞரெல்லாம் அதைப் போற்றிப் புகழட்டும்”
என்று இனிய குரலில் பாட ஆரம்பித்தாள் வானதி.
வரிசையாக பண்பாடு சிறக்க பாஸிடிவான வழிகளை அவள் பாடவே கூட்டம் ஆரவாரித்தது.
இலக்கியப் பண்பாட்டுச் சங்கத்தின் தலைவரான மணிசங்கருக்கு ஒரே சந்தோஷம். இறுதியாக நன்றியுரை சொல்ல வந்தவர் இப்படி ஒரு சிறப்பான கூட்டத்தை நடத்துவதற்கான அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக் கொண்ட ‘ஏஐ க்ரேட்’ நிறுவனத்தின் நிறுவனர் உமாகாந்தனுக்கு நன்றி கூறி தம்பதி சகிதமாக வந்து பரிசு வழங்க மேடைக்கு வருமாறு அவரை அழைத்தார். அத்தோடு நிகழ்ச்சியில் பேச பலரையும் ஏற்பாடு செய்த தமிழ் இலக்கியச் செல்வர் மகாதேவனுக்கும் நன்றி கூறி அவரையும் மேடைக்கு அழைத்தார்.
பாஸிடிவ் சிந்தனையை வழங்கிய வானதிக்கு சிறப்புப் பரிசு அறிவிக்கப்பட்ட போது அனைவரும் ஆரவாரித்தனர்.
உமாகாந்தனின் மனைவி வானதியைக் கட்டிப் பிடித்துப் பாராட்டினார்.
“நீ ஒரு நாள் என் வீட்டுக்கு வாயேன்” என்ற அவரது அன்பு அழைப்பைக் கேட்டு வானதி திகைத்துப் போனாள்.
பில்லியரான அந்தப் பணக்காரக் குடும்பம் எங்கே, தான் எங்கே – அவள் மலைத்தாள்.
“இவள் என் பெண் தான்” என்றார் இலக்கியச் செல்வர் மகாதேவன்.
பெரிய தோட்டத்தின் நடுவில் அமைந்திருந்த பிரம்மாண்டமான பங்களாவைப் பார்த்து திகைத்தனர் வானதியின் பெற்றோரும், வானதியும்.
அன்போடு அவரை வரவேற்ற உமாகாந்தனும் அவர் மனைவியும் தங்கள் மகனான சங்கரை அறிமுகப்படுத்தி வைத்தனர்.
“உங்கள் பேச்சு பிரமாதம்! பாஸிடிவ் சஜெஷன் இஸ் க்ரேட்” என்றான் சங்கர்.
வானதி வெட்கத்தால் சிவந்தாள்.
சற்று நேர உரையாடலில் இரு குடும்பங்களும் நெருக்கமாகி விட்டன.
“சாப்பிடலாமா” என்று விருந்துக்கு அழைக்கப்பட்ட போது பெரிய டைனிங் டேபிளையும் அதில் பரப்பப்பட்டிருந்த வெள்ளி பேஸின்களையும் தட்டுக்களையும் விதவிதமான உணவு வகைகளையும் பார்த்து மலைத்தது வானதியின் குடும்பம்.
எப்படி வெள்ளி ஸ்பூன்களையும் போர்க்குகளையும் கையாள்வது என்று யோசித்தாள் வானதி.
“ஒரு முக்கிய விஷயம்! என் பையனுக்கு நல்ல பெண்ணாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் சம்மதித்தால் வானதியை கல்யாணுக்குத் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறோம் என்றார் உமாகாந்தன்.
இதைக் கேட்ட மகாதேவன் திகைத்தார்.’இப்படி ஒரு பெரிய இடத்துச் சம்பந்தமா?
“ஓகே! முதலில் பையனும் பெண்ணும் பேசட்டும். அவர்கள் ஓகே என்றால் மீதியை நாம் பேசுவோம்” என்ற உமாகாந்தன், “கல்யாண்! நீ வேண்டுமானால் ஒரு சின்ன டிரைவுக்கு வானதியுடன் போய் விட்டு வாயேன்” என்றார்.
“வேண்டாம், வேண்டாம். மாடியே இருக்கிறது; அது போதும்” என்றான் கல்யாண்.
மேல்மாடிக்குச் சென்ற கல்யாண் வானதியைப் பார்த்து, “ ஐ லைக் யூ.
யுவர் பாசிடிவ் அப்ரோச் இஸ் ரியலி குட். இந்த மேரேஜ் ப்ரபோஸலுக்கு சம்மதமா?” என்றான்.
“எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாங்கள் நடுத்தர வர்க்கத்தினர். உங்கள் குடும்பமோ பில்லியனர் குடும்பம், எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்.” என்றாள் வானதி.
“ஓகே! நாளைக்கு ஆகாஷ் ரெஸ்டாரண்டில் சாயங்காலம் மீட் பண்ணுவோம். நீங்கள் முடிவைச் சொல்லலாம் என்றான் கல்யாண்.
பெற்றோர்கள் மறுநாள் மாலை வரை காத்திருக்கச் சம்மதித்தனர்.
ஆகாஷ் ரெஸ்டாரண்ட் நகரின் பிரம்மாண்டமான ரெஸ்டாரண்ட். பல ஏசி ஹால்கள் உண்டு.
அதில் சரியாக மாலை ஐந்து மணிக்கு வந்தாள் வானதி. கல்யாண் காத்திருந்தான்.
“என்ன ஆர்டர் பண்ணலாம்?” கேட்டான் கல்யாண்.
பாஸந்தி, தோசை, காபி. லைட் டிபன் போதும் என்றாள் வானதி.
“என்ன முடிவு?”கல்யாண் ஆவலுடன் கேட்டான்.
வானதி மெதுவாகப் பேசினாள்: ”என்ன சொல்வது என்று தெரியவில்லை. பணக்காரக் குடும்பத்திற்கு நான் ஒத்துவருவேனா என்ற குழப்பம் இருக்கிறது” .
இதை அவள் சொல்லும் போதே எதிரிலிருந்த ஹாலிலிருந்து லவுட் ஸ்பீக்கரில் பெரிய குரல் ஒன்று ஒலித்தது.
“என்ன அங்கே நடக்கிறது? என்று வெயிட்டரிடம் கேட்டான் கல்யாண்.
“பல கம்ப்யூட்டர் கம்பெனிகளில் உள்ள டெக்னிகல் ஸ்டாபுக்கு மீட்டிங் சார்” என்றார் வெயிட்டர்.
எதிர் ஹாலிலிருந்து ஒரு குரல் கம்பீரமாக ஒலித்தது.
“ஆகவே நீங்கள் மாற்றி யோசிக்க வேண்டும். எதிரெதிர் சிந்தனைகளை ஒதுக்காதீர்கள். ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு. பாஸிடிவாக மாற்றி யோசிப்பவரை உங்களுடன் இணைத்துக் கொண்டால் வாழ்வே செழிக்கும்”
இதைக் கேட்ட வானதியின் முகம் மலர்ந்தது. கல்யாண்,”ஆஹா! அருமையான யோசனை ஆல்டர்னேடிவ் திங்கிங்” என்று பேச்சைப் பாராட்டினான்.
“நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். எனக்கு சம்மதம். மாற்றி யோசித்தேன். கணப்பொழுதில் இப்படி முடிவெடுத்து விட்டேன். எப்போதும் ஏன் ஒருதலைப்பட்சமாக பயந்து கொண்டு சிந்தனை செய்ய வேண்டும். நடுத்தரக் குடும்பம் பணக்காரக் குடும்பத்தை இன்னும் செழிப்பாக ஆக்கக் கூடாதா என்ன?” என்றாள் வானதி.
“சூப்பர்! நானும் ஆல்டர்நேடிவ் திங்கிங் செய்து முடிவுக்கு வந்து விட்டேன். எனக்கு நல்ல மாதிரியாக யோசனை கூறி எனக்கு ஆதரவு தந்து கம்பெனியையும் முன்னேற்ற ஒரு நல்ல பாஸிடிவ் திங்கர் லைஃப் பார்ட்னராகத் தேவை. எனக்கும் சம்மதம். இதோ அப்பாவுக்கும் அம்மாவுக்கும் செய்தியைச் சொல்லி விடுகிறேன்” என்றான் கல்யாண்.
“வானதி போனை எடுத்து, “நான் வீட்டிற்கு சற்று நேரத்தில் வந்து விடுவேன்” என்று சொன்ன போது, “அதற்கு அவசியமே இல்லை” என்று அடுத்த ஹாலிலிருந்து சொல்லிக் கொண்டே முன்னால் வந்தது வானதியின் குடும்பம். அதைத் தொடர்ந்து பின்னால் கல்யாண் குடும்பமும் வந்தது.
‘அட, நீங்கள் வீட்டில் அல்லவா இருப்பீர்கள் என்று நினைத்தேன்’ என்ற கல்யாணுக்கு பதிலாக அவனது பெற்றோர் ஹாஹா என்று சிரித்து “நாங்கள் இங்கே தான் காத்திருந்தோம்” என்றனர்.
“ஆல்டர்நேடிவ் திங்கிங்” என்று ஒரே சமயத்தில் அனைவரும் ஒரு மனதாகச் சொல்ல ஹாலே சிரிப்பில் மிதந்தது!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 12
I have been collecting stamps for over 60 years. Whenever I google for Indian stamps, only pictures from commercial agencies appear. People can’t use those without their permission. To break their business tricks, I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.
The stamps posted here are MINT (not used); so more valuable.
I have got spare stamps; if anyone wants to exchange, please contact me.
இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். யாராவது அந்த அஞ்சல்தலை படங்களுக்காக கூகுள் செய்தால், பணம் பறிக்கும் ஏஜென்சிக்களின் படங்களே தோன்றுகின்றன. அதை மாற்றுவதற்காக நானே 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .
Here are stamps of India:
ANDREWS, MAHATMA GANDHI, RAJA RAVI VARMA, LIC, ANNADURAI, VASWANI,
SANT RAVIDAS, LENIN, V D SAVARKAR, SHER SHAH SURI, RAMANA MAHARISHI, MAN ON MOON
1969 STAMPS
–SUBHAM—
PART 12, INDIAN STAMPS, ANDREWS, MAHATMA GANDHI, RAJA RAVI VARMA, LIC, ANNADURAI, VASWANI, SANT RAVIDAS, LENIN, V D SAVARKAR, SHER SHAH SURI, RAMANA MAHARISHI, MAN ON MOON , YEAR 1969
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 3
சங்கல்ப ஸூக்தம்
ஒளிப்பொருளான எந்த ஆன்மா விழிப்பு நிலையில் வெளியே செல்கிறதோ, அதுவே தூக்கத்தில் அப்படியே அகமுகமாகச் செல்கிறது. தொலைதூரங்களை எட்டுவதும், ஒளிக்கெல்லாம் ஒளியாய் இருப்பதும், ஒன்றெயானதுமான அந்த ஆன்மா, எனது மனம் நல்ல சங்கல்பத்தைச் செய்யுமாறு தூண்டட்டும்.
1. அறிஞர்கள் வேள்விகளில் அபஸ் போன்ற கர்மங்களை எதனால் செய்கிறார்களோ, அறிவாளிகளின் பிரார்த்தனைகளில் எது முதன்மையானதோ, எது போற்றத் தக்கதோ, எது உயிர்களின் உள்ளே உறைகிறதோ அந்த ஆன்மா எனது மனம் நல்ல சங்கல்பத்தைச் செய்யுமாறு தூண்டட்டும்.
2. எந்த ஆன்மா தன்னறிவு, ஞாபகசக்தி, மன உறுதி, ஆகியவற்றின் பிறப்பிடமோ, எந்த ஆன்மா உயிர்களில் அழிவற்ற ஒளியாக உள்ளதோ, எது இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாதோ அந்த ஆன்மா, எனது மனம் நல்ல சங்கல்பத்தைச் செய்யுமாறு தூண்டட்டும்.
3. கழிந்தது, இருப்பது, வரப்போவது எல்லாம் எந்த அழிவற்ற ஆன்மாவால் அறியப்படுகிறதோ, வேள்வி செய்கிற எழுவரும் எதனால் வேள்வி பற்றி விரித்துரைக்கிறார்களோ அந்த ஆன்மா, எனது மனம் நல்ல சங்கல்பத்தைச் செய்யுமாறு தூண்டட்டும்.
4. ஆரங்கள் தேர்ச்சக்கரத்தின் அச்சில் நிலைபெற்றிருப்பது போல், ரிக் சாம யஜுர் வேதங்கள் எதில் நிலைபெற்றுள்ளனவோ, மக்களின் மனம் எல்லாம் எதில் ஊடும்பாவும் போல் நிலைபெற்றுள்ளதோ அந்த ஆன்மா, எனது மனம் நல்ல சங்கல்பத்தைச் செய்யுமாறு தூண்டட்டும்.
5. நல்ல சாரதி குதிரைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல், மனிதர்கள் கடிவாளத்தால் குதிரையை வழிநடத்துவதுபோல், எந்த ஆன்மா இதயத்தில் நிலைபெற்றிருந்து மனிதர்களை வழி நடத்துகிறதோ, எந்த ஆன்மா என்றும் இளமையானதோ, அனைத்திலும் வேகமானதோ அந்த ஆன்மா, எனது மனம் நல்ல சங்கல்பத்தைச் செய்யுமாறு தூண்டட்டும்.
Shiva Sankalpa Sukta forms the first 6 mantras of the 34 chapters of Vajasaneyi Samhita of Shukla Yajur Veda. It is also found in the Rig Veda Rudrashtadhyayi. Sankalpa means will, right intention, or good omen. Reciting the six mantras of Shiva Sankalpa for some time every day is considered a good method of stabilizing and controlling the mind.
May my mind be calm and focused Which while we wake soars into the heavens And even in sleep roams about The far-ranging one light among lights
May my mind be calm and focused With which the mindful initiate actions And the insightful perform rituals The unprecedented, mysterious being within all living beings
May my mind be calm and focused Which includes intuitive knowledge, consciousness, and mental stability That immortal inner light in all beings Without which no action can be performed
May my mind be calm and focused The immortal one by which all that has been, is now being, and will be in the future is grasped By which the seven priests extend and perform the selfless giving
May my mind be calm and focused In which the verses of the Vedas are fixed like spokes around the hub of a chariot wheel In which is interwoven the consciousness of all living beings
May my mind be calm and focused That which by mindfulness is controlled as a skillful charioteer controls horses Leading the powerful forces of the senses by their reigns Which is seated in the heart, though agile and speedy
1. That mind which wanders in the waking state as well as in sleep, the far-wanderer, that which is the one and only illuminator of knowledge, may that mind of mine have auspicious thoughts.
2. That mind, by the help of which men who are experts in a variety of knowledge perform sacred sacrificial fire ceremonies (Yajña), which is unique and is the inner power of all people, may that mind of mine have auspicious thoughts.
3. That mind which is embodied with knowledge, consciousness, and steadfastness, that which is the inner light and ambrosia (Amṛta) of the people, that without which no action can be performed, may that mind of mine have auspicious thoughts.
4. That immortal one with which the past, present, and future are grasped, that by which the sacred fire ritual is performed by the seven priests, may that mind of mine have auspicious thoughts.
5. That mind in which the knowledge of Ṛg, Sāma, and Yajur Vedas is placed like the spokes in a chariot wheel, which is intertwined with the minds of all people, may that mind of mine have auspicious thoughts.
6. That mind which leads men to discover their inner immortal self in the heart as well as a good charioteer guides the horses of the chariot, which is very fast, may that mind of mine have auspicious thoughts.
—-SUBHAM—-
TAGS-வேதத்தில் சைக்காலஜி, மன இயல், உள இயல் , மாமனோ தத்துவம் , யஜுர் வேதம், சிவ சங்கல்ப சூக்தம், part 3